Jump to content

கணவன் மனைவி பிரச்சினையில் அயலவர்(தமிழகம்) தலையீடு செய்ய வேண்டியதில்லை – விக்னேஸ்வரன்


Recommended Posts

CV_CI.jpg

 

தமிழக அரசியல்வாதிகள் இலங்கை தமிழர் பிரச்சினையை சுயலாபத்திற்காக பனய்படுத்திக்கொள்வதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வட மாhகணசபை முதலமைச்சர் வேட்பாளர் சீ.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
 
இலங்கைத் தமிழர்களை தங்களது தேவைகளுக்காக பயன்படுத்திக் கொள்ளவே தமிழக அரசியல்வாதிகள் முனைப்பு காட்டி வருவதாகத் குறிப்பிட்டுள்ளார். பிரபல இந்திய ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
 
எங்களது பிரச்சினைகளை தமிழக அரசியல்வாதிகள் டென்னிஸ் விளையாட்டில் பயன்படுத்தப்படும் பந்தைப் போன்று பயன்படுத்திக் கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார். தனி நாடே தமிழர் பிரச்சினைக்கு சரியான தீர்வு என சில தமிழக அரசியல்வாதிகள் குறிப்பிடுவதாகவும் இதனால் சிங்கள பெரும்பான்மை அரசியல்வாதிகள் அச்சமடைந்திருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழகத்தில் வெளியிடப்படும் கருத்துக்கள் எங்களை நேரடியாக பாதிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
தமிழக அரசியல்வாதிகளின் உணர்வுபூர்வமான கருத்துக்கள் இலங்கைத் தமிழர்களை மோசமாக பாதிக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கணவனுக்கும் மனைவிக்கும் இடையிலான பிரச்சினையில் அயல் வீட்டவர் நுழைய வேண்டிய அவசியமில்லை என விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இவ்வாறு அயலவர்கள்(தமிழகம்) தலையீடு சேய்வது கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் விவகாரத்தை ஏற்படுத்தும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஒருநாள் முரண்பட்டுக் கொள்ளும் தாம் மறுநாள் இணைந்து செறய்படலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழகம் இலங்கைத் தமிழர்கள் மீது காட்டி வரும் அனுதாபம் வரவேற்கப்பட வேண்டிய அதேவேளை, தீர்வுத் திட்டம் என்பது உள்நாட்டு ரீதியில் எட்டப்பட வேண்டியதொன்று என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Link to comment
Share on other sites

  • Replies 125
  • Created
  • Last Reply

ஒருமதத்திற்கு முன்னர் வந்த திரிக்கப்பட்ட அதே செய்தியா?

 

குலோபல் தமிழுக்கு ஒருமாததிற்கு முந்தய பேச்சை பிரசுரிக்கும் அளவுக்கு செய்திகள் ஒன்றும் கிடைக்கவில்லையா? பரிதாபம்.

 

:திருத்தம்

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=129107&p=935564

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவர் தமிழக அரசியல்வாதிகள் பற்றியே குறிப்பிடுகின்றார். மக்களைப் பற்றியல்ல. ஆனால் திரு.விக்னேஸ்வரன் எப்போது இதைச் சொன்னாலும், அவருக்கும் கொஞ்சம் நாவடக்கம் வேண்டும் எனக் கருதுகின்றேன். போராட்டத்தின் அழிவு, இருப்பதையாவது காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் அவர் சொல்லியிருக்கலாம். ஆனால் தமிழக சொந்தங்களைப் பாதிக்கும் வகையில் இருக்கக்கூடாது என்பதே எம் அவா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

.....கணவனுக்கும் மனைவிக்கும் இடையிலான பிரச்சினையில் அயல் வீட்டவர் நுழைய வேண்டிய அவசியமில்லை என விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இவ்வாறு அயலவர்கள்(தமிழகம்) தலையீடு செய்வது கணவனுக்கும், மனைவிக்கும் இடையில் விவகாரத்தை ஏற்படுத்தும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

கணவனுக்கும், மனைவிக்கும் இடையேயான பிரச்சனையை உங்கள் வீட்டுக்குள்ளேயே கமுக்கமாக முடித்துகொண்டால், எவனையா உங்களை கேடக்கப் போகிறார்கள்?

 

பக்கத்துவீட்டில் ஓரே கூச்சலும், அடிதடிகளும், அதனால் பொடிசுகளும் ஓடிவர, பொண்டாட்டியோ, கணவனோ குய்யோ முறையோன்னு தினந்தோறும் ஒப்பாரி வைத்து, அண்டை வீடுகளுக்கு படையெடுத்தால் அண்டை மனுசர்கள் வாழாவிருக்க முடியுமா? பக்கத்து வீட்டில் தீயெரிந்தால் எனக்கென்னேன்று நிம்மதியாக வாழ முடியுமா?

 

சரியாக பரமரிக்கத் தெரியாத, மனைவியின் விருப்பு வெறுப்புகளை மதியாத வக்கற்ற, ஆண்மையற்ற கணவனிடமிருந்து  மனைவி விவாகரத்து கோரும்பொழுது கொடுப்பதில் என்ன தவறு? பக்கத்து வீட்டார் தட்டிக்கேட்பதில் என்ன பிழை? :wub:

 

இந்த ஞானோதயம் ஏன் முன்னர் வரவில்லை?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கணவனுக்கும், மனைவிக்கும் இடையேயான பிரச்சனையை உங்கள் வீட்டுக்குள்ளேயே கமுக்கமாக முடித்துகொண்டால், எவனையா உங்களை கேடக்கப் போகிறார்கள்?

 

பக்கத்துவீட்டில் ஓரே கூச்சலும், அடிதடிகளும், அதனால் பொடிசுகளும் ஓடிவர, பொண்டாட்டியோ, கணவனோ குய்யோ முறையோன்னு தினந்தோறும் ஒப்பாரி வைத்து, அண்டை வீடுகளுக்கு படையெடுத்தால் அண்டை மனுசர்கள் வாழாவிருக்க முடியுமா? பக்கத்து வீட்டில் தீயெரிந்தால் எனக்கென்னேன்று நிம்மதியாக வாழ முடியுமா?

 

சரியாக பரமரிக்கத் தெரியாத, மனைவியின் விருப்பு வெறுப்புகளை மதியாத வக்கற்ற, ஆண்மையற்ற கணவனிடமிருந்து  மனைவி விவாகரத்து கோரும்பொழுது கொடுப்பதில் என்ன தவறு? பக்கத்து வீட்டார் தட்டிக்கேட்பதில் என்ன பிழை? :wub:

 

இந்த ஞானோதயம் ஏன் முன்னர் வரவில்லை?

 

ஐயா

நீங்கள்  எழுதியதெல்லாம் சிறு சிறு சச்சரவுகள்

அதை எல்லாம் தாண்டி

சொந்தப்பிள்ளையையே  வன்புணர்வு செய்தது

சொந்த பிள்ளையையே உயிருடன் கொழுத்தியது

புதைத்தது

தாகம் வரும்போதெல்லாம் வீட்டுக்குள் சூடு நடாத்தி எல்லோரையும் கொண்டது...............

 

என்று எல்லாம் செய்து முடித்து தண்டனைக்கு மட்டும்  காத்திருக்கும் ஒரு போர்க்குற்றவாளி சிங்களவன்

அவனிடம் தமிழர்களாகிய  எமக்கு எதுவித உறவும் கிடையாது

 

அது அவருக்கும்  தெரியும்

ஆனால் ஏன்  உளறுகிறார் என்று தான்   புரியல.

அரசியல்  என்று வந்தால  இப்படியெல்லாம் பேசவருமோ தெரியல

அல்லது

பத்திரிகைக்காறரின் வியாபார யுக்திக்குள் தமிழினமோ

சொல்ல முடியல............

அல்லது

Link to comment
Share on other sites

அவர் சொன்னதில் என்ன தவறு இருக்கு எல்லோருமே எங்களை வைத்து காசு பார்த்தனர் அரசியல் நடத்தினர் எவர் எமக்கு  உதவ முன் வந்தனர் அதிகாரத்தில் இருத்தவர்கள் நாடகம் ஆடினார் அதிகாரம் இல்லாதவர் தெருவில் நின்டனர் இந்தியா எண்டு வந்துவிட்டால் இறையான்மை எண்டு ஒளிந்து கொள்வது தமிழக தலைவர்மார்களின் கொள்கை அப்பவே பெரியார் தந்தை செல்வாக்கு சொல்லிட்டார் ஒரு அடிமை இன்னொரு அடிமைக்கு உதவி செய்ய முடியாது என்று எமக்கு நாமே என்பதை நாம் முதல் உணரவேண்டும் ஞானிகளே...

Link to comment
Share on other sites

இந்துவை தமிழ்கத்தால் துரத்தவேண்டும். தமிழக அரசியல் வாதிகள் கோமாளிகள் என்றதையும் இந்துதான் கொண்டுவந்தது. இந்து ராசபக்காவிடம் சிங்கள விபூசணம் பட்டம் வாங்க எல்லாம் பண்ணுகிறது. 

Link to comment
Share on other sites

தமிழக அரசியல்வாதிகள் இலங்கை தமிழர் பிரச்சினையை சுயலாபத்திற்காக பனய்படுத்திக்கொள்வதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வட மாக்கணசபை முதலமைச்சர் வேட்பாளர் சீ.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

 

மிகச்சரியாகதான் சொல்லி இருக்கிறார்.எதையும் புதிதாக சொல்லவில்லை குய்யோ முறையோ என்று குத்திமுறிய. எல்லா ஈழத்தமிழர்களுக்கும் தெரிந்த உண்மை. 83 இல் இருந்து இன்று வரை தொடரும் கண்துடைப்பு நாடகம்கள் அரசியல் போர்வையில்.

Link to comment
Share on other sites

தமிழக அரசியலில் சுப்பிரமணியத்தின் ஜனதாவும், காங்கிரசும் ஒதுக்கப்பட்டுவிட்டன. சுப்பிரமணி,  பாரதிய ஜனதாவுக்குள் ஓடி ஒழிக்கிறார். இந்த நிலையில் தமிழகத்தில் முன்னணியில் இருக்கும் திராவிட, தமிழ் சார்பு அரசியல் கட்சிகளிடம் இருந்து சுப்பிரமணியையும் மற்றய கேடிகளையும் விடுக்க இந்து கூட்டமைப்பை டெனிஸ் பந்தாக்கப்பார்க்கிறது. தமிழகத்தில் தனக்கு என அரசியல் மேடை ஒன்று அலங்கரிக்க முடியாமல் போyவிட்ட இந்து தனது தோல்வியை ஒப்புக்கொண்டு தமிழகத்தை விட்டு வெளியேற வேண்டும். தமிழர் எதிரியான இந்து தமிழகத்தில் தனது பாச்சா பலிக்காமல் போனதை கண்டுவிட்டு, ஈழத்தமிழரை அறுதலி பிள்ளையாக நினத்துக்கொண்டு அங்கு தானது வாலை ஆட்ட வருகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரி நடந்தது நடந்துவிட்டது...இனி யாவரின் தலையீடு தேவை இல்லையெனில் சந்தோசம்! :)

 

உங்கள் பாணியில் அயலவரை இனிமேலும் தொந்திரவு செய்யாமல், ஒற்றுமையாக குடும்பம் நடத்தி பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க! :rolleyes:

 

தமிழகத்திலும், ஈழத்திலும் ஈகையில் உயிர்நீத்த பிள்ளைப் பூச்சிகளான அப்பாவி தமிழர்கள்தான் பாவம்.

 

அவர்கள் ஆத்மா சாந்தியடையுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரி நடந்தது நடந்துவிட்டது...இனி யாவரின் தலையீடு தேவை இல்லையெனில் சந்தோசம்! :)

 

உங்கள் பாணியில் அயலவரை இனிமேலும் தொந்திரவு செய்யாமல், ஒற்றுமையாக குடும்பம் நடத்தி பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க! :rolleyes:

 

தமிழகத்திலும், ஈழத்திலும் ஈகையில் உயிர்நீத்த பிள்ளைப் பூச்சிகளான அப்பாவி தமிழர்கள்தான் பாவம்.

 

அவர்கள் ஆத்மா சாந்தியடையுமா?

 

 

என்ன கோபமா ஐயா

 

நாங்கள் தமிழக தலைவர்களைவிட

நன்றாக அரசியல்  செய்வோம்.

 

இங்கும்  மக்களை  என்று எழுதவில்லை

அரசியல்வாதிகளை என்று மட்டும் தான்  எழுதியுள்ளோம்

மக்களை  எமக்கு  வேண்டும்

அதில் மட்டும்  சுயநலமுண்டு

ஆனால்  காட்டிக்கொள்ளமாட்டோம்... :(

 

உங்களுக்கு இது பழகியது தானே

முதல் முறையா  குட்டுகின்றோம்

சுணைப்பதற்கு......... :(

Link to comment
Share on other sites

தமிழகம் தலையிடுவது ஒருபுறம் இருக்கட்டும்.. கணவன் மனைவி பிரச்சினைக்குள் அயல்நாடுகள் தலையிடக்கூடாது என்று சொல்வாரா விக்கி? :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன கோபமா ஐயா

 

நாங்கள் தமிழக தலைவர்களைவிட

நன்றாக அரசியல்  செய்வோம்.

 

இங்கும்  மக்களை  என்று எழுதவில்லை

அரசியல்வாதிகளை என்று மட்டும் தான்  எழுதியுள்ளோம்

மக்களை  எமக்கு  வேண்டும்

அதில் மட்டும்  சுயநலமுண்டு

ஆனால்  காட்டிக்கொள்ளமாட்டோம்... 

 

இங்கே இருக்கிற தமிழனுக்கே உணர்வு போதவில்லையென ஆதங்கப்பட்டுள்ள நேரத்தில், இவரொருத்தர் இக்கட்டான நிலையில், "வள வள"ன்னு குறைசொல்லுறாரேன்னு

எரிச்சல்தான். :(

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே இருக்கிற தமிழனுக்கே உணர்வு போதவில்லையென ஆதங்கப்பட்டுள்ள நேரத்தில், இவரொருத்தர் இக்கட்டான நிலையில், "வள வள"ன்னு குறைசொல்லுறாரேன்னு

எரிச்சல்தான். :(

 

 

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=129109&hl=

 

நான் வேலையில்  நின்று இங்கு எழுதிக்கொண்டிருக்க

என்  உறவுகள்

எல்லாவற்றையும்  ஒதுக்கி வைத்துவிட்டு எமக்காக பயணம்  போகிறார்கள்

இதைப்பார்த்த  நெஞ்சுள்ளவர்  எவரும் சுட்டுவிரல்  நீட்டார்

Link to comment
Share on other sites

விக்கினேஸ்வரன் அயல்வீட்டாரை தங்கள் விடையத்தில் கை போட வேண்டாம் என்கிறார் என்றதை கிந்திய மேலிடத்துக்கு சொல்லிவைக்குமா கிந்து?. இன்னொருதடவை இராசாயநக் குண்டை தமிழ் மக்கள் மீது கிந்தியா சோதனை பண்ணிப்பார்க்க வேண்டாம் என்று தமிழ் மக்கள் கேட்கிறார்கள் சொல்லிவிடுமா?

 

கிந்தியாவை ஈழத்தமிழர் தங்கள் பாட்டை பார்க்கவிட்டுவிட்டு கிந்தியா ஐ.நா பிரேரணையில் தலையிடகூடாது என்பதைகிந்து கிந்திய தலைமை பீடத்திற்கு அறிவுக்குமா? சொல்லெயும் நேராகவே புலிகளுக்கும் சிங்களத்துக்குமிடையில் போர்நிறுத்தம் ஒன்று வராமல் பார்த்துகொண்டது கிந்தியாதான் என்று சொன்ன போது கிந்தநேன் அதை விக்கினேஸ்வரனுக்கு நினவு படுத்தவில்லை. உடனே "இந்தியா எப்போதுமே ஈழத்தமிழர் விவகாரத்தில் மூக்கை நுளைக்கிறது தானே, இப்போது மட்டும் ஏன் தமிழக தலைவர்களை மட்டும் பிரத்தியேகமா கணவன் மனைவிக்குள் விவாகரத்தை வரவழைக்கிறர்கள்" குற்றம் சாட்டுவான் என்று கேட்டிருக்கலாமே.

 

எதற்கு கிந்து தமிழக அரசியல் வாதிகள் மட்டும்தான் ஈழத்தமிழர் பிரச்சனையில் பேசக்கூடாது என்று தடுக்க முயல்கிறது? ஐ.நா பிரேரணையை தவிடுபொடியாக்க சுப்பிரமணி அமெரிக்கா போனதையும் தடுத்திருக்கலாமே.

 

ஆரியத்துவேசி கிந்து தமிழக தமிழரையும் ஈழத்தமிழரையும் பிரித்துவைக்கை சிண்டுமுடியும் பேட்டிகளுக்கு கேட்டால் கூட்டமைப்பு இனி ஒத்துப்போககூடாது. 

Link to comment
Share on other sites

ஒரு திணிக்கப்பட்ட திருமண ஒப்பந்ததில் தொடர்ந்தும் கொடுமைக்கார கணவனுடன் வாழ்வதா இல்லையா என்பதை மனைவியே தீர்மானிக்க முடியும். அத் தீர்மானிக்கும் உரிமயை அவருக்கு வழங்கும் படி கோரியே உறவினரான தமிழக உறவுகள் கேட்டு வருகின்றனர். இந்த உரிமையை விக்கினேசுவரன் என்னும் தனிப்பட்ட நபர் தீர்மானிக்க முடியாது.அது ஒட்டு மொத்த தமிழர்களும் கூட்டாக ஒரு தேர்தலின் மூலம் தீர்மானிக்க வேண்டும்.

 

விக்கினேசுவரன் இவ்வறான பேட்டிகள் வழங்குவது வருங்கால தமிழக நல் உறவுக்கு கெடுதல் விழைவிக்கும்.இதனை கூட்டமைப்பில் உள்ளவர்கள் அவருக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.

இதனால் எமக்கான நேச சக்திகளை நாமே அழித்துக் கொள்கிறோம். கடைசியில் அரசனை நம்பி புரிசனைக் கைவிட்ட நிலையே ஏற்படும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரி நடந்தது நடந்துவிட்டது...இனி யாவரின் தலையீடு தேவை இல்லையெனில் சந்தோசம்! :)

 

உங்கள் பாணியில் அயலவரை இனிமேலும் தொந்திரவு செய்யாமல், ஒற்றுமையாக குடும்பம் நடத்தி பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க! :rolleyes:

 

தமிழகத்திலும், ஈழத்திலும் ஈகையில் உயிர்நீத்த பிள்ளைப் பூச்சிகளான அப்பாவி தமிழர்கள்தான் பாவம்.

 

அவர்கள் ஆத்மா சாந்தியடையுமா?

 

விக்னேஸ்வரன் என்ன... உளறிக் கொட்டினாலும், அதனைப் பற்றித் தமிழகத் தமிழர் கவலைப் பட வேண்டியதில்லை.

 

காரணம் விக்னேஸ்வரனின் முதலமைச்சர் தெரிவு, சம்பந்தனால்... நடத்தப் பட்டது.

சம்மந்தனின்.... அரசியல் வியாபாரம் எல்லோருக்கும் தெரியும். அதில்... இந்தியாவின் அழுத்தங்களும்... உள்ளடங்கும்.

 

ஆனால்... இதில், தமிழ்க் கூட்டமைப்பை விட்டால், வேறு வழியில்லை... என்பதே ஈழ மக்களின், வேண்டாத விருப்பம்.

 

இதில்... நாம், புடுங்குப்பாடு செய்தால்.... ஒட்டுக்குழுக்கள் ஆட்சிக்கு வரும்.

அதனையே... விக்னேஸ்வரனை களமிறக்கி சாதிக்கிறார் சம்பந்தன்.

 

மாவையை... முதலமைச்சர் வேட்பாளராக்கி இருந்தால்... இப்படியான இழுபறிகள் வந்திருக்காது.

அதற்கு... இந்தியாவும், ஸ்ரீலங்காவும், சம்பந்தனும்... சம்மதித்திருக்க மாட்டார்கள் என்பது தான்... உண்மை.

 

Link to comment
Share on other sites

விக்னேஸ்வரன் என்ன... உளறிக் கொட்டினாலும், அதனைப் பற்றித் தமிழகத் தமிழர் கவலைப் பட வேண்டியதில்லை.

காரணம் விக்னேஸ்வரனின் முதலமைச்சர் தெரிவு, சம்பந்தனால்... நடத்தப் பட்டது.

சம்மந்தனின்.... அரசியல் வியாபாரம் எல்லோருக்கும் தெரியும். அதில்... இந்தியாவின் அழுத்தங்களும்... உள்ளடங்கும்.

ஆனால்... இதில், தமிழ்க் கூட்டமைப்பை விட்டால், வேறு வழியில்லை... என்பதே ஈழ மக்களின், வேண்டாத விருப்பம்.

இதில்... நாம், புடுங்குப்பாடு செய்தால்.... ஒட்டுக்குழுக்கள் ஆட்சிக்கு வரும்.

அதனையே... விக்னேஸ்வரனை களமிறக்கி சாதிக்கிறார் சம்பந்தன்.

மாவையை... முதலமைச்சர் வேட்பாளராக்கி இருந்தால்... இப்படியான இழுபறிகள் வந்திருக்காது.

அதற்கு... இந்தியாவும், ஸ்ரீலங்காவும், சம்பந்தனும்... சம்மதித்திருக்க மாட்டார்கள் என்பது தான்... உண்மை.

உண்மைதான்.. ஒட்டுக்குழு வந்துவிடும் என்கிற காரணத்திற்காகவே இந்திய அடிமை சேவகம் செய்யும் சம்ந்தன் ஐயாவின் தலைமையை ஆதரிக்கவேண்டி உள்ளது.. கஜேந்திரகுமார், கஜேந்திரன் போன்றவர்களும் இதன் காரணமாகவே ஒதுங்கி நிற்கிறார்கள்.. இதைப் பயன்படுத்திக்கொண்டு ஏகபோகத்துடன் பேசுவதை அனுமதிக்கக்கூடாது.. கீரைக்கடைக்கும் எதிர்க்கடை தேவை என்பது சரிதான்.. இரு தேசிய ஆதரவு சக்திகள் வேணும்.. சிங்களவனுக்கு உள்ளதுபோல..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான்.. ஒட்டுக்குழு வந்துவிடும் என்கிற காரணத்திற்காகவே இந்திய அடிமை சேவகம் செய்யும் சம்ந்தன் ஐயாவின் தலைமையை ஆதரிக்கவேண்டி உள்ளது.. கஜேந்திரகுமார், கஜேந்திரன் போன்றவர்களும் இதன் காரணமாகவே ஒதுங்கி நிற்கிறார்கள்.. இதைப் பயன்படுத்திக்கொண்டு ஏகபோகத்துடன் பேசுவதை அனுமதிக்கக்கூடாது.. கீரைக்கடைக்கும் எதிர்க்கடை தேவை என்பது சரிதான்.. இரு தேசிய ஆதரவு சக்திகள் வேணும்.. சிங்களவனுக்கு உள்ளதுபோல..

 

கஜேந்திரக்குமார், கஜேந்திரன், சிவாஜிலிங்கம் போன்றவர்களை... இதற்காகத்தான்,

சம்பந்தன் ஐயா முழையிலே கிள்ளி விட்டு, வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்.

இவருக்கு உண்மையிலே... தமிழருக்கு சேவை செய்ய மனமில்லை.

அடாத்துப் பிடிக்கு, கூத்தமைப்புப் பதவியில் இருந்து கொண்டு....

நொந்து போன தமிழனுக்கு, இன்னும்... நோகப் பண்ணிக் கொண்டு இருக்கிறார்.

இயலாவிட்டால்... ஒதுங்கி இருக்கிறது தான்.... நல்ல மனுசனுக்கு அழகு.

இது... தேவாங்கு மாதிரி, தலைவர் பதவியிலை... ஒட்டிக் கொண்டிருக்குது.

இன்னும்... என்னென்ன, இழவுகளை தமிழனுக்குத் தரப் போகுதோ... எண்டு, நெஞ்சிடியாய்க் கிடக்குது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான்.. ஒட்டுக்குழு வந்துவிடும் என்கிற காரணத்திற்காகவே இந்திய அடிமை சேவகம் செய்யும் சம்ந்தன் ஐயாவின் தலைமையை ஆதரிக்கவேண்டி உள்ளது.. கஜேந்திரகுமார், கஜேந்திரன் போன்றவர்களும் இதன் காரணமாகவே ஒதுங்கி நிற்கிறார்கள்.. இதைப் பயன்படுத்திக்கொண்டு ஏகபோகத்துடன் பேசுவதை அனுமதிக்கக்கூடாது.. கீரைக்கடைக்கும் எதிர்க்கடை தேவை என்பது சரிதான்.. இரு தேசிய ஆதரவு சக்திகள் வேணும்.. சிங்களவனுக்கு உள்ளதுபோல..

 

 

புலத்தில்  இரு அமைப்புக்கள்  வந்தபோதும்

தாயகத்தில் 

கூட்டமைப்பிலிருந்து சிலர்  பிரிந்தபோதும்

சில கலந்துரையாடல்களில்   கலந்து கொண்டேன்

இது இரண்டுமே தப்பு என்ற கருத்துடன் வாதாட்டத்துடன்

இரு தேசிய  சக்திகள் வேண்டும்

ஒரு பகுதியிடம் எதையுமே ஒப்படைப்பது ஆபத்தானது என்று

சில முக்கிமானவர்கள் தொடர்ந்து வலியுறுத்தினார்கள்

பல பேச்சுவார்த்தைக்குப்பின் அவர்கள்  சொல்வது சரி என்ற முடிவுக்கு வந்தேன்.

அதிலிருந்து இரண்டையும் ஆதரித்து வருகின்றேன்.

இரண்டுக்கும்  சந்தாக்காசு கட்டுவேன்.

ஏனெனில்

உறுப்பினரானால்தான் உரிமையுடன் பேசமுடியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலத்தில்  இரு அமைப்புக்கள்  வந்தபோதும்

தாயகத்தில் 

கூட்டமைப்பிலிருந்து சிலர்  பிரிந்தபோதும்

சில கலந்துரையாடல்களில்   கலந்து கொண்டேன்

இது இரண்டுமே தப்பு என்ற கருத்துடன் வாதாட்டத்துடன்

இரு தேசிய  சக்திகள் வேண்டும்

ஒரு பகுதியிடம் எதையுமே ஒப்படைப்பது ஆபத்தானது என்று

சில முக்கிமானவர்கள் தொடர்ந்து வலியுறுத்தினார்கள்

பல பேச்சுவார்த்தைக்குப்பின் அவர்கள்  சொல்வது சரி என்ற முடிவுக்கு வந்தேன்.

அதிலிருந்து இரண்டையும் ஆதரித்து வருகின்றேன்.

இரண்டுக்கும்  சந்தாக்காசு கட்டுவேன்.

ஏனெனில்

உறுப்பினரானால்தான் உரிமையுடன் பேசமுடியும்.

 

இப்போது... ஈழத்தமிழர் இருக்கும் நிலையில்,

இரண்டு அமைப்புகள் ஆபத்தானது.

தமிழகத்தில்... தி.மு.க./ அ.தி.மு.க. போன்றதை ஒத்தது.

அவ செய்தால்... இவர் விடார், இவர் செய்தால்... அவ விடா.

இதனால்... ஒட்டு மொத்தத் தமிழகமே பாதிக்கப்படுகின்றது.

காவிரிப் பிரச்சினையிலிருந்து கச்சதீவு, அணு உலை என்று....

அறிஞர் அண்ணா உருவாக்கிய கட்சியை நாசம் பண்ணிக் கொண்டு நிற்கிறார்கள்.

இதனைப் பார்த்தாவது.... ஈழத் தமிழனுக்கு... புலிகளைப் போல்... ஒரு தலைமை, அவசரமாகத் தேவை.

இல்லையேல்... எல்லோரும், கூண்டோடு அழிவது திண்ணம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழன் தலையெடுக்கும் வரை யாருக்கும் விலைபோகாத ஒற்றைத் தலைமையே தற்போதைய அவசரத் தேவை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழன் தலையெடுக்கும் வரை யாருக்கும் விலைபோகாத ஒற்றைத் தலைமையே தற்போதைய அவசரத் தேவை.

 

 

சிறிக்கும்

உங்களுக்கும் ஒரே பதில்

அப்படியொன்று சாத்தியமே இல்லை.

அதற்காக ஏங்குவதைவிடுத்து

காலத்தை கருத்தில்  கொண்டு

எத்தனை  அமைப்புக்கள் இருந்தாலும்

இலட்சியம்  ஒன்றாக இருப்பதே சிறந்தது

அதுவே இன்றைக்கு சரி  வரக்கூடியது....

 

அத்துடன்

எவரையும் நம்பமுடியாது

அதனால்

இன்னொரு அமைப்பு அதற்கு போட்டியாக

தயாராக இருப்பது அவசியம்

இன்றைய  சூழ்நிலையில்.

Link to comment
Share on other sites

தேர்தலில் வென்றுவிட்டு இந்தியாவின் தாளத்துக்கு ஆடாமல் விட்டால் சரி.. ஆனால் அது சாத்தியமற்றது என்று தோன்றுகிறது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்த வியட்நாம் அமைசர் இப்ப சிறீலங்காவுக்கு விசிட் அடிச்சு ..கருவாடு குறைந்தவிலக்கு தருகிறோம் என்று நம்ம மீன்பிடி அமச்சருக்கு சொன்னாலே போதும்...அதற்கு ஒரு கமிசன் போட்டு மக்கள்  தலையில் கட்டிவிடுவார்கள்....வியட்நாமிலும்  செத்தமீன் கிளீயராகிவிடும்..😄
    • சவுக்கு சங்கர் மீது பாய்ந்தது கஞ்சா வழக்கு.. டிரைவர், உதவியாளரையும் விடாத தேனி போலீஸ்! Nantha Kumar RUpdated: Saturday, May 4, 2024, 22:25 [IST]   தேனி: பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் இன்று தேனியில் கைது செய்யப்பட்டார். பெண் போலீஸ் குறித்து அவதூறாக பேசிய நிலையில் கோவை சைபர் க்ரைம் போலீசார் அவரை கைது செய்தனர். இந்நிலையில் தான் சவுக்கு சங்கர், அவரது உதவியாளர் மற்றும் டிரைவர் உள்ளிட்டவர்கள் மீது தேனி போலீசார் கஞ்சா வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதன்பிறகு யூடியூப் விவாதங்களில் பங்கேற்று வந்தார். அப்போது தமிழக அரசு, முதல்வர் ஸ்டாலின், திமுக அமைச்சர்கள் மற்றும் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட உயரதிகாரிகளை கடுமையாக விமர்சனம் செய்தார். இந்நிலையில் தான் காவல் துறை அதிகாரிகள், பெண் காவலர்கள் பற்றி அவர் கூறிய கருத்து சர்ச்சையை கிளப்பியது. இததொடர்பாக கோவை சைபர் க்ரைம் போலீசில் புகார் பதிவாகி இருந்தது. இந்நிலையில் தான் இன்று காலையில் தேனி தனியார் விடுதியில் தங்கியிருந்த சவுக்கு சங்கரை கோவை சைபர் க்ரைம் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். சவுக்கு சங்கர் மீது இந்திய தண்டனை சட்டம் 293 (பி), 509 மற்றும் 353 ஐபிசி ஆர்/டபிள்யூ பிரிவு 4 தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம், தகவல் தொழில்நுட்ப சட்டப்பிரிவு பிரிவு 67 உள்ளிட்டவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதாவது தகாத வார்த்தையில் பேசுதல், பெண்கள் குறித்து அவதூறாக பேசுதல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், தகவல் தொழில்நுட்ப சட்டத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்டவை தான் அந்த பிரிவுகளாகும். அதன்பிறகு அவர் கோவை அழைத்து செல்லப்பட்டார். இந்நிலையில் தான் தற்போது சவுக்கு சங்கர் மீது கஞ்சா வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தேனியில் சவுக்கு சங்கரை கைது செய்ய சென்றபோது அவரது காரில் 400 கிராம் கஞ்சா இருந்துள்ளதாக கூறப்படுகிறது. அதனை போலீசார் பறிமுதல் செய்த நிலையில் தேனி பழனிசெட்டிப்பட்டி போலீசார் சவுக்கு சங்கர் மீது கஞ்சா வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதேபோல் சவுக்கு சங்கரின் டிரைவர் ராம் பிரபு மற்றும் உதவியாளர் ராஜரத்தினம் ஆகியோர் மீதும் கஞ்சா வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது தனியார் விடுதியில் சவுக்கு சங்கரை கோவை சைபர் க்ரைம் போலீசார் கைது செய்தனர். அதன்பிறகு போலீசார் அவரது காரை சோதனையிட சென்றனர். அந்த சமயத்தில் சவுக்கு சங்கரின் டிரைவர் ராம் பிரபு, உதவியாளர் ராஜரத்தினம் உள்ளிட்டவர்கள் காரில் சோதனையிட எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் தகாத வார்த்தையில் போலீசாரை திட்டி பணிக்கு இடையூறு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் அவர்களை பிடித்து வைத்து காரில் சோதனையிட்டனர். சவுக்கு சங்கர் சர்ச்சைப் பேச்சு! தேனியில் கைது செய்த போலீஸ்! இத்தனை செக்சனில் வழக்கா? என்னென்ன? அப்போது காரில் கஞ்சா பொட்டலம் இருந்துள்ளது. மொத்தம் 400 கிராம் கஞ்சா இருந்துள்ளது. இதையடுத்து கஞ்சா மற்றும் கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து டிரைவர் ராம் பிரபு, ராஜரத்தினம் உள்ளிட்டவர்களை தேனி பழனிச்செட்டிபட்டி போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்றனர். மேலும் சவுக்கு சங்கர், அவரது உதவியாளர் ராஜரத்தினம், டிரைவர் ராம் பிரபு உள்ளிட்டவர்கள் மீது போலீசார் 294(b),353,506(I),8(c)8(w),20(b)(2)(a),29(I),25 ndps act உள்ளிட்ட 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். https://tamil.oneindia.com/news/theni/ganja-case-registered-against-savukku-shankar-and-his-2-associates-in-theni-police-603425.html  
    • வெளிநாட்டவர்களிடம் அறவிடப்படும் விசா கட்டணம் அதிகரிப்பு : வெளிப்படுத்திய எதிர்க்கட்சித் தலைவர் அண்மையில் நாடாளுமன்றத்தில் வெளிநாட்டவர்களிடம் இருந்து அறவிடப்படும் விசா கட்டண அதிகரிப்பு குறித்து குரல் எழுப்பினேன். விசா வழங்கும் நடைமுறையில் ஏற்பட்டுள்ள  மாற்றத்தினால் உருவாகியுள்ள பாரபட்சம் தொடர்பிலும் தெரியப்படுத்தினேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச(Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.  தொம்பே(Dombe) பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.   சீரழிந்த அரசியல் கலாசாரம் தொடர்ந்தும் தெரிவிக்கையில், இதுவரை நான் சொன்னது எதுவும் தவறாகவில்லை. 2019 இல் தோற்றாலும் 2020, 2021, 2022 மற்றும் 2023 ஆண்டுகளில் பெண்களின் ஆரோக்கியத்துவாய் குறித்து பேசினேன். ஐந்து வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், 2024 ஆம் ஆண்டு, தேர்தல் ஆண்டில் இது தொடர்பில் அரசாங்கத்தினால் கவனம் செலுத்தப்பட்டு, பாடசாலைகளில் தெரிவு செய்யப்பட்ட பிள்ளைகளுக்கு  வசதிகளை வழங்க தீர்மானம் எடுத்துள்ளனர்.   அரசியல் பொறாமையை மையமாக வைத்து தேர்தல் வருடத்தில் மாத்திரம் இதனை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த சீரழிந்த அரசியல் கலாசாரத்தினால் முக்கியமானதொரு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், இப்போதாவது இந்த சீரழிந்த அரசியல் கலாசாரத்தில் இருந்து விலகி செயற்பட வேண்டும். அண்மையில் நாடாளுமன்றத்தில் வெளிநாட்டவர்களிடம் இருந்து அறவிடப்படும் விசா கட்டண அதிகரிப்பு குறித்து குரல் எழுப்பினேன். விசா வழங்கும் நடைமுறைமையில் நடந்துள்ள மாற்றத்தினால் ஏற்பட்டுள்ள பாரபட்சம் குறித்து கடந்த வாரம் சுட்டிக்காட்டினேன். அரசியல் ஆதாயத்துக்காக தாம் கூறிய கருத்து தவறானது என அரசாங்கத்தின் ஒரு பிரிவினர் கூறினர், ஆனால் தான் கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் வெளிக்கொணர்ந்த விடயம் இன்று யதார்த்தமாகியுள்ளது. நான் சொல்வதைக் கேட்டிருந்தால், இந்தப் பிரச்சினைகளைத் தவிர்த்திருக்க முடியுமாக இருந்திருக்கும். ஆனால் அரசியல் பொறாமைத்தனத்தால் அவ்வாறு செய்யாது விட்டனர். தற்போது அவர்கள் கொண்டு வந்த சட்டங்களை கைவிட தீர்மானம் எடுத்துள்ளனர். இதே வழியில், கோவிட் ஆரம்ப காலப்பிரிவிலே முகக்கவசம், கோவிட் தடுப்பூசி, சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நல்ல முன்மொழிவுகளை முன்வைத்தபோது எனக்கு எதிராக சேறு பூசினர். என்ன நடந்தது, இறுதியில் உண்மை வென்றது. தாம் கூறிய பல விடயங்கள் இன்று உண்மையாகியுள்ளது என குறிப்பிட்டுள்ளார். https://tamilwin.com/article/increase-in-visa-fees-levied-on-expatriates-1714835528
    • இவர்களைத் (கடைக்காரர்களை) திருத்த முடியாது..வெளி நாட்வர்களுக்கு ஒன்றை மட்டும் சொல்லி புரிய வைக்கலாம்.உங்களுக்கு மட்டும் இந்த விலைகள் அல்ல.யார் எல்லாம் வெளியிலிருந்து வருகிறோமோ அவர்கள் எல்லோருக்குமே இந்த நிலை என்பதை சொல்ல வேண்டும்.
    • வணக்கம், யாழ் இணையம் 26 ஆவது அகவையில் காலடி எடுத்து வைக்கும் நாளினைச் சிறப்பிக்கும் முகமாக கள உறுப்பினர்கள் பலரும் மிகவும் உற்சாகமாகத் தமது படைப்புத் திறனை வெளிக்கொணர்ந்து பல்வேறு வகைமைகளில் 71 சுய ஆக்கங்களை இணைத்து தமது தனித்திறமைகளை வெளிப்படுத்தியுள்ளனர். சுய ஆக்கங்களைப் படைத்துச் சிறப்பித்த அனைத்துக் கள உறுப்பினர்களுக்கும், ஆக்கங்களை ஊக்குவித்து விருப்புக் குறிகளை வழங்கியும், பாராட்டுக் கருத்துக்கள் பதிந்தும், படைப்புக்களை மெருகூட்ட ஆக்கபூர்வமானதும் காத்திரமானதுமான கருத்துக்களையும் வைத்த கள உறுப்பினர்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம். இச்சிறப்புச் சுய ஆக்கங்களுக்கான முடிவுத் திகதி 30 ஏப்ரலுடன் நிறைவடைந்தமையால் புதிய ஆக்கங்களை அவற்றிற்குரிய கருத்துக்களப் பகுதிகளில் இணைக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம். கதைக் களம் கதைக் களம் பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுயமான சிறுகதைகள்,  மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், பயண அனுபங்கள், நாடகங்கள்  போன்றவற்றை இணைக்கலாம். கவிதைக் களம் கவிதைக் களம் பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுய கவிதை ஆக்கங்கள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றவற்றை இணைக்கலாம். ______________________________________________________________________________________ யாழ் 26 அகவை - சுய ஆக்கங்கள்  பகுதியில் பின்வரும்  ஆக்கங்கள் இணைக்கப்பட்டுள்ளன. குறிப்பு: பட்டியல் இணைக்கப்பட்ட திகதிவாரியில் உள்ளது. அக்காவின் அக்கறை......!  (suvy) புதனும் புதிரும்  ( Kavi arunasalam) பொருநைக் கரையினிலே    ( சுப.சோமசுந்தரம்)  (தீ) சுவடு  (தனிக்காட்டு ராஜா)  இலங்கை ஜனாதிபதி தேர்தல்-2024.  ( ஈழப்பிரியன்)  மரணம்  (ரஞ்சித்)  களியாட்டத்தில் கலாட்டாவா  ( putthan) அப்பா உள்ளே இருப்பது நீதானா?   (Kavi arunasalam) பூமித்தாய்க்கு அடிக்குது குலப்பன்.   ( nedukkalapoovan) ஆண்டவனையும் கேட்க வேண்டும்   ( Kavi arunasalam)  மயிலம்மா.  ( suvy)  வல்வை மண்ணில் பிரித்  (nedukkalapoovan) ஆதி அறிவு   ( ரசோதரன்) இந்தின் இளம்பிறை   ( ரசோதரன்)  என்ன பார்ட்டி இது??  (விசுகு)  முடிவிலி  (ரசோதரன்)  மழைப் பாடல்கள்  (ரசோதரன்)  மின் காற்றாலைத் தோட்டம்.  ( ஈழப்பிரியன்) இலை என்றால் உதிரும்   (ரசோதரன்) ஜோசுவா மர தேசிய பூங்கா.   (ஈழப்பிரியன்) ஆரோக்கிய நிகேதனம்   (ரசோதரன்)  இந்த ஏழு நாட்கள்  (ரசோதரன்)  தோற்கும் விளையாட்டு  (ரசோதரன்)  அன்றுபோல் இன்று இல்லையே!  ( பசுவூர்க்கோபி)  வாசலும் வீடும்  (ரசோதரன்)   வாழ்ந்து பார்க்க வேண்டும் (Kavi arunasalam)  மேய்ப்பன்  (ரசோதரன்)   ஒரு கொய்யா மரத்தின் விவரம் (ரசோதரன்)   தாயின்றி நாமில்லை.! (பசுவூர்க்கோபி)  விழல்  (ரசோதரன்)  தம்பி நீ கனடாவோ..?  (alvayan) என் இந்தியப் பயணம்  (மெசொபொத்தேமியா சுமேரியர்) குற்றமே தண்டனை  (ரசோதரன்) புளுகுப் போட்டி  (ரசோதரன்) சிறந்த நடுவர்  (ரசோதரன்) ஒரு பொய்  (ரசோதரன்) நானும் ஒரு அடிவிட்டன்  (alvayan) கண்டால் வரச் சொல்லுங்க…  (alvayan) புலம் பெயர்ந்த புகை  (ரசோதரன்) பிஞ்சுக் காதல்…  (alvayan) கனத்தைப் பேய்க்  கவிதை…..  (alvayan) வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….  (goshan_che) காந்தி கணக்கு  (ரசோதரன்) சனாதன வருத்தம்  (ரசோதரன்) அதிர்ஷ்ட லாபச் சீட்டு  (ரசோதரன்) கடவுள் விற்பனைக்கு  (theeya) தோற்ற வழு  (ரசோதரன்) பாக்குவெட்டி  (ரசோதரன்) வாழ்க்கை எல்லோர்க்கும் வரமல்ல  (theeya) ஒரு ஈழ அகதியின் பெயரால்  (theeya) Dangar Island- தனிமை விரும்பிகளுக்கு மட்டும்  ( P.S.பிரபா)  எனது பார்வையில் காடு என்னும் திரைப்படம்... (nochchi) ஒரே மழை  (ரசோதரன்) தமன்னாவை... பார்க்க ஏறிய பனைமரம்  வெட்டி வீழ்த்தப்பட்டது.  (தமிழ் சிறி)  அள்ளு கொள்ளை (ரசோதரன்) ஒரு கிலோ விளாம்பழம்  (ரசோதரன்) ஒரே கல்லில் இரண்டு மாங்காய்  (சுப.சோமசுந்தரம்) சிறிய விடயம் தான் ஆனால்....?  (விசுகு) கடவுளின் பிரதிநிதிகள்  (ரசோதரன்) நந்தவனத்தில் போட்டு உடைப்பவர்கள்  (ரசோதரன்) உயிர்த்தெழுதல்  (ரசோதரன்) குரு தட்சணை  (ரசோதரன்) சூரிய கிரகணமும் ..சுப்பர் கிங்சும்..  (alvayan) "மனு தர்மம் / வினைப் பயன்கள்"  (kandiah Thillaivinayagalingam)  தேனும் விஷமும் (ரசோதரன்)  சிவப்புக்கல் (ரசோதரன்) பிள்ளைகளின் முழுப் பொறுப்பில் ஓர் சுற்றுலா  (விசுகு) நிலவே நிலவே கதை கேளு!  (பசுவூர்க்கோபி) அப்பா உடனே வாங்கோ.  (ஈழப்பிரியன்)  நூலறிவு வாலறிவு  (சுப.சோமசுந்தரம்) புதியன புகுதலே வாழ்வு!  (பசுவூர்க்கோபி) பதியப்பட்ட 71 ஆக்கங்களில் புதிதாக இணைந்த  உறுப்பினர் @ரசோதரன்  31 ஆக்கங்களை பதிந்துள்ளார். கள உறுப்பினர் ரசோதரன் அவர்களுக்கும், சுய ஆக்கங்களைப் பதிந்த மற்றைய உறுப்பினர்களுக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் உரித்தாகுக. குறிப்பு:  யாழ் 26 அகவை - சுய ஆக்கங்கள்  பகுதியில் உள்ள ஆக்கங்களுக்கு கள உறுப்பினர்கள் தொடர்ந்தும் பாராட்டுக் கருத்துக்கள், காத்திரமான கருத்துக்கள் வைக்கமுடியும். ஆனால் புதிய தலைப்புக்கள் திறக்கமுடியாது. நன்றி
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.