Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூட்டமைப்பின் விஞ்ஞாபனம் வட்டுக்கோட்டை தீர்மானத்தைவிட பலமானது: கே.பி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

DSCF3440.JPG
கிளிநொச்சியிலிருந்து ஏ.பி.மதன்


தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் வட்டுக்கோட்டை தீர்மானத்தைவிட பலமானது, எனவும் அந்த விஞ்ஞாபனம் நாட்டுக்கு தீங்கு விளைவிக்கும் எனவும் கூறியுள்ள கே.பி என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப்புலிகள் உறுப்பினர்கள் பலரின் விடுதலையை கூட்டமைப்பு தடுத்துவருகின்றது என்று இன்று குற்றஞ்சாட்டினார்.

விடுதலைப்புலிகளின்; சிரேஷ்ட உறுப்பினர்கள் அரசியலுக்கு வந்துவிடுவார்கள் என்ற பயம் காரணமாக அவர்களை விடுதலை செய்யவேண்டாமென அதிகாரிகளிடம் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு வற்புறுத்துகின்றது என்றும் அவர் தெரிவித்தார்.

தான் நடத்திவரும் செஞ்சோலை சிறுவர் இல்லத்தில் வைத்து ஊடகவியலார்களை இன்று சந்தித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

எஞ்சியுள்ள புலி அங்கத்தவர்களை விடுதலை செய்வதற்கு நான் என்னாலானதை செய்வேன். ஆனால் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு தான் ஒரேயொரு பிரச்சினையாக உள்ளது என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் வட்டுக்கோட்டை தீர்மானம்,ஒஸ்லோ மாநாட்டில் புலி பிரதிநிதிகள் கொண்டுவந்த முன்மொழிவுகள் என்பவற்றின் கலவையாக உள்ளது. இப்போது நாடுக்கு தேவையானது இதுவல்ல என்றும் அவர் கூறினார்.

ஐக்கிய இலங்கைக்குள் 13 ஆவது திருத்தத்தையே இந்திய அமுலாக்குவதற்கு விரும்புகின்றது. அவர்கள் பிரிவினையை ஆதரிக்கவில்லை என்றும் அவர் கூறினார்.

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளரான சி.வி விக்னேஸ்வரன் தலைமை நீதியரசராக இருந்தபோது புலிகளின் சந்தேநபர்களுக்கு உச்ச தண்டனையை வழங்கிவந்தவர்.

இது சிங்கள நீதிமன்றங்கள் வழங்கிய தண்டனையை விடவும் கூடுதலாகவே இருந்தது. ஆனால் இப்போது தேர்தலில் வெல்வதற்காக முன்னாள் போராளிகளின் உரிமைகள் பற்றி பேசுகின்றார்.

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுக்களின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி ஆகியோர் கபட நாடகமாடுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

ஆனந்த சங்கரி சில வருடங்களுக்கு முன்னர் புலிகளை பயங்கரவாதியென்றார்.ஆனால், இப்போது புலிகள் வீரர்கள் என்று கூறிவருகின்றார். 
மேலும் 2009 இல் புலிகளை சம்பந்தன் பாராட்டினார். ஆனால் பின்னர் தான் புலிகளின் கொலைப்பட்டியலில் இருப்பதாக கூறினார். ஏன் இந்த இரட்டை வேடங்கள் ?' என்றும் அவர் கேள்வியெழுப்பினார்.
DSCF3444.JPG
DSCF3456.JPG

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/82915-2013-09-18-12-47-52.html

  • Replies 78
  • Views 4.4k
  • Created
  • Last Reply

கூட்டமைப்பை தோற்கடிச்சு மகிந்த கூட்டணியை அமோகமாக வெற்றி பெற வைக்க சொல்லுறார்...  !   அதை நேரடியாக சொல்லுறது தானே தலைவரே...?? 

 

மலேசியாவிலை இருந்த உங்களை காட்டி குடுத்தது கூட கூடமைப்பு தான் எண்டு இப்ப சொல்லி இருந்தால் நல்லா இருந்து இருக்கும்...   நீங்கள் தான் வேறை குறூப் காட்டி குடுத்தது எண்டு ஏற்கனவே சொல்லிப்போட்டியளே...  

 

கைதியாக நீங்கள் வேறை என்ன செய்ய முடியும் எண்ட ஆதங்கம் எனக்கும் இருக்குதுதான்... 

  • கருத்துக்கள உறவுகள்

எதுக்கு தேர்தல் பிரச்சாரம் இன்றோடு முடிகின்ற இந்த நேரத்தில் அவசர அவசரமா பேட்டி ?

  • கருத்துக்கள உறவுகள்
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் வட்டுக்கோட்டை தீர்மானத்தைவிட பலமானது, எனவும் அந்த விஞ்ஞாபனம் நாட்டுக்கு தீங்கு விளைவிக்கும் எனவும் கூறியுள்ள கே.பி என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப்புலிகள் உறுப்பினர்கள் பலரின் விடுதலையை கூட்டமைப்பு தடுத்துவருகின்றது என்று இன்று குற்றஞ்சாட்டினார்.

 

 

கே.பிக்காக பேச வல்ல யாழ்கள பேச்சாளர் மேற்படி கூற்றுக்கு பூரண விளக்கம் தருவார்.

  • கருத்துக்கள உறவுகள்

சுற்றிலும் இரணுவப்புலனாய்வாளர்கள், ராஜீவ்காந்தி வழக்கு விசாரணை, கொலைக்கும்பல் இவற்றுக்குமத்தியில் நின்றுகொண்டு, கூத்தமைப்பின் தேர்தல் அறிக்கை வட்டுக்கோட்டைத் தீர்மானத்தையும்விடப் பலமானது எனவும் எல்லோரும் கூத்தமைப்புக்கே வாக்குப்போடும்படி சொல்லாமற் சொல்லுகிறார் நீங்கள்வேற அவரைத் துரோகி என்கிறீர்கள்.

 

எஞ்சியுள்ள புலி அங்கத்தவர்களை விடுதலை செய்வதற்கு நான் என்னாலானதை செய்வேன். ஆனால் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு தான் ஒரேயொரு பிரச்சினையாக உள்ளது என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.

கடந்த தேர்தலில் பொன்சேகவுடன் கூட்டுப்போட்ட கூத்தமைப்பு தமிழர்களுக்காக என்னத்தை கிழிக்கப்போகின்றது?

கூத்தமைப்புக்கு எதிராகக் கதைத்தால் ஏதோ குற்றம்போல் சிலர் கருத்தை முன்வைக்கின்றார்கள். கூத்தமைப்பு ஒன்றும் தமிழர் நலன் சார்ந்ததில்லை. தமிழர் நல்ன் சார்ந்து அவர்களால் ஒரு துரும்பைக் கூட செய்யவும் முடியாது. அவர்கள் அரசியல் வியாபாரிகள். அவர்களை தமிழர்களின் மீட்பர்கள் என்று கருதுவோர் யாரவரும் சிங்களப்பேரினவாதத்தின் நண்பர்களே.

வேறு திரியில் சொன்னதுபோல் டக்ளஸ் நேரடியாக அரசுடன் சேர்ந்து இயங்குபவர் கூத்தமைப்பு மறைமுகமாக தமிழர் கழுத்தறுப்பவர்கள். ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்.

 

கடந்த தேர்தலில் பொன்சேகவுடன் கூட்டுப்போட்ட கூத்தமைப்பு தமிழர்களுக்காக என்னத்தை கிழிக்கப்போகின்றது?

கூத்தமைப்புக்கு எதிராகக் கதைத்தால் ஏதோ குற்றம்போல் சிலர் கருத்தை முன்வைக்கின்றார்கள். கூத்தமைப்பு ஒன்றும் தமிழர் நலன் சார்ந்ததில்லை. தமிழர் நல்ன் சார்ந்து அவர்களால் ஒரு துரும்பைக் கூட செய்யவும் முடியாது. அவர்கள் அரசியல் வியாபாரிகள். அவர்களை தமிழர்களின் மீட்பர்கள் என்று கருதுவோர் யாரவரும் சிங்களப்பேரினவாதத்தின் நண்பர்களே.

வேறு திரியில் சொன்னதுபோல் டக்ளஸ் நேரடியாக அரசுடன் சேர்ந்து இயங்குபவர் கூத்தமைப்பு மறைமுகமாக தமிழர் கழுத்தறுப்பவர்கள். ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்.

உண்மையிலும் உண்மை மாபெரும் உண்மை .......தமிழர்களுக்கு விமோசனம் ஒன்று கிடைப்பதாய் இருந்தால் இந்த குட்டைகளுக்குள் ஊறாமல் இறுதிவரை கொண்ட இலட்சியம் தவறாமல் செயல் பட்ட தமிழீழ விடுதலைப்புலிகளை நாம் எல்லோரும் சேர்ந்து அழித்துவிட்டூம் என்பதும் உண்மையிலும் உண்மை .................

 

கடந்த தேர்தலில் பொன்சேகவுடன் கூட்டுப்போட்ட கூத்தமைப்பு தமிழர்களுக்காக என்னத்தை கிழிக்கப்போகின்றது?

கூத்தமைப்புக்கு எதிராகக் கதைத்தால் ஏதோ குற்றம்போல் சிலர் கருத்தை முன்வைக்கின்றார்கள். கூத்தமைப்பு ஒன்றும் தமிழர் நலன் சார்ந்ததில்லை. தமிழர் நல்ன் சார்ந்து அவர்களால் ஒரு துரும்பைக் கூட செய்யவும் முடியாது. அவர்கள் அரசியல் வியாபாரிகள். அவர்களை தமிழர்களின் மீட்பர்கள் என்று கருதுவோர் யாரவரும் சிங்களப்பேரினவாதத்தின் நண்பர்களே.

வேறு திரியில் சொன்னதுபோல் டக்ளஸ் நேரடியாக அரசுடன் சேர்ந்து இயங்குபவர் கூத்தமைப்பு மறைமுகமாக தமிழர் கழுத்தறுப்பவர்கள். ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்.

 

 

நீங்கள் சொல்லும் ஆக்களில் KP யும் ஒரு வகை... 

 

KP ஒரு சூள்நிலை கைதி எண்டு ஒரு சாராரும் , இல்லை சரண் அடைந்து இலங்கை அரச நிழலில் செயற்படுபவர் எண்று மறு சாராரும் சொல்கிறோம்... 

 

KP நல்லவர் கெட்டவர் என்பதுக்கும் மாறாக நம்பிக்கைக்கு பாத்திரமானவர் என்பதுக்கு போதுமான எந்த ஆதரமும் கிடையாது அப்படி அவர் தமிழ் மக்களுக்காக செய்தவையும் இல்லை...  

 

மரத்திலை இருக்கும் போது நல்ல மலர்ச்சியாக  தெரியும் பூக்கள் வீழ்ந்த பிறகு எப்பிடி காய்ந்து சருகாகி மக்கி மண்ணாகிறது போல  மாதிரிதான்...   பிரபாகரனோடு இருக்கும் போது  மணமோடு இருந்தவர்கள் வீழ்ந்ததோ இல்லை விலை போன பின்னர்  சிலகாலம் மணத்தோடு இருக்கலாம் ஆனால் நீண்ட காலம் முடியாது... 

சுற்றிலும் இரணுவப்புலனாய்வாளர்கள், ராஜீவ்காந்தி வழக்கு விசாரணை, கொலைக்கும்பல் இவற்றுக்குமத்தியில் நின்றுகொண்டு, கூத்தமைப்பின் தேர்தல் அறிக்கை வட்டுக்கோட்டைத் தீர்மானத்தையும்விடப் பலமானது எனவும் எல்லோரும் கூத்தமைப்புக்கே வாக்குப்போடும்படி சொல்லாமற் சொல்லுகிறார் நீங்கள்வேற அவரைத் துரோகி என்கிறீர்கள்.

போராட்டத்தை காட்டிக்  கொடுக்கவேண்டிய நிலையில் கேபி இருந்தால் தற்கொலை பண்ணி இருக்கலாம் .வாழ்வதற்க்காக எதுவும் செய்யலாம் என்றால் இவர்களுக்காக இறந்தவர்களை என்ன செய்வது?

 

நீங்கள் சொல்லும் ஆக்களில் KP யும் ஒரு வகை... 

 

KP ஒரு சூள்நிலை கைதி எண்டு ஒரு சாராரும் , இல்லை சரண் அடைந்து இலங்கை அரச நிழலில் செயற்படுபவர் எண்று மறு சாராரும் சொல்கிறோம்... 

 

KP நல்லவர் கெட்டவர் என்பதுக்கும் மாறாக நம்பிக்கைக்கு பாத்திரமானவர் என்பதுக்கு போதுமான எந்த ஆதரமும் கிடையாது அப்படி அவர் தமிழ் மக்களுக்காக செய்தவையும் இல்லை...  

 

மரத்திலை இருக்கும் போது நல்ல மலர்ச்சியாக  தெரியும் பூக்கள் வீழ்ந்த பிறகு எப்பிடி காய்ந்து சருகாகி மக்கி மண்ணாகிறது போல  மாதிரிதான்...   பிரபாகரனோடு இருக்கும் போது  மணமோடு இருந்தவர்கள் வீழ்ந்ததோ இல்லை விலை போன பின்னர்  சிலகாலம் மணத்தோடு இருக்கலாம் ஆனால் நீண்ட காலம் முடியாது...

 

kp இரண்டு விடயங்களில் சம்மந்தப்படுகின்றார் ஒன்று சிறைப்பட்ட முன்னாள் போராளிகளின் விடுதலை மற்றது செஞ்சோலை போன்றன. ஒரு முன்னாள் புலி முக்கியஸ்த்தரால் சிங்களப்பேரினவாதத்தின் பிடிக்குள் இருந்தவாறு என்ன செய்முடியுமோ அதைச் செய்கின்றார். அதில் ஒரு வீத வெற்றி அல்லது பத்துவீத வெற்றி என்பது பிரச்சனையில்லை ஆனால் அது சார்ந்த ஒரு முயற்ச்சி இருக்கின்றது.

கூத்தமைப்புப்போ இல்லை இதர அரசியல் அடயாளப் பிழைப்புவாதிகளுக்கோ (நா க அரசு புலம்பெயர் கோஸ்டிகள் உட்பட்ட ) எவருக்கும் கே பி ஈடுபடும் விசயங்களில் நாட்டம் இல்லை. காரணம் ஒன்றுதான் இப்போது அரசின் பிடிக்குள் இருந்தாலும் கே பி ஒரு முன்னாள் புலி.

 

போராட்டத்தை காட்டிக்  கொடுக்கவேண்டிய நிலையில் கேபி இருந்தால் தற்கொலை பண்ணி இருக்கலாம் .வாழ்வதற்க்காக எதுவும் செய்யலாம் என்றால் இவர்களுக்காக இறந்தவர்களை என்ன செய்வது?

 

தற்கொலை செய்யச் சொல்வதற்கு நீங்கள் யார் சார்? இன்று விடுதலையான பதுமன் இல்லை இதற்கு முன்னர் விடுதலையான புலிகள் அல்ல பிடிபட்டு கொல்லப்பட்ட புலிகள் எல்லோரும் புலம்பெயர்ந்து தனது பாதுகாப்பையும் தனது குழந்தைகுட்டிகள் படிப்பு பாதுகாப்பு பொருளாதரத்தையும் வளர்த்துக்கொண்டவனின் புளிச்சல் ஏவறைத் தேசியத்துக்காக அடுத்தவன் தற்கொலை செய்யவேண்டுமா? தேசீயத்தில் ஈடுபாடு இருந்தால் சிலர் நினைக்கின்றார்கள் தாங்கள் கட்டளையிடும் கடவுள்கள் என்று.

kp இரண்டு விடயங்களில் சம்மந்தப்படுகின்றார் ஒன்று சிறைப்பட்ட முன்னாள் போராளிகளின் விடுதலை மற்றது செஞ்சோலை போன்றன. ஒரு முன்னாள் புலி முக்கியஸ்த்தரால் சிங்களப்பேரினவாதத்தின் பிடிக்குள் இருந்தவாறு என்ன செய்முடியுமோ அதைச் செய்கின்றார். அதில் ஒரு வீத வெற்றி அல்லது பத்துவீத வெற்றி என்பது பிரச்சனையில்லை ஆனால் அது சார்ந்த ஒரு முயற்ச்சி இருக்கின்றது.

கூத்தமைப்புப்போ இல்லை இதர அரசியல் அடயாளப் பிழைப்புவாதிகளுக்கோ (நா க அரசு புலம்பெயர் கோஸ்டிகள் உட்பட்ட ) எவருக்கும் கே பி ஈடுபடும் விசயங்களில் நாட்டம் இல்லை. காரணம் ஒன்றுதான் இப்போது அரசின் பிடிக்குள் இருந்தாலும் கே பி ஒரு முன்னாள் புலி.

KP அப்படி முயற்சி செய்கிறார் என்பது வெறும் பிரச்சாரம் மட்டுமே ... அப்படி KP யால் வெளியில் எடுத்து விடவோ அல்லது அப்படியான முயற்ச்சியின் பயனாய் ஏதும் நிகழவில்லை... அப்படி நடந்ததிற்கான ஆதாரங்களும் இல்லை...

வெளிப்படையாக சொன்னால் கருணா குழு, டக்ளஸ் தேவானந்தா ஒரு சில சிங்கள அமைச்சர்கள் போன்றவர்களின் குழுக்கள் பல போராளிகளை விடுவித்து இருக்கிறார்கள்... ( காரணம் நான் அறியேன் ) ஆனால் KP வெறும் பிரச்சார அளவில் தான் செயல் படுகிறார்... அரசாங்கத்துக்கும் கூட அதுதான் தேவையாக இருக்கிறது...

தவிரவும் KP சரண் அடைந்ததின் பின்னர் இலங்கை கடவு சீட்டு வைத்திருந்த வெளிநாடுகளில் இருந்த பல போராளிகளின் கடவு சீட்டுகள் இலங்கை அரசால் தடை செய்யப்பட்டதின் காரணத்தால் இலங்கைக்கு வெளி நாடுகளால் நாடுகடத்தப்பட்டு இருக்கிறார்கள்... ( அவர்களின் சொந்த பெயர் விபரங்களை கொடுத்தது KP யை தவிர வேறு யாராகவும் இருக்க முடியாது..)

ஆக KP கைது செய்த போராளிகளை விடுவிக்க வில்லை மேலும் கைது செய்ய காரணமாக மட்டுமே இருக்கிறார்...

  • கருத்துக்கள உறவுகள்

 

 

தற்கொலை செய்யச் சொல்வதற்கு நீங்கள் யார் சார்?

 

இன்று விடுதலையான பதுமன் இல்லை இதற்கு முன்னர் விடுதலையான புலிகள் அல்ல பிடிபட்டு கொல்லப்பட்ட புலிகள் எல்லோரும் புலம்பெயர்ந்து தனது பாதுகாப்பையும் தனது குழந்தைகுட்டிகள் படிப்பு பாதுகாப்பு பொருளாதரத்தையும் வளர்த்துக்கொண்டவனின் புளிச்சல் ஏவறைத் தேசியத்துக்காக அடுத்தவன் தற்கொலை செய்யவேண்டுமா?

தேசீயத்தில் ஈடுபாடு இருந்தால் சிலர் நினைக்கின்றார்கள் தாங்கள் கட்டளையிடும் கடவுள்கள் என்று.

 

தற்கொலை  செய்யச்சொல்ல  நீங்க யார்??

இப்படி  ஒரு கேள்வியை  நானும்

ஒருவரிடம் கேட்டேன்

வந்த பதில்

எம்மவர்கள்  அருந்தி தற்கொலை செய்த குப்பிகளை  வாங்கித்தந்தவரே கேபி தான்  என்று.

அதைச்சொல்லும்  உரிமை தனக்கு இருக்கு

அதை அடித்தவர்களுடன்   இருந்தவன்  என்று.

யாழ்  அன்புவுக்கும் அப்படி  ஒரு காரணம்  இருக்கக்கூடும்

நீங்கள்  யார் அவர்  கருத்தை மறக்க.....

அப்படி  தங்களுக்க உரிமை  இருந்தால்

அவரது கருத்தையும்  மதிக்கலாமே சுதன்...

 

தற்கொலை  செய்யச்சொல்ல  நீங்க யார்??

இப்படி  ஒரு கேள்வியை  நானும்

ஒருவரிடம் கேட்டேன்

வந்த பதில்

எம்மவர்கள்  அருந்தி தற்கொலை செய்த குப்பிகளை  வாங்கித்தந்தவரே கேபி தான்  என்று.

அதைச்சொல்லும்  உரிமை தனக்கு இருக்கு

அதை அடித்தவர்களுடன்   இருந்தவன்  என்று.

யாழ்  அன்புவுக்கும் அப்படி  ஒரு காரணம்  இருக்கக்கூடும்

நீங்கள்  யார் அவர்  கருத்தை மறக்க.....

அப்படி  தங்களுக்க உரிமை  இருந்தால்

அவரது கருத்தையும்  மதிக்கலாமே சுதன்...

 

புலம்பெயர் தேசத்தில் இருந்தவாறு அடுத்தவன் தற்கொலை செய்வது குறித்து நினைக்கவே முடியாது. அவ்வாறு நீங்கள் கேட்க முற்படும்போதே புலம்பெயர் தேசத்தவன் ஏசமானன் ஆகவும் தாயகத்தில் உள்ளவன் அவனின் அடிமையாகவும் நிலமை மாறிவிடுகின்றது. நான் என்னைப் பாதுகாத்துக்கொண்டு அடுத்தவனை தற்கொலை செய்திருக்கலாம் அதற்கான காரணங்களை ஆராய்வதும் எந்தவிதத்திலும் பொருத்தமில்லாதது. போராட்டத்தை நடத்திய முதலாளிகள் அல்லது எசமானர்கள்போல் கேள்விகேட்பதை எப்படி மதிக்கமுடியும்? இவ்வாறான கேள்விகள் தவிர்க்கப்படவேண்டியவை என்பதையே என்னால் சொல்ல முடியும்.

 

 

புலம்பெயர் தேசத்தில் இருந்தவாறு அடுத்தவன் தற்கொலை செய்வது குறித்து நினைக்கவே முடியாது. அவ்வாறு நீங்கள் கேட்க முற்படும்போதே புலம்பெயர் தேசத்தவன் ஏசமானன் ஆகவும் தாயகத்தில் உள்ளவன் அவனின் அடிமையாகவும் நிலமை மாறிவிடுகின்றது. நான் என்னைப் பாதுகாத்துக்கொண்டு அடுத்தவனை தற்கொலை செய்திருக்கலாம் அதற்கான காரணங்களை ஆராய்வதும் எந்தவிதத்திலும் பொருத்தமில்லாதது. போராட்டத்தை நடத்திய முதலாளிகள் அல்லது எசமானர்கள்போல் கேள்விகேட்பதை எப்படி மதிக்கமுடியும்? இவ்வாறான கேள்விகள் தவிர்க்கப்படவேண்டியவை என்பதையே என்னால் சொல்ல முடியும்.

தாய்லாந்தில் சொகுசா இருந்த மாதிரியே இருக்க வேண்டியது தானே எதுக்கு இந்த  நா... இற்கு இந்த காட்டிக் கொடுக்கும் வேண்டாத வேலை?  டக்லஸ் ,வரதர் போன்ற கீழ்த்தரமான பேர்வழிகளின் லிஸ்டில் கேபியும் சேர்ந்து விட்டாரே ஐயகோ நான் என்ன பண்ணுவேன் ?

  • கருத்துக்கள உறவுகள்

KP அப்படி முயற்சி செய்கிறார் என்பது வெறும் பிரச்சாரம் மட்டுமே ... அப்படி KP யால் வெளியில் எடுத்து விடவோ அல்லது அப்படியான முயற்ச்சியின் பயனாய் ஏதும் நிகழவில்லை... அப்படி நடந்ததிற்கான ஆதாரங்களும் இல்லை...

வெளிப்படையாக சொன்னால் கருணா குழு, டக்ளஸ் தேவானந்தா ஒரு சில சிங்கள அமைச்சர்கள் போன்றவர்களின் குழுக்கள் பல போராளிகளை விடுவித்து இருக்கிறார்கள்... ( காரணம் நான் அறியேன் ) ஆனால் KP வெறும் பிரச்சார அளவில் தான் செயல் படுகிறார்... அரசாங்கத்துக்கும் கூட அதுதான் தேவையாக இருக்கிறது...

தவிரவும் KP சரண் அடைந்ததின் பின்னர் இலங்கை கடவு சீட்டு வைத்திருந்த வெளிநாடுகளில் இருந்த பல போராளிகளின் கடவு சீட்டுகள் இலங்கை அரசால் தடை செய்யப்பட்டதின் காரணத்தால் இலங்கைக்கு வெளி நாடுகளால் நாடுகடத்தப்பட்டு இருக்கிறார்கள்... ( அவர்களின் சொந்த பெயர் விபரங்களை கொடுத்தது KP யை தவிர வேறு யாராகவும் இருக்க முடியாது..)

ஆக KP கைது செய்த போராளிகளை விடுவிக்க வில்லை மேலும் கைது செய்ய காரணமாக மட்டுமே இருக்கிறார்...

 

இன்றைய காலகட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு மாற்று அணி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத்தான் என்பதில் மாறாத கருத்தில் நான் உள்ளேன். ஆனாலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்பாக கே.பி.யால் கூறப்பட்ட குற்றச்சாட்டுக்களில் போராளிகள் விடுதலை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இடையூறாக உள்ளது என்பது மட்டும் உண்மை.

 

அடுத்து, கே.பி. எதுவித உதவியும் செய்யவில்லை என்று புலம்பெயர் நாடுகளில் இருந்து கொண்டு கூறாதீர்கள்.

 

அவரால் விடுவிக்கப்பட்ட மூத்த போராளிகள் பலர் உண்டு. எனக்குத் தெரிய 20 பேரளவில் விடுதலையாகி தாமும் தம் பாடு என்று உண்டு உள்ளார்கள்.

 

அதேபோன்று அன்று போராளிகளாக இருந்த பலர் மலிவு விலையில் உறுதிப்பத்திரத்துடன் வாங்கிய காணிகள் மற்றும் வீடுகளை விற்பைன செய்தவர்கள் பலர், இன்று, இவர் ஏமாற்றி பறித்துவிட்டார் என்று கூறி பொலிசிடம் போய், முன்னாள் போராளிகள் பின்னர் கே.பி.யிடம் சென்று அவர் மீட்டுக் கொடுத்த காணி மற்றும் வீடுகள் தொடர்பில் அவற்றை பெற்ற முன்னாள் போராளிகளிடமே கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.

 

இவ்வாறு பல உதவிகளைச் செய்தவரைப் போய் புலத்தில் ஒய்யாரமாக இருந்து கொண்டு கருத்து எழுதாதீர்கள். எவற்றையும் தீவிரமாக ஆராய்ந்து கருத்துக்கள் எழுதுங்கள்.

 

இன்று பதுமன் வந்துவிட்டார். அவர்களைப் போன்றவர்கள் இனி வாழ வேண்டும். அவரைப் போன்றவர்களை எல்லாம் துரோகிகள் என்று குத்தாதீர்கள். அப்படி குத்த முயலும் போது உங்களையே நீங்கள் கேள்வி கேட்டுக் கொள்ளுங்கள்.

 

மீண்டும் தெளிவாகக் கூறுகின்றேன். கூட்டமைப்புத்தான் எனது தெரிவு. ஆனாலும், அவர்களிடம் பன்முக அரசியல் திட்டம் எதுவுமில்லை.

 

மக்களிடம் அவர்கள் அரசியல் செய்யவில்லை. பழைய மிதப்பில் தாமே வெல்வோம் என்றும் தாம் கூறும் கருத்துக்களையே மக்கள் நம்புவார்கள் என்றும் அவர்கள் அதீத நம்பிக்கையில் உள்ளனர். அவற்றை எல்லாம் கூட்டமைப்பு உடைத்தெறிந்து பலமாக வளர வேண்டும்.

 

இதே கூட்டமைப்புக்கு காஸ்ட்ரோ மற்றும் தமிழ்நெட் கும்பல்கள் எதிர்ப்பு வேலைகள் செய்கின்றார்கள் என்பதனையும் இந்த இடத்தில் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

 

அத்தோடு, சண்டமாருதனின் கருத்தோடு நான் பெருமளவில் உடன்படுகின்றேன்.

Edited by nirmalan

இன்றைய காலகட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு மாற்று அணி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத்தான் என்பதில் மாறாத கருத்தில் நான் உள்ளேன். ஆனாலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்பாக கே.பி.யால் கூறப்பட்ட குற்றச்சாட்டுக்களில் போராளிகள் விடுதலை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இடையூறாக உள்ளது என்பது மட்டும் உண்மை.

 

அடுத்து, கே.பி. எதுவித உதவியும் செய்யவில்லை என்று புலம்பெயர் நாடுகளில் இருந்து கொண்டு கூறாதீர்கள்.

 

அவரால் விடுவிக்கப்பட்ட மூத்த போராளிகள் பலர் உண்டு. எனக்குத் தெரிய 20 பேரளவில் விடுதலையாகி தாமும் தம் பாடு என்று உண்டு உள்ளார்கள்.

 

அதேபோன்று அன்று போராளிகளாக இருந்த பலர் மலிவு விலையில் உறுதிப்பத்திரத்துடன் வாங்கிய காணிகள் மற்றும் வீடுகளை விற்பைன செய்தவர்கள் பலர், இன்று, இவர் ஏமாற்றி பறித்துவிட்டார் என்று கூறி பொலிசிடம் போய், முன்னாள் போராளிகள் பின்னர் கே.பி.யிடம் சென்று அவர் மீட்டுக் கொடுத்த காணி மற்றும் வீடுகள் தொடர்பில் அவற்றை பெற்ற முன்னாள் போராளிகளிடமே கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.

 

இவ்வாறு பல உதவிகளைச் செய்தவரைப் போய் புலத்தில் ஒய்யாரமாக இருந்து கொண்டு கருத்து எழுதாதீர்கள். எவற்றையும் தீவிரமாக ஆராய்ந்து கருத்துக்கள் எழுதுங்கள்.

 

இன்று பதுமன் வந்துவிட்டார். அவர்களைப் போன்றவர்கள் இனி வாழ வேண்டும் அவரைப் போன்றவர்களை எல்லாம் துரோகிகள் என்று குத்தாதீர்கள். அப்படி குத்த முயலும் போது உங்களையே நீங்கள் கேள்வி கேட்டுக் கொள்ளுங்கள்.

 

மீண்டும் தெளிவாகக் கூறுகின்றேன். கூட்டமைப்புத்தான் எனது தெரிவு. ஆனாலும், அவர்களிடம் பன்முக அரசியல் திட்டம் எதுவுமில்லை.

 

மக்களிடம் அவர்கள் அரசியல் செய்யவில்லை. பழைய மிதப்பில் தாமே வெல்வோம் என்றும் தாம் கூறும் கருத்துக்களையே மக்கள் நம்புவார்கள் என்றும் அவர்கள் அதீத நம்பிக்கையில் உள்ளனர். அவற்றை எல்லாம் கூட்டமைப்பு பலமாக வளர வேண்டும்.

 

அத்தோடு, சண்டமாருதனின் கருத்தோடு நான் பெருமளவில் உடன்படுகின்றேன்.

ஒரு மூட்டையில் சாமான் வாங்கினால் அதிலை சாக்கின் பாரத்தை கழிச்சு விட்டுதான் பொருளுக்கு பணம் கொடுப்பது ஊரிலை வழமை...

இங்கை நீங்கள் கொண்டு வந்த சரக்கிலையும் பொருளை விட சாக்கின் பாரம் தான் அதிகமாக இருக்கு... அடுத்த தடவை வேறை விதமாக முயண்று பாருங்கோ...

முன்னாள் போராளிகளுக்கு KP உதவவில்லை அப்படி இலங்கை சிங்களவன் மத்தியில் உதவ முடியும் எண்டு சொன்னால் நம்பவும் முடியாது...

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

கே பி இன்று திருகிவிட்டால் ஆடும் பொம்மை..! அவரை சி ஐ ஏ கைது செய்ததில் இருந்து அவர் அப்படி ஆகிட்டார். விடுதலைப்புலிகளின் கப்பல்கள் பற்றிய விபரங்களை அமெரிக்காவிற்கும்.. இந்தியாவிற்கு இவரே வழங்கி இருக்கவும் கூடும்..!

 

இவர் சி ஐ ஏ யிடம் சிக்கியது தொடர்பில் தேசிய தலைமை அறியாமல் இருந்து இவருக்கு கடைசி நேரத்தி வழங்கிய பொறுப்பே ஆபத்தாகவும் முடிந்து விட்டது.

 

இருந்தாலும்.. இதனை எல்லாம் தாண்டி தமிழ் மக்கள் பயணிப்பார்கள்.. இலக்கு நோக்கி.!

 

நாடு கடந்த தமிழீழ அரசை இவர் உருவாக்கவில்லை. அது பிரேரிக்கப்பட்ட போது அதனை அன்று தன்னை புலம்பெயர் மக்கள் மத்தியில் புலி என்று காட்ட ஆதரித்தார். இன்று அந்தத் தேவை அவருக்கு இல்லை. இவரை நம்பி இன்று நாடு கடந்த தமிழீழ அரசும் இல்லை. தமிழ் மக்களும் இல்லை..! ஆனாலும் இவர் உள்ளூரில் பாதிக்கப்பட்ட சிறார்களுக்கு செய்து வரும் மனிதாபிமான உதவியை பாராட்டலாம். அந்தச் சிறார்களை சிங்களத்துக்கு தத்துக் கொடுக்காத வரை..! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

கே பி இன்று திருகிவிட்டால் ஆடும் பொம்மை..! அவரை சி ஐ ஏ கைது செய்ததில் இருந்து அவர் அப்படி ஆகிட்டார். விடுதலைப்புலிகளின் கப்பல்கள் பற்றிய விபரங்களை அமெரிக்காவிற்கும்.. இந்தியாவிற்கு இவரே வழங்கி இருக்கவும் கூடும்..!

 

இவர் சி ஐ ஏ யிடம் சிக்கியது தொடர்பில் தேசிய தலைமை அறியாமல் இருந்து இவருக்கு கடைசி நேரத்தி வழங்கிய பொறுப்பே ஆபத்தாகவும் முடிந்து விட்டது.

 

இருந்தாலும்.. இதனை எல்லாம் தாண்டி தமிழ் மக்கள் பயணிப்பார்கள்.. இலக்கு நோக்கி.!

 

நாடு கடந்த தமிழீழ அரசை இவர் உருவாக்கவில்லை. அது பிரேரிக்கப்பட்ட போது அதனை அன்று தன்னை புலம்பெயர் மக்கள் மத்தியில் புலி என்று காட்ட ஆதரித்தார். இன்று அந்தத் தேவை அவருக்கு இல்லை. இவரை நம்பி இன்று நாடு கடந்த தமிழீழ அரசும் இல்லை. தமிழ் மக்களும் இல்லை..! ஆனாலும் இவர் உள்ளூரில் பாதிக்கப்பட்ட சிறார்களுக்கு செய்து வரும் மனிதாபிமான உதவியை பாராட்டலாம். அந்தச் சிறார்களை சிங்களத்துக்கு தத்துக் கொடுக்காத வரை..! :icon_idea:

 

உங்கள் கற்பனைக் குதிரை அபாரம்.

 

  • கருத்துக்கள உறவுகள்

அபாரமாகவே இருந்திட்டுப் போகட்டும். உங்களின் அண்டைப் புழுகை விட இது எவ்வளவோ உசத்தி. விக்கிலீக்ஸ் அறிக்கை வரும் வரை காத்திருப்போம்..! :icon_idea::lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு மூட்டையில் சாமான் வாங்கினால் அதிலை சாக்கின் பாரத்தை கழிச்சு விட்டுதான் பொருளுக்கு பணம் கொடுப்பது ஊரிலை வழமை...

இங்கை நீங்கள் கொண்டு வந்த சரக்கிலையும் பொருளை விட சாக்கின் பாரம் தான் அதிகமாக இருக்கு... அடுத்த தடவை வேறை விதமாக முயண்று பாருங்கோ...

முன்னாள் போராளிகளுக்கு KP உதவவில்லை அப்படி இலங்கை சிங்களவன் மத்தியில் உதவ முடியும் எண்டு சொன்னால் நம்பவும் முடியாது...

 

உதவவில்லை உதவவில்லை என்று நீங்கள் கூறி எதுவும் நடக்காது அப்பு. உதவி பெற்றவனையும் உதவி பெற்றவன் குடும்பத்தினையும் போய்க் கேட்க வேண்டியதுதானே. இதில் இருந்து ஒரே கருத்தினை மீள மீள அடித்துக் கொண்டிருந்தால் போல நீங்கள் கூறுவது சரி என்றாகிவிடுமா?

 

உண்மையான தகவல்களை வைத்துத்தான் நான் உரையாடுகின்றேன். நம்ப வேண்டியவர்கள் பலர் இந்த யாழ் களத்தில் உள்ளனர். அவர்கள் நம்பினாலே போதும். இதில் நான் உங்கள் அனைவரின் கருத்துக்களைப் பொருட்படுத்தாது எழுதுகின்றேன் எனில் எனக்கு தனிப்பட்ட ரீதியில் கிடைக்கும் ஆதரவுதான்.

 

தமக்கும் இவ்வாறு எழுத வேண்டும் என்றுதான் ஆசை. ஆனால், யாழில் இருக்கின்ற கடுங்கோட்பாளர்கள் எதனையும் ஏற்றுக்கொள்கின்ற மனப்பக்குவம் அற்றவர்களாகவே உள்ளனர் என்று நான் கூறவில்லை. என்னோடு உரையாடியவர்கள் கூறினார்கள்.

அவரவர் வேலையை அவரவர் பார்திருக்க வேண்டும்.

 

அண்மையில் கனடா சென்றிருந்த சிறீதரன் எம்.பியை அங்கே உள்ளவர்கள் செஞ்சோலை என்று ஒன்று இயங்குகின்றதே என்று கேட்கப்பட்டபோது, அவர், இல்லையே செஞ்சோலை என்று ஒன்று அங்கே இயங்கவே இல்லை என்றாராம்.

 

கிளிநொச்சி மாவட்டத்தின் எம்.பியானவர் எப்படி ஒரு முழுப் பூசணிக்காயை சோற்றுக்குள் மறைத்திருக்கின்றார் பாருங்கள்.

 

செஞ்சோலை இயங்குவது பிடிக்கவில்லை ஓ இயங்குகின்றது எமக்கும் அதற்கும் தொடர்பு இல்லை என்று விட்டிருக்கலாமே.

 

இன்று கே.பி.யை கூட்டமைப்பினை விமர்சிப்பதனை நான் ஏற்றுக்கொள்ளாது விட்டாலும். சிறீதரன் எம்.பி.தான் இன்று கே.பி. வாயால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை கடுமையாக விமர்சிக்க பிள்ளையார் சுழி போட்டிருக்கின்றார் என்பதனை நாம் ஏற்றுக்கொண்டேயாக வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

Pathmanathan was the subject of a worldwide manhunt, which involved police from cities including Johannesburg, Rangoon, Singapore and Bangkok. Some of the world's foremost intelligence agencies, including the American CIA and British MI-5, were on his trail.[7] He was believed to have had bank accounts in London, Frankfurt, Denmark, Athens and Australia and over 200 passports for his use.[8] In May 2011, he alleged that the United Nations and a "western country" worked to help many LTTE operatives escape from Sri Lanka.[17]

 

There were conflicting reports from Thailand that Pathmanathan had been arrested on 11 September 2007. The reports were preceded by the detention in Ranong Province of three other LTTE operatives the month before, for trying to buy guns and 45,000 rounds of ammunition.[8][12] However a number of Thai officials rejected the reports, claiming they had no information about such an arrest.[18] Thai immigration officers claimed that no such person had entered the country in the last two years.[18]

 

Pathmanadan was arrested in a South East Asian country on August 5, 2009. Initial reports suggested that he was captured in Thailand,[19] but this was denied by Thai authorities.[3] But it was later revealed that he had been arrested by a Sri Lankan military intelligence unit, with the cooperation of local authorities, in the Tune Hotel, downtown Kuala Lumpur, Malaysia.[20] The Sri Lankan Government announced on 7 August that he had been brought to Colombo.[21][22] Sources have termed him "crucial" to the uncovering of various Liberation Tigers of Tamil Eelam crime networks.[23]

 

After the arrest he began cooperating with the Sri Lanka government.[24] On 9 July 2010, Pathmanathan established the North-East Rehabilitation and Development Organization (NERDO), a Non-Governmental Organization for the provision of relief to the Internally Displaced Persons (IDPs) while upgrading facilities for better physical, mental and living conditions for them.[25] In October 2012, media sources reported that Pathmanathan was being released from custody, quoting the head of Media Center for National Security Lakshman Hulugalle.[26][27] Later he rejected the reports by saying Pathmanathan who is under special protection was permitted to engage in his NGO work and has not been released as claimed by media.[28]

 

http://en.wikipedia.org/wiki/Selvarasa_Pathmanathan

 

Though details are scanty there is reason to believe that Sri Lanka with the aid of “intelligence officials” from other countries had accomplished the feat of seizing and transporting KP from Kula Lumpur to Colombo. It is also assumed that the exercise amounted to an “extraordinary rendition” on the lines of what the US Central Intelligence Agency (CIA) had been doing in the aftermath of the twin towers assault on September 11th 2001. More details about “Operation KP” are likely to be revealed in the near future.

 

http://dbsjeyaraj.com/dbsj/archives/1033

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

அபாரமாகவே இருந்திட்டுப் போகட்டும். உங்களின் அண்டைப் புழுகை விட இது எவ்வளவோ உசத்தி. விக்கிலீக்ஸ் அறிக்கை வரும் வரை காத்திருப்போம்..! :icon_idea::lol:

 

அவற்றையும் எங்கே அப்பு நம்பப் போகிறியள்? அதுவும் ஒரு அண்டப் புழுகு அதுதான் விக்கிலீக்ஸ் உரிமையாளரை அவுஸ்திரேலிய மக்களே தேர்தலில் தோற்கடித்துவிட்டனர் பின்னர் விண்ணானம் எழுத வருவீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அவற்றையும் எங்கே அப்பு நம்பப் போகிறியள்? அதுவும் ஒரு அண்டப் புழுகு அதுதான் விக்கிலீக்ஸ் உரிமையாளரை அவுஸ்திரேலிய மக்களே தேர்தலில் தோற்கடித்துவிட்டனர் பின்னர் விண்ணானம் எழுத வருவீர்கள்.

 

விக்கிலீக்சின் உரிமையாளரை எவர் நம்புக்கிறார்கள்....???! அவரை நம்பி அல்ல விக்கிலீக்ஸ் ஓடுது. விக்கிலீக்ஸ் தனக்கு கிடைக்கும் கேபிள் ஆதாரங்களின் அடிப்படையில் ஓடுது. ஆதாரங்களை வெளியிடுகுது. நீங்கள்.. என்ன ஆதாரத்தை இதுவரை வெளியிட்டு உங்கள் விவாதத்தை கொண்டு சென்றிருக்கிறீர்கள். பூச்சிய ஆதாரம்.. பூதாகர கற்பனை.. இதுதான் உங்கள் பிரச்சாரங்கள் நொய்ந்து போய் கிடக்கக் காரணம். அது கூட மக்களை உங்களிடம் இருந்து ஏமாறாமல்.. பாதுகாக்கிறது..! :):icon_idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.