Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நடுவிலை நாலு நாளைக்காணோம்

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரியார், வாழ்க்கையை ஒரு நிரந்தர தங்கு மடமாக நினைப்பவர்கள் பலர்! அதே நேரம், வாழ்க்கையை, ஒரு பயணமாக, ஒரு நடைபாதையாகப் பார்ப்பவர் வெகு சிலர்!

 

இப்படியான நினைவுகளையும், நகைச்சுவையுடன் பதிய உங்களால் மட்டும் தான் முடியுமென நினனைக்கிறேன்! உங்கள் மனைவி நலம்பெற்று நீடூழி வாழ வேண்டும்!

 

 

நன்றிகள் :)

 

 

கன நாளைக்குப்பிறகு வணக்கம் சாத்திரியார்!  :)
சொந்தக்கதை சோகக்கதை எண்டாலும் பலருக்கு ஒரு எச்சரிக்கைக்கதை.

 

 

உண்மைதான் நன்றிகள் :)

இந்த கதை எல்லொருக்கும் ஒரு பாடமும் கூட.... மருந்தை கண்டபடி வைத்தியர் பரிந்துரைக்காமல் எடுக்கவும் கூடாது... மற்றும் பாதுகாப்பில்லாமல் வைக்கவும் கூடாது....

 

நம்மில் சிலர் தாங்களே பாதி வைத்தியர் என்று நினைத்து மருந்துகளை பாவிப்பது இப்படியான மேசமான விளைவுகளை  கொண்டு வரும் என்பதற்கு இது  ஒரு உதாரணம்

மனைவிக்கு சுகமானது மட்டுமில்லாமல் எதற்காக கோமாவுக்கு போனார் என்பதையும் அறிந்த சாத்திரியார் சந்தோசத்தில்  தனக்கு நடந்தவற்றை நகைச்சுவையாக எழுதியுள்ளார்.அத்தோடு மருந்துகள் எடுப்போருக்கு ஒரு படிப்பினையும் கூட.பகிர்வுக்கு நன்றி.

உண்மைதான் நுணா.இந்தக் கதையை படித்தாவது கண்டபடி மருந்து போடுபவர்கள் திருந்தவேண்டும் நன்றி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரி, உங்கள் புதல்வியை பற்றி கதையில் ஒன்றும் குறிப்பிடவில்லை. அவருக்கு இப்படி பிரச்சனை நடந்தது சிறியவர் என்பதால் சொல்லப்படவில்லையா? நான் எனது அப்பாவின் சாவு மூலம் உணர்ந்து அறிந்துகொண்டவிடயம் வைதியசாலைகளையோ அல்லது மருத்துவர்களையோ எந்தவிதத்திலும் முற்றிலும் நம்பி சரண் அடையக்கூடாது. அவர்கள் தமது வசதியையும், சுகங்களையுமே முதலில் கவனத்தில் எடுப்பார்களேயொழிய அவர்களை நம்பி நாம் ஒப்படைக்கும் எமது அன்புச்செல்வங்கள் எல்லாம் சரியாக கவனிக்கப்படுவார்கள் என்பதற்கு எதுவித உத்தரவாதமும் இல்லை. 

 

குடி குடிக்கு ஆகாது, பகிடியாக இருந்தாலும் குடியை குறையுங்கள், அது உங்கள் எதிர்கால தேக, ஆரோக்கிய சுகவாழ்விற்கு உதவும். சுவர் இல்லாமல் சித்திரம் வரைய முடியாது.

 

கரும்பு கெட்ட காலத்திலும் ஒரு நல்லது நடக்கும் என்பார்கள் அது போலத்தான்.இந்தச் சம்பவம் நடந்த  நேரத்தில் மகள் பாடசாலை லீவு என்பதால்  பாடசாலை மாணவர்களோடு மலைப் பகுதி ஒன்றிற்கு 15 நாள் சுற்றுலா சென்றிருந்தார்கள்.மகளிற்கு உடனடியாக நான் எதனையும் சொல்லவில்லை மனைவிக்கு உடல் நலம் சரியில்லை என்று மட்டும் சொல்லி சமாளித்துக்கொண்டிருந்தேன்.மனைவி பழைய நிலைக்கு திரும்பியதும் போனடித்து கதைக்கக் கொடுத்திருந்தேன் பின்னர் அவர்  சுற்றுலா முடிந்து திரும்பியதும்தான் விபரமாக சொன்னேன்.

 

இதைத்தான் சொல்லுறது ரணகளத்திலேயும் ஒரு கிளுகிளுப்பு என்று!!!!!!!!!!சாத்திரியாரின் மனைவி உடல் நலம் தேறி திரும்பி வந்தது மகிழ்ச்சியைத்தருகிறது.

 

என்ன செய்ய பழகிப்போச்சுதே. :lol:

பெரும்பாலும் திருமணமான புதிதில் மனைவியின் மீதுள்ள அக்கறை, கவர்ச்சி குழந்தைகள் வந்தவுடன் சற்றே தொய்வுற்று பின்னர் மிகச் சரியான புரிதல் வந்தவுடன் நிலைமை சரியாகி மறுபடியும் சீராகச் செல்லும். இந்த அக்கறை தொய்வு, 30 வயது முதல் 55 வயது வரை இருக்கலாம். இப்பேர்பட்ட காலங்களில் சீண்டலும், சச்சரவுகளும் அதிகமென்பதால் ஒருவருக்கொருவரின் தேவைகளின் கவனிப்பிலும் சறுக்கல்கள் இருக்கும். வயது 55 மேல் ஆகிவிட்டால், ஆண்களின் மனநிலை தொழிலில் ஓய்வை நோக்கிய  நிலையில், வீட்டில் துணைவியின் கை ஓங்குவது வாடிக்கை. ஏனெனில் முதுமை காரணமான சார்பு நிலை. இதில் இடைப்பட்ட அந்த 20 வருடங்கள் மிக முக்கியமான சுவாரசியமான வாழ்க்கையில் சிறிதே தவறினாலும் வாழ்க்கை கசந்துவிட வாய்ப்புக்கள் அதிகம். ஆகையால் ஒருவருக்கொருவர் மிகுந்த அக்கறையுடனும், புரிந்துகொண்டு பொறுப்புடன் வாழ்க்கையை வாழ்ந்தால் குழப்பங்களை தவிர்க்கலாம்.

 

பகிர்விற்கு நன்றி சாத்திரி. (வயதேறுகிறது, 'தண்ணி'யை குறைக்கப் பாருங்கள்! :) )

நன்றிகள். இப்பவெல்லாம் தண்ணியை  குறைத்துக்கொண்டே வருகிறேன். :icon_idea:

 

நன்றிகள். இப்பவெல்லாம் தண்ணியை  குறைத்துக்கொண்டே வருகிறேன். :icon_idea:

 

தண்ணி தானாக குறையுது என்று நினைக்கின்றன்...வயசாகும் போது நடப்பதுதானே..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தண்ணி தானாக குறையுது என்று நினைக்கின்றன்...வயசாகும் போது நடப்பதுதானே..

 

அது வற்றாத ஜுவ நதி..ஊற்றெடுத்துக்கொண்டே இருக்கும்.... :wub: :wub: நான் சொன்னது வேறை தண்ணி :lol: :lol:

வீட்டில் உள்ளவர்களை கவனமாக பாருங்கள், அவர்களின் பிரச்சனைகளை அவர்கள் முகத்திலிருந்தே கண்டு பிடிக்கலாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இப்பிடி எழுதுறதுதான் சாத்ஸ்ஸின் தனி ஸ்டைல்...! அதை சொல்லவா வேண்டும்!? :)

எப்படிப்பட்டதொரு  பிரச்சினையையும் கலக்கமில்லாமல் எதிர்கொள்ளுவதில் சாத்திரியைக் கேட்டுத்தான். :)

 

 

 

சாத்ஸ்.... தண்ணியடிச்சா வாறது ஒரு..... "தனி ஞானம்" என்பது உண்மைதான். :)

 

 

இந்தக் கதைக்கு நான் விருப்பு வாக்கிட விரும்பவில்லை . ஏனெனில் ஒருவரின் கவலைக்கு விருப்புவாக்கிடுவது என்பது என்னைப் பொறுத்தவரையில் பண்பற்ற செயலாகும் . ஆகஸ்ட் 18ஆம் திகதி நான் வேலையில் நிற்கும் பொழுது எனது கைத்தொலைபேசிக்கு சாத்திரியின் அழைப்பு வந்தது . இருவரும் வேலையில் நிற்கும்பொழுது தொலைபேசி எடுப்பதில்லை . என்ன இவர் என்றும் இல்லாதவாறு எடுக்கின்றார் என்ற யோசனையுடன் அழைப்பை எடுத்தேன் .சாத்திரி மனைவிக்கு நடந்த விடையத்தைச் சொன்னார் . அவர் மிகவும் மனம் குழம்பிய நிலையில் இருந்தார் . நான் அவருக்கு எவ்வளவோ ஆறுதல் சொன்னாலும் எனது மனமோ பல மடங்கு குழம்பியிருந்தது . அனுபவப் பகிர்வுக்கு நன்றி

 

 

 சாத்திரியார்

நீங்கள் நகைச்சுவையாக எழுத விரும்பினாலும்

இடை இடையே உங்கள் சோகமும் இளையோடுகின்றது . அனுபவித்தவனுக்குத்தான்

எல்லாம் புரியும். :)

 

 

 அனுபவப் பகிர்வுக்கு நன்றி சாத்திரி. பொதுவாக எம் பெண்கள் மருத்துகள் குடிப்பதில் வல்லுநர்கள். தலையிடியில் இருந்து எல்லாவற்றுக்கும் உடனே மருந்து குடிப்பார்கள்.  சில நேரங்களில் அதுவே எமனாக போகும் அபாயமும் வந்து விடுகின்றது.

 

மனைவி என்ற உறவின் மீது நாம் ஆண்கள் வைத்திருக்கும் அன்பு, அவருக்கு ஏதும் பிரச்சனைகள் வரும்போதுதான் எமக்கே புரியத் தொடங்கும். ஒரு கணம் கண்ணை மூடி அவரில்லாத உலகத்தினை கற்பனை செய்தாலே சூனியம் தான் தெரியும்.

 

கடைசியில் சீவாஸ் றீகல் படத்தினைப் போட்டுள்ளீர்கள். இதையா வழக்காம அடிக்கின்றீர்கள்? அடிக்கடி குடிக்கக் கூடிய ஒரு சாமான் இல்லை இது. அதிக சக்தி கொண்டது ( Power) என்பதால் Regular பாவனைக்கு சரியான தெரிவில்லை என நினைக்கின்றேன். நான் இதனை கைவிட்டு 3 வருடங்களாகின்றது. இதே போன்றது தான் Black label லும்.

உங்கள் கருத்துக்களிற்கும் ஆதரவிற்கும் நன்றிகள். :)

சாத்திரி அண்ணா வீடடில் பயமுறுத்துவதால்தான் ஒளித்து மருந்து எடுக்கவேண்டி வந்தது.. :D பெண்களுக்கு சம உரிமை கொடுத்தால் இந்தப் பிரச்சினைகள் வராதில்லையா.. :icon_idea:

 

இசை நான் பயமுறுத்துவதெல்லாம் இல்லை. இங்கு நிழலி சொன்னது போல் சாதாரண தலையிடி என்றாலும் உடனே பரிசிற்றமோல் 1000 தான் போடுவார் மனைவி.சக்தி குறைந்ததும் பாவிக்க மாட்டார். அதனால்தான் நான் கத்துவதுண்டு. இப்போ நல்ல திருத்தம். :lol: :lol:

Edited by sathiri

  • கருத்துக்கள உறவுகள்

 

இசை நான் பயமுறுத்துவதெல்லாம் இல்லை. இங்கு நிழலி சொன்னது போல் சாதாரண தலையிடி என்றாலும் உடனே பரிசிற்றமோல் 1000 தான் போடுவார் மனைவி.சக்தி குறைந்ததும் பாவிக்க மாட்டார். அதனால்தான் நான் கத்துவதுண்டு. இப்போ நல்ல திருத்தம். :lol: :lol:

நீங்கள் கத்துவதைச் சொல்லுகின்றீர்களா அல்லது மனைவியார் குளுசை போடுவதைச் சொல்லுகின்றீர்களா, சாத்திரியார்? :icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லாரும் சொல்லியவை தான். சாத்திரியண்ணாவினெழுத்துக்களுக்கா குறை?

புலம்பெயர் தேசங்களில் வேலைப்பழு காரணமாக பெரும்பாலானோர் உடல்நிலையில் பெரிதும் அக்கறை கொள்வதில்லை. ஆளாளுக்கு வைத்தியர் என்ற நினைப்பிலை  எதுக்கெடுத்தாலும் பரசிட்டமோலும், அஸ்பிரினும், மல்டி விட்டமினும் தான்.

நல்லத்ஒரு விளிப்புணர்வுக் கதையை உங்கள் பாணியில் நகைச்சுவையாகச் சொல்லியுள்ளீர்கள்.

 

அன்பானவர்களிடம் அதிக அக்கறை எடுத்துக்கொள்ளுங்கள். :)

  • கருத்துக்கள உறவுகள்

சோகத்தையும் நகைச்சுவையுடன் எழுத உங்களால் மட்டுமே முடியும் குருவே சாத்திரியாரே....எனது எழுத்துலக குரு சாத்திரியார்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் கத்துவதைச் சொல்லுகின்றீர்களா அல்லது மனைவியார் குளுசை போடுவதைச் சொல்லுகின்றீர்களா, சாத்திரியார்? :icon_idea:

 

இரண்டும்தான். :lol:

சோகத்தையும் நகைச்சுவையுடன் எழுத உங்களால் மட்டுமே முடியும் குருவே சாத்திரியாரே....எனது எழுத்துலக குரு சாத்திரியார்

 

இத்தனை நாளா எனக்கு தெரியாமல் போயிட்டுதே. தெரிந்திருந்தால் கட்டை விரலை வெட்டித்தர சொல்லி கேட்டிருப்பனே.. :lol: :lol:

கவலையையும் நகைச்சுவையாக எழுதியுள்ளிர்கள். முக்கியமாக பிழையாக மருந்து எடுத்ததால் வந்த குளறுபடியை வெளிக் கொணர்ந்ததற்காக நன்றி.

 

இந்த வருட ஆரம்பத்தில் எனக்கு அடிக்கடி காய்ச்சல் வந்தது. ஒருமுறை 'Day and night nurse' குளிசை எடுத்த பொழுது நல்ல பயனைத் தந்தது. காய்ச்சல் விட்டு விட்டு வந்ததால் ஒவ்வொரு நாளும் அந்தக் குளிசையை பாவித்தேன்.

காய்ச்சல் போய் தொடர்ச்சியாக தலையிடியும்  சில வேலை மயக்கம் வருவது போலவும் இருந்தது. மருத்துவரிடம் போன பொழுது உயர் இரத்த அழுத்தம் மிக உச்சத்தில் அபாயகரமான கட்டத்தில் இருந்தது. விட்டிருந்தால் மாரடைப்பு / பக்கவாதம் வந்திருக்கும் என்று கூறினார். அந்தக் குளிசை ஒரு நாளுக்கு மேல் எடுக்கக் கூடாதென்றும் உயர் இரத்த அழுத்தத்தை தரும் என்றும் குளிசை எடுப்பதற்கான அறிவுறுத்தலில் சொல்லப்பட்டுள்ளது.  அதனை நான் வாசிக்கவில்லை. நாமதானே  பரீட்சையில் கேள்வியை வாசிக்காமல் பதில் எழுதின ஆள். அறிவுறுத்தல்களை அதிகம் வாசிப்பதில்லை.

 

 

 

சாத்திரி அண்ணை,கவலைகளையும் அழகாக எழுதியிருக்கிறீர்கள்.
கோமா நிலைக்கு போய் மீளவந்தவர் உணர்வு வேறு மாதிரி இருக்கும்.
நானும் அந்த நிலைக்கு போய் வந்தேன்.
பகிர்விற்கு நன்றி    

 

 

 

வணக்கம் சாத்திரியார், உங்கள் துணைவியார் நலம் பெற்றது மிகவும் மகிழ்ச்சி. உங்கள் குடும்பம் நீடூழி வாழவேண்டும்.

உங்கள் பகிர்வுகளிற்கும்  அக்கறைக்கும் நன்றிகள் உறவுகளே :wub:

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

மனதை கலங்கடிக்கும் விடயத்தை நகைச்சுவையாக சொல்லீட்டியளே... நல்லாருக்கு எண்டு சொல்லமுடியல்ல.. எல்லாம் நலமாக முடிந்தது மகிழ்ச்சியே..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாசிச்சு முடிக்கும் மட்டும் நெஞ்சுக்குள்ள 'தண்ணியே இல்லை!....'என்னவோ கடைசியிலே அதுக்காகவே ஒரு 'தண்ணிப்போத்தலைப்போட்டிருக்கீங்க :)! சரி அதை விடுங்க முதல்ல விசயத்துக்கு வருவம். உங்களிடம் மறைச்சது உங்கள் பாரியார் செய்த பெரும் பிழை!. என்னவேணும்னாலும் இருக்கட்டும். திரு+திருமதிகளிடம் ஒளிவு மறைவு இருக்க கூடாது!. அதுதான் எல்லாப் பிரச்சனைக்கும் அடிப்படை!

 

 

 அதையும் விட மருந்துகள் கண்ட மாதிரி போடுறது!. காய்ச்சலுக்கு கூட இப்ப எங்கட ஆக்களுக்கு 'மல்லித்தண்ணி வைச்சுக்குடிக்க ஏலாது! உடனே ஒரு தைனோல், அட்வில்...எண்டு...போடுறது. இதெல்லாம் மிகப்பெரும் பக்க விளைவுகளை உண்டு பண்ணும். உங்கட 'இந்தக்கதை' சிலருக்கு தெளிவை உண்டு பண்ணியிருக்கும்! அருமையாக எழுதி இருக்கீங்க!...
 

Edited by Thamilthangai

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாசிச்சு முடிக்கும் மட்டும் நெஞ்சுக்குள்ள 'தண்ணியே இல்லை!....'என்னவோ கடைசியிலே அதுக்காகவே ஒரு 'தண்ணிப்போத்தலைப்போட்டிருக்கீங்க :)! சரி அதை விடுங்க முதல்ல விசயத்துக்கு வருவம். உங்களிடம் மறைச்சது உங்கள் பாரியார் செய்த பெரும் பிழை!. என்னவேணும்னாலும் இருக்கட்டும். திரு+திருமதிகளிடம் ஒளிவு மறைவு இருக்க கூடாது!. அதுதான் எல்லாப் பிரச்சனைக்கும் அடிப்படை!

 

 

 அதையும் விட மருந்துகள் கண்ட மாதிரி போடுறது!. காய்ச்சலுக்கு கூட இப்ப எங்கட ஆக்களுக்கு 'மல்லித்தண்ணி வைச்சுக்குடிக்க ஏலாது! உடனே ஒரு தைனோல், அட்வில்...எண்டு...போடுறது. இதெல்லாம் மிகப்பெரும் பக்க விளைவுகளை உண்டு பண்ணும். உங்கட 'இந்தக்கதை' சிலருக்கு தெளிவை உண்டு பண்ணியிருக்கும்! அருமையாக எழுதி இருக்கீங்க!...

 

 

நன்றிகள் தமிழ்தங்கை அதே நேரம் நீண்ட நாளிற்கு பின்னர் யாழில் கண்டது மகிழ்ச்சி :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.