Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகளின் அடையாளங்கள் இனித் தேவையில்லை என்பதால் பிரபாகரனின் வீடு தகர்க்கப்பட்டது - ருவான் வணிகசூரிய

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளின் அடையாளங்கள் இனித் தேவையில்லை என்பதால் பிரபாகரனின் வீடு தகர்க்கப்பட்டது - ருவான் வணிகசூரிய

[saturday, 2013-10-05 07:05:23]
ruvan-venisa-seithy-150.jpg

தமிழீழ விடுதலைப் புலிகளின் அடையாளங்களை இன்னும் வைத்துக் கொண்டிருக்க வேண்டிய தேவையில்லை. அதனால் புதுக்குடியிருப்பு பகுதியிலிருந்த புலிகளின் நிலக்கீழ் பதுங்குகுழியுடனான வீடு தகர்க்கப்பட்டது என்று இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்தார். முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பில் அமைந்துள்ள புலிகளின் தலைவர் பிரபாகரனின், பாரிய பதுங்கு குழியுடன் அமைந்திருந்த வீடு நேற்று முன்தினம் வியாழக்கிழமை தகர்க்கப்பட்டது தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே இராணுவ பேச்சாளர் இவ்வாறு தெரிவித்தார்.

  

அவர் மேலும் தெரிவிக்கையில்; புதுக்குடியிருப்பு பகுதியில் நேற்று முன்தினம் தகர்க்கப்பட்ட பதுங்குழியுடனான வீடு புலித் தலைவருடையதா என்பது குறித்து எமக்கு சரியாக கூறமுடியாது. என்றாலும் அது புலிகளின் சுரங்கத்துடனான மூன்று மாடிகளைக் கொண்ட கட்டிடமாகும் என்றும் அவர் தெரிவித்தார். விடுதலைப்புலிகளின் தலைவரின் பதுங்கு குழியுடனான வீடும் இந்த பிரதேசத்திலேயே இருந்தது. மூன்று மாடிகளைக் கொண்ட இந்த வீட்டிலிருந்து அவசரமாக வெளியேறுவதற்கான சுரங்கப் பாதையும் இருந்தது. அந்த வீட்டுக்கு முன்பாக பிரபாகரன் தன்னுடைய வீரர்களுடன் கலந்துரையாடுவதற்கான மண்டபமொன்றும் அமைக்கப்பட்டிருந்தது.

புலிகளின் அடையாளங்கள் பல அழிக்கப்பட்டுவிட்டன. இந்த வீட்டைச் சுற்றி மிதிவெடிகள் புதைக்கப்பட்டிருந்தன. ஆகையினால் இந்தைக் கட்டிடத்தை தகர்ப்பதில் காலதாமதம் ஏற்பட்டது. கண்ணிவெடிகளை அகற்றாமல் கட்டிடத்தைத் தகர்ப்பதனால் ஏற்படும் சேதங்களை குறைத்துக் கொள்வதற்கே கண்ணிவெடிகளை அகற்றியதன் பின்னர் இந்தக் கட்டிடம் தகர்க்கப்பட்டது. வீட்டைச் சுற்றி புதைக்கப்பட்டிருந்த கண்ணிவெடிகள் யாவும் கடந்த வாரமே அகற்றப்பட்டன என்றும் அவர் தெரிவித்துள்ளார். அந்த வீட்டுக்கு முன்பாக பாதுகாப்பு கூடாரங்களும் அமைக்கப்பட்டிருந்தன. பிரபாகரனின் வாகனம் அந்த வீட்டுக்குள் நுழைவதற்கான வசதிகளும் அமைக்கப்பட்டிருந்தன.

வீட்டைச் சுற்றி ஆறு வரிசைகளில் முட்கம்பிகள் கட்டப்பட்டிருந்தன. ஒரு வரிசையிலிருந்து மற்றுமொரு வரிசைக்கான தூரம் 20 அல்லது 25 மீற்றராக இருந்தது. அவற்றுக்கு இடையிலும் பாதுகாப்பு கூடாரங்களும்; இருந்தன என்றும் அவர் கூறினார். இந்த வீட்டைப் பார்வையிடுவதற்கு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டிருந்த அனுமதியும் கடந்த வாரம் முதல் நிறுத்தப்பட்டது என்றும் அவர் தெரிவித்தார்.

நன்றி - செய்தியிணையம்

 

  • கருத்துக்கள உறவுகள்

தேவையில்லை என்று முடிவு செய்ய 'வணிக சூரியா' என்பவருக்கு, அடக்கியாள்பவர் என்பதைத் தவிர வேறு ஏதும் தகுதிகள் உண்டா என அறிய ஆவல்!

 

உங்கள் புத்த விகாரைகள் எங்களுக்குத் தேவையில்லை என்று கருதுகிறோம்!

 

நாக விகாரையைத் தகர்க்க ஒரு நான்கு நிமிடங்களே போதுமாக இருந்திருக்கும் என நினைக்கிறேன்!

 

அதை ஏன் அவர்கள் அப்போது செய்யவில்லை? :o

மாகாண சபை இயங்கத் தொடங்கினால் அகற்றுவதில் பிரச்சினைகள் எழுவதைத் தவிர்க்க அவசரப்பட்டுத் தகர்த்ததுபோலத் தெரிகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளின் அடையாளமாக அவர்கள் மீதான தடைகளும் உள்ளன. அவற்றையும் நீக்கவேண்டும்..!

  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரன்

என்ன வீட்டுக்கு முன்னே போடு புள்ளடி என்று வளர்ந்தவரா??? :(

அவர்  இருக்குமிடும்

தெரிந்தும்  ஏனிந்த அசையாத சொத்துக்களை அழிக்கின்றீர்....... :(

  • கருத்துக்கள உறவுகள்

பெரிய பெரிய படையணிகள், அவற்றின் அடையாளங்கள் எல்லாவற்றையும் ஒட்டு மொத்தமாக இழந்து நிற்கின்றோம். இனி ஒருபோதும் பயன்படுத்தப்படப் போகாத இந்த வீடு இருந்தென்ன இல்லாட்டி என்ன?  எத்தனையோ வீரப்புதல்வர்களைத் தந்த வீடுகள் அடுத்தவேளை உணவுக்கு அந்தரிக்கும் நிலைதான் இன்றும் உள்ளது. அந்த வீடுகளின் நிலையைக் கவனிப்பார் யாருளர்?

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளின் அடையாளங்களை வேண்டுமானால் இவர்களால் அழிக்க முடியும்  தமிழ்மக்களின் மனங்களில் ஆழமாக பதிந்திருக்கும் புலிகளை எப்படி அழிப்பார்கள் ........?  

மாகாண சபை இயங்கத் தொடங்கினால் அகற்றுவதில் பிரச்சினைகள் எழுவதைத் தவிர்க்க அவசரப்பட்டுத் தகர்த்ததுபோலத் தெரிகிறது.

 

அவர் மேலும் தெரிவிக்கையில்; புதுக்குடியிருப்பு பகுதியில் நேற்று முன்தினம் தகர்க்கப்பட்ட பதுங்குழியுடனான வீடு புலித் தலைவருடையதா என்பது குறித்து எமக்கு சரியாக கூறமுடியாது.

 

 இந்த வீட்டைச் சுற்றி மிதிவெடிகள் புதைக்கப்பட்டிருந்தன. ஆகையினால் இந்தைக் கட்டிடத்தை தகர்ப்பதில் காலதாமதம் ஏற்பட்டது.

 

"பிரபாகரனின் பதுங்கு குழி" என்று கூறி மோடையாக்களிடம் தேவையானளவு உழைத்துவிட்டார்கள். சந்திர மண்டலத்திலிருந்து அரிசி வரவழைத்து சாப்பிடுபவர்கள்தானே. விக்கினேஸ்வரன் மாவீரர்கள் துயிலுமில்லங்கள் பாதுக்காக்கப்படவேண்டும் என்றும் கூறியிருந்தார்.

  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரனின் ஆவி பதுங்குகுழியில் இருந்ததா? – சந்தேகம் கிளப்பும் சிறிலங்கா இராணுவப் பேச்சாளரின் கருத்து
[ சனிக்கிழமை, 05 ஒக்ரோபர் 2013, 00:58 GMT ] [ தா.அருணாசலம் ]

புதுக்குடியிருப்பில் சிறிலங்கா படையினரால் குண்டுவைத்து அழிக்கப்பட்ட புலிகளின் பதுங்குகுழியை, பிரபாகரனின் ஆவி என்று வர்ணித்துள்ளார் சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய.

நேற்றுமுன்தினம் மாலை புதுக்குடியிருப்பில், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பயன்படுத்தியது என்று நம்பப்படும், பதுக்குகுழியை சிறிலங்காப் படையினர் அழித்திருந்தனர்.

இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள, சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய,

“நாம் பிரபாகரனின் பதுங்குகுழியை அழித்துள்ளோம். தீவிரவாதியின் ஆவியை உயிரோடு வைத்திருக்க வேண்டிய அவசியம் எமக்கு இல்லை.

விடுதலைப் புலிகளின் தடயங்களை இனியும் வைத்திருக்க வேண்டிய தேவையில்லை.

அதனால் தான், புதுக்குடியிருப்பில் இருந்த பதுங்குகுழி அழிக்கப்பட்டது.

இந்தப் பதுங்குகுழியை சுற்றி கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டிருந்தன.

அவற்றை அகற்றாமல் பதுங்குகுழியை, குண்டுவைத்து அழித்தால், அந்த அதிர்வினால், சுற்றுப்புறத்தில் புதைக்கப்பட்ட கண்ணிவெடிகளும் வெடிக்கும் ஆபத்து இருந்தது.

இதனால் தான், கண்ணிவெடிகளை அகற்றியதன் பின்னர் இந்தப் பதுங்குகுழி அழிக்கப்பட்டது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

http://www.puthinappalakai.com/view.php?20131005109191

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ‌த் தேசியத் தலைவர் பிரபாகரன் பெயரை... உலகத்திலுள்ள ஒன்பது கோடி தமிழ் மக்களின், நினைவுகளிலும் பதிந்திருக்கும்.
அதை.... இந்தச் சிங்களவன், குண்டு போட்டுத் தகர்ப்பானா....
பொறுக்கித் தின்னித் தனமான வேலைகளைச் செய்வதில், வல்லவன் சிங்களவன்.
நாளைக்கு.... எமக்கு தமிழீழம் கிடைக்கும் போது.....
பண்டார நாய் அக்கா, ராசபக்சா,  சிலைகளை உடைக்கும் அளவிற்க்கு... இழிந்தவர்கள் இல்லை தமிழர்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.