Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கள்ளக் காதலனுடன் இணைந்து கணவனை நிர்வாணமாக்கி அடித்துக் கொன்ற பெண்!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் அகமதாபாத், ராஜ்கோட்டில் உள்ள மோர்பி மாவட்டத்தில் கொலனி ஒன்றின் வெளிப்புறத்தில் பிண நாற்றம் அடிக்க பொதுமக்கள் பொலிசிடம் புகார் தெரிவித்தனர். அங்கு விரைந்த பொலிஸ் கடுமையான விசாரணையில் இறங்கினர். அப்போது பொதுமக்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் பார்தி வானியா என்ற பெண்ணை பொலிசார் சுற்றிவளைத்துப் பிடித்து கைது செய்தனர்.

விசாரணைகளில் புதன்கிழமை தனது கள்ளக் காதலனுடன் சேர்ந்து இந்த பார்தி வானியா, தன் கணவன் மகேந்திர தாராசந்த் வானியாவை நிர்வாணப்படுத்தி அடித்து கொலை செய்துள்ளது தெரியவந்தது.

கணவனைக் கொலை செய்ய கள்ளக்காதலன் சூரிய பிரகாஷுக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு வரவழைத்துள்ளார்.

பின் கணவனை நிர்வாணப்படுத்தி அடித்து உதைத்து கொலை செய்தனர். அதனைத் தொடர்ந்து கணவனின் உடலை துண்டு துண்டாக சிதைத்து சாக்கு மூட்டையில் போட்டு அடைத்துள்ளனர்.

மூட்டையை தூக்கி வீச அதனை காரில் கொண்டு சென்ற முயன்றபோது பொதுமக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டு இருவரும் அகப்பட்டுக் கொண்டனர்.

கள்ளக்காதலை அறிந்த கணவன் தாராசந்த் கடுமையாக மனைவியை எச்சரித்ததாக தெரிகிறது. இதனையடுத்து கணவனை தீர்த்துக் கட்ட இருவரும் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது

http://www.vavuniyanet.com/?p=16539

  • கருத்துக்கள உறவுகள்

கணவன் இடையூறாக இருக்கிறார் என்று கள்ளக்காதலனை ஏவி கொன்ற மனைவி கைது.

 

சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரி அருகே, பாண்டூர் கங்கா நகர் பகுதியில் உள்ள ஒரு கிணற்றில், கை–கால்கள் கட்டப்பட்ட நிலையில் ஒரு வாலிபரின் பிணம் மிதந்தது. அது குறித்து தகவல் அறிந்த கூடுவாஞ்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன், சப்–இன்ஸ்பெக்டர் தமிழ்வாணன், மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.
 

கிணற்றில் மிதந்த பிணத்தை கைப்பற்றி, பிரேதபரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையில் வாலிபரை அடித்து கொலை செய்து கிணற்றில் வீசியது தெரியவந்தது. செங்கல்பட்டு துணை சூப்பிரண்டு குமார் உத்தரவின்பேரில் தனிப்படை போலீசார் கொலையாளியை தேடி வந்தனர்.
 

இந்த நிலையில் நேற்று நந்திவரம் கிராம நிர்வாக அதிகாரியிடம் காயரம்பேடு கன்னியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சண்முகம் என்பவரின் மகன் பூபதி (வயது 34) என்பவர் சரண் அடைந்தார். பாண்டூர் கிணற்றில் பிணமாக கிடந்த வாலிபர் காயரம்பேடு காமராஜர் தெருவை சேர்ந்த பெருமாள் என்பவரின் மகன் தயாளன் என்றும் அவரை கொன்றது நான்தான் என்றும், அவர் கிராம நிர்வாக அதிகாரியிடம் தெரிவித்தார்.
 

அதைத்தொடர்ந்து பூபதி கூடுவாஞ்சேரி போலீசில் ஒப்படைக்கப்பட்டார். பின்னர் போலீசார் பூபதியிடம் நடத்திய விசாரணையின்போது தயாளனை கொலை செய்ததை ஒப்புக்கொண்டு பரபரப்பான வாக்குமூலம் அளித்தார்.
 

அப்போது அவர்,  ‘’நானும், கொலை செய்யப்பட்ட தயாளனும் ஒரே ஊரை சேர்ந்தவர்கள் மிகவும் நெருங்கிய நண்பர்கள். நாங்கள் இருவரும் அடிக்கடி ஒன்றாக சேர்த்து மது அருந்துவோம். நண்பன் தயாளன் அதே ஊரை சேர்ந்த காமாட்சி (வயது 26) என்ற பெண்ணை 8 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டான்.
 

திருமணத்திற்கு பிறகு தயாளனுக்கும், காமாட்சிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது நான் நண்பர் என்ற முறையில் வீட்டிற்கு சென்று சமாதானம் செய்து வைத்து வந்தேன். இதன் காரணமாக அடிக்கடி தயாளன் வீட்டிற்கு சென்று வரும் போது தயாளன் மனைவி காமாட்சியுடன் பழக்கம் ஏற்பட்டது.
 

பின்னர் இந்த பழக்கம் கள்ளத்தொடர்பாக மாறி நாங்கள் இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்தோம். நானும், காமாட்சியும் நெருக்கமாக இருப்பது ஊரில் உள்ளவர்களுக்கும், நண்பன் தயாளனுக்கும் தெரியவந்தது.
 

இதனால் தயாளன் என்னிடம் அடிக்கடி தகராறு செய்து சண்டை போடுவான். நான் அவ்வப்போது அவனுக்கு மது வாங்கி கொடுத்து சமாதானப்படுத்திவிட்டு மீண்டும் காமாட்சியுடன் தொடர்ந்து உள்ளாசமாக இருந்து வந்தேன்.
 

இந்த நிலையில் தயாளன் குடும்ப சொத்தினை பிரிப்பது சம்பந்தமாக அவருடைய குடும்பத்தில் பிரச்சினை இருந்து வந்தது. சொத்தை தயாளன் தாய்மாமாவும், அக்கா வீட்டுகாரருமான கண்ணன் அபகரிக்க நினைக்கிறார் என்று காமாட்சி என்னிடம் கூறினாள்.
 

தயாளன் அவருக்கு சொத்தை வீட்டு கொடுத்துவிடாமல் தடுக்க வேண்டும் என்றும், நாம் உல்லாசமாக இருக்க தடையாக இருக்கும் தயாளனை கொன்றுவிட்டால் நிம்மதியாக இருக்கலாம் என்றும் காமாட்சி என்னிடம் சொன்னாள். உடனே நான் தயாளனை கொலை செய்ய திட்டம் தீட்டினேன்.
 

அதன்படி, தயாளனை ஆள்நடமாட்டம் இல்லாத பாண்டூர் துர்காநகர் பகுதியில் உள்ள கிணறு அருகே அழைத்துச்சென்று அவனுக்கு அதிக அளவு மதுவை ஊற்றி கொடுத்தேன். மது அருந்தியவுடன் தயாளனுக்கும், எனக்கும் வாய் தகராறு ஏற்பட்டது. இதனை பயன்படுத்தி தயாளனை கன்னத்தில் அடித்தேன்.
 

இதில் தயாளன் மயங்கி கீழே விழுந்துவிட்டான். உடனே அவன் கை, கால்களை கட்டியும், உடலில் கல்லை கட்டியும் அருகில் இருந்த கிணற்றில் தள்ளிவிட்டுவிட்டு மறுநாள் தயாளனின் மனைவி காமாட்சியிடம் கொலை செய்த விவரங்களை கூறினேன்’’என்று கூறியுள்ளார்.
 

அதைத்தொடர்ந்து பூபதி மற்றும் தயாளன் மனைவி காமாட்சி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். விசாரணையின்போது காமாட்சியும் அனைத்து சம்பவங்களையும் ஒப்புக்கொண்டார்.

 

http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=109613

 

------------------------------------

 

இப்படியான கணவனுக்கு.. காதலனுக்கு.. நம்பிக்கைத் துரோகம் செய்யும் பெண்களை என்ன செய்யலாம்..??????????????! இவர்கள் எப்ப துரோகம் செய்வார்கள் என்பதை கண்டுபிடித்தாலாவது இந்த அநியாயச் சாவுகளைத் தடுக்க முடியும்..! இது உலகலாவிய அளவில் பெண்களிடம் இருக்கும் மிக மிக அசிங்கமான.. அருவருக்கத்தக்க.. ஒரு நடத்தை. ஒரு ஆணோடு...தமது காம இச்சை அடங்கவில்லை என்றால் அல்லது இதர தேவைகள் அடங்கவில்லை என்றால்.. அவனை விட்டு விலகி போறது தானே நியாயம். அதை விடுத்து கொலை செய்வதால் என்னத்தை அடையப் போகிறார்கள். இந்தக் குரோத எண்ணங்களைப் பெண்கள் எங்கிருந்து பெறுகிறார்கள்..????! :icon_idea::rolleyes:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இத்தகைய குரோத எண்ணங்களை இன்னொரு ஆணிடம் இருந்தே பெறுகிறார்கள் நெடுக்ஸ்.. :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

அந்த எண்ணங்களைப் பெற இந்தப் பெண்கள்..தங்களை உடலை.. தானமாக்குகிறார்கள் போல. அதுதான் அந்த ஆண்கள் இவர்களின் காம லீலைகளுக்கு அடிமையாகி.. கொலை செய்யும் அளவிற்கு திட்டங்களைத் தீட்டிக் கொடுத்து செயற்படுத்தும்.. கொடூர முடிவுகளை எடுக்கின்றனர். இதில் வெறும் ஆண்களின் பங்களிப்பு மட்டுமே உள்ளது என்று சொல்ல முடியாது. அவர்களை இயக்கும் முக்கிய சக்தியாக பெண் தனது உடலையும்.. காமத்தையும் பயன்படுத்துகிறாள்..! :icon_idea::rolleyes:

Edited by nedukkalapoovan

ம்ம் கைத்தொலை பேசியும் ஈனயத்தொடர்புகளும் இதட்ற்கு ஒரு காரணம் என்பது என் அபிப்பிராயம்

  • கருத்துக்கள உறவுகள்

தாராசந்த் கண்டும் காணாமல் பகோடா சாப்பிட்டிருந்தால் உயிர் பிழைத்திருப்பார்.. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நவீன தொடர்பாடல்கள் மட்டுமல்ல.... குடிக்கு போதைக்கு காமத்துக்கு வசதிவாய்ப்புக்கு.. அடிமைப்படுவது ஆண்களையும் அதற்கு தூண்டுவது...உள்ளிட்டவை உட்பட..பெண்களை இன்னும் அப்பாவிகளாக.. ஏமாளிகளாக.. மென்மையானவர்களாக.. நல்லவர்களாகக் காட்டும் சமூகமும் ஒரு காரணம். பெண்களும் கொடூர மனித மிருகங்களாக எந்த நேரத்திலும் மாறக் கூடியவர்கள் என்ற விழிப்புணர்வு சமூகத்தில் இருப்பது பெண்கள்.. கதவுக்கு முன்னால் ஒரு வாழ்க்கையும்.. பூட்டிய கதவுக்கு பின்னால்.. இன்னொரு வாழ்க்கையும் வாழுவதை இலகுவான அடையாளம் காட்ட உதவும். அப்படிச் செய்வது.. இவர்களால் வரத்தக்க ஆபத்துக்களில் இருந்து ஆண்களையும் குழந்தைகளையும் காப்பாற்ற உதவ முடியும்..! ஆரோக்கியமான சமூகத்தை பாதுகாப்பான சமூகத்தை கட்டி எழுப்ப இது அவசியம். :)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

கள்ளக் காதலனுடன் இணைந்து கணவனை நிர்வாணமாக்கி அடித்துக் கொன்ற பெண்!!

 

ஏனிந்த நிர்வாணமாக்குதல்

முதலில் வடிவாக  பார்க்க நேரமிருக்கவில்லையோ??? :lol:  :D

  • கருத்துக்கள உறவுகள்

அந்தப் பெண்.. சிங்கள ஆமிக்காரனட்ட ரெயினிங் எடுத்திருப்பா போல..! :(:rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

கணவன் இடையூறாக இருக்கிறார் என்று கள்ளக்காதலனை ஏவி கொன்ற மனைவி கைது.

 

சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரி அருகே, பாண்டூர் கங்கா நகர் பகுதியில் உள்ள ஒரு கிணற்றில், கை–கால்கள் கட்டப்பட்ட நிலையில் ஒரு வாலிபரின் பிணம் மிதந்தது. அது குறித்து தகவல் அறிந்த கூடுவாஞ்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன், சப்–இன்ஸ்பெக்டர் தமிழ்வாணன், மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

 

கிணற்றில் மிதந்த பிணத்தை கைப்பற்றி, பிரேதபரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையில் வாலிபரை அடித்து கொலை செய்து கிணற்றில் வீசியது தெரியவந்தது. செங்கல்பட்டு துணை சூப்பிரண்டு குமார் உத்தரவின்பேரில் தனிப்படை போலீசார் கொலையாளியை தேடி வந்தனர்.

 

இந்த நிலையில் நேற்று நந்திவரம் கிராம நிர்வாக அதிகாரியிடம் காயரம்பேடு கன்னியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சண்முகம் என்பவரின் மகன் பூபதி (வயது 34) என்பவர் சரண் அடைந்தார். பாண்டூர் கிணற்றில் பிணமாக கிடந்த வாலிபர் காயரம்பேடு காமராஜர் தெருவை சேர்ந்த பெருமாள் என்பவரின் மகன் தயாளன் என்றும் அவரை கொன்றது நான்தான் என்றும், அவர் கிராம நிர்வாக அதிகாரியிடம் தெரிவித்தார்.

 

அதைத்தொடர்ந்து பூபதி கூடுவாஞ்சேரி போலீசில் ஒப்படைக்கப்பட்டார். பின்னர் போலீசார் பூபதியிடம் நடத்திய விசாரணையின்போது தயாளனை கொலை செய்ததை ஒப்புக்கொண்டு பரபரப்பான வாக்குமூலம் அளித்தார்.

 

அப்போது அவர்,  ‘’நானும், கொலை செய்யப்பட்ட தயாளனும் ஒரே ஊரை சேர்ந்தவர்கள் மிகவும் நெருங்கிய நண்பர்கள். நாங்கள் இருவரும் அடிக்கடி ஒன்றாக சேர்த்து மது அருந்துவோம். நண்பன் தயாளன் அதே ஊரை சேர்ந்த காமாட்சி (வயது 26) என்ற பெண்ணை 8 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டான்.

 

திருமணத்திற்கு பிறகு தயாளனுக்கும், காமாட்சிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது நான் நண்பர் என்ற முறையில் வீட்டிற்கு சென்று சமாதானம் செய்து வைத்து வந்தேன். இதன் காரணமாக அடிக்கடி தயாளன் வீட்டிற்கு சென்று வரும் போது தயாளன் மனைவி காமாட்சியுடன் பழக்கம் ஏற்பட்டது.

 

பின்னர் இந்த பழக்கம் கள்ளத்தொடர்பாக மாறி நாங்கள் இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்தோம். நானும், காமாட்சியும் நெருக்கமாக இருப்பது ஊரில் உள்ளவர்களுக்கும், நண்பன் தயாளனுக்கும் தெரியவந்தது.

 

இதனால் தயாளன் என்னிடம் அடிக்கடி தகராறு செய்து சண்டை போடுவான். நான் அவ்வப்போது அவனுக்கு மது வாங்கி கொடுத்து சமாதானப்படுத்திவிட்டு மீண்டும் காமாட்சியுடன் தொடர்ந்து உள்ளாசமாக இருந்து வந்தேன்.

 

இந்த நிலையில் தயாளன் குடும்ப சொத்தினை பிரிப்பது சம்பந்தமாக அவருடைய குடும்பத்தில் பிரச்சினை இருந்து வந்தது. சொத்தை தயாளன் தாய்மாமாவும், அக்கா வீட்டுகாரருமான கண்ணன் அபகரிக்க நினைக்கிறார் என்று காமாட்சி என்னிடம் கூறினாள்.

 

தயாளன் அவருக்கு சொத்தை வீட்டு கொடுத்துவிடாமல் தடுக்க வேண்டும் என்றும், நாம் உல்லாசமாக இருக்க தடையாக இருக்கும் தயாளனை கொன்றுவிட்டால் நிம்மதியாக இருக்கலாம் என்றும் காமாட்சி என்னிடம் சொன்னாள். உடனே நான் தயாளனை கொலை செய்ய திட்டம் தீட்டினேன்.

 

அதன்படி, தயாளனை ஆள்நடமாட்டம் இல்லாத பாண்டூர் துர்காநகர் பகுதியில் உள்ள கிணறு அருகே அழைத்துச்சென்று அவனுக்கு அதிக அளவு மதுவை ஊற்றி கொடுத்தேன். மது அருந்தியவுடன் தயாளனுக்கும், எனக்கும் வாய் தகராறு ஏற்பட்டது. இதனை பயன்படுத்தி தயாளனை கன்னத்தில் அடித்தேன்.

 

இதில் தயாளன் மயங்கி கீழே விழுந்துவிட்டான். உடனே அவன் கை, கால்களை கட்டியும், உடலில் கல்லை கட்டியும் அருகில் இருந்த கிணற்றில் தள்ளிவிட்டுவிட்டு மறுநாள் தயாளனின் மனைவி காமாட்சியிடம் கொலை செய்த விவரங்களை கூறினேன்’’என்று கூறியுள்ளார்.

 

அதைத்தொடர்ந்து பூபதி மற்றும் தயாளன் மனைவி காமாட்சி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். விசாரணையின்போது காமாட்சியும் அனைத்து சம்பவங்களையும் ஒப்புக்கொண்டார்.

 

http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=109613

 

------------------------------------

 

இப்படியான கணவனுக்கு.. காதலனுக்கு.. நம்பிக்கைத் துரோகம் செய்யும் பெண்களை என்ன செய்யலாம்..??????????????! இவர்கள் எப்ப துரோகம் செய்வார்கள் என்பதை கண்டுபிடித்தாலாவது இந்த அநியாயச் சாவுகளைத் தடுக்க முடியும்..! இது உலகலாவிய அளவில் பெண்களிடம் இருக்கும் மிக மிக அசிங்கமான.. அருவருக்கத்தக்க.. ஒரு நடத்தை. ஒரு ஆணோடு...தமது காம இச்சை அடங்கவில்லை என்றால் அல்லது இதர தேவைகள் அடங்கவில்லை என்றால்.. அவனை விட்டு விலகி போறது தானே நியாயம். அதை விடுத்து கொலை செய்வதால் என்னத்தை அடையப் போகிறார்கள். இந்தக் குரோத எண்ணங்களைப் பெண்கள் எங்கிருந்து பெறுகிறார்கள்..????! :icon_idea::rolleyes:

 

அந்த கணவனும் ஒரு பேயன் :lol: மனிசிக்கு கள்ளக் காதலன் இருக்கிறார் என்று தெரிந்தும் தொடர்ந்தும் மனிசியோட குடும்பம் நடத்தி இருக்கிறார் :rolleyes:  :D
  • கருத்துக்கள உறவுகள்

கணவனுக்கு இன்னுமொரு பெண்மீது கள்ளக் காதல் ஏற்பட்டு, கள்ளக் காதலியின் உதவியுடன் மனைவி கொல்லப்பட்ட சம்பவங்களும் ஏராளமுண்டு. கள்ள உறவு ஏற்பட்டு புனிதமான தாம்பத்திய உறவு தகர்க்கப்படும்போது கொலைசெய்தல் என்பது மிக இலகுவான செயலாகவே இவர்களது மனச்சாட்சியினால் பார்க்கப்படக்கூடும்! :(

  • கருத்துக்கள உறவுகள்

இதுவும் கள்ள காதல் விளையாட்டால் வந்த விணை..... நான்கு பேர் தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளனர் 21 அக்டோபர் 2013 கலவெல பிரதேசத்தில் நான்கு பேர் தீயிட்டுக் கொளுத்தப்பட்டுள்ளனர். பெண் அவரது தாய் மற்றும் இரண்டு பிள்ளைகள் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர். காவல்துறை அவசர சேவைக்கு கிடைக்கப் பெற்ற தொலைபேசி அழைப்பின் அடிப்படையில் , காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். பெற்றோல் ஊற்றி நான்கு பேர் மீதும் தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளது. பெண்ணின் இரண்டாவது கணவரே இந்தக் கொடூரச் செயலை மேற்கொண்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சந்தேக நபர் தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

திருவாரூர் மாவட்டம் ௬த்தாநல்லூரிலும், கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொன்றுள்ளார் ஒரு பெண். இவர்கள் இருவருமே ஆசிரியர்கள்.

திருவாரூர் மாவட்டம் ௬த்தாநல்லூரிலும், கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொன்றுள்ளார் ஒரு பெண். இவர்கள் இருவருமே ஆசிரியர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று... காதலனால் காதலி கொலை
இன்று... கள்ளக்காதலனால்   கணவர் கொலை
நாளை....  நேற்றைய கள்ளக்காதலன் இன்றைய  கள்ளக் காதலனால் கொலை :lol:  :lol::D 
 

  • கருத்துக்கள உறவுகள்

கள்ளக் காதலர்கள் சங்கம் என்று ஒன்றை ஆரம்பித்தால் பலர் வந்து சேர்வார்கள் போலிருக்கு!

  • கருத்துக்கள உறவுகள்

கள்ளக் காதலர்கள் சங்கம் என்று ஒன்றை ஆரம்பித்தால் பலர் வந்து சேர்வார்கள் போலிருக்கு!

பக்கத்து வீட்டுக்காரன் சங்கத்தில் அங்கத்தவராகச் சேரும்வரை

பிரச்சனை இருக்காது 

:D  :lol:  :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.