Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நீ எம்மை மன்னிப்பாய்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

rh0u.jpg

ஓ துகிலுரியப்பட்ட தங்கையே
துட்சாதனன்களோடு
நவகண்ணன்களும்
கைகோர்த்துச் செய்த கொடுமை...
பிணங்களின் நினங்களின்மேல்
அபிவிருத்திப் பாடைகட்டும்
அரக்க உலகே
எப்போது உன்
மனச்சாட்சி திறக்கும்...
மனமிருக்கிறதா
இருந்தால்..............
இன்றேனும் இல்லை
நாளையேனும்
உன் மனதைத் திறப்பாயா
இல்லை சிங்களத் திமிரோடு
சங்கமித்து சங்கமித்திரையையும்
சாகடித்துப் புணர்வாயா?
புணர்வதற்கு பெண்ணெண்ண
பிணமென்ன....
தூ...........
சிங்கம் புணர்ந்தெடுத்த
சிங்களத்து வம்சமது
செங்களத்தில் பட்டபாட்டை
இப்படித்தான் தீர்த்ததுவோ!
இதன்பின்னும்
ஈனர்களாய் ஒரு கூட்டம்
வீணர்களாய் ஒரு கூட்டம்
வெட்டிகளாய் ஒரு கூட்டம்
வேண்டாம் தாயே
நீ எம்மை மன்னிப்பாய்!
காத்திடவும் முடியாது
நீதி காண்பதற்கும் முடியாத
கரையற்ற கூட்டமாகிக்
கரைந்துபோய் நிற்கிறது!
வரைந்த எம் தேசத்துக்காய்
வதைபட்டுப் போனவரே
வாருங்கள் மீண்டுமிங்கு
போரிட்டு மடியவல்ல
இப்பொல்லா மனிதரது
முகங்களிலே
காறி உமிழ்வதற்காய்!

  • கருத்துக்கள உறவுகள்

வரைந்த எம் தேசத்துக்காய்
வதைபட்டுப் போனவரே
வாருங்கள் மீண்டுமிங்கு
போரிட்டு மடியவல்ல
இப்பொல்லா மனிதரது
முகங்களிலே
காறி உமிழ்வதற்காய்!

 

:(  :(  :( 

நன்றி  ஐயா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வரைந்த எம் தேசத்துக்காய்

வதைபட்டுப் போனவரே

வாருங்கள் மீண்டுமிங்கு

போரிட்டு மடியவல்ல

இப்பொல்லா மனிதரது

முகங்களிலே

காறி உமிழ்வதற்காய்!

 

:(  :(  :( 

நன்றி  ஐயா

 

கருத்துக்கு நன்றி விசுகு அவர்களே,

மறந்துவிடும் விடயஙகளல்ல. ஆனால் மனம் ஒரு ஓரமாக வைத்துவிட்டு இயங்கும். மீண்டுமதைக் கிளறும்போது வந்தவார்த்தைகளைப் பதிவிட்டேனன்றி வேறில்லை. மீண்டும் மன அமைதியே போய்விட்டது.

 

நடந்தேறிய கொடுமைகளைப் பார்த்து.... பொங்கி வரும் சினத்தினை எங்கு எதன்மேல் காட்டுவது என்று தெரியாமல்

மனதுக்குள்ளேயே புளுங்கி வேகுகின்றது மனசு. இதுதான் பலரது நிலைமை இப்போது. ஆனால் எல்லாவற்றிற்கும் ஒரு களம் வெகுவிரைவில் திறக்கும் என்பது மட்டும் உறுதி!!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நடந்தேறிய கொடுமைகளைப் பார்த்து.... பொங்கி வரும் சினத்தினை எங்கு எதன்மேல் காட்டுவது என்று தெரியாமல்

மனதுக்குள்ளேயே புளுங்கி வேகுகின்றது மனசு. இதுதான் பலரது நிலைமை இப்போது. ஆனால் எல்லாவற்றிற்கும் ஒரு களம் வெகுவிரைவில் திறக்கும் என்பது மட்டும் உறுதி!!!

 

வரவுக்கும் கருத்துக்கும் நன்றிகள். திறக்கின்ற களங்கள் தீர்வுகளைத் தரட்டும். தீயவர்களை அழிக்கட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஈனர்களாய் ஒரு கூட்டம்

வீணர்களாய் ஒரு கூட்டம்

வெட்டிகளாய் ஒரு கூட்டம்

வேண்டாம் தாயே

நீ எம்மை மன்னிப்பாய்!

காத்திடவும் முடியாது

நீதி காண்பதற்கும் முடியாத

கரையற்ற கூட்டமாகிக்

கரைந்துபோய் நிற்கிறது!

வரைந்த எம் தேசத்துக்காய்

வதைபட்டுப் போனவரே

வாருங்கள் மீண்டுமிங்கு

போரிட்டு மடியவல்ல

இப்பொல்லா மனிதரது

முகங்களிலே

காறி உமிழ்வதற்காய்!

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

 

வல்வை சகாறா அவர்களே வரவுக்கு நன்றி!

இதன்பின்னும்
ஈனர்களாய் ஒரு கூட்டம்
வீணர்களாய் ஒரு கூட்டம்
வெட்டிகளாய் ஒரு கூட்டம்
வேண்டாம் தாயே
நீ எம்மை மன்னிப்பாய்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதன்பின்னும்

ஈனர்களாய் ஒரு கூட்டம்

வீணர்களாய் ஒரு கூட்டம்

வெட்டிகளாய் ஒரு கூட்டம்

வேண்டாம் தாயே

நீ எம்மை மன்னிப்பாய்!

 

சோழியனவர்களே வருகைக்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கவிதையை, இருபது தரமாவது படித்திருப்பேன், நொச்சி!

 

ஆனால், கருத்தெழுத நினைக்கும் ஒவ்வொரு முறையும், ஏன் சகோதரி இசைப்பிரியா தனித்து, நிராதரவாக விடப்பட்டாள் என்ற கேள்வி வந்து ஒரு குற்றவுணர்வை ஊட்டி நின்றது! 

 

அதற்காகவாவது அவளிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்!

 

கனதியான கவிதை!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கவிதையை, இருபது தரமாவது படித்திருப்பேன், நொச்சி!

 

ஆனால், கருத்தெழுத நினைக்கும் ஒவ்வொரு முறையும், ஏன் சகோதரி இசைப்பிரியா தனித்து, நிராதரவாக விடப்பட்டாள் என்ற கேள்வி வந்து ஒரு குற்றவுணர்வை ஊட்டி நின்றது! 

 

அதற்காகவாவது அவளிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்!

 

கனதியான கவிதை!

 

புங்கையூரானவர்களே நன்றிகள். உங்களது கருத்தே என்னை அழவைக்கிறது.

என்ன செய்வதென்று அறியாத விடுபடமுடியாத ஒரு நீர்சுழலுள் அகப்பட்டவர்போலானார்களே எமது சகோதரிகள் என்று எண்ணும்போது மனதிலேற்படும் வலி ஏன் சாகடிக்காமல் வாழநிர்பந்திக்கிறதே என்று பலமுறை தவித்ததுண்டு. ஆனால் இந்த வலிகளைக்கண்டும் திருந்தாத தமிழருலகில் நீதியை எப்படிப் பெறப்போகிறது எமது இனம். இசைப்பிரியாக்களுகாகவேணும் தமிழர்கள் சிந்திப்பார்களா?

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.