Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலண்டன் தமிழ்க்குழுப் பிரச்சினையால் உணவகம் மூடப்பட்டுள்ளது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

100 வீதம் உண்மை தப்பிலி என்னுடைய பார்வையில் இந்த அடிபிடியால் தமிழனுடைய மானம் போகுது என்று கவலைபடுபவர்கள் இதன் பின்னால் வயிறு அந்தஸ்து வசதி வளர்க்கும் கூட்டத்தை இலகுவாக கண்டுபிடிக்க முடிவதில்லை அவர்கள் தமிழ் சட்டதரணிகள் என்ற போர்வையில் வரும் குள்ளநரிகள்  ஒவ்வொரு கேஸ் நடக்க அவர்கள் காட்டில் பணமழை 730 bmw வும் வசதியான வீடும் ஒவ்வொரு கிழமையும் கோயில் அபிஷகமும் வலு கலாதியாய் வாழ இந்த காங் கூட்டம் தங்களை அழித்து உதவி செய்யுது ஏன் இவர்களால் இப்படியாண கேஸை எடுக்காமல்விட்டால் அவர்கள் படித்த படிப்புக்கு வேலை எடுக்க ஏலாது ? இப்படியாண ஈனப்பிறவிகளுடன் கதைத்து சிரிக்க கோவிலிலும் சபைகளிலும் மணம் அவாப்படும் ஆனால் வழிதவறி செல்லும் இளையோரின் மண உணர்வுகளை புரிந்து கொள்ளமுடியாதபடி நம்மை நமது சமூக அமைப்பு வளர்த்துள்ளது இது வெட்கபடவேண்டிய விடயம் எம்மை திருத்த வேணும் அவங்களுக்கு முதல் எம்மை. ஒரு சில பிழையை தெரியத்தனமா செய்து பிடிபட்டால் சமூகத்தில் அங்கிகாரம் தனக்கு இல்லை என்கிற ஆதங்கத்தில் மேலும் குற்றச்செயல்களுடன் துருக்கி பாக்கி இன நண்பர்களுடன் நன்பர்களாகி அவர்களின் குற்றசெயல்களில் பங்கு கொண்டு பின் தமிழ் குறூப்.நேற்று இரவும் ஆரம்பம் பட முடிந்து சண்டை நடந்திருக்கு காரணம் என்ன தெரியுமா சொன்னால் நம்ப மாட்டியள் a குறூப்பின் உறுப்பினரின் தம்பியை b குறூப் முறைச்சு பாத்திட்டுனமாம் இதுதான் காரணம் இரண்டு பேரை பொலிஸ் பிடித்திட்டுது திங்கள் நம்ம உயர்திரு சட்டதரணி அய்யாவுக்கு கொழுத்த வேட்டை இரண்டு காதிற்க்குள் மொபைல் போணுடன் பிசியாய் வந்து அவருடைய அலுவலகத்திற்க்கு வேகமாய் உள்நுளைவார் வாசலில் பிள்ளைகளை கவனிக்காமல் இரண்டு வேலைக்கு போணபெற்றோர் விதியை நொந்தபடி கூனி குறுகி நிற்பார்கள் எங்களுக்கு அது ஒரு செய்தியாய் அந்த நேரத்திற்க்கு கதைப்பதிற்க்கு மாத்திரம்?

பெருமாள் உங்கள் கூற்று முற்றிலும் உண்மை.

 

இப்படியான விடயங்களில் பெற்றோர்களும் பிழை விடுகின்றனர்

விட்டிருக்கின்றார்கள்.

தங்கள் பிள்ளை என்பதற்காகப் பிள்ளைகள் செய்யும் தவறுகளை

மற்றவர்களுக்குத் தெரியாமல் மறைப்பதில்  எம் பெற்றோரே

முன்னணியில் நிற்கின்றார்கள் 

  • கருத்துக்கள உறவுகள்

அடிடா சுந்தரலிங்கத்தை கூப்பிட்டால் எல்லாம் சரிவரும்  :D

 

"அடிடா... சுந்தரலிங்கத்தை", நிரந்தரமாய்.... களி தின்ன வைக்கிற பிளான் போலை கிடக்கு..... :lol:  :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

இந்த தமிழ் குழு மோதல் எல்லா நாட்டிலையும் இருக்கு. இது தமிழர்களிடத்தில் மட்டுமல்ல அனைத்து இனத்தவரிடமும் உள்ளது. எங்கெல்லாம் அளவுக்கதிகமாக ஒரு இனம் குறுகிய ஒரு சுற்றுவட்டாரத்திற்குள் வாழ்கிறதோ அங்கெல்லாம் இந்த பிரச்சனை தலையெடுக்க அதிக வாய்ப்புக்கள் உள்ளது. எனவே தான் தமிழ் குழு மோதலில் லண்டன், பாரிஸ், கனடா போன்ற நாடுகள் பிரபல்யமாக உள்ளன என நினைக்கின்றேன். 

 

இதில் காவல்துறையை நொந்து எந்த பலனும் இல்லை. தமிழர்களின் விடயத்தில் தமிழ் இனம் வேறு எந்த இனத்தோடு சேராது. எந்த பிரச்சனையாக இருந்தாலும் தங்களிற்குள்ளையே வைத்திருப்பார்கள். வேறு இனத்தோடு சண்டைக்கும் போக மாட்டார்கள். கொண்டாட்டம், துக்கம் அனைத்தும் எமது இனத்திற்குள் தான் நடைபெறும்.

காவல் துறைக்கு ஒத்துழைப்பு என்பது கொடுக்கவே மாட்டார்கள். கொடுத்தாலும் அடுத்த முறை தலைகீழாக அதை மாற்றி சொல்வார்கள். இது கிட்டத்தட்ட அனைத்து நாடுகளிலும் தமிழர்கள் கடைப்பிடிக்கும் ஒரு விடயம். 

 

இங்கு சுவிசிலும் இது தான் நிலையாக இருந்தது. பின்னர் இதை சமாளிக்க வேறு ஒரு தந்திரம் உருவாக்கப்பட்டது. பழைய கோஷ்டிகளை திருத்த நினைப்பதை கைவிட்டார்கள். குற்றம் நிரூபிக்கப்பட்டால் நேரடியாக நாட்டைவிட்டு வெளியேற சொன்னார்கள். இது பல கிழடுகளுக்கு கொஞ்சம் பயத்தை உண்டு பண்ணியது. இப்படி பலர் நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்டார்கள். இதற்குள் பல "நானும் ரௌடி தான்" சிறுசுகளும் அடக்கம். 

இது நிரந்தர வதிவிட அனுமதி இல்லாதவர்கள் கையாளப்பட்ட விதம். 

 

நிரந்தர வதிவிட அனுமதி பெற்றவர்களிற்கு வேறொரு முறை கையாளப்பட்டது. ஜெயிலில் போடுவது இங்கே மிக மிக குறைவு. இது அரசாங்கத்திற்கு தேவை இல்லாத செலவு. எனவே குற்றம் நிரூபிக்கப்பட்டவுடன் அளவுகண்கில்லாமல் அபராதப்பணம் அறிவித்தார்கள். உள்ளே போடுவதை விட இந்த தண்டனைக்கு வலி அதிகம். தண்டனை பணம் கட்டி முடிக்கவே பலரிற்கு "வயசு கோளாறு" தெளிவடைந்துவிடும். அப்படியும் தெளிவடையாதவர்களிற்கு மீண்டும் தொடக்கத்திலருந்து ஆரம்பிக்கும். 

 

முதலாவது சந்ததியை திருத்துவது முடியாத விடயம் என்பதால் இந்த முறை கையாளப்பட்டது. ஒரு மரத்தின் கிளைகளை சுத்தமாக்குவதை விட அதன் வேர்களை சுத்தமாக்கினால் பிரச்சனை ஒரே முறையில் தீர்க்கலாம் என நம்பினார்கள். எனவே இது  நடந்துகொண்டிருக்கும் போதே அடுத்த சந்ததி இப்படியான விடயங்களில் ஈடுபடாமல் இருபபதற்கு பல வேலைத்திட்டங்களையும் முன்னெடுத்தார்கள். 

 

இன்று வன்முறை என்பது இங்கே முக்கால் வாசி வாழ்க்கையை வாழ்ந்தவர்களிடத்திலும், இங்கு பிறந்தவர்களிடத்திலும் மிக குறைவு. ஆனால் புதிதாக இலங்கையிலிருந்து வருகிறவர்கள் மீண்டும் 90களின் காலத்திற்கே கொண்டு செல்கிறார்கள். அவர்களை சுயநலத்திற்காக பயன்படுத்துவது பழைய பெரிசுகளே. புதிதாக வந்தவர்கள் பொறுப்பின்றி இருப்பதும் இதற்கு இன்னொரு காரணம். 90களில் வந்தவர்கள் ஊரில் குடும்பத்தை கவனிக்க வேண்டிய ஒரு கட்டாயம் என்றாலும் இருந்தது. இப்பொழுது வரும் பலரிற்கு அது இல்லை. வந்து அடுத்த மாசமே பரம்பரையாக இங்கு வாழ்ந்தவர்கள் போல் மாறிவிடுகிறார்கள். 

இந்த ரண களத்திலும் ஒரு சில நல்ல விடயங்கள் நடந்திருக்கு. சாதிச்சண்டை, ஊர்ச்சண்டை இப்பொழுது பார்க்கவே முடியாது. அவர்கள் வசிக்கும் இடம் தான் அவர்களின் குழுவின் பெயராகவும் எங்காவது இருக்கும். இலங்கையில் எந்த ஊர் எந்த சாதி எதுவும் இவர்களிற்குள் இருப்பதில்லை. 

 

இது எனக்கு ஒரு சுவிஸ் நாட்டவர் சொன்னது. 

Edited by செங்கொடி

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் கூட, ஆரியகுளம் கோஸ்டி, வயல்குளம் கோஸ்டி, கொட்டடி கோஸ்டி என்று பல அடிபாட்டுக் கோஸ்டிகள் இருந்தன.

அது சிலருக்கு ஒரு வாழ்க்கை இலக்கு. அதிலேயே அவர்கள் வாழ்வும் முடிந்து போகலாம். 

 

எதற்காக, இவர்கள் குறித்து வருந்துவேண்டும்?

 

மாறாக, எம்மிடையே எவ்வளவு பேர் படிப்பில் முன்னிலையில் வந்து, சாதித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும், வியாபாரத் துறையில் முன்னேறத் துடிக்கிறார்கள் என்பதையும் குறித்து பெருமை கொள்வோம்.

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணைமாருக்கு நதிமூலம் ரிசிமூலம் தெரியாது போல கிடக்கு ,

நாட்டிலும் சரி புலம் பெயர்ந்தும் சரி தமிழன் எப்ப வன்முறையை கண்டவன் .

வன்முறைதான் தீர்வு என்று நினைப்பவர்கள் தான் இவை அனைத்திற்கும் காரணம் .

இப்ப நாலு வருடம் தான் எல்லாம் முடிந்து இனி தானாக அடங்கிவிடும் .

யாழில் கூட, ஆரியகுளம் கோஸ்டி, வயல்குளம் கோஸ்டி, கொட்டடி கோஸ்டி என்று பல அடிபாட்டுக் கோஸ்டிகள் இருந்தன.

அது சிலருக்கு ஒரு வாழ்க்கை இலக்கு. அதிலேயே அவர்கள் வாழ்வும் முடிந்து போகலாம். 

 

எதற்காக, இவர்கள் குறித்து வருந்துவேண்டும்?

 

மாறாக, எம்மிடையே எவ்வளவு பேர் படிப்பில் முன்னிலையில் வந்து, சாதித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும், வியாபாரத் துறையில் முன்னேறத் துடிக்கிறார்கள் என்பதையும் குறித்து பெருமை கொள்வோம்.

 

இது எழுபதுகளில்???

அப்போ

அர்யூன் அண்ணைக்கு தாயகத்தில் ஒன்றுமே தெரிந்திருக்கவில்லை.... :(  :(  :(

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்கு ஆஸ்திரேலியா GANG squad சொல்லப்பட்ட சாமான் சும்மா புகுந்து அள்ளிக்கொண்டு போய்டுவாங்க or swiss police சூப்பர்

 

இது எழுபதுகளில்???

அப்போ

அர்யூன் அண்ணைக்கு தாயகத்தில் ஒன்றுமே தெரிந்திருக்கவில்லை.... :(  :(  :(

அண்ணை நாங்கள் கொஞ்சம் படிச்ச டீசண்டான ஆட்கள் ,உந்த கோஸ்டிகளை எல்லாம் தெரியாது

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்கு ஆஸ்திரேலியா GANG squad சொல்லப்பட்ட சாமான் சும்மா புகுந்து அள்ளிக்கொண்டு போய்டுவாங்க or swiss police சூப்பர்

One%20of%20THE%20most%20important%20messலண்டன் பொலிஸ்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்ணை நாங்கள் கொஞ்சம் படிச்ச டீசண்டான ஆட்கள் ,உந்த கோஸ்டிகளை எல்லாம் தெரியாது

 

படிச்ச டீசண்டான ஆட்களெண்டால்????? அப்ப உங்களுக்கு நச்சுவாயுக்குண்டு,அணுகுண்டு எப்பிடி என்னமாதிரியெண்டு கட்டாயம் தெரிஞ்சிருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணை நாங்கள் கொஞ்சம் படிச்ச டீசண்டான ஆட்கள் ,உந்த கோஸ்டிகளை எல்லாம் தெரியாது

 

 

அண்ணை

நீங்க  எதுவரை படித்தனீங்கள் என்று உங்கட எழுத்தில   தெரியுது..

ஆனால் உண்மையில  படித்த  சட்டத்தரணிதான  யாழின் பெரும்  சண்டியன் 70 களில்.. :(  :(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.