Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெள்ளாடையோடு வருகிறாள் வாள்சுமந்த தேவதை

Featured Replies

 தேச ஒருமைப்பாடென்று கூடிக் 
கற்பழித்தவர்கள் எங்கள் வாய்கால்களில் 
தங்கள் குறிகளை 
கழுவிக்கொண்டிருக்கிறார்கள்.

வாருங்கள் மன்றாடுவோம்.

கழுகின் நிழல்களில் ஒதுங்கி 
வாள் சுமந்த நீதிதேவதை
வெள்ளையாடையோடு வருகிறாள்

உயர்ந்த ஜனநாயகநாடும்
காந்தியச் சக்கரங்களால்
சாம்பல் மேடுகளிலும் எலும்புச்சிதைவுகளிலும்
ஏறி வருகிறது.

காடுகளை அழிக்கையில் உறங்கி இருந்திருப்பார்கள்.
அல்லது
விருந்தில் இருந்திருப்பார்கள்.
இவர்களுக்கு எதுவுமே தெரியாது
வாருங்கள் மன்றாடுவோம்.
நீதி கேட்போம்.

வண்ணாத்துப்பூச்சிகளையும்
மின்மினிப்பூச்சிகளையும் கொன்று சிதைத்த 
கதைகளை சொல்லுவோம்.

கூட்டம் கூட்டமாய் தவித்து நின்ற
மான்குட்டிகளை நஞ்சு பூசிக்கொன்ற
கதைகளை சொல்லுவோம்.
ஒலிவ்இலைகளை சுமந்த வெள்ளைப் புறாக்களை
அம்பால் துளைத்த வேடன்களின்
கதைகளை சொல்லுவோம்.

சிதைந்த உடல்களிலும் 
அழுதுவந்த நடைபிணங்களிலும் 
குறிபுதைத்துக் கொக்கரித்த யந்துகளின் 
கதைகளை சொல்லுவோம்.

இவர்களுக்கு எதுவுமே தெரியாது
வாருங்கள் சொல்லி மன்றாடுவோம்.
நீதி கேட்போம்.

வட்டமேசைகளில் வர்ணக்கொடிகளின் கீழ்
கோப்புகளில் தேடுவார்கள்.
எலும்புகளையும் மண்டையோடுகளையும்
கிழிந்த ஆடைகளையும் வைத்து
விவாதிப்பார்கள்.

பின் 
திரைமறைவில் 
சமாதான தேவதையின் தட்டுக்களில் 
பாலச்சந்திரன்களின்
இசைப்பிரியாக்களின் தசைதுண்டுகளை நிறைத்துவிட்டு
விலை பேசுவார்கள்.

இவர்களுக்கு எதுவுமே தெரியாது
தங்களின் தேச நலன்களை தவிர
எங்களுக்கும் எதுவும் புரியாது
வாருங்கள் சொல்லி மன்றாடுவோம்.
நீதி கேட்போம்.

நன்றி பொங்குதமிழ். 
http://www.ponguthamizh.com/showcontentnews.aspx?sectionid=9&contentid=db3a0222-b39c-4bd4-bf32-1d652aa3f762

  • கருத்துக்கள உறவுகள்

நெற்கொழுதாசன்,

நீதி கேட்டு நிற்பதும் எங்கள் காலத்தோடு காணாமல் போய்விடும். உலகத்தால் வஞ்சிக்கப்பட்ட இனமாக எம் நிலை இருந்தாலும் எந்த வரலாற்றிலும் அவை பதியப்படமாட்டாது. கால ஓட்டத்தில் எங்கள் தியாகங்களும் வதைகளும் ஒன்றுமில்லாததற்கென்று ஆகிவிடும்போல் இருக்கிறது. மாற்றவேண்டும் இல்லை நாங்களே மாற்றம் செய்யவேண்டும்.

கவிதை உண்மைகளைச் சுமந்து நிற்கிறது உலகத்தின் மீதான அவநம்பிக்கையைப் பறைசாற்றுகிறது. நெற்கொழுதாசன் அனுமதிக்க முடியாது எங்களுக்கான தீர்வு உருவாக்கப்படும்வரை கவிஞர்கள் தீ உரசும் எழுதுகோல்களுக்கு உரியவர்களாக இருக்கவேண்டும் என்பது என் அவா என்னால் பல சந்தர்ப்பங்களில் இயலவில்லை மௌனிக்கிறேன் உங்களால் முடியும். இன்றைய நாட்களில் நம்மவர்களுக்குள் இருக்கும் பிரிவினைகளைக் கொளுத்துவதும் நமக்கான முக்கிய பணி. பார்த்துக் கொண்டிருந்தால் இவர்கள் நேர் கோட்டிற்கு வர மாட்டார்கள் சிதைந்திருக்கும் எம்மால் எதையும் பலப்பானதாக உருவாக்கமுடியாது பலவீனங்களை உடைக்கவேண்டும்.

Edited by வல்வை சகாறா

  • கருத்துக்கள உறவுகள்

ஓங்கி நடுமண்டையில் ணங்கெண்டு போட எல்லாரும் வழிக்கு வருவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஓங்கி நடுமண்டையில் ணங்கெண்டு போட எல்லாரும் வழிக்கு வருவார்கள்.

நெற்கொழுவுக்கும் எனக்கும் சரியான ஐடியாத் தந்த இசைக்கு நன்றிகள் பல :lol:

  • தொடங்கியவர்

நெற்கொழுவுக்கும் எனக்கும் சரியான ஐடியாத் தந்த இசைக்கு நன்றிகள் பல :lol:

ம்ம்ம்ம் உண்மைதான். எனக்கும் அந்த குரலை கேட்ட கணத்தில் இருந்து ஏதாவது செய்யணும் போலத்தான் இருக்கு குறைந்த பட்சம் என்னை பார்த்தாவது துப்பனும் போல இருக்கு. 

  • கருத்துக்கள உறவுகள்

நேர்மையற்று இருப்பவர்களிடம் நியாயத்தை எதிர்பார்ப்பது எங்ஙனம்? :blink:  வியாபாரத்துக்கு எதையாவது கொடுத்துதான் சாதிக்க முயற்சிக்க வேண்டும்.. இன்னும் வியாபாரத்துக்கு சிறிது இடம் உள்ளது. இந்திய முதலாளி மார்ச் மாதத்துக்குள் சரிவந்தால் சரி..  :D

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களுக்கு எதுவுமே தெரியாது

தங்களின் தேச நலன்களை தவிர

எங்களுக்கும் எதுவும் புரியாது

வாருங்கள் சொல்லி மன்றாடுவோம்.

நீதி கேட்போம்.

நன்றி பொங்குதமிழ். 

http://www.ponguthamizh.com/showcontentnews.aspx?sectionid=9&contentid=db3a0222-b39c-4bd4-bf32-1d652aa3f762

 

நேற்கொழுதாசனவர்களே!

ஏக்கமே எமது நிலையாகி மடிவதா?

நீதியற்றவரிடம் நீதியைக் கேட்போம் தராவிடில் பறிப்போம் என்று தமிழன் உணராதவரை.... விடியல்கள் எம்மை நெருங்காது.

பிரிந்து நின்று சாயந்த தமிழினத்தைப் புதைக்க நினைப்போரை உதைப்பது ஒன்றே உலகில் நிமிர வழி! இசையின் சிந்தனை சரியென்றேபடுகிறது.

 

எத்தனை சாவுகளுக்கு நீதி கேட்பது...?  இந்த சர்வதேசம் எதனை எதிர்பார்க்கிறது??????????? இன்னும் புரியவில்லையே!!!!!!!!!! :(

  • கருத்துக்கள உறவுகள்

எத்தனை சாவுகளுக்கு நீதி கேட்பது...?  இந்த சர்வதேசம் எதனை எதிர்பார்க்கிறது??????????? இன்னும் புரியவில்லையே!!!!!!!!!! :(

 

எங்களுக்குத் தான் இன்னும் புரியவில்லை கவிதை! ஆனால் 36 வருடங்களுக்கு முன்பே ஒரு பால்ய வயது இளைஞனாய் இருந்த பிரபாகரனுக்கு உலகமும் சிங்களவனும் எதிர் பார்ப்பதும் கணக்கிலெடுப்பதும் என்ன எண்டு முழுதும் விளங்கித் தான் ஆரம்பித்தார்கள். இடையில் நம்பிக்கையில்லாமல் சிதைத்ததும் காட்டிக் கொடுத்ததும் தமிழர்களாகிய நாம் தான், வேறு யாரும் வெளியார் அல்ல! நேற்கொழு சொல்வது போல எங்கள் முகத்தில் தான் நாங்கள் காறித்துப்பிக் கொள்ள வேணும்! 

 

  • தொடங்கியவர்

மனித உரிமைகளின் மனச்சாட்சிகளே 

என்ன செய்ய உத்தேசம் ?

ஏவிவிட்ட பாவி இன்னும் இருக்கிறாள் 

ரீ வி யில் முகம் காட்டுகிறாள்.

அவளும் கருப்பை சுமந்தவள் 

அவளுக்கு என்ன தீர்ப்பு எழுதுவீர் ?

(புதுவை இரத்தினதுரை நவாலி படுகொலைக் கவிதையில் )

 

எல்லாம் வியாபரமாகிப்போன உலகம் அழிந்துபோனால் தான் என்ன. 

 

 

கருத்துக்களோடு வந்து கலந்த உறவுகளுக்கு என் அன்புகள் 

Edited by நெற்கொழு தாசன்

  • கருத்துக்கள உறவுகள்

நெற்கொழுதாசன்,
இன்றல்லாது போகட்டும் என்றாவது ஒருநாள் ஊழ்வினையை அவர்கள் அறுவடை செய்தே ஆகவேணும். அதுவரையில் நீதி கேட்டலை நிறுத்தாமல் செல்வோம்.வெள்ளாடை தரித்து வந்தவள் இன்றும் உயிரோடுதான் இருக்கிறாள் நவாலியில் , நாகர்கோவிலில் , சுதந்திபுரத்தில் என அழிக்கப்பட்ட குழந்தைக்குரல்களின் கடைசிச்சாட்சியம் ஆயிரமாண்டுகள் கடந்தும் அவர்களுக்கான தீர்ப்பை எழுதும்.

 

'அவலத்தைத் தந்தவனுக்கு அதைத்திருப்பிக் கொடு'
அந்தச் சொல்லின் வலிமையே
சத்தமின்றி நிரம்புகிறது
இன்றல்லாது போயினும் என்றோ ஒருநாள்....!!!!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.