Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நத்தார் பாடல்கள்..........

Featured Replies

http://www.youtube.com/watch?v=vUPZF_PhCYE

 

 

படம்: புனித அந்தோனியார்.
பாடல்: வாணிஜெயராம்.
இசை: விஸ்வநாதன்.

 

 

விண்ணில் தோன்றும் தாரகை எல்லாம தேவதையாகும்
வெண்ணிலவோ தேவன் அமரும் வாகனமாகும்
ஞானஜோதியே உயர்வான ஜோதியே
தானாகவே உலகில் இறங்கும் தர்மஜோதியே....

 

பல்லவி:

மண்ணுலகில் இன்று தேவன் இறங்கி வருகிறார்
நல்ல மனிதர் நடுவில் குழந்தை வடிவம் பெறுகிறார்
மண்ணுலகில் இன்று தேவன் இறங்கி வருகிறார்
நல்ல மனிதர் நடுவில் குழந்தை வடிவம் பெறுகிறார்

எண்ணில்லாத அதிசயங்கள் செய்து காட்டவே
ஒரு புண்ணியரின் மடியினிலே புதல்வனாகிறார்

மண்ணுலகில் இன்று தேவன் இறங்கி வருகிறார்
இறங்கி வருகிறார்.....


சரணம்1:

மழலை மொழிகள் கேட்க கேட்க மனது கொள்ளாதோ
மடியில் வந்து அமரும் போது மயக்கம் கொள்ளாதோ
பார்வை பட்டால் போதும் நம் பாவம் யாவும் போகும்
கைகள் பட்டால் போதும் உடன் கவலை எல்லாம் தீரும்

மண்ணுலகில் இன்று தேவன் இறங்கி வருகிறார்
இறங்கி வருகிறார்.....


சரணம்2:

அடியவர்கள் மடியினிலே ஆண்டவரோ பிள்ளை
அரவணைக்கும் அடியவரோ இறைவனுக்கும் அன்னை
கொடுமை பாவம் துயரிலிருந்து மீட்பவர் வந்தார்
குலம் தழைக்க குழந்தையாக மேய்ப்பவர் வந்தார்

மண்ணுலகில் இன்று தேவன் இறங்கி வருகிறார்
நல்ல மனிதர் நடுவில் குழந்தை வடிவம் பெறுகிறார்
எண்ணில்லாத அதிசயங்கள் செய்து காட்டவே
ஒரு புண்ணியரின் மடியினிலே புதல்வனாகிறார்

மண்ணுலகில் இன்று தேவன் வந்து இறங்கினார்
நல்ல மனிதர் நடுவில் குழந்தை வடிவம் பெறுகிறார்

 

----------------------------------------------------------------------------------------------------------

 

http://www.youtube.com/watch?v=wgYMgN0Ae9g

 

படம் : மின்சாரக் கனவு
இசை : A.R. ரஹ்மான்
பாடியவர் : அனுராதா ஸ்ரீராம்
பாடல் வரிகள் : வைரமுத்து

 

 

அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே
அதிரூபன் தோன்றினானே
வைக்கோலின் மேலொரு வைரமாய் வைரமாய்
வந்தவன் மின்னினானே
விண்மீன்கள் கண் பார்க்க சூரியன் தோன்றுமோ
புகழ்மைந்தன் தோன்றினானே
கண்ணீரின் காயத்தை செந்நீரில் ஆற்றவே
சிசுபாலன் தோன்றினானே

அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே
அதிரூபன் தோன்றினானே
போர் கொண்ட பூமியில் பூக்காடு காணவே
புகழ்மைந்தன் தோன்றினானே

 

கல்வாரி மழையிலே கல்லொன்று பூக்கவும்
கருணை மகன் தோன்றினானே
நூற்றாண்டு இரவினை நொடியோடு போக்கிடும்
ஒளியாகத் தோன்றினானே
இரும்பான நெஞ்சிலும் ஈரங்கள் கசியவே
இறைபாலன் தோன்றினானே
முட்காடு எங்கிலும் பூக்காடு பூக்கவே
புவிராஜன் தோன்றினானே

அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே
அதிரூபன் தோன்றினானே
வைக்கோலின் மேலொரு வைரமாய் வைரமாய்
வந்தவன் மின்னினானே
அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே
அதிரூபன் தோன்றினானே

வைக்கோலின் மேலொரு வைரமாய் வைரமாய்
வந்தவன் மின்னினானே

 

  • கருத்துக்கள உறவுகள்

'கேளுங்கள், தரப்படும்- தட்டுங்கள் திறக்கப்படும்' என்ற பாடல் எனக்கு எப்போது கேட்டாலும், ஒரு விதமான புத்துணர்வைத் தரும்!

 

நத்தாரோடு நேரடியாகத் தொடர்பில்லா விட்டாலும், நல்ல ஒரு பாடல் என்பதால், இங்கு உங்கள் அனுமதியின்றி இணைக்கிறேன், தமிழினி!

 

யாழ் கள உறவுகளுக்கு எனதினிய நத்தார் பெருநாள் வாழ்த்துக்கள்! :D

 

Edited by புங்கையூரன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

http://www.youtube.com/watch?v=ZOfX4KE1N9k

 

christmas_03b.jpg

 

என் அன்பு உறவுகளுக்கு இனிய நத்தார் வாழ்த்துக்கள்.

 

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

நத்தார் மாதத்துக்குரிய இனிய பாடல்கள்.
இணைத்த அனைவருக்கும் நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்
பாடல்: எந்தன் ஜெப வேளை
பாடியவர்: ஜொலி ஏபிரஹாம்
 
  • கருத்துக்கள உறவுகள்

சின்னஞ்சிறு தொட்டில்.......சின்ன மாட்டுக் கொட்டில்.....

 

  • தொடங்கியவர்

http://www.youtube.com/watch?v=mLe5SYKc53Q

  • தொடங்கியவர்

  • கருத்துக்கள உறவுகள்


கருணை மழையே மேரி மாதா கண்கள் திறவாயோ....

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் ....

 

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
அன்பான உறவுகளே கிறிஸ்து பிறப்பை கூறி நிற்கும்  வானவர் இசையில் வாழ்த்தொலி கேட்டு மன்னவனே துயிலாய்..............என்ற பாடலின் வரிகள் அவசரமாக எனக்குத்தேவை தயவு செய்து தெரிந்தால் குறிப்பிடுங்கள் .எங்கு தேடியும் கிடைக்கவில்லை .
 
நன்றிகள் .
  • கருத்துக்கள உறவுகள்

Edited by விசுகு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.