Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

என்ன நியாயம்???

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன நியாயம்???

 

woman-1.jpg

 

கட்டிக்கரும்பே மரகத மணியே
பவழம் பவழம் எம் இதழ்கள்
என்று சொன்னவர்களும்
நீங்கள்தான் .......
 

கயல் விழி என்றும் ,
எம் விழி அம்பால்
பெட்டிப் பாம்பாய் அடங்கினோம்
என்று ,

சொன்னதும் நீங்கள் தான் ........
 

எங்கள் கொடியிடை அசைவில் ,
உங்கள் மதி
தறி கேட்டுப் போனதாய்
சொன்னதும் நீங்கள்தான் ........
 

பாலைவனமாய் இருந்த
உங்கள் வாழ்வில்
கோடைத் தென்றலாய்

நாங்கள் வந்தோம்
என்று
சொன்னவர்களும் நீங்கள் தான் ......

இப்பிடி,

சும்மா இருந்த எங்களை
உங்கள் கற்பனை குதிரைகளால்
மேய்ந்து விட்டு !!!!!!!!
இப்பொழுது மட்டும்
மோகம் கலைந்தவுடன்
" இல்லாள் "
என்று சொல்வது என்ன நியாயம் ???


பி கு : கிட்டடியிலை இல்லாள் எண்டு சொல்லி பொம்பிளையளை மட்டம் தட்டி வந்த கவிதை ஒண்டு
பாத்தன் . அதுக்கு இதை எழுதின்னான் . இதிலை நீங்கள் எண்டு சொலிறது ஆம்பிளையளை . சம்பந்தபட்டவர் என்னோடை கொழுத்தாடு பிடிக்க வரப்படாது :) :) :) .

 

 

மைத்திரேயி
10/01/0/2014

Edited by மைத்திரேயி

  • கருத்துக்கள உறவுகள்

பாலை நிலமாகி வரண்டுபோன

என் வாழ்வில்

ஒற்றைப் பூவாய் வந்து

சோலையாகிப் போனவள் நீ

விடியாத அந்த இரவுகளில்

என் விசும்பல்களின்

வலிகேட்டு உயிர்ப் பூவெடுத்து

மலர்மாலை தொடுத்தவள் நீ

 

நாங்க எப்பவுமே இதைத்தான் சொல்லிக்கிட்டு வாறம். :)

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=117083&page=1

Edited by யாழ்வாலி

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்களே அப்படித்தானே. தம் காரியம் சாதிக்கும் மட்டும் கண்ணே, மணியே, உன்மேல் எத்தனை அன்பு வைத்திருக்கிறேன், நீ இல்லாமல் ஒன்றுமே இல்லை என்றெல்லாம் பசப்புவார்த்தை கூறிவிட்டுத் தமது  காரியம் முடிந்தவுடன் கொஞ்சம் கூட இரக்கம் இன்றி இருப்பதை,சுயநலமாய் சிந்திப்பதை, பெண்ணின் உணர்வு பற்றி சிறிதேனும் எண்ணாமல் இருப்பதை  எல்லா இடமும் தானே பார்க்கிறோம். எங்காவது ஒன்று இரண்டுபேர் விதிவிலக்காக இருப்பார்கள். அவ்வளவே.

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை நல்லாயிருக்கு, மைத்திரேயி! :D

 

நான் உங்களுக்குத் தமிழ் படிப்பிக்கிறன் எண்டு கோவிக்காதேயுங்கோ !

 

இல் என்பது இருப்பிடம், வீடு என்று பொருள் படும்! 

 

ஆள் என்பது ஆள்பவள் என்று பொருள் படும்!

 

அப்படிப்பட்ட 'இல்லாள்' என்ற கௌரவத்துக்குரிய சொல்லை, என்ன பாடு படுத்தியிருக்கிறியள்?

 

'இல்லானை, இல்லாளும் வேண்டாள்"

 

இதில் துரத்துபவள் இல்லாள்! துரத்தப்படுபவன் 'இல்லான்'! :wub:  

  • கருத்துக்கள உறவுகள்

இல்லாள் , கோ + இல் ...!

 

அங்காலை அவர் பல திரிகளில் தமிழைப் பிச்சு உதறுறார் ,நீங்கள்  பஞ்சு பஞ்சாய்ப் பறக்க விடுகிறீங்களே சகோதரி...! :D

 

 

  • கருத்துக்கள உறவுகள்

நீங்க  சொல்லுறது எல்லாம் சரிதான் சகோதரி

ஆனால்

இறுதியில் ஒருவருக்கு என்று முடித்தது தான் உதைக்குது

அவர் எதையெல்லாம்   பார்த்தபின்

சலித்த பின் இப்படியானார்???

அங்க தான் உதைக்குது :lol:  :D  :D  

 

மற்றும்படி

அங்கும் எமது ஒவ்வாமையை  சுட்டிக்காட்டியுள்ளோம்....... :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

நான் நினைக்கிறேன்.. தலையணையால் முகத்தை மூடிவிட்டு ஒரு குத்து விட்டிருக்கிறா மைத்திரேயி அக்கா.. :D

  • கருத்துக்கள உறவுகள்

நான் நினைக்கிறேன்.. தலையணையால் முகத்தை மூடிவிட்டு ஒரு குத்து விட்டிருக்கிறா மைத்திரேயி அக்கா.. :D

 

 

யாருடைய  முகத்தை...........???

பாவம்

அந்தாள்

அப்பாவி  மனுசன் :o

ஏனிந்த கொலைவெறி  உங்களுக்கு(இருவருக்கும் :lol:  :D )

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாங்க எப்பவுமே இதைத்தான் சொல்லிக்கிட்டு வாறம். :)

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=117083&page=1

 

உப்புடிதானே எல்லாரும் சொல்லுறியள் ஆனா நடைமுறையிலை தலைகீழாய் எல்லோ கிடக்கு .உங்கடை கருத்துக்கு நன்றி சொல்லிறன் .

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கவிதை நல்லாயிருக்கு, மைத்திரேயி! :D

 

நான் உங்களுக்குத் தமிழ் படிப்பிக்கிறன் எண்டு கோவிக்காதேயுங்கோ !

 

இல் என்பது இருப்பிடம், வீடு என்று பொருள் படும்! 

 

ஆள் என்பது ஆள்பவள் என்று பொருள் படும்!

 

அப்படிப்பட்ட 'இல்லாள்' என்ற கௌரவத்துக்குரிய சொல்லை, என்ன பாடு படுத்தியிருக்கிறியள்?

 

'இல்லானை, இல்லாளும் வேண்டாள்"

 

இதில் துரத்துபவள் இல்லாள்! துரத்தப்படுபவன் 'இல்லான்'! :wub:  

 

உங்கடை தமிழ் விளக்கத்துக்கு நன்றி சொல்லிறன் . நீங்கள் எல்லாம் பெரிய கவிதையள் எழுதிறனீங்கள் . உங்களோடை என்னாலை மல்லு கட்டேலாது . ஆனாலும் நான் படிச்ச பள்ளிக்கூடத்திலை  " இல்லாள் " எண்டுறதை இல்லாதவள் எண்டும் சொல்லலாம் எண்டு என்ரை தமிழ் ரீச்சர் சொல்லி தந்தவா .

  • கருத்துக்கள உறவுகள்

நாங்க  ஒன்றும்.. அங்கு...தாய்குலத்தை மட்டம் தட்டி (மட்டம் தட்டனுன்னு நினைச்சா தட்ட பின்னிற்கமாட்டம். அதுவும் அவங்களை அறிவூட்டனுன்னு தானே தவிர.. வெறுப்பெல்லாம் கிடையாது. என்னை அதிகம் அரவணைப்பதும் தாய்க்குலம் அல்லவா..??! அதற்கான நன்றிக்கடனை செலுத்தாமல் விடுவது பாவம். :lol: ) மேற்படி பதத்தை பாவித்திருக்கவில்லை. அவங்க வாழ்க்கையில்..நிஜ கோலத்தையே வெளிக்காட்டி இருந்தேன். மேலும் அங்குள்ள "இல்லாள்".. "மனையாள்" என்று பொருள்படும். இப்ப எல்லாம்.. நவீன... உலகத்துப் பெண்களுக்கு உந்தப் பதம் பொருந்தாது என்றாலும்.. வீட்டில கொஞ்ச நேரமாவது வாழுறாங்கல்ல..! அந்த வகையில்.. இன்னும் கொஞ்சக் காலத்துக்கு பாவிக்கலாம்.. இப்பதத்தை. :icon_idea:

 

 

கீழ்படி பெருமைக்குரிய அந்தச் சொல்லை மைத்திரேயி அக்கா.. சிறுமை என்று நினைப்பதுவும் ஏனோ..???! :):lol:

 

 

பொருள்
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு) - மூதாதைய இல்லங்களில், இல்லாளே வழி நடத்தினாள்.

(இலக்கியப் பயன்பாடு) -

  • இல்லாள் அகத்திருக்க இல்லாதது ஒன்றில்லை - (மூதுரை - 21, ஔவையார்) (With wife at home, there is nothing you don't have)   

 

 

http://ta.wiktionary.org/wiki/%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D

" இல்லாள் " என்ற பொதுவான சொல்லாடலுக்கு  வித்தியாசமான கோணத்தில் பொருள் தந்த மைத்திரேயிக்குப் பாராட்டுக்கள் . நீங்கள் மேலும் பல ஆக்கங்களை எங்களுக்குத் தரவேண்டும் .

  • 4 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இல்லாள் , கோ + இல் ...!

 

அங்காலை அவர் பல திரிகளில் தமிழைப் பிச்சு உதறுறார் ,நீங்கள்  பஞ்சு பஞ்சாய்ப் பறக்க விடுகிறீங்களே சகோதரி...! :D

 

பஞ்சாய் போனால் என்ன மாற்றர் தான் முக்கியம் மன்னா .

 

நீங்க  சொல்லுறது எல்லாம் சரிதான் சகோதரி

ஆனால்

இறுதியில் ஒருவருக்கு என்று முடித்தது தான் உதைக்குது

அவர் எதையெல்லாம்   பார்த்தபின்

சலித்த பின் இப்படியானார்???

அங்க தான் உதைக்குது :lol:  :D  :D  

 

மற்றும்படி

அங்கும் எமது ஒவ்வாமையை  சுட்டிக்காட்டியுள்ளோம்....... :icon_idea:

 

உங்கடை கருத்துக்கு நன்றி சொல்லிறன் .

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.