Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர்களே சட்டத்தை கையில் எடுக்கலாமா .......

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நாடுகளில்  பொதுவாக வளர்ந்த பிள்ளைகளை  பெற்றோர்களோ, உறவினர்களோ கண்டிக்க ,கண்கானிக்க  முடிவதில்லை. அவர்கள் பட்டுத்தான் அறிய வேண்டும் . (திருந்த வேண்டும் என சொல்லவில்லை, திருந்துதல் மிகவும் குறைவு. ) ஏனென்டால் இது மாறி அடுத்த மழை வர காளான் மீன்டும் முளைக்கும்....! :mellow:

  • Replies 138
  • Views 10k
  • Created
  • Last Reply

சட்டத்தினை கையில் எடுப்பது கடும் தண்டனைக்குரிய குற்றம். இதில் மாற்றுக் கருத்து இல்லை. புலம்பெயர் நாடுகளில் இருக்கும் தமிழ் காவாலிக் கூட்டமும் (Gangsters)  இதனைத் தான் செய்கின்றது. பிரான்ஸில், இப்படியான குற்றங்களுக்கு காவல்துறையில் முறையிடுதல், நீதிமன்றில் அதனை நிரூபித்தல், அதற்குரிய தண்டனையை பெற்றுக் கொடுத்தல் போன்ற செயல் பொறிமுறைகள் இருக்கும் போது இவற்றை எல்லாம் தட்டிக் கழித்து தாமே தண்டனை வழங்க முற்படுவது என்பது கடும் குற்றமாகும்.

 

இதை விசுகு போன்று எம் சமூகத்தின் பிற்போக்கு விடயங்களை ஆதரித்து வருபவர் ஆதரிப்பதில் வியப்பில்லை.

இதை தவறு என்றால் சட்டத்தை இலங்கை அரசுக்கு எதிரா நாங்கள் கையில் எடுப்பதும் தவறு ....இங்கு புலிகளை கேள்வி கேட்பது என்று நீங்கள் அர்ஜுனனை தடைசெய்வதும் தவறு இப்படி எல்லாம் தவறு தான் அண்ணே நாட்டுக்கு நாடு சட்டபடி வாழ்த்தா பல நாடுகளில் தடைசெய்யபட்ட இயக்கத்தை ஆதரிப்பது தவறு நீங்கள் உங்கள் நாட்டு சட்டபடி வாழ்த்து காட்டுங்கள் பின்னர் பிற்போக்கா முற்போக்கா என ஆராய்வாம் .

 

 

உங்கள் பேச்சு சுப்பிரமணியசுவாமி போல இருக்கு ^_^

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அந்த பெண்களும் கேமரா க்கு வடிவா போஸ் குடுக்கினம் அவரோட சேர்ந்து :D

அந்தப் பெண்களும் விரும்பிச் செய்தார்கள் என்றே விளங்கிக் கொண்டேன்.. அப்படியானால் மற்றவர்கள் ஏன் அடிக்கப்போனார்கள்?? :huh: பொறாமை என்று நினைக்கிறேன்.. :D

அந்தப் பெண்களும் விரும்பிச் செய்தார்கள் என்றே விளங்கிக் கொண்டேன்.. அப்படியானால் மற்றவர்கள் ஏன் அடிக்கப்போனார்கள்?? :huh: பொறாமை என்று நினைக்கிறேன்.. :D

சொல்வது எல்லாம் உண்மை என்னும் நிகழ்ச்சியை வாய்பிளந்து பார்க்கும் சமூகத்தில்தான் நாம் வாழ்த்து கொண்டு இருக்கிறோம் அண்ணே இசை :D

  • கருத்துக்கள உறவுகள்

அந்த பெண்களும் கேமரா க்கு வடிவா போஸ் குடுக்கினம் அவரோட சேர்ந்து :D

அந்த ஆளை கூப்பிட்டு பல்கலைக்கழக ஆராய்ச்சி செய்வது நல்லது.. :huh: முனைவர் பட்டம் பெற நல்ல வாய்ப்பு.. :D

எந்த வடிவத்திலும் வன்முறையை ஆதரிக்க முடியாது. ஆதரித்தால் அது வேறு ஒரு காரணத்திற்காக எமக்கு எதிராகவே நிற்கும்.

கடன் கொடுக்க முடியாத யாரோ ஒரு அப்பாவியை அடித்து விட்டு "மோசடி செய்தவர் மீது நடவடிக்கை" என்றும் வீடியோ வரலாம். போராளியை தாக்கி விட்டு "கேபி குழு உறுப்பினர் மீது நடவடிக்கை" என்றும் வரலாம்.

ஆகவே இப்படியானவற்றை ஆரம்பித்திலேயே கண்டிக்க வேண்டும்.

மற்றது

படத்தில் உள்ள பெண்கள் தாமாக விரும்பியே போஸ் கொடுக்கிறார்கள். இது தெரியாமல் எடுக்கப்பட்ட படங்கள் அல்ல. அத்துடன் ஒரு பெண்ணே அனைத்துப் படத்திலும் இருப்பது போன்று தெரிகிறது.

இந்த இளைஞன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் எவ்வளவு தூரம் உண்மை என்பது தெரியவில்லை. அவன் படங்களை எடுத்து மிரட்டியிருந்தால், சட்டப்படி தண்டனை பெற்றுக் கொடுக்க வேண்டும். வன்முறை தவறான வழி.

இதை தவறு என்றால் சட்டத்தை இலங்கை அரசுக்கு எதிரா நாங்கள் கையில் எடுப்பதும் தவறு ....இங்கு புலிகளை கேள்வி கேட்பது என்று நீங்கள் அர்ஜுனனை தடைசெய்வதும் தவறு இப்படி எல்லாம் தவறு தான் அண்ணே நாட்டுக்கு நாடு சட்டபடி வாழ்த்தா பல நாடுகளில் தடைசெய்யபட்ட இயக்கத்தை ஆதரிப்பது தவறு நீங்கள் உங்கள் நாட்டு சட்டபடி வாழ்த்து காட்டுங்கள் பின்னர் பிற்போக்கா முற்போக்கா என ஆராய்வாம் .

 

 

உங்கள் பேச்சு சுப்பிரமணியசுவாமி போல இருக்கு ^_^

 

தமிழர்கள் இலங்கை அரசுக்கு எதிராக ஆயுதம் தூக்கியதையும்,  இந்த இளைஞனுக்கு காவாலிகள் தண்டனை கொடுத்தையும் ஒரே தராசில் வைத்து பார்க்கும் அளவுக்குத் தான் உங்கள் அரசியல் ஞானம் இருக்கின்றது. இலங்கை பாராளுமன்றமும் சட்டவாக்கமும், அரசியலமைப்பும் தமிழர்களுக்கு எதிரான அனைத்து விடயங்களுக்கும் ஆதரவு கொடுத்தமையால் தான் தமிழர்கள் ஆயுதம் தூக்கினர். ஆனால், பிரான்ஸ் போன்ற நாடுகளில் சட்ட பாதுகாப்பு இருக்கும் நாடுகளில் தாமே சட்டத்தினை கையில் எடுப்பது மிகவும் தவறான செயல். இதுவே நாளை குடும்ப பிரச்சனைகளுக்கும் தீர்வை சமூக அமைப்பின் வெளியாக, சட்டத்தின் வெளியாக தேட முன் நிற்கும். அத்துடன் இளைஞர் கூட்டம் தமக்கான பிரச்சனைகளுக்கு நீதித்துறையிலும், சட்டங்களிற்குட்பட்ட முறையிலும் தீர்வை காணாமல் தாமே தமக்குள் தீர்க்க முயல்வதையும் ஊக்குவிக்கும்.

 

புலிகளை தடை செய்த எந்த நாடும் புலிகளுக்கான தார்மீக ஆதரவினை நல்குவதை சனநாயகமாகத்தான் பார்க்கின்றது. போராளிகளின் படங்களை வைத்திருப்பதைக் கூட சனநாயகமாகத்தான் கருதுகின்றது.

எந்த வடிவத்திலும் வன்முறையை ஆதரிக்க முடியாது. ஆதரித்தால் அது வேறு ஒரு காரணத்திற்காக எமக்கு எதிராகவே நிற்கும்.

கடன் கொடுக்க முடியாத யாரோ ஒரு அப்பாவியை அடித்து விட்டு "மோசடி செய்தவர் மீது நடவடிக்கை" என்றும் வீடியோ வரலாம். போராளியை தாக்கி விட்டு "கேபி குழு உறுப்பினர் மீது நடவடிக்கை" என்றும் வரலாம்.

ஆகவே இப்படியானவற்றை ஆரம்பித்திலேயே கண்டிக்க வேண்டும்.

மற்றது

படத்தில் உள்ள பெண்கள் தாமாக விரும்பியே போஸ் கொடுக்கிறார்கள். இது தெரியாமல் எடுக்கப்பட்ட படங்கள் அல்ல. அத்துடன் ஒரு பெண்ணே அனைத்துப் படத்திலும் இருப்பது போன்று தெரிகிறது.

இந்த இளைஞன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் எவ்வளவு தூரம் உண்மை என்பது தெரியவில்லை. அவன் படங்களை எடுத்து மிரட்டியிருந்தால், சட்டப்படி தண்டனை பெற்றுக் கொடுக்க வேண்டும். வன்முறை தவறான வழி.

 

இப்பதான் வன்முறை தவறான வழியா தெரியுதா அடியுங்கோ பிடியுங்கோ என்று உசிப்பி விடும்போது இவைகள் பிழையா தெரியவில்லை போல .

ஏன் உங்களுக்கு கேபி குழுவால் எதாவது  இருக்கு போல கேப்பில பாதுகாப்பு தேடுறியல். :D :D :D

 

கேபி குழு பற்றி பேசியது உங்கள் மீது கொண்ட அக்கறையில்தான்

  • கருத்துக்கள உறவுகள்

சொல்வது எல்லாம் உண்மை என்னும் நிகழ்ச்சியை வாய்பிளந்து பார்க்கும் சமூகத்தில்தான் நாம் வாழ்த்து கொண்டு இருக்கிறோம் அண்ணே இசை :D

அந்த நிகழ்ச்சியை பார்த்திட்டுதான் அடிபோட்டார்கள் என்கிறீங்க.. :(:D

சீமானின் தம்பிகளிடம் சிக்கி உங்களைப் பற்றி "துரோகி மீது நடவடிக்கை" என்று வீடியே வந்தால் என்ன செய்வது?

  • கருத்துக்கள உறவுகள்

என்னால் ஒரு சராசரித்தமிழனாகவே இதை பார்க்கமுடிகின்றது.குடுத்த தண்டனையில் பிழை ஏதும் இருப்பதாக தெரியவில்லை,ஆனால் தடயங்களை எடுத்தவர்கள் அதை அங்கேயே அழித்திருக்க வேண்டும்.

தமிழர்கள் இலங்கை அரசுக்கு எதிராக ஆயுதம் தூக்கியதையும்,  இந்த இளைஞனுக்கு காவாலிகள் தண்டனை கொடுத்தையும் ஒரே தராசில் வைத்து பார்க்கும் அளவுக்குத் தான் உங்கள் அரசியல் ஞானம் இருக்கின்றது. இலங்கை பாராளுமன்றமும் சட்டவாக்கமும், அரசியலமைப்பும் தமிழர்களுக்கு எதிரான அனைத்து விடயங்களுக்கும் ஆதரவு கொடுத்தமையால் தான் தமிழர்கள் ஆயுதம் தூக்கினர். ஆனால், பிரான்ஸ் போன்ற நாடுகளில் சட்ட பாதுகாப்பு இருக்கும் நாடுகளில் தாமே சட்டத்தினை கையில் எடுப்பது மிகவும் தவறான செயல். இதுவே நாளை குடும்ப பிரச்சனைகளுக்கும் தீர்வை சமூக அமைப்பின் வெளியாக, சட்டத்தின் வெளியாக தேட முன் நிற்கும். அத்துடன் இளைஞர் கூட்டம் தமக்கான பிரச்சனைகளுக்கு நீதித்துறையிலும், சட்டங்களிற்குட்பட்ட முறையிலும் தீர்வை காணாமல் தாமே தமக்குள் தீர்க்க முயல்வதையும் ஊக்குவிக்கும்.

 

புலிகளை தடை செய்த எந்த நாடும் புலிகளுக்கான தார்மீக ஆதரவினை நல்குவதை சனநாயகமாகத்தான் பார்க்கின்றது. போராளிகளின் படங்களை வைத்திருப்பதைக் கூட சனநாயகமாகத்தான் கருதுகின்றது.

நீங்கள்தான் அதை இளையர் கூட்டம் ..காவாலிகள் என்று சொல்லுறியள் ஒருவேளை அடிச்சவன் பாதிக்கபட்ட பெண்ணின் அண்ணனா கூட இருக்கலாம் இல்லையா .

 

அவனின் விபரம் அறிச்சு ஒருவன் அவன் வீட்டுக்கு போகிறான் என்றால் தெரியாதவன் செய்ய முடியாது இப்படி சட்டம் என்னும் ஒரு வட்டத்தில் நின்று எல்லாம் பார்த்தால் நாங்கள் போலிஸ் ஸ்டேசனுக்கு பக்கத்தில்தான் வீடு பார்த்து இருக்கணும் .முறையிட்டால் 10 வருடம் சென்றுதான் முடிவு வரும் .

 

ஆனால் எங்களுக்கு ஒன்று என்றால் நாங்கள் இதே இளையவரைதான் வீதிக்குவா போராடு என்று கேட்கிறம் பிரச்சினை வந்தால் காவாலிகள் என்று விலத்தி வைக்கிறம் சுயநல உலகு .

 

சீமானின் தம்பிகளிடம் சிக்கி உங்களைப் பற்றி "துரோகி மீது நடவடிக்கை" என்று வீடியே வந்தால் என்ன செய்வது?

 

ஆதாரம் இருந்தால் தரலாமா போடலாம் இங்கு யாருதான் துரோகி இல்லை மண்ணை விட்டு வெளியில் வந்தே முதல் துரோகம் தான் .

நானும் இது பாதிக்கப்பட்டவர்களால் நடத்தப்பட்ட தாக்குதல் என்றுதான் நம்புகிறேன்.

தன்னுடைய குடும்பத்தை சேர்ந்த பெண்ணை தொடர்ந்தும் தொல்லைப்படுத்துகின்ற ஒருவன் மீது கோபம் கொண்டு தாக்குதல் நடத்துவதில் உள்ள "அறத்தை" நான் புரிந்து கொள்ளவும் செய்கிறேன். அப்படி நடந்திருந்தால் இது ஒரு தனிப்பட்ட சம்பவமாக முடிந்திருக்கும்.

ஆனால் அதை வீடியோ எடுத்து கலாச்சாரத்தை காப்பதாக அறிக்கை விடுவதெல்லாம் மிக அதிகப்படியானது. ஒரு தவறான முன்னுதாரணம் இது. நிறுவனமயப்படுத்தப்பட்ட வன்முறைகள் தமிழ் சமூகத்திற்கு ஆபத்தானது.

  • கருத்துக்கள உறவுகள்

சட்டத்தினை கையில் எடுப்பது கடும் தண்டனைக்குரிய குற்றம். இதில் மாற்றுக் கருத்து இல்லை. புலம்பெயர் நாடுகளில் இருக்கும் தமிழ் காவாலிக் கூட்டமும் (Gangsters)  இதனைத் தான் செய்கின்றது. பிரான்ஸில், இப்படியான குற்றங்களுக்கு காவல்துறையில் முறையிடுதல், நீதிமன்றில் அதனை நிரூபித்தல், அதற்குரிய தண்டனையை பெற்றுக் கொடுத்தல் போன்ற செயல் பொறிமுறைகள் இருக்கும் போது இவற்றை எல்லாம் தட்டிக் கழித்து தாமே தண்டனை வழங்க முற்படுவது என்பது கடும் குற்றமாகும்.

 

இதை விசுகு போன்று எம் சமூகத்தின் பிற்போக்கு விடயங்களை ஆதரித்து வருபவர் ஆதரிப்பதில் வியப்பில்லை.

 

 

எனக்கு 

இந்த பிற்போக்கு

முற்போக்கு  

??????????????

???????????

என்றெல்லாம் தெரியாது ராசா

 

சட்டத்தை மீறக்கூடாது

ஆனால் சட்டம் செய்யவேண்டியதை

ஒவ்வொரு மக்களும் செய்யணும்  என்பது தான் எனது நிலை.

எல்லாவற்றிற்கும்

காவல்துறையும்

வைத்தியரும்

நெருப்பு அணைக்கும் நிறுவனமும் வரும்வரை பொறுத்திருக்கமுடியுமா???

 

அண்மையில்

BUS இல்  வந்து கொண்டிருந்தேன்

ஒரு வயது பொன பிரெஞ்சுக்காறி  எனக்கு அடுத்த ஆசனத்திலிருந்தார்

அவருக்கு முன்பிருந்த இரு  பெண்கள்  (ரோமேனியர்கள்)

கிழவி இருந்த இருக்கையில் ஒருவர் கால்களைப்போட்டனர்

கிழவி  கொஞ்சம் தள்ளி ஒதுங்கியது

அந்தப்பக்கம் மற்றவர் காலைப்போட்டார்

கிழவி  நெளிந்தபடி இருந்தது

நானும் பார்த்தேன்

எவராவது ஏதாவது கதைக்கிறார்களா என

எல்லோரும் தங்கள் தங்கள் பாடு

அந்த இரு  பெண்களையும் பார்த்தபடி விறுக்கென்று எழும்பி  நகர்ந்தேன்

எழுந்து ஓடத்தொடங்கினார்கள்

BUS நிற்க இறங்கிவிட்டார்கள்

 

அந்த பிரைஞ்சுக்காறி  நன்றி  என்று சொன்னார்

நான் எல்லோருக்கும் கேட்கக்கூடியதாக

நாமும் கொஞ்சம் நாட்டை  கவனிக்கணும்

இதுக்கெல்லாம் காவல்துறை தேவையில்லை என்றுவிட்டு இருந்துவிட்டேன். 

 

அந்த அம்மா

இறங்கிப்போகும் போது

என்னைக்கொஞ்சிவிட்டு சென்றா........

 

நாலு பேருக்கு நன்மையென்றால்

எதுவும் செய்யலாம்

இது தான் நமது கொள்கை

இது பிற்போக்கா?

முற்போக்கா??????

நாமறியோம் பராமரனே........

எனக்கு 

இந்த பிற்போக்கு

முற்போக்கு  

??????????????

???????????

என்றெல்லாம் தெரியாது ராசா

 

சட்டத்தை மீறக்கூடாது

ஆனால் சட்டம் செய்யவேண்டியதை

ஒவ்வொரு மக்களும் செய்யணும்  என்பது தான் எனது நிலை.

எல்லாவற்றிற்கும்

காவல்துறையும்

வைத்தியரும்

நெருப்பு அணைக்கும் நிறுவனமும் வரும்வரை பொறுத்திருக்கமுடியுமா???

 

அண்மையில்

BUS இல்  வந்து கொண்டிருந்தேன்

ஒரு வயது பொன பிரெஞ்சுக்காறி  எனக்கு அடுத்த ஆசனத்திலிருந்தார்

அவருக்கு முன்பிருந்த இரு  பெண்கள்  (ரோமேனியர்கள்)

கிழவி இருந்த இருக்கையில் ஒருவர் கால்களைப்போட்டனர்

கிழவி  கொஞ்சம் தள்ளி ஒதுங்கியது

அந்தப்பக்கம் மற்றவர் காலைப்போட்டார்

கிழவி  நெளிந்தபடி இருந்தது

நானும் பார்த்தேன்

எவராவது ஏதாவது கதைக்கிறார்களா என

எல்லோரும் தங்கள் தங்கள் பாடு

அந்த இரு  பெண்களையும் பார்த்தபடி விறுக்கென்று எழும்பி  நகர்ந்தேன்

எழுந்து ஓடத்தொடங்கினார்கள்

BUS நிற்க இறங்கிவிட்டார்கள்

 

அந்த பிரைஞ்சுக்காறி  நன்றி  என்று சொன்னார்

நான் எல்லோருக்கும் கேட்கக்கூடியதாக

நாமும் கொஞ்சம் நாட்டை  கவனிக்கணும்

இதுக்கெல்லாம் காவல்துறை தேவையில்லை என்றுவிட்டு இருந்துவிட்டேன். 

 

அந்த அம்மா

இறங்கிப்போகும் போது

என்னைக்கொஞ்சிவிட்டு சென்றா........

 

நாலு பேருக்கு நன்மையென்றால்

எதுவும் செய்யலாம்

இது தான் நமது கொள்கை

இது பிற்போக்கா?

முற்போக்கா??????

நாமறியோம் பராமரனே........

 

சமூகத்தில் நடக்கும் ஒரு தவறினைத் தடுக்க முனைந்திருக்கின்றீர்கள்.பாரட்டப்பட வேண்டியது. ஆனால் அதே நீங்கள் அந்த இளைஞர்களை நையப்புடைத்து காயம் ஏற்படுத்தி இருந்தீர்கள் என்றால் அந்த  இளைஞர்களின் செயல்களை விட உங்களின் செயல் தவறானதாக இருந்து இருக்கும். அத்துடன் அந்த இளைஞர்களை மேலும் வன்முறை பாதைக்கு எடுத்து விட்டு இருக்கும்.

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு அண்ணாவின் செயல் பாராட்டுக்குரியது.. ஆனால் பிரச்சினை செய்த பெண்களுக்கு இரண்டு அடி போட்டிருந்தார் என்றால் அந்த அம்மாவே உங்களை கண்டித்திருப்பார்..

நீங்கள்தான் அதை இளையர் கூட்டம் ..காவாலிகள் என்று சொல்லுறியள் ஒருவேளை அடிச்சவன் பாதிக்கபட்ட பெண்ணின் அண்ணனா கூட இருக்கலாம் இல்லையா .

 

அவனின் விபரம் அறிச்சு ஒருவன் அவன் வீட்டுக்கு போகிறான் என்றால் தெரியாதவன் செய்ய முடியாது இப்படி சட்டம் என்னும் ஒரு வட்டத்தில் நின்று எல்லாம் பார்த்தால் நாங்கள் போலிஸ் ஸ்டேசனுக்கு பக்கத்தில்தான் வீடு பார்த்து இருக்கணும் .முறையிட்டால் 10 வருடம் சென்றுதான் முடிவு வரும் .

 

ஆனால் எங்களுக்கு ஒன்று என்றால் நாங்கள் இதே இளையவரைதான் வீதிக்குவா போராடு என்று கேட்கிறம் பிரச்சினை வந்தால் காவாலிகள் என்று விலத்தி வைக்கிறம் சுயநல உலகு .

 

 

 

 

அடிச்சவன் பாதிக்கப்பட்டவனாக இருந்திருந்தால் சபேசன் கேட்டது போன்று வீடியோ எடுத்து கலாச்சார காவலன் என்ற முகமூடிக்குள் ஒழிந்து இருக்க வேண்டிய அவசியம் வந்திருக்காது. தமிழ் விழுமியம் என்பது வன்முறைகளினூடாக பாதுகாக்கப்பட வேண்டிய அளவுக்கு கேவலமானது அல்ல.

இங்கு ஒரு இளைஞன் குற்றவாளி என்று நிரூபிக்கப்படாமல், பெண்களின் விருப்புக்கு எதிராக படம் எடுத்தவன் என்பது நிரூபிக்கப்படாமல் தண்டனை மட்டும் கொடுக்கப்பட்டு இருக்கு. அந்த தண்டனை பற்றிய எதிர்ப்பு கிழம்புவதை தடுக்க கலாச்சார காவலன் என்ற முகமூடி தேவையாக இருக்கின்றது.

 

தலிபானும் இதனைத் தான் செய்கின்றது.

அடிச்சவன் பாதிக்கப்பட்டவனாக இருந்திருந்தால் சபேசன் கேட்டது போன்று வீடியோ எடுத்து கலாச்சார காவலன் என்ற முகமூடிக்குள் ஒழிந்து இருக்க வேண்டிய அவசியம் வந்திருக்காது. தமிழ் விழுமியம் என்பது வன்முறைகளினூடாக பாதுகாக்கப்பட வேண்டிய அளவுக்கு கேவலமானது அல்ல.

இங்கு ஒரு இளைஞன் குற்றவாளி என்று நிரூபிக்கப்படாமல், பெண்களின் விருப்புக்கு எதிராக படம் எடுத்தவன் என்பது நிரூபிக்கப்படாமல் தண்டனை மட்டும் கொடுக்கப்பட்டு இருக்கு. அந்த தண்டனை பற்றிய எதிர்ப்பு கிழம்புவதை தடுக்க கலாச்சார காவலன் என்ற முகமூடி தேவையாக இருக்கின்றது.

 

தலிபானும் இதனைத் தான் செய்கின்றது.

 

அதுதான் சொன்னேன் பொலிசாரின் அனுமதியுடன் தான் வீடியோ போடபட்டது என்று ..இல்லாமல் போட்டால் அதுகூட குற்றம்தான் இங்கு .

 

நித்தியானத்தா வீடியோவை ரசித்து பார்த்த எமக்கு எம்மவர் பிரச்சினை வன்முறையா தான் தெரியும் . :) :)

 

அதுதான் சொன்னேன் பொலிசாரின் அனுமதியுடன் தான் வீடியோ போடபட்டது என்று ..இல்லாமல் போட்டால் அதுகூட குற்றம்தான் இங்கு .

 

நித்தியானத்தா வீடியோவை ரசித்து பார்த்த எமக்கு எம்மவர் பிரச்சினை வன்முறையா தான் தெரியும் . :) :)

 

.உங்களால் சரியாக வாதிக்க முடியாமல் விட்டால், தவறான தகவலை கொண்டு வந்து நியாயப்படுத்த வேண்டாம். தவறான தகவலை பரப்புவதும் குற்றம் ஆகும். அதற்காக யாழ் களத்தினை பயன்படுத்துவதும் தவறாகும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அஞ்சரன் அண்ணாவின் காமடி தாங்க முடியவில்லை பிரெஞ்சு காவல் துரையின் அனுமதியோடு தானாம் வீடியோ பகிரங்க படுத்தப்படதாம்..... அப்பிடி அது உண்மையாக இருந்தால் உங்கள் நாட்டு காவல் துறை கையாலாகாத காவல் துறை பேசாமல் கலைத்து விடலாம் :D

.உங்களால் சரியாக வாதிக்க முடியாமல் விட்டால், தவறான தகவலை கொண்டு வந்து நியாயப்படுத்த வேண்டாம். தவறான தகவலை பரப்புவதும் குற்றம் ஆகும். அதற்காக யாழ் களத்தினை பயன்படுத்துவதும் தவறாகும்

 

நான் சொல்வது தவறு என்றால் இந்த செய்தியை போட்டு இங்கு விவாதிப்பது கூட தவறு தானே .

 

என்ன ஆதார அடிப்படையில் இங்கு இணைக்கபட்டு விதிக்கப்பட்டுது .

அஞ்சரன் அண்ணாவின் காமடி தாங்க முடியவில்லை பிரெஞ்சு காவல் துரையின் அனுமதியோடு தானாம் வீடியோ பகிரங்க படுத்தப்படதாம்..... அப்பிடி அது உண்மையாக இருந்தால் உங்கள் நாட்டு காவல் துறை கையாலாகாத காவல் துறை பேசாமல் கலைத்து விடலாம் :D

அப்பு சுண்டல் இங்கு பல பிரச்சினைக்கு பிரஞ்சு காவல்துறை நேரடியா சொல்லி இருக்கு இதை உங்கள் புலிகளின் அலுவலகத்தில் சொல்லி முடிவு எடுங்கள் என்று அப்படிதான் புலிகளையும் தமிழரையும் பிரஞ்சு பார்க்குது .

 

இது இங்கு உள்ளவர்களுக்கு நன்கு விளங்கும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சட்டத்தை கையில் எடுக்குமாறு பொதுமக்களை கூறும் கையாலாகாத காவத்துரையை கலைத்து விட்டால் மக்களின் வரிப்பணமாவது மிஞ்சும் அல்லாவா

இத்தனை பெண்கள் ஒருவனிடம் ஏமாறுகிறார்கள் என்றால், எங்களின் கலாச்சாரத்தில் ஏதோ ஒரு சிக்கல் இருப்பதாகத்தான் அர்த்தம். அதைப் பற்றி திறந்த மனதுடன் உரையாடல் செய்வதே இப்போது உள்ள தேவை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிரான்ஸ் மற்றும் ஐரோப்பாவில் இருக்கும் விபரம் இல்லாத சில தமிழர்களிடம் இப்பிடியான கதைகள் எடுபடும் ஆனால் ஆஸ்திரேலியா கனடியன் தமிழ்ச கொஞ்சம் விஷயம் தெரிஞ்சவை அண்ணே :D

நான் சொல்வது தவறு என்றால் இந்த செய்தியை போட்டு இங்கு விவாதிப்பது கூட தவறு தானே .

என்ன ஆதார அடிப்படையில் இங்கு இணைக்கபட்டு விதிக்கப்பட்டுது .

அப்பு சுண்டல் இங்கு பல பிரச்சினைக்கு பிரஞ்சு காவல்துறை நேரடியா சொல்லி இருக்கு இதை உங்கள் புலிகளின் அலுவலகத்தில் சொல்லி முடிவு எடுங்கள் என்று அப்படிதான் புலிகளையும் தமிழரையும் பிரஞ்சு பார்க்குது .

இது இங்கு உள்ளவர்களுக்கு நன்கு விளங்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.