Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திமுகவில் இருந்து நீக்கப்பட்டார் மு.க.அழகிரி: ஈழத்தில் சகோதர யுத்தம் என்றவர் இன்று குடும்ப யுத்தத்தில்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

klaignar%20-%20azhakiri.jpg

 

 

கட்சி கட்டுப்பாட்டை மீறியதால், மு.க.அழகிரி மீது திமுக தலைமைக்கழகம் ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது. திமுக உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் மு.க.அழகிரி நீக்கம் என்று அறிவித்துள்ளது.  திமுகவின் பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

 

மேலும்,  இது கட்சியின் ஒற்றுமைக்காக எடுக்கப்பட்ட முடிவு.   திமுகவினர் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்றும் அறிவித்துள்ளார்  பேராசிரியர்.

 

அழகிரியின் பிறந்த நாளை முன்னிட்டு, கடந்த ஒருமாதத்திற்கு முன்னமே மதுரையில் வாழ்த்து போஸ்டர்கள் ஒட்ட ஆரம்பித்தனர் ஆதரவாளர்கள்.  இதுவே, அழகிரியை கட்சியை விட்டு நீக்கும் அளவிற்கு பிரச்சனையாக அமைந்துவிட்டது. வாழ்த்து போஸ்டரில் இருந்தவை திமுக தலைமையை அதிருப்திய டையச்செய்தது.  ஆகவே,  அதற்கு காரணமான அழகிரி ஆதரவாளர்களை அதிரடியாக கட்சியில் இருந்து நீக்கியது திமுக தலைமை.     இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மதுரை மாநருக்கு புதிய பொறுப்பாளர் களையும் அறிவித்தார் கலைஞர்.

 

இந்நிலையில் நேற்று  மீண்டும் 5 அழகிரி ஆதரவாளர்களை நீக்கி உத்தரவிட்டது திமுக தலைமை.   இதையடுத்து இன்று காலை திமுக தலைவர் கலைஞரை சந்தித்து பேசினார் அழகிரி.   இந்த சந்திப்பில் கடுமையான விவாதம் நடந்ததாக கூறப்படுகிறது. 

 

கலைஞர் - அழகிரி சந்திப்பு நடந்த சில மணி நேரம் கழித்து,  அழகிரியை திமுகவில் இருந்து நீக்கம் செய்து அதிரடி அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

 

http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=115282

திமுகவில் இருந்து மு.க.அழகிரி நீக்கப்பட்டது ஏன்? :

 தலைமைக்கழகம் விளக்கம்

 

klaignar%20-%20azhakiri.jpg

 

கட்சி கட்டுப்பாட்டை மீறியதால், மு.க.அழகிரி மீது திமுக தலைமைக்கழகம் ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது. திமுக உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் மு.க.அழகிரி நீக்கம் என்று அறிவித்துள்ளது.  திமுகவின் பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் இந்த அறிவிப்பை வெளியிட் டுள்ளார்.

 

மு.க.அழகிரி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து  திமுக தலைமைக் கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இன்று (24-1-2014 ) பேராசியர் க.அன்பழகன் வெளியிட்ட அந்த அறிவிப்பில், ’’கட்சிக்குள் ஏற்படும் அபிப்பிராயப் பேதங்கள், கோபதாபங்கள் இவைகளைப் பற்றி முறையிட, கட்சிக்குள்ளேயே முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்புகள் தலைமைக் கழகத்தில் இருக்கின்ற நிலையில்; தங்கள் எண்ணங்களை வெளியிடவும், கட்சியின் கட்டுப்பாட்டைக் குலைக்காமல் காப்பாற்றவும், பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும் முறைப்படியுள்ள கழக அமைப்புகளைக் கலந்து பேசாமலும், அந்த அமைப்புகளை மதிக்காமலும், வேண்டுமென்றே திட்டமிட்டு, கழக அணியோடு கூட்டணி சேர நினைக்கின்ற கட்சிகளின் தலைமையைப் பற்றி அவதூறு கூறி கூட்டணி ஏற்படுவதைக் குலைக்க முயற்சித்தும் - திராவிட இயக்கம் தொடக்க முதல் இதுவரையில் விரும்பாததும், வெறுத்து ஒதுக்குவதுமான சாதிச் சச்சரவுகள்; இயக்கத்திற்குள் ஏற்பட்டிருப்பது போன்ற ஒரு பொய்த் தோற்றத்தை உருவாக்கி; தங்கள் ஆத்திரத்தைத் தீர்த்துக் கொள்ள வேண்டுமென்றே திட்டமிட்டு ஒரு சிலர் குறிப்பாக மதுரை மாவட்டத்தில் தி.மு. கழகத் தோழர்கள் சிலர் மீது பி.சி.ஆர் எனும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தி, நடவடிக்கை எடுக்க, துணை போகிற துரோகச் செயலில் ஈடுபட்ட சிலர் மீதெல்லாம் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

இவ்வாறு துரோகச் செயலில் ஈடுபட்டவர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கையை கடுமையாக விமர்சித்தும், முறையற்ற விவாதங்களில் நேரிடையாகவே ஈடுபட்டும், கழகச் செயல் வீரர்களை தொடர்ந்து பணியாற்ற வேண்டாமென்று கூறியும், குழப்பம் விளைவிக்க முயன்ற தென் மண்டலக் கழக அமைப்புச் செயலாளர் மு.க. அழகிரி இனியும் தொடர்ந்து கழகத்தில் நீடிப்பது முறையல்ல என்ற காரணத்தாலும் - அது கழகத்தின் கட்டுப்பாட்டை மேலும் குலைத்து விடும் என்பதாலும் - அவர், தி.மு. கழக உறுப்பினர் பொறுப்பு உட்பட கழகத்தின் அனைத்துப் பொறுப்புக்களிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்.

 

கழகத்தின் நன்மைக்காக தெரிவித்துள்ள முடிவான இந்தக் கருத்தினை, கழக உடன்பிறப்புகள் அனைவரும் ஏற்று, ஒற்றுமையோடும், கட்டுப்பாட்டோடும் கழகம் நடப்பதற்கு உடன்பிறப்புகள் அனைவரும் துணை நிற்க வேண்டுமென்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=115283

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்டான்லினை தலைமைப்பதவிக்கு கொண்டு வர வேண்டும் என்றால் கருணாநிதி எடுத்த முடிவு சரி ஆனால் இது எல்லாம் எத்தினை நாளைக்கு? ஜெயலலிதாவும் சசிகலாவை நீக்குவதும் சேர்ப்பதும் என்று தொடர்ந்தார் ஆக தமிழக அரசியலைப்பொருத்தவரை இது ஒன்றும் ஆச்சரியமான செய்தியோ அதிசயமான செய்தியோ இல்லை

அழகிரியை அதிமுகவில் சேர்ந்தால்....நல்லதா?

அதிமுக தென் தமிழ்நாட்டில் ஓரளவு நன்றாகவே இருக்கிறது...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருணாநிதி.. துரோகம் என்றாரு.. கட்சி.. கட்டுப்பாடு என்றாரு... ஒழுங்கு நடவடிக்கை என்றாரு....இதையே ஈழத்தில் மேற்கொண்டால் மட்டும்.. சகோதர யுத்தம். கருணாவை ஒழுக்காற்றின் மீது... நீக்கிய போது கருணாநிதி விட்ட அறிக்கை இப்போதும் ஞாபகம் இருக்கிறது. ஈழத்தில் சகோதர யுத்தம் கவலை அளிக்கிறது என்று. இது என்ன யுத்தமுங்கோ. காய்ச்சலும் தலையிடியும் தனக்குத் தனக்கு வந்தால் தான் புரியும். :lol::D

  • கருத்துக்கள உறவுகள்

அழகிரிக்கு அருமையான சந்தர்ப்பம் புதுக்கட்சி ஆரம்பிக்க , க. தி. மு. க  என்று பேர்வைக்கலாம். இப்ப கடுப்பு /கொஞ்ச காலத்துக்குப் பின்  கருணா...! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்து ஸ்டாலின் தலைவராக அறிவிக்கப்படலாம்.. பிறகு அவர் அண்ணனுக்கு பொது மன்னிப்பு வழங்கி ஏறறுக்கொண்டால் போச்சு.. :D

  • கருத்துக்கள உறவுகள்

கருணாவை ஒழுக்காற்றின் மீது... நீக்கிய போது கருணாநிதி சூழ்நிலைக் கைதியாக இருந்தார். இப்போது அழகிரியை ஒழுக்காற்றின் மீது... நீக்கிய போது கருணாநிதி சூழ்நிலைக் காவலாளியாக இருக்கின்றார். எது எப்படி இருப்பினும், தி.மு.க. வளரத் தோள்கொடுத்த கருனாநிதி சரியும்போது தி.மு.க. வும் சரிந்து சிதறிவிடும். கருனாவிற்கு ரணில் ஆதரவு அளித்ததுபோல், அழகிரிக்கு செயலலிதாவும் ஆதரவு அளிக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல  செய்தி

முக்கியமாக  வை.கோ.  அண்ணாவுக்கு...

  • கருத்துக்கள உறவுகள்

கருணாநிதி.. துரோகம் என்றாரு.. கட்சி.. கட்டுப்பாடு என்றாரு... ஒழுங்கு நடவடிக்கை என்றாரு....இதையே ஈழத்தில் மேற்கொண்டால் மட்டும்.. சகோதர யுத்தம். கருணாவை ஒழுக்காற்றின் மீது... நீக்கிய போது கருணாநிதி விட்ட அறிக்கை இப்போதும் ஞாபகம் இருக்கிறது. ஈழத்தில் சகோதர யுத்தம் கவலை அளிக்கிறது என்று. இது என்ன யுத்தமுங்கோ. காய்ச்சலும் தலையிடியும் தனக்குத் தனக்கு வந்தால் தான் புரியும். :lol::D

அரசியலில் செய்தால் சாமர்த்தியம்

ஆயுத போராட்டத்தில் செய்தால் அறிவீனம்- இதுதான் கருணாநிதியின் கொள்கை. ஆனால் எது மிகவும் ஆபத்தானது என்று இவருக்கு தெரியாததா. MGR , Vaiko நல்ல உதாரணம்.

482500_713484425350899_974793082_n.jpg

 ஸ்டாலினை விட வயதில் மூத்தவர் அழகிரி. பாவம் சகோதர சண்டையால் சின்னம்மா பெரியம்மா பிளவால் பல தாரம் கட்டி பல பிள்ளைகளை பெற்று கலாசாரம் நீரிய பண்பாடு தவறிய கருணாநிதியால் ஏமாற்றப் பட்டு இருக்குறார் அழகிரி. இதுவே ஒரு தாய் பெற்ற பிள்ளைகள் என்றால் இவ்வளவு பிளவு வருமே? தந்தை மட்டும் தானே ஒன்று தாய் வேறு தானே அதுதான் இந்த பிரிவினை. ஆனாலும் முத்துவேல் கருணாநிதியின் இரு தாரத்து பிள்ளைகளும் தமக்குள்ள சண்டை இட்டு சகோதர யுத்தம் புரியக் கூடாது என்பது தமிழர்களின் ஆசை. தயவு செய்து இந்த சகோதர சண்டையை சின்ன வீடு பெரிய வீட்டு பிள்ளைகளின் சண்டைய நிறுத்துங்கள் . இனிமேல் ஆவது ஒருவன் ஒருத்திய மட்டுமே மணம் முடிக்கலாம். ஒரு மனைவியிடம் மட்டும் பிள்ளை பெற்றுக் கொள்ளலாம் என்று சட்டம் கொண்டு வாருங்கள்

 

(அழகிரியின் ஏக்கம் )

அப்ப நான் பிள்ளை இல்லையா? ஸ்டாளின் மட்டும் தான அவற்றை பிள்ளையா? எங்க அம்மா வருக்கு பெண்டாட்டி இல்லையா? ஸ்டாளின் அம்மா மட்டும் தான் அவருக்கு பொண்டாட்டியா? ஏன் ஏன் ஏன் இப்பிடி' எனக்கு மட்டும்? கடைசில பெரியம்மா மகன் முத்துவிற்கு நடந்த மாதிரியே சொத்திலும் பங்கு இல்லை என்று அப்பா சொல்வாரா? புரியல என்ல்லா முடியல பழைய மாதிரி நான் ரவுடியாகனுமா? அப்ப தான் கடிசிக்கு ஸ்டாலினுக்கு வீரமணிக்கு குறிப்பா எங்க அப்பாவிற்கு பயம் வரும் . அது இப்ப என்னால் முடியுமா?`ஜெயலலிதா விடுவாரா எனது சண்டித் தனம் காட்ட?

  • கருத்துக்கள உறவுகள்

முன்பு மு க முத்து, இப்ப அழகிரி. இனி.....

இது சகோதர சண்டை அல்ல , சகோதர பிடுங்கல்

அழகிரியின் தாயும் ஸ்டாலினின் தாயும் ஒன்று தான்...தயாளு அம்மாள் (என்று தான் நினைக்கிறன் 85%)

  • கருத்துக்கள உறவுகள்

இனிமேல் ஆவது ஒருவன் ஒருத்திய மட்டுமே மணம் முடிக்கலாம். ஒரு மனைவியிடம் மட்டும் பிள்ளை பெற்றுக் கொள்ளலாம் என்று சட்டம் கொண்டு வாருங்கள்

 

அன்புள்ள யாழ்அன்பு! 'ஒருவன் ஒருத்திய மட்டுமே மணம் முடிக்கலாம். ஒரு மனைவியிடம் மட்டும் பிள்ளை பெற்றுக் கொள்ளலாம்' என்று சட்டம் வந்துவிட்டால்..! முத்துவேல் கருனாநிதி அதனையும் பரீட்சித்துப் பார்க்க முன்வந்தால்....! நிலமை என்னாகும் என்று கொஞ்சமாவது யோசித்துப் பார்த்தீர்களா.??? :blink::o

12116_586745824749424_1959788896_n.jpg

தி.மு.க பேர, கு(ஷ்பு).மு.க ன்னு மாத்திடலாமா

 

ஒரு லட்சம் பேருடன் அம்மா.திமுக வில் இணைகிறார் !

அழகிரி !

பாரத பிரதமர் - அம்மா !

தமிழக முதல்வர் - அழகிரி !

போஸ்டர் செம!

‪#‎இந்த‬ இரண்டு ல எதாவது ஒன்னு நடந்தாலும் நாடு நாசமா போயிடும்..

  • கருத்துக்கள உறவுகள்

அன்புள்ள யாழ்அன்பு! 'ஒருவன் ஒருத்திய மட்டுமே மணம் முடிக்கலாம். ஒரு மனைவியிடம் மட்டும் பிள்ளை பெற்றுக் கொள்ளலாம்' என்று சட்டம் வந்துவிட்டால்..! முத்துவேல் கருனாநிதி அதனையும் பரீட்சித்துப் பார்க்க முன்வந்தால்....! நிலமை என்னாகும் என்று கொஞ்சமாவது யோசித்துப் பார்த்தீர்களா.??? :blink::o

 

 

சட்டத்தை  ஆண்கள் மட்டும் இயற்றியதன் பலாபலன்களை  இன்று நாம் அனுபவிக்கின்றோம்

அதன்படி

தம்பி  யாழ் அன்புவின் ஆசைகளை   :icon_mrgreen: நீங்கள் இவ்வாறு நிராசையாக்குவது சரியில்லை

சொல்லிப்போட்டன்

ஆமா... :lol:  :D

1653326_350493241758280_37552397_n.jpg

தென்மண்டல அமைப்பு செயலாளர் பதவி, அழகிரிக்காக உருவாக்கப்பட்டது.
அது வேறு யாருக்கும் கொடுக்கப்பட மாட்டாது.
- கருணாநிதி.

# 1. திமுக தலைவர் பதவி ஸ்டாலினுக்காக ஒதுக்கப்பட்டது.எனக்குப் பிறகு அது வேறு யாருக்கும் கொடுக்கப்படமாட்டாது.

# 2. திமுக செயலாளர் பதவி அன்பழகனுக்குப் பிறகு கனிமொழிக்காக ஒதுக்கப்பட்டது.அது வேறு யாருக்கும் கொடுக்கப்படமாட்டாது.

# 3. திமுக பொருளாளர் பதவி ஸ்டாலினுக்குப் பிறகு ஆ ராசாவுக்காக ஒதுக்கப்பட்டது.அது வேறு யாருக்கும் கொடுக்கப்படமாட்டாது.

# 4. திமுக ( ஒருவேளை தப்பித்தவறி) ஜெயித்தால் முதலமைச்சர் பதவி எனக்குப் பிறகு ஸ்டாலினுக்காக ஒதுக்கப்பட்டது.அது வேறு யாருக்கும் கொடுக்கப்படமாட்டாது.

# 5. கலைஞர் டிவி பேரன்களுக்காக ஒதுக்கப்பட்டது.வேறு யாருக்கும் கொடுக்கப்படமாட்டாது.

# 6. அறிவாலயம் என் குடும்பத்திற்காகவே உருவாக்கப்பட்டது. வேறு யாருக்கும் கொடுக்கப்படமாட்டாது.

# 7. திமுகவுக்காக மாடாய் உழைக்கும் வேலை உடன்பருப்புக்களுக்கு மட்டுமே ஒதுக்கப்பட்டது.வேறு யாருக்கும் அது கொடுக்கப்படமாட்டாது.

# 8. திமுகவைப் போல ஜனநாயகக் கட்சியை இந்தியாவில் மட்டுமல்ல அமெரிக்காவில் கூட காண முடியாது. அதையும் யாருக்கும் கொடுக்கப்படமாட்டாது.



- யாரோ

67832_730272916997083_71541282_n.jpg

https://www.facebook.com/photo.php?fbid=350493241758280&set=a.100311166776490.194.100297810111159&type=1&theater

  • கருத்துக்கள உறவுகள்

கருனாநிதிக்கு இந்த மூன்றும்தானா?  இளமையை நீடிக்க ஒரு சிறுமியை இணைத்ததாக ஒரு செய்தியை முன்பு படித்ததாக ஞாபகம்!!. :icon_mrgreen:

 

கனிமொழியின் மகன் ஆதித்தியன் எங்கே யாழ்அன்பரே..??  :blink:

தென்னாடுடைய சிவனே போற்றி
கருணாநிதியின் மவனே போற்றி
அய்யாவை அடித்த அண்ணனே போற்றி
கழகத்தை கலைத்த கண்ணனே போற்றி
தா.கியை போட்ட தங்கமே போற்றி...
தமிழினத்தின் அங்கமே போற்றி
காந்தியை மணந்த கதிரவா போற்றி
துரையை பெற்ற துயரவா போற்றி
திருமங்கலம் தந்த திங்களே போற்றி
திருக்குவளை பெற்ற சிங்கமே போற்றி
தினகரனை எரித்த தூயவா போற்றி
மக்கள் மனதின் மாயவா போற்றி
மதுரையின் அஞ்சாநெஞ்சனே போற்றி
ஸ்டாலினை வென்ற வேந்தனே போற்றி
ஹார்லிக்ஸ் திருடிய வேலவா போற்றி
தயாளு பெற்ற பாலகா போற்றி
மத்திய அரசின் உரமே போற்றி
வெட்டியும் சாயாத மரமே போற்றி
உன் பிறந்தநாளில், உன் திசை பார்த்து வாழ்த்தி வணங்குகிறேன்....

 

பேஸ்புக் .

கருணாநிதி தான் சாகுமுதல் தனது பிள்ளைகளில் ஒன்றை திமுகவின் தலைவராக்க குடும்பத்தை வைத்து நாடகம் போடுது ...

தனிய ஒருத்தனை மட்டும் அறிவித்தால் கட்சியிலிருந்து வேறு யாரும் கிளம்பினால் என்று...இரண்டு பிள்ளைகளையும் அடிபடுவது போல் நாடகமாட சொல்லியிருக்கலாம்...மற்றவர்கள் ஒதுங்கியிருந்து பார்ப்பார்கள் என்று...

இந்த இரண்டு தருதளைகலுமே மாறி மாறி தலைவராக வரபோகுதுகள் இல்லை என்றால் வட-திமுக, தென்-திமுக என்று ஆளுக்கு பாதியாக பிரிக்க போகிறார்கள்...மற்றவர்கள் புறங்கையை னக்க வேண்டியது தான்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.