Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மனைவியை கட்டாயப்படுத்தி உறவு கொண்டால் அது பலாத்காரம் ஆகாது : - டெல்லி நீதிமன்றம் பரபரப்பான தீர்ப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
மனைவியை கட்டாயப்படுத்தி உறவு கொண்டால் அது பலாத்காரம் ஆகாது : - டெல்லி நீதிமன்றம் பரபரப்பான தீர்ப்பு! 
[Tuesday, 2014-05-13 15:01:13]
 
திருமணம் ஆன பிறகு மனைவியை கட்டாயப்படுத்தி உறவு கொண்டால் அது பலாத்காரம் ஆகாது என டெல்லி கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. டெல்லியை அடுத்த காஜியாபாத் பகுதியை சேர்ந்தவர் மீரா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் கடந்த ஆண்டு டெல்லியில் உள்ள கோச்சிங் சென்டர் ஒன்றில் பணியாற்றினார். அப்போது அங்கு பணி செய்த இளைஞர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்நிலையில் அந்த இளைஞர் மீது காஜியாபாத் காவல் நிலையத்தில் மீரா பலாத்கார புகார் கூறினார்.
 
தனக்கு மயக்க மருந்து கொடுத்து மனம் தெளிவில்லாத நிலையில் கடந்த 2013ம் ஆண்டு மார்ச் மாதம் 4ம் தேதி பதிவாளர் அலுவலகத்துக்கு அழைத்து சென்று தன்னை பதிவு திருமணம் செய்து கொண்டதாகவும், அதன் பின்னர் தனது விருப்பம் இல்லாமல் கட்டாயப்படுத்தி உறவு கொண்டதாகவும் புகார் தெரிவித்தார். இயற்கைக்கு மாறான உறவையும் வைத்துக் கொண்டதாக போலீசில் தெரிவித்தார். இதற்கு அந்த இளைஞரின் தந்தையும் உடந்தை என மீரா கூறினார். மீராவின் புகாரை தொடர்ந்து அந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். அவர் மீது பலாத்காரம், ஆள் கடத்தல், இயற்கைக்கு மாறான உறவு ஆகிய பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டது. காஜியாபாத் செஷன்ஸ் கோர்ட் நீதிபதி வீரேந்தர் பட் முன்பு இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது.
 
வழக்கை விசாரித்த நீதிபதி, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மயக்க மருந்து கொடுத்ததற்கான ஆதாரம் எதுவும் போலீசாரால் சமர்ப்பிக்கப்படவில்லை. பெண்ணின் வாக்குமூலம் முன்னுக்குபின் முரணாக உள்ளது. பதிவு திருமண சான்றிதழில் பெண்ணின் கையெழுத்து உள்ளது. திருமணம் ஆன பிறகு அவரது சம்மதம் இல்லாமல் கணவர் உறவு கொண்டிருந்தாலும் அது பலாத்காரம் ஆகாது. இந்த வழக்கிலிருந்து இளைஞரை விடுவிக்கிறோம். இவ்வாறு நீதிபதி தீர்ப்பு அளித்தார்.
 
பொதுவாக மனைவி என்றாலும் அவரது சம்மதம் இல்லாமல் உறவு கொள்வது பலாத்காரம் என்றே பல்வேறு கோர்ட்கள் தீர்ப்பளித்து வருகின்றன. இந்நிலையில் அதற்கு நேர் மாறாக டெல்லி கோர்ட் தீர்ப்பளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.http://seithy.com/breifNews.php?newsID=109259&category=IndianNews&language=tamil

படுபிற்போக்கான தீர்ப்பு... ஆனாலும் இந்தியா என்பதால் இது ஆச்சரியம் அளிக்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

 

மனைவியை கட்டாயப்படுத்தி உறவு கொண்டால் அது பலாத்காரம் ஆகாது : - டெல்லி நீதிமன்றம் பரபரப்பான தீர்ப்பு! 
[Tuesday, 2014-05-13 15:01:13]
 
திருமணம் ஆன பிறகு மனைவியை கட்டாயப்படுத்தி உறவு கொண்டால் அது பலாத்காரம் ஆகாது என டெல்லி கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. டெல்லியை அடுத்த காஜியாபாத் பகுதியை சேர்ந்தவர் மீரா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் கடந்த ஆண்டு டெல்லியில் உள்ள கோச்சிங் சென்டர் ஒன்றில் பணியாற்றினார். அப்போது அங்கு பணி செய்த இளைஞர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்நிலையில் அந்த இளைஞர் மீது காஜியாபாத் காவல் நிலையத்தில் மீரா பலாத்கார புகார் கூறினார்.
 
தனக்கு மயக்க மருந்து கொடுத்து மனம் தெளிவில்லாத நிலையில் கடந்த 2013ம் ஆண்டு மார்ச் மாதம் 4ம் தேதி பதிவாளர் அலுவலகத்துக்கு அழைத்து சென்று தன்னை பதிவு திருமணம் செய்து கொண்டதாகவும், அதன் பின்னர் தனது விருப்பம் இல்லாமல் கட்டாயப்படுத்தி உறவு கொண்டதாகவும் புகார் தெரிவித்தார். இயற்கைக்கு மாறான உறவையும் வைத்துக் கொண்டதாக போலீசில் தெரிவித்தார். இதற்கு அந்த இளைஞரின் தந்தையும் உடந்தை என மீரா கூறினார். மீராவின் புகாரை தொடர்ந்து அந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். அவர் மீது பலாத்காரம், ஆள் கடத்தல், இயற்கைக்கு மாறான உறவு ஆகிய பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டது. காஜியாபாத் செஷன்ஸ் கோர்ட் நீதிபதி வீரேந்தர் பட் முன்பு இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது.
 
வழக்கை விசாரித்த நீதிபதி, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மயக்க மருந்து கொடுத்ததற்கான ஆதாரம் எதுவும் போலீசாரால் சமர்ப்பிக்கப்படவில்லை. பெண்ணின் வாக்குமூலம் முன்னுக்குபின் முரணாக உள்ளது. பதிவு திருமண சான்றிதழில் பெண்ணின் கையெழுத்து உள்ளது. திருமணம் ஆன பிறகு அவரது சம்மதம் இல்லாமல் கணவர் உறவு கொண்டிருந்தாலும் அது பலாத்காரம் ஆகாது. இந்த வழக்கிலிருந்து இளைஞரை விடுவிக்கிறோம். இவ்வாறு நீதிபதி தீர்ப்பு அளித்தார்.
 
பொதுவாக மனைவி என்றாலும் அவரது சம்மதம் இல்லாமல் உறவு கொள்வது பலாத்காரம் என்றே பல்வேறு கோர்ட்கள் தீர்ப்பளித்து வருகின்றன. இந்நிலையில் அதற்கு நேர் மாறாக டெல்லி கோர்ட் தீர்ப்பளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.http://seithy.com/breifNews.php?newsID=109259&category=IndianNews&language=tamil

 

தீர்ப்பு சரியா ? தவறா ?
என்று ஒரு முடிவை எடுப்போம் என்றால். இந்த இயற்கைக்கு மாறான .... என்ற சொல்லு புரிய மாட்டேங்குது.
பெடி  பயல்  என்ன பண்ணியிருப்பான்?? 
 
இன்டர்நெட் பார்த்து ரொம்ப கேட்டு போயிருக்கான்.
  • கருத்துக்கள உறவுகள்

படுபிற்போக்கான தீர்ப்பு... ஆனாலும் இந்தியா என்பதால் இது ஆச்சரியம் அளிக்கவில்லை.

 

விருப்பமில்லாது விட்டால்  எதையும் செய்யக்கூடாது

விருப்பமில்லாது விட்டால் ஒரு முடிவுக்கு இருவரும் வந்திருக்கணும்

 

ஆனால் கல்யாணம் கட்டிவிட்டு

தள்ளிப்படு என்று பல ஆண்டு சொல்வது அதைவிடக்கொடியது..... :(  :(  :(

  • கருத்துக்கள உறவுகள்

 

ஆனால் கல்யாணம் கட்டிவிட்டு

தள்ளிப்படு என்று பல ஆண்டு சொல்வது அதைவிடக்கொடியது..... :(  :(  :(

 

அது அவரவர் செய்கிற வேலைகளைப் பொறுத்தது..  :icon_mrgreen:  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

அது அவரவர் செய்கிற வேலைகளைப் பொறுத்தது..  :icon_mrgreen:  :lol:

 

தலைப்பை  படித்தீர்களா  ராசா..?

ஆள் எழும்பி தாண்டவமாடி  இருக்கிறார்.... :icon_mrgreen:

ஆனால் 64.....??

நாம் அறியோம் பராபரனே.... :icon_mrgreen:

 

(இனிமேல் நீல  எழுத்துக்களை  நிறுத்தலாம் என்றிருக்கின்றேன்.  அண்மையில் யாழில் எழுதும் ஒருவரை  சந்தித்தபோது  நீங்கள் என்ன  பெயரில் எழுதுகின்றீர்கள் எனக்கேட்டார்.  நான் விசுகு என்றதும் ஒரு நொடி கூட யோசிக்கவில்லை  அந்த வப்பு நீங்கள் தானா  என்றார்... :icon_mrgreen: )

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவர் ஏதோ ஒரு அரசியல்வாதியின் உறவினராக இருப்பார்
இல்லை,  பணம் கோடியில் பாஞ்சிருக்குது.

  • கருத்துக்கள உறவுகள்

மிருகங்கள் கூட, ஒன்றையொன்று, இந்த விசயத்தில் வற்புறுத்துவதில்லை! :o

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்கு எல்லாம் கோட்டுக்கு போய்   :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

உயிரினங்கள் மீது இயற்கை உயிரியலுக்கு அப்பால்.. எதனையும் திணித்தலும்.. அதனை சில மனிதர்கள்.. அரைகுறை சட்ட அறிவால் வியாக்கியானப்படுத்துவதும் கண்டிக்கத்தக்க செயல் ஆகும்.

 

இது வெறுமனவே ஆண் - பெண் திருமண உறவு அல்ல. இரண்டு தனித்தனி உயிரினங்களின் அடிப்படை உரிமை சார்ந்ததும் கூட. அந்த வகையில் சட்டம் இதனை நுணுக்கமாக ஆராய்ந்து தீர்ப்பளிக்க வேண்டுமே தவிர மேம்போக்காக தீர்ப்பளிக்கக் கூடாது. :icon_idea:

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.