Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொலிவியா, ஜனாதிபதி மஹிந்தவிற்கு சமாதானத்திற்கான விசேட விருது வழங்கவுள்ளது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பொலிவியா, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு சமாதானத்திற்கான விசேட விருது ஒன்றை வழங்க உள்ளது. சமாதானம் மற்றும் ஜனநாயகத்திற்கான விசேட விருது ஒன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு வழங்கப்படவுள்ளது. பொலிவியாவின் இல் முன்டோ என்னும் பத்திரிகை இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.
ஜீ77 மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தற்போது பொலியாவிற்கு விஜயம் செய்துள்ளார்.

ஜனநாயகத்திற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டவர்களுக்காக இந்த விருது வழங்கப்பட உள்ளது. ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் பான் கீ மூன் உள்ளிட்ட பல தலைவர்கள் ஜீ77 மாநாட்டில் பங்கேற்க உள்ளனர். பொலியாவிற்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி பல நாட்டுத் தலைவர்களுடன் இரு தரப்பு உறவுகள் பற்றி பேசப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/108092/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

டீ பாட்டி தேயிலை முழுக்க அய்யாவின் உபயமாம்....காசு வேண்டாமெண்டிட்டார் அதுதான்....

  • கருத்துக்கள உறவுகள்

பொலிவியா

தன்னை  இவ்வாறு தாழ்த்திக்கொள்ளும் நிலைக்கு வரக்காரணம் என்ன? :(

வரலாற்றுத்தவறுகள்

என்றும் மன்னிக்கப்படமாட்டா... :(

  • கருத்துக்கள உறவுகள்

பொலிவியா

தன்னை  இவ்வாறு தாழ்த்திக்கொள்ளும் நிலைக்கு வரக்காரணம் என்ன? :(

வரலாற்றுத்தவறுகள்

என்றும் மன்னிக்கப்படமாட்டா... :(

 

சேகுவாராவை அமெரிக்காவுடன் சேர்ந்து படுகொலை செய்தவர்கள் ....கிட்டத்தட்ட இந்தியாவும் சிறிலங்காவும் சேர்ந்து விடுதலை புலிகளை அழித்தது போன்று.....40 வருடத்திற்கு முதலே "நாங்கள் பரம்பரை நண்பேன்டா" கொள்கையுடையவர்கள் .விடுதலை போராட்டங்கள்,புரட்சிகர அமைப்புகளுக்கு எதிரான கூட்டாளிகள்...

விருதுகள் வழங்கலாம் பெறலாம். அதைச் சுமக்கத்தான் முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலை போராட்டங்கள்,புரட்சிகர அமைப்புகளுக்கு எதிரான கூட்டாளிகள்...

விடுதலை போராட்டங்கள், புரட்சிகர அமைப்புகளுக்கு ஆதரவான நாடுகளை கொஞ்சம் சொல்லுங்களேன் - அப்படி ஏதாவது இருந்தால்.

  • கருத்துக்கள உறவுகள்
ஜீ 77 மாநாட்டில் நாளை உரையாற்றுகிறார் ஜனாதிபதி மஹிந்த! - நேற்றுமாலையே பொலிவியா சென்றடைந்தார் 
[saturday, 2014-06-14 08:59:48]
 
ஜீ 77 குழுவின் அரச தலைவர்கள் மாநாடு பொலிவியாவின் சாந்தா குரூஸ் நகரில் இன்று ஆரம்பமாவதுடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மாநாட்டில் நாளை விசேட உரை நிகழ்த்தவுள்ளார். ஜீ 77 மாநாடு இன்றும் நாளையும் நடைபெறவுள்ளதுடன் மேற்படி அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகள் மற்றும் சர்வதேச உயர் மட்ட பிரதிநிதிகளுடன் ஐ. நா. பொதுச் செயலாளர் பான் கீ மூனும், பொதுச் சபைத் தலைவர் ஜோன் ஆஷ் ஆகியோரும் மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளனர்.
 
இம்முறை ஜீ 77 மாநாடு நல்வாழ்க்கைக்கான புதிய உலக முறை எனும் தொனிப் பொருளில் நடைபெற வுள்ளது. மேற்படி. மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையிலான உயர்மட்டக் குழுவினர் நேற்று முன்தினம் 12 ஆம் திகதி பொலிவியாவிற்குப் புறப்பட்டுச் சென்றதுடன் மேற்படி தூதுக் குழு நேற்று மாலை பொலிவியா சென்றடைந்தது. இம்மாநாட்டில் கலந்து கொள்ளும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மாநாட்டில் கலந்துகொள்ளும் சர்வதேச நாடுகளின் தலைவர்கள் பலருடனும் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார்.
 
ஜனாதிபதியுடன் அமைச்சர் ஜீ. எல். பீரிஸ், ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் இந்த விஜயத்தில் இணைந்து கொண்டுள்ளனர்.
mahinda-bolivia-140614-seithy(1).jpg
 
mahinda-bolivia-140614-seithy(2).jpg
 
mahinda-bolivia-140614-seithy(3).jpg
  • கருத்துக்கள உறவுகள்

விடுதலை போராட்டங்கள், புரட்சிகர அமைப்புகளுக்கு ஆதரவான நாடுகளை கொஞ்சம் சொல்லுங்களேன் - அப்படி ஏதாவது இருந்தால்.

 

அப்படி ஒரு நாடும் இல்லை ...போராடி சுதந்திரம் பெற்ற நாடுகள்கூட எனைய போராடும் சக்திகளுடன் உறவு கொள்வதில்லை.....

  • கருத்துக்கள உறவுகள்

அப்படி ஒரு நாடும் இல்லை ...போராடி சுதந்திரம் பெற்ற நாடுகள்கூட எனைய போராடும் சக்திகளுடன் உறவு கொள்வதில்லை.....

 

அவ்வளவு தூரம் போகத்தேவையில்லை

ஒரு நாட்டில் எதிர்க்கட்சியாக

வளரும் கட்சியாக இருக்கும் போது

அக்கட்சி சுதந்திரப்போராட்டங்களை ஆதரித்தாலும்

ஆட்சிக்கு வந்துவிட்டால்.............??? :(  :(  :(

  • கருத்துக்கள உறவுகள்

அப்படி ஒரு நாடும் இல்லை ...போராடி சுதந்திரம் பெற்ற நாடுகள்கூட எனைய போராடும் சக்திகளுடன் உறவு கொள்வதில்லை.....

 

 

அவ்வளவு தூரம் போகத்தேவையில்லை

ஒரு நாட்டில் எதிர்க்கட்சியாக

வளரும் கட்சியாக இருக்கும் போது

அக்கட்சி சுதந்திரப்போராட்டங்களை ஆதரித்தாலும்

ஆட்சிக்கு வந்துவிட்டால்.............??? :(  :(  :(

இது தான் உலக நிலை. ஆகவே இருக்கும் சக்தி மிக்க நாடுகளுடன் நீண்டகால அடிப்படையில் அவர்களுக்கு கொடுக்க வேண்டியதை கொடுத்து நமது தேவைகளுக்கு அவர்கள் தரக்கூடியதை அறிந்து, அதை கேட்டு பெற்றுக்கொள்வதே சாணக்கியம்.

  • கருத்துக்கள உறவுகள்

 

 

இது தான் உலக நிலை. ஆகவே இருக்கும் சக்தி மிக்க நாடுகளுடன் நீண்டகால அடிப்படையில் அவர்களுக்கு கொடுக்க வேண்டியதை கொடுத்து நமது தேவைகளுக்கு அவர்கள் தரக்கூடியதை அறிந்து, அதை கேட்டு பெற்றுக்கொள்வதே சாணக்கியம்.

 

அந்த சாணக்கியம்தான் இதுவரை நடந்து கொண்டிருக்கு......என நான் நம்புகிறேன்.....

சூரிய சந்திர சக்கரைவத்தியின் ரை சூப்பர்.

  • கருத்துக்கள உறவுகள்

 

 

இது தான் உலக நிலை. ஆகவே இருக்கும் சக்தி மிக்க நாடுகளுடன் நீண்டகால அடிப்படையில் அவர்களுக்கு கொடுக்க வேண்டியதை கொடுத்து நமது தேவைகளுக்கு அவர்கள் தரக்கூடியதை அறிந்து, அதை கேட்டு பெற்றுக்கொள்வதே சாணக்கியம்.

மிகவும் சோம்பேறித்தனமான அடிமுட்டாள்தனமான கருத்து.
இதில் சாணக்கியம் என்ன  இருக்கிறது ?
மூன்று நேரம் சாப்பாடு போடுகிறார்கள் என்பதானால் புத்திசாலிதனமாக 
சிறையில் போய்  இருங்கள் என்று சொல்வதை விட கீழான கருத்து. 
மற்றைய நாடுகளுக்கு உங்கள் நாட்டில் இருக்கும் வளங்கள்தான் தேவையானவை அவற்றை கொடுத்து விட்டு அவர்கள் தருவதை ?
கள்ளனிடம் களவெடுத்த பொருளை 65வீதம் தள்ளுபடியில் சாணக்கியமாக வேண்டுங்கள் என்று பட்ட பகலிலேயே எழுதுகிறீர்களே?
 
உலக நிலை உங்களுக்கு புரியாவிட்டால் அதன் பொருள் உலகில் வெளிச்சம் இல்லை என்பது ஆகாது.
உலக பயங்கரவாதியாக யாசீர் அரபாத் இருந்த போது. இவர் ஒரு விடுதலை போராளி என்று ஐ நா சபை கூட்டி சென்றவர் இந்திரா காந்தி. பாலஸ்தீனத்தின் விடுதலையை அப்போதைய இந்தியா ஏகமனதாக ஆதரித்து வந்தது.
 
லிபியா எகிப்தில் என்ன நடந்தது ?
இன்று சிரியா இஸ்லாம் போராளிகளுக்கு ஆதரவாக இஸ்ரேல் கூட விமான குண்டு தாக்குதல்களை செய்தது. இஸ்லாம் போராளிகளின் கொள்கைகளில் இஸ்ரேலை அழிப்பது என்பது ஒன்று.
 
தமக்கு விடுதலை வேண்டும் நாம் யாரோடு இருப்பது என்பதை நாம் தான் முடிவெடுக்க முடியும் என்று உக்ரைனின்  ஒரு பகுதியினர் க்ரிமீயாவில் எழுந்தபோது. எகிப்து லிபியாவில்  போராளிகள் எழுந்துவிட்டார்கள்  என்று தாமும் எழுந்து ஆரவாரம் செய்து ஆயுதம் கொடுத்த அதே நாடுகள். கூனி குறுகி  நிற்கிறார்கள்   அவர்கள் போராளிகள் இல்லையாம் ரசிய ஆதரவாளர்களாம்.
 
இப்போ ஈராக்கின் இரண்டாவது நகரம் போய்விட்டது ...........
எண்ணை கிணறு பகுதிகள் யாரிடம் போய் சேரும் என்ற ஆய்வு நடக்கிறது ........ ஆய்வின் முடிவுதான்  யார் போராளிகள்  யார் பாங்கரவாதிகள் என்பதை முடிவெடுக்கும். இங்கே மூன்றாம் தரப்பாக  ஈரான் களம் இறங்கினால்  மீண்டும் ஈராக் மக்களுக்கு சங்குதான்.
 
பூகோள பிராந்திய அரசியல் மாற்றங்கள் தான் எப்போதும் ஆதரவு எதிரி என்னும் நிலைகளை உருவாக்குகிறது.
சோவியத் உனியனுடன் போராடும்போது போராளியாக இருந்தார் ஒசாமா பின்லாடன் கொலிவூட்டில் அவர்களை வைத்து பல படங்கள் எடுத்து  கொடிகட்டி பறந்தது. இன்று பயங்கரவாதியாக மாறிவிட்டார். ஒசாமாவின்  கொள்கையில் எந்த மாறுதலும் இல்லை .... இஸ்லாம் புனித பூமிக்குள் யாரவாது ஆக்கிரமிப்பு செய்தால்  இஸ்லாம் சகோதர்கள் ஒன்று கூடி அவர்களை விரட்டி அடிப்பது தொன்று தொட்டு அவர்களுடைய கொள்கை  அதுதான். 
 
உலக நாடுகள் எதுவும் ஆதரவு கொடுப்பதில்லை எனும் உங்கள் வாதம். புலிகளை வைத்து நுள்ளு பிராண்டி கிள்ளு பிராண்டி  விளையாடுவது என்பதை தவிர .......... உலகம் சார்ந்தது இல்லை.  
  • கருத்துக்கள உறவுகள்

மூன்று நேரம் சாப்பாடு போடுகிறார்கள் என்பதானால் புத்திசாலிதனமாக 

சிறையில் போய்  இருங்கள் என்று சொல்வதை விட கீழான கருத்து.

மூன்று நேரம் சாப்பாட்டுக்கு உங்களுக்கு வேறு வழியில்லாமல் இருந்து நீங்கள் சிறையில் இருப்பது அவர்கள் தேவை என்றால் இது மிகவும் புத்திசாதுரியமான முடிவு. (கொடுக்க வேண்டியதை கொடுத்து எடுக்க வேண்டியதை எடுப்பது)

மிகவும் வறுமைப்பட்ட வன்முறைகள் நிறைந்த கரிபியன் தீவை சேர்ந்த ஒருவர் அமெரிக்காவுக்கு கள்ளமாக படகில் வந்தார். அமெரிக்காவில் சில ஆண்டுகள் வாழ்ந்த பின் அவர் பிடிபட்டு வழக்கு நடந்தது. பிணையில் அவர் வெளிவந்த நிலையில் அவர் நாடு கடத்தப்பட வேண்டுமா இல்லையா என்ற வழக்கு நீண்டகாலம் நடந்து இறுதியாக தீர்ப்பு வந்ததது. தீர்ப்பின்படி அவர் அமெரிக்காவை விட்டு வெளியேற நாள் குறிக்கபட்டது. அவராக வெளியேறாவிட்டால் நாடு கடத்தபடுவார் என்று தெரிவிக்க பட்டது. இறுதி நாளுக்கு முன்னர், போலிஸ் நிலையத்து அருகில் உள்ள ஒரு பாரிய சந்தையில் நிறைய பொருட்களை எடுத்துக்கொண்டு பணம் கொடுக்காமல் போலிஸ் நிலையத்தை நோக்கி நடந்தார். கடைக்கார அறிவித்து அவர் கைது செய்யப்பட்டார். இப்போது வசதியாக சிறையில் இருந்து இலவச சாப்பாடு, இருப்பிடம், தொலைக்காட்சி என்று வாழ்க்கை போகிறது. அவர் அமெரிக்காவை விட்டு போகாமல் இருக்கவே இப்படி செய்தார் என்று அரச தரப்பு கருத்து தெரிவித்தாலும் சட்டப்படி அவர் தண்டனையை முடித்த பின்னே அவரை நாடு கடத்த முடியும். அதற்குள் அவர் வேறு எதயாவது செய்து இங்கேயே இருப்பார். அமெரிக்க சிறை அவரது நாட்டிலும் பார்க்க அவருக்கு வசதியானது. அகதிகளாக வந்து வசதியான நாடுகளில் தடுப்பு முகாம்களில் நீண்ட காலம் வாழ்வது, தாம் பிறந்த நாட்டில் வாழ்வதிலும் மேலானது என்று நினைப்பவர் பலர் இருக்கிறார்கள். அவர்கள் முட்டாள்கள் அல்ல.

Edited by Jude

  • கருத்துக்கள உறவுகள்

அந்த சாணக்கியம்தான் இதுவரை நடந்து கொண்டிருக்கு......என நான் நம்புகிறேன்.....

நானும் அப்படியே தான் நினைக்கிறேன். சம்பந்தர் இதில் கெட்டிக்காரர் போல தெரிகிறது. விக்னேஸ்வரனை கொண்டுவந்தது மிக சாதுரியமான நகர்வு.

  • கருத்துக்கள உறவுகள்

மூன்று நேரம் சாப்பாட்டுக்கு உங்களுக்கு வேறு வழியில்லாமல் இருந்து நீங்கள் சிறையில் இருப்பது அவர்கள் தேவை என்றால் இது மிகவும் புத்திசாதுரியமான முடிவு. (கொடுக்க வேண்டியதை கொடுத்து எடுக்க வேண்டியதை எடுப்பது)

மிகவும் வறுமைப்பட்ட வன்முறைகள் நிறைந்த கரிபியன் தீவை சேர்ந்த ஒருவர் அமெரிக்காவுக்கு கள்ளமாக படகில் வந்தார். அமெரிக்காவில் சில ஆண்டுகள் வாழ்ந்த பின் அவர் பிடிபட்டு வழக்கு நடந்தது. பிணையில் அவர் வெளிவந்த நிலையில் அவர் நாடு கடத்தப்பட வேண்டுமா இல்லையா என்ற வழக்கு நீண்டகாலம் நடந்து இறுதியாக தீர்ப்பு வந்ததது. தீர்ப்பின்படி அவர் அமெரிக்காவை விட்டு வெளியேற நாள் குறிக்கபட்டது. அவராக வெளியேறாவிட்டால் நாடு கடத்தபடுவார் என்று தெரிவிக்க பட்டது. இறுதி நாளுக்கு முன்னர், போலிஸ் நிலையத்து அருகில் உள்ள ஒரு பாரிய சந்தையில் நிறைய பொருட்களை எடுத்துக்கொண்டு பணம் கொடுக்காமல் போலிஸ் நிலையத்தை நோக்கி நடந்தார். கடைக்கார அறிவித்து அவர் கைது செய்யப்பட்டார். இப்போது வசதியாக சிறையில் இருந்து இலவச சாப்பாடு, இருப்பிடம், தொலைக்காட்சி என்று வாழ்க்கை போகிறது. அவர் அமெரிக்காவை விட்டு போகாமல் இருக்கவே இப்படி செய்தார் என்று அரச தரப்பு கருத்து தெரிவித்தாலும் சட்டப்படி அவர் தண்டனையை முடித்த பின்னே அவரை நாடு கடத்த முடியும். அதற்குள் அவர் வேறு எதயாவது செய்து இங்கேயே இருப்பார். அமெரிக்க சிறை அவரது நாட்டிலும் பார்க்க அவருக்கு வசதியானது. அகதிகளாக வந்து வசதியான நாடுகளில் தடுப்பு முகாம்களில் நீண்ட காலம் வாழ்வது, தாம் பிறந்த நாட்டில் வாழ்வதிலும் மேலானது என்று நினைப்பவர் பலர் இருக்கிறார்கள். அவர்கள் முட்டாள்கள் அல்ல.

 
உயிரோடு இருந்தால் நாளும் வேலை செய்யவேண்டும் என்று தந்திரமாக 
தற்கொலை செய்தவர்களை உதாரணம் காட்டாது விட்டீர்கள் என்று சந்தோசபடுகிறேன்.
 
கரீபியன் தீவில் உள்ளவர்கள் எல்லோரும் இவரை தவிர்த்து பட்டினியால் இறந்துவிட்டார்களா ?
யாரோ ஒரு சோம்பேறி சிறையில் இருப்பதை போல மக்களையும் இருக்க சொல்லும் உங்களுடன் 
இனி பேச என்ன இருக்கிறது?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.