Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

என் அப்பா ..!

Featured Replies

அப்பா ஒரு அழகிய சிற்பி..

என்னை செதுக்கிய போது வலித்தது ..

செதுக்கிய பின் என்னை பார்த்தா ..

எனக்கே ஆச்சரியம் அவ்வளவு அழகு ..

பல முரணுக்கு செந்தக்காரர் அப்பா ..

என் பார்வையில் அப்படியே ஆனால் ..

உள்ளாத்தம் என்னை சீர்படுத்தல் என்று ..

எனக்கு அப்பொழுது தெரிய வாய்ப்பில்லை ..

இளமையும் வேகமும் கேட்கும் நிலையில் ..

எனக்கு இருக்கவில்லை அறிவுரை வதையே ..

பொய்சொல்லி பணம் கேட்கும் போதும் ..

சொல்வது பொய் என தெரிந்தும் கண்டுக்காமல் ..

மேலதிகமா தந்துவிட்டு வேளைக்கு வா என ..

சொல்லிவிடும் அற்புத ஜீவன் அப்பா ..

என்ன செய்கிறாய் என்று இன்றுவரை என்னை ..

கேட்டது இல்லை என்னுள் தான் இருப்பதா ..

பலமுறை அம்மாவிடம் சொல்லி இருந்தார் ..

அவன் என்னைபோல எங்கு போனாலும் ..

தன்னை காத்து கொள்ளும் அறிவு இருக்கடி ..

என என் பின்னாடி பெருமை பேசும் இறை ..

கள்ளுக்கு வைத்த காசை பலமுறை ..

களவாடி போயிருக்கேன் இன்று ..

பல போத்தில் வாங்கி கொடுக்கும் நிலை ..

ஆனால் அப்பாத்தான் இறைநிலை ..

ஒரு முறை பலமா அடித்து விட்டார் ..

எண்ணை போட்டு உருவியபடி சொன்னார் ..

இனி என் கை உன்னை தட்டி கொடுக்க மட்டும் ..

உன்னில் படும் மகனே என்று செயலிலும் செய்தார் ..

சும்மா தட்டினா சொரணை கெடும் என்பார் ..

நீ சுயமா சிந்தி நீதான் ராஜா உனக்கு என்பார் ..

பாசத்தை கோவமா காட்டும் தாயுமானவர் .

என் அப்பா .

 

Edited by அஞ்சரன்

  • கருத்துக்கள உறவுகள்

அப்பா கவிதை அருமை

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கவிதை  எனக்கும் பொருந்தும்

அதையும் கடந்து

உங்கள் அப்பாநிலையில் நான் இன்று...

வாழ்க்கை ஒரு சக்கரம்

தருவதை பெறுவதும்

மீண்டும் விதைப்பதும் தொடர்கிறது

 

நன்றி  கவிக்கும் நினைவுகளுக்கும்..

 

  • தொடங்கியவர்

அப்பா கவிதை அருமை

 

நன்றி புத்தன் அண்ணே வருகைக்கு உங்கள் கருத்துக்கு .

உங்கள் கவிதை  எனக்கும் பொருந்தும்

அதையும் கடந்து

உங்கள் அப்பாநிலையில் நான் இன்று...

வாழ்க்கை ஒரு சக்கரம்

தருவதை பெறுவதும்

மீண்டும் விதைப்பதும் தொடர்கிறது

 

நன்றி  கவிக்கும் நினைவுகளுக்கும்..

 

கண்டிப்பா இருப்பதாய் விட கட்டுபாடா அப்பா இருத்தா பிள்ளை எப்பவும் அப்பா மின்னே .

 

நன்றி அண்ணே வருகைக்கும் கருத்துக்கும் .

தந்தையர் தினத்தில் என் அப்பாவையும் நினைவூட்டிய உங்கள் கவிதைக்கு மிக்க நன்றி அஞ்சரன்.

  • தொடங்கியவர்

தந்தையர் தினத்தில் என் அப்பாவையும் நினைவூட்டிய உங்கள் கவிதைக்கு மிக்க நன்றி அஞ்சரன்.

நன்றி பகலவன் வருகைக்கு .

  • கருத்துக்கள உறவுகள்

எனது அப்பா!

நண்பர்களின் அப்பாக்களைப் பார்க்கும் ஒவ்வொரு கணமும் எனக்கும் இப்படியொரு அப்பா இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று ஏங்கவைத்த அப்பா !

அம்மா இறந்த நாளன்று, கடவுளே எங்கள் அம்மாவை எங்களுடன் விட்டு விட்டு, அப்பாவை எடுத்துக்கொள்ளேன் என்று ஏங்கவைத்த அப்பா !

ஆத்தையுடன் சேர்ந்து நீங்கள் மூன்றுபேரும் செத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று வாய்விட்டுச் சொல்லிய அப்பா !

அம்மா இறந்த முதலாம் நினைவஞ்சலியில் தனது இரண்டாம் தாரத்தை ஊருக்கு காட்டிய அப்பா!

சிற்றன்னை வந்த முதலாம் வருடத்திலேயே தனது மூத்த பிள்ளைகள் இரண்டையும் வீட்டை விட்டுத் துரத்திய அப்பா !

கடைசியாக இருந்த தம்பியையும், சிற்றன்னைக்காக, ஒரு தகப்பன் கூறமுடியாத குற்றச்சாட்டுக்களைக் கோர்த்துக்கட்டி விரட்டி விட்ட அப்பா !

ஆனையிறவு மீட்புச் சமரில் பலியானான் என்று நம்பிய  தனது இராணுவக் கப்டன் நண்பனுக்காக கடவுளிடம் மன்றாடிய நாத்திக அப்பா!

அவன் திரும்பவந்து அவர்னமுன் நின்றதும், கடவுள் இருக்கிறார் என்று துதிபாடிய அப்பா!

அதே சமரில் தனது இளைய மகன் கொல்லப்பட்டதை அறிந்து குதூகலித்துப், "பயங்கரவாதி இறந்தான்" என்று கூவிய அப்பா!

இறுதியாக இறந்தபோது மீதமிருந்த பிள்ளைகளிடமிருந்து ஒரு சொட்டுக் கண்ணீரைக் கூட பெறமுடியாமல்ப் போன அப்பா !

இப்படியொரு அப்பன் இருந்தாலென்ன, செத்தாலென்ன ??

 

ஒவ்வொரு அப்பாக்கள் தினமும் எனக்கு இப்படித்தான் கழிகிறது !

 

 

  • கருத்துக்கள உறவுகள்

அப்பா கவிதை அருமை


கடைசி நேரத்தில் பார்க்க முடியவில்லை அப்பாவை. மாறத வலிகள் இன்னும்

  • கருத்துக்கள உறவுகள்

எனது அப்பா!

நண்பர்களின் அப்பாக்களைப் பார்க்கும் ஒவ்வொரு கணமும் எனக்கும் இப்படியொரு அப்பா இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று ஏங்கவைத்த அப்பா !

அம்மா இறந்த நாளன்று, கடவுளே எங்கள் அம்மாவை எங்களுடன் விட்டு விட்டு, அப்பாவை எடுத்துக்கொள்ளேன் என்று ஏங்கவைத்த அப்பா !

ஆத்தையுடன் சேர்ந்து நீங்கள் மூன்றுபேரும் செத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று வாய்விட்டுச் சொல்லிய அப்பா !

அம்மா இறந்த முதலாம் நினைவஞ்சலியில் தனது இரண்டாம் தாரத்தை ஊருக்கு காட்டிய அப்பா!

சிற்றன்னை வந்த முதலாம் வருடத்திலேயே தனது மூத்த பிள்ளைகள் இரண்டையும் வீட்டை விட்டுத் துரத்திய அப்பா !

கடைசியாக இருந்த தம்பியையும், சிற்றன்னைக்காக, ஒரு தகப்பன் கூறமுடியாத குற்றச்சாட்டுக்களைக் கோர்த்துக்கட்டி விரட்டி விட்ட அப்பா !

ஆனையிறவு மீட்புச் சமரில் பலியானான் என்று நம்பிய  தனது இராணுவக் கப்டன் நண்பனுக்காக கடவுளிடம் மன்றாடிய நாத்திக அப்பா!

அவன் திரும்பவந்து அவர்னமுன் நின்றதும், கடவுள் இருக்கிறார் என்று துதிபாடிய அப்பா!

அதே சமரில் தனது இளைய மகன் கொல்லப்பட்டதை அறிந்து குதூகலித்துப், "பயங்கரவாதி இறந்தான்" என்று கூவிய அப்பா!

இறுதியாக இறந்தபோது மீதமிருந்த பிள்ளைகளிடமிருந்து ஒரு சொட்டுக் கண்ணீரைக் கூட பெறமுடியாமல்ப் போன அப்பா !

இப்படியொரு அப்பன் இருந்தாலென்ன, செத்தாலென்ன ??

 

ஒவ்வொரு அப்பாக்கள் தினமும் எனக்கு இப்படித்தான் கழிகிறது !

 

நீங்கள் எழுதி இருக்கும் சம்பவங்களை படித்ததும் மிகவும் கவலையாக போய் விட்டது. :(  :'( அந்த தந்தைக்கான கவலை அல்ல...

  • கருத்துக்கள உறவுகள்

எனது அப்பா!

நண்பர்களின் அப்பாக்களைப் பார்க்கும் ஒவ்வொரு கணமும் எனக்கும் இப்படியொரு அப்பா இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று ஏங்கவைத்த அப்பா !

அம்மா இறந்த நாளன்று, கடவுளே எங்கள் அம்மாவை எங்களுடன் விட்டு விட்டு, அப்பாவை எடுத்துக்கொள்ளேன் என்று ஏங்கவைத்த அப்பா !

ஆத்தையுடன் சேர்ந்து நீங்கள் மூன்றுபேரும் செத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று வாய்விட்டுச் சொல்லிய அப்பா !

அம்மா இறந்த முதலாம் நினைவஞ்சலியில் தனது இரண்டாம் தாரத்தை ஊருக்கு காட்டிய அப்பா!

சிற்றன்னை வந்த முதலாம் வருடத்திலேயே தனது மூத்த பிள்ளைகள் இரண்டையும் வீட்டை விட்டுத் துரத்திய அப்பா !

கடைசியாக இருந்த தம்பியையும், சிற்றன்னைக்காக, ஒரு தகப்பன் கூறமுடியாத குற்றச்சாட்டுக்களைக் கோர்த்துக்கட்டி விரட்டி விட்ட அப்பா !

ஆனையிறவு மீட்புச் சமரில் பலியானான் என்று நம்பிய  தனது இராணுவக் கப்டன் நண்பனுக்காக கடவுளிடம் மன்றாடிய நாத்திக அப்பா!

அவன் திரும்பவந்து அவர்னமுன் நின்றதும், கடவுள் இருக்கிறார் என்று துதிபாடிய அப்பா!

அதே சமரில் தனது இளைய மகன் கொல்லப்பட்டதை அறிந்து குதூகலித்துப், "பயங்கரவாதி இறந்தான்" என்று கூவிய அப்பா!

இறுதியாக இறந்தபோது மீதமிருந்த பிள்ளைகளிடமிருந்து ஒரு சொட்டுக் கண்ணீரைக் கூட பெறமுடியாமல்ப் போன அப்பா !

இப்படியொரு அப்பன் இருந்தாலென்ன, செத்தாலென்ன ??

 

ஒவ்வொரு அப்பாக்கள் தினமும் எனக்கு இப்படித்தான் கழிகிறது !

 

ஒவ்வொரு அப்பாக்களும் ஒருவிதம். எனது தந்தையின் தத்துவம்..  வாழ்க்கையில் வெல்லவே Take it easy policy! :D

  • கருத்துக்கள உறவுகள்

என் அப்பா மிகவும் நேசமானவர் ஒரு அடியோ பேச்சோ விழுந்து இராது விடுமுறைக்கு   வருவாதால் சந்தோஷமாய்   

 

நேரம் செலவி டுவார் . கவிதை பகிர்வுக்கு நன்றி  அஞ்சரன் ...........

  • கருத்துக்கள உறவுகள்

எனது அப்பா!

நண்பர்களின் அப்பாக்களைப் பார்க்கும் ஒவ்வொரு கணமும் எனக்கும் இப்படியொரு அப்பா இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று ஏங்கவைத்த அப்பா !

அம்மா இறந்த நாளன்று, கடவுளே எங்கள் அம்மாவை எங்களுடன் விட்டு விட்டு, அப்பாவை எடுத்துக்கொள்ளேன் என்று ஏங்கவைத்த அப்பா !

ஆத்தையுடன் சேர்ந்து நீங்கள் மூன்றுபேரும் செத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று வாய்விட்டுச் சொல்லிய அப்பா !

அம்மா இறந்த முதலாம் நினைவஞ்சலியில் தனது இரண்டாம் தாரத்தை ஊருக்கு காட்டிய அப்பா!

சிற்றன்னை வந்த முதலாம் வருடத்திலேயே தனது மூத்த பிள்ளைகள் இரண்டையும் வீட்டை விட்டுத் துரத்திய அப்பா !

கடைசியாக இருந்த தம்பியையும், சிற்றன்னைக்காக, ஒரு தகப்பன் கூறமுடியாத குற்றச்சாட்டுக்களைக் கோர்த்துக்கட்டி விரட்டி விட்ட அப்பா !

ஆனையிறவு மீட்புச் சமரில் பலியானான் என்று நம்பிய  தனது இராணுவக் கப்டன் நண்பனுக்காக கடவுளிடம் மன்றாடிய நாத்திக அப்பா!

அவன் திரும்பவந்து அவர்னமுன் நின்றதும், கடவுள் இருக்கிறார் என்று துதிபாடிய அப்பா!

அதே சமரில் தனது இளைய மகன் கொல்லப்பட்டதை அறிந்து குதூகலித்துப், "பயங்கரவாதி இறந்தான்" என்று கூவிய அப்பா!

இறுதியாக இறந்தபோது மீதமிருந்த பிள்ளைகளிடமிருந்து ஒரு சொட்டுக் கண்ணீரைக் கூட பெறமுடியாமல்ப் போன அப்பா !

இப்படியொரு அப்பன் இருந்தாலென்ன, செத்தாலென்ன ??

 

ஒவ்வொரு அப்பாக்கள் தினமும் எனக்கு இப்படித்தான் கழிகிறது !

 

 

வலிக்கிறது ராசா

உங்களுக்கு ஏற்பட்ட இழப்புக்களுக்கு ஈடுகிடையாது

கடவுள்

கடவுள் என்று வாழ்பவரை

கடவுளே  காயப்படுத்தினால்........??

கண்ணீர் பனிக்கிறது

வேண்டாம்

அவரைத்திட்டிவிடுவேன்......... :(  :(  :(

  • கருத்துக்கள உறவுகள்

எனது அப்பா!

நண்பர்களின் அப்பாக்களைப் பார்க்கும் ஒவ்வொரு கணமும் எனக்கும் இப்படியொரு அப்பா இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று ஏங்கவைத்த அப்பா !

அம்மா இறந்த நாளன்று, கடவுளே எங்கள் அம்மாவை எங்களுடன் விட்டு விட்டு, அப்பாவை எடுத்துக்கொள்ளேன் என்று ஏங்கவைத்த அப்பா !

ஆத்தையுடன் சேர்ந்து நீங்கள் மூன்றுபேரும் செத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று வாய்விட்டுச் சொல்லிய அப்பா !

அம்மா இறந்த முதலாம் நினைவஞ்சலியில் தனது இரண்டாம் தாரத்தை ஊருக்கு காட்டிய அப்பா!

சிற்றன்னை வந்த முதலாம் வருடத்திலேயே தனது மூத்த பிள்ளைகள் இரண்டையும் வீட்டை விட்டுத் துரத்திய அப்பா !

கடைசியாக இருந்த தம்பியையும், சிற்றன்னைக்காக, ஒரு தகப்பன் கூறமுடியாத குற்றச்சாட்டுக்களைக் கோர்த்துக்கட்டி விரட்டி விட்ட அப்பா !

ஆனையிறவு மீட்புச் சமரில் பலியானான் என்று நம்பிய  தனது இராணுவக் கப்டன் நண்பனுக்காக கடவுளிடம் மன்றாடிய நாத்திக அப்பா!

அவன் திரும்பவந்து அவர்னமுன் நின்றதும், கடவுள் இருக்கிறார் என்று துதிபாடிய அப்பா!

அதே சமரில் தனது இளைய மகன் கொல்லப்பட்டதை அறிந்து குதூகலித்துப், "பயங்கரவாதி இறந்தான்" என்று கூவிய அப்பா!

இறுதியாக இறந்தபோது மீதமிருந்த பிள்ளைகளிடமிருந்து ஒரு சொட்டுக் கண்ணீரைக் கூட பெறமுடியாமல்ப் போன அப்பா !

இப்படியொரு அப்பன் இருந்தாலென்ன, செத்தாலென்ன ??

 

ஒவ்வொரு அப்பாக்கள் தினமும் எனக்கு இப்படித்தான் கழிகிறது !

 

இப்படி ஒரு அப்பா எவருக்குமே இருக்கக் கூடாது தான். என்ன செய்வது.

எனது அப்பா!

நண்பர்களின் அப்பாக்களைப் பார்க்கும் ஒவ்வொரு கணமும் எனக்கும் இப்படியொரு அப்பா இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று ஏங்கவைத்த அப்பா !

அம்மா இறந்த நாளன்று, கடவுளே எங்கள் அம்மாவை எங்களுடன் விட்டு விட்டு, அப்பாவை எடுத்துக்கொள்ளேன் என்று ஏங்கவைத்த அப்பா !

ஆத்தையுடன் சேர்ந்து நீங்கள் மூன்றுபேரும் செத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று வாய்விட்டுச் சொல்லிய அப்பா !

அம்மா இறந்த முதலாம் நினைவஞ்சலியில் தனது இரண்டாம் தாரத்தை ஊருக்கு காட்டிய அப்பா!

சிற்றன்னை வந்த முதலாம் வருடத்திலேயே தனது மூத்த பிள்ளைகள் இரண்டையும் வீட்டை விட்டுத் துரத்திய அப்பா !

கடைசியாக இருந்த தம்பியையும், சிற்றன்னைக்காக, ஒரு தகப்பன் கூறமுடியாத குற்றச்சாட்டுக்களைக் கோர்த்துக்கட்டி விரட்டி விட்ட அப்பா !

ஆனையிறவு மீட்புச் சமரில் பலியானான் என்று நம்பிய  தனது இராணுவக் கப்டன் நண்பனுக்காக கடவுளிடம் மன்றாடிய நாத்திக அப்பா!

அவன் திரும்பவந்து அவர்னமுன் நின்றதும், கடவுள் இருக்கிறார் என்று துதிபாடிய அப்பா!

அதே சமரில் தனது இளைய மகன் கொல்லப்பட்டதை அறிந்து குதூகலித்துப், "பயங்கரவாதி இறந்தான்" என்று கூவிய அப்பா!

இறுதியாக இறந்தபோது மீதமிருந்த பிள்ளைகளிடமிருந்து ஒரு சொட்டுக் கண்ணீரைக் கூட பெறமுடியாமல்ப் போன அப்பா !

இப்படியொரு அப்பன் இருந்தாலென்ன, செத்தாலென்ன ??

 

ஒவ்வொரு அப்பாக்கள் தினமும் எனக்கு இப்படித்தான் கழிகிறது !

 

ம் ......... மனம் கனக்கிறது :(

 

 

நீங்கள் விரும்பியபடி நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு ஒரு நல்ல அப்பாவாக வாழ்ந்து காட்டுங்கள். 

  • தொடங்கியவர்

வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி அனைவருக்கும் .. :)

  • கருத்துக்கள உறவுகள்

வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி அனைவருக்கும் .. :)

 

மன்னிக்க வேண்டும் அஞ்சரன்,

 

சிவபூஜையில் கரடி புகுந்ததைப்போல, உங்கள் அப்பாவின் இனிமையான நிகழ்வினைப் பகிர நீங்கள் திறந்த கருத்தினுள் எனது குப்பையைக் கொண்டுவந்து கொட்டியமைக்காக.

 

மற்றும் எனது நண்பர்களான (!) யாயினி, இசை, விசுகர், அலைமகள், மெசொப்பொத்தேமியர் ஆகிய அனைவருக்கும் எனது நன்றிகள். நீங்கள் இரக்கப்படும் அளவிற்கு நானிருக்கிறேன் என்பதில் மகிழ்ச்சி. நான் இங்கே எழுதியது அனுதாபம் திரட்ட அல்ல. அப்பா என்று என்னுள் விளங்கிக்கொண்டதை எழுதுவதற்காகவே. எவரையாவது காயப்படுத்தியிருந்தால் மன்னியுங்கள்.

 

எனது சிறுவர் பராயம் மிகவும் கொடூரமானது. எனக்கும், எனது சகோதரங்களும் அமைதியான மகிழ்ச்சியான வாழ்க்கை அமையவில்லை. எல்லாம் அம்மா இறந்தவுடம் மாறிப்போயிற்று. இவைபற்றியெல்லாம் எழுதவேண்டும் என்று விரும்பியிருந்தேன், யாழ்க்களம் சரியான களமா என்று தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்க வேண்டும் அஞ்சரன்,

 

சிவபூஜையில் கரடி புகுந்ததைப்போல, உங்கள் அப்பாவின் இனிமையான நிகழ்வினைப் பகிர நீங்கள் திறந்த கருத்தினுள் எனது குப்பையைக் கொண்டுவந்து கொட்டியமைக்காக.

 

மற்றும் எனது நண்பர்களான (!) யாயினி, இசை, விசுகர், அலைமகள், மெசொப்பொத்தேமியர் ஆகிய அனைவருக்கும் எனது நன்றிகள். நீங்கள் இரக்கப்படும் அளவிற்கு நானிருக்கிறேன் என்பதில் மகிழ்ச்சி. நான் இங்கே எழுதியது அனுதாபம் திரட்ட அல்ல. அப்பா என்று என்னுள் விளங்கிக்கொண்டதை எழுதுவதற்காகவே. எவரையாவது காயப்படுத்தியிருந்தால் மன்னியுங்கள்.

 

எனது சிறுவர் பராயம் மிகவும் கொடூரமானது. எனக்கும், எனது சகோதரங்களும் அமைதியான மகிழ்ச்சியான வாழ்க்கை அமையவில்லை. எல்லாம் அம்மா இறந்தவுடம் மாறிப்போயிற்று. இவைபற்றியெல்லாம் எழுதவேண்டும் என்று விரும்பியிருந்தேன், யாழ்க்களம் சரியான களமா என்று தெரியவில்லை.

 

நாங்கள் யாரும் நீங்கள் எழுதி இருப்பததை தவறாக எடுத்துக் கொள்ள இல்லை. இப்படியான நேரங்களிலாவது சில உண்மைச் சம்பவங்களும் வெளி வருகிறதே...சிறுவயதிலயே கஸ்ரங்களை அனுபவிப்பது என்பது கொடுமை தானே.அதனால் தான் மன வருத்தமாக இருந்தது..நான் இயற்கையாகவே கொஞ்சம் இப்படியான சம்பவங்களைப் பார்த்தால்,கேட்டால் கவலைப்படுது அதிகம்.என் சுபாவம் அப்படித் தான்.மற்றப்படி சொல்லப்போனால் உங்களுடைய குழந்தைகளுக்கு நீங்கள் ஒரு நல்ல தந்தையாராக இருப்பீர்கள் என்று நினைக்கிறன்.என் அறிவுக்கு எட்டியது இவ்வளவு தான்.

Edited by யாயினி

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் யாரும் நீங்கள் எழுதி இருப்பததை தவறாக எடுத்துக் கொள்ள இல்லை. இப்படியான நேரங்களிலாவது சில உண்மைச் சம்பவங்களும் வெளி வருகிறதே...சிறுவயதிலயே கஸ்ரங்களை அனுபவிப்பது என்பது கொடுமை தானே.அதனால் தான் மன வருத்தமாக இருந்தது..நான் இயற்கையாகவே கொஞ்சம் இப்படியான சம்பவங்களைப் பார்த்தால்,கேட்டால் கவலைப்படுது அதிகம்.என் சுபாவம் அப்படித் தான்.மற்றப்படி சொல்லப்போனால் உங்களுடைய குழந்தைகளுக்கு நீங்கள் ஒரு நல்ல தந்தையாராக இருப்பீர்கள் என்று நினைக்கிறன்.என் அறிவுக்கு எட்டியது இவ்வளவு தான்.

 

 

நன்றி யாயினி,

 

எனது தந்தையார் எனக்கு எதை எதையெல்லாம் செய்தாரோ அவற்றை எனது பிள்ளைகளுக்கு நிச்சயம் செய்வதில்லை என்றும், எவை எவை எல்லாவற்றையும் எனக்குச் செய்யாமல் விட்டாரோ, அவற்றையெல்லாம் நிச்சயம் எனது பிள்ளைகளுக்குச் செய்வேன் என்றும் உறுதி பூண்டு செய்துவருகிறேன். நீங்கள் நம்பலாம், நிச்சயம் அவரைப் போல நான் இருக்கப்போவதில்லை. 

  • தொடங்கியவர்

மன்னிக்க வேண்டும் அஞ்சரன்,

 

சிவபூஜையில் கரடி புகுந்ததைப்போல, உங்கள் அப்பாவின் இனிமையான நிகழ்வினைப் பகிர நீங்கள் திறந்த கருத்தினுள் எனது குப்பையைக் கொண்டுவந்து கொட்டியமைக்காக.

 

மற்றும் எனது நண்பர்களான (!) யாயினி, இசை, விசுகர், அலைமகள், மெசொப்பொத்தேமியர் ஆகிய அனைவருக்கும் எனது நன்றிகள். நீங்கள் இரக்கப்படும் அளவிற்கு நானிருக்கிறேன் என்பதில் மகிழ்ச்சி. நான் இங்கே எழுதியது அனுதாபம் திரட்ட அல்ல. அப்பா என்று என்னுள் விளங்கிக்கொண்டதை எழுதுவதற்காகவே. எவரையாவது காயப்படுத்தியிருந்தால் மன்னியுங்கள்.

 

எனது சிறுவர் பராயம் மிகவும் கொடூரமானது. எனக்கும், எனது சகோதரங்களும் அமைதியான மகிழ்ச்சியான வாழ்க்கை அமையவில்லை. எல்லாம் அம்மா இறந்தவுடம் மாறிப்போயிற்று. இவைபற்றியெல்லாம் எழுதவேண்டும் என்று விரும்பியிருந்தேன், யாழ்க்களம் சரியான களமா என்று தெரியவில்லை.

இதில் ஏன்னா மன்னிப்பு எல்லோருக்கும் ஒரு வலி இருக்கு உங்களுக்கு அது அப்பாவடிவில் இருக்கு அதை ஒரு பாடமா எடுத்து கடந்து போங்கோ அண்ணே ....

வாழ்தலில் இல்லை வாழ்த்து காட்டுவதிலே இருக்கு எம் சுயமும் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.