Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சாதனை இயக்குநர் ராமநாராயணன் காலமானார்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிரபல சினிமா இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் ராமநாராயணன் சிங்கப்பூரில் உடல்நலக்குறைவால் காலமானார். தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 9 மொழிகளில் 125 படங்களை ராமநாராயணன் இயக்கியுள்ளார். விலங்குகளை ஹீரோவாக காண்பித்து சாதனை படைத்தார். அவருக்கு வயது 67

தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்பட 125-க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியவர் என்ற  சாதனையை தன்வசம் கொண்டிருந்த ராம. நாராயணன், பல வெற்றிப் படங்களைத் தயாரித்தவர். தயாரிப்பாளர் சங்கத் தலைவர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ramanarayanan.jpg

தமிழ் சினிமாவில் விலங்குகளை வைத்து பல வெற்றி படங்களை இயக்கியவர் . குறிப்பாக, பக்திப் படங்கள் பலவற்றை கொடுத்தவர் இவர். வீரன் வேலுதம்பி, ஆடி வெள்ளி, துர்கா, ராஜ காளியம்மன் உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர்.3

 

சிறுநீரகக் கோளாறால் பாதிக்கப்பட்ட இவர், சிங்கப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை சிகிச்சைப் பலனின்றி இறந்தார்.

 

அவரது உடல் செவ்வாய்க்கிழமை சென்னை கொண்டு வரப்படும் என்று தெரிகிறது.

 

http://news.vikatan.com/article.php?module=news&aid=29316

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்பட 125-க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியவர் என்ற உலக சாதனையை தன்வசம் கொண்டிருந்த ராம. நாராயணன், பல வெற்றிப் படங்களைத் தயாரித்தவர்.

தயாரிப்பாளர் சங்கத் தலைவர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்தவர்.

தமிழ் சினிமாவில் விலங்குகளை வைத்தும், அவற்றை முக்கியக் கதாபாத்திரங்களாக வலம்வரச் செய்து இயக்கிய இவரது படங்களே இவருக்கு அடையாளமாக இருந்தன.

குறிப்பாக, பக்திப் படங்கள் பலவற்றை கொடுத்தவர் இவர்.

மிகக் குறைந்த பட்ஜெட்டிலும், மிக குறுகிய காலகட்டத்திலும் படங்களை எடுத்து, வணிக ரீதியில் பல வெற்றிகளை இவர் தந்ததும் கவனிக்கத்தக்கது. வீரன் வேலுதம்பி,

ஆடி வெள்ளி,

துர்கா,

ராஜ காளியம்மன்

உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர்.!

குழந்தைகள் ரசிக்கும்படி நேஷனல் ஜியோகிராபிக் சேனலுக்கு இணையாக திரைப்படம் எடுத்தவர் திரு.இராம.நாராயணன். "சுமை", "சிவப்புமல்லி" என சிறந்த பாட்டாளி வர்க்கத்தின் கதையம்சம் கொண்ட படங்களையும் இயக்கிய அற்புதப் படைப்பாளி. காரைக்குடியின் மண்ணின் மைந்தன். ஒரு முறை திமுக சார்பில் காரைக்குடி சட்ட மன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு காரைக்குடி தொகுதிக்கு "ஸ்டார்" அந்தஸ்த்து கொடுத்தவர். விடுதலை பெற்ற இந்திய வரலாற்றில் தமிழ்நாடு ச்ட்டமன்றத்துக்குள் முதல் முறையாக "பேன்ட் - சட்டை" போட்டுப் போன தமிழ்நாட்டின் முதல் சட்டமன்ற உறுப்பினர். அதனாலேயே, ஊடகத்தால் விவாதமாக்கப்பட்டவர். ஒரு கலைப் படைப்பாளியாகவும், அரசியல்வாதியாகவும் தன்னை நிலைப்படுத்திய மண்ணின் மைந்தன் "இராம.நாராயணனுக்கு" அஞ்சலி.

Thanks FB

Edited by சுபேஸ்

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்...!

  • கருத்துக்கள உறவுகள்

ராமநாராயணன் மறைவுக்கு... ஆழ்ந்த இரங்கல்கள்.
அவரின் பிரிவால் துயருற்றிருக்கும் உறவினர்களுக்கும், தமிழ் திரையுலகத்தினருக்கும் அனுதாபங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ராமநாராயணன் மறைவுக்கு... ஆழ்ந்த இரங்கல்கள்.

அவரின் பிரிவால் துயருற்றிருக்கும் உறவினர்களுக்கும், தமிழ் திரையுலகத்தினருக்கும் அனுதாபங்கள்.

 

ராமநாராயணன் மறைவுக்கு... ஆழ்ந்த இரங்கல்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்..!

xramanarayanan_1962345h.jpg.pagespeed.ic
இயக்குநர் ராம. நாராயணன் | கோப்புப் படம்
திரைப்பட இயக்குநரும், தயாரிப்பாளருமான ராம.நாராயணன் காலமானார். அவருக்கு வயது 67.

 

சிறுநீரகக் கோளாறால் பாதிக்கப்பட்ட இவர், சிங்கப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில், அவர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) சிகிச்சைப் பலனின்றி இறந்தார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்பட 125-க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியவர் என்ற உலக சாதனையை தன்வசம் கொண்டிருந்த ராம. நாராயணன், பல வெற்றிப் படங்களைத் தயாரித்தவர். தயாரிப்பாளர் சங்கத் தலைவர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்தவர்.

தமிழ் சினிமாவில் விலங்குகளை வைத்தும், அவற்றை முக்கியக் கதாபாத்திரங்களாக வலம்வரச் செய்து இயக்கிய இவரது படங்களே இவருக்கு அடையாளமாக இருந்தன. குறிப்பாக, பக்திப் படங்கள் பலவற்றை கொடுத்தவர் இவர்.

மிகக் குறைந்த பட்ஜெட்டிலும், மிக குறுகிய காலகட்டத்திலும் படங்களை எடுத்து, வணிக ரீதியில் பல வெற்றிகளை இவர் தந்ததும் கவனிக்கத்தக்கது. வீரன் வேலுதம்பி, ஆடி வெள்ளி, துர்கா, ராஜ காளியம்மன் உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர்.

 

http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/article6139266.ece?homepage=true

 

  • கருத்துக்கள உறவுகள்

ராமநாரயணனின் திரைப்படங்கள் என்றால் அதுவும் 1980 களில் வந்த படங்கள் என்றால் வித்தியாசமாக இருக்கும் மனிதர்களுடன் சேர்ந்து விலங்குகளையும் நடிக்க வைத்திருப்பார்..... 1990 களில் வந்த அவருடைய திரைப்படங்கள் பெரும்பாலும் பக்தி திரைப்படங்களாக தான் இருக்கும்....அதுவும் நாங்கள் எல்லாம் சிறுவர்களாக இருந்த பொழுது வந்த ஆடிவெள்ளி அசத்தல் ரகமான திரைப்படம்..... சுமார்... 125 திரைப்படங்களை இயக்கி உலகில் அதிக திரைப்படங்களை இயக்கிய சாதனைக்குரிய இயக்குனராகவும் இருந்த ராமநாராயணன் காலமாகி விட்டது தமிழ் சினிமாவை பொருத்தவரை மிகப்பெரிய இழப்பு.... ஒரு படைப்பாளியின் சாதனையே அவன் இறந்த பின்பும் அவனை பற்றி பேசவைக்கும் அவனது படைப்புகள் தான் ராமநாராயணன்

இயக்கி திரைக்காவியங்களும் காலம் கடந்தும் அவருடைய பெயரை சொல்லி நிற்கும்.....

அவர் இயக்கிய திரைப்படங்கள் சில

மனைவி ஒரு மந்திரி

சிவராத்திரி

தென்பாண்டி சீமையிலே

தைப்பூசம்

ஆடி வெள்ளி

சட்டத்தை திருத்துங்கள்

காவல் கைதிகள்

சிவப்பு நிலா

சிவப்பு கிளி

மனைவி சொல்லே மந்திரம்

என்று நீண்டுகொண்டே போகும்.....

இயக்குனர் ராமநாராயணனுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்.....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆழ்ந்த இரங்கல்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவிலேயே

அதிக திரைப்படங்களை இயக்கிய

 ராமநாராயணன் காலமானார்

 

ramanarayanan.jpg

 

 

பிரபல திரைப்பட இயக்குநர் - தயாரிப்பாளர் ராமநாராயணன் சிங்கப்பூரில் மாரடைப்பால் காலமானார். 

 இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும், தயாரிப்பாளர் சங்க தலைவராகவும்  இருந்தவர் ராமநாராயணன். இந்தியாவிலேயே அதிக படங்களை இயக்கியவர் ராமநாராயணன்.  தமிழ் உள்ளிட்ட 9 மொழிகளில் 125 படங்களை இயக்கியுள்ளார்.  70  வயதை நெருங்கும் ராமநாராயணன் சர்க்கரை நோய், மற்றும் ரத்த அழுத்த நோயால் அவதிப்பட்டு வந்தார். அவரால் முன்புபோல் செயல்பட முடியாததால் தன் மகன் என்.ராமசாமியை தனது சினிமா வாரிசாக களத்தில் இறக்கி இறக்கினார்.

ராமநாராயணனின் ஸ்ரீதேனாண்டாள் பிக்சர்ஸ் நிர்வாக பொறுப்புக்கு ராமசாமி வந்துள்ளார்.

இந்நிலையில் சிங்கப்பூரில் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  அங்கு சிகிச்சை பலனின்றி உயிர் பிரிந்தது.

இராம.நாராயணன் 1980-ம் ஆண்டில் திரைப்படத் துறையில் காலடி எடுத்து வைத்தார். 25 ஆண்டுகளில் 125 படங்களை டைரக்ட் செய்துள்ளார். 45 படங்களை சொந்தமாகத் தயாரித்துள்ளார். 1984-ம் ஆண்டில் அவர் 12 படங்களை இயக்கினார். அதாவது, சராசரியாக மாதம் ஒரு படம்! 1985-ல் 10 படங்களையும், 1992-ல் 10 படங்களையும் இயக்கினார். 1980-ல் இவர் தயாரித்த 'சுமை' என்ற படம் வித்தியாசமானது.

 

இதன் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் ஆகிய பொறுப்புகளை இவரே கவனித்தார். இந்தப் படத்தில், 9 குழந்தைகளுடன் ஒரு தாய் அவதிப்படுவார். தந்தை குடிகாரன். எனவே, குடும்பத்தை சுமக்க வேண்டிய பொறுப்பு மூத்த மகன் மீது விழுகிறது. கடைசி வரை அந்த குடும்பத்திற்காக பல சுமைகளை சுமக்கும் கதாநாயகன், இறுதியில் இறந்து விடுகிறான். அப்போது அவனை மற்றவர்கள் சுமக்கிறார்கள்.

 

இப்படத்தில், கதாநாயகனாக சந்திரசேகர் நடித்து இருந்தார். படம் வெற்றி பெற்றது. 'சுமை' படத்தை, சிறந்த படமாக தமிழக அரசு தேர்ந்தெடுத்து ரூ.1 லட்சம் பரிசு வழங்கியது.

 

தன்னிடம் உதவி இயக்குனர்களாக இருந்த பலரை, டைரக்டர்களாக உயர்த்தினார், இராம.நாராயணன். 'சுமை' படத்தில், இவரிடம் உதவி இயக்குனராகச் சேர்ந்தார், ராமராஜன். 'சோலை புஷ்பம்' என்ற தன் சொந்தப் படத்தை இயக்கும் பொறுப்பை ராமராஜனுக்கு கொடுத்தார், இராம.நாராயணன். அதன் மூலம் டைரக்டராக உயர்ந்த ராமராஜன், பின்னர் கதாநாயகன் ஆனார். 'கரகாட்டக்காரன்' உள்பட பல வெற்றிப்படங்களை அளித்தார்.

 

இதேபோல, மற்றொரு உதவி இயக்குனர் சோழராஜனுக்கு 'நாகம்' என்ற படத்தையும், இன்னொரு உதவி இயக்குனர் கோலப்பனுக்கு 'தென் பாண்டி சிங்கம்' என்ற படத்தையும் இயக்க வாய்ப்பளித்தார். இராம.நாராயணனிடம் உதவி இயக்குனராக இருந்தவர் பேரரசு. இராம.நாராயணனின் 30 படங்களுக்கு, இவர் உதவி இயக்குனராகப் பணியாற்றினார்.

 

விஜய் நடித்த 'திருப்பாச்சி', 'சிவகாசி' ஆகிய படங்களை டைரக்டர் செய்து, வெற்றி இயக்குனராக பவனி வருகிறார், பேரரசு. கன்னட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துக் கொண்டிருந்த அர்ஜூனை 'நன்றி' என்ற படத்தின் மூலம் இராம.நாராயணன் தமிழ்த் திரைப்படத்துறைக்கு கொண்டு வந்தார்.

 

1989-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் இராம.நாராயணன் காரைக்குடி தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

1990-ம் ஆண்டு தமிழக அரசின் `கலைமாமணி' விருது இவருக்கு கிடைத்தது. 1995-ம் ஆண்டு இயல், இசை, நாடக மன்ற தலைவராக பதவி வகித்தார். 2005-ம் ஆண்டு முதல் திரைப்பட தணிக்கை குழு உறுப்பினராக இருந்து வருகிறார். இராம.நாராயணனின் மனைவி பெயர் ராதா. மகன் ராமசாமி, தந்தையுடன் சேர்ந்து படங்களில் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் செய்து வந்தார். மகள்கள் அன்பு, உமா ஆகியோருக்கு திருமணமாகிவிட்டது.

 

45 படங்களை சொந்தமாக தயாரித்து, 113 படங்களை இயக்கிய இராம.நாராயணனின் கலைப்பயணம், கடும் உழைப்பினாலும், திறமையினாலும் தனி மனிதனும் சாதனை படைக்க முடியும் என்பதற்கு  ஓர் உதாரணம்.

 

-நக்கீரன் -

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.