Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'இஸ்ரேலின் தாக்குதலில் பலியானவர்கள் முக்கால்வாசிப் பேர் பொதுமக்கள்'

Featured Replies

140711142852_gaza_index_11_07_304x171_af

இஸ்ரேலின் வான் தாக்குதல்களில் 120க்கும் மேற்பட்ட மக்கள் பலி

காசா மீதான இஸ்ரேலின் தொடர் வான் தாக்குதல்களில் கொல்லப்பட்டுள்ள பாலஸ்தீனர்களில் முக்கால்வாசிப் பேர் பொதுமக்கள் என்று ஐநா கூறுகின்றது.

இஸ்ரேலின் தாக்குதல்களில் தொடங்கிய நாள்முதல் இதுவரை 120க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக பாலஸ்தீன அதிகாரிகள் கூறுகின்றனர்.

இஸ்ரேலை நோக்கி நூற்றுக்கணக்கான ராக்கெட் குண்டுகளை ஏவிவரும் ஹமாஸ் ஆயுததாரிகளின் தாக்குதல்களை நிறுத்தும் முயற்சியாக இஸ்ரேல் தாக்குதல் நடத்திவருகின்றது.

ராக்கெட் தாக்குதல்களில் எந்தவொரு இஸ்ரேலியரும் கொல்லப்படவில்லை.

பீய்ட் லாஹியா நகரில் தொண்டு நிறுவனம் ஒன்று பயன்படுத்திவந்த கட்டடம் மீது நடந்துள்ள வான் தாக்குதல்களில் அங்கவீனச் சிறார்கள் இருவர் கொல்லப்பட்டுள்ளதாக பாலஸ்தீன மருத்துவத்துறை தகவல்கள் கூறுகின்றன.

 

http://www.bbc.co.uk/tamil/global/2014/07/140712_israel_gasa.shtml

  • கருத்துக்கள உறவுகள்

ஐநா: இஸ்ரேலின் தாக்குதலில் இருந்து பாடங்கள் கற்றுக் கொள்ளப்படுகின்றன.

 

மக்கள்: ஆமா.. எங்கட சாவை எண்ணிக்கிட்டு.. நீங்க கதிரையில இருந்து பாடம் படிங்க. :(:icon_idea::rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
காசா மீதான இஸ்ரேலின் தொடர் வான் தாக்குதல்களில் கொல்லப்பட்டுள்ள பாலஸ்தீனர்களில் முக்கால்வாசிப் பேர் பொதுமக்கள் என்று ஐநா கூறுகின்றது.
உதை சொல்ல நீங்கள் ஏன்? பத்திரிகை நிருபர்கள் சொல்லுவார்கள் தானே.....சாதாரண பொதுமக்களின் உயிரிழப்பை தடுக்க எதாவது நடவடிக்கை எடுங்கள் ....அப்பதான் ஐ.நா சபை மீது மக்கள் நம்பிக்கை கொள்வார்கள்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
காசா மீதான இஸ்ரேலின் தொடர் வான் தாக்குதல்களில் கொல்லப்பட்டுள்ள பாலஸ்தீனர்களில் முக்கால்வாசிப் பேர் பொதுமக்கள் என்று ஐநா கூறுகின்றது.

 

 

இதை நான் மறுக்கின்றேன்....இறந்தவர்கள் அனைவரும் பயங்கரவாதிகள். :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

கனேடிய பிரதமர் இஸ்ரேலியரின் பலஸ்தீனியர் மீதான தாக்குதலை நியாயப்படுத்தி உள்ளார். இதுவே கனேடியர்களூக்கு மேல் யாராவது குண்டு தாக்குதல் நடாத்தி 75 கனேடியர்கள் இறந்திருந்தால் அதனை இன்னுமொரு நாடு நியாயப்படுத்தி இருந்தால் அவர்களை நிச்சயமாக கனடா பயங்கரவாதி என கூறும். இவர்களின் இரட்டை முகத்தை ஒரு சிலரை தவிர உலகம் நன்கே அறிவர்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அமெரிக்கா பாலூட்டி வளர்த்தகிளி கனடா அல்லவா? :D     அமெரிக்காவில் காட்சிகள் மாறும் போது கனடாவின் கானங்களும் மாறும்..... :icon_idea:

அமேரிக்கா பாலூட்டி வளர்க்கும் கிளி இஸ்ரேல்....கனடா அமெரிக்காவின் பட்டியில் உள்ள ஒரு செம்மறி...அவர்களுக்கு அமெரிக்காவை மீறிய சுயாதீனமான வெளியுறவு கொள்கை இல்லை...அதுவும் இஸ்ரேல் விடயத்தில் அறவே இல்லை....

Edited by naanthaan

  • கருத்துக்கள உறவுகள்
இறந்தது பொதுமக்களாக இருக்கலாம்.
ஆனால் போர் பயங்கர வாதிகளுக்கு எதிரானது என்பதை மறந்தவர்கள்தான். கனடா அமெரிக்க விற்கு எதிராக கருத்து வைக்கிறார்கள். 

காஸாவை பார்த்த பிறகும் உலகம் இலங்கையை தண்டிக்கும் என்றால் அது கனவுலகில் மட்டுமே சாத்தியம்......

முட்டாள் ஹமாஸ்...பெண்கள்..பிள்ளைகள்...மருத்துவனைகளுள் ஒழிந்திருந்தால் இது தான் பலன்.... :) (அது தான் ஸ்டீவின் கார்பர் சொல்லுவது)

  • கருத்துக்கள உறவுகள்

 

இறந்தது பொதுமக்களாக இருக்கலாம்.
ஆனால் போர் பயங்கர வாதிகளுக்கு எதிரானது என்பதை மறந்தவர்கள்தான். கனடா அமெரிக்க விற்கு எதிராக கருத்து வைக்கிறார்கள். 

 

 

இஸ்ரேலினால் காஸாமீது நடத்தப்படும் தாக்குதல் பயங்கரவாதிகள் மீதான தாக்குதல் என்றால், ஈழத்தில் தமிழர்கள் மேல் நடத்தப்பட்டதும் பயங்கரவாதிகளது தாக்குதல் என்று நாம் ஏற்றுக்கொள்வோமா ?

 

எனென்றால், இன்று ஹமாஸ் இஸ்ரேலின்மேல் ராக்கெட் தாக்குதல் நடத்துவதற்கு ஒப்பானதுதான் 2009 இற்குமுன்னர் புலிகள் தெற்கில் நடத்திய தாக்குதல்கள். தமது பொதுமக்களைக் கொல்கிறார்கள் என்று கூறித்தான் புலிகளை அழிக்கிறோம் என்று சிங்களம் புலிகளோடு மக்களையும் அழித்தது.

 

இன்று இஸ்ரேல் செய்வதை வேடிக்கை பார்ப்பதுபோலத்தான் அன்று இலங்கை செய்ததையும் உலகம் வேடிக்கை பார்த்தது. இஸ்ரேலுக்கு எதிராக எந்த நாடும் இதுவரை கண்டனம் தெரிவிக்கவில்லை.

 

2009 வரை சிங்களம் தமிழருக்குச் செய்ததற்கு நிகராக இன்றுளைஸ்ரேல் பாள்ஸ்த்தினியர்களுக்கு செய்கிறது. ஆகவே இஸ்ரேலின் நடவடிக்கையை நாம் சரியென்று வாதிடுவது எமக்கு நடந்ததையும் சரியென்று ஏற்றுக்கொள்வதற்குச் சமம்.

 

ஹமாஸும் பாலஸ்த்தீனியர்களும் முஸ்லீம்கள் என்பதை ஒதுக்கிவைத்துப் பார்த்தால், அவர்களுக்கும் எமக்கும் அதிக வேற்றுமையில்லை என்பது புரியும்.

 

இஸ்லாமிய அடிப்படைவாதம் அழிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் பாலஸ்த்தீனத்தில் இன்று நடப்பது இஸ்லாமியப் பயங்கரவாதத்திற்கெதிரான போரில்லை. ஆக்கிரமிப்பாளனுக்கும், ஆக்கிரமிப்பிற்குள்ளாவனுக்கும் இடையில் நடக்கும் யுத்தம்.

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்லாமிய அடிப்படைவாதம் அழிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் பாலஸ்த்தீனத்தில் இன்று நடப்பது இஸ்லாமியப் பயங்கரவாதத்திற்கெதிரான போரில்லை. ஆக்கிரமிப்பாளனுக்கும், ஆக்கிரமிப்பிற்குள்ளாவனுக்கும் இடையில் நடக்கும் யுத்தம்.

 

தமிழ்புலிகள் அழிக்கப்படவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.....இது தமிழ் மக்களுக்கு எதிரான போரில்லை ....இப்படி சொல்லிதான் அமேரிக்கா,நோர்வே,இந்தியா,இங்கிலாந்து,அவுஸ்ரேலியா,சீனா ,போன்ற நாடுகள் ஒத்த கருத்துடன் சிறிலங்காவுக்கு ஆதரவு கொடுத்தவர்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
பாலஸ்தீன மக்கள் மீது நடத்தப்படும் பீரங்கி குண்டுகளை மலர் மாலை என்கிறதா அமேரிக்கா...?
 
இஸ்ரேலின் விமான தாக்குதலை - பீரங்கி தாக்குதலை உலக நாடுகள் ஆதரிக்கின்றன....?
 

கனேடிய பிரதமர் இஸ்ரேலியரின் பலஸ்தீனியர் மீதான தாக்குதலை நியாயப்படுத்தி உள்ளார். 

 
காசா மீதான இஸ்ரேலின் தொடர் வான் தாக்குதல்களில் கொல்லப்பட்டுள்ள பாலஸ்தீனர்களில் முக்கால்வாசிப் பேர் பொதுமக்கள் என்று ஐநா கூறுகின்றது.
 
இஸ்ரேல் நாடு தங்களை பாதுகாத்துக் கொள்ள முழு உரிமை உள்ளது - அமேரிக்கா..!
 
இஸ்ரேல் நாட்டின் தாக்குதலை / தற்காத்துக் கொள்வதை அமேரிக்கா ஆதரிக்கிறது என்று அமெரிக்க வெளியுறவுத் துரையின் செய்தி தொடர்பாளர் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்...
 
இந்திய பாராளுமன்றத்தில் இஸ்ரேலின் பாலஸ்தீனிய தாக்குதலை பற்றி பேசுவதற்கு மறுத்துள்ளார் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ்..!
 
இஸ்ரேல் இந்தியாவின் நட்பு நாடு என்று கூறினார் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர்....எனவே இஸ்ரேல் குறித்து இந்திய பாராளுமன்றத்தில் பேச அனுமதிக்க முடியாது என்றார்...
 
- சங்கிலிக்கருப்பு - 
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்புலிகள் அழிக்கப்படவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.....இது தமிழ் மக்களுக்கு எதிரான போரில்லை ....இப்படி சொல்லிதான் அமேரிக்கா,நோர்வே,இந்தியா,இங்கிலாந்து,அவுஸ்ரேலியா,சீனா ,போன்ற நாடுகள் ஒத்த கருத்துடன் சிறிலங்காவுக்கு ஆதரவு கொடுத்தவர்க

 

 

அண்ணா,

 

அதுதான் சொல்லிவிட்டேனே பாலஸ்த்தீனத்தில் நடப்பது இஸ்லாமிய அடிப்படைவாதத்திற்கெதிரான போரில்லையென்று. அது ஆக்கிரமிப்பாளனுக்கும், ஆக்கிரமிப்பிற்கு உள்ளாக்கப்படுபவனுக்குமான போர் என்று !

 

ஆனால் ஒன்று, இன்று பாலஸ்த்தீனத்தில் நடப்பதற்கும் அன்று வன்னியில் நடந்ததற்கும் அதிக வேறுபாடில்லை. பாவிக்கப்படும் சொற்பதங்களுக்கு அதிக வேறுபாடில்லை. உதாரணத்திற்கு, "மனிதக் கேட்யங்கள்", "மக்களுக்கான பாதுகாப்பு வலயங்கள்" "யுத்த நிறுத்த ஒப்பந்தம் - ஒப்பந்தமில்லை ", " மக்களுக்கான உணவு, மருத்துவ வசதிகளுக்கான தடை", "மக்கள் வாழிடங்களில் ராணுவ நிலைகளை அமைத்த போராளிகள்". "ஐ. நா வின் வேண்டுகோள்", " மக்களைக் காப்பதற்கான மனிதாபிமான போர் நடவடிக்கை "....இப்படிப் பல.

 

நாம் செய்தபோது சரியென்று பட்டவை மற்றையவன் செய்யும்போது பிழயென்று தெரிவது ஏனோ ??? விடை தெரியாக் கேள்விகள் இப்போது எழுகின்றன...என்ன செய்வது ?

  • கருத்துக்கள உறவுகள்

இம்முறை... இஸ்ரேல் தாக்குதலை கண்டித்து,,,,
இலங்கை முஸ்லிம்கள் கொழும்பில் ஆர்ப்பாட்டம் செய்யாமல், இருப்பதன் மர்மம் என்னவோ......

  • கருத்துக்கள உறவுகள்

இம்முறை... இஸ்ரேல் தாக்குதலை கண்டித்து,,,,

இலங்கை முஸ்லிம்கள் கொழும்பில் ஆர்ப்பாட்டம் செய்யாமல், இருப்பதன் மர்மம் என்னவோ......

 

எல்லாம் ஒரு பாதுகாப்புகருதித்தான்....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.