Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மலேசிய விமானம்: பலியான தமிழ் ஏர் ஹோஸ்டஸ் பிரமீளா ராஜேந்திரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

18-1405666276-premila-rajendran-600.jpg

 

 

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்:

பலியான மலேசிய தமிழ் ஏர் ஹோஸ்டஸ் பிரமீளா ராஜேந்திரன்.

 

 

கோலாலம்பூர்: உக்ரைன்- ரஷ்ய எல்லைப் பகுதியில் புரட்சிப் படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பணியாற்றிய 15 ஊழியர்களில் ஒருவர் தமிழ்ப் பெண் என்று தெரிய வந்துள்ளது.

 

ஏஞ்செலின் பிரமீளா ராஜேந்திரன் என்ற அந்த 30 வயதுப் பெண் ஏர் ஹோஸ்டஸாக பணியாற்றியுள்ளார். அவரும் இந்த சம்பவத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

 

விமானப் பணிப்பெண்ணாக வேண்டும் என்ற கனவு நனவாகி மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் இணைந்து பணியாற்றியவர் பிரமீளா என்று அவரது குடும்பத்தினர் கண்ணீர் மல்கக் கூறியுள்ளனர்.

 

சீனப் பத்திரிகை வெளியிட்டது.

சீன மொழியில் வெளியாகும் மலேசிய நாளிதழ் சின் சியூ சுட்டு வீழ்த்தப்பட்ட விமானத்தில் பயணித்த 15 ஊழியர்களின் பெயர்களை வெளியிட்டுள்ளது. அவர்களைப் பற்றிய விவரத்தையும் அது கூறியுள்ளது.

 

 

280 பயணிகள்.

இந்த விமானத்தில் மொத்தம் 295 பேர் பயணித்துள்ளனர். இவர்களில் 280 பேர் பயணிகள் ஆவர். 15 பேர் பைலட் உள்ளிட்ட ஊழியர்கள் ஆவர்.

 

 

2 கேப்டன்கள்- 2 துணை கேப்டன்கள்.

இந்த விமானத்தில் 50 வயதான வான் அமர்ன் பின் வான் ஹூசேன், 45 வயதான ஈஜின் சூ ஜின் லியோங் ஆகியோர் கேப்டன்களாகப் பணியில் இருந்துள்ளனர். அதேபோல 29 வயதான அகமது ஹக்கிமி பின் ஹனாபி, 27 வயதான முகம்மது பிர்தோஸ் அப்துல் ரஹீம் ஆகியோர் துணை கேப்டன்களாக இருந்துள்ளனர்.

 

தமிழ்ப் பெண் ஏஞ்செலின் பிரமீளா ராஜேந்திரன்.

தமிழ்ப் பெண்ணான ஏஞ்செலின் பிரமீளா ராஜேந்திரனும் பயணித்தவர்களில் ஒருவர். இவருக்கு 30 வயதாகிறது. விமான ஹோஸ்டஸாக இருந்துள்ளார். இவருக்கு சிறு வயதிலிருந்தே விமானத்தில் பறக்க வேண்டும் என்பதுதான் கனவாம்.

 

கனவு கருகிப் போன பரிதாபம்.

ஆனால் ஏஞ்செலின் கனவு இப்படி வானிலேயே கருகிப் போய் விட்டது அவரது குடும்பத்தினரையும், உறவுகளையும் பெரும் சோகக் கடலில் ஆழ்த்தியுள்ளது.

 

-தற்ஸ் தமிழ்-

 

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

துயரமான விடயம். ஆழ்ந்த இரங்கல்கள்..!

ஆழ்ந்த இரங்கல்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
 
18-1405671908-premila-rajandaran1-1600.j
 
கரைந்து போன தேவதை... கண்ணீர்க் கடலில் மலேசிய தமிழ் ஏர் ஹோஸ்டஸ் பிரமீளாவின் குடும்பம்!

 

கிளாங், மலேசியா: ஏவுகணையால் சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பணிப் பெண்ணாக பணியாற்றி பாதி வயதிலேயே தனது கனவு வாழ்க்கையை முடித்துள்ளார் மலேசியத் தமிழ்ப் பெண்ணான ஏஞ்செலின் பிரமீளா ராஜேந்திரன்.

 

30 வயதேயாகும் ஏஞ்செலினின் அகால மரணம் அவரது குடும்பத்தார், உறவுகள், நண்பர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

 

அவரது பேஸ்புக்கில் இரங்கல்கள் குவிந்து வருகின்றனர். பலர் தனியாக ஒரு பக்கத்தை ஆரம்பித்து இரங்கல் தெரிவித்தும், நினைவு கூர்ந்தும் செய்திகள் வெளியிட்டு வருகின்றனர்.

 

கிளாங் பகுதியைச் சேர்ந்தவர்.
பிரமீளா, மலேசியாவின் கிளாங் பகுதியைச் சேர்ந்தவர் ஆவார். இளம் வயது முதலே விமான பயணங்கள் மீது அதிக ஆர்வம் கொண்டவர்.
 

சாகசங்களில் விருப்பம்.
அதேபோல நீர் விளையாட்டு உள்ளிட்ட சாகசங்களிலும் அதிக ஆர்வம் கொண்டவர்.
 

தாய் மண் பாசம்.
தனது தாய் மண் மீதும் அதிக பாசம் வைத்திருந்தவர் பிரமீளா. மலேசியாவில் பிறந்து வளர்ந்தவர் என்றாலும் இந்தியா மீதும் அதிக பாசத்துடன் இருந்து வந்தவர்.
 

உலகம் சுற்றிய பறவை.
விமானப் பணிப் பெண்ணாக பல நாடுகளுக்கும் சிறகடித்துப் பறந்த இந்த அழகுப் பறவை இன்று பஸ்மாகிப் போய் விட்டது அவரது உறவுகளையும், நட்புகளையும் அதிர வைத்துள்ளது.
 

தற்ஸ் தமிழ்.

 

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
துயரமான விடையம்தான். எங்களுக்கு ( ஈழ தமிழருக்கு ) பழகிப்போச்சு 
 
ஆழ்ந்த இரங்கல்கள்.
  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்

  • கருத்துக்கள உறவுகள்

உக்ரைன் விமானம் என நினைத்து தவறுதலாக சுடப்பட்டு விட்டதாம். :o  :o

 

 

http://www.tutyonline.net/view/29_71487/20140718171223.html

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானத்தில் மலேசிய

தமிழ் நடிகை குடும்பத்துடன் பலியான பரிதாபம்

 

tamil%20actrees.jpg

 

 

 

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானத்தில், மலேசிய தமிழ் நடிகை குடும்பத்துடன் பரிதாபமாக பலியாகி விட்டார். பிறந்த நாள் கொண்டாடிய 2 நாளில் மரணம் அவரை வந்து தழுவிய கொடுமை நேர்ந்துள்ளது.

 

நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமிலிருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூர் நோக்கி 298 பேருடன் வந்து கொண்டிருந்த மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம்– எம்.எச்.17, உக்ரைனில் ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் வசமுள்ள ஷக்தர்ஸ்க் என்ற இடத்தில் கடந்த 17–ந் தேதி சுட்டு வீழ்த்தப்பட்டது.

 

இந்த விமானத்தில் பயணம் செய்தவர்களில் ஒருவர் மலேசிய தமிழ் நடிகை சுபா ஜெயா (வயது 38) என தெரிய வந்துள்ளது. இவர் கோலாலம்பூரில் குடும்பத்துடன் வசித்து வந்தார். 31 வயதில் நடிக்க வந்தார்.

 

‘ரிலேசன்ஷிப் ஸ்டேட்டஸ்’, ‘டோகாக்’ ஆகிய மலேசிய சினிமா படங்களில் நடித்துள்ளார். மேலும், மலேசிய டி.வி. ஒன்றில் வெளி வந்த ‘சுகமான சுமைகள்’ உள்ளிட்ட பல்வேறு டி.வி. தொடர்களில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். ‘போர்பிளே’, ‘சார்லிஸ் ஆன்டி’, ‘ஹங்க்ரி பார் ஹோப்’ ஆகிய நாடகங்களிலும் நடித்துள்ளார்.

 

பால் கோஸ் என்ற நெதர்லாந்து நாட்டு வாலிபரை காதலித்து மணந்தார். இந்த தம்பதியருக்கு காயிலா மாயா ஜெய் கோஸ் என்று ஒரு மகள் 2012–ம் ஆண்டு பிறந்தாள். பிறந்து 21 மாதங்கள் ஆன நிலையில், மகள் காயிலாவை, ஆம்ஸ்டர்டாமில் உள்ள தன் பெற்றோரிடம் எடுத்துச்சென்று காட்டி வர பால் கோஸ் நினைத்தார். மனைவி சுபா ஜெயாவிடம் பேசினார். அவரும் சம்மதித்தார். இதையடுத்து இந்த தம்பதியர் தங்கள் செல்ல மகளுடன் ஆம்ஸ்டர்டாமுக்கு சென்றனர்.

 

அங்கு சென்று குழந்தையை அதன் தாத்தா, பாட்டி மற்றும் உறவினர்களிடம் காட்டி விட்டு மீண்டும் கோலாலம்பூருக்கு மலேசிய ஏர்லைன்ஸ் விமானம், எம்.எச்.17 மூலம் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போதுதான் அந்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டு, மூவரும் ஒரே நேரத்தில் பலியாகி விட்டனர்.

 

மரணத்தை தழுவுவதற்கு இரண்டு தினங்கள் முன்பாகத்தான் சுபா ஜெயா, தனது 38–வது பிறந்த நாளை கொண்டாடினார். பிறந்த நாளைக் கொண்டாடிய இரண்டு தினங்களில் மரணம் தன்னை வந்து தழுவும் என அவர் நினைத்தும் பார்த்திருக்கவில்லை.

 

சுபா ஜெயா நடித்த பல குறும்படங்களை இயக்கியவர் மலேசிய கதாசிரியர், டைரக்டர் காய்ரில் பஹர். இவர் சுபா ஜெயா பற்றி கூறும்போது, ‘‘சுபா ஜெயா ஒருபோதும் புகழுக்காக ஏங்கியது கிடையாது. ஆனால் நடிப்பதில் அளவற்ற ஆர்வம் கொண்டிருந்தார். நாடகங்களில் நடித்துத்தான் திரையுலகுக்கு வந்தார். அவர் ஒரு போற்றத்தக்க பெண்மணி. தன் எதிர்காலத்தைப் பற்றி நிறைய திட்டங்கள் வைத்திருந்தார். இவர் இறந்து விட்டார் என்று நினைக்கவே முடியவில்லை’’ என்றார்.

 

சுபா ஜெயா, தனது தந்தை ஜெயரத்னத்துடன் ஒரு டி.வி. ‘ரியாலிட்டி ஷோ’வில் தோன்றி இருப்பது குறிப்பிடத்தக்கது. சுபாவின் மறைவு குறித்து அவரது நண்பர் சிவா என்பவர், ‘‘ அகாலமாக மறைந்து விட்டீர்கள் சுபா. உங்கள் திருமணத்தில் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தீர்கள். நிறைவேற்றுவதற்கு நிறைய கனவுகளை வைத்திருந்தீர்கள். அற்புதமான புன்னகை சிந்தும் அழகு மகளை பெற்றிருந்தீர்கள். இப்போதோ நீங்கள் மூவரும் ஒரே நேரத்தில் போய் விட்டீர்கள். உங்களை இழந்து தவிக்கிறோம்’’ என ‘பேஸ் புக்’ சமூக வலைத்தளத்தில் உருக்கமாக கூறி உள்ளார்.

 

நடிகரும், டைரக்டருமான பாகி ஜெய்னல், ‘‘சுபா ஜெயா, பால், பேபி காயிலா... நீங்கள் மேகங்களுடன் மறைந்து விட்டீர்கள்’’ என உருக்கமுடன் அதே வலைத்தளத்தில் குறிப்பிட்டு உள்ளார்.

 

-நக்கீரன்-

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.