Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரான்சில் லைக்கா தொலைபேசி அட்டை மற்றும் லைக்கா சுவரொட்டிகள் எரித்து போரட்டம்! video & Photo

Featured Replies

மகிந்த ராஜபக்சவின் பங்காளி நிறுவனமான லைக்கா மொபைல் நிறுவனம் தற்போது தமிழர்களின் தாயகத்திலும் தமிழகத்திலும் எதிர்ப்புக்களை சம்பாதித்து வரும் நிலையில் தற்போது ஐரோப்பாவிலும் தமிழர்களின் எதிர்ப்புக்களுக்கு முகங்கொடுக்க ஆரம்பித்துள்ளது.

france-lyca-1.JPG
புலம்பெயர் தேசங்களில் லைக்கா மொபைல் தொடர்பாக தமிழர் அமைப்புக்கள் மௌனமாக இருக்கும் இவ்வேளையில் இவ்வெதிர்ப்பலைகள் ஐரோப்பாவில் பரவலாக ஆரம்பித்துள்ளது.
france-lyca-3.JPG
இதன் தொடர்ச்சியாக பிரான்சில் தமிழர் வர்த்தக மையங்களில் ஓட்டப்படிருந்த லைக்கா சுவரொட்டிகள் மற்றும்   கத்தி பட சுவரொட்டிகள் மற்றும் லைக்கா தொலைபேசி அட்டை என்பவற்றை  எரித்து போரட்டம் ஒன்றை  பிரான்ஸ்  வாழ்  இளையவர்கள் நடத்தி  உள்ளனர். 
france-lyca-4.JPG
france-lyca-2.JPG

http://www.pathivu.com/news/33339/57//d,article_full.aspx

Edited by chinnavan

  • கருத்துக்கள உறவுகள்

கத்தி படத்தைப் புறக்கணியுங்கள்
லைக்கா தொலைபேசி அட்டையைப் புறக்கணியுங்கள்
புலம்பெயர் மக்களிடையே அதற்கான விளக்கங்களை வழங்குங்கள்
புலம்பெயர் வர்த்தக நிறுவனங்களை நாடி லைக்கா தொலைபேசி அட்டை விற்பனையை தவிர்க்கக் கோருங்கள்.
லைக்கா அட்டையைப் பாவிக்கும் யாரைக் கண்டாலும் அவர்களுக்கு உங்கள் விளக்கங்களை அளித்து பாவனையைத் தவிர்க்கக் கோருங்கள்
லைக்கா நிறுவனத்தினருக்கு உங்கள் கண்டனங்களை நேரடியாகவோ அல்லது மின்னஞ்சல் ஊடாகவோ தெரிவியுங்கள்

 

சுவரொட்டிகளைக் கொழுத்துவதால் எந்தப் பிரயோசனமும் இல்லை
அதனால் இளையோருக்கு வாழும் நாடுகளில் அவப்பெயர் மட்டுமே கிடைக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

இவ்விளைஞர்கள் பிரெஞ்சு  சட்டப்படி..

 

1- பொது இடத்தில் நெருப்பு மூட்டியமை

2- பொது  இடத்தை எரித்தமை (நிலம்)

3- ஆபத்தான  பொருட்களை  உபயோகித்தமை

4- அரச  நிர்வாகிகளுக்கு அதிக வேலைப்பளவை ஏற்படுத்தியமை..

 

என்பனவற்றுக்காக தண்டிக்கப்படலாம்..... :(

 

இளைஞர்கள்

விவேகத்துடன் செயற்படணும்

அல்லாது விடில்

அடுத்து தலைமுறையும் பயங்கரவாத பட்டியலில் இருந்து வெளிவருவது கடினம்.. :(

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவனின் பார்வையில் எது நடக்க வேணுமோ அது அளவுக்கு அதிகமாகவே நடக்குது. :rolleyes:

யார் பெத்த பிள்ளகளோ????????????  :unsure:  :(

 

இந்த பிள்ளகள  இங்க அனுபுங்கபா!  :wub:  :icon_idea:

இந்த பிள்ளகள  இங்க அனுபுங்கபா!  :wub:  :icon_idea:

 

 
இறந்து ஒரு வாரமாகியும் அகற்றப்படாத கழுதை; நடவடிக்கை எடுக்காத மன்னார் நகர சபை

DSC08874%200041.jpg

 

மன்னார் சாவற்கட்டு பகுதியில் புனித அந்தோனியார் கோவிலுக்கு முன்பாக உயிரிழந்து கிடக்கும் கழுதையை பல நாட்கள் ஆகியும் மன்னார் நகர சபை அதை அப்புறப்படுத்தவதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை என மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். சாவற்கட்டு அந்தோனியார் கோவிலுக்கு முன்பாக கடந்த 15ஆம் திகதி இறந்த நிலையில் காணப்பட்ட கழுதையை இதுவரை அப்புறப்படுத்துவதற்கு மன்னார் நகர சபை நடவடிக்கை எடுக்காமையால் குறித்த கழுதை சிதிலமடைந்து துர்நாற்றம் வீசிவருகிறது. மிருகங்கள், பறவைகள் என இறந்து கிடக்கும் கழுதையின் உடற்பாகங்களை இழுத்து ஆங்காங்கே போட்டுள்ளதுடன் இப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. இந்தச் சுகாதாரச் சீர்கேடு பாதிப்பை ஏற்படுத்தும் விதமாக உள்ளதோடு மக்கள் அப்பகுதியில் நடமாடுவதற்கும் தடையாக உள்ளது. மன்னாரில் இவ்வாறு பல சம்பவங்கள் இடம்பெற்றிருந்த போதிலும் குறித்த நேரத்தில் நகரசபை இறந்த மிருகங்களை அப்புறப்படுதுவதை தவிர்த்து வருவது மக்களை விசனசமடைய வைத்துள்ளது. பொது இடங்களில் இவ்வாறு இறந்து கிடக்கும் மிருகங்களை அப்புறப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்காதது ஏன் என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். இனிவரும் காலங்களில் இவ்வாறான மிருகங்கள் இறந்தால் அது சிதைவடைந்து சுகாதாரத்திற்கு கேடுவிளைவிக்காத வகையில் நகரசபை உரியநேரத்தில் தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர். குறிப்பாக '2025ஆம் ஆண்டில் மன்னார் நகர் அபிவிருத்தி' என்ற தலைப்பில் கீழ் புலம்பெயர் அமைப்புகளின் உதவியுடன் கழுதையின் மூலம் உச்ச பயனடைய பல திட்டங்களைமன்னார் நகரசபை முன்னெடுத்துவரும் நிலையில் ஏன் இவ்வாறு கழுதைகள் இறக்கும் போது மட்டும் நகரசபை அவற்றை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க முன்வருவதில்லை என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
 
DSC08874%200042.jpg

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்
பிரான்சில் லைக்கா தொலைபேசி அட்டை மற்றும் லைக்கா சுவரொட்டிகள் எரித்து போரட்டம்! 

 

காலம் கடந்த விழிப்புணர்வு!

சுவரொட்டிகள் எரிக்கப்பட்டதால் லைக்கா நிறுவனத்திற்கு பலகோடி நஷ்டம் ஏற்பட்டதாக எமது நிருபர் தெரிவித்தார்.

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய காலகட்டத்தில் வியாபாரிகள் மூலம்தான் தாயகதமிழன் முன்னேற முடியும்.......புரட்சி ,புண்ணாக்கு என வெளிக்கிட்டோம் என்றால் .....

:D எரிப்பவர்களை பார்க்கும் போதே தெரிகிறது அவர்கள் உண்மையான போராளிகள் தான்

ஒட்டுமொத்தத்தில் எல்லாக்கோணங்களிலும் தமிழர்களுக்குள் பகையும் ,பிணக்கும் ,முட்டிமோதலும்.. :( ......................சிங்கள அரசின் திட்டம் இனிதே நிறைவேறுகிறது .............
 
 என் தேசியத்தலைவர் பிரபாகரனை தேடுகிறேன் .........

தமிழ்-ஜிகாடிஸ்ட்ஸ் உருவாகுகிறார்கள் :) :) வெளிநாடுகள் எல்லாம் முஸ்லீம்கள் மேல் நல்ல கடுப்பில் உள்ளது..

இவர்கள் தேடிபோய் ஆப்பில் இருக்கபோகிறார்கள்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
 என் தேசியத்தலைவர் பிரபாகரனை தேடுகிறேன் .........

 

 

 என்ம்  தேசியத்தலைவர் பிரபாகரனை தேடுகிறேன்றோம்.

 என்ம்  தேசியத்தலைவர் பிரபாகரனை தேடுகிறேன்றோம்.

 

கடைசியில் "சாமி" ...அல்லது "இந்தியன்"  பட முடிவா என்று பார்ப்போம் :)...

(இந்தியன் இங்கு பொருந்தாது தான்..என்றாலும் .. :) )

  • கருத்துக்கள உறவுகள்

லைக்கா நிறுவனம் இலங்கை அரசுடன் இணைந்து பல வேலைத்திட்டங்களை கிட்டத்தட்ட ஐந்து வருடங்களாக செய்கிறார்கள். இவளவு காலமும் இவர்கள் எங்கிருந்தார்கள்? லைக்காவுக்கு இவர்களால் ஒரு சதம் கூட வராது. விளம்பர ரீதியில் பார்த்தால் லாபம் என்றும் சொல்லலாம்.

 

இலங்கையில் எமது உறவுகள் இன்னமும் இருக்கிறார்கள்/இருப்பார்கள்  என்பதையும்,இலங்கையிலே இலங்கை அரசின், குறிப்பாக ராசபக்ஸ சகோதரர்களின் ஆசியில்லாமல் வியாபாரத்தில் இருந்து பொதுப்பணி, சமூக வேலைகள் எதையுமே செய்ய முடியாது என்பதையும் கவனத்தில் கொள்வது அவசியம். லைக்கா யாழ் மாவட்டத்திலே ஒரு call centre மற்றும் processing centre அமைக்கப்போவதாக கேள்வி, இதனால் வேலை வாய்ப்புப் பெறப்போவதும் எமது உறவுகளே.  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.