Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சம்பந்தன் கருத்தை வரவேற்றுள்ள ஈ.பி.டி.பி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தன் கருத்தை வரவேற்றுள்ள ஈ.பி.டி.பி

 
உணர்ச்சி பேச்சுக்களாலும் வெற்றுக் கோசங்களாலும் அரசியல் தீர்வை அடைய முடியாது என்றும், நடைமுறை யதார்த்த வழியிலேயே தீர்வை பெற்றுக் கொள்ள முடியும் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தமிழரசுக் கட்சியின் 15 வது தேசிய மாநாட்டில் கூறியிருப்பதோடு கடந்த காலங்களில் அரசியல் உரிமைப் பிரச்சினையை தீர்ப்பதற்கு கிடைத்திருந்த பல நல்ல வாய்ப்புக்களையும் இழந்திருக்கின்றோம் என்பதையும் எற்றுக் கொண்டிருக்கின்றார். 

இது ஈ.பி.டி.பியினராகிய எமது நீண்டகால அரசியல் நிலைப்பாட்டை ஏற்றுக் கொண்டதன் வெளிப்பாடேயாகும். 

ஆகவே நாம் அதனை வரவேற்கின்றோம் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி விடுத்திருக்கும் ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, 

தமிழ் பேசும் மக்களின் அரசியலுரிமை பிரச்சினைகளுக்கு தீர்வு காண நாம் யதார்த்தமான வழிமுறையினையே வகுத்து செயலாற்றி வருகின்றோம். 

இந்த யதார்த்த வழிமுறை மூலமே நாம் அபிவிருத்தி முதற்கொண்டு மக்களின் வாழ்வாதார முயற்சிகளையும் திறம்பட செய்து வருகின்றோம். 

அது தவிர நாம் வகுத்துக் கொண்ட நடைமுறை யதார்த்த வழிமுறைதான் எமது மக்கள் இழந்து போன நிலங்களையும் படிப்படியாக மீட்டுத்தந்து கொண்டிருக்கிறது. 

உணர்ச்சி பேச்சுக்களாலும், வெற்றுக் கோசங்களாலும் எமது உரிமைகளை நாம் பெற்றுவிட முடியாது. மாறாக யதார்த்த வழிமுறை மூலமே நாம் அரசியல் தீர்வு என்ற இலக்கை எட்ட முடியும். 

இதுவரை கால வெறும் உணர்ச்சி பேச்சுக்களும் வெற்றுக் கோசங்களும் எமது மக்களுக்கு அழிவுகளையும், அவலங்களையும் பெற்றுத்தந்ததைவிட எதையும் தந்திருக்கவில்லை. இதையே நாம் நீண்டகாலாக கூறியும் வலியுறுத்தியும் வந்திருக்கின்றோம். 

நாம் கூறி வந்த அதே கருத்துக்களை இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பினர் காலம் கடந்தாவது கூற முற்பட்டதை நாம் வரவேற்கின்றோம். 

முன்னரே எமது யதார்த்த வழிமுறையினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஏற்றுக் கொண்டிருந்தால் எமது மக்களுக்கு இத்தனை அழிவுகளும் அவலங்களும் நடந்திருக்காது. 

முன்னரும் சம்பந்தர் நடைமுறை யதார்த்த அரசியல் குறித்து பல தடவைகள் கூறியிருக்கின்றார். 

ஆனாலும், அவையேதும் நடைமுறையில் சாத்தியப்படுத்தப்படவில்லை. ஆனால், வவுனியாவில் நடைபெற்ற மாநாட்டில் கூறியிருக்கின்ற இவ்விடயங்களாவது அர்த்தமானதாகவும் ஆத்மார்த்தமாகவும் செயல்வடிவம் கொடுக்கப்பட்டு சம்பந்தரினால் முன்னெடுக்கப்படுமாக இருந்தால் அதை ஈ.பி.டி.பி வரவேற்பதோடு தேவையான பங்களிப்புக்களை செய்யவும் தயாராகவுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்.

சரிவிடுவோம். இப்போது சிங்கள குடியேற்றம், இராணுவ ஆக்கிரமித்துள்ள மக்களின் மண்ணை விடுவித்தல், உங்களின் முதல்வர் விக்கி ஐயாவிற்கு உள்ள அதிகாரங்களைபெற்றுக்கொடுத்தல் இப்படி சில்லரை பிரச்சனைகளை முதல் தீர்க்க உங்களால் முடியாதுள்ளபோது வெறும் சிங்கக்கொடிபிடித்தாலும் அதே நிலைமைதான்..தனிப்பட்ட செல்வாக்குகளுக்குத்தான் உந்த பேச்சுக்கள் உதவும்..இனவிடிவுக்கல்ல. உங்களின் அணுமுறையால் ரோட்டும், பாலமும்தான் கிடைக்கும் அதுவும் அவங்கள் வசதியாக திரிவதற்கு.. தேர்தல்களில் முழங்குவதும் பின்னர் தொப்பி பிரட்டி இப்படி வெற்று கோசங்கள் உங்களுக்கே நீங்கள் சொல்வதும் மறதியும், சுய நலமும் உள்ளவர்களுக்கே..தமிழ்மக்கள் நிதானமாகதான் உள்ளார்கள்..

  • கருத்துக்கள உறவுகள்

இவங்கட காமடி தாங்க முடியல்ல. :lol::D

 

சம்பந்தன்... மத்தியில் கூட்டாட்சி.. வடக்குக் கிழக்கு இணைந்த மாநிலத்தில் சுயாட்சி.. இதனையும் தான் கற்பனாவாதம் என்று சொல்லி இருக்கிறார். :D

 

சம்பந்தனுக்கு.. சிங்கக் கொடியும்.. ஒட்டிய சிறீலங்காவும் தான்.. கற்பனை அல்லாத வாதம். மிச்சம் எல்லாம் கற்பனாவாதம் தான். :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
சம்பந்தன் கருத்தை வரவேற்றுள்ள ஈ.பி.டி.பி

 

 

இனியென்ன ஒரே கும்மாளம் தான்.... :lol:

 

ஆனால் அப்பப்ப தமிழ் தமிழ் எண்டு கத்துங்கோ...இல்லாட்டி சனமும் கையை விட்டுட்டு வேறை ஆருக்கும் கையை உயர்த்திப்போடுங்கள். :lol:  :D

  • கருத்துக்கள உறவுகள்

அய்க்கிய இலங்கைக்குள்ளான ஒரு தீர்வாக இருந்தால் என்ன அல்லது சுதந்திர தமிழீழத் தனியரசாக இருந்தால் என்ன பன்னாட்டுத் தலையீட்டுடன் கிட்டுமாயின் அங்கு ஈபிடிபியும் இருக்கும். இந்தியாவோ அல்லது பன்னாட்டுச் சமுகமோ இனி விடுதலைப் புலிகளின் குறிப்பாகப் புலத்துப் புலிகளை அங்கு அரசியல் செய்ய அனுமதிக்கப் போவதில்லை. இது எம்மவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாத கசப்பான உண்மை.

 

இங்கு  (தீவுக்குள்) உள்ள நிலைமையும் நான் புலத்தில் கண்ட கேட்ட நிலைமையும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம். பூசனிக்காயைச் சோற்றுக்குள் மறைக்கமுயன்றால் மீண்டும் ஒரு தோல்வியே கிட்டும். அதன் வலிகளை ஏற்றுக்கொள்ளப் போகின்றவர்கள் தாயகத்தில் வாழும் மக்கள் மட்டுமே!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
இன்றைய காலகட்டத்தில் உண்மையும் பொய்யும் உலகிற்கு தேவையில்லை.
 
சந்தர்ப்பங்களும் சமுக நிலைகளுமே சகலதையும் தீர்மானிக்கின்றன.
 
அண்மைக்கால அரசியல் நிலமைகள் இதற்கு சான்று.

தமிழர் பிரச்சனைக்கு தீர்வு குறித்து சம்மந்தரினது நிலைப்பாடும் செயலாளர் நாயகத்தின் நிலைப்பாடும் எப்போதும் கிட்டத்தட்ட ஒன்றாகவே இருகின்றது. சம்மந்தர் எப்போதும் பூசிமொழுகி தேசீய அரிதாரம் பூசி நடித்துக்கொண்டிருப்பார்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் பிரச்சனைக்கு தீர்வு குறித்து சம்மந்தரினது நிலைப்பாடும்

 

1- செயலாளர் நாயகத்தின் நிலைப்பாடும் எப்போதும் கிட்டத்தட்ட ஒன்றாகவே இருகின்றது.

 

2- சம்மந்தர் எப்போதும் பூசிமொழுகி தேசீய அரிதாரம் பூசி நடித்துக்கொண்டிருப்பார்.

 

1- நாயகத்தின் நிலைப்பாடு தானும் சிங்களமும் சார்ந்தது

அதனால் அவருக்கு பிரச்சினையில்லை.  அவர் தமிழரது பிரதிநிதியும் கிடையாது.

அவருக்கு கிடைக்கும் சிறிதளவு வாக்குகளும் லஞ்சத்துக்காக கிடைப்பது..

 

2- சம்பந்தர் தமிழரின் போராட்டத்தோடு கட்சியை வைத்திருப்பதாக  மக்கள் நம்பவதால்

அவருக்கு தமிழருக்குள்ள  அதிகாரங்களே உண்டு. அப்படி இப்படித்தான்  நடந்தாகணும்  இன்றையநிலையில்.

  • கருத்துக்கள உறவுகள்

அய்க்கிய இலங்கைக்குள்ளான ஒரு தீர்வாக இருந்தால் என்ன அல்லது சுதந்திர தமிழீழத் தனியரசாக இருந்தால் என்ன பன்னாட்டுத் தலையீட்டுடன் கிட்டுமாயின் அங்கு ஈபிடிபியும் இருக்கும். இந்தியாவோ அல்லது பன்னாட்டுச் சமுகமோ இனி விடுதலைப் புலிகளின் குறிப்பாகப் புலத்துப் புலிகளை அங்கு அரசியல் செய்ய அனுமதிக்கப் போவதில்லை. இது எம்மவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாத கசப்பான உண்மை.

 

இங்கு  (தீவுக்குள்) உள்ள நிலைமையும் நான் புலத்தில் கண்ட கேட்ட நிலைமையும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம். பூசனிக்காயைச் சோற்றுக்குள் மறைக்கமுயன்றால் மீண்டும் ஒரு தோல்வியே கிட்டும். அதன் வலிகளை ஏற்றுக்கொள்ளப் போகின்றவர்கள் தாயகத்தில் வாழும் மக்கள் மட்டுமே!

 

அண்ணே இது ஒன்றும் புதிசில்ல..

 

புலிகள் காலத்திலும்.. வவுனியாவுக்கு இப்பால்.. அப்பால்.. என்று இரண்டு அரசியல் இருந்தது.

 

இந்தியப் படைகள் காலத்திலும்.. மதவாச்சிக்கு இப்பால்.. அப்பால் என்று இரண்டு அரசியல் இருந்தது.

 

சந்திரிக்கா அம்மையார் காலத்திலும்.. ஒமந்தைக்கு இப்பால்.. அப்பால் என்று இரண்டு அரசியல் இருந்தது.

 

இன்றும் அது உள்ளது.

 

ஈபிடிபியை கலைப்பமோன்னு அதன் செயலாளர் நாயகமே யோசிக்கிறார்.. நீங்க என்னடான்னா. ஏன்னா வீணை.. யானையை விட்டு.. வெற்றிலையோடு ஐக்கியமாகி கனகாலமாச்சி.

 

அண்ணே.. நீங்க.. காணாத அரசியல் காட்சிகள் எல்லாம் மக்கள் கண்டிட்டுத்தான் வந்திருக்காங்க. அவங்களுக்கேவா..???!!! :lol::icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

ஈபிடிபியை கலைப்பமோன்னு அதன் செயலாளர் நாயகமே யோசிக்கிறார்.. நீங்க என்னடான்னா. ஏன்னா வீணை.. யானையை விட்டு.. வெற்றிலையோடு ஐக்கியமாகி கனகாலமாச்சி

ஈபிடிபியைக் கலைக்கப்போவதாக செயலாளர் நாயகம் உங்களிடம் வந்து சொன்னாரா? இது ஒன்றேபோதும் உங்களைப் போன்றவர்களின் கற்பனை நிலைமையை விளங்கிக்கொள்வதற்கு. :D

ஈபிடிபியைக் கலைக்கப்போவதாக செயலாளர் நாயகம் உங்களிடம் வந்து சொன்னாரா? இது ஒன்றேபோதும் உங்களைப் போன்றவர்களின் கற்பனை நிலைமையை விளங்கிக்கொள்வதற்கு. :D

இல்லை வாலி அவர் கூறியது ஈபிடிபி என்ற கட்சி தனது சொந்த கொள்ளைகளை கூட நிர்ணயம் செய்ய முடியாமல் தமிழர் பிரதேசத்தில் கூட தனது சொந்த சின்னத்தில் போட்டியிட முடியாமல் நடைமுறையில் ஆளும் மகிந்த கட்சியுடன் கரைந்து ஐக்கியமாகி அவர்களின் கொள்கைகளை முழுமையாக ஏற்றுக் கொண்டு வரும் நிலையை அவ்வாறு  குறிப்பிட்டார் என நான் நினைக்கிறேன்.

Edited by tulpen

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.