Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வீரத்தை எடுத்துக்காட்டியவர்கள் தமிழ்ப் பெண்களே’ விநாயகமூர்த்தி முரளிதரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இது உங்களில் வழமையான அலட்டல் அண்ணே முன்னாள் பெண் போராளிகளை விபச்சாரிகள் என்று சொன்ன ஆள் நீங்கள் அரசியல் கருத்து எதிபார்ப்பது தப்பு  :D

 

இப்படிச் சொல்லி எஸ் ஆக முடியாதுண்ணே..!

 

இயக்கத்தில இருந்தவனுக்கு என்று சில பொறுப்புக்களை இயக்கம் கட்டி வளர்த்துத்தான் விட்டிருக்குது. எத்தனையோ போராளிங்க தலைவரைக் காணாமலே.. தாய் மண்ணுக்காக மடிஞ்சிருக்குங்க. தலைவர் கண்முன்னால் இருந்தால் தான்.. இயக்கம் என்று இல்லை. இல்லாமலே அதன் கொள்கை கோட்பாடுகளுக்குள் இருந்து இயங்குபவன் தான் உண்மையான போராளி. அதைவிடுங்க.. உங்களுக்கு உதைச் சொல்லி எங்க விளங்கப் போகுது. :D

 

முன்னாள் போராளிகளை விபச்சாரின்னு நாங்க எங்க சொன்னம். கதையளக்கப்படாது.

 

சிங்களப் படையில் இணைந்து.. அல்லது ஒட்டுக்குழுக்களோடு இணைந்து.. தன்னிச்சையாக.. சிங்களப் படைகளுக்கான விபச்சார மையங்களில் இயங்குபவர்கள் தான் விபச்சாரிகள் என்று கூறப்பட்டுள்ளனர். அது தான் அண்ணே அங்க நடப்பு. போய் அனுராதபுரத்திலும்.. பொலனறுவையிலும் பாருங்க..! சாதாரண சிங்கள மக்களே இந்த அசிங்கத்தை பொறுத்துக் கொள்ள முடியாது பொருமுவதை கண்டவர்கள் நாங்கள். நம்மிடமேவா.. கதை அளப்பு...!!

 

சிங்களப் படைகளில் இணைபவர்கள் முன்னாள் போராளிகள் என்பது உங்களது எடுகோள்..! எங்களது அல்ல..! :icon_idea::)

 

Edited by nedukkalapoovan

  • Replies 125
  • Views 8.5k
  • Created
  • Last Reply

தலைவர் ஒரு பாத்திரம் மாதிரி.. அதில் போராளி என்கிற நீரை ஊற்றினால் அது ஒரு வடிவத்தில் இருக்கும். பலர் அந்த வடிவத்திலேயே நின்று புகழுடன் மரணித்தார்கள்.. சிலர் வெளியில் சிந்தி அலங்கோலமானார்கள்.. சிந்திய நீரை யாரும் சீந்துவதில்லை..

கருணாநிதி யாழுகுள் வந்துவிட்டாரோ என்று நினைத்தன் :icon_mrgreen: ,உதைத்தான் அவர் தன் தொண்டர்களுக்கு இப்பவும் சொல்லி வருகின்றார் .பாவம் அவர்களும் தீக்குளிக்க தயாராக இருக்கின்றார்கள் .

 

தனிநபர் விசுவாசத்தின் உச்சம் தான் மூன்றாம் உலக நாடுகளின் அரசியல்  நாறுவதன் முக்கியகாரணம் . :lol:  ஜெயா டி வியை இப்ப பார்த்தால் விளங்கும் .மேற்கத்தைய நாடுகள் போல ஒரு சிஸ்டத்தை அவர்கள் நம்புவதில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்

உயிருக்கு பயந்து போராடாமல் நாட்டை விட்டு வந்தவர்களுக்கு.......எமது மண்/நாடு சம்பந்தமாக என்னென்ன அருகதைகள் இருக்கின்றன என்பதை பட்டியலிட்டு கூற முடியுமா? எமக்கும் வருங்கால சந்ததிக்கு உதவக்கூடும்!!!:icon_idea:

நீங்கள் மட்டுமல்ல உங்களைப்போல் கருத்துடையவர்களிடமும் பதிலை "ஓடி வந்தவர்கள் சங்கம்" எதிர்பார்க்கின்றது. :D

அண்ணா நான் ஓடி வந்தவர்கள் கருத்து சொல்ல அருகதை அற்றவர்கள் என சொல்லவில்லை.அவர்களோ,அவர்கள் பிள்ளைகளோ,சகோதரங்களோ அங்கு இருந்து போராடாமல் அங்கிருந்து போராடிய ஒருவரைப் பார்த்து துரோகி என சொல்லும் அருகதை அவர்களுக்கு இல்லை என்பதே எனது கருத்து. தலைவர்,பொட்டம்மான் கூட கருணாவை துரோகி என சொல்லவில்லை...

தயாண்ணா தேவையில்லாமல் இத் திரியில் கருத்து எழுதி தன்ட மானத்தை தானே கெடுத்துக் கொள்கிறார்.ஆமாம் தயா அண்ணா ஒன்றுமே தெரியாத கருணாவையா தலைவர் தூக்கி பக்கத்தில் வைத்திருவர்?...தலைவரை நீங்களே அவமதிக்கலாமா?

  • கருத்துக்கள உறவுகள்

கருணா எதையும் காட்டிக்கொடுக்கவில்லை என்று சொல்ல வாறீங்களா?

எதையும் எதிர்பார்க்காது அடைக்கலம் கொடுக்க சிங்கள அரசு அப்பாவியும் இல்லை..காட்டிக்குடுக்காமல் இருக்க கருணா உத்தமரும் இல்லை. சிங்கள அரசுடன் இணைந்து கருணா குழுவாக செயற்பட ஆரம்பித்த பின் இவன் செய்த கொலைகளுக்கும் தமிழ் மக்களுக்கு எதிரான செயற்பாடுகளுக்கும் உங்கட விளக்கம் என்ன?

இது நகைச்சுவை பக்கத்தில் இணைக்க வேண்டியது. நீங்கள் சும்மா விதண்டாவாதம் செய்ய இவ்வாறான கருத்துக்களை வைக்கிறீர்கள் என்றே தோன்றுகின்றது. கருணா சுயலாபத்திற்காக சிங்கள அரசுடன் இணையாமல் தமிழ்ரின் எதிர்காலம் பாதிக்க கூடாது என்று இணைந்தாரா?

தெனாலி அரசு எதையும் எதிர் பார்க்காமல் கருணாவுக்கு அடைக்கலம் கொடுக்கவில்லை. புலிகளிடம் இருந்து கருணாவை பிரித்ததே அரசுக்கு கிடைத்த வெற்றி தானே!...இனியபாரதியின் குழு,பிள்ளையான் குழு செய்வதற்கு ஏல்லாம் கருணா பொறுப்பாக மாட்டார்.தவிர நான் ஏற்கனவே சொல்லி விட்டேன் அரசோடு இருக்கும் கருணா உத்தமர் இல்லை என்று.நாயோடு சேர்ந்தால் நக்கித் தான் ஆக வேண்டும்.தவிர நான் மேலே எழுதியது போராட்ட அழிவைப் பற்றி அதற்கு பிறகு வந்த காட்டிக் கொடுப்புகளை பற்றி அல்ல.அப்படிப் பார்த்தால் கடைசி வரைக்கும் தலைவரோடு இருந்த பாப்பா போன்ற சிலரும் தான் காட்டிக் கொடுக்கினம்.தன்னுடைய உயிரை காப்பாற்றிக் கொள்ளவும்,பெரும் உயிர் இழப்புகளை தவிர்க்கவும் கருணா அரசோடு சேர்ந்தார்.வந்து மண்டையில் போடு என்று தலையை கொடுக்க சொல்கிறீர்களா?

நெடுக்கருக்கு சும்மா இதில் வந்து தான் ஒரு தேசியவாதி போல கதையளக்கத் தான் தெரியும்.2009 ம் ஆண்டு அரசில் சரணடைந்த போராளிகளை பார்த்து அவர்கள் ஏன் சயனைட் குடிக்கவில்லை என கேட்ட ஆள் தானே அவர்.எழுதத் தெரியும் என்டவுடன் இதில் வந்து கதையளக்கிறது.அதை நம்பி விசிலடிக்கவும் கூட்டம் இருக்குது

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கருக்கு சும்மா இதில் வந்து தான் ஒரு தேசியவாதி போல கதையளக்கத் தான் தெரியும்.2009 ம் ஆண்டு அரசில் சரணடைந்த போராளிகளை பார்த்து அவர்கள் ஏன் சயனைட் குடிக்கவில்லை என கேட்ட ஆள் தானே அவர்.எழுதத் தெரியும் என்டவுடன் இதில் வந்து கதையளக்கிறது.அதை நம்பி விசிலடிக்கவும் கூட்டம் இருக்குது.

 

சிங்கள அரசிடம் சரணடையும் நிலையில் சயனைட் அருந்துவது தான் போராளிகளின் கொள்கை. இந்த மாதமும் கூட அத்தகைய தியாக வேங்கைகளுக்குரிய மாதமும் கூட..!

 

சிங்கள அரசிடம்.. ஒரு சர்வதேசக் கண்காணிப்பும் இன்றி போராளிகள் சரணடைந்ததன் விளைவு..

 

கிணற்றில் தள்ளிவிடப்பட்டு சாகிறார்கள்.

 

தூக்கில் தொங்கிறார்கள்.

 

மருந்து குடித்து சாகிறார்கள்.

 

வெளிநாடுகளில் அகதி என்று வந்து அந்தரிக்கிறார்கள்.

 

சிறைகளில் கிடந்து துன்பப்படுகிறார்கள்.

 

காணாமல் போகடிக்கப்பட்டிருக்கிறார்கள்.

 

படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.

 

பிடித்துக் கொடுக்கப்பட்டிருக்கிறார்கள்.

 

பிச்சை எடுக்க செய்யப்பட்டுள்ளார்கள்.

 

புலிகளை புத்துயிர்க்கிறார்கள் என்று கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

 

விருப்பத்துக்கு மாறாக சிங்கள இராணுவப் புலனாய்வுக்கு பயன்படுத்தப்படுகிறார்கள்.

 

சிங்கள இராணுவத்துக்கு கூலிகளாக்கப்பட்டுள்ளனர். அடிமைகளாக்கப்பட்டுள்ளனர்.

 

சிங்கள இராணுவம் காதலிக்கும் கல்யாணம் செய்யும் கைவிடும்.. விளையாட்டுப் பொருளாக்கப்பட்டுள்ளார்கள்.

 

பாலியல் தொழிலுக்கு சிங்களவர்களாலும்... ஒட்டுக்குழுக்களாலும்.. பயன்படுத்தப்படுகிறார்கள்.

 

இராணுவத்தில் கட்டாயமாக இணைக்கப்பட்டு சித்திவதைகளுக்கும் பாலியல் துன்புறுத்தல்களுக்கும் ஆளாகியுள்ளார்கள்.

 

இது பற்றி நீங்கள் எப்போதாவது சிந்தித்துப் பார்த்ததுண்டா..??! இந்தத் துன்பங்களின் வலியுணர்ந்ததுண்டா...??!  ----------------

-----------------

நியானி: கண்ணியமற்ற வார்த்தைப் பிரயோகங்கள் நீக்கப்பட்டுள்ளன.

Edited by நியானி

  • கருத்துக்கள உறவுகள்

இசை நீங்கள் எழுதியது விதண்டவாதம் என உங்களுக்கு நன்றாகத் தெரியும் என்டாலும் உங்களுக்காக;புளுட்டஸ்,சீசரை குத்தியது தன்ட சுய லாபத்திற்காக ஆனால் கருணா செய்தது தனது சுயத்திற்காக இல்லை. அவரை இலங்கை அரசு வைத்திருப்பதிலும் பார்க்க புலிகளில் இருக்கும் போது அவரை ராஜா மாதிரி வைத்திருந்தார்கள்.அதையும் மீறி அவர் இயக்கத்தை விட்டுப் போனதால் தான் கிழக்கு மாகணாமாவது ஒரு பெரிய யுத்த அழிவில் இருந்து தப்பியது. இல்லா விட்டால் இன்னும் 3 மடங்கு சனம் செத்திருக்கும்.அதற்காவது அவருக்கு நீங்கள் நன்றியுடையவராக இருங்கள்.

 

இது தவறான தகவல் ஆகும். முதன் முதலில் பெரியளவிலான மக்கள் படுகொலையைச் சிங்கள அரசு (மகிந்த அரசு) மட்டக்களப்பில் இருந்து தான் ஆரம்பித்தது. வாகரைப் பகுதியில் 2007-2008ம் ஆண்டு காலப்பகுதியில் நடத்திய ஆக்கிரமிப்புக் காலத்தில் வைத்தியசாலை மீது தொடர்ச்சியாக நடத்தப்பட்ட தாக்குதல்களில் 400-600 வரையான பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இதன் பிற்பாடு புலிகள் மட்டக்களப்பினைக் கைவிட வேண்டிய சூழலை அது உருவாக்கியது. ஆனால் பொதுமக்கள் மீதான படுகொலைகளை அப்போது யாரும் கண்டிக்கவில்லை. புலத்தில் இருப்பவர்களைச் சொல்கின்றேன்... இந்த செயல்களால் உற்சாகமடைந்த சிங்கள அரசு பொதுமக்களைக் கொல்வதையே இராணுவ இலக்குகளாகத் தெரிவு செய்து தாக்குதல் நடத்தின. மண்டைதீவில் புலிகள் இறங்க முயன்றபோது அங்கே தெரிவு செய்யப்பட்ட சிங்கள அரசின் இலக்குகள் மக்களின் குடியிருப்புக்கள். அதன் போது 100 வரையிலான பொதுமக்கள் கொல்லப்பட்டனர். புலிகள் தரப்பில் ஆள் இபழ்பில்லை என நினைக்கின்றேன். அதன் பிற்பாடு புலிகள் சண்டையை நிறுத்தி விட்டுத் திரும்பி வந்துவிட்டனர். அதன் பிற்பாடு சிங்கள அரசு தெரிவுசெய்த ஒவ்வொரு இலக்குகளும் மக்களின் குடியிருப்புக்களே!ஏனென்றால் மக்களைத் தாக்குதல் இலக்குளாகத் தெரிவுசெய்யும்போது புலிகளால் ஒன்றுமே செய்ய முடியவில்லை.

2001ம ஆண்டு டிசம்பர் மாதம் பிற்பாடு நடந்த சண்டை என்றால் அது 2007ம் ஆண்டு நடந்த சண்டைகளே. அதனால் 2004ம் ஆண்டு கருணாபிரிவுக்குப் பிறகு நடந்த சண்டைகள் என்று கருணாவுக்குப் புகழ் பாடுவதில் எந்த பிரியோசனமும் இல்லை. ஓயாத அலைகள் 3 பற்றிய காணோளிகள் இணையத்தில் உள்ளன. அவை கருணா பிரிவதற்கு முன்னர் உருவாக்கப்பட்டவை. அவற்றில் கருணாவின் பங்கு என்ன அளவு என்பது பற்றிப் பார்த்து விட்டு கதையளவுங்கள்... ஜெயந்தன் படையை ஜெயனார்த்தன் வழி நடத்தினார். அவர் கடைசிவரை வன்னியிலேயே நின்றார். அவரோடு நின்ற அணிகளும் வன்னியிலேயே நின்றனர்...

எமக்குள் இருக்கும் பிரதேசவாதம் சார்ந்த புரிந்துணர்வுகள் மதவாதம் சார்ந்த புரிந்துணர்வுகள் வரலாற்றுவழியான முரண்பாடுகள் குறித்த போதிய அறிவும் அதை எவ்வாறு கையாள்வது என்ற திறனும் தமிழர்தரப்பிடம் இருக்கவில்லை ஆனால் சிங்களத்திடம் இருந்தது. இந்த திறன்கள் ஒவ்வொன்றும் நூறு படை நடவடிக்கை வெற்றிக்குச் சமமானது. கருணாவையும் அவர் மீது கைவைப்பதையும் மிகச் சாதராணமான விசயமாக ஒரு துரோகி ஒழிப்பு என்ற மிக அற்பமான குறுகிய சிந்தனைக்குள் தான் தமிழர் தரப்பு இருந்தது. கருணா கூட தன்னை புலிகள் போட்டுத் தள்ளப்போவதாகவே கூட நினைத்திருக்கலாம் ஏனெனில் கருணா ஒரு தமிழன். ஆனால் சிங்களத்தின் காய் நகர்த்தலில் அது வடக்கு கிழக்குக்கான மோதல். பிரிவினை. பழைய முரண்பாடுகளை புதுப்பித்தல் என்ற சரியான கணக்கு இருந்தது.

 

வடக்கில் இயக்கங்கள் அதன் தலமைகள் மோதிக்கொண்டது. புலிகளுக்குள்ளும் அதிகாரப்போட்டி சார்ந்து வடபகுதியை சேர்ந்த பல தளபதிகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டனர். அவைகளுக்கான எதிர்விழைவுகள் மோசமானதாக இருக்கவில்லை. ஆனால் கருணா ஒரு தளபதி ஆனால் ஒரு பிரதேசம் அவருடன் தொடர்புபட்டது.

 

கருணாவின் ராணுவத்திறன் என்பது இங்கே முக்கியமில்லை. கருணாவில் கைவைக்கும் போது தமிழீழத்தில் அரைவாசி பிரதேசத்தோடு புதிய முரண்பாடு தோன்றுகின்றது. இஸ்லாமியத் தமிழர்களில் கைவைக்கும் போது தமிழர்களில் மதவாரியாக கிட்டத்ட்ட பாதி சனத்தொகையோடு முரண்பாடு ஏற்படுகின்றது. தேசீய விடுதலைப்போராட்டம் தனது இலக்கையும் எல்லைகளையும் தானே அழித்து குறுக்கிக் கொள்கின்றது. அதற்குள்ளும் இயக்க மோதல்கள் உள்ளக முரண்பாடுகள் என்னும் எல்லைகளை குறுக்கிக் கொள்கின்றது.

 

இயக்க மோதல்கள், இஸ்லாமியப்பிரிவனைவாதம், கருணா சாரந்த பிரதேசப் பிரிவினை வாதம் இல்லாமல் இருந்திருந்தால் அது ஒரு பெரும் தேசீயச் சக்தி. அதை இராணுவரீதியில் வெற்றி கொள்வது அவ்வளவு எளிதல்ல. சிங்களம் ராணுவரீதியல் வென்றது நாலில் ஒரு பங்குதான் ஏனைய மூன்று பங்கும் அதன் தந்திரோபயத்துக்கு கிடைத்த வெற்றியே!

 

மேலும் கருணாவின் பிரிவு என்பது போராடும் போர்க்குணத்தின் மீது உளவியல் ரீதியாக சம்மட்டியால் விழுந்த அடி. அதன் பிறகு எஞ்சிய ஒரு ஒரு நம்பிக்கையும் தென்பும் பால்ராஜின் இயற்கை மரணத்தோடு காணாமல் போனது. 

 

சிங்களம் தனக்கெதிராக போராடிய தனது இனத்தவர்களை கொன்ற இயக்கங்களையும் அதுசார்ந்தவர்களையும் கருணா கேபி போன்றவர்களையும் எப்படி அரவணைத்துக் கையாள்வது என்று தன்னையும் தனது அடுத்த தலைமுறைகளையும் வழிநடத்துகின்றது. தனது சினத்தையும் ஆத்தித்தையும் மூர்க்கத் தனத்தையும் கூட எப்படி எங்கே யாரிடம் பயன்படுத்துவது என்று ஒரு ஒழுங்கு அதற்கு இருக்கின்றது. அவை எதுவும் எம்மிடம் கிடையாது. எமது வாதங்களும் சிந்தனை முறையும் அதற்கு எதிரானது. எந்த ஒரு அழிவில் இருந்தும் அதற்கான காரணத்தில் இருந்தும் எதையும் நாம் கற்பவர்கள் இல்லை. எமது முட்டாள்தனங்களை நியாயப்படுத்தும் வரை நாம் முட்டாள்களே !

  • கருத்துக்கள உறவுகள்

இது தவறான தகவல் ஆகும். முதன் முதலில் பெரியளவிலான மக்கள் படுகொலையைச் சிங்கள அரசு (மகிந்த அரசு) மட்டக்களப்பில் இருந்து தான் ஆரம்பித்தது. வாகரைப் பகுதியில் 2007-2008ம் ஆண்டு காலப்பகுதியில் நடத்திய ஆக்கிரமிப்புக் காலத்தில் வைத்தியசாலை மீது தொடர்ச்சியாக நடத்தப்பட்ட தாக்குதல்களில் 400-600 வரையான பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இதன் பிற்பாடு புலிகள் மட்டக்களப்பினைக் கைவிட வேண்டிய சூழலை அது உருவாக்கியது. ஆனால் பொதுமக்கள் மீதான படுகொலைகளை அப்போது யாரும் கண்டிக்கவில்லை. புலத்தில் இருப்பவர்களைச் சொல்கின்றேன்... இந்த செயல்களால் உற்சாகமடைந்த சிங்கள அரசு பொதுமக்களைக் கொல்வதையே இராணுவ இலக்குகளாகத் தெரிவு செய்து தாக்குதல் நடத்தின. மண்டைதீவில் புலிகள் இறங்க முயன்றபோது அங்கே தெரிவு செய்யப்பட்ட சிங்கள அரசின் இலக்குகள் மக்களின் குடியிருப்புக்கள். அதன் போது 100 வரையிலான பொதுமக்கள் கொல்லப்பட்டனர். புலிகள் தரப்பில் ஆள் இபழ்பில்லை என நினைக்கின்றேன். அதன் பிற்பாடு புலிகள் சண்டையை நிறுத்தி விட்டுத் திரும்பி வந்துவிட்டனர். அதன் பிற்பாடு சிங்கள அரசு தெரிவுசெய்த ஒவ்வொரு இலக்குகளும் மக்களின் குடியிருப்புக்களே!ஏனென்றால் மக்களைத் தாக்குதல் இலக்குளாகத் தெரிவுசெய்யும்போது புலிகளால் ஒன்றுமே செய்ய முடியவில்லை.

2001ம ஆண்டு டிசம்பர் மாதம் பிற்பாடு நடந்த சண்டை என்றால் அது 2007ம் ஆண்டு நடந்த சண்டைகளே. அதனால் 2004ம் ஆண்டு கருணாபிரிவுக்குப் பிறகு நடந்த சண்டைகள் என்று கருணாவுக்குப் புகழ் பாடுவதில் எந்த பிரியோசனமும் இல்லை. ஓயாத அலைகள் 3 பற்றிய காணோளிகள் இணையத்தில் உள்ளன. அவை கருணா பிரிவதற்கு முன்னர் உருவாக்கப்பட்டவை. அவற்றில் கருணாவின் பங்கு என்ன அளவு என்பது பற்றிப் பார்த்து விட்டு கதையளவுங்கள்... ஜெயந்தன் படையை ஜெயனார்த்தன் வழி நடத்தினார். அவர் கடைசிவரை வன்னியிலேயே நின்றார். அவரோடு நின்ற அணிகளும் வன்னியிலேயே நின்றனர்...

தூயவன் நான் சொல்ல வந்தது 2009 ஆண்டும் கருணா,புலிகளோடு இருந்திருந்தால் வன்னியை அழித்த மாதிரி,மட்டக்களப்பையும் அழித்திருப்பார்கள் என்பதையே

தயாண்ணா தேவையில்லாமல் இத் திரியில் கருத்து எழுதி தன்ட மானத்தை தானே கெடுத்துக் கொள்கிறார்.ஆமாம் தயா அண்ணா ஒன்றுமே தெரியாத கருணாவையா தலைவர் தூக்கி பக்கத்தில் வைத்திருவர்?...தலைவரை நீங்களே அவமதிக்கலாமா?

 

வழமையான அரைகுறைதனம்... 

 

மிகவும் ஆழுமை கொண்டவரான தலைவர் பிரபாகரன் யாரையும் ஏற்றத்தாள்வோடை நடத்தியது இல்லை...  அதுவே அவரின் வெற்றியின் இரகசியம்... 

 

சூசை அண்ணை , பொட்டம்மான் ,  தீபன் அண்ணை,  சொர்ணம் அண்ணை , பால்ராஜ் அண்ணை ,  ஜெயம் அண்ணை , சூனா பானா போண்றவர்கள் வரிசையில் கருணாவும் ஒருவர் அவ்வளவு தான்.. 

 

இவ்வளவு பேரை போல கீழை இருக்கும் போராளிகளை வேலை வாங்குவதில் கருணாவும் நேர்த்தியாவனர்  விசயம் அவ்வளவே... !!   இதை தாண்டி  கருணா தனி ஒருவராக  போர் செய்து வெற்றியை குவித்தார் எண்டு  கொலிவுட் பட அளவிலை நீங்கள் எல்லாம் சொல்லுறது போல எல்லாம் இல்லை... 

 

தலைவர் தான் ஒருவரே வெற்றியின் காரணம் எண்டு நினைத்து இருந்தால் தன்னோடு நிண்டு போராடியவர்களை போற்ற மாவீரர் நாளை நடத்தி இருக்க சந்தர்ப்பமே இல்லை... 

 

தலைவர் போராளிகள் மத்தியில் பேசும் போது அடிக்கடி சொல்லும் விடயம்  நான் யாரையும் போராளியாக வளர்க்க விரும்பவில்லை...  அனைவரையும் தளபதிகளாகவும் தலைவராகவுமே ஆக்க விரும்புகிறேன்,  பொறுப்புக்களை சுமக்கும் பக்க்குவம் எல்லாருக்கும் வரவேண்டும் என்பார்...  

 

 அதுவே வே . பிரபாகரனுக்கும்  மற்றய தமிழ் தலைவர்களுக்குமான வித்தியாசம்... 

பிள்ளையானைப் பற்றி முன்னர் நீங்கள் சொன்னது நல்ல நினைவில் இருக்கின்றது.

கருணா அம்மானின் வழிநடத்தலில்தான் ஜெயசிக்குறு நடவடிக்கை முறியடிக்கப்பட்டது என்பதை இலகுவாக மறுக்கமுடியாது. அதனால்தான் அவரின் சில செயற்பாடுகள் பற்றி தலைவர் அறிந்திருந்தும் நடவடிக்கைகள் எதுவும் எடுக்காமல் விட்டிருந்தார்.

தேவையற்ற அழிவுகளைத் தவிர்ப்பதற்காகத்தான் சகோதரச் சண்டையைத் தவிர்த்தார். உசார் மடையர்களாக இருப்பதைவிட விவேகமாகத்தான் இருந்திருக்கின்றார்.

படுகொலை முயற்சிகளில் சிக்காது உயிரோடு இருப்பதே பெரிய சாதனைதானே!

 

ஜெயசிக்குறு நடவடிக்கையின்  எதிர் மூலோபாயம் கருணாவுக்கு சொந்தமானது என்பதுதான் உங்களின் கருத்தாக இருந்தால் மன்னிக்கவும் என்னால் அதோடு உடன் படமுடியவில்லை... 

 

1990 களில் வன்னியில் நடந்த மாங்குளம் முகாமாகட்டும் , கொக்காவில் ,  முகாம் களின் மீதான நடவடிக்கைகள் அனைத்தின்  நகர்வுகளின் மூலோபாயமே   ஆனையிறவில்  புலிகளால் கை கொள்ளப்பட்டது... அந்த ஆகாய கடல் வெளி இராணுவ நடவடிக்கையில் தோல்வியே   வேறுவிதமான மூலோபாயத்தை தேட வேண்டிய தேவையை கொடுத்தது... 

 

முல்லைத்தீவு முகாமின் வெளியே இருந்த வட்டுவாகல் முகாம் மீதான தாக்குதல் தான்  அந்த முகாமின் மீதான ஊடுருவி தாக்கும்  மூலோபாய மாற்றத்தின் புலிகளின் முதலாவது பரீட்சார்த்தம்... அதன் பின்னர் இளப்புக்கள் குறைத்து  இரவு வேளைகளின்  சத்தம் இல்லாது நகர்ந்து வேண்டிய இடங்களுக்கு நகர்ந்த பின் தாக்கும்  மூலோபாயம் கை கொள்ளப்பட்டது... அதன் தேவையே வேவு பிரிவின் தேவையை கொண்டு வந்தது.. 

 

அதே போலவே  இராணுவ நடவடிக்கை ( வலிந்த தாக்குதலை )  மின்னல் நடவடிக்கயின் மீதான எதிர் தாக்குதலின் தோல்விகளும் இளப்புக்களுமே  மூலோபாய மாற்றத்துக்கான காரணம்... 

 

ஒருவேளை வலிந்த தாக்குதல் ஒண்றுக்காக ஆயுதங்கள் குவிக்கப்பட்டு இருந்த  முல்லைத்தீவு முகாம் தகர்க்கப்பட்டு   தேவையான எறிகணைகளும் , வெடி பொருட்களும் புலிகளால் கைப்பற்ற பட்டு இருக்காது விட்டால்  ஜெய சிக்குறு நடவடிக்கையை நீண்ட காலம் தாக்குப்பிடித்து இருக்க முடியாது என்பதுதான் உண்மை... 

 

இதில் தீட்டப்பட்ட மூலோபாயத்துக்கு தகுந்த படி  எதிர்தாக்குதல்களை கருணா ஒருங்கிணைத்தார் என்பதே உண்மை...  இதை கருணாவை விட வேறு யாராலும் செய்து இருக்க முடியாது என்பது எல்லாம் சும்மா  கதை... 

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியா அண்ணா அப்ப முந்தி இதே யாழில் தலைவருக்கு அடுதத படியாக பொட்டம்மான்,கருணா என்று நீங்களும்,உங்களைப் போல உள்ள சிலரும் சொன்னது பொய்யா?...நீங்களும்,உங்களைப் போல ஒரு சிலரும்,நேரத்திற்கு நேரம்,ஆட்களுக்கு ஏத்த மாதிரி கருத்து எழுதுவது எல்லோருக்கும் தெரிந்த விடயம் தானே!

அப்படியா அண்ணா அப்ப முந்தி இதே யாழில் தலைவருக்கு அடுதத படியாக பொட்டம்மான்,கருணா என்று நீங்களும்,உங்களைப் போல உள்ள சிலரும் சொன்னது பொய்யா?...நீங்களும்,உங்களைப் போல ஒரு சிலரும்,நேரத்திற்கு நேரம்,ஆட்களுக்கு ஏத்த மாதிரி கருத்து எழுதுவது எல்லோருக்கும் தெரிந்த விடயம் தானே!

அப்படி எழுதி இருந்தால் தயவு செய்து காட்டலாம்...!!

(உங்களுக்கு தேடுகிறதுக்கு இலகுவாக இருக்க ஒரு தகவலையும் தந்து விடுகிறன்... நான் கருணா பிரிந்த பின்னரே யாழின் உறுப்பினராகி இருக்கிறேன்... )

உங்களின் கனவுகளின் வரும் காட்சிகள் இப்ப அதிகமாகி கொண்டு இருக்கு, அதை உண்மையாக நடந்ததாக வேறை சொல்கிறீர்கள்....

........................

நியானி: ஒரு வரி தணிக்கை

Edited by நியானி

 

சிங்கள அரசிடம் சரணடையும் நிலையில் சயனைட் அருந்துவது தான் போராளிகளின் கொள்கை. இந்த மாதமும் கூட அத்தகைய தியாக வேங்கைகளுக்குரிய மாதமும் கூட..!

 

சிங்கள அரசிடம்.. ஒரு சர்வதேசக் கண்காணிப்பும் இன்றி போராளிகள் சரணடைந்ததன் விளைவு..

 

கிணற்றில் தள்ளிவிடப்பட்டு சாகிறார்கள்.

 

தூக்கில் தொங்கிறார்கள்.

 

மருந்து குடித்து சாகிறார்கள்.

 

வெளிநாடுகளில் அகதி என்று வந்து அந்தரிக்கிறார்கள்.

 

சிறைகளில் கிடந்து துன்பப்படுகிறார்கள்.

 

காணாமல் போகடிக்கப்பட்டிருக்கிறார்கள்.

 

படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.

 

பிடித்துக் கொடுக்கப்பட்டிருக்கிறார்கள்.

 

பிச்சை எடுக்க செய்யப்பட்டுள்ளார்கள்.

 

புலிகளை புத்துயிர்க்கிறார்கள் என்று கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

 

விருப்பத்துக்கு மாறாக சிங்கள இராணுவப் புலனாய்வுக்கு பயன்படுத்தப்படுகிறார்கள்.

 

சிங்கள இராணுவத்துக்கு கூலிகளாக்கப்பட்டுள்ளனர். அடிமைகளாக்கப்பட்டுள்ளனர்.

 

சிங்கள இராணுவம் காதலிக்கும் கல்யாணம் செய்யும் கைவிடும்.. விளையாட்டுப் பொருளாக்கப்பட்டுள்ளார்கள்.

 

பாலியல் தொழிலுக்கு சிங்களவர்களாலும்... ஒட்டுக்குழுக்களாலும்.. பயன்படுத்தப்படுகிறார்கள்.

 

இராணுவத்தில் கட்டாயமாக இணைக்கப்பட்டு சித்திவதைகளுக்கும் பாலியல் துன்புறுத்தல்களுக்கும் ஆளாகியுள்ளார்கள்.

 

இது பற்றி நீங்கள் எப்போதாவது சிந்தித்துப் பார்த்ததுண்டா..??! இந்தத் துன்பங்களின் வலியுணர்ந்ததுண்டா...??!  ----------------

-----------------

நியானி: கண்ணியமற்ற வார்த்தைப் பிரயோகங்கள் நீக்கப்பட்டுள்ளன.

 

ஆகவே சரணடைந்த போராளிகள் அனைவரும் குப்பி கடிச்சிருக்க வேணுமா?

 

இனியபாரதியின் குழு,பிள்ளையான் குழு செய்வதற்கு ஏல்லாம் கருணா பொறுப்பாக மாட்டார்.தவிர நான் ஏற்கனவே சொல்லி விட்டேன் அரசோடு இருக்கும் கருணா உத்தமர் இல்லை என்று.நாயோடு சேர்ந்தால் நக்கித் தான் ஆக வேண்டும்.தவிர நான் மேலே எழுதியது போராட்ட அழிவைப் பற்றி அதற்கு பிறகு வந்த காட்டிக் கொடுப்புகளை பற்றி அல்ல.அப்படிப் பார்த்தால் கடைசி வரைக்கும் தலைவரோடு இருந்த பாப்பா போன்ற சிலரும் தான் காட்டிக் கொடுக்கினம்.தன்னுடைய உயிரை காப்பாற்றிக் கொள்ளவும்,பெரும் உயிர் இழப்புகளை தவிர்க்கவும் கருணா அரசோடு சேர்ந்தார்.வந்து மண்டையில் போடு என்று தலையை கொடுக்க சொல்கிறீர்களா?

 

 

இனியபாரதி பிள்ளையான் அனைவரும் கருணா குழு என்றே அழைக்கப்பட்டனர். சிங்கள அரசில் ஏவலில் பல போராளிகள் தளபதிகள் பொது மக்கள் இவர்களால் கொல்லப்பட்டனர். கிழக்கில் எத்தனை ஆயிரம் இளைஞர்கள் இவர்களால் கடத்தப்பட்டனர். கருணாவை அண்ணா என்று கூப்பிட நீங்கள் வெக்கப்பட வேண்டும். உயிர் இழப்பை தவிர்க்க சிங்கள அரசுடன் சேரலாம் ஆனால் அதற்காக ஏவல் நாய் மாதிரி சிங்களவன் கை காட்டின இடமெல்லாம் தமிழரை கொல்ல வேண்டுமா?
  • கருத்துக்கள உறவுகள்

 

ஆகவே சரணடைந்த போராளிகள் அனைவரும் குப்பி கடிச்சிருக்க வேணுமா?

 

 

போராளிகள் எல்லோருக்கும் ஆயுதம் கொடுக்க முதல் குப்பி கொடுத்தது தான் வரலாறு.

 

அதுக்கு சிங்களவன் வேலை வைக்கல்ல. சர்வதேச மத்தியஸ்தமற்ற சரணடைதல்.. என்பது எவ்வளவு ஆபத்தானது என்பதை சிங்களவனே குப்பியை மிஞ்சி செய்து காட்டி உள்ளான்.

 

அவனே செய்ய வேண்டிய சித்திரவதைகளை எல்லாம் செய்து போட வேண்டியதை எல்லாம் போட்டு.. நிர்வாணம் ஆக்க வேண்டியதை எல்லாம் ஆக்கி.. வீடியோவும் எடுத்துக் கொண்டாடிக்கிட்டு இருக்கானில்ல. நீங்க அதை ரசிச்சுக்கிட்டு.. இருக்கீங்கல்ல. அதுபோதுமே..!!!

 

இதைத்தானே விரும்பினீர்கள்.  அவை பச்சை சுயநல தமிழர்களின் அசைலத்துக்கு இன்னும் ஒரு 20 வருசத்துக்கு உதவலாம். போராளிகளை வாழ்வை மண்ணோடு புதைந்த வீரர்களது உயிரை மீட்காது. எதை விரும்பினீர்களோ அது நன்றே நடந்துள்ளது. பிறகென்ன கேள்வி..??! குப்பி கடிக்காமல் விட்டவர்கள்.. வெள்ளைக்கொடியோடு போனவர்கள் எல்லாம்.. உயிரோடு இல்லையோ.. இருக்கினமோ..?????! என்பது தானே இன்றைய முக்கிய கேள்வி. அப்படி இருக்க.. இதென்ன கேள்வி..??!  :icon_idea::rolleyes:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

2008 மாவீரர் நாளில் மாவீரர்களின் எண்ணிக்கை.. 20,000

 

அதே 2009 மே க்குப் பின்.. 40,000 ஏன்.. 50,000 என்று சொல்லிக் கொள்ளினம்.

 

எனி குப்பி கடிச்சென்ன விட்டென்ன..??! :(:rolleyes:

போராளிகள் எல்லோருக்கும் ஆயுதம் கொடுக்க முதல் குப்பி கொடுத்தது தான் வரலாறு.

 

அதுக்கு சிங்களவன் வேலை வைக்கல்ல. சர்வதேச மத்தியஸ்தமற்ற சரணடைதல்.. என்பது எவ்வளவு ஆபத்தானது என்பதை சிங்களவனே குப்பியை மிஞ்சி செய்து காட்டி உள்ளான்.

 

அவனே செய்ய வேண்டிய சித்திரவதைகளை எல்லாம் செய்து போட வேண்டியதை எல்லாம் போட்டு.. நிர்வாணம் ஆக்க வேண்டியதை எல்லாம் ஆக்கி.. வீடியோவும் எடுத்துக் கொண்டாடிக்கிட்டு இருக்கானில்ல. நீங்க அதை ரசிச்சுக்கிட்டு.. இருக்கீங்கல்ல. அதுபோதுமே..!!!

 

இதைத்தானே விரும்பினீர்கள்.  அவை பச்சை சுயநல தமிழர்களின் அசைலத்துக்கு இன்னும் ஒரு 20 வருசத்துக்கு உதவலாம். போராளிகளை வாழ்வை மண்ணோடு புதைந்த வீரர்களது உயிரை மீட்காது. எதை விரும்பினீர்களோ அது நன்றே நடந்துள்ளது. பிறகென்ன கேள்வி..??! குப்பி கடிக்காமல் விட்டவர்கள்.. வெள்ளைக்கொடியோடு போனவர்கள் எல்லாம்.. உயிரோடு இல்லையோ.. இருக்கினமோ..?????! என்பது தானே இன்றைய முக்கிய கேள்வி. அப்படி இருக்க.. இதென்ன கேள்வி..??!  :icon_idea::rolleyes:

 

2008 மாவீரர் நாளில் மாவீரர்களின் எண்ணிக்கை.. 20,000

 

அதே 2009 மே க்குப் பின்.. 40,000 ஏன்.. 50,000 என்று சொல்லிக் கொள்ளினம்.

 

எனி குப்பி கடிச்சென்ன விட்டென்ன..??! :(:rolleyes:

 

அடுத்தவன் சாகிறத ரசிக்கிற குரூர மனம் எங்களுக்கு இல்லை. கல்லறைகளைகளையும் போர் விடியோகளையும் பார்த்து விசிலடித்து மகிழ்ந்தது உங்களை போன்ற புலம்பெயர் தேசிய குத்தகைக்காரர்தான். 
போர் நேரம் இறந்த சிங்கள சிப்பாய்களின்ட படங்களை தமிழ் இணையதளங்கள் வெளியிட்ட போதும் நாங்கள் முகம் சுளித்தோம். உங்களைப்போன்றோர் அந்த நேரத்தில் நாங்கள் தமிழரின் வெற்றி பொருக்காமல் முகம் சுளிப்பதாக வசை பாடினீர்கள். 
 
நாங்கள் விரும்பியது அனைத்து மக்களின் நிம்மதியான வாழ்வே. அடுத்தவன் சாகனும் என்று நினைப்பது மனநோய். அதுவும் உயிரை காப்பாற்ற லண்டனுக்கு ஓடிவந்து இங்க நிம்மதியாக இருந்து களத்தில் போராட்டம் முடிந்த பின்னரும் போராளிகள் சரணடையாமல் சாகவேணும் என்று நினைப்பது கருணா செய்ததை விட மிகப்பெரிய துரோகம். தவிர வெள்ளைகொடியோடு போனவர்கள் அனைவரும் கொல்லப்படவில்லை. சரணடைந்த பல போராளிகள் சிறை சென்று வெளியே வந்திருக்கிறார்கள். 

Edited by தெனாலி

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்தவன் சாகிறத ரசிக்கிற குரூர மனம் எங்களுக்கு இல்லை. கல்லறைகளைகளையும் போர் விடியோகளையும் பார்த்து விசிலடித்து மகிழ்ந்தது உங்களை போன்ற புலம்பெயர் தேசிய குத்தகைக்காரர்தான். 

போர் நேரம் இறந்த சிங்கள சிப்பாய்களின்ட படங்களை தமிழ் இணையதளங்கள் வெளியிட்ட போதும் நாங்கள் முகம் சுளித்தோம். உங்களைப்போன்றோர் அந்த நேரத்தில் நாங்கள் தமிழரின் வெற்றி பொருக்காமல் முகம் சுளிப்பதாக வசை பாடினீர்கள். 

 

நாங்கள் விரும்பியது அனைத்து மக்களின் நிம்மதியான வாழ்வே. அடுத்தவன் சாகனும் என்று நினைப்பது மனநோய். அதுவும் உயிரை காப்பாற்ற லண்டனுக்கு ஓடிவந்து இங்க நிம்மதியாக இருந்து களத்தில் போராட்டம் முடிந்த பின்னரும் போராளிகள் சரணடையாமல் சாகவேணும் என்று நினைப்பது கருணா செய்ததை விட மிகப்பெரிய துரோகம். தவிர வெள்ளைகொடியோடு போனவர்கள் அனைவரும் கொல்லப்படவில்லை. சரணடைந்த பல போராளிகள் சிறை சென்று வெளியே வந்திருக்கிறார்கள்.

 

அடுத்தவன் சாகிறதை சகிக்க முடியாமல் தான் 35 வருட ஆயுதப் போராட்டத்தில் குளிர்காய்ந்தீர்களாக்கும்..??! இன்று வெளிநாடுகளுக்கு வந்து சுகபோகம் அனுபவிக்கிறீர்களாக்கும்..??!

---------------

-------------------

 

இறந்த சிங்களப் படைகளின் உடலங்கள் போர்க்கள விதிகளுக்கு அமையும் வகையில் முறையாக போடப் பட்ட நேரத்தில்..  மறுபக்கத்தில்.. இறந்த போராளிகளின் படங்கள் போர் கள விதிமுறைகளுக்கு மாறாக.. சிங்களத்தின் அசிக்கத்தனமான உணர்வோடு.. சிங்கள ஊட்கங்களை அலங்கரித்த போது தாங்கள் அங்கும் முகம்சுழித்து தங்கள் கருத்தை வெளியிட்டீர்கள் போலும். அதனை தடுத்து நிறுத்தினீர்கள் போலும். அதனை.. இறுதி யுத்தம் வரை சிங்களம் செவிமடுத்தது போலும். அதுசரி.. அன்று என்ன பெயரில் வந்து முகஞ்சுழித்தீர்கள் என்று எழுதினால் தான் உங்களின் முகச்சுழிப்பு தார்ப்பரியம் மக்களுக்கு.. யாழுக்கு விளங்கும்.

 

மனநோய்.. மருத்துவம் பற்றி எங்களுக்கு சொல்ல வேண்டிய அவசியம்.. -------- கிடையாது. இங்கு 2009  மேக்குப் பின் காணாமல் போன.. சிறை போன.. சித்திரவதைப்பட்டு இறந்த.. சித்திரவதைப்பட்டு வாழும்.. அடிமைப்பட்டு வாழும்.. பல வகை உள உபாதைகளோடு வாழும்.. போராளிகளுக்கு நீங்கள் விட்டு வைத்தது என்ன..???! அதைச் சொல்லிட்டு உங்கட அதிஉன்னத மனிதாபிமானம் பற்றி வகுப்பெடுத்தால் நன்றாக இருக்கும்..!!

 

வெள்ளைக்கொடியோடு போனது எத்தனை பேர்..???! அந்த விபரம் பற்றி அறிந்திருந்தால்.. அதில் தப்பியவர்கள் யார் என்று குறிப்பிட்டால்.. வெள்ளைக்கொடி விவகாரம்  தொடர்பில் அதிக கவனம் செலுத்து மனித உரிமை அமைப்புக்களுக்கு தங்களின் தகவல் உதவுவதோடு.. வெள்ளைக்கொடி விவகாரத்தில்.. உயிர்களை.. உறவுகளை பறிகொடுத்துவிட்டு.. அழுது புலம்பும் மக்களுக்கு ஆறுதலாக இருக்கும்.. அந்த விபரங்களை தந்தால் நன்றாக இருக்கும். ஆயர்களே கண்டுபிடிக்க முடியாத ஒன்றை உங்களால் அறிந்து வைத்திருக்க முடிகிற போது.. அதனை வெளியில் சொல்லி உங்கள் மனிதாபிமானத்தை வெளிக்காட்டலாமே..??!

 

குப்பி கடிப்பதற்கு எதிரான உண்மையான உளநோக்குக் கொண்டவர்கள் என்றால்.. முதற் போராளி குப்பி கடித்த நாளில் இருந்து அதனை கழற்றி எறியப் போராடி இருக்கனும். தலைவர் உட்பட எவரும் குப்பியே அணியக் கூடாது. குப்பி கடிக்கக் கூடாது. எதிரியிடம் பிடிபடும் நிலை வந்தால்... எல்லோரும் பிடிபட்டு சித்திவதைப்பட்டு சாகனும். அப்படின்னு ஒரு போதனையை முன் வைத்திருக்கலாமே. -------------

-----------------------

 

எங்கள் கருத்தை விளங்கிக் கொள்ளக் கூடிய மனநிலை அற்ற நீங்கள் எல்லாம் எதுக்கு குவாட் பண்ணி எழுதிறீங்களோ புரியல்ல..! ----------------------

 

எங்கள் கருத்தை மீண்டும் தெளிவு படுத்திறம்.. சிங்கள எதிரிகளிடம் எந்த ஒரு சர்வதேச மத்தியஸ்தமும் இன்றி.. சரணடைவு என்பதை விட குப்பி கடித்தல் மேலானது..!!! அதில் மனிதாபிமானம் இல்லை என்பவர்கள்.. அது மனிதக் கொடூர சிந்தனை.. என்பவர்கள்..சரணடைதலின் பின் நிகழ்ந்த அனைத்துக் கொடூரங்களுக்கும்.. பதிவான அனைத்து மனித உரிமை மீறல்களுக்கும் பதில் சொல்லுங்கள்..!!!!!

 

ஒரு கருணைக் கொலைக்குக் கூட இந்த உலகில் இடமுள்ளது. ஆனால்.. எதிரிகளிடம் சிக்கி சித்திரவதைப்பட்டு சாகும் மனிதனுக்கு இந்த உலகில் நீதியில்லை என்பது அபந்தமானது. அது அமெரிக்கா தொடங்கி சிறீலங்கா அரசு வரை.. உள்ள ஒரு அவலமாகும்..!!!! அதனை தடுத்து நிறுத்த வகை செய்யுறதை விட்டிட்டு.. ------------. குப்பி கடி என்றது மகா கொடூர சிந்தனை என்றவை தான் போராளிகள் குப்பி அணிந்திருந்த போது மெளனமாக் கிடந்து வெளிநாட்டு ஓடினவையாக்கும்.

 

சொந்த தமிழ் பெண்களை சிங்கள இராணுவ விபச்சார மையங்களுக்கு விற்று சம்பாதிக்கிற கருணா எல்லாம்.. தமிழ் பெண்களின் வீரம் பற்றி பேச.. என்ன தகுதி இருக்கோ தெரியல்ல. 50,000 போராளிகளை வழிநடத்தினராம். இப்ப அவையள் எல்லாம் எங்கையாம்..?????! அதையும் கேட்டு சொல்லுங்க..!!! அவரின் மனைவி பிள்ளைகள் உட்பட..!!!! :icon_idea::rolleyes:

 

நாங்க யாரும் உயிருக்கு பயந்தோ.. உழைப்புத் தேடியோ.. அல்லது போராளிகளின் தியாகங்களை.. ஒரு தொகுதி மக்களின் விடுதலைப் போராட்டத்தைக் காட்டிக் கொடுத்தோ.. அதில் குளிர்காயும் நோக்கோடோ.. வெளிநாடுகளுக்கு வரல்ல. ----------------------------

தலைப்போடு மட்டும் கருத்து எழுதினால்.. ---------- நன்றாக இருக்கும். அடிக்கடி.. பாடரை கிராஸ் பண்ணி எழுதிறது.. அப்புறம்.. வந்து நெடுக்காலபோவனை குவாட் பண்ணிறது. அதுக்கெல்லாம் பதில் அளிக்கிற நோக்கம் எங்களுக்கு கிடையாது. சில ----------- எழுத்துக்களை வாசிப்பதே இல்லை. ----------------- இதில்.. போராளிகள் பற்றி எழுதி இருப்பதால் பதில் அளிக்கப்பட்டுள்ளது. :icon_idea::)

நியானி: கருத்தாடற்பண்பற்ற வார்த்தைப் பிரயோகங்கள் தணிக்கை செய்யப்பட்டுள்ளது.

Edited by நியானி

  • கருத்துக்கள உறவுகள்

சிலர் இங்கு தாயகப்பற்றுள்ளோரை தாக்கவேண்டும் என்பதற்காகவே

வரலாற்றையும்  எமது போராளிகளையும் மாவீரர்களையும்

முக்கியமாக  கிழக்கு  பகுதி  போராளிகளையும் கேவலப்படுத்துகிறார்கள்..  

 

முரளிதரன் 

கருணா அம்மானாக இருந்தபோது செய்தவை  எல்லோரும் அறிந்தது தான்

ஆனால் அவர் அதிலிருந்து விலகி

பிரதேசவாதத்தை கையிலெடுத்து

பெரும் அழிவுகளுக்கு வழி வகுத்தபின்.....

அவரை கருணா அம்மான் என்றும்  அண்ணன் என்றும் அழைப்பதே 

கிழக்கு போராளிகளையும் மாவீரர்களையும் அவமதிக்கும் செயலாகும்

 

இதில் 1993 இல் அவர் இல்லாது விட்டால் இயக்கமே அழிந்திருக்கும் என்பதும் அடங்கும்

கிழக்கு மாகாண போராளிகள் இல்லாது விட்டால்  என்று எழுதினால் ஏற்கலாம்...

அவ்வாறு கிழக்கு இல்லையென்றால் தமிழீழமே இல்லை என்பதில் தலைவர் உறுதியாக இருந்தார் என்பது கூட தெரியதவர்களுடன் என்னத்த பேசி.................??? :(  :(  :(

1997 காலப்பகுதியே பயிற்ச்சி முடிந்த பின் தகடு மட்டுமே கொடுக்கபட்டது அப்பவே குப்பி கடும் தட்டுபாடு அதை விட முக்கியஆக்கள் படையணிக்கே பின்னாளில் வழக்பட்டது வேவு அணிக்கு கூட குப்பி மாறி மாறி உள்ளே போகும் போது வாங்கிட்டு போறது என்னும் நிலைமைதான் இருந்தது ....

 

சும்மா நெடுக்கண்ணா மட்டும் இப்ப மணலாறு காட்டில் இருந்து கொண்டு கருத்து எழுதிறது போல நாங்க எல்லாம் ஐரோப்பாவில சுகபோகமா இருந்து கருத்து எழுதிறம் என்பது போல பேசிட்டு இருக்கிறிங்க  :)

 

கருணாவை கையாண்ட விதம் பிழை என்றுதான் சொல்லுறம் தவிர நியாம் பேசவில்லை பாருங்கோ எதிரி அவரை வளைத்து போடும் சந்தர்ப்பம் நாங்கதான் கொடுத்தோம் தவிர அவரா கையில் எடுக்கவில்லை மேசையை போட்டு துரோகி என்றோம் அவர் துரோகி ஆகினார் அதுதான் உண்மை .. :(


சிலர் இங்கு தாயகப்பற்றுள்ளோரை தாக்கவேண்டும் என்பதற்காகவே

வரலாற்றையும்  எமது போராளிகளையும் மாவீரர்களையும்

முக்கியமாக  கிழக்கு  பகுதி  போராளிகளையும் கேவலப்படுத்துகிறார்கள்..  

 

முரளிதரன் 

கருணா அம்மானாக இருந்தபோது செய்தவை  எல்லோரும் அறிந்தது தான்

ஆனால் அவர் அதிலிருந்து விலகி

பிரதேசவாதத்தை கையிலெடுத்து

பெரும் அழிவுகளுக்கு வழி வகுத்தபின்.....

அவரை கருணா அம்மான் என்றும்  அண்ணன் என்றும் அழைப்பதே 

கிழக்கு போராளிகளையும் மாவீரர்களையும் அவமதிக்கும் செயலாகும்

 

இதில் 1993 இல் அவர் இல்லாது விட்டால் இயக்கமே அழிந்திருக்கும் என்பதும் அடங்கும்

கிழக்கு மாகாண போராளிகள் இல்லாது விட்டால்  என்று எழுதினால் ஏற்கலாம்...

அவ்வாறு கிழக்கு இல்லையென்றால் தமிழீழமே இல்லை என்பதில் தலைவர் உறுதியாக இருந்தார் என்பது கூட தெரியதவர்களுடன் என்னத்த பேசி.................??? :(  :(  :(

ம்ம் புலியை அழி பிரபாகரனை கொண்டுவந்து தூக்கில போடு என்று சொன்ன ஜெயலிதாவின் ஈழத்தாய் ...ஒன்னும் பண்ணாமல் முட்டு சந்தில் கத்தும் சீமான் செந்தமிழன் உங்களுக்கு எல்லாம் செய்தவன் வாழ்வை ஈழத்துக்கு தொலைத்தவன் பல களங்களை வழிடந்தி வெற்றிகளை பெற்று தந்தவன் துரோகி ..

 

என்ன ஒரு அரசியல் இது தேசியம் பெயரில் உண்மையை மறைக்க கூடாது அதுகூட துரோகமே  :(

  • கருத்துக்கள உறவுகள்

பூமியை சூரியன் சுத்தி வருகிறது என்பதுதான் உண்மை.. இப்பிடியும் நாங்கள் எழுதலாம்.. :D ஆனால் ஆதாரம் வேணுமில்லையா.. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

1997 காலப்பகுதியே பயிற்ச்சி முடிந்த பின் தகடு மட்டுமே கொடுக்கபட்டது அப்பவே குப்பி கடும் தட்டுபாடு அதை விட முக்கியஆக்கள் படையணிக்கே பின்னாளில் வழக்பட்டது வேவு அணிக்கு கூட குப்பி மாறி மாறி உள்ளே போகும் போது வாங்கிட்டு போறது என்னும் நிலைமைதான் இருந்தது ....

 

சும்மா நெடுக்கண்ணா மட்டும் இப்ப மணலாறு காட்டில் இருந்து கொண்டு கருத்து எழுதிறது போல நாங்க எல்லாம் ஐரோப்பாவில சுகபோகமா இருந்து கருத்து எழுதிறம் என்பது போல பேசிட்டு இருக்கிறிங்க  :)

தகடும் கொடுக்கல்ல. தகட்டுக்கு பஞ்சம். மரக்கட்டை தான் கொடுத்தது. அந்தளவுக்கு எல்லாம் தட்டுப்பாடு. 1996 இல்.. ஓயாத அலைகள் 1 அது முடிய.. ஜெயசிக்கிறு முறியடிப்புச் சமர்.. அது கூட.. 1998 இல் திடீர் என்று தட்டுப்பாடு நீங்க.. ஓயாத அலைகள் 2 ஆரம்பமானது..!

 

நீங்க இயக்கத்தில எங்க காய்கறி வெட்டிற பகுதியிலையா இருந்தீங்க..!! ஆமால்ல.. காய்கறிக்கும் பஞ்சம். கெளபி அவிக்கிற பகுதியிலையா இருந்தீங்க..!!! :D:lol:

அங்க தான் கருணாவையும் சந்திச்சீங்க போல. அவர் தான் இயக்கத்திலை இல்லைன்னா.. இயக்கமே முடிஞ்சு என்று சொன்னாராக்கும்..!! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம் புலியை அழி பிரபாகரனை கொண்டுவந்து தூக்கில போடு என்று சொன்ன ஜெயலிதாவின் ஈழத்தாய் ...ஒன்னும் பண்ணாமல் முட்டு சந்தில் கத்தும் சீமான் செந்தமிழன் உங்களுக்கு எல்லாம் செய்தவன் வாழ்வை ஈழத்துக்கு தொலைத்தவன் பல களங்களை வழிடந்தி வெற்றிகளை பெற்று தந்தவன் துரோகி ..

 

என்ன ஒரு அரசியல் இது தேசியம் பெயரில் உண்மையை மறைக்க கூடாது அதுகூட துரோகமே  :(

 

 

உங்களுக்கு பதில் எழுதுவது  நேரவிரயம்....

 

எனது கருத்தை  ஒட்டி எழுதியிருப்பதால்...

 

இப்ப  என்ன  செய்கிறார் என்று தான் பார்க்கின்றேன்...

அது தான் இன்று தேவை...

ஜெயலலிதா

போர்க்குற்றத்தை ஏற்கிறார்

மகிந்த இனவழிப்பு செய்தவர் என்கிறார்

அவரை ஐநா விசாரிக்கணும் தண்டிக்கணும் என்கிறார்

சிங்களத்தலைவர் எவரும் தமிழகத்தில் கால் வைக்கக்கூடாது என்கிறார்

அதையே  வரவேற்கின்றேன்

அத்துடன் தமிழர்களின் முக்கிய  பதவியிலுள்ள தலைவர் அவர்...

 

தமிழரது விடுதலை என்பது மிகவும் விசாலமானது

அது புலிகளது   கோபதாபங்களுடன்  ஒடுங்கிவிடாது

 

புலிகளை  சாடினார் என்று ஒதுக்க  வெளிக்கிட்டால் எவரும் மிஞ்சார்

புலிகளைச்சாடியவர்கள் என்று நீங்கள் உண்மையிலேயே  கோபம் கொள்பவராக இருந்தால்

யாழில் அவர்களின் அழிவில் சந்தோசப்படும் பலருண்டு

ஆனால் அடவர்கள் தங்கள் எழுத்துக்களுக்கு பச்சை போடும் அளவில் தான் தங்கள் எழுத்துக்கள் உண்டு

அதன்படி பார்த்தால்

உங்களது  தார்மீகம் புரிந்துவிடும்....

  • கருத்துக்கள உறவுகள்

அஞ்சரன் தன்ர வீட்டில் அழுகின தக்காளி, கூழ்முட்டை எதையும் எறியாமல் அப்பிடியே வச்சிருப்பார் எண்டு நினைக்கிறன். :D

  • கருத்துக்கள உறவுகள்
கருணாவை கையாண்ட விதம் பிழை என்றுதான் சொல்லுறம் தவிர நியாம் பேசவில்லை பாருங்கோ எதிரி அவரை வளைத்து போடும் சந்தர்ப்பம் நாங்கதான் கொடுத்தோம் தவிர அவரா கையில் எடுக்கவில்லை மேசையை போட்டு துரோகி என்றோம் அவர் துரோகி ஆகினார் அதுதான் உண்மை.

 

 

உண்மை தான். கருணாவுக்கு அதிகம் தலைவர் இடம் கொடுத்திட்டார். அப்பவே ரமேஸை முன்னுக்கு கொண்டு வந்திருந்தால்.. ஒரு பிரச்சனை வந்திருக்காது. கருணாவை கெளபி அவிக்க அனுப்பி இருக்கனும்.. வெள்ளனவாவே.

 

கரிகாலன் அண்ணா போன்றவர்களே தலைமைக்கு கட்டுப்பட்டு நடக்கேக்க.. கருணாவுக்கு மட்டும் என்ன விசேட கவனிப்பு.

 

அரச எதிரிகள்  போராளி அமைப்புக்களில்... சிலரை.. பலரை விலைக்கு வாங்குவது உங்களுக்கு புதிதா இருக்கலாம். தலைவர் அதை ஆரம்ப காலம் தொட்டுப் பார்த்தவர். அனுபவித்தவர். அவருக்கே நீங்க கருணாவை வைச்சு வகுப்பெடுக்கிறது ரெம்ப ஓவர்.

 

கருணா இயக்கத்தில் இருந்திருந்தாலும் கூட.. முள்ளிவாய்க்காலை தவிர்த்திருக்க முடியாது. முள்ளிவாய்க்காலுக்கான புறச்சூழல்.. ஈழத்தீவில் அல்ல.. அதற்கு அப்பால் தான் முக்கியமாக நிலை கொண்டிருந்தது. கருணா இயக்கத்தில் இருந்த போதும்.. இயக்கம் கடலில் கப்பல்களை இழந்தது..! இல்லாத போதும் இழந்தது. அந்த இழப்புக்கள்.. சாதாரணமானவை அல்ல. எமது வழங்கலை கட்டுப்படுத்தி எதிரியை பலப்படுத்திய பிராந்திய.. சர்வதேச கூட்டு நடவடிக்கைகள் என்பதை இன்னும் நீங்கள் புரியாமல்.. கருணா பூச்சாண்டி காட்டுவது தான் வேடிக்கையாக உள்ளது. அதற்கு சிலர் ஆமாப் போடுறது. அவைட தொழிலே எங்கும் எதிலும்.. எதிர்.. அங்கெல்லாம்.. ஆமாப் போடுதல்..!! :icon_idea::)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

கருணா இயக்கத்தில் இருந்திருந்தாலும் கூட.. முள்ளிவாய்க்காலை தவிர்த்திருக்க முடியாது. முள்ளிவாய்க்காலுக்கான புறச்சூழல்.. ஈழத்தீவில் அல்ல.. அதற்கு அப்பால் தான் முக்கியமாக நிலை கொண்டிருந்தது. கருணா இயக்கத்தில் இருந்த போதும்.. இயக்கம் கடலில் கப்பல்களை இழந்தது..! இல்லாத போதும் இழந்தது. அந்த இழப்புக்கள்.. சாதாரணமானவை அல்ல. எமது வழங்கலை கட்டுப்படுத்தி எதிரியை பலப்படுத்தி பிராந்திய.. சர்வதேச கூட்டு நடவடிக்கைகள் என்பதை இன்னும் நீங்கள் புரியாமல்.. கருணா பூச்சாண்டி காட்டுவது தான் வேடிக்கையாக உள்ளது. அதற்கு சிலர் ஆமாப் போடுறது. அவைட தொழிலே எங்கும் எதிலும்.. எதிர்.. அங்கெல்லாம்.. ஆமாப் போடுதல்..!! :icon_idea::)

 

அது ...ஆயிரத்தில் ஒரு வார்த்தை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.