Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழக் கோரிக்கையை கைவிடுங்கள், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ரத்து செய்கிறேன் - ஜனாதிபதி

Featured Replies

mahinda%20rajapaksa%20smiling_CI.jpg

ஈழக் கோரிக்கையை கைவிட்டால் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப் போவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் புலம்பெயர் தமிழர்களின் ஒரு தொகுதியினரும் தமிழீழ கோரிக்கையை தொடர்ந்து வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

கிளிநொச்சியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கூட்டமைப்பும் புலம்பெயர் தமிழர்களும் நாட்டை பிளவுபடுத்த முயற்சிக்கின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.

'ஈழக் கோரிக்கையை குறித்த தரப்பினர் கைவிட்டால் நானும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ரத்து செய்வது குறித்து கவனம் செலுத்தத் தயார்' என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் தனி நாடு ஒன்றை அமைப்பதற்கு அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வாழ்ந்து வரும் புலம்பெயர் தமிழ் மக்கள் முயற்சித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவும் அண்மையில் வெளிநாடு சென்று இந்த முயற்சிக்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/112516/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

சாரே....அதுக்கும்  இதுக்கும் என்ன  சம்பந்தம்......புலுடா விடலாம் இப்படிக்கூடாது...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
இது நம்பத் தகுந்த செய்தி மாதிரி தெரியவில்லை.
இருந்தாலும் இரண்டுக்கும் என்ன சம்பந்தம் இருக்கின்றது? 
  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் அவரது நோக்கம் ஐனாதிபதி முறையை ஒழித்து, பிரதமர் ஆட்சியை ஏற்படுத்தி தான் மீண்டும் பதவிக்கு வருவதற்கான முன்னேற்பாடாகவே இக் கருத்து அமைந்திருக்கலாம். 2ம் தடவைக்கு பிறகு ஜனாதிபதி பதவியில் வருவதற்கான சட்டப் பிரச்சனையால், அதனால் ஏற்படப் போகும் பிரச்சனையால் இப்படியான கருத்தை அவன் வெளியிட்டிருக்கலாம். ஐனாதிபதி முறையை ஒழிப்பதால் தமிழர்களுக்கு என்ன இலாபம். தமிழர் நிலங்களை ஆக்கிரமிப்பு, தமிழர் அபிவிருத்தியில் ஒத்துழைப்புத் தருவதாகவும் போர்க்குற்ற விசாணைக்கு ஒத்துழைப்புத் தருவதாகக் கூடச் சொன்னால் அதில் நியாயமிருக்கும். தான் அடுத்த முறை எப்படிப் பதவிக்கு வருவது என்பதற்காக இப்படிக் கேட்பது எல்லாம் எங்களுக்கு என்ன பிரியோசனம்?

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் ஜனாதிபதி அதிகார முறையை ரத்து செய்யுங்கோ நான் ஈழக்கோரிக்கையை கை விடுகிறேன்...........அது சரி புலி இல்லாட்டியும் ஈழத்தை தமிழன் கேட்கிறான் என்று சொல்லுறீயள்......

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களத்தில் மாற்றங்கள் செய்யணும் என்றாலும்

தமிழன் விட்டுக்கொடுப்புக்களை  செய்யணும்

 

இதுவும் ஒருவகை அரசியல்

தமிழனை  அடித்துவிட்டேன்

ஈழக்கனவை திரும்பப்பெறச்செய்துவிட்டேன்

எனக்கு வாக்கு போடுங்கள் எனச்சொல்ல......

 

தமிழன் தலையில் மீண்டும் மிளகாய்.......... :(  

 


(புலம் பெயர் தமிழருக்கு

மகிந்த பயப்படவில்லை என்போர் கவனத்துக்கு இத்திரி  சமர்ப்பணம்...........)

Edited by விசுகு

சிங்களவனுக்கு இப்ப அரசியல் நல்ல அத்துப்படி மற்றவர்களின் தலையை சுத்து சுத்து என்று சுத்துகின்றான் .புலி ,தமிழ் ஈழம் ,புலம் பெயர்ந்தவன் என்று இப்பவும் சொல்லி சொல்லி நாட்டில் இருக்கும் தமிழனின் பல்லை ஒவ்வொன்றாக பிடுங்கிவருகின்றான் .

 

இப்பவும் வாலுகள் இந்தா பார் இனித்தான் விளையாட்டு இருக்கு என்று முப்பது வருடங்க்களாக பாடமாக்கி சொன்னதை இப்பவும் தொடர்கின்றார்கள் . 

 

கனவில் வாழதொடங்கி அதுவே அவர்கள்  வாழ்க்கை  என்றாகிவிட்டது (அது ஒரு பத்து  வீதமும் இப்ப இல்லை என்பது ஒரு ஆறுதல் )

சிங்களவனுக்கு எப்பவோ அரசியல் அத்துப்படி. இந்திய ராணுவத்தையே தமிழரோட கோர்த்துவிட்டிட்டு அவங்கள் வொலிபோல் விளையாடிக்கொண்டு இருந்தவங்கள். எங்கடதுகள் என்னும் 87ல வாங்கின அடி பத்தாதோ என்டு புளங்காகிதம் அடையுதுகள். இப்பகூட 87 இல் இருந்து 90 வரை கற்றுக்கொண்டது பத்தாதோ என்டு புல்லரிப்பு வேற.

  • கருத்துக்கள உறவுகள்

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை இருப்பதனாலோ அல்லது அதனை இல்லாமற் செய்வதினாலோ தமிழர் தரப்புக்கு என்ன நன்மையிருக்கப் போகின்றது? இலங்கையின் சனத்தொகையில் 12 வீதத்துக்கும் குறைவான தமிழர் தரப்பின் ஈழக் கோரிக்கையை நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்குவதற் ஈடாக மகிந்த பேசியிருப்பது அவருக்கு தென்னிலங்கையில் மீண்டும் ஒரு வலுவான ஆதரவுத் தளத்தினை உறுதிப்படுத்திக்கொள்வதற்கே ஆகும்.

இன்று கொள்கையளவில் ஈழக் கோரிக்கை இருந்தாலும் நடைமுறையில் அது இல்லாத ஒன்று. மூன்று பத்தாண்டு காலமாகத் தொடர்ந்த போரின் தாக்கம் தாயகத்தில் வாழ்ந்துவரும் மக்களின் மனங்களில் அக்கோரிக்கையை வலுவிழக்கச் செய்திருக்கின்றது.

இங்குதான் மகிந்தவின் அரசியல் சாணக்கியம் மேலோங்கி நிற்கின்றது. அதாவது ஏறக்குறைய தற்போது தற்காலிகமாகவேனும் இல்லாத ஒன்றை இருப்பதாகக் காட்டித் தனது அடுத்த கட்ட அரசியலுக்காகன தளத்தை உருவாக்குகின்றார். சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்தி முன்றாவது முறை அதிபர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெறுவது அல்லது தமது வாரிசு நாமலை அதிபர் தேர்தலி நிறுத்தி வெற்றிபெறச்செய்வது அவரின் நோக்கமாக இருக்கலாம். இவைதவிர நேரடியாக சர்வஜன வாக்கெடுப்பு நடத்தி தமது ஆட்சிக்காலத்தை நீடிப்பதற்காக அரசியல் யாப்பினை இலகுவாக மாற்றிவிட முடியும்.

நிலைமை இவ்வாறிருக்கப் புலம்பெயர் தமிழருக்குப் பயப்படுகிறார் என்பது உண்மைக்குப் புறம்பானது.

சிங்களவனுக்கு இப்ப அரசியல் நல்ல அத்துப்படி மற்றவர்களின் தலையை சுத்து சுத்து என்று சுத்துகின்றான் .புலி ,தமிழ் ஈழம் ,புலம் பெயர்ந்தவன் என்று இப்பவும் சொல்லி சொல்லி நாட்டில் இருக்கும் தமிழனின் பல்லை ஒவ்வொன்றாக பிடுங்கிவருகின்றான் .

 

இப்பவும் வாலுகள் இந்தா பார் இனித்தான் விளையாட்டு இருக்கு என்று முப்பது வருடங்க்களாக பாடமாக்கி சொன்னதை இப்பவும் தொடர்கின்றார்கள் . 

 

கனவில் வாழதொடங்கி அதுவே அவர்கள்  வாழ்க்கை  என்றாகிவிட்டது (அது ஒரு பத்து  வீதமும் இப்ப இல்லை என்பது ஒரு ஆறுதல் )

 

அந்த பத்து வீத்தத்தை பற்றியே சதா முழுக்க யாழ்களத்தில் தொண்ணூறு வீதம் திட்டி எழுதுபவர்களின் அறிவை என்னவென்பது.

  • கருத்துக்கள உறவுகள்
ஆட்சியாளர்களின் தேவைக்கு ஏற்பவே அரசியலமைப்பு செயற்படுத்தப்படுகிறது - சஜித்

 

 

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த ஆட்சியில் இருப்பதே தமிழர்களாலும்.. தமிழீழத்தாலும்.. புலிகளாலும்.. அவை சார்ந்த போர் வெற்றி.. அதாவது இனவெறியால் தான்.

 

அதை தக்க வைக்க... இப்ப இல்லாத புலியை.. நடக்காத போரை புதுப்பிக்க முடியாது. எனவே தமிழீழக் கோரிக்கையை கோர்த்துவிடுறார்.

 

இங்கின சிலர் 1987 - 90 அண்டையர் வாங்கிய அனுபவத்தை அடிபாட்டுக்குள் வைச்சிருந்து அளவிடினம். ஆனால் அங்கினையோ.. 27 ஆண்டுகள் கடந்த பின்னும் கூட புத்தகம் புத்தகமா அந்த அனுபவத்தை எழுதிக்கிட்டு இருக்கினம். ஏனாம்.. சும்மா நாவல் எழுதி காசு சம்பாதிக்கவாமோ.. அப்படின்னு.. சிலர் சிந்திக்கினம் போல..!! அண்டையர் பெற்ற அனுபவம் அப்படி..! அது அடிவாங்கியதால்.. மூக்கை நுழைத்ததால்.. தமிழர்களின் எதிர்பார்ப்பை பற்றிய தவறான எடைபோடல்களால்.. தவறான இராஜதந்திரம் தமிழர்களை திருப்திப்படுத்தாததால்.. என்று பல பரிமானங்கள்.. 1987-90 கால வரலாற்றில் அடங்கி இருக்குது. இதெல்லாம்.. விளங்கினா.. நாங்க ஏன்....???! :icon_idea::)

  • தொடங்கியவர்
எம்மைப் பிரிவினைவாதிகளாக காட்டாதீர்கள்! நிறைவேற்று அதிகாரத்தை ஒழியுங்கள் 
 
suma.jpg
 
"தமிழீழத்திற்கான போராட்டத்தைக் கைவிட்டால் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவேன் என்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் வாக்குறுதியில் உண்மை இருக்குமாயின் இப்போதே நிறைவேற்று முறைமைமையை நீக்கவேண்டும். எம்மைப் பிரிவினைவாதிகளாக்கி ஆட்சி நடத்த முயற்சிக்க வேண்டாம்." - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
 
அதிகாரத்தைப் பகிர்ந்து நாட்டை ஐக்கியப்படுத்தும் அமைப்பு கொழும்பில் நேற்று ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் கூறினார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்:-
 
"ஜனாதிபதித் தேர்தலொன்று தற்போது அவசியமற்றது. இந்தத் தேர்தலை அடுத்த வருடம் நடத்துவதை விடுத்து, அதிகாரப் பரவலாக்கலை மேற்கொள்வதுடன் நிறைவேற்று அதிகாரத்தையும் நீக்கவேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முடிவும் இதுவேயாகும்." "தமிழ் மக்களின் ஆணையைப் பெற்று வடக்கில் ஆட்சியமைத்த நாம் அந்த மக்களை பிரதிநிதித்துவப்படுத்துகிறோம். எம்மை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ வைக்கோல் பட்டடை நாய் என்று விமர்சித்தமை வடக்கில் உள்ள ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் அவமதித்தமைக்கு சமனாகும்."
 
"வடக்கில் தமிழ் மக்களை அவமதித்து ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ ஆரம்பித்துள்ளார். வடக்கு மக்களை அவமதித்தால் தெற்கில் மக்களின் ஆதரவு கிடைக்கும் என்றே ஜனாதிபதி மஹிந்த நினைக்கின்றார். எனவே, நாம் சிங்கள மக்களிடம் கேட்டுக்கொள்வது என்னவெனில், ஒரு சமூகத்தை அவமதித்து கீழ்த்தரமாகப் பேசும் ஜனாதிபதியை சிங்கள மக்களும் நிராகரிக்கவேண்டும்" என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
 
 
 

 

  • கருத்துக்கள உறவுகள்

"வடக்கில் தமிழ் மக்களை அவமதித்து ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ ஆரம்பித்துள்ளார். வடக்கு மக்களை அவமதித்தால் தெற்கில் மக்களின் ஆதரவு கிடைக்கும் என்றே ஜனாதிபதி மஹிந்த நினைக்கின்றார். எனவே, நாம் சிங்கள மக்களிடம் கேட்டுக்கொள்வது என்னவெனில், ஒரு சமூகத்தை அவமதித்து கீழ்த்தரமாகப் பேசும் ஜனாதிபதியை சிங்கள மக்களும் நிராகரிக்கவேண்டும்"
இவர் பெரிய "அப்பாடக்கர்" சொன்னவுடன்.....சிங்கள மக்கள் கேட்க போகினம்....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.