Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலியின் குகையாக இருந்த யாழ்ப்பாணம் இப்போது குற்றத்தின் மையம்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புலியின் குகையாக இருந்த யாழ்ப்பாணம் இப்போது குற்றத்தின் மையம்?

Dec 12, 2014 | 15:59 by கார்வண்ணன்

JAFFNA-300x200.jpg

போர் முடிவுக்கு வந்த பின்னர் யாழ்ப்பாணத்தில் குற்றச்செயல்கள் அதிகரித்திருப்பது குறித்து நிபுணர்கள் கவலையடைந்துள்ளனர். சட்டத்தை மதிக்கும் குடிமக்கள் என்று அறியப்பட்ட இடம், இன்று குற்றவாளிகளும், சட்டத்தை மீறுவோரும் மகிழ்ச்சியாக வேட்டையாடும் இடமாக மாறியுள்ளது.

“குற்றச்செயல்களின் வீதம் மிக அதிகமாக உள்ளது. யாழ்.நகரப் பகுதியில் மட்டும், நாளொன்றுக்கு 20 தொடக்கம் 30 வரையிலான மிதிவண்டிகள் திருடப்படுகின்றன.

70 வீதமான உந்துருளிகளுக்கு அனுமதிப்பத்திரம் கிடையாது. பெரும்பாலும், தமிழரல்லாத சிறிலங்கா காவல்துறையினர், இதுகுறித்து கண்டும் காணாமல் இருக்கின்றனர்.

சிறைச்சாலையில் இடமின்மையால், நீதிமன்றங்கள் பிணையில் விட்டு விடுகின்றன.” என்று பிரித்தானியக் காவல்துறையில் பணியாற்றிய- யாழ்ப்பாணத்தை வதிவிடமாக கொண்ட, செபஸ்ரியன் நேரு கூறுகிறார்.

இதற்கு உயர்வாக இருக்கும் வேலையின்மையும் ஒரு காரணம் என்கிறார், அபிவிருத்திக்கான பருத்தித்துறை நிறுவகத்தைச் சேர்ந்த கலாநிதி முத்துக்கிருஸ்ண சர்வானந்தன்.

“சிறிலங்காவில் வேலையின்மை 18 வீதமாக இருக்கிறது. தமிழர்கள் அதிகம் வாழும், வடக்கு மாகாணத்தில் வேலையின்மை, 31.2 வீதமாக இருக்கிறது.

வடக்கு மாகாணத்தில் அபிவிருத்தித் திட்டங்களுக்கான நிதிச் செலவினங்கள் 76 வீதமாக இருக்கின்ற போதிலும், இந்த முதலீடுகளால், 5 வீதம் மட்டுமே, வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது.” என்றும் அவர் தெரிவித்தார்.

“இளைஞர்கள் தொழிலாளர்களாக பணியாற்றத் தயாராக இல்லாமையும் வேலையின்மைக்கு ஒரு காரணம்” என்கிறார், யாழ்ப்பாணத்தில் உள்ள முதலீட்டுச்சபையைச் சேர்ந்த ஏ.ஆர்.ஜெயமோகன்.

“வெளிநாடுகளில் உள்ள உறவினர்கள் அனுப்பும் பணம் இங்குள்ள இளைஞர்களைக் கெடுத்து விட்டது.

அவர்கள் வெள்ளைச்சட்டை வேலையைத் தான் எதிர்பார்க்கிறார்கள்.

இதன் விளைவாக, கைத்தொழில் நிறுவனங்கள் இங்கு வரவில்லை.” என்றும் ஜெயமோகன் குறிப்பிட்டார்.

“போருக்குப் பிந்திய சூழலில், முன்மாதிரியாளர்கள், கோட்பாட்டாளர்கள் பற்றாக்குறையும் இந்த நிலை ஒரு காரணம் என்று கூறுகிறார் சமூகச் செயற்பாட்டாளரான தியாகராஜா நிரோஷ்.

“போரின் போது, விடுதலை இயக்கம் கோட்பாடு மற்றும் இலக்குகளை வழங்கியது.

போருக்குப் பின்னர், ஏற்பட்ட அந்த வெற்றிடத்தை ஆக்கபூர்வமற்ற, குற்றவியல் செயற்பாடுகள் நிரப்பிக் கொண்டுள்ளன.” என்றும் அவர் கூறுகிறார்.

அரசாங்கமும், சிவில் சமூகமும், இளைஞர்களை தலைவர்களாக கட்டியெழுப்பும் வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்றும், அதன் மூலம் ஏனையோரை ஊக்குவிக்க முடியும் என்றும் கூறுகிறார் யாழ்.பல்கலைக்கழக உளநலத்துறை பேராசிரியரான மருத்துவ கலாநிதி தயா சோமசுந்தரம்.

வழிமூலம் – New Indian Express

http://www.puthinappalakai.net/2014/12/12/news/1753

  • கருத்துக்கள உறவுகள்

புலியின் குகையாக இருந்த யாழ்ப்பாணம் இப்போது குற்றத்தின் மையம்?

Dec 12, 2014 | 15:59 by கார்வண்ணன்

JAFFNA-300x200.jpg

போர் முடிவுக்கு வந்த பின்னர் யாழ்ப்பாணத்தில் குற்றச்செயல்கள் அதிகரித்திருப்பது குறித்து நிபுணர்கள் கவலையடைந்துள்ளனர். சட்டத்தை மதிக்கும் குடிமக்கள் என்று அறியப்பட்ட இடம், இன்று குற்றவாளிகளும், சட்டத்தை மீறுவோரும் மகிழ்ச்சியாக வேட்டையாடும் இடமாக மாறியுள்ளது.

“குற்றச்செயல்களின் வீதம் மிக அதிகமாக உள்ளது. யாழ்.நகரப் பகுதியில் மட்டும், நாளொன்றுக்கு 20 தொடக்கம் 30 வரையிலான மிதிவண்டிகள் திருடப்படுகின்றன.

70 வீதமான உந்துருளிகளுக்கு அனுமதிப்பத்திரம் கிடையாது. பெரும்பாலும், தமிழரல்லாத சிறிலங்கா காவல்துறையினர், இதுகுறித்து கண்டும் காணாமல் இருக்கின்றனர்.

சிறைச்சாலையில் இடமின்மையால், நீதிமன்றங்கள் பிணையில் விட்டு விடுகின்றன.” என்று பிரித்தானியக் காவல்துறையில் பணியாற்றிய- யாழ்ப்பாணத்தை வதிவிடமாக கொண்ட, செபஸ்ரியன் நேரு கூறுகிறார்.

இதற்கு உயர்வாக இருக்கும் வேலையின்மையும் ஒரு காரணம் என்கிறார், அபிவிருத்திக்கான பருத்தித்துறை நிறுவகத்தைச் சேர்ந்த கலாநிதி முத்துக்கிருஸ்ண சர்வானந்தன்.

“சிறிலங்காவில் வேலையின்மை 18 வீதமாக இருக்கிறது. தமிழர்கள் அதிகம் வாழும், வடக்கு மாகாணத்தில் வேலையின்மை, 31.2 வீதமாக இருக்கிறது.

வடக்கு மாகாணத்தில் அபிவிருத்தித் திட்டங்களுக்கான நிதிச் செலவினங்கள் 76 வீதமாக இருக்கின்ற போதிலும், இந்த முதலீடுகளால், 5 வீதம் மட்டுமே, வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது.” என்றும் அவர் தெரிவித்தார்.

“இளைஞர்கள் தொழிலாளர்களாக பணியாற்றத் தயாராக இல்லாமையும் வேலையின்மைக்கு ஒரு காரணம்” என்கிறார், யாழ்ப்பாணத்தில் உள்ள முதலீட்டுச்சபையைச் சேர்ந்த ஏ.ஆர்.ஜெயமோகன்.

“வெளிநாடுகளில் உள்ள உறவினர்கள் அனுப்பும் பணம் இங்குள்ள இளைஞர்களைக் கெடுத்து விட்டது.

அவர்கள் வெள்ளைச்சட்டை வேலையைத் தான் எதிர்பார்க்கிறார்கள்.

இதன் விளைவாக, கைத்தொழில் நிறுவனங்கள் இங்கு வரவில்லை.” என்றும் ஜெயமோகன் குறிப்பிட்டார்.

“போருக்குப் பிந்திய சூழலில், முன்மாதிரியாளர்கள், கோட்பாட்டாளர்கள் பற்றாக்குறையும் இந்த நிலை ஒரு காரணம் என்று கூறுகிறார் சமூகச் செயற்பாட்டாளரான தியாகராஜா நிரோஷ்.

“போரின் போது, விடுதலை இயக்கம் கோட்பாடு மற்றும் இலக்குகளை வழங்கியது.

போருக்குப் பின்னர், ஏற்பட்ட அந்த வெற்றிடத்தை ஆக்கபூர்வமற்ற, குற்றவியல் செயற்பாடுகள் நிரப்பிக் கொண்டுள்ளன.” என்றும் அவர் கூறுகிறார்.

அரசாங்கமும், சிவில் சமூகமும், இளைஞர்களை தலைவர்களாக கட்டியெழுப்பும் வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்றும், அதன் மூலம் ஏனையோரை ஊக்குவிக்க முடியும் என்றும் கூறுகிறார் யாழ்.பல்கலைக்கழக உளநலத்துறை பேராசிரியரான மருத்துவ கலாநிதி தயா சோமசுந்தரம்.

வழிமூலம் – New Indian Express

http://www.puthinappalakai.net/2014/12/12/news/1753

பைபிளில் ஒரு வசனம் இருக்கிறது 
"முந்துவோன் பிந்துவான், பிந்துவான் முந்துவான்" என்று 
இப்படி ஒரு நிலை புலம்பெயர் நிலைமையால் தாயகத்தில் ஏற்படும் என்று ஒரு கணிப்பு என்னிடம் ஏற்கனவே இருந்தது.
ஏழ்மையில் வாடும் சிங்களவன் எந்த புறநிலை சார்பும் இன்றி முன்னேறி கொள்ளுவான். 
 
இங்கிருந்து போகும் பணம். சென்றடைவோரை கெடுப்பதோடு மட்டுமல்லாது. அங்கிருக்கும் இயல்பு நிலையை பாதித்து அங்கிருந்து தொழில் செய்து முன்னேற துடிக்கும் ஏழைகளையும் பாதிக்கும்.
யாழ் சமூகத்தை பொருத்தவரை ..... பந்தா காட்டி வாழ்வதில் மகிழ்ச்சி காண்பது என்பது இரத்தத்தில் ஊறிய ஒன்று அதை இலகுவாக மாற்ற முடியாது.
இங்கு சாமத்திய வீட்டு பெண்ணை கெலியில் ஏற்றி இறக்குவதும் அதனால்தான்.
 
உள்ள அசிங்கம் முழுதும் வீடு நிறைந்திருக்கும். 
சிங்களவன் ஆடு மாடு போல் மித்தித்து வருகிறான். இந்த நிலையிலும் தங்களில் குறைவாக ஒருவனை தேடிபிடித்து அவனுக்கு ஒரு சாதி பெயரை சூட்டி. அவனை படுத்த கூடிய அவமானம் எல்லாம் படுத்தி. அதில் ஒரு மகிழ்வை கண்டு வாழ பழகிய ஒரு பித்தலாட்ட கூட்டம்.
அறிவை பயன்படுத்த பல தலைமுறை தாண்ட வேண்டும். 
  • கருத்துக்கள உறவுகள்

//புலியின் குகையாக இருந்த யாழ்ப்பாணம் இப்போது குற்றத்தின் மையம்?//

 

இதுக்கெல்லாம்..... யார் காரணம்?
சிங்கவனுக்கு, தமிழனை... காட்டிக் கொடுத்த,  ஒட்டுக் குழுக்கள்.
ஈழப்போர், முடிந்து... ஐந்து வருடமாகியும், தானும் செய்யாமல்...புலி வாந்தி எடுத்துக் கொண்டிருக்கும், சில சனத்தைப் பார்க்க, அவர்களின் முகத்தில்,  காறித் துப்ப வேண்டும் போலுள்ளது.
 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

பைபிளில் ஒரு வசனம் இருக்கிறது 
"முந்துவோன் பிந்துவான், பிந்துவான் முந்துவான்" என்று 
இப்படி ஒரு நிலை புலம்பெயர் நிலைமையால் தாயகத்தில் ஏற்படும் என்று ஒரு கணிப்பு என்னிடம் ஏற்கனவே இருந்தது.
ஏழ்மையில் வாடும் சிங்களவன் எந்த புறநிலை சார்பும் இன்றி முன்னேறி கொள்ளுவான். 
 
இங்கிருந்து போகும் பணம். சென்றடைவோரை கெடுப்பதோடு மட்டுமல்லாது. அங்கிருக்கும் இயல்பு நிலையை பாதித்து அங்கிருந்து தொழில் செய்து முன்னேற துடிக்கும் ஏழைகளையும் பாதிக்கும்.
யாழ் சமூகத்தை பொருத்தவரை ..... பந்தா காட்டி வாழ்வதில் மகிழ்ச்சி காண்பது என்பது இரத்தத்தில் ஊறிய ஒன்று அதை இலகுவாக மாற்ற முடியாது.
இங்கு சாமத்திய வீட்டு பெண்ணை கெலியில் ஏற்றி இறக்குவதும் அதனால்தான்.
 
உள்ள அசிங்கம் முழுதும் வீடு நிறைந்திருக்கும். 
சிங்களவன் ஆடு மாடு போல் மித்தித்து வருகிறான். இந்த நிலையிலும் தங்களில் குறைவாக ஒருவனை தேடிபிடித்து அவனுக்கு ஒரு சாதி பெயரை சூட்டி. அவனை படுத்த கூடிய அவமானம் எல்லாம் படுத்தி. அதில் ஒரு மகிழ்வை கண்டு வாழ பழகிய ஒரு பித்தலாட்ட கூட்டம்.
அறிவை பயன்படுத்த பல தலைமுறை தாண்ட வேண்டும். 

 

 

ஆக மொத்தத்திலை காசு அனுப்பாதேங்கோ எண்டு சொல்ல வாறியள்!!!
  • கருத்துக்கள உறவுகள்

//புலியின் குகையாக இருந்த யாழ்ப்பாணம் இப்போது குற்றத்தின் மையம்?//

 

இதுக்கெல்லாம்..... யார் காரணம்?

சிங்கவனுக்கு, தமிழனை... காட்டிக் கொடுத்த,  ஒட்டுக் குழுக்கள்.

 

அவர்கள் எப்படி காரணம் ஆகிறார்கள்?

குற்றவாளியை பாதிக்கப்பட்டவனுக்கு காட்டிக்கொடுப்பது நியாயமானது தானே?

பக்கத்து வீட்டில் களவு எடுத்த கள்ளனை காட்டிக்கொடுக்காமல் விட்டு விட்டு உங்கள் வீட்டிலும் களவு எடுக்க விடுவீர்களா?

அப்படி விட்டுத்தானே இன்று இந்த நிலை?

புலம்பெயர்ந்த இவர்களது சொந்தங்கள் படம் காட்ட காசு அனுப்பாமல் தேவைக்கு மட்டும் காசு அனுப்பினாலே அங்கிருப்பவர்களுக்கு வேலைக்கு செல்லும் எண்ணம் ஏற்பட்டு விடும். அளவுக்கு மீறி காசு இருந்தா இப்படி காவாலிகளா தான் திரிவார்கள்.

இதுக்குள்ள ஏன் புலி, ஒட்டின குழு ஒட்டாத குழு எல்லாம் வந்தது என்டு சத்தியமா எனக்கு விளங்கவில்லை.

.................

நியானி: மேற்கோள் ஒன்றும் அதற்கான பதிலும் நீக்கப்பட்டுள்ளன.

Edited by நியானி

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு விடுதலைப்பாோ் நசுக்கப்படும்பாேது அந்தச் சமூகத்தில் அடுத்து வருவது வறுமை, வேலையின்மை, இழப்புக்களினால் விரக்தி, பாதுகாப்பின்மை, சுதந்திரமின்மை, இதனால் ஏற்படும் சமூகச்சீா்கேடுகள். இளஞ்சந்ததியினா் அடக்குமுறையை உணராமல் விடுதலை பற்றி சிந்திக்காமல் சாேம்பேறிகளாக  உறக்கநிலையில் இருப்பதும் எதிரியானவனின் தந்திரமே. தாராளமான பாேதைப்பாெருள் பாவனை சாதாரணமாகிவிட்டது. கல்வியில் நாட்டம் குறைந்து சிறுவயதுத்திருமணம், குழுச்சண்டை, பட்டி தாெட்டியெல்லாம் சிங்களவன் படையெடுத்து தாெழில் செய்கிறான்.எம் இனம் எல்லாவற்றையும் இழந்து தலைகுனிந்து நிற்பது வேதனையளிக்கிறது. வெளிநாட்டிலும் யாழ்ப்பாணத்துத் தமிழா்கள் உழைக்கிறாா்கள். இடப்பெயா்வுக்கு முன்னும் தன் உழைப்பிலேதான் வாழ்ந்தவன். 

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாண சமூகம் கடின உழைப்புக்குப் பேர் போனது.முன்பெல்லாம் இனக்கலவரங்களின் போது சிங்கள இன வாதிகள் கடைகளை எரித்து விட்டுப் போக மறுநாளே அந்த இடத்தில் கடை திறந்து வியாபாரத்தில் ஈடுபடுவதை காணக் கூடியதாக இருக்கும்.மழை வீழ்ச்சி குறைந்த இடமாயினும் பெய்யும் மழைநீரையும் கிணற்றுநீரையும் பயன் படுத்தி விவசாயத்தில் கொடிகட்டிப்பறந்தனர்.மீன்பிடியும் அவ்வாறே நல்ல வளர்ச்சியில் இருந்தது.கல்விவளர்ச்சி சொல்லத்தேவையில்லை.கொழும்பை விட யாழ்மாவட்டம் கூடிய வெட்டுப்புள்ளியை பெறும் மாவட்டமாக இருந்தது .கட்டுக்கோப்பான கலாச்சாரம் பின்னணி காரணமாக குற்றச் செயல்களும் சிறிலங்காவின் ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் குறைவாக இருந்தது.பெரும் போர் நடந்த காலங்களில் கூட எல்லாம் ஒழுங்காக இருந்தது.ஆனால் போருக்குப்பின் பின்னான காலத்தில் மிக மோசமான நிலைக்கு அந்த சமூகம் தள்ளப்பட்டமைக்கு தமிழருக்கு ஒரு முறையான தலைமை இல்லாமையே காரணமாகும்.கூட்டமைப்பினர் தேர்தலின் போது வீரவசனம்பேசுவதும் இந்தியாவின் அபிலாசைகளை நிறைவேற்றவதிலுமே தங்கள் நேரத்தைச்செலவழிக்கின்றனர்.ஓட்டுப் பொறுக்கு் மட்டும் அரசியல்அல்ல.ஒட்டுக்குழுக்கள் சிங்கள இனவாதிகளின் கட்டமைக்கப்பட்ட இன அழிப்புக்கு உறுதுணையாகச் செயற்படுகின்றன.மக்கள் தங்களைப் பற்றிச் சிந்திக்கக்கூடாது என்பதற்காக போதைப்பொருள் பாவனை தாரளமாகப் யாழ்ப்பாணத்துக்கு அனுமதிக்கப்படுகின்றது.வெளிநாடுகளில் விறைக்கும் குளிரில் உறவுகள் மிகவும் கடினமான வேலைகளைச் செய்து அனுப்பும் பணம் காரணமாக வேலை செய்து உழைக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் இருக்கிறது.இவர்கள் செய்ய வேண்டிய வேலைகளை சிங்களவர்கள் செய்கிறார்கள் .அவர்கள் இங்கு வந்த போக வசதியாக இரயில் போக்குவரத்தும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.இராணுவம் தமிழர்களின் நிலத்தில் பயிர்செய்து தமிழர்களுக்கே விற்பனை செய்கிறார்கள்.அரசியல்வாதிகளும்.சமூகவியலாளர்களும்,கல்விமான்களும்,ஊடகங்களும் இது பற்றிச் சிந்திக்க வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.