Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சியில் சுமந்திரன் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர்?

Featured Replies

அடுத்து வருடம் ஐக்கிய தேசிய கட்சி ஆட்சி அமைத்தால், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேசிய பட்டியல் நாடாளுன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கு பொருளாதார அபிவிருத்தி அமைச்சு பதவி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும், ஐக்கிய தேசிய கட்சிக்கும் இடையில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ள உடன்படிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த நொவம்பர் மாதம் 23ம் திகதி இந்த உடன்படிக்கை ஏற்படுத்திக் கொள்ளப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி தமிழ் தேசிய கூட்டமைப்பு மைத்திரிபால சிறிசேனவுக்கு பூரண ஆதரவை வெளிப்படுத்தும் என்று, ஏப்ரல் மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நாடாளுமன்றத் தேர்லில் ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவளிக்கும் என்றும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

இதில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு மூன்று அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் சுமந்திரனுக்கு பொருளாதார அபிவிருத்தி அமைச்சுப் பதவி வழங்கப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன. http://www.pathivu.com/news/36316/57//d,article_full.aspx

 

அது சரி கருணாவிற்கு கொடுத்த அமைச்சுப்பதவி போல விழா பங்கேற்றலும் வாகனமும் மட்டுமாக இருக்கப் போகன்றது கவனம். விக்னேஸ்வரனே அதிகாரம் ஏதுமில்லை என்கிறார். அப்பறம் சுமந்திரனும் மற்ற இரு அமைச்சர்களுடன் சேர்ந்து அழப்போகின்றார்.
 
  • கருத்துக்கள உறவுகள்

ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சியில் சுமந்திரன் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர்?

 

தமிழரது பிரச்சினைக்கு சிங்களம் வைக்கும் தீர்வு இது தானோ..? :(  :(  :(

கருத்துகளை முன்வைப்பதற்கு முன்னர் செய்தியின் உண்மை தன்மையை குறித்து கவனம் செலுத்துவதன் மூலம் தேவையற்ற கருத்து வேறுபாடுகளை தவிர்க்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

பதிவின் பதிவுகள் சந்தேகத்துக்கு இடமானது.

  • கருத்துக்கள உறவுகள்

கருத்துகளை முன்வைப்பதற்கு முன்னர் செய்தியின் உண்மை தன்மையை குறித்து கவனம் செலுத்துவதன் மூலம் தேவையற்ற கருத்து வேறுபாடுகளை தவிர்க்கலாம்.

 

உண்மை

சும்மா புரளியை கிளப்புரறாங்கப்ப

  • கருத்துக்கள உறவுகள்

அப்படித்தான் இருந்தாலும் அப்பதவிக்கு சுமந்திரன் தகுதியானவரே. பின்ன சிவாஜிலிங்கம், கஜேந்திரன் (பபா), கஜேந்திரன் (குதிரை) போன்றவர்களையா நியமிப்பார்கள்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

செய்தி எந்தளவுக்கு உண்மை என்று தெரியாது. உண்மையாக இருந்தால் நல்லது. கூட்டமைப்பு வெளியே நின்று சும்மா கூவிக்கொண்டு இருப்பதைவிட உள்ளே போய் ஏதாவது செய்யட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

பொருளாதார அமைச்சு என்பது பாரிய அமைச்சு அது தமிழ் கூட்டமைப்புக்கு இலகுவில் கிடைக்காது மீறி கிடைத்தால் பெரும் சவால்களை எதிர்நோக்கும் எம் மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமே..!!!

இதுக்கு முன்னம் இன்னொரு திரியில் சமந்திரன் குழு உவையலை சந்திக்கபோய் அவமானப்பட்டதாக இருந்துத்து இப்ப இப்பிடி வருது. பகுத்தறிவை விற்றுத்தான் எங்களில் பலர் பாண் திண்டமோ தெரியாது.

Edited by Sooravali

  • கருத்துக்கள உறவுகள்

சுந்திரனுக்கு, பொருளாதார அமைச்சர் பதவி கிடைத்தாலும்.....
அவர் தமிழர்களுக்கு, எதுவும் செய்ய மாட்டார், என்பதில்.... சிங்களம் அதிக நம்பிக்கை வைத்துள்ளமையையே, இது காட்டுகின்றது. :D

அப்படித்தான் இருந்தாலும் அப்பதவிக்கு சுமந்திரன் தகுதியானவரே. பின்ன சிவாஜிலிங்கம், கஜேந்திரன் (பபா), கஜேந்திரன் (குதிரை) போன்றவர்களையா நியமிப்பார்கள்?

 

வாலி இந்த செய்தி திரிக்கபட்ட இட்டு கட்டபட்ட செய்தி என்றே தெரிகிறது.  ஆனால் தகுதி பற்றி நீங்கள் கூறியதால் கூறுகிறேன் ஸ்ரீலங்கா அரசாங்கத்தில் அமைச்சர் பதவிபெற எந்த தகுதியும் தேவையில்லை. சிங்களவராக இருந்தால் அவர்கள் சொல்வது எதற்கும் ஆமா சொல்ல வேண்டும். தமிழராக இருந்தால்  அவர் சார்ந்த  இனத்தையோ அல்லது அவரது சொந்த பிள்ளையோ எவ்வளவு  அவமானப்படுத்தினாலும் கண்டு கொள்ளாமல் விசுவாசத்துடன் சேவகம் செய்யவேண்டும். அந்த தகுதி சுமந்திரனுக்கு இல்லை என்றே நான் நினைக்கிறேன். நீங்கள் அவருக்கு அந்த தகுதி இருக்கிறது என்று கூறுகிறீர்கள்.

தமிழ் நெற் ,பதிவு ,உலகத்தமிழர் ,சங்கதி எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் .இன்றைக்கு எவரும் யதார்த்தத்த புரிந்து செயற்படத் தயாரில்லை .ஐ நா மனித உரிமை விசாரணைக்கு விசாரணைக்குழு எதிரபார்த்த சர்வதேச தரத்தினாலான சாட்சியங்களை கொடுப்பதற்காக தன்னுடைய உதவியாளரை அவுஸ்ரேலியா அனுப்பி பயிற்சி கொடுத்தவர் ,இதற்கு ஐ நா மனித உரிமைஆணையகம் உதவி செய்தது .ஒவ்வொரு சாட்சியங்களையும் சமர்ப்பிக்க 10-12மணிநேரங்கள் தேவைப்பட்டது .இதெல்லாம் பகிரங்கமாக சொல்லமுடியாது .

காலம் பதில் சொல்லும் .

  • கருத்துக்கள உறவுகள்

ஆமா அவர் போட்ட கொட்டை பனங்கொட்டை முளைச்சிட்டுதா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.