Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு மாகாண ஆளுனராக பாலிஹக்கார நியமனம்

Featured Replies

வடக்கு மாகாண ஆளுனராக பாலிஹக்கார நியமனம் JAN 15, 2015 | 12:16by கார்வண்ணன்in செய்திகள்

H-M-G-S-Palihakkara--300x200.jpgசிறிலங்காவின் முக்கிய இராஜதந்திரிகளில் ஒருவரான எச்.எம்.ஜி.எஸ்.பாலிஹக்கார, வடக்கு மாகாண ஆளுனராக அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் இன்று அதிகாரபூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

வடக்கு மாகாண ஆளுனராகப் பதவி வகித்து வந்த மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறிக்கு பதிலாக, இவரைப் புதிய அரசாங்கம் நியமித்துள்ளது.

இராணுவப் பின்னணி கொண்ட ஆளுனரான மேஜர் ஜெனரல் சந்திரசிறிக்குப் பதிலாக புதிய ஆளுனர் ஒருவரை நியமிக்கும்படி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.

அதற்கு மகிந்த ராஜபக்ச அரசாங்கம் இணங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய ஆளுனராக நியமிக்கப்பட்டுள்ள பாலிஹக்கார, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் முன்னாள் செயலராவார்.

அத்துடன் ஐ.நாவுக்கான முன்னாள் வதிவிடப் பிரதிநிதியாகவும் பணியாற்றியுள்ளார்.

38 ஆண்டுகள் சிவில் மற்றும் இராஜதந்திர சேவையில் பணியாற்றியவர்.

2002ம் ஆண்டு விடுதுலைப் புலிகளுடனான ரணில் விக்கிரமசிங்க அரசின் பேச்சுக்களில் பங்கெடுத்தவர் என்பதுடன், அப்போது அமைக்கப்பட்ட அரசாங்க சமாதான செயலகத்தின் பதில் பணிப்பாளராகவும் பதவி வகித்தவர்.

நல்லிணக்க ஆணைக்குழுவின் உறுப்பினர்களில் ஒருவராகவும் பாலிஹக்கார பணியாற்றியுள்ளார்.

http://www.puthinappalakai.net/2015/01/15/news/2921

 

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பின் தமிழர் ஒருவரை நியமிக்கணும் என்ற கோரிக்கை....?? :(

கூட்டமைப்பின் தமிழர் ஒருவரை நியமிக்கணும் என்ற கோரிக்கை....?? :(

 

சட்டியில் இருந்தாத்தானே அகப்பையில் வரும்.

 

 

தமிழர்கள் தேர்தலை புறக்கணிக்கவேண்டும் ராஜபக்ச தேர்தலில் வெல்ல வேண்டும் என்று இனியவனின் கருத்துக்கு பின்கருது எழுதி இருந்தீர்கள். அப்படி பார்க்கபோனால் இப்போது வந்து கூட்டப்பின் கோரிக்கையை நினைத்து வருந்துவது பொருந்தாமல் இருக்கே?

Edited by Sooravali

  • கருத்துக்கள உறவுகள்

மைத்திரி பால தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வைத்த இரண்டாவது ஆப்பு....வடக்கு மாகனத்தின் ஆளுநராக மீண்டும் ஒரு சிங்களவர் நியமனம்......அண்மையில் மைத்திரியை சந்தித்த தமிழர் கூட்டமைப்பு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்துக்கு தமிழர்களை ஆளுநராக நியமிக்க கேட்டிருந்தது.......

முதல் ஆப்பு:

பதவியேற்ப்பு விழாவில் அனைவருக்கும் நன்றி கூறிய மைத்திரி தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு வேண்டும் என்று நன்றி கூறாமல் தவிர்த்துவிட்டு பிறகு சாக்குபோக்கு சொல்லி இருந்தார்.....

கூட்டமைப்பின் தமிழர் ஒருவரை நியமிக்கணும் என்ற கோரிக்கை....?? :(

 

அப்படி ஒரு கோரிக்கை வைக்கப்படவில்லையே?

 

ஆளுநராக நியமிக்கப்படுபவரை இன ரீதியாக பார்த்து நியமிக்க கோருவது அடிப்படையில் தவறானதாக போய்விடும்.  வடமேல் மாகாணசபையின் (அல்லது தென்மாகாண சபையின்?? ) ஆளுநராக சுவாமிநாதன் எனும் தமிழர் முன்னர் நியமிக்கப்பட்டு இருந்தார். அவர் தான் இப்போது மீள் குடியேற்றம், இந்து சமய அமைச்சராக நியமிக்கப்பட்டு இருக்கின்றார் என்று நினைக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

அப்படி ஒரு கோரிக்கை வைக்கப்படவில்லையே?

 

ஆளுநராக நியமிக்கப்படுபவரை இன ரீதியாக பார்த்து நியமிக்க கோருவது அடிப்படையில் தவறானதாக போய்விடும்.  வடமேல் மாகாணசபையின் (அல்லது தென்மாகாண சபையின்?? ) ஆளுநராக சுவாமிநாதன் எனும் தமிழர் முன்னர் நியமிக்கப்பட்டு இருந்தார். அவர் தான் இப்போது மீள் குடியேற்றம், இந்து சமய அமைச்சராக நியமிக்கப்பட்டு இருக்கின்றார் என்று நினைக்கின்றேன்.

 

 

இதனைத் தொடர்ந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் அரசாங்கத்திடம் சில கோரிக்கைகளை முன்வைத்தனர்.

இதன்படி, இடம்பெயர்ந்த மக்கள் தமது சொந்தக் காணிகளில் மீள்குடியமர அனுமதிக்க வேண்டும். நீண்டகாலமாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை பொது மன்னிப்பின்கீழ் விடுதலை செய்யவேண்டும்.

காணாமற்போனவர்கள் விடயத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வடகிழக்கு ஆளுநர்கள், அரசாங்க அதிபர்கள் மற்றும் மாகாண அமைச்சின் செயலர்களை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்கப்பட்டது.

அத்துடன் ஒரு நல்லிணக்க சமிக்ஞையாக முதலில் வடக்கிற்காவது தமிழ் ஆளுநர் ஒருவரை நியமிக்க வேண்டுமென்றும், வவுனியா மன்னார் மற்றும் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர்களை மாற்றுவது தொடர்பிலும் கோரிக்கை விடுக்கப்பட்டதுடன், திருகோணமலையில் எட்டுவருட காலமாக இராணுவ அதிகாரி ஒருவர் அரச அதிபராக இருப்பதும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.

 

http://www.yarl.com/forum3/index.php?/topic/152104-tna-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A9-%E0%AE%9A/

சட்டியில் இருந்தாத்தானே அகப்பையில் வரும்.

 

 

தமிழர்கள் தேர்தலை புறக்கணிக்கவேண்டும் ராஜபக்ச தேர்தலில் வெல்ல வேண்டும் என்று இனியவனின் கருத்துக்கு பின்கருது எழுதி இருந்தீர்கள். அப்படி பார்க்கபோனால் இப்போது வந்து கூட்டப்பின் கோரிக்கையை நினைத்து வருந்துவது பொருந்தாமல் இருக்கே?

 

அதே கருத்தில் தான் எப்பொழதும் இருப்பேன்

இப்பொ

கூட்டமைப்பு கேட்டதற்க பதில் வரவில்லை என்பதே கேள்வி

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பு ஒரு போதும் தமிழரை ஆளுநராக்க கோரவில்லை. இலங்கை அரசியலில் அரிச்சுவடி தெரியாதவர்கள் தன் அப்படிக் கோருவர். கூட்டமைப்பு கேட்டது சிவிலியன் ஆளுனரையே.

பதவியேற்ப்பில் திராவிட சங்விதானய வுக்கு நன்றி கூறினார் என்பது உரையை கேட்டயாருக்கும் புரியும்.

ஆக ரெண்டும் ஆப்பில்லை.

கூட்டமைப்பை கேலி பேசியவர்கள் ஆதங்கத்தில் கண்டபடி எழுதீனம்.

எச்.எம்.ஜி.எஸ்.பாலிஹக்கார வடமாகாண ஆளுனராக நியமிக்கப்பட்டது ஒரு விதத்தில் வரவேற்கக்கூடியதே. இவரது சேவைகளில் உள்ள ஒரேயொரு கறுப்புள்ளி ஐநாவின் மனித உரிமைகள் சபையில் போர்க்குற்றத்திற்கு எதிரான வாதங்கள். ஆனால் இவர் பலகாலமாக பல இடங்களில் சர்வதேசத்தில் இலங்கையை பிரதிநிதித்துவப் படுத்திய ஒருவர். இவருக்கு சர்வதேசத்தின் பிரதிநிதிகள் பலரும் நெருக்கமாக இருப்பார்கள். 
 
முன்னர் இராணுவ அதிகாரி ஆளுனராக இருந்தபோது வேண்டாவெறுப்பாக பேசிய சர்வதேசப் பிரதிநிதிகள் கூட இவருடன் சகஜமாக உரையாடும் சந்தர்ப்பம் உள்ளது. இவரும் சர்வதேசத்தின் சில வேண்டுகோள்களை மறுக்க இயலாத நிலமைதான்.
 
மிகுதி விக்கி கூட்டமைப்பின் கையில்.
  • தொடங்கியவர்

 

எச்.எம்.ஜி.எஸ்.பாலிஹக்கார வடமாகாண ஆளுனராக நியமிக்கப்பட்டது ஒரு விதத்தில் வரவேற்கக்கூடியதே. இவரது சேவைகளில் உள்ள ஒரேயொரு கறுப்புள்ளி ஐநாவின் மனித உரிமைகள் சபையில் போர்க்குற்றத்திற்கு எதிரான வாதங்கள். ஆனால் இவர் பலகாலமாக பல இடங்களில் சர்வதேசத்தில் இலங்கையை பிரதிநிதித்துவப் படுத்திய ஒருவர். இவருக்கு சர்வதேசத்தின் பிரதிநிதிகள் பலரும் நெருக்கமாக இருப்பார்கள். 
 
முன்னர் இராணுவ அதிகாரி ஆளுனராக இருந்தபோது வேண்டாவெறுப்பாக பேசிய சர்வதேசப் பிரதிநிதிகள் கூட இவருடன் சகஜமாக உரையாடும் சந்தர்ப்பம் உள்ளது. இவரும் சர்வதேசத்தின் சில வேண்டுகோள்களை மறுக்க இயலாத நிலமைதான்.
 
மிகுதி விக்கி கூட்டமைப்பின் கையில்.

 

யார் இந்த வடமாகாண சபை ஆளுநர் பளிஹக்கார?
[ வெள்ளிக்கிழமை, 16 சனவரி 2015, 12:06.27 AM GMT ]
palihakara.jpg

வடமாகாண சபை ஆளுநராக இருந்த முன்னாள் இராணுவ அதிகாரி சந்திரசிறியின் இராஜினாமாவை அடுத்து, அங்கு ஒரு சிவில் உத்தியோகத்தர் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளதாக ஒரு சிலர் மிகவும் குதூகலிக்கின்றனர். இவர்கள் உண்மையை அறியாத அப்பாவிகளே.

யார் இந்த சிவில் உத்தியோகத்தர் பளிஹக்கார என பார்ப்போமானால், இவரும் இராணுவ  அதிகாரி சந்திரசிறியை போன்ற ஒருவர் என்பதே உண்மை.

இவர் 1990 முற்பகுதிகளில் ஜெனிவாவில் சிறிலங்காவின் தூதுவராலயத்தின் செயலாளராகக் கடமையாற்றியவர். பின்னர் 1998ம் ஆண்டு, சிறிலங்காவின் ஜெனிவா ஐ. நா. தூதுவராக நியமிக்கப்பட்டவர். அதன் பின்னர், அமெரிக்காவிலும் சிறிலங்காவின் தூதுவராக கடமையாற்றியவர்.

இவ் வேளையில் வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்கள் மீது, சிறிலங்காவின் முப்படைகளினால் கட்டவிழ்க்கப்பட்ட மனித உரிமை மீறல்களை பளிஹக்காரவும், இவருடன் அவ்வேளையில் ஜெனிவாவில் கடமையாற்றிய, தற்பொழுது அமெரிக்காவில் சிறிலங்காவின் தூதுவராக கடமையாற்றும், பிரசாத் காரியவாசம், வேறு பல தூதுவராலாய ஊழியர்களும் இணைந்து, மிகவும் மோசமான முறையில் தமிழர்களுக்கு எதிராக ஜெனிவாவில் மனித உரிமை ஆணைக்குழுவில் வேலைத்திட்டங்களை முன்வைத்தவர்.

இவ்வேளையில் மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் படுகொலையை, பிரான்ஸ் தமிழர் மனிதர் உரிமைகள் மையம், ஐ.நா. மனிதர் உரிமை ஆணைக்குழுவில் முன்னெடுத்திருந்த காரணத்தினால், தமிழர் மனித உரிமைகள் மையத்தின் பொதுச் செயலாளர் ஆகிய என்னை, ஐக்கிய நாடுகள் சபை மண்டபத்திலிருந்து அப்புறப்படுத்த திட்டமிட்டு, என்மீது பல விசமத்தனமான புகார்களை ஐ.நா. செயலகத்திற்கு முறையிட்டவர்.

இதனால், அவ்வேளையில் பல தடவை ஐ.நா.வின் பாதுகாப்பு பிரிவினால் விசாரிக்கப்பட்டேன். இறுதியில் இவர்களது குற்றச்சாட்டுகள் யாவும், அரசியல் பின்ணனி கொண்டதென்பதை தெரிந்து கொண்ட ஐ.நா. செயலகம், என் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முன்வரவில்லை.

அடுத்து, ராஜபக்ச அரசினால் உலகின் கண்களுக்கு மண்தூவும் நோக்குடன் உருவாக்கப்பட்ட “கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு”; (எல்.எல்.ஆர்.சி) முக்கிய அங்கத்தவராக பளிஹக்கார கடமையாற்றியதுடன், இக் குழுவின் அறிக்கையில், தமிழ் மக்களுக்கு நடைபெற்றவை ஓர் ‘இன அழிப்பு அல்ல’ என்ற அறிக்கையை வெளிக்கொண்டு வந்தவர்.

பளிஹக்கார முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவினது நெருங்கிய நண்பர். சுருக்கமாக கூறுவதானால், ராஜபக்ச குடும்பத்தின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்குபவரே இந்த ஆளுநர் பளிஹக்கார.

ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த வேளையில், தமிழ் தேசிய கூட்டமைப்பினர், வடமாகாண சபையின் ஆளுநராக ஓர் சிவில் நிர்வாகியை நியமிக்குமாறு வேண்டுகோள் வைத்த வேளையில், ஜனாதிபதி ராஜபக்ச இவ் பளிஹக்காரவையே நியமிப்பதற்கான ஒழுங்குகளை மேற்கொண்டிருந்தார்.

அவ்வேளையில் ஈ.பி.டி.யின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா, தமிழர் கூட்டமைப்பின் வேண்டுகோளுக்கு செவிசாய்க்க வேண்டமென ராஜபக்சவை வற்புறுத்திய காரணத்தினால், அப்போது பளிஹக்கார வடமாகாண சபையின் ஆளுநராக நியமிக்கப்படவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

தமிழ் மக்களின் வாக்குகளினால் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட மைத்திரிபால சிறிசேன, அன்று ராஜபக்சவினால் தெரிவு செய்யப்பட்ட ஆளுநரை, இன்று நியமித்துள்ளார். இதிலிருந்து என்ன புலனாகிறது என்பதை பகுத்தறிவுள்ள ஒவ்வொருவரும் விளங்கி கொள்ளவேண்டும்.

முன்னாள் இராணுவ அதிகாரியான சந்திரசிறி, வடமாகாண சபைக்கு  செய்த நாசகார வேலைகளுக்கு பல மடங்கு மேலாக, ராஜபக்சக்களின் நம்பிக்கை நட்சத்திரமான சிவில் ஆளுநர் பளிஹக்கார மேற்கொள்ளவுள்ளார்.

ச. வி. கிருபாகரன்

பிரான்ஸ் ( நன்றி தமிழ்வின்)

 

Edited by BLUE BIRD

  • கருத்துக்கள உறவுகள்

இவ் வேளையில் வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்கள் மீது, சிறிலங்காவின் முப்படைகளினால் கட்டவிழ்க்கப்பட்ட மனித உரிமை மீறல்களை பளிஹக்காரவும், இவருடன் அவ்வேளையில் ஜெனிவாவில் கடமையாற்றிய, தற்பொழுது அமெரிக்காவில் சிறிலங்காவின் தூதுவராக கடமையாற்றும், பிரசாத் காரியவாசம், வேறு பல தூதுவராலாய ஊழியர்களும் இணைந்து, மிகவும் மோசமான முறையில் தமிழர்களுக்கு எதிராக ஜெனிவாவில் மனித உரிமை ஆணைக்குழுவில் வேலைத்திட்டங்களை முன்வைத்தவர்.

:D :d :D

இவ் வேளையில் வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்கள் மீது, சிறிலங்காவின் முப்படைகளினால் கட்டவிழ்க்கப்பட்ட மனித உரிமை மீறல்களை பளிஹக்காரவும், இவருடன் அவ்வேளையில் ஜெனிவாவில் கடமையாற்றிய, தற்பொழுது அமெரிக்காவில் சிறிலங்காவின் தூதுவராக கடமையாற்றும், பிரசாத் காரியவாசம், வேறு பல தூதுவராலாய ஊழியர்களும் இணைந்து, மிகவும் மோசமான முறையில் தமிழர்களுக்கு எதிராக ஜெனிவாவில் மனித உரிமை ஆணைக்குழுவில் வேலைத்திட்டங்களை முன்வைத்தவர்.

:D :D :D

 

அவர் உங்கட ஆள் போல இருக்கு. நீங்கள் தமிழருக்கு ஒரு பிரச்சனையுமில்லை கள்ளமா அகதியா வாறவர்களை திருப்பி இலங்கை கடற்படைட்ட குடுக்கோணும் என்டுறியள். அவரும் அதே தமிழருக்கு இலங்கையில் ஒரு பிரச்சனையும் இல்லை என்டு சொல்கிறார். சேம் ப்ளட்   :D  :D

  • கருத்துக்கள உறவுகள்

த்தோடா....... நீர் கொழும்போ புத்தளம் பகுதி சிங்கள தமிழர்களுக்கு என்ன பிரச்சனை இருக்கு கள்ளமா வர? அவர்கள் என்ன யுத்தத்தால் பாதிக்க பட்டவர்களா?

  • கருத்துக்கள உறவுகள்

ஒம்மோம் யாழ்பாணத்தமிழருக்கு மட்டும்தான் பிரச்சினை. மற்ற தமிழரை சிங்களன் கொஞ்சினவன். தென்னாலிக்கு இது விளங்கேல்ல :)

யுத்தம் நடந்த காலத்தில் எல்லா அரச அதிகாரிகளும் அரசின் கொள்கையையே பிரஸ்தாபித்தனர். அப்படி பார்த்தால் வடக்குக்கான ஆளுநரை இலங்கைக்கு வெளியில் இருந்துதான் கொண்டு வரோணும் :)

  • கருத்துக்கள உறவுகள்

சப்பா முதல்ல ஒரு id ல வாங்கப்பா..

  • கருத்துக்கள உறவுகள்

மைத்திரியை வைச்சு.. மகிந்தவை.. இனப்படுகொலையை முன்னெடுத்த அத்தனை சிங்கள இனவெறிக் கூட்டத்தையும்.. சம்பந்தனும்.. சுமந்திரனும்.. மறப்போம் மன்னிச்சிடினம். சுண்டல்.புலம்பெயர் அமைப்புக்கள் பலவற்றின் மெளனமும்.. இதில் அடங்கும். ஒரு சில இளையோர் அமைப்புக்கள் தான்.. இவர்களின் இந்த திருகுதாளங்களை அம்பலப்படுத்தி வருகின்றன.

 

ரணில் - மைத்திரி - சம்பந்தன் -சுமந்திரன் கூட்டணி ஆபத்தான கூட்டணி. இனப்படுகொலை ஒன்றே நடக்கல்ல என்று சொல்லக் கூடிய சில நடவடிக்கைகளை வைச்சு பெரிய பூச்சு மொழுகலுக்கு தயாராகி வருகிறார்கள். தமிழ் மக்கள் மிகவும் அவதானமாக இருப்பதோடு.. போர்க்குற்ற விசாரணைகளுக்கான முன்னெடுப்புக்களை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பெரு முனைப்போடு முன்னெடுக்க வலியுறுத்தும் வகைக்கு நடவடிக்கைகள் அவசியம். அந்த வகையில்.. மக்கள் தேவையான  நேரத்தில் பெருமளவில் ஒன்று கூடி தங்கள் எதிர்பார்ப்பை சர்வதேசத்துக்குச் சொல்ல தயாராக இருக்க வேண்டும்.

 

இங்கு காட்டுக்கத்து கத்தும்.. போலிகளால்... மக்களுக்கு நன்மை இல்லை. இவர்கள் மொழுகல் கூட்டத்தின்... கூக்குரல்கள் அவ்வளவே. :icon_idea:

ஒம்மோம் யாழ்பாணத்தமிழருக்கு மட்டும்தான் பிரச்சினை. மற்ற தமிழரை சிங்களன் கொஞ்சினவன். தென்னாலிக்கு இது விளங்கேல்ல :)

யுத்தம் நடந்த காலத்தில் எல்லா அரச அதிகாரிகளும் அரசின் கொள்கையையே பிரஸ்தாபித்தனர். அப்படி பார்த்தால் வடக்குக்கான ஆளுநரை இலங்கைக்கு வெளியில் இருந்துதான் கொண்டு வரோணும் :)

 

இவருடைய மற்ற பதிவுகளை வாசித்தாலே விள‌ங்கும் இவர் யாழ் மையவாத சிந்தனையில் ஊறித்திழைத்த ஒருவர் என்பது. 
 
 

சப்பா முதல்ல ஒரு id ல வாங்கப்பா..

 

உண்மையை சொல்ல எதுக்கு வேற வேற idல் வரணும்? சப்பை கட்டு கட்டுவதில் புலம்பெயர் தேசிய போராளிகள் விண்ண‌ர்கள் தான்.   :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.