Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கட்சியின் கட்டுப்பாட்டை மீறினாராம் அனந்தியை தமிழரசுக் கட்சி கட்சியில் இருந்து இடை நிறுத்தியுள்ளது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதற்காக, கட்சியின் உறுப்பினரும், மத்திய குழு உறுப்பினருமாகிய திருமதி அனந்தி சசிதரனை, கட்சியில் இருந்து இடைநிறுத்தியுள்ளதாக இலங்கைத் தமிழரசுக் கட்சி அறிவித்திருக்கின்றது.

அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கத்தினால் அனந்திக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்திலேயே இந்த அறிவித்தல் வெளியிடப்பட்டிருக்கின்றது.

மூன்று காரணங்களைச் சுட்டிக்காட்டி, அவை தொடர்பில் அனந்தியின் கவனம் ஈர்க்கப்படுவதாகவும், அவற்றின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் இம்மாதம் 11 ஆம் திகதியிடப்பட்ட அந்தக் கடிதத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம் தெரிவித்துள்ளார்.

‘நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் (2015) பொது எதிரணி வேட்பாளர் திரு.மைத்திரிபால சிறிசேன அவர்களை ஆதரிப்பதென இலங்கைத் தமிழரசுக் கட்சி தீர்மானம் எடுத்தது.

‘இதன் அடிப்படையில் எமது கட்சியினர் பணியாற்றினர்.

‘நீங்கள் கட்சியின் தீர்மானத்துக்கு மாறாக அறிக்கைகள் விட்டமையாலும். பத்தரிகையாளர் மாநாடு நடத்தியமையாலும், பிரசாரம் செய்தமையாலும் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியுள்ளீர்கள்.

எனவே, நீங்கள் இன்றிலிருந்து கட்சியின் உறுப்புரிமை, கட்சியின் மத்தியி செயற்குழு உறுப்புரிமை என்பவற்றினின்று இடைநிறுத்தப்பட்டுள்ளீர்கள் என்பதை இத்தால் தங்களுக்கு அறியத் தருகிறேன். ஊங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுப் பத்திரம் விலைவில் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்' என அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தக் கடிதம் தனக்கு பதிவுத் தபாலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அனந்தி, அது குறித்து இப்போதைக்கு கருத்து எதனையும் தெரிவிக்க விரும்பவில்லை என கூறினார்.

வடமாகாணசபை உறுப்பினராகிய அனந்தி சசிதரன், விடுதலைப்புலிகளின் திருகோணமலை அரசியல் துறை பொறுப்பாளராக இருந்த எழிலன் என்றழைக்கப்படும் சசிதரனின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.

யுத்தம் முடிவடைந்தவுடன், பாதுகாப்பு அளிக்கப்படுவதுடன், பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படும் என்று உறுதியளித்து, யுத்தத்தில் எஞ்சியிருந்த விடுதலைப்புலி உறுப்பினர்களை இராணுவத்தினரிடம் சரணடையுமாறு அரசாங்கம் கோரியிருந்தது.

இதனையடுத்து இராணுவத்தினரிடம் சரணடைந்த பெரும் எண்ணிக்கையிலான விடுதலைப்புலி உறுப்பினர்களில் ஒருவராக எழிலனும் சரணடைந்தார். எனினும் அதன் பின்னர் தனது கணவர் எங்கு வைக்கப்பட்டுள்ளார், அவருக்கு என்ன நடந்தது என்பது தெரியாத நிலையில் அவரைக் கண்டுபிடிப்பதற்கான முயற்சிகளில் அனந்தி தொடர்ச்சியாக ஈடுபட்டிருந்தார்.

இராணுவத்திடம் சரணடைந்து காணாமல் போனவர்கள் தொடர்பில் இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டங்களில் முன்னின்று செயற்பட்ட அனந்தியை தமிழரசுக் கட்சி தனது உறுப்பினராக இணைத்து வடமாகாண சபைக்கான தேர்தலில் போட்டியிடச் செய்திருந்தது.

வடமாகாண சபைத் தேர்தலில் முதலசை;சர் வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்ற சி.வி.விக்னேஸ்வரனுக்கு அடுத்ததாக 87 ஆயிரத்து 870 விருப்பு வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/115639/language/ta-IN/article.aspx

  • Replies 56
  • Views 2.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

வரவேற்கப்பட வேண்டிய சரியான முடிவு!

  • கருத்துக்கள உறவுகள்

பெரும் வரலாற்றுத்தவறு..

 

 இது தமிழருக்குள் பாகுபாடுகளையும் பிரிவினைகளையும் ஏற்படுத்தி எம்மை பலவீனப்படுத்தும். ஆனந்தியுடன் பேசியிருக்கலாம். சொன்னால் கேட்கக்கூடியவர். வெற்றி மமதையில் பிரச்சினையை பெரிதாக்கி வரலாற்றுத்தவறை இழைத்துவிட்டார்கள்.

அவர் ஒரு மறுதலிக்கமுடியாத மக்கள் சேவகராக வருவார்.

காலம் பதில் சொல்லும்.  

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

திருந்தி நடக்க ஒரு வாய்பு. எடுப்பார் கைபிள்ளை ஆகி, கஜேந்த்ஹிரகுமார் போல வெறுங்கடையில் டீ ஆத்தாமல், தவறுக்கு மன்னிப்புப் கேட்டு, கட்சியில் நீடிக்கும் வழியைப் பார்கட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த தேர்தலில பிரபாகரன் மாவீரன் கார்த்திகையில் தீபம் ஏத்த்துவம் மாவீரர் இல்லம் கட்டுவம் என்று சனத்தை ஏமாத்தலாம்

வரவேற்க வேண்டிய முடிவு.

ஆனந்தி மன்னிப்புக் கேட்டு மீண்டும் தமிழரசுக் கட்சியில் இணைவதை தடுக்க வேண்டும் என்று அவரின் புலம்பெயர் எஜமானர்களை தயவோடு கேட்டுக் கொள்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

பெரும் வரலாற்றுத்தவறு..

 

 இது தமிழருக்குள் பாகுபாடுகளையும் பிரிவினைகளையும் ஏற்படுத்தி எம்மை பலவீனப்படுத்தும். ஆனந்தியுடன் பேசியிருக்கலாம். சொன்னால் கேட்கக்கூடியவர்.

பிரபாகரன் மாத்தயாவுக்கு எதிராக நடவடிக்கை எடுத்த போதும் இந்த ஆலோசனையை சொன்னீர்களா?

வெற்றி மமதையில் பிரச்சினையை பெரிதாக்கி வரலாற்றுத்தவறை இழைத்துவிட்டார்கள்.

....

காலம் பதில் சொல்லும்.

உண்மை தான். கிளிநொச்சியில் நாடமைத்த வெற்றி மமதையில் பிரச்சினையை பெரிதாக்கி வரலாற்றுத்தவறை இழைத்துவிட்டார்கள். முள்ளிவாய்க்காலில் காலம் பதில் சொல்லி விட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

வரவேற்க வேண்டிய முடிவு.

ஆனந்தி மன்னிப்புக் கேட்டு மீண்டும் தமிழரசுக் கட்சியில் இணைவதை தடுக்க வேண்டும் என்று அவரின் புலம்பெயர் எஜமானர்களை தயவோடு கேட்டுக் கொள்கிறேன்.

 

 

புலிகள் பலமாக இருந்தபோது

வரைபடம் கீறி அவர்களை வழி நடாத்தி 

தோற்றதும் ஓடி ஒழிந்தவர் தானே நீங்கள்...

தற்பொழுது கூட்டமைப்புக்கும் அதே கதிதானா??...

 

பாவம் தமிழர்கள்

நீங்கள் அவர்கள் முதுகில் தொடருங்கள்...

  • கருத்துக்கள உறவுகள்

திருந்தி நடக்க ஒரு வாய்பு. எடுப்பார் கைபிள்ளை ஆகி, கஜேந்த்ஹிரகுமார் போல வெறுங்கடையில் டீ ஆத்தாமல், தவறுக்கு மன்னிப்புப் கேட்டு, கட்சியில் நீடிக்கும் வழியைப் பார்கட்டும்.

 

 அனந்தி தமிழ் தேசிய கூட்டமைப்பின் கொள்கைகளையோ கட்டுப்பாடுகளையோ தலைமையையோ ஏற்றுக்கொண்ட ஒருவரல்ல என்று பலமுறை தனது செயற்பாடுகள் மூலம் நிருபித்து இருக்கிறார். அவரது செயற்பாடுகளும் கொள்கைகளும் கஜேந்திரகுமாரின் கட்சியின் கொள்கைகளுடனும் சர்வதேச தமிழ் மக்கள் அவையின் கொள்கைகளுடனும் மட்டுமே ஒத்து போகின்றன. ஆகவே அவருக்கு பொருத்தமான கட்சி கஜேந்திரகுமாரின் கட்சி.

வரவேற்க வேண்டிய முடிவு.

ஆனந்தி மன்னிப்புக் கேட்டு மீண்டும் தமிழரசுக் கட்சியில் இணைவதை தடுக்க வேண்டும் என்று அவரின் புலம்பெயர் எஜமானர்களை தயவோடு கேட்டுக் கொள்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரன் மாத்தயாவுக்கு எதிராக நடவடிக்கை எடுத்த போதும் இந்த ஆலோசனையை சொன்னீர்களா?

உண்மை தான். கிளிநொச்சியில் நாடமைத்த வெற்றி மமதையில் பிரச்சினையை பெரிதாக்கி வரலாற்றுத்தவறை இழைத்துவிட்டார்கள். முள்ளிவாய்க்காலில் காலம் பதில் சொல்லி விட்டது.

ஒரு அரசியல் கட்சிக்கும் விடுதலை அமைப்பிற்கும் உள்ள வித்தியாசமே உங்களுக்கு புரியல.

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் பலமாக இருந்தபோது

வரைபடம் கீறி அவர்களை வழி நடாத்தி 

தோற்றதும் ஓடி ஒழிந்தவர் தானே நீங்கள்...

தற்பொழுது கூட்டமைப்புக்கும் அதே கதிதானா??...

 

பாவம் தமிழர்கள்

நீங்கள் அவர்கள் முதுகில் தொடருங்கள்...

கருத்து வறுமையால் தனிப்பட்டவர்கள் மீதான தாக்குதலை மீண்டும் ஆரம்பித்து விட்டீர்களா?

நீங்கள் தோற்றவர்களின் பின்னாலா தமிழ் மக்களை தொடர்ந்தும் போகச்சொல்கிறீர்கள்?

மக்கள் போக மாட்டார்கள். இனியும் போக மாட்டார்கள்.

கூட்டமைப்பின் தலைவர்கள் தோற்றவர்கள் அல்ல, வென்றவர்கள் - மக்கள் ஆதரவோடு வென்றவர்கள். புலிகளால் தற்கொலை தாக்குதல் செய்தும் அகற்ற முடியாத கோத்தபாயவை வாக்கு வலிமையால் (அனந்தி மற்றும் சிவாஜிலிங்கம் போன்றவர்களின் துரோக செயற்பாடுகளுக்கு மத்தியிலும்) அகற்றியவர்கள். போர் காலத்துக்கு பின்னான கூட்டமைப்பின் பாதை வெற்றியான பாதை. மக்கள் அவர்களுக்கு பின் அணி திரண்டு நிற்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு அரசியல் கட்சிக்கும் விடுதலை அமைப்பிற்கும் உள்ள வித்தியாசமே உங்களுக்கு புரியல.

 

இங்கு 

இந்த துரத்துதலை  பாராட்டுவோர்

ஐனநாயகம் பற்றியும் பேசுவது தான் வேடிக்கை...

மேலும் புலிகளிடம் ஐனநாயகம் இருக்கவில்லை

எதேச்சதிகாரமாக செயற்பட்டார்கள் என்பது தான் இவர்களின் இத்தனை நாள் குற்றச்சாட்டே..

இதன்படி

இவர்களது பிரச்சினை என்ன என்பது வெளிப்படையாகிறது.......

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு அரசியல் கட்சிக்கும் விடுதலை அமைப்பிற்கும் உள்ள வித்தியாசமே உங்களுக்கு புரியல.

உலகுக்கு தெரிந்த வித்தியாசம்:

  1. மாத்தையாவை விடுதலை அமைப்பு கொலை செய்தது.
  2. ஆனந்தியை அரசியல் கட்சி தனது கட்சியில் இருந்து அகற்றியது.

இது எனக்கும் தெரிகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

கருத்து வறுமையால் தனிப்பட்டவர்கள் மீதான தாக்குதலை மீண்டும் ஆரம்பித்து விட்டீர்களா?

நீங்கள் தோற்றவர்களின் பின்னாலா தமிழ் மக்களை தொடர்ந்தும் போகச்சொல்கிறீர்கள்?

மக்கள் போக மாட்டார்கள். இனியும் போக மாட்டார்கள்.

கூட்டமைப்பின் தலைவர்கள் தோற்றவர்கள் அல்ல, வென்றவர்கள் - மக்கள் ஆதரவோடு வென்றவர்கள். புலிகளால் தற்கொலை தாக்குதல் செய்தும் அகற்ற முடியாத கோத்தபாயவை வாக்கு வலிமையால் (அனந்தி மற்றும் சிவாஜிலிங்கம் போன்றவர்களின் துரோக செயற்பாடுகளுக்கு மத்தியிலும்) அகற்றியவர்கள். போர் காலத்துக்கு பின்னான கூட்டமைப்பின் பாதை வெற்றியான பாதை. மக்கள் அவர்களுக்கு பின் அணி திரண்டு நிற்கிறார்கள்.

ஜீட் முதலில் நீங்கள் எழுதியதை மீண்டும் வாசியுங்கள் தனிப்பட்டவர் மீதான தாக்குதலை ஆரம்பித்தது யார் என தெரியும்.

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு

இந்த துரத்துதலை பாராட்டுவோர்

ஐனநாயகம் பற்றியும் பேசுவது தான் வேடிக்கை...

மேலும் பலிகளிடம் ஐனநாயகம் இருக்கவில்லை என்பது தான் இவர்களின் இத்தனை நாள் குற்றச்சாட்டே..

இதன்படி

இவர்களது பிரச்சினை என்ன என்பது வெளிப்படையாகிறது.......

கட்சியின் போக்கு பிடிக்கவில்லை எனறால் பேசாமல் அனந்தி ஒதுங்க வேண்டியது தானே (கஜேந்திரன்ஸ் முன்னணி இருக்கு ஒதுங்க) பிறகு ஏன் ஒட்டிக்கொண்டு இருக்க வேண்டும்!

விசுகு! நீங்கள் இப்படி அடிக்கடி விடுதலைப் புலிகளை அவமதிப்பதை அனுமதிக்க முடியாது. யாராலும் வழிநடத்தப்பட அனுமதிக்கவில்லை என்பதுதான் புலிகளின் சிறப்பம்சம்.

அவர்கள் இருக்கும்வரை அவர்கள்தான் எல்லாவற்றையும் வழிநடத்தினார்கள். எங்களின் தலைமையின் வழிகாட்டலில் நாங்கள் நடந்தோம். புலம்பெயர் அமைப்புக்கள், எழுத்தாளர்கள் என்று பெரும்பான்மையானவர்கள் தலைமையின் வழிகாட்டலில் நடந்தார்கள்.

இப்பொழுதுதான் மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட தலைமையை புலம்பெயர்நாட்டில் இருந்து வழிநடத்த சிலர் முயற்சிக்கிறார்கள். அதற்கு அவர்கள் ஒத்துவராத நேரங்களில் மூக்கால் அழுகிறார்கள்.

பாரிசில் மாவைசேனாதிராஜா அவர்கள் கலந்து கொள்ளும் முத்தமிழ் விழாவில் முற்றுகைப் போராட்டம் நடத்தப் போகிறார்களாமே? கேட்க சிரிப்பாக இருக்கிறது.

ஆனந்திக்கு வாக்களித்த மக்கள் தாயகத்தில் தமிழரசுக் கட்சி அலுவலகத்தை முற்றுகையிடுவார்களா? தாயக மக்களுக்கும் உங்களுக்குமான இடைவெளியை அதிகரித்துக் கொண்டே போகின்றீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஜீட் முதலில் நீங்கள் எழுதியதை மீண்டும் வாசியுங்கள் தனிப்பட்டவர் மீதான தாக்குதலை ஆரம்பித்தது யார் என தெரியும்.

 

சரி, வாசிப்போம். இதோ கீழே மீண்டும் ...

 

பிரபாகரன் மாத்தயாவுக்கு எதிராக நடவடிக்கை எடுத்த போதும் இந்த ஆலோசனையை சொன்னீர்களா?

 

 

இது நான் எழுதியது. இதைத்தானே சொல்கிறீர்கள்? 

 

இது ஒரு கேள்வி. தனிப்பட்ட தாக்குதல் அல்ல. தர்க்கவியல் ரீதியாக சொல்லப்பட்ட ஆலோசனை பொருந்தும் இன்னுமொரு முக்கியமான சந்தர்ப்பத்தை சுட்டிக்காட்டி, ஆலோசனையை சொன்னவரை சிந்திக்க தூண்டும் ஒரு கேள்வி.

 

புலிகள் பலமாக இருந்தபோது

வரைபடம் கீறி அவர்களை வழி நடாத்தி 

தோற்றதும் ஓடி ஒழிந்தவர் தானே நீங்கள்...

தற்பொழுது கூட்டமைப்புக்கும் அதே கதிதானா??...

 

பாவம் தமிழர்கள்

நீங்கள் அவர்கள் முதுகில் தொடருங்கள்...

 

மேலே சிவப்பில் காட்டப்பட்டவை தனிப்பட்ட தாக்குதல்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு! நீங்கள் இப்படி அடிக்கடி விடுதலைப் புலிகளை அவமதிப்பதை அனுமதிக்க முடியாது. யாராலும் வழிநடத்தப்பட அனுமதிக்கவில்லை என்பதுதான் புலிகளின் சிறப்பம்சம்.

அவர்கள் இருக்கும்வரை அவர்கள்தான் எல்லாவற்றையும் வழிநடத்தினார்கள். எங்களின் தலைமையின் வழிகாட்டலில் நாங்கள் நடந்தோம். புலம்பெயர் அமைப்புக்கள், எழுத்தாளர்கள் என்று பெரும்பான்மையானவர்கள் தலைமையின் வழிகாட்டலில் நடந்தார்கள்.

இப்பொழுதுதான் மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட தலைமையை புலம்பெயர்நாட்டில் இருந்து வழிநடத்த சிலர் முயற்சிக்கிறார்கள். அதற்கு அவர்கள் ஒத்துவராத நேரங்களில் மூக்கால் அழுகிறார்கள்.

பாரிசில் மாவைசேனாதிராஜா அவர்கள் கலந்து கொள்ளும் முத்தமிழ் விழாவில் முற்றுகைப் போராட்டம் நடத்தப் போகிறார்களாமே? கேட்க சிரிப்பாக இருக்கிறது.

ஆனந்திக்கு வாக்களித்த மக்கள் தாயகத்தில் தமிழரசுக் கட்சி அலுவலகத்தை முற்றுகையிடுவார்களா? தாயக மக்களுக்கும் உங்களுக்குமான இடைவெளியை அதிகரித்துக் கொண்டே போகின்றீர்கள்.

சபேசன் உங்களைவிட விசுகு தாயக மக்களுடன் அருகில் நிக்கிறார்
  • கருத்துக்கள உறவுகள்

சரி, வாசிப்போம். இதோ கீழே மீண்டும் ...

இது நான் எழுதியது. இதைத்தானே சொல்கிறீர்கள்?

இது ஒரு கேள்வி. தனிப்பட்ட தாக்குதல் அல்ல. தர்க்கவியல் ரீதியாக சொல்லப்பட்ட ஆலோசனை பொருந்தும் இன்னுமொரு முக்கியமான சந்தர்ப்பத்தை சுட்டிக்காட்டி, ஆலோசனையை சொன்னவரை சிந்திக்க தூண்டும் ஒரு கேள்வி.

மேலே சிவப்பில் காட்டப்பட்டவை தனிப்பட்ட தாக்குதல்கள்.

விசுகும் முக்கியமான சந்தர்ப்பத்தை சுட்க்காட்டி சபேசனை சிந்திக்க தூண்டியுள்ளார்

--

நியானி: மேற்கோளும் பதிலும் நீக்கப்பட்டுள்ளன.

Edited by நியானி

ஜுட்! விசுகு எழுதியதை நான் தனிப்பட்ட தாக்குதலாக பார்க்கவில்லை. என்னுடைய எழுத்துப் பற்றியும், பொதுச் செயற்பாடு குறித்துமே அவர் விமர்சித்துள்ளார்.

புலிகளை புலம்பெயர்ந்த பத்தி எழுத்தாளர்கள் வழிநடத்தியதாக ஒரு பொய்யையும், நான் புலிகள் தோற்ற பின் ஓடி ஒளித்ததாகவும் இன்னொரு பொய்யையும் எழுதியிருக்கிறார். இந்தப் பொய்யை சரியான முறையில் எதிர்கொள்ளலாம்.

தனிப்பட்ட தாக்குதல் என்று இதை எடுக்கத் தேவையில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

கட்சியின் போக்கு பிடிக்கவில்லை எனறால் பேசாமல் அனந்தி ஒதுங்க வேண்டியது தானே (கஜேந்திரன்ஸ் முன்னணி இருக்கு ஒதுங்க) பிறகு ஏன் ஒட்டிக்கொண்டு இருக்க வேண்டும்!

 

 

ஐனநாயகத்தின் தொடராக

பேச்சுரிமை

வாக்குரிமை...  என்பன உண்டு

அதன்படி அவரது கட்சிக்குள் இருந்தபடியே தனது நிலையைச்சொல்லவும்

அது தப்பென்றால்

கட்சி  அதன் உறுப்பினரது வாக்குரிமையைப்பயன்படுத்தித்தான் விலத்தமுடியும்

இரண்டு பேர் முடிவெடுத்தல்ல...

இங்கு அது நடைமுறைப்படுத்தப்படவில்லை

தப்பான ஆரம்பம் என்பதே எனது கருத்து...

மக்களின் தேர்வு அவர்.

ஆனால்முடிவு எடுத்தவர்கள் அதைக்கவனத்தில் கொள்ளவே இல்லை..

  • கருத்துக்கள உறவுகள்

விசுகும் முக்கியமான சந்தர்ப்பத்தை சுட்க்காட்டி சபேசனை சிந்திக்க தூண்டியுள்ளார்

 

 

ஜுட்! விசுகு எழுதியதை நான் தனிப்பட்ட தாக்குதலாக பார்க்கவில்லை. என்னுடைய எழுத்துப் பற்றியும், பொதுச் செயற்பாடு குறித்துமே அவர் விமர்சித்துள்ளார்.

 

மீராவுக்கு கிடைத்த இந்த ஜனநாயக வெற்றிக்கு வாழ்த்துக்கள்.

விசுகு என்னை விட அதிகமாக தாயக மக்களின் புனர்வாழ்வுக்கு தொண்டாற்றி வருகிறார் என்று அவருடைய சில பதிவுகளில் இருந்து புரிந்து கொள்கிறேன். இதில் அவர் என்னை விட மக்களுடன் நெருக்கமாக இருப்பது மகிழ்ச்சி. இதை தொடர்ந்து செய்ய வாழ்த்துகிறேன்.

அரசியல் என்று வருகின்ற போதுதான், தாயக மக்கள் ஒன்றையும் விசுகு போன்றவர்கள் வேறு ஒன்றையும் பேசுகிறார்கள். இந்த இடைவெளியை புனர்வாழ்வுப் பணிகளால் நிரப்ப முடியாது.

தாம் சார்ந்த அமைப்பின் சுயநல அரசியலை விட்டு, மக்களின் உண்மையான மேம்பாட்டு அரசியலுக்கு சிந்திக்கின்ற பரந்த மனப்பான்மை அதற்கு வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு என்னை விட அதிகமாக தாயக மக்களின் புனர்வாழ்வுக்கு தொண்டாற்றி வருகிறார் என்று அவருடைய சில பதிவுகளில் இருந்து புரிந்து கொள்கிறேன். இதில் அவர் என்னை விட மக்களுடன் நெருக்கமாக இருப்பது மகிழ்ச்சி. இதை தொடர்ந்து செய்ய வாழ்த்துகிறேன்.

அரசியல் என்று வருகின்ற போதுதான், தாயக மக்கள் ஒன்றையும் விசுகு போன்றவர்கள் வேறு ஒன்றையும் பேசுகிறார்கள். இந்த இடைவெளியை புனர்வாழ்வுப் பணிகளால் நிரப்ப முடியாது.

தாம் சார்ந்த அமைப்பின் சுயநல அரசியலை விட்டு, மக்களின் உண்மையான மேம்பாட்டு அரசியலுக்கு சிந்திக்கின்ற பரந்த மனப்பான்மை அதற்கு வேண்டும்.

 

 

அண்ணை

2009 முள்ளிவாய்க்காலோட உங்கட எழுத்துக்களை வாசிக்கிறதை விட்டுட்டன்.

கொஞ்சம் நிம்மதியாக இருக்கிறன்

விட்டுடுங்கோ...

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு! நீங்கள் இப்படி அடிக்கடி விடுதலைப் புலிகளை அவமதிப்பதை அனுமதிக்க முடியாது. யாராலும் வழிநடத்தப்பட அனுமதிக்கவில்லை என்பதுதான் புலிகளின் சிறப்பம்சம்.

 

30 வருடமாக புலிகளுக்காக கும்மி அடித்த நீங்கள் கூட்டமைப்புக்கு இப்போ கும்மி அடிப்பது உங்களின் இரட்டை முகத்தை காட்டுகிறது.

அவர்கள் இருக்கும்வரை அவர்கள்தான் எல்லாவற்றையும் வழிநடத்தினார்கள். எங்களின் தலைமையின் வழிகாட்டலில் நாங்கள் நடந்தோம். புலம்பெயர் அமைப்புக்கள், எழுத்தாளர்கள் என்று பெரும்பான்மையானவர்கள் தலைமையின் வழிகாட்டலில் நடந்தார்கள்.

 

மாவீரர்கள், புலிகளின் பேரை சொல்லி தேர்த்தலில் வெல்வது. பிறகு பிரபாகரன் தன்னை கொல்ல வந்தார் என மகிந்தவிடம் சொல்வது. என்ன நரக வாழ்க்கையப்பா?

இப்பொழுதுதான் மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட தலைமையை புலம்பெயர்நாட்டில் இருந்து வழிநடத்த சிலர் முயற்சிக்கிறார்கள். அதற்கு அவர்கள் ஒத்துவராத நேரங்களில் மூக்கால் அழுகிறார்கள்.

 

 சம்பந்தர் லஞ் ஓனுக்கு ரொரன்டோவில் தான் நிற்கிறார். காசு சேர்க்க என்று மெல்லமாக சொல்லட்டோ

பாரிசில் மாவைசேனாதிராஜா அவர்கள் கலந்து கொள்ளும் முத்தமிழ் விழாவில் முற்றுகைப் போராட்டம் நடத்தப் போகிறார்களாமே? கேட்க சிரிப்பாக இருக்கிறது.

 

உங்களின் இரட்டை வேடத்தை நினைக்க எனக்கு சிரிப்பு சிரிப்பாக வருகிறது.

ஆனந்திக்கு வாக்களித்த மக்கள் தாயகத்தில் தமிழரசுக் கட்சி அலுவலகத்தை முற்றுகையிடுவார்களா? தாயக மக்களுக்கும் உங்களுக்குமான இடைவெளியை அதிகரித்துக் கொண்டே போகின்றீர்கள்.

 

மீண்டும் புலிகளின் பெயரை சொல்லாமல் மக்களிடம் வாக்கு கேட்டு கூட்டமைப்பை வெல்ல சொல்லுங்கள் பார்க்கலாம்.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.