Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழரின் கலாசாரம் திட்டமிட்ட அடிப்படையில் சீரழிக்கப்படுகிறது! - அத்துரலிய ரத்தின தேரர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரின் கலாசாரம் திட்டமிட்ட அடிப்படையில் சீரழிக்கப்படுகிறது! - அத்துரலிய ரத்தின தேரர்.

[Wednesday 2015-01-21 09:00]
athuraliye-rathana-200-news.jpg

மதுவால் தமிழரின் கலாசாரம் திட்டமிட்ட அடிப்படையில் சீரழிக்கப்படுவதாகவும், இந்து சமயம் இழிவுபடுத்தப்படுவதாகவும், குற்றம்சாட்டியுள்ளார் ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் அத்துரலிய ரத்தின தேரர். நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

  

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஜனநாயக ரீதியாக தேர்தலில் வெற்றி பெற்றவர்கள். அவர்களும் மதிக்கப்பட வேண்டும். வடக்கு மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=125035&category=TamilNews&language=tamil

என்னப்பா இது? எல்லாரும் அனியாயத்துக்கு நல்லவங்களாயிட்டாங்க. இதெல்லாம் நிலைகுமா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னப்பா இது? எல்லாரும் அனியாயத்துக்கு நல்லவங்களாயிட்டாங்க. இதெல்லாம் நிலைகுமா?

அதுதான் இங்கே எமக்கும் குழப்பமாக இருக்கு! எல்லாம் கடகடவென்று மாறுது. நல்லவேளை, யாழ்.கொம் படிக்குமுன் வோட் போட்டேன். (ஓம்.. இவர் ஒருத்தரின் வோட்டில்தான் மைத்திரி வென்றார் என்று எழுதும் திறமைசாலிகள் உள்ள தளத்திலும் இப்படி எழுதுகிறேன்... வாங்கண்ணே)

  • கருத்துக்கள உறவுகள்

அதுதான் இங்கே எமக்கும் குழப்பமாக இருக்கு! எல்லாம் கடகடவென்று மாறுது. நல்லவேளை, யாழ்.கொம் படிக்குமுன் வோட் போட்டேன். (ஓம்.. இவர் ஒருத்தரின் வோட்டில்தான் மைத்திரி வென்றார் என்று எழுதும் திறமைசாலிகள் உள்ள தளத்திலும் இப்படி எழுதுகிறேன்... வாங்கண்ணே)

 

 

இது பொய் தானே..

வாக்கை எண்ணி  எமக்குச்சொன்னதே நீங்க தானே... :lol:

நான் தொலைபேசியில் கேட்டேனே..?

சாட்சியோட  வருவமில்ல.... :D

 

குழப்பம் உங்களுக்கு மட்டமல்ல

ஆக்கினவைக்குமாம்... :lol:

  • கருத்துக்கள உறவுகள்

கலிகாலம் முடிய இன்னும் 70 வருடம் இருக்காம். :)

  • கருத்துக்கள உறவுகள்

மதுவால்தான் சீரழிக்கப்படுகிறது என்று சொல்கிறார் ஒழிய சிங்களத்தினால் தமிழர்களின் கலாச்சாரம் திட்டமிட்டபடி சீரழிக்கப்படவில்லை என்று சொல்லவில்லை.

Edited by கந்தப்பு

மதுவால்தான் சீரழிக்கப்படுகிறது என்று சொல்கிறார் ஒழிய சிங்களத்தினால் தமிழர்களின் கலாச்சாரம் திட்டமிட்டபடி சீரழிக்கப்படவில்லை என்று சொல்லவில்லை.

இருந்தாலும் எதோ பிரச்சனை ஒன்று இருக்கு அது தீர்க்கப்படவேண்டும் என்று சொல்லுறாரே?

என்னப்பா இது? எல்லாரும் அனியாயத்துக்கு நல்லவங்களாயிட்டாங்க. இதெல்லாம் நிலைகுமா?

 

 இதுதான் எனது யோசனையும்.

 
 புதிதிற்கு எல்லாம் கொஞ்சம் ஓவராகத்தான் இருக்கும் என்று சொல்வார்கள். அது போலவே உள்ளது. நிலைக்குமா? பொறுத்திருந்து பார்ப்போம் நியாயமான எதிர்பார்ப்புகளுடன்.
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது பொய் தானே..

வாக்கை எண்ணி  எமக்குச்சொன்னதே நீங்க தானே... :lol:

நான் தொலைபேசியில் கேட்டேனே..?

சாட்சியோட  வருவமில்ல.... :D

 

குழப்பம் உங்களுக்கு மட்டமல்ல

ஆக்கினவைக்குமாம்... :lol:

எல்லாமே கனவு போல இருக்கு! பெற்றோல் விலை குறையுது, நொதேர்ன் பவர் நிறுத்தியாச்சு, 30ம் திகதி சம்பளம் கூடுது, சந்தையில மரக்கறி விலை இன்று குறைவு (4 நாளைக்கு முன் 1 கிலோ கத்தரிக்காய் 320ரூபா!) என்னப்பா நடக்குது இங்கே?

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாமே கனவு போல இருக்கு! பெற்றோல் விலை குறையுது, நொதேர்ன் பவர் நிறுத்தியாச்சு, 30ம் திகதி சம்பளம் கூடுது, சந்தையில மரக்கறி விலை இன்று குறைவு (4 நாளைக்கு முன் 1 கிலோ கத்தரிக்காய் 320ரூபா!) என்னப்பா நடக்குது இங்கே?

 

 

விடை  ரொம்ப சுலபம்

இலங்கை அமைதியாக இருந்தால் சொர்க்கபுரி ஆகும்......

யாரும் யாரையும் அடக்கியாள முயன்றால் சுடுகாடாகும்.....???

 

சம்பந்தப்பட்டவர்களுக்கு புரியணும்....

எல்லாமே கனவு போல இருக்கு! பெற்றோல் விலை குறையுது, நொதேர்ன் பவர் நிறுத்தியாச்சு, 30ம் திகதி சம்பளம் கூடுது, சந்தையில மரக்கறி விலை இன்று குறைவு (4 நாளைக்கு முன் 1 கிலோ கத்தரிக்காய் 320ரூபா!) என்னப்பா நடக்குது இங்கே?

 

வாத்தியார் பெஞ்சாதிக்கு பென்சனும் கூடீத்தாம்... வாங்க் மனேசரின்ர பெண்டில் தனக்கு பென்சன் கூடேலை எண்டு மாமிக்காரி. எனக்கு ரெலிபோன் எடுத்துக் 'கொம்பிளைன்'.

"கொஞ்சம் பொறனை... பேச்சுவார்த்தைக்கு வாறன்..."  :o  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாமே கனவு போல இருக்கு! பெற்றோல் விலை குறையுது, நொதேர்ன் பவர் நிறுத்தியாச்சு, 30ம் திகதி சம்பளம் கூடுது, சந்தையில மரக்கறி விலை இன்று குறைவு (4 நாளைக்கு முன் 1 கிலோ கத்தரிக்காய் 320ரூபா!) என்னப்பா நடக்குது இங்கே?

 

அடுத்து வரும் 100 நாளைக்கோ என்ற சந்தேகம் உண்டு. ஏன் 5000 ரூபாவை தேர்த்தலுக்கு பின் கொடுக்க வேண்டும். இது ஒரு "பிடி" தானே??

  • கருத்துக்கள உறவுகள்

விடை  ரொம்ப சுலபம்

இலங்கை அமைதியாக இருந்தால் சொர்க்கபுரி ஆகும்......

யாரும் யாரையும் அடக்கியாள முயன்றால் சுடுகாடாகும்.....???

 

சம்பந்தப்பட்டவர்களுக்கு புரியணும்....

 

அதுக்கு பக்கத்து வீட்டுக்கார நாதாரி விடாது. :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

செந்தில் : அண்ணே நான் உங்களுக்கு நல்லது செய்லானுதான் நினைக்கிறேன் ஆனா இப்பிடி ஆகிடுது அண்ணே
தலைவர் : நல்லது அதுவும் நீ .. எனக்கு செய்ய போற.. பொய் பேசாதடா
 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடுத்து வரும் 100 நாளைக்கோ என்ற சந்தேகம் உண்டு. ஏன் 5000 ரூபாவை தேர்த்தலுக்கு பின் கொடுக்க வேண்டும். இது ஒரு "பிடி" தானே??

நுணாவிலான்,

 

நிச்சயமாக. அதுதான் அரசியல். இதுபற்றி நான் மற்றொரு திரியில் இவ்வாறு எழுதியுள்ளேன்-

 

வடக்கு மாகாணம் நூறுவீதம் தமிழ் பிரதிநித்துவத்துடன் இயங்கலாம் என்பது நடக்கத்தான் போகிறது. ஆனால், அவர்கள் எந்தக் கட்சியை சேர்ந்தவர்கள் என்பதுதான் விஷயம்.

 

இம்முறை வாக்களித்த புதிய வாக்காளர்கள் பலருடன் பேசினேன். அன்னம் சின்னத்துக்கு வாக்களித்ததாக சொன்னார்கள். என்ன காரணம் என்று கேட்டால், வீட்டில் போட சொன்னார்கள். அப்பாவுக்கு அல்லது அம்மாவுக்கு சம்பள உயர்வு கிடைக்கும் என்பதால் அன்னத்துக்கு போட்டார்கள். பெரும்பாலும் அரசு உத்தியோகஸ்தர்களின் பிள்ளைகள் அவர்கள்.

 

மைத்ரி கூறிய 10,000 சம்பள உயர்வு 2 பகுதிகளாக கொடுக்கப்படுகிறது.

 

முதல் பகுதி 5,000 ரூபா இந்த 30ம் திகதி. அடுத்த 5000 ரூபா எப்போது தெரியுமா? ஓகஸ்ட் மாதம்! அதாவது நாடாளுமன்ற தேர்தலின் பின்!! மீதியை யோசித்துக் கொள்ளவும்.

 

புத்திசாலித்தனமான அரசியல் செய்வதென்றால், எப்படி செய்வார்கள்?  100 நாட்களுக்கு ஒரு கிளைமாக்ஸ் காட்டிவிட்டு, இது தொடர வேண்டுமா?  என்ற கேள்வியுடன் தேர்தலை நடத்துவார்கள்.

 

நாடாளுமன்ற தேர்தலின் போது இலங்கையின் தேசியக் கட்சிகளுக்கு வடக்கு மாகாணத்தில் கிடைக்கப்போகும் ஆசனங்களின் எண்ணிக்கை மாறினாலும் மாறலாம். பொறுத்திருந்து பார்க்கலாம்.

Edited by sabesan36

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.