Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மைத்திரியிடம் பேரம் பேசிய மொகான் பீரிஸ் – சாதகமாக தீர்ப்புகளை அளிப்பாராம்

Featured Replies

மைத்திரியிடம் பேரம் பேசிய மொகான் பீரிஸ் – சாதகமாக தீர்ப்புகளை அளிப்பாராம் JAN 30, 2015 | 0:28by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள்

Mohan-Peiris-300x199.jpgதன்னைத் தொடர்ந்தும் பிரதம நீதியரசராகச் செயற்பட அனுமதிக்குமாறு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம், 44வது பிரதம நீதியரசராக இருந்த மொகான் பீரிஸ் கெஞ்சியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

கொழும்பில் நேற்று நடந்த அமைச்சரவை முடிவுகளை வெளியிடும் செய்தியாளர் சந்திப்பில், அமைச்சர் ராஜித சேனாரத்ன இதுபற்றிய விபரங்களை வெளியிட்டுள்ளார்.

நேற்று முன்தினம் காலையில் மொகான் பீரிஸ் தன்னிடம் தொலைபேசியில் பேசியதாக, அமைச்சரவைக் கூட்டத்தில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தகவல் வெளியிட்டார்.

தன்னை தொடர்ந்தும் பிரதம நீதியரசராக இருக்க அனுமதிக்கும்படியும், அவ்வாறு செய்தால், உங்களுக்குத் தேவையான வகையில் தீர்ப்புகளை அளிப்பேன் என்றும் மைத்திரிபால சிறிசேனவிடம் தெரிவித்துள்ளார்.

ஆனால் அதற்கு சிறிலங்கா அதிபர் மறுத்து விட்டதாகவும் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.

புதிய அரசாங்கம் ஜனநாயகம், நல்லாட்சி, சட்டத்தின் ஆட்சியை மீண்டும் ஏற்படுத்துவதாக வாக்குறுதி கொடுத்தே பதவிக்கு வந்துள்ளது என்றும்,  மொகான் பீரிசின் இதுபோன்ற முறையற்ற செயற்பாடுகளுக்கு இடமளியாது என்று ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

http://www.puthinappalakai.net/2015/01/30/news/3257

 

 

 

ஒரு தலைமை நீதிபதி தனது பதவிக்காக பேரம் பேசுகிறார். இவரின் தீர்ப்புகள் எப்படி இருக்கும். நல்ல நாடு

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களம்ஸ் தங்களுக்குள்ளை அடிபடுது..

சிங்களம்ஸ் தங்களுக்குள்ளை அடிபடுது..

 

நல்ல விடயம்தானே.
 
ஆனால் யாழ் இந்துக் கல்லூரி பழைய மாணவன் ஸ்ரீபவான்தான் பிரதமநீதியரசர்.
  • கருத்துக்கள உறவுகள்

 

 
 
ஆனால் யாழ் இந்துக் கல்லூரி பழைய மாணவன் ஸ்ரீபவான்தான் பிரதமநீதியரசர்.

 

 

யாழ் இந்துவின் புகழ் எங்கும் பரவட்டும்  என்று கூற வருகின்றீர்களா? :D

 

ஒரு தமிழர் தலைமை நீதிபதியாய் வந்ததது மகிழ்ச்சியே. ஆனால் ஸ்ரீபவன் என்ன பேரம் பேசினார் என்பதை சொல்ல அடுத்த ஜனாதிபதிவரை காத்திருக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு தமிழர் தலைமை நீதிபதியாய் வந்ததது மகிழ்ச்சியே. ஆனால் ஸ்ரீபவன் என்ன பேரம் பேசினார் என்பதை சொல்ல அடுத்த ஜனாதிபதிவரை காத்திருக்க வேண்டும்.

 

இனிமேல் ஜனாதிபதி ஆட்சி இலங்கையில் இல்லாமல் போய்விடுமாம்.

அதனால் அவர் தப்பி விடுவார்.

யாழ் இந்துவின் புகழ் எங்கும் பரவட்டும்  என்று கூற வருகின்றீர்களா? :D

 

 

நான் இந்துக் கல்லூரி மாணவனல்ல. ஆனால் இந்துக்கல்லூரியின் பழைய மாணவன் பிரதமநீதியரசர் என்பதில் உள்ள ஒரு சிறு சந்தோசமே. அதுமட்டுமல்ல மத்திய வங்கியின் ஆளுனரும் தமிழராமே.

 

எனக்கு எமது மக்கள் நிம்மதியாக சகல உரிமைகளுடன் வாழ்ந்தால் போதும்.

 

வாழ்க வளமுடன்.

Edited by ஜீவன் சிவா

மூப்பு, அனுபவம், தகமை அடிப்படையுமே அவர் தெரிவு செய்யப்பட்டதுக்கு காரணம். 

 

 

மூப்பு, அனுபவம், தகமை அடிப்படையுமே அவர் தெரிவு செய்யப்பட்டதுக்கு காரணம். 

 

ஆனால் மொஹான் பீரிஸ் இவ்வாறு தெரிவு செய்யப்படவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

மொகான் பீரிஸ், பேரம் பேசுவதில்... வல்லவர் போலுள்ளது.
ரணிலிடமும் தனக்கு, வெளிநாட்டு தூதுவர் பதவி தரும் படி கேட்ட போது.... வியட்நாம் தூதுவர் பதவிக்கு சம்மதித்துள்ளார்.
அதற்கு, மொகான் பீரிஸ் இத்தாலி தூதுவர் பதவி தான்.... வேண்டும் என்று, அடம் பிடித்துக் கொண்டு நிற்கிறார்.

http://www.yarl.com/forum3/index.php?/topic/153007-அதிகாலையில்-அலரி-மாளிகையில்-இர/

 

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்

மொகான் பீரிஸ், பேரம் பேசுவதில்... வல்லவர் போலுள்ளது.

ரணிலிடமும் தனக்கு, வெளிநாட்டு தூதுவர் பதவி தரும் படி கேட்ட போது.... வியட்நாம் தூதுவர் பதவிக்கு சம்மதித்துள்ளார்.

அதற்கு, மொகான் பீரிஸ் இத்தாலி தூதுவர் பதவி தான்.... வேண்டும் என்று, அடம் பிடித்துக் கொண்டு நிற்கிறார்.

http://www.yarl.com/forum3/index.php?/topic/153007-அதிகாலையில்-அலரி-மாளிகையில்-இர/

"xxx தீம் பூங்கா"வில் ரணில் மாட்டியிருப்பார் போல
  • கருத்துக்கள உறவுகள்

இப்படி பேரம் பேசிதானே வடக்கு கிழக்கு பிரிக்கப் பட்டிருக்கும்?

ஒரு உயர் பதவியை இவ்வளவு கொச்சை படுத்துகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ந்தும் பிரதம நீதியரசராகச் செயற்பட அனுமதிக்குமாறு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம், 44வது பிரதம நீதியரசராக இருந்த மொகான் பீரிஸ் கெஞ்சியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ///

அடங்க கொக்க மக்கா யார் ஆட்சிக்கு வருகின்றார்களோ அவர்களுக்கு வால் பிடிக்கின்ற வேலையை தான் இலங்கை நீதியரசர்கள் செய்வார்கள்......ஆட்சியாளர்களின் விருப்பு வெறுப்புகளை அறிந்து தான் தீர்ப்பு கொடுப்பார்கள்......

  • கருத்துக்கள உறவுகள்

முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா, மஹிந்தவின் தாளத்துக்கு எல்லாம் ஆடினார். பிறகு மகிந்தாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார். நீதி இல்லாமல் ஆளுக்கு ஏற்றமாதிரி தீர்ப்பு வழங்குபவர், பிறகு பதவி போனபின்  வருந்தி என்ன பயன்? பதவி போனபின்தான் இவர்களுக்கெல்லாம்  கண் திறக்கும். கண் கெட்டபின் சூரிய நமஸ்காரம் எதற்கு? 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.