Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மீண்டும் தொடங்கியது இந்தியச் சதி! கூட்டினுள் புதிய அணிகள் சேர்ப்பு!! Photo's

Featured Replies

வடமாகாணசபையில் நிறைவேற்றப்பட்ட இனப்படுகொலை தீர்மானம் மற்றும் சம்பந்தர், சுமந்திரன் ஆகியோரை கைவிட்டு கூட்டமைப்பினை பதிவு செய்யும் முயற்சிகள் மத்தியில் அவற்றிற்கு எதிரான காய்நகர்த்தல்களை இந்தியா ஆரம்பித்துள்ளது.பதிவு இணைய செய்தி

இது தொடர்பில் கண்டியில் உள்ள துணைதூதுரகத்தில் இரகசிய மாநாடொன்று நடத்தப்பட்டுள்ளது அம்பலமாகியுள்ளது. ஈபிடிபி தலைமை மற்றும் கூட்டணியின் ஆனந்தசங்கரி, ஈபிஆர்எல்எவ் வரதர் அணியினருடன் புளொட் சித்தார்த்தன் ஆகியோர் இம்மாநாட்டிற்கு அழைக்கப்பட்டிருந்ததாக தெரியவருகின்றது.

ananda_sankar_dugles_devanatha_01.png

மாநாட்டில் யாழ்.துணைத் தூதுவராலயத்தைச் சேர்ந்த இரண்டு றோ அதிகாரிகளும் அதே போன்று கொழும்பு தலைமையகத்தை சேர்ந்த றோ அதிகாரிகளும் பங்கெடுத்ததாகத் தெரியவருகின்றது.

கூட்டமைப்பினுள் ஆனந்தசங்கரி மற்றும் சித்தார்த்தனைக் கொண்டுவருவதில் இந்திய றோ அதிகாரிகளே முன்னின்றிருந்தனர். எனினும் சித்தார்த்தன் மாகாணசபை தேர்தல் மூலம் வெற்றிபெற்றுள்ளதுடன் அடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் பதவி கனவிலிருந்து வருகின்றார். எனினும் சங்கரி மட்டும் தேர்தல் தோல்விகளுடன் முரண்பட்டு வெளியேறியிருந்தார்.பதிவு இணைய செய்தி

அதே போன்று ஈ.பி.ஆர்.எல்.எவ் வரதர் அணியினரும் கூட்டமைப்புடன் இணைந்து கொள்ள விருப்பம் கொண்டுள்ள போதும் சுரேஸ் பிரேமச்சந்திரன் அதற்கு முட்டுக்கட்டை போட்டுவருகின்றார்.

இந்நிலையில் முரண்படுகின்ற தரப்புக்களை பலவீனப்படுத்த ஏதுவாக றோ முயற்சிகளை ஆரம்பித்துள்ளது. அதற்கு வெளியிலுள்ள தரப்புக்களை அழைத்து கூட்டமைப்பினுள் கொண்டு செல்ல முயற்சிகள் ஆரம்பித்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக இதுவரை முரண்பட்டுக் கொண்டிருந்த டக்ளஸ்-ஆனந்தசங்கரி உறவு வலுத்துள்ளது.

ஆனந்த சங்கரியின் சகோதரர் ஒருவர் இயற்கை மரணமெய்தியுள்ள நிலையில் அவரது இறுதிக் கிரியைகள் யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்றது.பதிவு இணைய செய்தி

இறுதி நிகழ்வில் கலந்து அஞ்சலி செலுத்திய டக்ளஸ் மற்றும் சந்திரகுமார் தரப்பு சங்கரிக்கு ஆறுதல் தெரிவித்துமுள்ளது இங்கே சுட்டிக்காட்டத்தக்கது.

 

http://www.pathivu.com/news/37831/57//d,article_full.aspx

கூட்டமைப்பு தமிழரின் ஒன்றிணைந்த அமைப்பாகவும் அனைத்து கட்சி, குழுவினரையும் சேர்ந்ததாக வருவது எமக்கு நன்றே. இதனை யார் செய்தால் என்ன. தமிழருக்கு இந்தியா செய்தவற்றில் இது நன்மையே. றோ வாழ்க (தமிழரிடம் ஒற்றுமையை ஏற்படுத்தினால்) :D  :D

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நரிகளின் கள்ள ஒற்றுமையால்.. தமிழ் மக்களுக்கு நாசம் ஏற்படுமே தவிர நன்மை விளையவே விளையாது. :icon_idea::rolleyes:

எழுதணும் போல தோன்றிச்சு .................இன்று தமிழர்களின் உண்மையான பிரச்சனையான இன அழிப்பு  ,போர்க்குற்ற  செயல்களை செய்த சிறி லங்கா அரசின் மீதுள்ள உலகத்தின் பார்வை கொஞ்சம் தளர்ந்து போகின்றது என்று எம் ஊடகங்களும் ,ஊடகவியலாளர்களும் புலம்ப வெளிக்கிட்டாங்க ...........................உண்மைஅதற்கு காரணம்  ரணில் என்னும் நரியின் நயவஞ்சகமே என்பதை எண்டா இன்னும் ஏற்றுக்கொள்ள உங்களால முடியுதில்ல .இதைத்தாண்டா எம் தேசியத்தலைவர் .அன்றும் சொன்னார் ................ :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

ananda_sankar_dugles_devanatha_01.png

 

ஆனந்த சங்கரி, பூணூல் போட்டிருக்கிறார்.
"றோ" அவரை.... "அவாள்" ஆக்கி விட்டார்களா? :lol: 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழிசூரியன் அவர்களின் கருத்திற்கு மிக்க நன்றி, தேசியத்தலைவர் எடுத்த முடிவு எவ்வளவு தீர்க்கதரிசனமானது,

தமிழிசூரியன் அவர்களின் கருத்திற்கு மிக்க நன்றி, தேசியத்தலைவர் எடுத்த முடிவு எவ்வளவு தீர்க்கதரிசனமானது,

முள்ளிவாய்காலை சொல்லுகின்றீர்களா ?

  • கருத்துக்கள உறவுகள்

ananda_sankar_dugles_devanatha_01.png

 

ஆனந்த சங்கரி, பூணூல் போட்டிருக்கிறார்.

"றோ" அவரை.... "அவாள்" ஆக்கி விட்டார்களா? :lol: 

சங்கரியின் பணிவையும், பவ்வியத்தையும் பார்த்தால்... படைத்தவனே அழுது விடுவான் போல இருக்கு! :o

முள்ளிவாய்காலை சொல்லுகின்றீர்களா ?

அத செய்தத உங்க தோஸ்துக்கள் மீது சர்வதேச விசாரணை கூட இல்லை. உங்க நண்பர்கள் தண்டனை இல்லாமல் காப்பாற்றபட்டதால அண்ணை ரொம்ப ஹாப்பி போல இருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

ananda_sankar_dugles_devanatha_01.png

ஆனந்த சங்கரி, பூணூல் போட்டிருக்கிறார்.

"றோ" அவரை.... "அவாள்" ஆக்கி விட்டார்களா? :lol:

இறுதிக் கிரியை செய்பவர் வலமிருந்து இடமாகவும் ஐயர்மார் இடமிருந்து வலமாகவும் புநூல் அணிவார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

இதை cross belt என்றும் அழைப்பார்கள்.. :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முள்ளிவாய்காலை சொல்லுகின்றீர்களா ?

 
இன்று நிமிடத்திற்கு நிமிடம் பயங்கரவாதங்களால் உலகமே மிரண்டிருக்கும் போது....
 
ஒரு சிறந்த விடுதலை போராட்டம் முள்ளிவாய்க்காலுடன் மழுங்கடிக்கப்பட்டது தங்களுக்கு நக்கலாக தெரிகின்றது....
 
 ஊர்வழக்கில் "நல்லது தின்ன நாய்க்கு தெரியாதென்பர்"

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.