Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செவ்வாய் கிரகத்துக்கு பயணமாகும் தமிழ் மாணவி!

Featured Replies

இந்தியா தமிழ் நாட்டிலிருந்து செவ்வாய் கிரகத்துக்கு ஒருவழி பயணமாக செல்லும் கோவை மாணவி, அதுபற்றி ருசிகர பேட்டி அளித்துள்ளார்.

செவ்வாய் கிரகத்தில் உயிர் வாழ ஏற்ற சூழல் நிலவுகிறதா? என்று இந்திய நாட்டு விஞ்ஞானிகள் உள்பட உலக விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து வருகிறார்கள். இந்த நிலையில் செவ்வாய் கிரகத்தில் மனித வாழ்விடங்களை நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது. நெதர்லாந்தை மையமாக கொண்டு செயல்பட்டு வரும் தனியார் நிறுவனமான ‘மார்ஸ் ஒன்’ அமைப்பு இதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. செவ்வாய்கிரகத்துக்கு பயணம் செய்ய தகுதி வாய்ந்தவர்களை தேர்வு செய்யும் பணிகளை இந்த நிறுவனம் ஏற்கனவே தொடங்கி விட்டது.

இதற்கான அறிவிப்பு வெளியான உடனே, உலகம் முழுவதிலும் இருந்து 2 லட்சத்து 2 ஆயிரத்து 586 பேர் செவ்வாய் பயண திட்டத்துக்கு விண்ணப்பித்தனர். இதில் ஏராளமான இந்தியர்களும் அடக்கம்.

இது ஒரு வழி பயணம் ஆகும். செவ்வாய் கிரகத்துக்கு பத்திரமாக போய் சேர்ந்தால் அங்கு இருந்து திரும்பி வர முடியாது.

இந்த வினோத பயணத்திற்காக உலகம் முழுவதும் இருந்து விண்ணப்பித்தவர்களின் பட்டியலில் இருந்து 3 சுற்று சோதனைகள் நடத்தி, 50 ஆண்கள், 50 பெண்கள் கொண்ட 100 பேர் பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளது. இந்த பட்டியலில் அமெரிக்காவில் இருந்து 39 பேர், ஐரோப்பியர் 31, ஆசியாவில் இருந்து 16, ஆப்பிரிக்கா மற்றும் ஓசியானியாவில் இருந்து தலா 7 பேர் அடங்குவர்.

இந்த பட்டியலில் புளோரிடாவில் ஆய்வுக்கல்வி பயின்று வரும் தரண்ஜீத் சிங் (வயது 29), துபாயில் வசித்து வரும் ரித்திகா சிங் (29), கேரளாவை சேர்ந்த இளம்பெண் சாரதா பிரசாத் (19) ஆகிய 3 இந்தியர்கள் இடம்பிடித்துள்ளனர்.

சாரதா பிரசாத் கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்தவர். இவர் கோவை எட்டிமடையில் உள்ள அமிர்தா பல்கலைக்கழகத்தில் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்து வருகிறார். இவர், பெற்றோருக்கு ஒரே வாரிசு ஆவார். கோவை வடவள்ளியில் பெற்றோருடன் தங்கி இருக்கும் சாரதா பிரசாத் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

செவ்வாய்கிரகத்துக்கான பயண தேர்வுக்கு, 3-வது சுற்றில் 100 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இதில் இந்தியாவை சேர்ந்த ஒரே பெண் நான்தான் என்பதில் மிகவும் மகிழ்ச்சியும், பெருமையும் அடைகிறேன். மற்ற 2 பேர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள். நான் தேர்வு செய்யப்பட்டது, எனக்கு 13-ந் தேதியே தெரியும். இருப்பினும், வெளியே சொல்லக்கூடாது என்று கூறிவிட்டனர்.

3-வது சுற்று தகுதி தேர்வில் உடல்திறன், மன திறன் முக்கிய தேர்வாக இருந்தது. மிகவும் சவாலான போட்டியாக விளங்கிய 3-வது சுற்றில் வெற்றி பெற்றுவிட்டேன். 4-வது சுற்றிலும் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை எனக்குள்ளது.

செவ்வாய்கிரகத்துக்கு சென்றால், திரும்ப முடியாது என்பதால் ஆரம்பத்தில் எனது பெற்றோர் இதற்கு சம்மதிக்கவில்லை. பெற்றோரை சம்மதிக்க வைத்து இந்த போட்டிகளில் கலந்துகொண்டேன். இப்போது எனது பெற்றோர் முழு சம்மதம் தெரிவித்து விட்டனர்.

எனக்கு விண்வெளி அறிவியலிலும், தொழில்நுட்பத்திலும் ஆர்வம் அதிகம். அத்துடன், ரிஸ்க் எடுப்பதிலும், சாகசங்கள் புரிவதிலும் ஆர்வம் உண்டு. செவ்வாய் கிரக பயணத்தில் இவை இரண்டும் இருப்பதால், செல்வாய் கிரகத்தில் குடியேற ஆர்வமாக இருக்கிறேன்.

குடும்பத்தையும், நண்பர்களையும் பிரிந்து செல்வது கடினமான ஒன்றுதான். ஆனால், இது வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே கிடைக்கும் வாய்ப்பு என்பதை மறந்துவிடக்கூடாது. இறுதி சுற்று தேர்வுக்காக இப்போதே நான் என்னை தயார்படுத்தி வருகிறேன். செவ்வாய் கிரகத்துக்கு நிச்சயம் நான் பயணம் செய்வேன் என்ற நம்பிக்கை உள்ளது.

இந்தியர்களுக்கு பெருமையாகவும், உலக வரலாற்றில் இடம்பெறுவதாகவும் இந்த பயணம் அமையும். இவ்வாறு சாரதா பிரசாத் கூறினார். தற்போது தேர்வு செய்யப்பட்டவர்களிடம் இன்னும் கடினமான சோதனைகள் நடத்தப்பட்டு, 24 பேர் கொண்ட இறுதிப் பட்டியல் தயாரிக்கப்படும். அந்த பட்டியலில் இடம்பிடிப்போருக்கு 7 ஆண்டுகள் விண்வெளி பயிற்சிகள் அளிக்கப்படும்.

பின்னர் 2024-ம் ஆண்டு முதல் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை 4 பேர் வீதம் செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பிவைக்கப்படுவார்கள். இறுதிபட்டியலில் இந்தியர்கள் இடம்பெறுவார்களா? என்ற எதிர்பார்ப்பு இந்தியாவில் உள்ளவர்களிடம் மட்டுமின்றி வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களிடமும் உள்ளது.Tamil-girl-among.jpg

- See more at: http://www.canadamirror.com/canada/38158.html#sthash.vupaRqqP.dpuf

  • கருத்துக்கள உறவுகள்

நல்லது தங்கையே செவ்வாயில் தமிழைப் பரப்ப முடிந்தவரை முயல்க.  இந்த நூற்றாண்டுக்குள் தமிழ் ஒரு யூனிவேசல் மொழியாக ஆகாவிடினும் ஆகக்குறைந்தது இன்டர் சோலார் மொழியாகவாவது வளர்ச்சி பெறட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

பாராட்டப்பட வேண்டிய துணிவு. இவர் செவ்வாய்க் கிரகத்துக்குச் செல்லத் தெரிவாவார் என்று நம்புவோம். வாழ்த்துக்கள்.

தங்கச்சி செவ்வாய்கிரகத்தில காணி பிடிச்சு வையுங்க. நாம அங்காவது தமிழீழம் அமைப்பம்.

  • கருத்துக்கள உறவுகள்

நல்லது தங்கையே செவ்வாயில் தமிழைப் பரப்ப முடிந்தவரை முயல்க.  இந்த நூற்றாண்டுக்குள் தமிழ் ஒரு யூனிவேசல் மொழியாக ஆகாவிடினும் ஆகக்குறைந்தது இன்டர் சோலார் மொழியாகவாவது வளர்ச்சி பெறட்டும்.

 

வடிவா நோக்குக சேட்டா.. ! ஆ பெண் குட்டி, மலையாளக் குட்டி.!! :icon_idea:

செவ்வய் கிரகம் முழுவதும் "என்டே கேரளமே! "என் ஈ குட்டி மலையாளத்தில் பறையும்.. :wub:

 

குட்டி கேரளமே. அப்ப கூட போறவங்களுக்கு வாழ்வுதான்.

  • கருத்துக்கள உறவுகள்

வடிவா நோக்குக சேட்டா.. ! ஆ பெண் குட்டி, மலையாளக் குட்டி.!! :icon_idea:

செவ்வய் கிரகம் முழுவதும் "என்டே கேரளமே! "என் ஈ குட்டி மலையாளத்தில் பறையும்.. :wub:

 

 

 

தமிழை  வாழ்த்த வந்தோம்

உங்களது புண்ணியத்தால் பின் வாங்கி விட்டோம்... :icon_idea:

வாக்கு போட்டு போக பண்ண முடியாதா  :D

  • கருத்துக்கள உறவுகள்

...

இந்த பட்டியலில் புளோரிடாவில் ஆய்வுக்கல்வி பயின்று வரும் தரண்ஜீத் சிங் (வயது 29), துபாயில் வசித்து வரும் ரித்திகா சிங் (29), கேரளாவை சேர்ந்த இளம்பெண் சாரதா பிரசாத் (19) ஆகிய 3 இந்தியர்கள் இடம்பிடித்துள்ளனர்.

 

சாரதா பிரசாத் கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்தவர். இவர் கோவை எட்டிமடையில் உள்ள அமிர்தா பல்கலைக்கழகத்தில் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்து வருகிறார்.

- See more at: http://www.canadamirror.com/canada/38158.html#sthash.vupaRqqP.dpuf

 

 

கேரளாவில் பிறந்த பெண்குட்டி எப்போ தமிழச்சி ஆச்சுது..? இந்த மாதிரி 'டூப்ளிகேட் தமிழர்'களால் தான் தொல்லையே! :lol:

 

  • கருத்துக்கள உறவுகள்

செவ்வாயில் வாய் நனைக்க  "டீ " கடை ரெடி...!  :rolleyes::)

  • கருத்துக்கள உறவுகள்

 

 

செவ்வாய் கிரகத்தில் உயிர் வாழ ஏற்ற சூழல் நிலவுகிறதா? என்று இந்திய நாட்டு விஞ்ஞானிகள் உள்பட உலக விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து வருகிறார்கள். இந்த நிலையில் செவ்வாய் கிரகத்தில் மனித வாழ்விடங்களை நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது. .

இதற்கான அறிவிப்பு வெளியான உடனே, உலகம் முழுவதிலும் இருந்து 2 லட்சத்து 2 ஆயிரத்து 586 பேர் செவ்வாய் பயண திட்டத்துக்கு விண்ணப்பித்தனர். இதில் ஏராளமான இந்தியர்களும் அடக்கம்.

இது ஒரு வழி பயணம் ஆகும். செவ்வாய் கிரகத்துக்கு பத்திரமாக போய் சேர்ந்தால் அங்கு இருந்து திரும்பி வர முடியாது.

Tamil-girl-among.jpg

- See more at: http://www.canadamirror.com/canada/38158.html#sthash.vupaRqqP.dpuf

 

 

முன்பு இப்படியான ஆராய்ச்சிக்கு விலங்குகளையே அனுப்புவார்கள்

 

  • தொடங்கியவர்

கேரளாவில் பிறந்த பெண்குட்டி எப்போ தமிழச்சி ஆச்சுது..? இந்த மாதிரி 'டூப்ளிகேட் தமிழர்'களால் தான் தொல்லையே! :lol:

 

 

 "தமிழகத்தின் செல்ல குழந்தைகளுக்கான தேடல்" இதிலும் மலையாளம்தானே ஆதிக்கம் அப்படித்தான் இதுவும் என்று எண்ணி விட்டேன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.