Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரைஞான் கயிறின் மருத்துவ குணம்

Featured Replies

மருத்துவ ரகசியம்!.

அரைஞாண் நாம் சின்ன வயதில் நம் பெற்றோர் வற்புறுத்தி இடுப்பில் கட்டிவிடும் ஒரு கருப்பு கயிறு. எதற்கு இதை நான் அணிந்து கொள்ள வேண்டும் என்று கேட்டால்,திருஷ்டி படகூடாதுன்னு கட்டிவிடுறோம்னு சொல்லுவாங்க..உண்மையிலேயே இதுக்கு தான் இந்த கருப்பு கயிற்றை கட்டுகிறோமா?

நிச்சயமாக இல்லை அந்த அரைஞாண் கயிற்றின் ரகசியத்தை நம் முன்னோர்கள் கண்டுபிடித்த ஒரு மருத்துவ ரகசியமே அடங்கியுள்ளது அந்த ரகசியம்......

ஆண்கள் இடுப்பில் கட்டுகிற அரைஞாண்கயிறு ஒரு நோய் தடுப்பு முறை என்பது இன்று பலருக்குத் தெரியாது. ஆண்களுக்குப் பொதுவாக குடல் இறக்க நோய் வருவதுண்டு. அந்நோயைத் தடுக்கவே இடுப்பில் அரைஞாண் கயிறு முன்பெல்லாம் கட்டுகிற பழக்கம் தமிழர்களிடையே இருந்தது. பிறகு அக்கயிறு வெள்ளிக்கொடியாக மாறியது.

இன்றைக்கு அநாகரீகம் எனக் கருதி அரைஞாண்கயிறும் கட்டுவதும் குறைந்து விட்டது. உடல் பெருத்தலின் ஒரு அதிகபட்ச தீமை 'குடல் இறக்க நோய்' ஆங்கிலத்தில் ஹெரணியா என்பார்கள். இது தொண்ணூறு சதவீதம் ஆண்களுக்குத் தான் வரும் என ஆய்வுக் குறிப்புகள் சொல்கின்றன.இதை தடுக்கத்தான் நம் முன்னோர்கள் இடுப்பில் அரைஞாண் கயிறு கட்ட அறிவுறுத்தினார்கள்.

இப்போது வெள்ளி,தங்கத்தில் அறுணாக் கொடி கட்டுகிறார்கள் தான். அது பகட்டுக்கு. சில விசயங்கள் நாகரீக மாற்றங்களுக்குட்பட்டு மாறிவிட்டாலும் இன்றும் கறுப்புக் கயிற்றில் முத்து மணிகள் சில கோர்த்து அறுணாக் கொடி கட்டத்தான் செய்கிறார்கள்.நம் முன்னோர்கள் பாரம்பரியத்தை நம் பிள்ளைகளுக்கு ஆதாரத்தோடு கற்பிப்போம்...

(முகனூல் நண்பர் ஒருவரின் பதிவு )

மூட நம்பிக்கையைத் தூண்டும் அநாமதேய முகநூல் செய்திகளைப் பதிவதைத் தவிருங்கள்.

 

குடல் இறக்க நோய்க்கும் அரைஞாண்கயிற்றிற்கும் எந்தத் தொடர்பும் கிடையாது.

 

 

  • கருத்துக்கள உறவுகள்

அது கோவணம் கட்டுறதுக்கில்லயா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மூட நம்பிக்கையைத் தூண்டும் அநாமதேய முகநூல் செய்திகளைப் பதிவதைத் தவிருங்கள்.

 

குடல் இறக்க நோய்க்கும் அரைஞாண்கயிற்றிற்கும் எந்தத் தொடர்பும் கிடையாது.

 

ஊரில் கடும் விஷமுள்ள பாம்புகள் மனிசரை கொத்தினால் கொத்தின இடத்துக்கு மேலை சுண்ணாம்பாலை கோடுமாதிரி கீறி வளையம் போடுவினம்.....அதுக்குப்பிறகு 3 அல்லது 7 நாளைக்கு வேப்பமிலையாலை அடிச்சு பார்வை பாப்பினம். 
 
இதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறியள்?

 

ஊரில் கடும் விஷமுள்ள பாம்புகள் மனிசரை கொத்தினால் கொத்தின இடத்துக்கு மேலை சுண்ணாம்பாலை கோடுமாதிரி கீறி வளையம் போடுவினம்.....அதுக்குப்பிறகு 3 அல்லது 7 நாளைக்கு வேப்பமிலையாலை அடிச்சு பார்வை பாப்பினம்
 
இதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறியள்?

 

 

 

"பார்வை பார்ப்பினம்"

 

அப்படி என்றால் என்ன ?

  • கருத்துக்கள உறவுகள்

 

ஊரில் கடும் விஷமுள்ள பாம்புகள் மனிசரை கொத்தினால் கொத்தின இடத்துக்கு மேலை சுண்ணாம்பாலை கோடுமாதிரி கீறி வளையம் போடுவினம்.....அதுக்குப்பிறகு 3 அல்லது 7 நாளைக்கு வேப்பமிலையாலை அடிச்சு பார்வை பாப்பினம். 
 
இதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறியள்?

 

 

பாம்பு அதுகும் விசமுள்ள பாம்பு கொத்தி மனிசர் சாகாமல் இருக்கிறது அதிசயம். அதுக்கு சுண்ணாம்புக் கோடு கீறி சாகவாசமா வேப்பிலையடிக்க மனிசர் சவமாகவல்லோ ஆயிடுவினம் குமாரசாமி.

 

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்கள் இடுப்பில் கட்டுகிற அரைஞாண்கயிறு ஒரு நோய் தடுப்பு முறை என்பது இன்று பலருக்குத் தெரியாது. ஆண்களுக்குப் பொதுவாக குடல் இறக்க நோய் வருவதுண்டு. அந்நோயைத் தடுக்கவே இடுப்பில் அரைஞாண் கயிறு முன்பெல்லாம் கட்டுகிற பழக்கம் தமிழர்களிடையே இருந்தது. பிறகு அக்கயிறு வெள்ளிக்கொடியாக மாறியது.

 

அப்ப தமிழர் தவிர்த்து மற்ற எல்லோரும் குடல் இறக்க நோயால் இறந்து அல்லவா இருக்க வேண்டும்.
 
இவங்களுக்கு தமிழ் பெண்கள் பிரா போடுவது இன்னமும் தெரியாது போல.....
தெரியும்போது ............. அதனால்தான் இருதயம் வெடிப்பதில்லை என்று சொல்வார்கள். 
பெண்கள்  படும் பாடு அவர்களுக்குதான் தெரியும்.
  • கருத்துக்கள உறவுகள்

அது கோவணம் கட்டுறதுக்கில்லயா

 

நானும்... அறுநாக்கொடியில் தான், கோவணத் துண்டை... செருகி விடுவதற்காக கட்டியவர்கள் என் நினைத்திருந்தேன். ஆனால்.... பழைய காலத்து ஆட்கள் தங்கள் அந்தஸ்தை காட்டுவதற்காக பவுண், வெள்ளியில் கட்டியுள்ளதாகவே அறியக் கூடியதாக உள்ளது. அக்காலங்களில்.... ஆண்கள் கையில் மணிக்கூடு கட்டும் கலாச்சாரம் ஆரம்பிக்காத நிலையில், அறுநாக்கொடி கட்டுவதன் மூலம் தமது அந்தஸ்தை காட்டிக் கொண்டார்கள். பின்பு.... ரோலக்ஸ், சீக்கோ, சிற்றிசன் மணிக்கூடுகள் கட்ட ஆரம்பித்த பின், அறுநாக்கொடி கட்டுவது அருகி விட்டது.

 

எனது தாத்தாவிடம்... மூன்று மீற்றர் நீளமான வெள்ளி அறுநாக்கொடி இருந்தது. அப்பாவும் அறுநாக்கொடி கட்டியவர். நான் மூன்று வயதாக இருக்கும் வரை.... பவுணில் அறுநாக்கொடி கட்டியிருந்தேன். நான் சிறு வயதில், உடைகள் இல்லாமல் வெறும் உடம்புடன் திரிவதால்... முத்தத்தில் நின்று விளையாடும் போது... அந்தப் பவுண் அறுநாக்கொடிக்காக, பிள்ளைபிடிகாறர் என்னை கடத்திக் கொண்டு போய் விடுவார்கள் என்ற பயத்தில்... அம்மா, அறுநாக்கொடியை கழட்டி வைத்து விட்டா. அதுக்குப் பிறகு இதுவரை.... அறுநாக்கொடி கட்டவேயில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

அரைஞான் கொடின்னு தானே சொல்லுறது. கயிறென்னா சொல்லுவாங்க.

 

வெள்ளில ஒன்று கட்டி விட்டிருந்தாங்க.. விமான நிலையத்துக்கால வரேக்க.. அது கீ கீ என்றிட்டுது. வந்த நேரமும் பிழை. வந்த விசாவும் பிழை. வந்த விமானமும் பிழை. அடுத்த இரட்டைக் கோபுரத்தை தகர்க்க வந்தவன் போல.. கூட்டிக் கொண்டு போய் அறைக்குள்ள வைச்சு.. எல்லாம் கழற்றிவிச்சு.. இதென்ன.. எதுக்கு என்று கேள்வி மேல.. கேள்வி கேட்டித்தான் விட்டாங்க.

 

அன்று வெறுத்துப் போய் கழற்றினது.. இன்னும் திருப்பிக் கட்டல்ல. :lol::icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

 

ஊரில் கடும் விஷமுள்ள பாம்புகள் மனிசரை கொத்தினால் கொத்தின இடத்துக்கு மேலை சுண்ணாம்பாலை கோடுமாதிரி கீறி வளையம் போடுவினம்.....அதுக்குப்பிறகு 3 அல்லது 7 நாளைக்கு வேப்பமிலையாலை அடிச்சு பார்வை பாப்பினம். 
 
இதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறியள்?

 

 

அதில விசயம் இருக்கு. கீழுள்ள உதாரணம்.. இதற்கும் பொருந்த வாய்ப்புள்ளது.

 

உ+ம்: தேனிக்களில் இரண்டு வகை உண்டு. இரண்டின் விசங்களில்.. ஒன்று அமிலத் தன்மையானது. மற்றது காரத் தன்மையானது. அதனால்.. அவை மனிதரைக்.. குத்தினால்.. அவற்றின் விசத்தின் இயல்பை இல்லாமல் செய்ய.. அமிலத்துக்கு சுண்ணாம்பையும்.. காரத்துக்கு.. புளியையும் தடுவுவார்களாம்.

 

இது.. இங்கிலாந்தில்.. ஒரு பரீட்சை வினாத்தாளில் கேட்கப்பட்ட கேள்வியாகவும் வந்திருந்தது.

 

முன்னோர்கள் செய்த சில காரியங்களுக்குள் விஞ்ஞானம் பொதிந்துள்ளது என்பது மறுப்பதற்கில்லை.

 

ஆனால் அதற்காக எல்லா பாரம்பரிய அனுஷ்டானங்களிலும்.. விஞ்ஞான பொதிந்திருக்கு என்று உறுதி செய்யாமல் நம்புவது மடமை தான். இருந்தாலும் மக்கள் பலவற்றை விஞ்ஞான உறுதிப்படுத்தலுக்கு அப்பால் அனுபவ ரீதியாக நம்புகிறார்கள். :):icon_idea:

 

Edited by nedukkalapoovan

அரைஞான் கொடின்னு தானே சொல்லுறது. கயிறென்னா சொல்லுவாங்க.

 

வெள்ளில ஒன்று கட்டி விட்டிருந்தாங்க.. விமான நிலையத்துக்கால வரேக்க.. அது கீ கீ என்றிட்டுது. வந்த நேரமும் பிழை. வந்த விசாவும் பிழை. வந்த விமானமும் பிழை. அடுத்த இரட்டைக் கோபுரத்தை தகர்க்க வந்தவன் போல.. கூட்டிக் கொண்டு போய் அறைக்குள்ள வைச்சு.. எல்லாம் கழற்றிவிச்சு.. இதென்ன.. எதுக்கு என்று கேள்வி மேல.. கேள்வி கேட்டித்தான் விட்டாங்க.

 

அன்று வெறுத்துப் போய் கழற்றினது.. இன்னும் திருப்பிக் கட்டல்ல. :lol::icon_idea:

 

 

அப்ப எப்படி இப்ப கோமணம் கட்டுறீங்க? :D 

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப எப்படி இப்ப கோமணம் கட்டுறீங்க? :D 

 

நீங்க இன்னும் பழைய நூற்றாண்டுக் காளானாவே இருக்கீங்க. இப்ப பிரா போய் கப் போடுற காலமுண்ணே. நாங்க மட்டும் கோவணத்தோட தாத்தா காலத்திலையா இருப்பம். :lol::D

ஓ!  நல்லது :unsure: நான் தேவைப்படுகிறது இல்லை என்று நினைத்தேன் :icon_mrgreen:  :D 

  • கருத்துக்கள உறவுகள்

ஓ!  நல்லது :unsure: நான் தேவைப்படுகிறது இல்லை என்று நினைத்தேன் :icon_mrgreen:  :D 

 

காளானுக்கு தேவைப்படாது தானே. உங்க நினைப்பு உங்கள் அளவில் நியாயம் தானே.. அண்ணே. :lol::D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.