Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காணாமல்போகச் செய்யப்பட்டவர்கள் இரகசிய முகாம்களில் சப்பாத்துத் துடைக்கின்றனர் -

Featured Replies

அல்லது இந்தியாவை சுளித்து ஏதாவது செய்ய முடியுமா என்பதுதான் கேள்வி. காட்சியில் இல்லாதிருந்த‌ சீனா எவ்வாறு மூக்கை நுழைத்தது என்பதில் பதில் இருக்கிறது. அதை விரட்ட எவ்வளவு பாடுபடுகிறார்கள் என்பதும் தெளிவு. இப்போது சீனா தோற்றுவிட்டதா?

...

இவையெல்லாம் இப்படி இருக்க, ஒரு சக்தியால் ஆட்டிப்படைக்கப்பட்ட எமது நிலம் இன்று இரண்டு சக்திகள் மோதிக்கொள்ளும் களமாக உள்ளது. இதை நிறைவேற்றித் தந்தது எமது போராட்டமே. அது ஒரு நல்ல முடிவுக்கு வரும்.

 

நியாயமான நிதர்சனமான கருத்து. (பச்சை முடிந்துவிட்டது)

  • கருத்துக்கள உறவுகள்

விக்கி நல்லவரா சம்பந்தன் கெட்டவரா என்பதை விட்டு காணமல் போனவர்களை கண்டு பிடிக்க உருப்படியாக எதையாவது செய்யுங்கள் .

 

அது சரிதான்.

 

 

எமது அடுத்த போராட்ட முனைவு அமேரிக்கா ரஷ்யாவை கொண்டுவந்து எங்கட மண்ணில மோதவிடுவது . :icon_mrgreen:

அதுக்கும் மறைமுகமாக ஒரு அலுவல் பார்த்துவிட்டுத்தான் ஓடி ஒழித்தார்கள் . :D

 

இப்படிஎல்லாம் எழுத அதை நம்ப ஒரு கூட்டம் முந்தி இருந்தது இப்பவும் இருக்கு என்று நம்பமுடியாமல் இருக்கு . :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

இதே களத்தில் சீனா ஒரு சக்தியாக இந்தப் பிராந்தியத்தில் உருவெடுக்கும் என்று சொன்னபோது சிரித்தவர்கள் நிறையப் பேர். எல்லாம் பதிவில் இருக்கு.. :lol:

இசை,

 

இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் இன்று நேற்றல்ல ஆரம்பித்தது. அது இலங்கை சுதந்திரமடைந்த காலத்தில் இருந்து தொடர்ந்து வருவது. முக்கியமாக சிறிமாவின் காலத்தில் பலமாக வேரூன்ற ஆரம்பித்து, ஜே ஆரின் காலத்தில் நன்கு செழித்து வளர்ந்தது. 70 களில் ஜேவிபியின் கிளர்ச்சியை அடக்க இந்தியா சிறியளவில் தன் படைகளை இலங்கைக்கு அனுப்பி வைத்தமையும் சீன / இந்திய அரசுகளுக்கான போட்டியினால் தான். அத்துடன் மூன்றாவது சக்தியாக அமெரிக்க அரசின் செல்வாக்கும் இலங்கை அரசியலில் பல காலமாக இருக்கு.  Voice of America இலங்கையில் கால் வைத்தமையும், இலங்கை - இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திட வேண்டிய தேவையை  இந்தியாவுக்கு உருவாக்கியமையும் இதற்கு நல்ல உதாரணங்கள்.

 

இந்திய சீன யுத்தத்தின் போதே சீனா இப் பிராந்தியத்தில் முக்கிய சக்தியாக உருவாகத் தொடங்கி விட்டது.

 

இதை நீங்கள் என்ன ஆராய்ச்சிகளின் அடிப்படையில் சொல்லுறீங்க அண்ணாச்சி. உங்களால் முடியாதது.. அல்லது உங்கள் காலத்தில் முடியாதது எவ்வளவோ.. எதிர்காலத்தில் நிகழ உள்ளதே. அதையும் நீங்கள் மறுதலித்து விட்டு செத்துப்போயிடுவீர்கள். அதற்காக எவனும் முயற்சி இன்றி.. ஆராய்ச்சி இன்றி இருந்துவிடப் போவதில்லை. 

 

முயன்றால் தான் எதுவும் கிடைக்கும். வெட்டிக்கு இயலாது என்று கொண்டிருந்தால்... தமிழீழம் என்ன வயிற்றுக்கு சோறு கூடக் கிடைக்காது.  :icon_idea:  :D  :lol:

 

எனது கருத்திடலில் "தமிழீழம் என்பது என்றுமே சாத்தியமானதாக இருந்ததில்லை, இருக்கப் போவதுமில்லை." என்று எழுதியது தப்புத்தான். மாற்றம் என்ற சொல் மட்டுமே மாறாதது மிகுதி யாவும் மாறலாம் என்பதை புரிய வைத்தமைக்கு நன்றி. எனது கருத்திடல்களில் இனிமேல் கவனம் செலுத்துகின்றேன். 

 

நன்றி. 

Edited by ஜீவன் சிவா

கண்ணுக்கு முன்னால் கறுப்பு வெள்ளையாக நடைபெற்ற எமது போராட்டத்தை பயங்கரவதமாக மாற்றி எதுவித தீர்விற்கும் வழியில்லாமல் செய்துவிட்டு போய்விட்டார்கள் .

 

இதற்கு எத்தனை கலரிலும் வண்ணம் பூசலாம்  ஆனால் எமது அரசியல் வறுமை தான் எமது இன்றைய நிலைக்கு காரணம் .

எம்மை நாமே திருப்தி படுத்த வல்லரசுகளை இழுக்கலாம் வேறு விடுதலை போராட்டங்களையும் இழுக்கலாம் ஆனால் அது வெறும் சுய இன்பம் மட்டுமே .

எமது விடுதலை போராட்டம் கண்ணுக்கு முன்னே கட்டுப்படுத்த முடியாத கொலைக்களமாக மாறியதை உலகம் நன்கு அறியும் .

  • கருத்துக்கள உறவுகள்

விக்கி நல்லவரா சம்பந்தன் கெட்டவரா என்பதை விட்டு காணமல் போனவர்களை கண்டு பிடிக்க உருப்படியாக எதையாவது செய்யுங்கள் .

 

எமது அடுத்த போராட்ட முனைவு அமேரிக்கா ரஷ்யாவை கொண்டுவந்து எங்கட மண்ணில மோதவிடுவது . :icon_mrgreen:

அதுக்கும் மறைமுகமாக ஒரு அலுவல் பார்த்துவிட்டுத்தான் ஓடி ஒழித்தார்கள் . :D

 

இப்படிஎல்லாம் எழுத அதை நம்ப ஒரு கூட்டம் முந்தி இருந்தது இப்பவும் இருக்கு என்று நம்பமுடியாமல் இருக்கு . :icon_idea:

 

அது சரிதான்.

 

இப்போதான் ஆமோதித்து சொன்னேன், இப்படி சொன்னவே மாறிவிட்டார்! :o:lol:

 

Let us stick to the topic ! :icon_mrgreen:

 

Let us stick to the topic ! :icon_mrgreen:

 

இல்லை ராஜவன்னியன். தலைப்பிற்கு தொடர்பற்று இத்திரி வளர்வது உண்மை ஆனாலும் இசைக்கலைஞன், நிழலி, விசுகு, நெடுக்காலபோவான், அர்ஜுனின் பதிவுகள் தனிநபர் தாக்குதலற்று ஆரோக்கியமானவை. அதனால்தான் இத்திரிக்குள் ஒட்டிக் கொண்டுள்ளேன்.

  • கருத்துக்கள உறவுகள்

இசை,

 

இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் இன்று நேற்றல்ல ஆரம்பித்தது. அது இலங்கை சுதந்திரமடைந்த காலத்தில் இருந்து தொடர்ந்து வருவது. முக்கியமாக சிறிமாவின் காலத்தில் பலமாக வேரூன்ற ஆரம்பித்து, ஜே ஆரின் காலத்தில் நன்கு செழித்து வளர்ந்தது. 70 களில் ஜேவிபியின் கிளர்ச்சியை அடக்க இந்தியா சிறியளவில் தன் படைகளை இலங்கைக்கு அனுப்பி வைத்தமையும் சீன / இந்திய அரசுகளுக்கான போட்டியினால் தான். அத்துடன் மூன்றாவது சக்தியாக அமெரிக்க அரசின் செல்வாக்கும் இலங்கை அரசியலில் பல காலமாக இருக்கு.  Voice of America இலங்கையில் கால் வைத்தமையும், இலங்கை - இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திட வேண்டிய தேவையை  இந்தியாவுக்கு உருவாக்கியமையும் இதற்கு நல்ல உதாரணங்கள்.

சீனாவை அன்று உள்நுழைக்கப் பார்த்ததும் சிங்கள ராஜதந்திரம்தான். ஆனால் அது பயனளிக்கவில்லை. மாநாட்டு மண்டபம் கட்டியதோடு சரி. ஜேவிபி கிளர்ச்சி அன்றைய பொதுவுடமை சிந்தனைகளின்பாற்பட்டது. கம்யூன்சத்தில் திளைத்திருந்த சீனாவை ஜே.ஆர். ஆதரிக்கவில்லை. மேற்கையே இந்தியாவுக்கு எதிரான ஒரு leverage ஆக கொண்டுவந்தார். அது பனிப்போர் காலத்தில் சரியாகவிருந்தது.

இன்று உள்நுழைத்ததும் அதே சிங்கள‌ ராஜதந்திரம்தான். ஏனென்றால் பனிப்போர் முடிவுக்குப் பின்பு, மேற்கும், இந்தியாவும் அணுக்கமான கொள்கைகளைக் கடைப்பிடித்தார்கள். இதில் மேற்கை ஆதரித்து சிங்களத்தால் இந்தியாவை எதிர்த்து அரசியல் செய்ய முடியாது. அதைத்தான் முன்பே சொன்னேன். சிங்களத்தின் ஒரு தரப்பு சீனாவைக் கைவிடாது என. ஆனாலும் இது நெருப்புடன் விளையாடுவது போன்றது. நீண்டநாட்கள் தாக்குப்பிடிப்பது கடினம்.

எமது போராட்டம் என்று ஒன்று இருந்திராவிட்டால், இந்தியாவுக்குப் பயப்பட வேண்டிய தேவை இலங்கைக்கு இல்லை. இன்று மனித உரிமைகள் பற்றிப் பயப்பட வேண்டிய தேவையும் இல்லை. இந்த இக்கட்டுகளின் விளைவுதான் ஆட்சி மாற்றம். சீனாவை வைத்திருக்கவேண்டிய தேவை சிங்களத்துக்கு என்றுமே உண்டு. இது மேற்கு + இந்திய அரசியலுக்கு முரணானது.

முக்கியமாகக் கவனிக்க வேண்டியது, உலக ஓட்டத்துக்கு ஏற்ப போராட்டங்களை மாற்றுவது (Reactive measures) பயனைத் தராது. உலக ஓட்டத்தை முன்கூட்டியே சிந்தித்து அதன்படி கொண்டு செல்வதே (Proactive measures) சாதகமான விளைவுகளைத் தரும். சீனா அபரிதமான வளர்ச்சி காணும் என யார் கண்டார்?!

Edited by இசைக்கலைஞன்

  • கருத்துக்கள உறவுகள்

விக்கி ஐயாவின் செய்தியைப் பார்த்தால் காணாமல் போனவர்களில் யாருமே கொன்றொழிக்கப்படவில்லை என்றல்லவா அர்த்தமாகிறது.  இது தப்பான புரிதலையல்லவா ஏற்படுத்துகிறது.  ஐயாவுக்கு செய்தியைச் சொன்னவர்கள் என்ன உள்நோக்கத்துடன் சொன்னார்களோ தெரியவில்லை. "கொல்லப்பட்டவர்கள் போக மிகுதிப்பேர்" என்றல்லவா சொல்லியிருக்கவேண்டும்.

[quote

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்

[quote

 

 

சம்பந்தர் ஐயா

யாழை வாசிக்கிறார் என்று விரைவில் சொல்லுவார் பாருங்கோ... :D

காணமல் போக செய்யபட்ட உறவுகள் மீண்டு வருவதை எதோ ஒரு வகையில் எல்லாரும் முயச்சி செய்து உண்மை நிலையை கண்டு அறிவோம் . முதல்வரின் முயற்சிக்கு வலுச்சேர்ப்போம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.