Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உங்கள் தாயை அனுமதிப்பீர்களா ??????

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

vai-mu-kothainayagi.jpg

 

 

4a689528-b2c1-4e96-aeee-526e49e39d3e_S_s

 

 

உங்கள் தந்தை இறந்தபின் உங்கள் தாயார் தொடர்ந்தும் குங்குமப் பொட்டு வைக்க நீங்கள் அனுமதிப்பீர்களா ???

 

நழுவும் மீனாகப் பதிவைப் பார்த்துவிட்டுப் போகாது உங்கள் கருத்துக்களைப் பதியுங்கள் உறவுகளே.

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

  • Replies 111
  • Views 13.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

அவர்களது முடிவு.

  • கருத்துக்கள உறவுகள்

நிச்சயம் அனுமதிக்கப்படவேண்டும்.

விதவை என்று ஒதுக்கப்படும் சமூகக் கொடுமை களையப்படல் வேண்டும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அவர்களது முடிவு.

 

அவர்கள் முடிவுதான் என்றாலும் நான் கேட்டது அதுவல்ல நீங்கள் அனுமதிப்பீர்களா என்பதுதான் கேள்வி இசை. நழுவாமல் பதில் கூறும்படி முன்னரே கூறியுள்ளேன் :D

 

நிச்சயம் அனுமதிக்கப்படவேண்டும்.

விதவை என்று ஒதுக்கப்படும் சமூகக் கொடுமை களையப்படல் வேண்டும்

 

நான் நினைக்கிறேன் இந்தியா போன்று எமது நாட்டில் விதவையை ஒதுக்குவது இல்லை என. ஆனாலும் எனக்குத் தெரியாமல் ஏதும் இருக்கோ தெரியவில்லை அண்ணா.

 

வேண்டும் என்று பொதுவாக எழுதாமல் உங்கள் தாய் எனில் என்ன கூறுவீர்கள் ????

 

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

  • கருத்துக்கள உறவுகள்

அவர்கள் முடிவுதான் என்றாலும் நான் கேட்டது அதுவல்ல நீங்கள் அனுமதிப்பீர்களா என்பதுதான் கேள்வி இசை. நழுவாமல் பதில் கூறும்படி முன்னரே கூறியுள்ளேன் :D

அதைத்தான் நானும் சொன்னேன்.. :D நாங்கள் அவர்களது முடிவில் தலையிடக்கூடாது இல்லையா?? "அனுமதித்தல்" என்கிற விடயத்திற்கே இங்கே இடமில்லை.. :unsure:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அதைத்தான் நானும் சொன்னேன்.. :D நாங்கள் அவர்களது முடிவில் தலையிடக்கூடாது இல்லையா?? "அனுமதித்தல்" என்கிற விடயத்திற்கே இங்கே இடமில்லை.. :unsure:

 

பிள்ளைகள் என்ன நினைப்பார்களோ என்ற எண்ணத்திலேயே சில பெண்கள் விருப்பம் இருந்தும் பொட்டு வைக்காது விடலாம் அல்லவா.???

 

  • கருத்துக்கள உறவுகள்

நான் நினைக்கிறேன் இந்தியா போன்று எமது நாட்டில் விதவையை ஒதுக்குவது இல்லை என. ஆனாலும் எனக்குத் தெரியாமல் ஏதும் இருக்கோ தெரியவில்லை அண்ணா.

 

வேண்டும் என்று பொதுவாக எழுதாமல் உங்கள் தாய் எனில் என்ன கூறுவீர்கள் ????

 

எனது தாயார் சுமங்கலியாக காலமாகிவிட்டார்..அதனால்தான் அப்படி எழுதினேன். மாமியார் பொட்டு வைத்துதான் வாழ சொல்லியிருக்கிறோம், அப்படியே வாழ்ந்தும் வருகிறார். இதில் தவறேதும் இல்லை.

 

பெருநகரங்களில் இந்தக் கொடுமை  மிக மிகக் குறைவு.

 

Edited by ராசவன்னியன்

எங்கள் அம்மாவின் முடிவில் தலையிடும் அளவிற்கு எமக்கு தகுதியோ அனுபவமோ இல்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எனது தாயார் சுமங்கலியாக காலமாகிவிட்டார்..அதனால்தான் அப்படி எழுதினேன். மாமியார் பொட்டு வைத்துதான் வாழ சொல்லியிருக்கிறோம், அப்படியே வாழ்ந்தும் வருகிறார்.

 

பெருநகரங்களில் இந்தக் கொடுமை  மிக மிகக் குறைவு.

 

 

நன்றி அண்ணா

 

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளைகள் என்ன நினைப்பார்களோ என்ற எண்ணத்திலேயே சில பெண்கள் விருப்பம் இருந்தும் பொட்டு வைக்காது விடலாம் அல்லவா.???

பிள்ளைகளுக்கு மட்டுமல்ல.. இந்த சமூகம் என்ன சொல்லுமோ என்று பயந்துதான் பலர் வம்புக்குப் போவதில்லை.. அதுவும் இளம் விதவைகள் என்றால் கேட்கவே வேண்டாம்..

நாங்கள் எங்கள் விருப்பத்தைச் சொல்லி.. பிறகு அவர்கள் அந்த முடிவால் மன உளைச்சலுக்கு ஆளானால்??!!

ஆனால் தமிழ் பெணகளாக இருந்தால் நிச்சயமாக கட்டாயம் பொட்டு வைக்க வேண்டும் . அவர்கள் வயது போனவர்களோ இல்லை கணவனை இழந்தவர்களோ என்பது பொருட்டல்ல.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் அம்மாவின் முடிவில் தலையிடும் அளவிற்கு எமக்கு தகுதியோ அனுபவமோ இல்லை.

 

இதற்கு முன் அனுபவம் வேண்டியதில்லை. ஆனால் புறச்சூழல் நிலைமைகளும் அன்றாடம் முகம் கொடுக்கும் மனிதர்களும் மட்டுமே காரணிகளாகின்றன.

 

பிள்ளைகளுக்கு மட்டுமல்ல.. இந்த சமூகம் என்ன சொல்லுமோ என்று பயந்துதான் பலர் வம்புக்குப் போவதில்லை.. அதுவும் இளம் விதவைகள் என்றால் கேட்கவே வேண்டாம்..

நாங்கள் எங்கள் விருப்பத்தைச் சொல்லி.. பிறகு அவர்கள் அந்த முடிவால் மன உளைச்சலுக்கு ஆளானால்??!!

 

உங்கள் தாயார் பொட்டுவைக்காமல் இருக்கும் போது அம்மா நீங்கள் பொட்டு வைப்பதில் எனக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை என்று கூறுவதால் எப்படி பெற்றவர் மன உளைச்சளுக்கு ஆளாக முடியும். அவர் பொட்டு வைக்கும் போது வேண்டாம் என்றால் தான் அவருக்கு மன உளைச்சல்.

  • கருத்துக்கள உறவுகள்

... புறச்சூழல் நிலைமைகளும் அன்றாடம் முகம் கொடுக்கும் மனிதர்களும் மட்டுமே காரணிகளாகின்றன.

 

இக்கொடுமையை தவிர்க்க பண பின்புலமும் முக்கியமாக உதவுகிறது.. வசதி படைத்தவர்களென்றால் சமூகம் வெளிப்படையாக பேச, ஒதுக்க பயப்படும்..

 

ஏப்பை,சாப்பையென்றால் ஏறி மேயும்! :(

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இக்கொடுமையை தவிர்க்க பண பின்புலமும் முக்கியமாக உதவுகிறது.. வசதி படைத்தவர்களென்றால் சமூகம் வெளிப்படையாக பேச, ஒதுக்க பயப்படும்..

 

ஏப்பை,சாப்பையென்றால் ஏறி மேயும்! :(

 

 

உண்மைதான் ஆனாலும் எவரையும் பற்றிக் கவலை இன்றி இருக்கும் துணிவான பெண்களையும் நான் கண்டிருக்கிறேன்.

 

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் தாயார் பொட்டுவைக்காமல் இருக்கும் போது அம்மா நீங்கள் பொட்டு வைப்பதில் எனக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை என்று கூறுவதால் எப்படி பெற்றவர் மன உளைச்சளுக்கு ஆளாக முடியும். அவர் பொட்டு வைக்கும் போது வேண்டாம் என்றால் தான் அவருக்கு மன உளைச்சல்.

நாம் சொன்னதால் அவர்கள் பொட்டு வைத்துக்கொண்டார்கள் என்று வைத்துக்கொள்வோம்.. சமூக நிகழ்வுகளில் அவர்களுக்கு மன உளைச்சல் தரும் சம்பவங்கள் நடைபெறலாம் அல்லவா?? (வெளிநாடுகளில் இது குறைவுதான்) அதையே சொல்ல வந்தேன்.

  • கருத்துக்கள உறவுகள்

இப்போது பொட்டு மட்டுமல்ல கணவனை இழந்த பலரும் இப்போது வண்ண வண்ணக் கலர்களில் ஆடையும்  அணிந்து செல்கின்றனர்.

பொட்டு வைக்கக் கூடாது வெள்ளை ஆடை மட்டும் அணிய வேண்டும் என்பதெல்லாம் பழங்காலக் கதைகள். இப்போது நாங்கள் சொன்னாலும் பெண்கள் கேட்கும் நிலையில் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
பொட்டு வைப்பதென்ன.. தந்தை இறந்தபின்பு தாயொருவர் மறுமணம் புரிந்தபோது எங்கள் ஊரே அவர்களை வாழ்த்தியது. என் நண்பர்களோடு நானும் வைபவத்தில் கலந்து மகிழ்ச்சியோடு பலகாரங்கள் உண்டதை இப்போது நினைக்கவும் இனிக்கிறது. கலாச்சாரத்தை அங்கு யாரும் பெரிதுபடுத்தியதில்லை. சாதியைத்தவிர.
 
  • கருத்துக்கள உறவுகள்

சுமோ லொள்ளுப்பண்ணாம அம்மாவை பொட்டு வைக்க விடுங்கோ

  • கருத்துக்கள உறவுகள்

என்னைப்பொறுத்தவரை

பொட்டுக்கும் புருசனுக்கும் தொடர்புள்ளதான எமது கலாச்சாரம்

தொடர்வதால் யாருக்கு என்ன சிக்கல்.....??

திருமணத்தன்று வந்த பொட்டு

அவரது இழப்புடன் போவது ஒரு தொடர்பு பட்டதாகவே தெரிகிறது

 

ஆனால்

இதை எனது அம்மாவுக்கோ

எனது மனைவிக்கோ நான் வற்புறுத்தமாட்டேன்

அது அவர்களது விருப்பம்..

எனது தாயார் அப்பரின் இறப்புக்கு பின் பொட்டு மட்டும் வைத்துக்கொள்வதில்லை.

அவரை எவரும் இவ்வாறு செய் என சொல்வதில்லை

சொல்லவும் மாட்டோம்

சொல்லவும் முடியாது

அது அவரதும் அவரது கணவனதும் தொடர்பு சார்ந்தபிரச்சினை...

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இப்போது பொட்டு மட்டுமல்ல கணவனை இழந்த பலரும் இப்போது வண்ண வண்ணக் கலர்களில் ஆடையும்  அணிந்து செல்கின்றனர்.

பொட்டு வைக்கக் கூடாது வெள்ளை ஆடை மட்டும் அணிய வேண்டும் என்பதெல்லாம் பழங்காலக் கதைகள். இப்போது நாங்கள் சொன்னாலும் பெண்கள் கேட்கும் நிலையில் இல்லை.

 

நீங்கள் சொல்லிப் பெண்கள் கேட்டால் வெள்ளை ஆடையும் பொட்டுத் தவிர்ப்புமா ??? வாத்தியார். உங்கள் பதிலில் தெளிவு இல்லை.

 

 

பொட்டு வைப்பதென்ன.. தந்தை இறந்தபின்பு தாயொருவர் மறுமணம் புரிந்தபோது எங்கள் ஊரே அவர்களை வாழ்த்தியது. என் நண்பர்களோடு நானும் வைபவத்தில் கலந்து மகிழ்ச்சியோடு பலகாரங்கள் உண்டதை இப்போது நினைக்கவும் இனிக்கிறது. கலாச்சாரத்தை அங்கு யாரும் பெரிதுபடுத்தியதில்லை. சாதியைத்தவிர.

 

 

அந்தப் பிள்ளைகளுக்கு மிகப் பெரிய மனதுதான்.

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுமோ லொள்ளுப்பண்ணாம அம்மாவை பொட்டு வைக்க விடுங்கோ

 

உப்பிடிச் சொல்லித் தப்பிப்பீர்கள் என்றுதான் என் கருத்தை எழுதாமலே விட்டுள்ளேன்.

 

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கேள்வியே பிழை சுமோ.

பெண் (அதுவும் தாய்) என்ன எமது சொத்தா அல்லது ஜடப்பொருளா நாம் அனுமதிக்க?

நீங்கள் பொட்டு வைக்க வேணும் என்பதுதான் என் விருப்பம் ஆனால் உங்கள் முடிவு எதுவாயிருந்தாலும் அதற்கு என் ஆதரவு உண்டு என்பதே நான் என் அம்மாவுக்குச் சொன்னது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்னைப்பொறுத்தவரை

பொட்டுக்கும் புருசனுக்கும் தொடர்புள்ளதான எமது கலாச்சாரம்

தொடர்வதால் யாருக்கு என்ன சிக்கல்.....??

திருமணத்தன்று வந்த பொட்டு

அவரது இழப்புடன் போவது ஒரு தொடர்பு பட்டதாகவே தெரிகிறது

 

ஆனால்

இதை எனது அம்மாவுக்கோ

எனது மனைவிக்கோ நான் வற்புறுத்தமாட்டேன்

அது அவர்களது விருப்பம்..

எனது தாயார் அப்பரின் இறப்புக்கு பின் பொட்டு மட்டும் வைத்துக்கொள்வதில்லை.

அவரை எவரும் இவ்வாறு செய் என சொல்வதில்லை

சொல்லவும் மாட்டோம்

சொல்லவும் முடியாது

அது அவரதும் அவரது கணவனதும் தொடர்பு சார்ந்தபிரச்சினை...

 

பெண்கள் தொடர்பான கலாச்சார விழுமியங்களை ஆண்கள் தான் கட்டாயமாகப் பெண்ணுள் திணித்தனர். முன்னர் திருமணமான ஆண் மெட்டி அணிந்ததாகக் கூறுவர். பின்னர் அதை ஆண்கள் யாருமே அணிவதில்லை. பொட்டுக்குப் புருசனைத் தொடர்பு படுத்தியது பிற்காலத்தில் தான். பெண்கள் திருமணத்துக்கு முன்னர் கூடப் பொட்டு அணிவதுதானே அண்ணா ???

 

 

உங்கள் கேள்வியே பிழை சுமோ.

பெண் (அதுவும் தாய்) என்ன எமது சொத்தா அல்லது ஜடப்பொருளா நாம் அனுமதிக்க?

நீங்கள் பொட்டு வைக்க வேணும் என்பதுதான் என் விருப்பம் ஆனால் உங்கள் முடிவு எதுவாயிருந்தாலும் அதற்கு என் ஆதரவு உண்டு என்பதே நான் என் அம்மாவுக்குச் சொன்னது.

 

என் கேள்வியில் எந்தத் தவறும் இல்லை கோசன். நான் விரிவாக முன்பே எழுதாததற்கு காரணம் இருக்கிறது. அதனால் இப்போதும் உங்கள் கேள்விக்கு பதிலெழுத முடியவில்லை :D

 

பெண்கள் திருமணத்துக்கு முன்னர் கறுப்பு அல்லது வேறு கலர்களில் பொட்டு வைப்பார்கள் ஆனால் கல்யாணம் கட்டாத எந்த ஒரு பெண்ணும் எமது சமுதாயத்தில் குங்குமப் பொட்டு வைப்பதில்லை, திருமணத்தன்று தானே வைப்பார்கள். குங்குமப் பொட்டு திருமணத்துடன் சார்ந்தது என்று நினைக்கிறேன், இப்ப குங்குமப் பொட்டு வைப்பவர்கள் குறைவு மாதிரி இருக்கு, அனேகமானவர்கள் சிவப்பு ஸ்ரிக்கர் பொட்டையே வைக்கின்றார்கள். கணவனுடன் வந்த குங்குமம் கணவனுடன் போவதே நல்லது மாதிரி இருக்கு. மற்றும்படி சிவப்பு ஸ்ரிக்கர் பொட்டு வைப்பதில் தவறு இருக்கிற மாதிரி தெரியேலை. கணவனை இழந்த சில பெண்கள் கறுப்புப் பொட்டு வைப்பதைக் கண்டிருக்கிறேன். 

 


கணவனை இழந்த பெண் குங்குமப் பொட்டு வைத்துக் கொண்டு திரிந்தால் சமுதாயத்தில் மற்றவர்கள் நிட்சயம் குறைகள் சொல்லுவார்கள் என்பது உண்மை. அதைப் பற்றிக் கவலைப்படாத பெண்ணாயின் விரும்பியபடி செய்யலாம் இச் சுதந்திர பூமியில்!! :D


என் தாய் என்றாலும் இப்படித் தான் சொல்வேன், முடிவு உங்கள் கையில் என்று. எதுக்கும் கட்டாயப்படுத்த மாட்டன்  :D

  • கருத்துக்கள உறவுகள்

குங்கும பொட்டு வைப்பது திருமணத்துடன் ஆரம்பிப்பதால் கணவனை இழந்தவர்கள் ஒட்டு பொட்டுகளை வைக்கலாம்.

அம்மா ,அப்பா இறந்தவுடன் பொட்டு வைக்காமல் விட்டார் ஆனால் நாம் வற்புறுத்தி வைக்க சொல்லி இப்பவும் பொட்டு வைப்பவர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.