Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அனந்திக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

Featured Replies

article_1431439018-unnamed.jpg

 


 
வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரனுக்கு எதிராக முல்லைத்தீவில் ஆர்ப்பாட்டமொன்று செவ்வாய்க்கிழமை (12) முன்னெடுக்கப்பட்டது.
 
முல்லைத்தீவு – ஓட்டுசுட்டான் வீதியில் முல்லைத்தீவு நீதிமன்றத்துக்கு அருகில் இந்த ஆர்ப்பாட்டம், காணாமற்போனோரின் உறவினர்களின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டது.
 
அனந்தி சசிதரனின் கணவர் எழிலன் மூலமே தங்களின் பிள்ளைகள் காணாமற்போயுள்ளனர் எனவும், அதற்கான பதிலை அனந்தி வழங்கவேண்டும் என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிநின்றனர். முல்லைத்தீவு கோப்பாபிளவு பகுதியை சேர்ந்த மக்கள் இதில் கலந்துகொண்டனர்.
 
அனந்தி மற்றும் காணாமற்போனோரின் உறவினர்கள் சிலர் இணைந்து முல்லைத்தீவு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (12) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுவதாக இருந்த நிலையில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. 
 
article_1431439048-unnamed02.jpg
 
  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கேள்விக்கு அனந்தி பதில் சொல்வாரா?

  • கருத்துக்கள உறவுகள்

அனந்தி தமிழ் தானே.. நீங்களும் தமிழ் தானே (ஆமிக்காரன் இல்லைத் தானே...?) அப்புறம் எதுக்கு ஜோன் ஹெரிட்ட கேட்கிற மாதிரிக்கு இங்கிலீசில பணர். :):rolleyes:

 

ஓ.. தமிழில் எழுதினால்.. எழுத்துப் பிழை காட்டிக்கொடுத்திடும் என்றோ.. :D

 

நல்லா வருவீங்கடா... நல்லாட்சியில்.. இதெல்லாம் சகஜம். :lol::D

ம்ம்.. நல்லாட்சியின் மிகச்சிறந்த உதாரணம் :icon_idea:

ஆட்டுகை மாட்டை விடுறாங்கப்பா :rolleyes:

இங்கிலிஷில பனர்.....ம்ம் நல்லா வருவீங்க :lol:

  • கருத்துக்கள உறவுகள்

புலி உறுப்பினரான எழிலன் பிடிச்சதற்கும் புலி உறுப்பினர் இல்லாத அனந்திக்கும் என்ன சம்பந்தம்? உப்புடி ஒரு ஆர்ப்பாட்டம் முதலும் நடந்தது என நினைக்கிறேன்.

அந்த மனிசியே தன்ர புரிசனை காணல எண்டு தேடுது அதுக்குள்ள இவயின்ர குசும்புக்கு குறைவில்லை.

* மாவீர்ர்களினதும் போராளிகளினதும் பெற்றோர், மனைவி, கணவன், பிள்ளைகள், சகோதர்ர்கள் என்டு எல்லோருக்கும் எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும். அப்படியே 70 களில் ஆயுத போராட்டம் தான் தமிழீழத்திற்கான வழி என முழங்கிய வெள்ளை வேட்டிக்கார்ர் மற்றும் மாணவர் பேரவைக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதுதானே,

டக்கண்ணை, மண்டையன் அண்ணை போன்ற தாடிக்காரர்கள் அலுவலகதிற்கு முன் ஆரப்பாட்டம் நடத்திறதை விட்டுட்டு. ஏற்கனவே பாதிக்கப்பட்டிருக்கும் அந்தமனிசியை தொந்தரவு பண்ணுறாங்க.

எல்லாம் நரி அணில்களின் விளையாட்டு :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கேள்விக்கு அனந்தி பதில் சொல்வாரா?

எவளவு அறிவுபூர்வமான கேள்வி ....
அதிகம் படிக்காத அனந்தி அவர்கள் எப்படி இதற்கு பதில் கூறுவார் ?
படிச்ச மேதைகள்தான் சொல்லவேணும்.
 
(தங்களுக்குள்ளேயே பதிலை பகிர்ந்தாலே போதும். படிக்காத எங்களுக்கு தொந்தரவு வேண்டாம்) 

அதை தானே அவவும் கேட்கிறா, அவவின்ர கணவரை முதல்ல கண்டு பிடிச்சா இதுக்கு அவவின்ர கணவர் பதில் சொல்லுவார்.

வைச்சுகொண்டா வஞ்சகம் செய்கிறா?

அதை தானே அவவும் கேட்கிறா, அவவின்ர கணவரை முதல்ல கண்டு பிடிச்சா இதுக்கு அவவின்ர கணவர் பதில் சொல்லுவார்.

வைச்சுகொண்டா வஞ்சகம் செய்கிறா?

அதுக்கு அவவின்ர கணவரை வைச்சிருகின்ற அல்லது கொன்றவர்கள் தானே பிள்ளையையும் கிள்ளி தொட்டிலலையும் ஆட்டுகிறார்கள் :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

அதுதானே,

டக்கண்ணை, மண்டையன் அண்ணை போன்ற தாடிக்காரர்கள் அலுவலகதிற்கு முன் ஆரப்பாட்டம் நடத்திறதை விட்டுட்டு. ஏற்கனவே பாதிக்கப்பட்டிருக்கும் அந்தமனிசியை தொந்தரவு பண்ணுறாங்க.

எல்லாம் நரி அணில்களின் விளையாட்டு :icon_idea:

 

இங்க வீரக்கருத்து எழுதுபவர்களுக்கு

எதிரியின் பலமும்

அனந்தியின் பலவீனமும்  நன்றாகத்தெரியும்

 

அதனால் தான்அனந்தியுடன் உரசல்...

நம்ம பலம் அவ்வளவு தான்..... :(

இந்தக் கேள்விக்கு அனந்தி பதில் சொல்வாரா?

அனந்தீயின் கணவரை காணாமல் போக செய்த உங்களது அபிமான மரியாதைக்குரிய தோஸ்த்துக்களிடம் பேசி அவரின் கணவரை கண்டு பிடித்து கொடுக்க நீங்கள். உதவுவதன் மூலம் உங்கள் கேள்விக்கு பதில் கிடைக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

ஆட்கொணர்வு மனுவை அனந்தி கொண்டு வந்ததை திசை திருப்பும் நோக்குடன் அரசின் பின்னணியில் நடாத்தப்பட்ட ஊர்வலம் என்பது வெளிப்படையாக தெரிகிறது. ஆங்கிலத்தில் எழுதப்பட்ட பதாகை மற்றுமொரு சான்று. யாருக்கோ காட்ட ஆங்கிலத்தில் பதாகை எழுதப்பட்டுள்ளது.காணாமல் போனவர்கள் பற்றி மகிந்தவின் மனைவியிடம் கேட்கலாமா??. எளிலன் போர்க்குற்றவாளி என ஐ.நாவில் தீர்ப்பு வழங்கப்பட்டு விட்டதா? மகிந்த போர்க்குற்றவாளி என எழுதாத சிலர் எளிலன் போர்க்குற்றவாளியாமெல்லோ!!! ஆச்சரியமான முடிவுகளை சில தமிழர்கள் எடுத்து ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இங்க வீரக்கருத்து எழுதுபவர்களுக்கு

எதிரியின் பலமும்

அனந்தியின் பலவீனமும்  நன்றாகத்தெரியும்

 

அதனால் தான்அனந்தியுடன் உரசல்...

நம்ம பலம் அவ்வளவு தான்..... :(

 

உண்மை விசுகு.

ஒரு சிலரின் கருத்துக்களை, வாசித்து விட்டு அதிர்ந்து விட்டேன்.

இந்தக் கேள்விக்கு அனந்தி பதில் சொல்வாரா

 

ஆமா, எழிலன் பிடித்தது தன் குடும்பத்துக்காக? ஆனந்தி பதில் சொல்ல வேண்டுமாம்?

 

அப்பர் கடனை வாங்கி ஆட்டையை போட்டுட்டார், அம்மா வேலி பாஞ்சிட்டார், அக்கா .., தம்பி ..,  நடந்தால் .. உதுகளை உங்களிட்டை கேட்கலாம்? பதில் சொல்லிவியல்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.