Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாட்­டை­விட்டு வெளியே­றிய தமி­ழர்­களை அழைக்­க­வேண்­டிய பொறுப்பு அர­சுக்­குள்­ள­து - சுமந்­திரன்

Featured Replies

sumanthiran1_10.jpg
 
யுத்த கால­கட்­டத்தில் நாட்­டை­விட்டு வெளி­யே­றிய தமிழ் மக்­களை மீண்டும் நாட்­டுக்குள் அழைக்க வேண்­டிய பொறுப்பு அர­சாங்­கத்­துக்கே உள்­ளது.
 
இன­வாதக் கருத்­துக்­களை பரப்­பு­வது அர­சாங்­கத்­துக்கு நல்­ல­தல்ல என தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.ஏ.சுமந்­திரன் தெரி­வித்தார். சிறி­மா-­சாஸ்திரி ஒப்­பந்­தத்­துக்கும் யுத்­தத்தில் தமிழ் மக்கள் வெளி­யே­றி­ய­மைக்கும் எந்த தொடர்பும் இல்லை. அதனைத் தொடர்­பு­ப­டுத்த வேண்டாம் எனவும் அவர் குறிப்­பிட்டார்.
 
யுத்த கால­கட்­டத்தில் வெளி­யே­றிய தமிழ் மக்­களை மீண்டும் நாட்­டுக்குள் அழைக்­க­வேண்­டிய அவ­சியம் இல்லை என அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க தெரி­வித்­துள்ளமை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.
 
அவர் மேலும் கூறு­கையில்,
 
இலங்­கையில் கடந்த முப்­பது ஆண்­டு­களில் யுத்­தத்தால் வெளி­யே­றிய தமிழ் மக்­களை மீண்டும் இந்த நாட்­டுக்கு அழைத்து வர­வேண்டும். இந்த மக்கள் தமது உயிரை பாது­காத்துக் கொள்ளும் நோக்­கி­லேயே அக­தி­க­ளாக வெளி­யே­றி­னார்கள். ஆகவே யுத்­த­கா­ல­கட்­டத்தில் வெளி­யே­றிய மக்­களை மீண்டும் நாட்­டுக்குள் அழைத்­து­வ­ர­வேண்­டிய பொறுப்பு அர­சாங்­கத்­துக்கே உள்­ளது. அதேபோல் இன்று இரட்டை பிர­ஜா­வு­ரிமை கொடுக்க வேண்­டிய கோரிக்­கை­களை எல்லாம் அர­சாங்கம் அங்­கீ­க­ரித்­துள்ள நிலையில் புலம்­பெயர் தமிழ் மக்­களை நாட்­டுக்குள் அனு­ம­திக்கக் கூடாது என்று தெரி­விப்­பது நியா­ய­மான கருத்­தாக நாம் கரு­த­வில்லை. இவ்­வா­றான கருத்­துக்கள் முழு­மை­யாக இன­வா­தத்தை பரப்­பு­வ­தா­கவே நாம் கரு­து­கின்றோம். கடந்த அர­சாங்கம் இன­வா­தத்தை கக்­கி­ய­மையின் கார­ணத்­தி­னா­லேயே இன்று மக்­களால் புறக்­க­ணிக்­கப்­பட்­டுள்­ளது. இந்த நிலையில் இந்த அர­சாங்­கமும் இன­வா­தத்தை கையாள்­வது அர­சாங்­கத்­துக்கு நல்­ல­தல்ல.
 
மேலும் சிறி­மா-­ – சாஸ்திரி ஒப்­பந்தம் மூலம் மக்கள் வெளி­யேற்­றப்­பட்­டமை வேறு விட­ய­மாகும். இரண்டு நாடு­க­ளி­னதும் அன்­றைய அர­சாங்­கங்­களின் புரிந்­து­ணர்வு ஒப்­பந்­தத்தின் மூலம் நடை­பெற்ற சம்­ப­வங்­களும் யுத்­தத்தில் மக்கள் இடம்­பெ­யர்ந்­ததும் ஒன்­றாக முடி­யாது. கடந்த காலத்தில் தமிழ் மக்கள் சிங்­கள பேரி­ன­வாத சக்­தி­களால் விரட்­டி­ய­டிக்­கப்­பட்­டனர்.
 
சொத்­துக்­க­ளையும் உட­மை­க­ளையும் இழந்து தமது நிலங்களை விட்டு வெளியேற்றப்பட்டனர். மக்களுக்கு மீண்டும் அவர்களது சொந்த நிலங்களில் வாழ்வதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அதை அரசாங்கம் செய்து கொடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
 
 

Edited by Athavan CH

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் கூப்பிட்டால் நாங்கள் வந்திடுவோமல்ல.....எப்ப அழைப்பியள் வழிமேல் விழி வைத்து காத்துள்ளோம்...:D

  • கருத்துக்கள உறவுகள்

cute-sorry-smiley-emoticon.gif சுமந்திரன்.

அங்கை... வந்து... "வாள் வெட்டு" வாங்க, என்னால்.... முடியாது.
நீங்கள் எவ்வளவு, கெஞ்சிக் கேட்டாலும்... நான் அந்தப் பக்கம், வரவே... மாட்டன். :D  :lol:

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

முதல்ல.. சம்பந்தன் தன்ர பிள்ளை குட்டிகள்.. பேரப்பிள்ளைகளை கூப்பிட்டு வர வைக்கட்டும்.. பிறகு தமிழ் மக்கள் யோசிக்கலாம்.. சுமந்திரனும்.. தன் நண்பர்கள்.. சுற்றத்தாரை.. வால்பிடிகளை கனடா பாஸ்போட்டை கிழிச்சிட்டு.. ஊருக்கு வர வைக்கட்டும் பார்க்கலாம். :lol::D

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் தமிழர்களில் பலர் போரை சாக்குபோக்காக வைத்து பொருளாதாரத்தை மேம்படுத்தவே புலம்பெயர்ந்தனர். இதனை உறுதிப்படுத்த மிக அண்மையில் கனடாவில் வந்திறந்ங்கிய கப்பலில் மக்கள் அளித்த வாக்குமூலங்கள் மட்டுமே போதுமானவை. இந்நிலையில் 80 களில் பெரும்பாலும் வடகிடக்கில் இளைஞர்கள் அவதிப்பட அல்லது இயக்கங்களில் இணைந்துகொள்ள தென்னிலங்கையில் வாழ்ந்த பலர் அதைவைத்து புலம்பெயர்ந்து தமது வளங்களைப் பெருக்கிக் கொண்டனர். உண்மையான பாதிக்கப்பட்ட மக்களில் வெகுசிலரே புலம் பெயர்ந்து இருந்தனர். பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் உள்நாட்டிலேயே இருக்கின்றனர். வேறுசிலர் தமிழகத்தில் அகதி என்ற அடிப்படையில் திறந்தவெளிச் சிறையில் இருக்கின்றனர். இலங்கையில் தமக்கு உயிருக்கு அச்சம் இருக்கு எனச் சொல்லி அசைலம் அடித்தவர்கள் வதிவிடம் கிடைத்த மறுகணமே இலங்கைக்குப் பறந்து பாதுகாப்பாக புலத்துக்குத் திரும்பியது வரலாறு மட்டுமல்ல தற்போதைய நிகழ்வும் கூட.

அது நிற்க, இங்கு சுமந்திரன் குறிப்பிட்டது உயிரச்சத்தினால் புலம்பெயர்ந்தவர்களை மட்டுமே, வசதி வாய்ப்புக்களை நாடிப் புலம்பெயர்ந்தவர்களை அன்று. உயிரச்சத்தினால் புலம் பெயர்ந்தவர்கலால் கூட மீண்டும் திரும்ப முடியாது. பெரும்பாலும் அவர்கள் வாழும் நாடுகளில் தம்மை நிலைநிறுத்தியிருப்பர். ஆக இலங்கைக்கு மீண்டும் வந்து வாழ விரும்பும் ஒரு சில மக்கள் கூட்டத்தையே சுமந்திரன் கருதியிருந்தார் என நாங்கள் இலகுவாகப் புரிந்துகொள்ளாலாம். இதை விடுத்து இவ்வாறு சுமந்திரன் சொல்லுவது புலம்பெயர் அன்பர்களின் பலமென்று அவர்கள் கருதுவார்களாயின் அது அறியாமையேயன்றி வேறன்று!

cute-sorry-smiley-emoticon.gif சுமந்திரன்.

அங்கை... வந்து... "வாள் வெட்டு" வாங்க, என்னால்.... முடியாது.

நீங்கள் எவ்வளவு, கெஞ்சிக் கேட்டாலும்... நான் அந்தப் பக்கம், வரவே... மாட்டன். :D  :lol:

டக்கிக்கு உங்கட நிலத்தை எப்பவோ எழுதிகொடுத்துவிட்டீங்களே  :D

நாட்டை விட்டு போனது சிலருக்கு நல்லது..

 

சிலர் நாட்டை விட்டு போனதால நாட்டுக்கு நல்லது. 

cute-sorry-smiley-emoticon.gif சுமந்திரன்.

அங்கை... வந்து... "வாள் வெட்டு" வாங்க, என்னால்.... முடியாது.

நீங்கள் எவ்வளவு, கெஞ்சிக் கேட்டாலும்... நான் அந்தப் பக்கம், வரவே... மாட்டன். :D  :lol:

 

புலம்பெயர்ஸா கொக்கா
நாங்க இங்க வசதியா இருந்து பிள்ளைகளையும் வசதியா வளர விட்டு அங்கிருக்கும் பிள்ளைகள் போராட வேணும் மக்கள் ராணுவத்திற்கு எதிரா கலகம் செய்ய வேணும் என்டு கூவுவம். அதை அங்கிருப்பவர்கள் கேட்டு நடக்கவேணும். அத விட்டுட்டு நாட்டுக்கு வா என்றெல்லாம் எங்கள் அடி மடியில கை வைக்கப்படாது. 
  • கருத்துக்கள உறவுகள்

நாட்­டை­விட்டு வெளியே­றிய தமி­ழர்­களை அழைக்­க­வேண்­டிய பொறுப்பு அர­சுக்­குள்­ள­து - சுமந்­திரன்

 

 

அழைக்க வேண்டிய பொறுப்பு என்பதைவிட

அவர்கள் வருவதற்கான சூழலை  உருவாக்கவேண்டியது அரசின் பொறுப்பு என சொல்லியிருக்கலாம்....

 

நாட்­டை­விட்டு வெளியே­றிய தமி­ழர்­களை அழைக்­க­வேண்­டிய பொறுப்பு அர­சுக்­குள்­ள­து - சுமந்­திரன்

 

 

அழைக்க வேண்டிய பொறுப்பு என்பதைவிட

அவர்கள் வருவதற்கான சூழலை  உருவாக்கவேண்டியது அரசின் பொறுப்பு என சொல்லியிருக்கலாம்....

 

முள்ளி வாய்க்காலுக்கு பிறகு புலிப் பயங்கரவாதிகள் அழிக்கப்பட்டு அத்தகைய ஒரு சூழல் ஏற்கனவே உருவாக்கப்பட்டு  விட்டது  :D  :D  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளி வாய்க்காலுக்கு பிறகு புலிப் பயங்கரவாதிகள் அழிக்கப்பட்டு அத்தகைய ஒரு சூழல் ஏற்கனவே உருவாக்கப்பட்டு  விட்டது  :D  :D  :lol:

 

 

புலிகள் அழிக்கப்பட்டு 6 வருடம் முடிந்த பின்னரும்

அழைப்பு வருகின்றது என்றால்

புலிகள் அழிந்து விட்டார்கள்

ஆனால் பயங்கரவாதிகள் இன்னும் நாட்டில் அதிகாரநிலையில் வலுவாக உள்ளார்கள் என்று தானே அர்த்தம்....

  • கருத்துக்கள உறவுகள்

நாட்­டை­விட்டு வெளியே­றிய தமி­ழர்­களை அழைக்­க­வேண்­டிய பொறுப்பு அர­சுக்­குள்­ள­து - சுமந்­திரன்

 

 

அழைக்க வேண்டிய பொறுப்பு என்பதைவிட

அவர்கள் வருவதற்கான சூழலை  உருவாக்கவேண்டியது அரசின் பொறுப்பு என சொல்லியிருக்கலாம்....

 

 

இப்படி அழைத்ததில் உள்நோக்கம் உள்ளது. சிறீலங்காவில் தமிழர்கள் எனி பாதுகாப்பாக உரிமையோடு வாழலாம். அதற்கான நல்லிணக்கம்.. இந்த ஆட்சி மாற்றதில் ஏற்பட்டுள்ளது என்ற மறைமுகத் தொனி இந்த அழைப்பில் இருப்பதோடு.. சிறீலங்காவில் தமிழர்கள் வாழக்கூடிய நிலையே உள்ளது.. அங்கு இன அழிப்பு நடக்கவில்லை.. பயங்கரவாதம் இல்லாமல் செய்யப்பட்டுள்ளமையே நடந்துள்ளது என்பதைச் சொல்வது தான் இந்த அறிவிப்பின் நோக்கம்.

 

சம்பந்தர் ஏற்கனவே முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை.. பயங்கரவாதத்தை முடிவுறுத்திய நினைவாக அனுஷ்டிக்கக் கேட்டிருந்தார் என்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

 

சம்.. சும் பயங்கரவாதிகள்.. சிங்களப் பேரினாவதிகளை விடக் கொடியவர்கள். :icon_idea::(

புலம்பெயர்ந்த தமிழர்கள் வெளிநாட்டில் வசதியாக வாழ்கின்றனர். அவர்களது பிள்ளைகள் அந்தந்த நாட்டில் கல்வி பொருளாதாரம் மொழி கலாச்சாரம் என்று வேரூன்றி வருகின்றனர். 

 

இலங்கையில் பிறந்த புலம்பெயர்ந்த தமிழர்கள் என்னதான் வசதியாக வாழ்ந்தாலும் தமது வேர்களை மறந்துவிட முடியாது.

 

இலங்கையின் பொருளாதாரத்தை மேம்படுத்த மட்டுமே அவர்கள் அங்கு மீண்டும் அழைக்கப்படுகின்றனர்.

 

புலம்பெயர்ந்த தமிழர்கள் கௌரவத்துடன் மீண்டும் இலங்கையில் குடியேற வேண்டுமாயின் சிங்கள அரசாங்கம் தமிழருக்கான சம உரிமையை வழங்க வேண்டும். குறைந்தபட்சம் அரசியலமைப்பின் 13-வது திருத்தத்தையாவது முழுமையாக அமுல்படுத்துவதன் மூலம் தமிழ் மொழிக்கான கௌரவத்தையாவது கொடுக்க முன்வர வேண்டும். இதை விட்டு இரட்டை பிரஜா உரிமை போன்ற சில்லறைச் சலுகைகள் வழங்கப்படுவது எந்தப் பயனையும் தமிழர்களுக்கு தரப் போவதில்லை.

புலம்பெயர்ந்த தமிழர்கள் கௌரவத்துடன் மீண்டும் இலங்கையில் குடியேற வேண்டுமாயின் சிங்கள அரசாங்கம் தமிழருக்கான சம உரிமையை வழங்க வேண்டும். குறைந்தபட்சம் அரசியலமைப்பின் 13-வது திருத்தத்தையாவது முழுமையாக அமுல்படுத்துவதன் மூலம் தமிழ் மொழிக்கான கௌரவத்தையாவது கொடுக்க முன்வர வேண்டும். இதை விட்டு இரட்டை பிரஜா உரிமை போன்ற சில்லறைச் சலுகைகள் வழங்கப்படுவது எந்தப் பயனையும் தமிழர்களுக்கு தரப் போவதில்லை.

தமி­ழர்­களை அழைக்­க­வேண்­டிய பொறுப்பு அர­சுக்­குள்­ள­து -    சட்டப்புலி சுமந்­திரன்  :)

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் தமிழர் தாயகம் போகும்போது சிங்கள ஆட்சியாளர்கள் விடுகிற சொறிச்சேட்டைகளாலைவெளிநாட்டு அரசாங்கங்கள் தலையிட்டு விடுவிப்பதும், கண்டனம் தெரிவிப்பதும் அவர்களுக்கு  வெட்கக்கேடு. இப்படி ஒரு மாயையில சிக்க வைச்சால் எந்த நாடும் தலையிடாமல் வேண்டியதை செய்யலாம் என்ற ஒரு கணக்கும்,  அவர்களின் பணத்தை வரி என்றும், முதலீடு, வைப்பீடு என்றும்  சுரண்டலாம்.  போராட்டம், விசாரணை எல்லாம் அடிபட்டுப் போகும். இப்படி  எத்தனையோ இருக்கு. எவ்வளவு காலமாய் மிளகாய் அரைக்கிறான். சும்மாவா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.