Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிச் சட்டையுடன் திரிந்த காலம் சுதந்திரக் காற்றை சுவாசித்தோம்! முன்னாள் பெண் போராளியின் உள்ளக்குமுறல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

லைவரும் புலிகளும் அழிந்து விடார்கள் என்பது உண்மையானால் :o தமிழன் மைத்திரிக்கும் ரணிலுக்கும் மகிந்தவுக்கும் மாறி மாறி கழுவி கொண்டு சமரச அரசியல் செய்து பிழைக்க வேண்டியான்.

இது உண்மையும் கூட :(

கோசான் இந்த சமரச அரசியலால் நாம் இழந்தது தான் அதிகம். எமக்கு அமைந்த சந்தர்ப்பங்களை சம் சும் வீண்டித்து விட்டார்கள்.

  • Replies 64
  • Views 4k
  • Created
  • Last Reply

 

இரண்டு குட்டி விமானமாக இருந்தாலும் அதன் காரம் பெரிது .... 
ஆனையிறவு வெற்றிக்கு அப்பால் யாழ்ப்பாணம் நோக்கிய புலிகளின் வெற்றிகரமான நகர்வுகளை ஏனப்பு இந்தியா தடுத்தது ... அதற்கு என்ன காரணம் ... பயம் அல்லாது அதற்கு வேறு என்ன பெயர் .... கொஞ்சம் விளக்க முடியுமா ....
 
புலிகளை பார்த்து பயப்படா விட்டால் ஏன் அவர்கள்(இந்தியா ) நேரடியாக களத்தில் வந்து உதவி செய்தார்கள் கொத்து குண்டு போட்டார்கள் ... இதையும் பொய் என்று சொல்வீர்களா ? ஆயுத கப்பல்களை அழித்தார்கள் ... ஏன் ?
 
புலி எதிர்ப்பு கொள்கையில் உண்மைகள் தெரியவில்லையோ அல்லது .....
 
உலக நாடுகள் எங்களுக்கு எதிராக திரும்பவில்லை அல்ல ... எப்பவு மே  எதிராகத்தான் இருந்தார்கள் ...ஏதோ அவர்கள் செய்வது நியாயமான காரணம் என்ற மாதிரி உங்களின் கருத்து ... உண்மையான பயங்கரவாதத்தை செய்வது அவர்கள் ....சிரியாவில் என்னப்பு நடந்து கொண்டிருக்கின்றது ..... விளக்கம் தேவையோ ...
 
இங்க கொஞ்ச பேர் புலி எதிர்ப்பு ஒன்றுதான் அவர்களுக்கு தெரிந்த உலக அரசியலாக இருக்கின்றது ....மற்றும்படி ஒரு இழவும் இல்லை ....
 
இதுவரையில் ஒரு புத்தியான அரசியல் தெரிந்த புலி அல்லது மற்றவர்களை அர்ஜுன் சந்திக்கவில்லையாம் ..
அப்பாடா உங்கட அறிவு இருக்கே .... முடியலை ....வெறும் வெத்து வேட்டுதான் ... இன்னும் கொஞ்ச பேர் ... தங்களுக்கு தெரியும் என்று சொல்லிகொண்டே ..... சும்மா கதை தான் ..

 

 

புலிகளைப் பார்த்து ஏன் பயப்பட வேண்டும் என்று கொஞ்சம் விளக்க முடியுமா? அவர்கள் என்ன அணுகுண்டு வைத்திருந்தார்களா இல்லை இந்தியாவுக்கு படை எடுக்க கூடிய அளவு ராணுவம் வைத்திருந்தார்களா? 
2001/9/11 - இதன் பிறகு பயங்கரவாதம் எந்த மூலையில் இருந்தாலும் அதை முறியடிக்கவேண்டும் என்று முடிவெடுத்து விட்டார்கள். புலிகளுக்கு அதன் பின் ஒரு சந்தர்ப்பமும் வழங்கப்பட்டது. ஐ.ஆர்.ஏ போன்றவர்கள் வழங்கப்பட்ட சந்தர்ப்பத்தை முறையாக பாவித்தார்கள். புலிகள் கிடைத்த சந்தர்ப்பங்கள் அனைத்தையும் தவற விட்டார்கள்..பின் கடைந்தெடுத்த ஒரு இனவாதி ஜனாதிபதியாக வர‌ உதவினார்கள்.  பின் தமிழரை அவன் தயவில் விட்டு விட்டும் சென்றார்கள்.  வேற ஒன்றும் உருப்படியா செய்யவில்லை. 
 
இன்று இவ்வளவு அழிவுக்கு பின்னரும் கூட எமது போராட்டம் ஒரு பயங்கரவாத பிரச்சனையாக மட்டும் உலக அரங்கில் பார்க்கப்படுவதை தவிர நாம் அடைந்த நன்மை எதுவும் இல்லை. 
  • கருத்துக்கள உறவுகள்

2002 சமாதான முன்னெடுப்பு காலத்தில் பேச்சுவார்த்தைகளில் இந்தியத் தரப்பு பங்குபற்றாத போதும் ஒவ்வொரு தடவையும் இந்தியாவுக்கு விடயங்கள் நோர்வே இலங்கை அரசு மற்றும் தொடர்புபட்ட நாடுகளின் தூதுவர்களால் தெரிவிக்கப்பட்டுக்கொண்டிருந்தது. இதிலிருந்து இந்து சமுத்திர பிராந்தியத்தில் இலங்கை தொடர்பாக இந்தியாவின் வகிபாகம் தெளிவாகத் தெரிந்திருந்தது. ஆனால் பெரியவர் இந்தியாவை தான் பயங்காட்டிவிட்டதாகவே நினைத்தார். அது தீர்க்கதரிசனம் என்றால் மிகையாகாது. இப்போதும் அவ்வழியில் தமிழ்த் தேசிய விண்ணணியின் 'பபா கஜேந்திரன்' அந்தத் தீர்க்கதரிசனத்தை சுமந்து திரிகின்றார். இலங்கையின் பிரச்சினை தீர்வில் இந்தியாவை புறந்தள்ளி எந்தவொரு தீர்மானமும் "எவராலும் எடுக்கவும் முடியாது; கொடுக்கவும் முடியாது."

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு நேர்மையான கருத்தாளனாக ., மாற்று இயக்க போராளியாக இருந்து இருந்தால் மாற்று இயக்கங்கள் புலிகள் இயக்கத்துக்கு செய்ததை ஏன் மூடி மறைக்கிறீர்கள். ஏதோ மற்ற இயக்கங்கள் அச்சா பிள்ளையாக இருந்ததாகவும் புலிகள் தான் அவர்களை தாக்கியதாகவும் உங்களின் உப்புசப்பில்லாத கதை போகுது. -நுணா

 

நாட்டில் நடந்துதான் தெரியாது ,அரசியல் தெரியாது கடைசி நாங்கள் எழுதுவதையாவது விளங்குவார்கள் என்று பார்த்தால் அதுவும் விளங்குதில்லை .

எந்த சுவரில் போய் முட்டுவது - மேலே நான் எழுதிய விடயம் தோற்றுபோன போராளிகளின் மன ஆதங்கத்தை பற்றி அது கூட விளங்காமல் இயக்க சண்டைகள் பற்றி எழுதுகின்றீர்கள் .அதற்கு பச்சைகள் வேறு .முள்ளிவாய்காளுக்கு முதல் புலிகள் தோற்கவில்லை .

குறிப்பு -உண்மையாக சொல்லுகின்றேன் நான் சந்தித்த  புலிகளாகட்டும் அல்லது ஆதரவாளர்கள் ஆகட்டும் சற்று விளக்கமானாவர்களை சந்திப்பது அரிதிலும் அரிது .

அரசியல் தெரிந்த உங்களுக்கு களவிதிகளுக்கு அமைய ஏன் எழுத முடிவதில்லை. ஏதோ குறை உங்களுக்கு உள்ளதாக கருதுகிறேன்.

புளட்டில் இருந்த ஆட்களுக்கு அரசியல் தெரியுமோ??

  • கருத்துக்கள உறவுகள்

கடிக்கும்  எறும்பை கூட தலைவரிடம் கேட்டுத்தான் கொல்லுவார்கள் .

அரைவாசி தமிழன் நாட்டை விட்டு ஓடியது ஏன் என்று எல்லோருக்கும் தெரியும் .

உமாவும் அப்படித்தான். கட்டெறும்மை கேட்டுத்தானாம் கொன்றவர்.பிறகு அவருக்கு கட்டெறும்பு மொய்த்தது வேறு கதை. அரவாசிக்கு மேல் நாட்டை விட்டு ஓடியது பிரச்சனையை சாட்டி அசைலம் அடித்து தனது குடும்பத்தை மேம்படுத்த. ஏழைகள் தான் இயக்கத்தில் சேர்ந்து அடிபட்டார்கள்.

2002 சமாதான முன்னெடுப்பு காலத்தில் பேச்சுவார்த்தைகளில் இந்தியத் தரப்பு பங்குபற்றாத போதும் ஒவ்வொரு தடவையும் இந்தியாவுக்கு விடயங்கள் நோர்வே இலங்கை அரசு மற்றும் தொடர்புபட்ட நாடுகளின் தூதுவர்களால் தெரிவிக்கப்பட்டுக்கொண்டிருந்தது. இதிலிருந்து இந்து சமுத்திர பிராந்தியத்தில் இலங்கை தொடர்பாக இந்தியாவின் வகிபாகம் தெளிவாகத் தெரிந்திருந்தது. ஆனால் பெரியவர் இந்தியாவை தான் பயங்காட்டிவிட்டதாகவே நினைத்தார். அது தீர்க்கதரிசனம் என்றால் மிகையாகாது. இப்போதும் அவ்வழியில் தமிழ்த் தேசிய விண்ணணியின் 'பபா கஜேந்திரன்' அந்தத் தீர்க்கதரிசனத்தை சுமந்து திரிகின்றார். இலங்கையின் பிரச்சினை தீர்வில் இந்தியாவை புறந்தள்ளி எந்தவொரு தீர்மானமும் "எவராலும் எடுக்கவும் முடியாது; கொடுக்கவும் முடியாது."

பெரியவர் இந்தியாவை தந்தை நாடு என்று கூறிய மாவீரர் உரையை தாங்கள் கேட்கவில்லை போல. பபா கஜேந்திரன் என்றால் இரகசியமாக பேச்சுவார்த்தை நடாத்தும்(அதுவும் கட்சி உறுப்பினர்களுக்கு தெரியாமல்) சுமந்திரனுக்கு என்ன பெயர் வைக்கலாம்?

 

புலிகளைப் பார்த்து ஏன் பயப்பட வேண்டும் என்று கொஞ்சம் விளக்க முடியுமா? அவர்கள் என்ன அணுகுண்டு வைத்திருந்தார்களா இல்லை இந்தியாவுக்கு படை எடுக்க கூடிய அளவு ராணுவம் வைத்திருந்தார்களா? 
2001/9/11 - இதன் பிறகு பயங்கரவாதம் எந்த மூலையில் இருந்தாலும் அதை முறியடிக்கவேண்டும் என்று முடிவெடுத்து விட்டார்கள். புலிகளுக்கு அதன் பின் ஒரு சந்தர்ப்பமும் வழங்கப்பட்டது. ஐ.ஆர்.ஏ போன்றவர்கள் வழங்கப்பட்ட சந்தர்ப்பத்தை முறையாக பாவித்தார்கள். புலிகள் கிடைத்த சந்தர்ப்பங்கள் அனைத்தையும் தவற விட்டார்கள்..பின் கடைந்தெடுத்த ஒரு இனவாதி ஜனாதிபதியாக வர‌ உதவினார்கள்.  பின் தமிழரை அவன் தயவில் விட்டு விட்டும் சென்றார்கள்.  வேற ஒன்றும் உருப்படியா செய்யவில்லை. 
 
இன்று இவ்வளவு அழிவுக்கு பின்னரும் கூட எமது போராட்டம் ஒரு பயங்கரவாத பிரச்சனையாக மட்டும் உலக அரங்கில் பார்க்கப்படுவதை தவிர நாம் அடைந்த நன்மை எதுவும் இல்லை. 

 

இந்தியாவை  உசுப்பேத்த வேண்டிய தேவை புலிகளுக்கு இருக்கவில்லை ... ஆனால் ராஜீவின் மரணம் நிறைய சங்கிலி தொடர் பிரட்ச்சனை .... இதில் உண்மையான கொலையாளிகள் இன்னும் ஒழிந்து கொண்டுள்ளார்கள் ... ஆனால் புலிகளின் மீது மட்டும் பழியினை போட்டு விட்டு ..... ராஜீவின் கொலை என்பது உலக அரசியல் ... சர்வதேச அரசியல் புரிந்தால் இது விளங்கும் ....
 
எந்தவொரு நாடும் இலங்கைக்கு உதவி செய்யாவிட்டால் இன்றும் புலிகளை அவர்களால் வென்று இருக்க முடியாது ...அதுதான் உண்மை ....
 
பயங்கர வாத்த்திக்கு எதிரான போர் என்று புஷ் செய்த மொக்கு தனமான முடிவால் உண்மயான எங்கள் தேவை பயங்கரவாதம் ஆக்கப்பட்டது ....புலிகளை அழிக்க அவர்கள் வலிந்து வந்தார்கள்.. அவர்கள் ஒன்றும் சந்தர்ப்பம் வழங்க வில்லை ... சமாதான பேச்சு வார்த்தையில் தலைவர் தான் இந்தியாவிடம் சரணடைகிறேன் என்று ஒத்து கொண்டிருந்தாள் கூட இந்த இந்தியா புலிகளை சும்மா விட்டிருக்காது ...இதனை விளங்கி கொள்ள பெரிய அறிவு தேவை இல்லை ......
 
புலிகளை இன்னும் வளர விட்டிருந்தால் தனி நாடு சாத்தியப்படும் என்பது இந்தியாவுக்கு தெரியும் ஆனால் அதில் இந்தியாவுக்கு எப்பவும் சம்மதம் இல்லை ....ஆபத்தினை உணர்ந்ததால் அழிவுக்கு உடந்தையாக இருந்து அழித்தார்கள் .

உங்களுக்கு தலைவரின் குடும்ப விபரம் தெரியவில்லை. அவரின் தாய் மாமனுக்கும் பெயர் வேலுப்பிள்ளை, இவரும் மனைவியும் 2009 எறிகணைவீச்சில் பலியானார். இங்கு யாழில் ஒருவருக்கு இவர் பற்றிய விபரம் தெரியும். அந்த உறவின் பெயர் இப்போது ஞாபகத்தில் வரவில்லை. விடயம் தெரியாமல் குறியீடுகள் போடக்கூடாது.

மேலும் நீங்கள் முதலில் அந்த நபர் தலைவரின் சொந்த மாமா என குறிப்பிட்டீர்கள். சொந்த மாமா என்பதற்கும் மாமா முறை என்பதற்கும் வித்தியாசம் இருப்பதாக எண்ணுகிறேன்.

 

மீரா அக்கா நான் தலைவரின் குடும்பத்தை சேர்ந்தவன் அல்ல. ஆனால் தலைவரின் நெருங்கிய உறவினர்கள் சிலர் எனக்கு நல்ல நண்பர்களாக இருந்திருக்கிறார்கள்.
வேலுபிள்ளை தலைவரின் தாய் மாமனா அல்லது தந்தையா என்று நான் குறிப்பிட்டது Sarcasm.  :D
சொந்த மாமா என்றால் தாய்மாமன் என்றா பொருள் படும்? :o  எனக்கு தெரியாது. சொந்த மாமன் என்று நான் கருதியது திருமண பந்தத்தினால் இல்லாமல் மாமா முறையில் வரும் நெருங்கிய உறவினரை.  :lol:

உங்களுக்கு தலைவரின் குடும்ப விபரம் தெரியவில்லை. அவரின் தாய் மாமனுக்கும் பெயர் வேலுப்பிள்ளை, இவரும் மனைவியும் 2009 எறிகணைவீச்சில் பலியானார். இங்கு யாழில் ஒருவருக்கு இவர் பற்றிய விபரம் தெரியும். அந்த உறவின் பெயர் இப்போது ஞாபகத்தில் வரவில்லை. :o விடயம் தெரியாமல் குறியீடுகள் போடக்கூடாது.  :D 

மேலும் நீங்கள் முதலில் அந்த நபர் தலைவரின் சொந்த மாமா என குறிப்பிட்டீர்கள். சொந்த மாமா என்பதற்கும் மாமா முறை என்பதற்கும் வித்தியாசம் இருப்பதாக எண்ணுகிறேன்.

 

நீங்கள்  சொல்லுறதை  பார்த்தால் நீங்கள் தலைவரின் மருமகள் போலை இருக்கு.  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

தலைவரும் புலிகளும் அழிந்து விடார்கள் என்பது உண்மையானால் :o தமிழன் மைத்திரிக்கும் ரணிலுக்கும் மகிந்தவுக்கும் மாறி மாறி கழுவி கொண்டு சமரச அரசியல் செய்து பிழைக்க வேண்டியான்.

இது உண்மையும் கூட :(

 

உண்மை இதை ஏற்றுக்கொள்பவன் நான்..

ஆனால் எனக்கு இதில் ஒத்துவராத விடயம்

எதற்கு தமிழர்களிடம் ஒரு வேடமும்

சிங்களத்திடம் இன்னொரு வேடமும் என்பது தான்.. :(

கோசான் இந்த சமரச அரசியலால் நாம் இழந்தது தான் அதிகம். எமக்கு அமைந்த சந்தர்ப்பங்களை சம் சும் வீண்டித்து விட்டார்கள்.

 

சமரச அரசியலை மிகவும் சாதுரியமாக கையாண்டிருந்தால் இப்படியொரு நிலை வந்திருக்காது. 
நாமே நமது தலையில் மண்ணை அள்ளி கொட்டி போட்டு சம்பந்தன் சுமந்திரனை குற்றம் சுமத்துவது மிகவும் கேவலமானது.  :D

உண்மை இதை ஏற்றுக்கொள்பவன் நான்..

ஆனால் எனக்கு இதில் ஒத்துவராத விடயம்

எதற்கு தமிழர்களிடம் ஒரு வேடமும்

சிங்களத்திடம் இன்னொரு வேடமும் என்பது தான்.. :(

தமிழர்களிடம் ஒரு வேடம் தேர்தலில் வோட்டு வாங்க
சிங்களவரிடம் இன்னொரு வேடம் உயிர் பிழைக்க.  :D
அங்குள்ள நிலைமை அப்படி விசுகு ஐயா.   :o  நாங்கள் புலத்திலை இருந்து கொண்டு எதையும் 
சொல்லலாம் டைப் பண்ணலாம். அனால் அங்கை சிங்களவனுக்கு மத்தியிலை இருந்து கொண்டு அரசியல் செய்து பார்த்தால் தான் தெரியும்.  :(

சமரச அரசியலை மிகவும் சாதுரியமாக கையாண்டிருந்தால் இப்படியொரு நிலை வந்திருக்காது.

நாமே நமது தலையில் மண்ணை அள்ளி கொட்டி போட்டு சம்பந்தன் சுமந்திரனை குற்றம் சுமத்துவது மிகவும் கேவலமானது. :D

அது

  • கருத்துக்கள உறவுகள்

நான் கூற நினைத்த சகலதையும் டண்டு கூறிவிட்டார் விசுகு.

  • கருத்துக்கள உறவுகள்

 

தமிழர்களிடம் ஒரு வேடம் தேர்தலில் வோட்டு வாங்க
சிங்களவரிடம் இன்னொரு வேடம் உயிர் பிழைக்க.  :D
அங்குள்ள நிலைமை அப்படி விசுகு ஐயா.   :o  நாங்கள் புலத்திலை இருந்து கொண்டு எதையும் 
சொல்லலாம் டைப் பண்ணலாம். அனால் அங்கை சிங்களவனுக்கு மத்தியிலை இருந்து கொண்டு அரசியல் செய்து பார்த்தால் தான் தெரியும்.  :(

 

 

 

இதைத்தான் நானும் மேலே  எழுதினேன்...

 

இதன்படி ஒரு உண்மையை ஏற்றுக்கொள்கின்றீர்கள்

அதாவது தமிழர்கள் ஏமாற்றப்படுகிறார்கள்

தமிழர்களது முதுகில் குத்துகிறார்கள் என்பதை..

 

அப்படியாயின் தாயக மக்களின் இந்தநிலை பற்றி

எழுதவும் பேசவும் தட்டிக்கேட்கவும்

புலம் பெயர் மக்களுக்குத்தான் முழு உரிமையுண்டு

அதை ஏற்றுக்கொண்டால்

இங்கு நல்ல கருத்தாடல்களைச்செய்யமுடியும்......

இது தான் எனது நிலை

அதைத்தொடர்ந்து நான் செய்வேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழர்களிடம் ஒரு வேடம் தேர்தலில் வோட்டு வாங்க

சிங்களவரிடம் இன்னொரு வேடம் உயிர் பிழைக்க. :D

அங்குள்ள நிலைமை அப்படி விசுகு ஐயா. :o நாங்கள் புலத்திலை இருந்து கொண்டு எதையும்

சொல்லலாம் டைப் பண்ணலாம். அனால் அங்கை சிங்களவனுக்கு மத்தியிலை இருந்து கொண்டு அரசியல் செய்து பார்த்தால் தான் தெரியும். :(

சிலபேர், இதைத்தான் இராசந்திரம் என்று பீலா விடறாங்க .. என்ன கொடுமை சார் ..

 

தமிழர்களிடம் ஒரு வேடம் தேர்தலில் வோட்டு வாங்க
சிங்களவரிடம் இன்னொரு வேடம் உயிர் பிழைக்க.  :D
அங்குள்ள நிலைமை அப்படி விசுகு ஐயா.   :o  நாங்கள் புலத்திலை இருந்து கொண்டு எதையும் 
சொல்லலாம் டைப் பண்ணலாம். அனால் அங்கை சிங்களவனுக்கு மத்தியிலை இருந்து கொண்டு அரசியல் செய்து பார்த்தால் தான் தெரியும்.  :(

 

சிங்களவனுக்கு மத்தியில் நின்று வேலை செய்வதில் அப்படி என்ன இவர்களின் குடி மூழ்கிய விட்டது ...இல்லைதானே .. தந்தை செல்வா அவர்களின் காலம் அல்லது 2009 இற்கு முற்பட்ட காலம் என்றால் இதில் நியாயம் உள்ளது ஆனால் இப்ப அப்படி ஒரு அச்சுறுத்தலும் இல்லை ... 
 
சம் சும் ... எப்பவுமே கள்ள நரிகள் அதனை தான் செய்து கொண்டிருக்கின்றார்கள் ... இதுக்குள்ள கொஞ்ச பேர் ராஜதந்திரம் ... நாயதந்திரம் என்று அலட்டல்கள் வேற ....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.