Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை அரசின் விசாரணையில் நம்பிக்கையில்லை! - சுரேஸ் பிரேமச்சந்திரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
இலங்கை அரசின் விசாரணையில் நம்பிக்கையில்லை! - சுரேஸ் பிரேமச்சந்திரன்
[Thursday 2015-06-25 19:00]
காணாமற்போனவர்கள் பற்றிய தகவல்களை கண்டறிய சர்வதேச விசாரணையே தேவை. இலங்கை அரசாங்கம் மேற்கொள்ளும் விசாரணையில் எமக்கு நம்பிக்கையும் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்தார். யாழ்ப்பாணததில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறியதாவது,

காணாமற்போனவர்கள் பற்றிய தகவல்களை கண்டறிய சர்வதேச விசாரணையே தேவை. இலங்கை அரசாங்கம் மேற்கொள்ளும் விசாரணையில் எமக்கு நம்பிக்கையும் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்தார். யாழ்ப்பாணததில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறியதாவது,

  

'தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கட்சி தலைவர்கள் நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து பேசிய போது, காணாமல் போனவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக நம்பப்படும் இரகசிய முகாம்கள் பற்றி பேசியுள்ளனர். காணாமல் போனவர்கள் தொடர்பான குழுவிடம் காணாமல் போனவர்கள் ஏறத்தாழ 20 ஆயிரம் பேர் என பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆனால் அவர்களுக்கு என்ன நடந்தது என்று முன்னைய அரசாங்கமோ தற்போதைய அரசாங்கமோ எந்த பதிலும் சொல்லவில்லை. காணாமல் போனவர்கள் இன்னமும் மறைத்து வைக்கப்பட்டுள்ளனரா இல்லை கொல்லப்பட்டு விட்டனரா என்பது கூட இன்னமும் வெளிப்படுத்தப்படவில்லை. காணாமல் போனவர்கள் பற்றி முறைப்பாடு செய்தவர்கள் பல சாட்சியங்களை முன்வைத்து இருந்தார்கள். எத்தனையாம் திகதி எந்த இடத்தில் எந்த இராணுவத்தின் சுற்றி வளைப்பில் காணாமல் போனார்கள் எந்த விதத்தில் கடத்தப்பட்டார்கள் என்ற விடயமும் இராணுவத்திடம் எத்தனையாம் திகதி என்ன இடத்தில் கையளித்தோம் போன்ற பல்வேறு தரப்பட்ட சாட்சியங்கள் தரவுகளை அவர்கள் கொடுத்து இருந்தார்கள்.

இந்த தரவுகள் சாட்சியங்கள் அவர்களை கண்டுபிடிக்க போதுமானதாக இருக்கின்ற போதிலும் இன்று வரை அவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை கண்டுபிடிப்பது தொடர்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. திருகோணமலையிலுள்ள கடற்படை முகாமில் கோத்தா முகாம் எனும் முகாம் இயங்கி வந்தது எனவும், அங்கு 700 க்கும் மேற்பட்டவர்கள் தடுத்து வைக்கப்பட்டு இருந்ததுடன் 35 குடும்பங்களும் சிறுசிறு குடும்பங்களாக தடுத்து வைக்கப்பட்டு இருந்தார்கள் என்றும் அவர்களுக்கு என்ன நடந்தது என்றும் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பி இருந்தேன்.

அதற்கு அவ்வாறான முகாம் தற்போது இல்லை என்று சொல்லப்பட்டதே தவிர, முன்னர் அது இருந்ததா? இல்லையா? இருந்து இருந்தால் அந்த முகாமில் எவ்வளவு பேர் இருந்தார்கள், தற்போது அவர்கள் எங்கே போன்ற விடயங்களை இந்த அரசாங்கம் சொல்ல முற்படவில்லை.

தற்போது பார்த்தால் கடற்படையினரால் கொழும்பில் வைத்து 5 மாணவர்களும் வத்தளை, ஹம்பகா போன்ற பகுதிகளிலுமாக மொத்தம் 11 மாணவர்கள் கடத்தப்பட்டதாகவும், அவர்கள் ஒவ்வொருவரிடமும் கோடிக்கணக்கான பணம் கப்பமாக கோரப்பட்டதாகவும், மாணவர்களை கடத்தியவர்கள் முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னகொடவின் நேரடி கட்டுப்பாட்டில் இருந்தவர்கள் என்றும் அவர்கள் தான் அந்த கடத்தலுடன் சம்பந்தப்பட்டவர்கள் என்றும் புலனாய்வு பிரிவினர் கண்டறிந்து நீதிமன்றின் ஊடாக வெளிப்படுத்தியுள்ளனர்.

திருகோணமலையில் மாத்திரம் அல்ல கொழும்பு உட்பட பிற பிரதேசங்களிலுள்ள கடற்படை தளங்களிலும் கடத்தி செல்லப்பட்டவர்கள் அங்கு தடுத்து வைக்கப்பட்டு, கப்பம் அறவிட்டு இல்லாதுவிடின் அவர்கள் கொல்லப்பட்டார்கள் என தெரிகின்றது. திருகோணமலையில் தான் கோத்தா முகாம் எனும் முகாம் இயங்கி உள்ளது. அங்கு தடுத்து வைக்கப்பட்டு இருந்தவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபஷேவை விசாரணை செய்தால் தெரியவரும் என்பது எமது அசைக்க முடியாத நம்பிக்கை.

அந்த முகாமுக்கு கோத்தா முகாம் என பெயர் உள்ளதன் அடிப்படையில் முன்னாள் பாதுகாப்பு செயலாளருக்கும் அதற்கும் என்ன தொடர்பு என்பது அலசி ஆராயப்பட வேண்டும். ஆனால் அது தொடர்பில் எந்த விசாரணையையும் இந்த அரசாங்கம் மேற்கொள்ளாது. முன்னைய அரசாங்கத்தை விட கூடுதலாக எல்லாவற்றையும் மூடி மறைக்க இந்த அரசாங்கம் முயல்கின்றது.

முன்னைய ஆட்சி காலத்தில் கைது செய்யப்பட்டவர்கள், சுற்றி வளைப்பின் போது அழைத்து செல்லப்பட்டவர்கள், இராணுவத்திடம் கையளிக்கப்பட்டவர்கள் என பலர் காணாமல் போயுள்ளனர். அது தொடர்பில் முழுமையான விசாரணை முன்னெடுக்கப்பட்டு அவர்களுக்கு என்ன நடந்தது? அவர்கள் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளனரா? கொல்லப்பட்டு விட்டனரா? போன்ற தகவல்கள் வெளிப்படுத்தப்பட வேண்டும்.

கொல்லப்பட்டு விட்டனர் என்றால் அது குற்றம். மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றன என்பதனை ஏற்றுக்கொண்டதாகி விடும். அதனை இந்த அரசாங்கமும் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. அதனை மூடி மறைக்க இந்த அரசாங்கம் முயல்கின்றது. இதனை கண்டறிய சர்வதேச விசாரணையே தேவை. காணமல் போனவர்கள் என்ன ஆனார்கள் அவர்கள் காணாமல் போனமைக்கான அடிப்படை காரணம் என்ன? அதில் எவருக்கு சம்பந்தம் இருக்கிறது? என்பதனை சர்வதேச விசாரணை மூலமே கண்டறியலாம். இலங்கை அரசாங்கத்தின் உள்ளக விசாரணைகள் மூலம் இவற்றை கண்டறிய முடியாது. உள்ளக விசாரணைகள் மூலம் சம்பந்தப்பட்டவர்கள் பாதுகாப்பட்டு விடுவார்கள்' என்றார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=134809&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் உங்க கட்சி சம் சும் நம்புதே. அதை என்ன செய்யப் போறீங்க. முதலில் உங்கள் கட்சிக்குள் ஒரு தெளிவை பெறுங்கள். பின் அதனை உலகின் முன் வலியுறுத்துங்கள். அப்ப தான் உலகம் உங்களுக்கு உதவும். உங்கள் கட்சிக்கு ஆயிரம் நிலைப்பாடுகளோடு உலகத்திடம் போனால்.. உலகம் சிங்களவனிடம் தான் போகும். உங்கள் கட்சியின் இந்த இரண்டும் கெட்டாம்.. நிலைப்பாடு தான் எம் மக்களுக்கான சர்வதேச நீதியை தள்ளிப்போடுது. உங்களின் அதே குழப்பநிலையை சும் இப்போது புலம்பெயர் சில அடிவருடிகளை பயன்படுத்தி புகலிடத்திலும் செயற்படுத்த நினைக்கிறார். ஆனால் அது வேலைக்காகாது. காரணம் புலம்பெயர் இளைய.. குறிப்பாக மாணவ சமூகம் எமது மக்களுக்கான சர்வதேச நீதி என்பதில் தெளிவாக உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

இதை நாங்க சொன்னால்

புலவால்கள்

புலம் பெயர் வியாபாரிகள் என்கிறார்கள்..

 

அதுசரி

நீங்க தானே கூட்டமைப்பின் பேச்சாளர்

அது தனிப்பட்ட அறிக்கை என்று அடத்த அறிக்கை வராது தானே..:(

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை அரசு மீதான நம்பிக்கையீனத்தை வெளிப்படுத்தும் முகமாக அடுத்த இலங்கை பாராளுமன்றத் தேர்தலில் நீங்களோ சர்வேசோ போட்டியிடக் கூடாது. செய்வீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை அரசு மீதான நம்பிக்கையீனத்தை வெளிப்படுத்தும் முகமாக அடுத்த இலங்கை பாராளுமன்றத் தேர்தலில் நீங்களோ சர்வேசோ போட்டியிடக் கூடாது. செய்வீர்களா?

ஏன் பிரதமரும் சனாதிபதியும் தங்களை ஏமாற்றி விட்டனர் என்பதை வெளிப்படுத்தும் முகமாக சம் சும் தேர்தலில் போட்டியிடக் கூடாது. கோசான் நீங்கள் இவர்களை செய்ய சொல்வீர்களா? 

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் பிரதமரும் சனாதிபதியும் தங்களை ஏமாற்றி விட்டனர் என்பதை வெளிப்படுத்தும் முகமாக சம் சும் தேர்தலில் போட்டியிடக் கூடாது. கோசான் நீங்கள் இவர்களை செய்ய சொல்வீர்களா? 

சம்பந்தர் ஐயா மிகத்தளிவாக குறிப்பிட்டுள்ளார்

சுதந்திரக்கட்சியிலுள்ள ஒரு சிலதுகளே ஏமாற்றுவதாகவும்

குறுக்கே நிற்பதாகவும்..

 

மைத்திரியும் ரணிலும் அரிச்சந்திரனின் பரம்பரையில் வந்தவர்கள்

அவர்களாவது மீறுவதாகவது..

  • கருத்துக்கள உறவுகள்

சம், சும் ஏமாத்திடாங்கோ என்று புலம்பவில்லை. அப்படிச்   கூறியது மாவை.அத்துடன் இலங்கை அரசு மீது நம்பிக்கை இல்லை என்றும் சொல்லவில்லை.

இலங்கை அரசுடன் சேர்ந்து செயல்பட்டே ஏதாவது செய்ய முடியும் என்பது அவர்களின் நிலைப்பாடு.

அதை அவர்கள் தெளிவாய் சொல்லி நடைமுறையிலும் காட்டுகிறார்கள் ( சுதந்திர தின பங்கேற்பு).

ஆனால் சுரேசுக்கு கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை. இலங்கை அரசின் மீது நம்பிக்கை இல்லை என்றால் பாராளுமன்றம் போய் என்னத்த வெட்டிப் புடுங்கப் போறார்?

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

ஓ மறந்தே போச்சு, ரணிலிட்ட வாங்கலாமில்ல - மக்களுக்காக துட்டு ?

  • கருத்துக்கள உறவுகள்

சம், சும் ஏமாத்திடாங்கோ என்று புலம்பவில்லை. அப்படிச்   கூறியது மாவை.அத்துடன் இலங்கை அரசு மீது நம்பிக்கை இல்லை என்றும் சொல்லவில்லை.

இலங்கை அரசுடன் சேர்ந்து செயல்பட்டே ஏதாவது செய்ய முடியும் என்பது அவர்களின் நிலைப்பாடு.

அதை அவர்கள் தெளிவாய் சொல்லி நடைமுறையிலும் காட்டுகிறார்கள் ( சுதந்திர தின பங்கேற்பு).

ஆனால் சுரேசுக்கு கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை. இலங்கை அரசின் மீது நம்பிக்கை இல்லை என்றால் பாராளுமன்றம் போய் என்னத்த வெட்டிப் புடுங்கப் போறார்?

மாவை சம் மின் அனுமதி இல்லாமா இப்படி சொல்லியிருப்பார். ஏமாற்றிய அரசாங்கத்துடன் இணைந்து எப்படி ஏதாவது செய்ய முடியும் ? இவ்வளவு காலமும் இவை என்னத்தை வெட்டி புடுங்கினம் ? 

 

சிவி யே சொல்லீட்டார் சுரேஷ் மாதிரி வெளிப்படையாக இருங்கோ என்று.

மற்றது ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கு எப்படி அவர்களது திட்டங்களுக்கு  பணம் ஒரு அரசால் வழங்கப்படும் என்பது கூட உங்களுக்கு தெரியவில்லை.

 

Edited by MEERA

  • கருத்துக்கள உறவுகள்

இதைப் பற்றி சும்மிடம் கேட்டால்.. இதெல்லாம் உட்கட்சி சன நாய் அகம் நல்லா இருக்கு என்பதைக் காட்டுது என்பார். அதுக்காத்தானே தமிழ் மக்கள் 1948 இல் இருந்து போராடி வருகினம். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதானே? மாவை மூச்சுவிடவும் வன்னியிடம் அனுமதி பெற்றுத்தான் செய்யும் ஒரு காலம் இருந்தது. இப்போ தான் சார் கட்சி தலைவர் சொல்லுவதுக்கு  எதிராகவும் அவரால் கருத்துச் சொல்ல முடிகிறது. எங்கே உண்மையிலேயே நெற்றியில் பொட்டு வைத்து விடுவார்களோ என்ற பயம் இன்றி.

 

சீவி சுரேசு ஒன்றும் உத்தமர் எண்டு சொல்லவில்லை. அவர் ஒத்துக்கொண்டது போல் எந்னையோரையும் ஒத்துகச் சொன்னார். அவ்வளவே.

தவிரவும் இது சாதாரணமாக எம்பிகளுக்கு போகும் வளர்சி நிதியல்ல. அதுக்கு மேலதிகமாய் திறைசேரி குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் கொடுத்தது.

அரசில் நம்பிக்கை இல்லை எனச் சொல்கியபடியே சுரேசு வாங்கிக் கொண்டது :)

தவிரவும் முன்பு இதில் சம் சும் மை சன்பந்தமில்லாமல் இழுத்து இங்கே புழுதி வாரியிறைக்கப் பட்ட போது கும்பலில் கோவிந்தா போட்டீர்கள்.

இப்போ இதில் சம் சும் சம்பந்த படவில்லை, சுரேசு மாட்டிக்கொண்டார் என்றதும் சுருதியை மாத்துறீங்க.

கேட்டா நான் சுரேசின் ஆளில்லை என்று காமெடி பண்ணுவீர்கள் :)

  • கருத்துக்கள உறவுகள்

இவரு இலங்கைப் பாராளுமன்றத்திலை மட்டும் நம்பிக்கை வச்சிருக்கிறாராக்கும். 

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதானே? மாவை மூச்சுவிடவும் வன்னியிடம் அனுமதி பெற்றுத்தான் செய்யும் ஒரு காலம் இருந்தது. இப்போ தான் சார் கட்சி தலைவர் சொல்லுவதுக்கு  எதிராகவும் அவரால் கருத்துச் சொல்ல முடிகிறது. எங்கே உண்மையிலேயே நெற்றியில் பொட்டு வைத்து விடுவார்களோ என்ற பயம் இன்றி.

 

சீவி சுரேசு ஒன்றும் உத்தமர் எண்டு சொல்லவில்லை. அவர் ஒத்துக்கொண்டது போல் எந்னையோரையும் ஒத்துகச் சொன்னார். அவ்வளவே.

தவிரவும் இது சாதாரணமாக எம்பிகளுக்கு போகும் வளர்சி நிதியல்ல. அதுக்கு மேலதிகமாய் திறைசேரி குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் கொடுத்தது.

அரசில் நம்பிக்கை இல்லை எனச் சொல்கியபடியே சுரேசு வாங்கிக் கொண்டது :)

தவிரவும் முன்பு இதில் சம் சும் மை சன்பந்தமில்லாமல் இழுத்து இங்கே புழுதி வாரியிறைக்கப் பட்ட போது கும்பலில் கோவிந்தா போட்டீர்கள்.

இப்போ இதில் சம் சும் சம்பந்த படவில்லை, சுரேசு மாட்டிக்கொண்டார் என்றதும் சுருதியை மாத்துறீங்க.

கேட்டா நான் சுரேசின் ஆளில்லை என்று காமெடி பண்ணுவீர்கள் :)

உங்கட கதையை பார்த்தால் சுரேஷ் வாங்கி தன்ர வங்கியில் போட்டது மாதிரி இருக்கிறது. முதலில் ஒரு MP க்கு நிதி எப்படி வழங்கப்படும் என்று அறிய முயலுங்கள்.

இலங்கை அரசின் விசாரணையில் நம்பிக்கை இல்லை - சுரேஷ் சொன்னது இதுதான். 

இவரு இலங்கைப் பாராளுமன்றத்திலை மட்டும் நம்பிக்கை வச்சிருக்கிறாராக்கும். 

காலத்தை ஓட்டத்தானே வேணும்... 

 

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை சரியான பாதையில் பயணிக்கிறது: அப்துல் கலாம்

 

இலங்கை அரசின் விசாரணையில் நம்பிக்கையில்லை! - சுரேஸ் பிரேமச்சந்திரன்

 

இருவரும் சொல்லிவைச்சு அறிக்கை விடுயினமோ?புத்தன்

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவர் மண்டைகாய்.

இன்னொருவர் மண்டையன் குழுத்தலைவர்.

அவரவர் தரத்துக்கு அவரவர் அறிக்கை இருக்குது.

அரசின் விசாரணையில் எவருக்கும் நம்பிக்கை இல்லை என்றுதான் நினைக்கின்றேன் .

அரசியல் தீர்வில் ஒரு மாற்றம் தெரிகின்றது அதற்குதான் எல்லோருமாக சேர்ந்து முயற்சிக்கவேண்டும் என்று நம்புகின்றேன் .அதை விட வேறு தெரிவும் இல்லை .

நாட்டிலிருந்தோ அல்லது புலம்பெயர்ந்தோ வாயால் வடை சுடுபவர்களை கண்டும் காணாமல் போக வேண்டியதுதான் .

இப்பவும் தேசிய கொடிபிடிக்க நினைக்கின்ற ************எல்லாம் இருக்கினம் . 

Edited by nunavilan

  • கருத்துக்கள உறவுகள்
 

 

அரசின் விசாரணையில் எவருக்கும் நம்பிக்கை இல்லை என்றுதான் நினைக்கின்றேன் .

அரசியல் தீர்வில் ஒரு மாற்றம் தெரிகின்றது அதற்குதான் எல்லோருமாக சேர்ந்து முயற்சிக்கவேண்டும் என்று நம்புகின்றேன் .அதை விட வேறு தெரிவும் இல்லை .

நாட்டிலிருந்தோ அல்லது புலம்பெயர்ந்தோ வாயால் வடை சுடுபவர்களை கண்டும் காணாமல் போக வேண்டியதுதான் .

இப்பவும் தேசிய கொடிபிடிக்க நினைக்கின்ற ************* எல்லாம் இருக்கினம் . 

 

 கோசான் உங்கட கருத்து யாது?

Edited by nunavilan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.