Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கில் கூட்டமைப்புக்கு எதிராக புதிய முத்தரப்புக் கூட்டணி?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
வடக்கில் கூட்டமைப்புக்கு எதிராக புதிய முத்தரப்புக் கூட்டணி?
[Wednesday 2015-07-08 07:00]
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் புறக்கணிக்கப்பட்ட கட்சிகளும் தனிநபர்களும் இணைந்து முத்தரப்பு கூட்டணி ஒன்றை அமைத்து நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான பேச்சுக்களை முன்னெடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வடமாகாணத்தில் இந்த புதிய கூட்டணி போட்டியிடவுள்ளதாக தெரியவருகின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் புறக்கணிக்கப்பட்ட கட்சிகளும் தனிநபர்களும் இணைந்து முத்தரப்பு கூட்டணி ஒன்றை அமைத்து நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான பேச்சுக்களை முன்னெடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வடமாகாணத்தில் இந்த புதிய கூட்டணி போட்டியிடவுள்ளதாக தெரியவருகின்றது.

  

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஜனநாயக போராளிகள் கட்சி ஆகிய கட்சிகளுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் வேட்பு மனு வழங்காமல் விடப்பட்ட உறுப்பினரையும் இணைத்துக் கொண்டே இந்த முத்தரப்பு கூட்டணி அமைக்கப்படவுள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்ப்பில் நாடாளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாணத்தில் போட்டியிடுவதற்காக விண்ணப்பித்திருந்தும் வேட்பு மனு கிடைக்காத வடமாகாண சபை உறுப்பினர் ஒருவருடனேயே இந்த பேச்சு நடத்தப்படுவதாகவும் தெரியவருகின்றது.

அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடவிருக்கின்ற வேட்பாளர்களின் விவரங்களை கூட்டமைப்பு வெளியிடாத நிலையிலேயே இந்த பேச்சு முன்னெடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன.

http://www.seithy.com/breifNews.php?newsID=135515&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பின் தோல்வி  இது......

நல்லதல்ல 

ஆனால் தவிர்க்கமுடியாதது...

  • கருத்துக்கள உறவுகள்

ஆர் அது சிவாஜி லிங்கம்தானே? ?

இந்த கூட்டணி அமைந்தால் அதுக்கு மக்களால் தூக்கி எறியப்பட்டோர் முண்ணணி என்று பெயர் வைக்கலாம்.

இந்த பிஸ்கோத்துகளுடன் சேர்ந்தால் கஜேந்திரகுமாருக்கு சும்மா விழுற வாக்கும் விழாது.

  • கருத்துக்கள உறவுகள்

கோசான் அண்ணன் நல்ல கனவுலகில் மிதந்து கொண்டிருக்கிறார். 50,000 மாவீரர்களை.. 15,000 போராளிகளை... மாண்ட பல இலட்சம் மக்களை.. இழந்த உரிமையை.. மண்ணை..இதயங்களில் சுமக்கும் மக்கள்.. (சிங்களவன் தங்கட இராணுவத்தைக் காட்டிக்கொடுக்க மாட்டம் என்றாங்கள்.. எங்கடையள் எங்கட போராளிகளுக்கு முக்கியமளிக்க.. வாக்களிக்க இடம் தரமாட்டினமாம். இதில் இனம்.. ஒற்றுமை.. சுயநிர்ணயம் என்று வெட்டிப் பேச்சு மட்டும்..)

சொந்தப் பிள்ளைகளை பத்திரமாக.. வெளிநாட்டுக்கு அனுப்பிவிட்டு சிங்கக் கொடி தூக்கும்.. சிங்கள சுதந்திர தினம் கொண்டாடும்....ஆக்களுக்கும்.. சொந்த மக்களை இன்றும் சித்திரவதை முகாம் அமைத்து கொன்று கொண்டிருக்கும் புளொட் போன்ற அமைப்புக்களுக்கும் வாக்குப் போடுவினம் என்று எனியும் கருதவியலாது.

தேசிய தலைமை தமிழ் மக்களின் வாக்குச் சிதறிடிக்கப்படக் கூடாது என்று உருவாக்கிய தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்பது இன்று ஒட்டுக்குழு கூடாரமாக 1987 இந்திய படைகால வரதராஜப் பெருமாள் அணியாக மாறியுள்ள நிலையில்.. மக்கள் யாருக்கு வாக்களிப்பதன் மூலம்.. மீண்டும் ஒற்றுமையும் தங்கள் குரலும் ஓங்கி ஒலிக்க முடியும் என்று தான் சிந்திப்பார்களே தவிர.. தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற அந்த அடையாளத்துக்குள் பதுங்கி இருக்கும் குள்ள நரிகளை மக்கள் தொடர்ந்து மதித்து வாக்களிப்பார்கள் என்று நினைப்பது தவறு.

மாற்றம் ஒன்றுக்கான காலத்தை தற்போதைய கூட்டமைப்பு சம் சும் கும்பலும் இதர சில ஒட்டுக்குழு ஆக்களும் உருவாக்கி வருகின்றனர். மாவையும் இந்த மா பிசைவில் இப்ப இணைந்து கொண்டு சீரழியப் போகிறார்.

Edited by nedukkalapoovan
மேலதிக தகவல் சேர்க்க

நல்ல விடயம் .

கீரைக்கடைக்கும் எதிர்கடை வேண்டும் .கூட்டமைப்பு தான் தோன்றிதனமாக நடக்காமல் இருக்கவும் கூட்டமைப்பு பிழை விட்டால் அதை சுட்டிக்காட்டவும் ஒரு அமைப்பு நிட்சயம்  தேவை தான் ஆனால் அது உள்ளதையும் கெடுத்து குட்டி சுவராக ஆக்கும் அமைப்பாக இருக்க கூடாது .

 

தற்போதைய நிலையில் தமிழ் தேசியக்கூட்டமைப்பிறகு ஒரு எதிர்க்கடை தேவையாகின்றது. இவ்வாறாக ஒரு எதிர்க்கடை அமையாவிடத்து வருகின்ற தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கூட ஆட்டங்கண்டு வெறும் தமிழரசுக் கட்சியாவதற்கான சந்தர்ப்பங்கள் அதிகமாக இருக்கிறது.

 

தற்போதைய நிலையில் பத்திரிகை பலம் மற்றும் தமிழீழ விடுதலைப்புலிகளின் ஒத்துழைப்புடன் அமைக்கப்பட்ட கூட்டணி போன்ற காரணிகளால் எதிர்க்கூட்டணியினால் தமிழ் தேசியக் கூட்டமைப்பை தோற்கடிக்க முடியாது என்றாலும் அவர்கள் ஒரு ஆசனத்தையாவது பெறுமிடத்து அது தமிழ் தேசியக் கூட்டமம்பபு தனது நிகழ்ச்சிநிரலை மீளாய்வு செய்வதற்கான வாயப்பாக அமையும்.

 

எனவே புதிய கூட்டணி அமைவதும் அந்தக் கூட்டணி பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தைப் பெறுவதும் நல்லதாகவே படுகிறது

எனவே புதிய கூட்டணி அமைவதும் அந்தக் கூட்டணி பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தைப் பெறுவதும் நல்லதாகவே படுகிறது

மூன்று தரப்பென்ன முப்பது தரப்பாகவும் இருக்கலாம். யார் வேண்டுமென்றாலும் தேர்தலில் நிற்கட்டும் - அதுதான் ஜனநாயகம். கிழக்கிலங்கையில் பிரிந்து நிற்பது எமக்கு பாதகமானது. ஆனால் வடக்கில் பெரிதாக பிரச்சனை வராது. ஆனால் யார் வென்றாலும், அவர்கள் கட்சிகளிற்கு அப்பால் எமது மக்களிற்காக ஒன்றிணைந்து எமது மக்களிற்கான தீர்வுக்காக போராட வேண்டும். இங்கு டக்லசும் இணைய வேண்டும் என்பதே எனது அவா.

அவரவர் தனித்தோ அல்லது கூட்டணியோ ...ஆனால் இறுதிவரை சிங்கள கட்சிகள் மாதிரி தமிழ் மக்களுக்காக ஒன்றாக நிற்க வேண்டும் ..மற்றது சம்பந்தன் சுமந்திரன் அவர்களின் சர்வதிகார அரசியலுக்கு ஒரு முற்று புள்ளி வைத்தாகவேண்டும் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மூன்று தரப்பென்ன முப்பது தரப்பாகவும் இருக்கலாம். யார் வேண்டுமென்றாலும் தேர்தலில் நிற்கட்டும் - அதுதான் ஜனநாயகம். கிழக்கிலங்கையில் பிரிந்து நிற்பது எமக்கு பாதகமானது. ஆனால் வடக்கில் பெரிதாக பிரச்சனை வராது. ஆனால் யார் வென்றாலும், அவர்கள் கட்சிகளிற்கு அப்பால் எமது மக்களிற்காக ஒன்றிணைந்து எமது மக்களிற்கான தீர்வுக்காக போராட வேண்டும். இங்கு டக்லசும் இணைய வேண்டும் என்பதே எனது அவா.

வடக்கிலும் ஒன்றுமை தேவை..ஏற்கவே 1- 2-3 சீட் டக்லஸ்க்கு கொடுக்கிறோம் , இப்ப விஜயகலா மேடம் ...இதுக்கு மேலே  சம் - சுன் -மாவை கோஸ்டியின் அடாவடிக்காக இன்னுமொரு பிளவு வருவது காலத்தின் கோலம். :(

வடக்கிலும் ஒன்றுமை தேவை..ஏற்கவே 1- 2-3 சீட் டக்லஸ்க்கு கொடுக்கிறோம் , இப்ப விஜயகலா மேடம் ...இதுக்கு மேலே  சம் - சுன் -மாவை கோஸ்டியின் அடாவடிக்காக இன்னுமொரு பிளவு வருவது காலத்தின் கோலம். :(

யார் வேணுமென்டாலும் வரட்டுமே. மக்கள்தானே தெரிகிறார்கள் - நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள். மக்கள்தான் டக்லஸையும் தெரிகிறார்கள் விஜயகலாவையும் தெரிகிறார்கள் - நானோ நீங்களோ இல்லை. பழைய ஆயுத மிரட்டல் இப்ப இல்லை. மக்கள் சுயமாக சிந்திப்பதில் எங்களை விட கெட்டிக்காரர்கள். அவர்கள் தெரிவு எங்கள் வழி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யார் வேணுமென்டாலும் வரட்டுமே. மக்கள்தானே தெரிகிறார்கள் - நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள். மக்கள்தான் டக்லஸையும் தெரிகிறார்கள் விஜயகலாவையும் தெரிகிறார்கள் - நானோ நீங்களோ இல்லை. பழைய ஆயுத மிரட்டல் இப்ப இல்லை. மக்கள் சுயமாக சிந்திப்பதில் எங்களை விட கெட்டிக்காரர்கள். அவர்கள் தெரிவு எங்கள் வழி.

இங்கே எழுதுகிற , வாசிக்கிற ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விரும்பமும் எதிர்பார்ப்பும் இருக்கும் . சிலருக்கு அதற்க்கு வெகுமதியும் கிடைக்கும் ஏனையோருக்கு தகவல்களை பகிர்ந்து கொண்ட திருப்பிதான். அதைவிட்டு விட்டு நான் ஒரு ஞானி, மற்றவர்கள் இப்பவும் ஞானசூனியங்கள் என்பதுபோல பீலா விடவேண்டாம் . 

நீங்களே முதலாவது பந்தியில் சொல்லுகிறீர்கள் கிழக்கில் பிரிந்தால் பாதகம் ஆனால் வடக்கில் இல்லை என்று . கிழக்கிலும் மக்கள்தானே இருக்கிறார்கள் என்று கவலைபடாமல் இருக்க வேண்டியதுதானே. அவர்களுக்கு சம்பந்தனை பிடிக்கவில்லை என்றும்  இருக்கலாம்தானே -அவருக்கு கிடைக்காமல் விட்டால் . 

ஏன் அண்ணே இப்படி ? 

 

 

நீங்களே முதலாவது பந்தியில் சொல்லுகிறீர்கள் கிழக்கில் பிரிந்தால் பாதகம் ஆனால் வடக்கில் இல்லை என்று . கிழக்கிலும் மக்கள்தானே இருக்கிறார்கள் என்று கவலைபடாமல் இருக்க வேண்டியதுதானே. அவர்களுக்கு சம்பந்தனை பிடிக்கவில்லை என்றும்  இருக்கலாம்தானே -அவருக்கு கிடைக்காமல் விட்டால் . 

ஏன் அண்ணே இப்படி ? 

 

தப்பான கருத்துத்தான்.

 

என்ன செய்வது கிழக்கிலங்கையின் இனப்பரம்பல் இப்படி எழுத வைக்குது. நானும் தமிழன்தானே. எனக்கும் எமது மக்களில் ஆசை இருக்கும்தானே.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தப்பான கருத்துத்தான்.

 

என்ன செய்வது கிழக்கிலங்கையின் இனப்பரம்பல் இப்படி எழுத வைக்குது. நானும் தமிழன்தானே. எனக்கும் எமது மக்களில் ஆசை இருக்கும்தானே.

ஒரு குறையும் இல்லை அண்ணே.
பிழையை பிழை என்று சொன்னதிற்கு லைக் க்குத்தான் தரமுடியும் :)

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கிலிருக்கும் மக்கள் தமது விருப்பு வெறுப்புகளுக்கப்பால் தமிழ் பிரதிநிதித்துவம் பறிபோக்க்கூடாது என்றே காலம் காலமாக வாக்களிக்கின்றனர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.