Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழக தலைவர்களால் ஏன் வழி காட்ட முடியவில்லை?

Featured Replies

• தமிழக தலைவர்களால் ஏன் வழி காட்ட முடியவில்லை?

நடக்கவிருக்கும் தேர்தலில் தமிழ் மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் அல்லது என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து தமிழக தலைவர்கள் இதுவரை கருத்து கூறாதது ஆச்சரியமாக இருக்கிறது.

தான் சாவதற்குள் தமிழீழத்தைக் காண வேண்டும் என்று டெசோ மாநாடு நடத்தும் கலைஞர் அவர்கள் ஈழத் தமிழர்கள் இந்த தேர்தலில் என்ன செய்ய வேண்டும் என்பதை ஏன் இன்னும் கூறவில்லை?

இராணுவத்தை அனுப்பி ஈழத்தை பெற்றுக்கொடுப்பேன் என்று கூறி ஈழத்தாய் பட்டம் பெற்றிருக்கும் ஜெயா அம்மையார் தேர்தலில் ஈழத் தமிழர்கள் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து ஏன் வழிகாட்டவில்லை?

2016ல் சட்டசபையை கைப்பற்றி தமிழீழத்தை பெற்றுக் கொடுக்கவிருக்கும் "நாம் தமிழர்" சீமான் அவர்கள் அதற்குமுன்னர் ஈழத் தமிழர்கள் தேர்தலில் என்ன செய்ய வேண்டும் என்று கூறக்கூடாதா?

வைகோ, ராமதாஸ், திருமாவளவன் எல்லாம் ஏன் மௌனம் காக்கின்றார்கள்?

இவர்களுக்கு ஈழத் தமிழர்கள் மீது உண்மையான அக்கறை இல்லையா? அல்லது தமது கூற்றுக்கு எந்த மதிப்பும் ஈழத் தமிழர் மத்தியில் கிடைக்காது என்று எண்ணுகிறார்களா?

இவர்கள் எல்லாம் ஈழத்தமிழருக்கு தமிழீழம் மட்டுமே தீர்வு என்கிறார்கள். ஆனால் தேர்தலில் போட்டி போடும் எந்தவொரு கட்சியுமே தமிழீழ தீர்வை முன்வைக்கவில்லை.

அதுமட்டுமன்றி போட்டி போடும் எந்தவொரு கட்சியுமே தமிழக தலைவர்களின் ஆதரவையோ உதவியையோ இதுவரை கோரவில்லை.

தீக் குளிப்தற்கு தமிழக தமிழர்கள் தேவை
போராடுவதற்கு தமிழக மாணவர்கள் தேவை
ஜ.நா மனுவில் கையொப்பம் இட தமிழகம் தேவை
உலகில் குரல் கொடுக்க தமிழக தலைவர்கள் தேவை.
ஆனால் தேர்தலில் வழிகாட்ட தமிழகம் தேவையில்லையா?

ஈழத் தமிழ் வேட்பாளர்களே! இது நியாயமா?

  தமிழக மக்களின் ஆதரவு மட்டுமன்றி அவர்களின் பங்களிப்பும் இன்றி ஈழத் தமிழர்களின் போராட்டம் ஒருபோதும் வெற்றியடைய முடியாது. இந்திய அரசு பார்க்கிறது. அமெரிக்க அரசு பார்க்கிறது. எனவே தமிழர் எல்லாம் தமிழ்தேசிய கூட்டமைப்பிற்கு வாக்களியுங்கள் என்று ஒவ்வாரு தேர்தலிலும் கேட்கும் சம்பந்தர் அய்யா ஒருமுறைகூட தமிழகம் பார்க்கிறது வாக்களியங்கள் என்று கேட்பதில்லை. ஏன் தமிழக ஆதரவு தேவையில்லை என்று கருதுகிறாரா அல்லது தமிழகத்தை மீறி இந்திய அரசு உதவி செய்யும் என்று நம்புகிறாரா?

இன்று சர்வதேச ரீதியில் ஈழத் தமிழர் பிரச்சனைக்கு சிறிது கவனம் இருக்கிறது என்றால் அதற்கு முழுக்காரணம் தமிழக மக்களின் அதரவு என்பதை மறக்கக்கூடாது.
https://www.facebook.com/pages/Balan-tholar/1528490507422676?fref=ts
 
 
Balan tholar இன் புகைப்படம்.
Balan tholar இன் புகைப்படம்.
Balan tholar இன் புகைப்படம்.
  • கருத்துக்கள உறவுகள்

• தமிழக தலைவர்களால் ஏன் வழி காட்ட முடியவில்லை?

நடக்கவிருக்கும் தேர்தலில் தமிழ் மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் அல்லது என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து தமிழக தலைவர்கள் இதுவரை கருத்து கூறாதது ஆச்சரியமாக இருக்கிறது.

தமிழக 'அரசியல்வியாதிகள்' சில ஈழத்தமிழர்கள் பார்வையில் 'கோமாளிகள்', 'ஈழப்பேச்சு, தொட்டுக்கொள்ளும் ஊறுகாய்' என்ற நியாயமான சிந்தையில் ஈழத்தலைகளும் இருப்பதால் அப்படித்தான் இனி போகும்.. அவரவர் பொழைப்பை பார்க்க வேண்டாமா? :)

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழர் பிரச்சனை தமிழகத்தை விட்டு நழுவி விட்டதா என எண்ண தோன்றுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் குளப்பமான அறிக்கை

தலைப்பு: தமிழக தலைவர்களால் ஏன் வழி காட்ட முடியவில்லை?

முடிவு:ஈழத் தமிழ் வேட்பாளர்களே! இது நியாயமா?

ஈழத்தமிழர் பிரச்சனை தமிழகத்தை விட்டு நழுவி விட்டதா என எண்ண தோன்றுகிறது.

இதுதான் யதார்த்தம்.

மாற்றம் என்ற ஒரு சொல்லை தவிர மிச்சம் எல்லாமே மாறும். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நேற்றைய தினம் நன்கு தமிழ்தெரிந்த தெலுங்கு உறவை சந்தித்தேன். தமிழ்நாட்டு அரசியலைப்பற்றி சிறிய அளவில் கதைத்தார். எனக்கு தலை சுற்ற ஆரம்பித்து விட்டது. :(

  • கருத்துக்கள உறவுகள்

நேற்றைய தினம் நன்கு தமிழ்தெரிந்த தெலுங்கு உறவை சந்தித்தேன். தமிழ்நாட்டு அரசியலைப்பற்றி சிறிய அளவில் கதைத்தார். எனக்கு தலை சுற்ற ஆரம்பித்து விட்டது. :(

சாமிகள் அவர்களே,

இவ்வளவு அழிவிற்குப்பின்னும் இங்கே யாழிலும், ஈழ அரசியலிலும் தமிழர்களுக்குள் எவ்வளவு வெட்டுக்குத்துகள் நடக்குது என பாருங்கள்!

ஈழத்தில் இருப்பது பத்து பேர்,  இதில் கஜே கோஷ்டி, சம்சும் கோஷ்டி, சித்தார்த்தன் கோஷ்டி, விக்கி கோஷ்டி, சந்தில் சிந்து பாடும் டக்கி கோஷ்டி, பழைய பல்லவி புளாட் கோஷ்டி, இடைகிடையே முஸ்லீம் கோஷ்டி, சிங்களத்திற்கு வால் பிடிக்கும் 'வெள்ளை' கோஷ்டி...  இன்ன பிற...!!!

தமிழர்களின் ஆகமொத்த சனத்தொகையைக் காட்டிலும் உங்கள் கோஷ்டிகளின் எண்ணிக்கை மிக அதிகம், புடுங்குபாடுகள் சொல்லி மாளாது!

இதைவிடவா, தமிழ்நாட்டு அரசியல் மோசம்? :love:

ஸ்..ஸப்பா... இந்த வெட்டுக்குத்துகளை பார்த்தால் உங்களுக்கு தலை சுற்றவில்லை? :shocked:Be rational please!!

போதுமடா சாமியோவ்..!  hill.gif

 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக தலைவர்கள் ஏனைய்யா நமக்கு வழி காட்டணும்? 

நமக்கு சுயபுத்தி இல்லையா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழக தலைவர்கள் ஏனைய்யா நமக்கு வழி காட்டணும்? 

நமக்கு சுயபுத்தி இல்லையா?

தமிழ்நாடு இந்தியாவுக்குள் இருக்கின்றதென்பது தங்களுக்கு தெரியுமா? தெரியாதா? :mellow:

சரி அது கிடக்கட்டும்....என்ன கோதாரிக்கு எடுத்ததுக்கெல்லாம் சம் இந்தியாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் ஓடுறார்???? சிலோனிலையே நிண்டு ஐடியாக்களை எடுத்திருக்கலாமெல்லே!!!!!!! :cool:

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் பேச்சை கேட்பதும் தமிழ்நாட்டின் பேச்சை கேட்பதும் ஒன்றல்ல.

தமிழ்நாடு எமக்கு ஒரு போதும் வழிகாட்டியதுமில்லை, காட்டப் போவதும் இல்லை.

இந்தியாவைக் கூட ஒதுக்க முடியாத படியால்தான் வெத்திலை வாயனுகள் சொல்லுவதற்கெல்காம் ஹா ஜி போட வேண்டி இருக்கு.

தமிழ்நாடு ஒண்டுக்கும் உதவாத பிஸ்கோத்து. நடிகைகளுக்கு கோவில் கட்டுமானம் சம்பந்தமாக வேணுமானால் அவர்களிடம் அறிவுரை பெறலாம் :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

சாமிகள் அவர்களே,

இவ்வளவு அழிவிற்குப்பின்னும் இங்கே யாழிலும், ஈழ அரசியலிலும் தமிழர்களுக்குள் எவ்வளவு வெட்டுக்குத்துகள் நடக்குது என பாருங்கள்!

ஈழத்தில் இருப்பது பத்து பேர்,  இதில் கஜே கோஷ்டி, சம்சும் கோஷ்டி, சித்தார்த்தன் கோஷ்டி, விக்கி கோஷ்டி, சந்தில் சிந்து பாடும் டக்கி கோஷ்டி, பழைய பல்லவி புளாட் கோஷ்டி, இடைகிடையே முஸ்லீம் கோஷ்டி, சிங்களத்திற்கு வால் பிடிக்கும் 'வெள்ளை' கோஷ்டி...  இன்ன பிற...!!!

தமிழர்களின் ஆகமொத்த சனத்தொகையைக் காட்டிலும் உங்கள் கோஷ்டிகளின் எண்ணிக்கை மிக அதிகம், புடுங்குபாடுகள் சொல்லி மாளாது!

இதைவிடவா, தமிழ்நாட்டு அரசியல் மோசம்? :love:

ஸ்..ஸப்பா... இந்த வெட்டுக்குத்துகளை பார்த்தால் உங்களுக்கு தலை சுற்றவில்லை? :shocked:Be rational please!!

போதுமடா சாமியோவ்..!  hill.gif

 

அந்த தெலுங்கு நண்பர்!  தமிழ்நாட்டு அரசியல் தலைவர்களின் பின்புல உண்மைகளை சொன்னார். :)

அவர்களின் இனப்பற்று போலிகளை பற்றி சொன்னார். ஏன் சினிமாவில் கூட இருக்கும் போலிகளை சொன்னார்.

ஆனால் அவர் இலங்கை தமிழ் அரசியல்வாதிகளையும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளையும் ஒரே தராசில் நிறுத்தி நெறுக்கவில்லை.

அரசியல் என்பது சாக்கடை சமுத்திரம் என்பது என்னை விட அந்த தெலுங்கர் நன்றாகவே விளங்கி கதைக்கின்றார்.:innocent:

  • கருத்துக்கள உறவுகள்

 

ஆனால் அவர் இலங்கை தமிழ் அரசியல்வாதிகளையும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளையும் ஒரே தராசில் நிறுத்தி நெறுக்கவில்லை.

அரசியல் என்பது சாக்கடை சமுத்திரம் என்பது என்னை விட அந்த தெலுங்கர் நன்றாகவே விளங்கி கதைக்கின்றார்.:innocent:

சாமிகள்,

அந்த தெலுங்கர், தமிழக, ஈழ தலைவர்களை எப்படி வேணுமென்றாலும் விமர்சிக்கட்டும், ஆனால் அதற்கு முன் தெலுங்கு கொல்டிகள் தமிழக எல்லைகளில் ஊடுருவி  தமிழ்நாட்டின் பகுதிகளை கொல்டி தலைகள் ஆட்டையை போட்டதை நாங்கள் மறக்கவில்லை என்பதை தெளிவாக அவருக்கு சொல்லவும்.. (திருப்பதி, திருத்தணி, நகரி போன்ற பல பகுதிகள்)

தமிழர்கள் கூடவே வாழ்ந்து குழிபறித்த கூட்டம், இந்த கொல்டிக் கூட்டம்..

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே தமிழ்நாட்டைப் பற்றி தரக்குறைவாக விமர்சிப்பவர்கள், ஈழப் போராட்டதிற்கு பாதுகாப்பான தளமாக தமிழகத்தை பயன்படுத்தியதையும், மலையக இந்திய வம்சாவழி தமிழர்களின் வாழ்வை கேள்விக்குறியாக்கிய ஈழத் தலைகளையும் ஒருகணம் நினைத்துப் பார்ப்பது நன்று..1980களின் இறுதிவரை ஈழத் தமிழர்களுக்கு எப்படி வரவேற்பு இங்கே இருந்தது என்பதை நினைத்துப் பார்க்கவேண்டும்..

நாங்கள் நடிகைகளுக்கு கோயில் கட்டலாம, ஆனால் உங்களைப்போல் நன்றி மறந்து, சக தமிழருக்கு முதுகில் குத்தவில்லை..! :love:

 

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் பேச்சை கேட்பதும் தமிழ்நாட்டின் பேச்சை கேட்பதும் ஒன்றல்ல.

தமிழ்நாடு எமக்கு ஒரு போதும் வழிகாட்டியதுமில்லை, காட்டப் போவதும் இல்லை.

இந்தியாவைக் கூட ஒதுக்க முடியாத படியால்தான் வெத்திலை வாயனுகள் சொல்லுவதற்கெல்காம் ஹா ஜி போட வேண்டி இருக்கு.

தமிழ்நாடு ஒண்டுக்கும் உதவாத பிஸ்கோத்து. நடிகைகளுக்கு கோவில் கட்டுமானம் சம்பந்தமாக வேணுமானால் அவர்களிடம் அறிவுரை பெறலாம் :)

தமிழகத்தை ஒரு எண்டர்டேய்ன்மட்டுக்காக ஊறுகாய் மாதிரி மட்டுமே நாம் பயன்படுதிக்கொள்ள வேண்டும். (சினமா, புத்தகங்கள், சுற்றுலா) 

  • கருத்துக்கள உறவுகள்

எம் போன்றவர்கள் ஈழத் தமிழர்களுக்காக கண்ணீர் வடித்தது உண்மை, ஆனால் இங்கே எழுதும் கருத்துக்களை பார்க்கையில், அக்கரைகள் பச்சையில்லை என்பதை தெளிவுபடுத்துகிறீர்கள்..

நன்றி!

  • கருத்துக்கள உறவுகள்

எம் போன்றவர்கள் ஈழத் தமிழர்களுக்காக கண்ணீர் வடித்தது உண்மை, ஆனால் இங்கே எழுதும் கருத்துக்களை பார்க்கையில், அக்கரைகள் பச்சையில்லை என்பதை தெளிவுபடுத்துகிறீர்கள்..

நன்றி!

ஒரு சில... அல்லக்கைகளின் கருத்தை பெரிதாக எடுக்காதீர்கள் வன்னியன்.
இவர்களின் வேலை, தொண்டை கிழிய... கூவுறது, குலைக்கிறது   மட்டுமே....:)

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சில அல்லக்கைகளின் கருத்து. அதை பெரிதாக எடுக்காதீர்கள்

எம் போன்றவர்கள் ஈழத் தமிழர்களுக்காக கண்ணீர் வடித்தது உண்மை, ஆனால் இங்கே எழுதும் கருத்துக்களை பார்க்கையில், அக்கரைகள் பச்சையில்லை என்பதை தெளிவுபடுத்துகிறீர்கள்..

நன்றி!

  

  • கருத்துக்கள உறவுகள்

எம் போன்றவர்கள் ஈழத் தமிழர்களுக்காக கண்ணீர் வடித்தது உண்மை, ஆனால் இங்கே எழுதும் கருத்துக்களை பார்க்கையில், அக்கரைகள் பச்சையில்லை என்பதை தெளிவுபடுத்துகிறீர்கள்..

நன்றி!

ஐயா

அவரவர் தகுதிக்கு தேவைக்கு ஏற்பத்தான் பேசுவார்கள் எழுதுவார்கள்

உங்களிடமிருந்து எதை அவர்கள் எடுத்துக்கொள்கிறார்கள் என்று பார்த்தால் மிகுதி புரியும்  உங்களுக்கு.....

அதேநேரம் இவையெல்லாம் வெளி வேசங்களே..

எழுதுவது

படிப்பது

அனுபவங்களை கேட்பது

 புத்தகங்கள் வெளியிடுவது

ஏன் முகநூல் நண்பர்களில் 90 வீதம் தமிழக உறவுகளே..

அவர்கள் இல்லையென்றால் பூச்சியம் வாழ்வு...

பக்கத்திலுள்ள தமிழக உறவுகளை ஒதுங்கியிருங்கள் என்று

கொழும்பிலிருந்தும்

புலத்திலிருந்தும் அறிக்கை விடுவார்கள்

இது தான் பொருந்தாத நடிகர்களின் வெற்று கோசங்கள்..

தமிழர்களின் ஒட்டுமொத்த குரலும்இல்லாமல் 

அதிலும் தமிழகத்தின் வலிமையில்லாமல் எதுவுமில்லை தமிழருக்கு..

அந்தக்காலத்துக்காக காத்திருப்பதைத்தவிர வேறு வழியில்லை எமக்கு..

அதுவரை இது போன்ற சீண்டுதல்களை

ஒரு சிலரின் பொறுப்பற்ற நையாண்டிகளை பெரிது படுத்தாதீர்கள்

 

 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் சிறி, மீரா, விசு அனைவருக்கும் மிக்க நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்துக்கு இன்னும் சில செம்புதூக்கிகள் செம்பு தூக்குவதுதான் செம காமடி! இன்னும் தமிழகத்தை நம்புவது விசில் குஞ்சுகள் மட்டுமே, புலத்தில் பெரும்பான்மையான மக்கள் எப்போதோ நிராகரித்து விட்டார்கள்!

விசம தனமான உங்களின் கருத்துக்கு எனது எதிர்ப்பு முதலில்.

உலகில் ஈழ தமிழருக்கு ஒரு அறுதல் என்றால் அது தமிழகமே.. தமிழ் நாட்டை நாசப்படுத்தியது எங்கள் இயக்கங்கள் தான்.

அரசியல்வாதிகளையும் உறவுகளையும் பிரித்து அறியமுடியாமல் இருப்பது உங்களின் அறிவீனம்.

 

தானாவிடாவிட்டாலும் தன் தசை ஆடும் என்பார்கள்.. அனாலும் அது அந்த இனத்தில் இருப்பவனுக்கே விளங்கும்.

எம் போன்றவர்கள் ஈழத் தமிழர்களுக்காக கண்ணீர் வடித்தது உண்மை, ஆனால் இங்கே எழுதும் கருத்துக்களை பார்க்கையில், அக்கரைகள் பச்சையில்லை என்பதை தெளிவுபடுத்துகிறீர்கள்..

நன்றி!

அண்ணா, பொது விவாதத்தில் வருபர்கள் எல்லோருக்கும் தனியொரு கருத்து இருக்கும் அதுவெல்லாம், அதையெல்லாம் ஒட்டுமொத்தத் கருத்தாக எடுக்கமுடியாது. 

எல்லோரும் நாம் விரும்புவதையே சொல்லவேண்டும் என்று நீங்கள் நினைந்து வருந்துதல் ஆகாது. 

அது அவர்களின் நோக்கத்தை எளிதாக்கிவிடும். 

  • தொடங்கியவர்

இந்தியாவின் பேச்சை கேட்பதும் தமிழ்நாட்டின் பேச்சை கேட்பதும் ஒன்றல்ல.

தமிழ்நாடு எமக்கு ஒரு போதும் வழிகாட்டியதுமில்லை, காட்டப் போவதும் இல்லை.

இந்தியாவைக் கூட ஒதுக்க முடியாத படியால்தான் வெத்திலை வாயனுகள் சொல்லுவதற்கெல்காம் ஹா ஜி போட வேண்டி இருக்கு.

தமிழ்நாடு ஒண்டுக்கும் உதவாத பிஸ்கோத்து. நடிகைகளுக்கு கோவில் கட்டுமானம் சம்பந்தமாக வேணுமானால் அவர்களிடம் அறிவுரை பெறலாம் :)

"இன்று சர்வதேச ரீதியில் ஈழத் தமிழர் பிரச்சனைக்கு சிறிது கவனம் இருக்கிறது என்றால் அதற்கு முழுக்காரணம் தமிழக மக்களின் அதரவு என்பதை மறக்கக்கூடாது"

அரசியல் வாதிகளுக்கு பதில் கூறுவதாக எண்ணி தமிழ் நாட்டு மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தாதீர்கள்.இந்தியாவில் மனித நேயம் வாழுகின்றதென்றால் அங்குள்ள ஏழ்மையே காரணம்.அவ்வளவு ஏழ்மையும் உணர்வாளர்கள் தான்.

"இன்று சர்வதேச ரீதியில் ஈழத் தமிழர் பிரச்சனைக்கு சிறிது கவனம் இருக்கிறது என்றால் அதற்கு முழுக்காரணம் தமிழக மக்களின் அதரவு என்பதை மறக்கக்கூடாது"

அரசியல் வாதிகளுக்கு பதில் கூறுவதாக எண்ணி தமிழ் நாட்டு மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தாதீர்கள்.இந்தியாவில் மனித நேயம் வாழுகின்றதென்றால் அங்குள்ள ஏழ்மையே காரணம்.அவ்வளவு ஏழ்மையும் உணர்வாளர்கள் தான்.

இந்தியாவில் மனித நேயம் அதிகம் தமிழ் நாட்டிலேயே வாழுது.

வடக்கு பக்கம் போனால் தெரியும்.

பெங்களூரு தாண்டும்போதே தெரியதொடங்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிறைய நாட்களுக்கு பிறகு தமிழ் நாட்டை சுற்றி ஒரு தலைப்பு. அதற்க்கு  என் வாழ்த்துக்கள். சிலர் தமிழகத்தை கொச்சை படுத்துவதை இந்த தலத்தில் காண்கிறேன். தமிழ் நாடு அதை செய்ய வில்லை, இதை செய்ய வில்லை என்று கூற கேட்கிறேன். அந்த அழு குரல்களை, தனித்து விட பட்ட சகோதரர்களின் குரல்களாகவே கேட்கிறேன்.

தமிழகத்தை  சேர்ந்தவனாகிய  என்னை போன்றோருக்கு ஈழத்தை பற்றி நிறைய தெரிந்து கொள்ளும் பொழுது எப்படி நம் உறவுகள் இப்படி எல்லாம் தனித்து விடபட்டார்கள் என்று கேட்க தோன்றுகிறது.. ஏன் நம் தமிழக தலைமைகள் ஈழ தலைமைகளுடன் சேர்ந்து இந்த ஆயுத போராட்டத்தை அப்பொழுதே முடிவுக்கு  கொண்டு வந்து இருக்கலாமே. ஈழ தலைமைகள் நம்மை பொருட்படுத்தவில்லையா ? என்றும் என்ன தோன்றுகிறது. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம், இப்பொழுது உள்ள ஊடகங்கள் 1980-95 கால கட்டத்தில்  இருந்து இருந்தால் , நிறைய புரிதல் ஏற்பட்டு இருந்து இருக்கும். 

ஏன் இப்பொழுது தமிழகம் நம்மை பற்றி பேச வில்லை என்று சிலர் கேட்கிறார்கள். அதற்க்கு காரணம், தமிழகம், இலங்கையில் மகிந்த தூக்கி எறியப்பட்டு அவர்களுக்கு வேண்டிய அரசு அமைந்து இருக்கிறது என்று நம்புகிறார்கள். கூடிய விரைவில் அவர்களுக்கு நல்ல தொரு மாற்றம் நிகழும் என்று நினைக்கிறார்கள்.

மேலும், சில ஈழ தலைமைகள் எங்களை பற்றி நிறைய பேசி , எங்களுக்கும், சிங்களத்துக்கும் இடையே  பிரச்சனை ஏற்படுத்தி விடாதீர்கள் என்றும் சொல்லி இருக்கிறார்கள். எனவே, நமக்கு ஏன் இந்த வம்பு. தாயும், குழந்தையாக இருந்தாலும் வாயும் வயிறும் வேறு தானே . அவர்கள் பிரச்சனையை அவர்களே தீர்த்து கொள்வார்கள் என்ற நம்பிக்கையில் உள்ளார்கள் இன்றைய தமிழக மக்கள். பரபரப்பான இந்த வாழ்வில் இவ்வளவு தான் அவர்களால் முடியும். எனவே, வலி உள்ளவன் தான் மருத்துவனை நாட வேண்டும்.

Edited by kanna123

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.