Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரபாகரன் காணாமல்போனாரே தவிர உயிரிழக்கவில்லை என்கிறார் :அங்கயன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
பிரபாகரன் காணாமல்போனாரே தவிர உயிரிழக்கவில்லை என்கிறார் :அங்கயன்
news

 தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் யுத்தத்தில் காணாமல் போனாரே தவிர உயிரிழக்கவில்லை. எனது தேசியத் தலைவரும் அவர்தான்.மக்களின் பெரும் ஆரவாரத்துக்கு மத்தியில் இப்படித் தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் யாழ். தேர்தல் மாவட்ட வேட்பாளர் அங்கஜன் இராமநாதன்.

 

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் யாழ். தேர்தல் மாவட்டத்துக்கான இறுதிப் பரப்புரைக் கூட்டம்  நேற்றுநல்லூர் சங்கிலியன்தோப்பில் இடம்பெற்றது.இதில் உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 
அவர் மேலும் உரையாற்றுகையில்,
 
"நான் வியாபாரமோ, விபச்சாரமோ செய்வதற்காக அரசியலுக்கு வரவில்லை. மக்களுக்கு சேவையாற்றவே வந்தேன். அங்கஜன் என்ற இந்தத் தனி மனிதனுக்காக 10 தலைமுறைக்கு உட்கார்ந்து சாப்பிடக்கூடிய அளவுக்கு எனது தந்தையார் சொத்து சேர்த்து வைத்திருக்கிறார்.
 
இலங்கைத் தமிழரசுக் கட்சியினர் 50 ஆண்டுகளுக்கு முன்னர் திருகோணமலையில் நடத்திய பொதுக்கூட்டத்திலும் காணியைப் பெறுதல், சமஷ்டி ஆட்சி என்பவற்றையே கோரினர். இறுதியாக நடந்த வவுனியா கூட்டத்திலும் அவற்றையே கோருகின்றனர். 50 ஆண்டுகளாக ஒரே விடயத்தைப் பற்றியே பேசுபவர்கள் எமது மக்களின் பிரச்சினைகளை எவ்வாறு உடனடியாகத் தீர்ப்பர்.
 
நாங்கள் தேசியக் கட்சி சார்ந்து நிற்பதால் எங்களைத் துரோகிகள் என்கின்றனர். ஆனால் கூட்டமைப்பின் சார்பில் நிற்பவர்களில் ஒருவரான சுரேஷ் பிரேமசந்திரன் எத்தனை பேரை மண்டையில் போட்டார். மண்டையன் குழு தலைவர் பல சகோதரப் படுகொலைகளை செய்தார் என்று மூத்த ஊடகவியலாளரான வித்தியாதரனே கூறியிருக்கிறார். அப்படியானால் இவர்களை என்னவென்று சொல்வது."
"எனது தேசியத் தலைவரும் பிரபாகரன்தான். அவர் காணாமல் போனாரே தவிர உயிரிழக்கவில்லை." அங்கஜன் இவ்வாறு கூறியதும் பொதுமக்கள் கைகளைத் தட்டி பெரும் ஆரவாரம் எழுப்பினர்
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=398304197115243446#sthash.F1x9Vtnv.dpuf
  • கருத்துக்கள உறவுகள்
 
"எனது தேசியத் தலைவரும் பிரபாகரன்தான். அவர் காணாமல் போனாரே தவிர உயிரிழக்கவில்லை." அங்கஜன் இவ்வாறு கூறியதும் பொதுமக்கள் கைகளைத் தட்டி பெரும் ஆரவாரம் எழுப்பினர்

சரி சரி

தம்பிக்கும் கொஞ்சம் சொதி விடுங்கோ.....

  • கருத்துக்கள உறவுகள்

சரி சரி

தம்பிக்கும் கொஞ்சம் சொதி விடுங்கோ.....

தம்பிக்கு சொதி என்ன
பாயாசம் வடையே படையுங்கப்பா.

  • கருத்துக்கள உறவுகள்

தம்பிக்கு சொதி என்ன
பாயாசம் வடையே படையுங்கப்பா.

அது வெற்றி பெற்றபின்

வேசம் மாறும் போது தானே கொடுக்கப்படும்

அதுவும் சம்பந்தர் ஐயாவுக்கும் மாவைக்கும் தான் காணும் போல கிடக்கு...

இனி அவை தானே முழுப்பூசணிக்காயை........???:(:(

புலி வாலுகள் சொல்வதைத்தான  அங்கஜன் சொல்லுகின்றார் ,இதுக்கு ஏன் இவ்வளவு குத்திமுறிவு யாழில் இருந்து இந்தமுறை அங்கஜன் ,விஜயகலா ,TNA .ACTC எல்லாவற்றையும் கலந்து சாம்பாறுதானம் வைக்கப்போகின்றார்கலாம் ,தேவையானவர்கள் விரும்பினதை அரசமைக்க எடுக்கலாம் .

  • கருத்துக்கள உறவுகள்

புலவாலுகளும் அங்கஜனும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்.

பிரபாவின் பிணத்தை வைத்தாவது காசு பார்த்தால் சரி.

இங்கே புலியிடம் அமுக்கிய காசில் கடை, வீடு மனை, டீவி, ரேடியோ இணையதளம் நடத்தும் பேர்வழிகளுக்கும் அங்கஜனுக்கும் ஒரு வித்தியாசமுமில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

புலி வாலுகள் சொல்வதைத்தான  அங்கஜன் சொல்லுகின்றார் ,இதுக்கு ஏன் இவ்வளவு குத்திமுறிவு யாழில் இருந்து இந்தமுறை அங்கஜன் ,விஜயகலா ,TNA .ACTC எல்லாவற்றையும் கலந்து சாம்பாறுதானம் வைக்கப்போகின்றார்கலாம் ,தேவையானவர்கள் விரும்பினதை அரசமைக்க எடுக்கலாம் .

கூட்டணி என்றால் என்ன அதுவும் ஒரு சாம்பாறு தான்.

அதுவும் தேசிய தலைவர் வைத்த சாம்பாறு.

யாராயினும் புலியை வைத்துத் தான் பிழைப்பு நடத்த வேண்டிய நிலை என்பது தான் தெட்டத்தெளிவாகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

யாராயினும் புலியை வைத்துத் தான் பிழைப்பு நடத்த வேண்டிய நிலை என்பது தான் தெட்டத்தெளிவாகின்றது.

நீலப் பறவை இது இலங்கையில் மட்டுமல்ல இந்தியாவிலும் கூட.

  • கருத்துக்கள உறவுகள்

 யாராவது நான் மக்களுக்கு  இது  செய்வேன் மக்களுக்காக பாடுபட்டு உழைப்பேன் என்று சொல்லுகிறார்களா? ஒருவர் மேல ஒருவர் சேரடிப்பதுவும், துரோகியாக்குவதும், தலைவரை தமது சுய லாபத்துக்கு புகழுவதும்தான் நடக்குது. .  தேர்தலில் வென்று என்னதான் சாதிக்காததை சாதிக்கப்போகிறார்கள்? யாரும் இதுவரையில் சாதிக்காததால் எழுந்த வினை. 

  • கருத்துக்கள உறவுகள்

 

கூட்டணி என்றால் என்ன அதுவும் ஒரு சாம்பாறு தான்.

அதுவும் தேசிய தலைவர் வைத்த சாம்பாறு.

சில அல்லைக்கைகளுக்கு இன்னும்  விளங்கவில்லை,

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா, கிளம்பிட்டாரய்யா, கிளம்பிட்டார்......ரு :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

இதை இவர் மகிந்த.. கோத்தா... கருணா கும்மான்.. தயா மாஸ்டர்.. ஆகியோரின் கையொப்பம் பெற்றா சொல்லுறார். 

மகிந்த தமிழ் தலைவர்கள் நாட்டை பிரிக்கப் பேசினம் என்று முழங்கிறார்.. இவர் மகிந்த கூட இருந்து கொண்டே.. பிரபாகரனை பற்றிப் பேசுறார். எப்படி எல்லாமோ சாத்தியமாகுது. எல்லாம் அந்த மந்திரச் சொல் பிரபாகரனுக்கே வெளிச்சம். :grin:

உண்மையும் பேசக்கூடாது,ஒரு பேச்சுக்கும் சொல்லக் கூடாது.தறிகெட்ட தமிழ்க் கம்யூனிசம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.