Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கூட்டமைப்புடன் ஒன்றரை மணிநேரம் பேச்சு நடத்தினார் நிஷா பிஸ்வால்

Featured Replies

கூட்டமைப்புடன் ஒன்றரை மணிநேரம் பேச்சு நடத்தினார் நிஷா பிஸ்வால்

AUG 26, 2015by கார்வண்ணன்in செய்திகள்

Nisha-tnaதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளை அமெரிக்காவின் தெற்கு மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால் இன்று காலை சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதுவரின் இல்லத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராசா, எம்.ஏ.சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அதேவேளை, நிஷா பிஸ்வாலுடன் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் மனித உரிமைகள், ஜனநாயகம், தொழிலாளர் விவகாரங்களுக்கான உதவிச்செயலர் ரொம் மாலினோவ்ஸ்கி, சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப் ஆகியோரும் பேச்சுக்களில் பங்கெடுத்தனர்.

Nisha-tna

ஒன்றரை மணிநேரம் நடந்த இந்தச் சந்திப்பில், ஐ.நாவின் போர்க்குற்ற விசாரணை அறிக்கை மற்றும் பொறுப்புக் கூறல் விவகாரங்கள், அரசியல் தீர்வு உள்ளிட்ட விடயங்கள் குறித்து பேசப்பட்டுள்ளன.

போர்க்குற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணைப் பொறிமுறை ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

nisha-sandya

அதேவேளை, காணாமற்போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொடவையும், நிஷா பிஸ்வால் மற்றும் ரொம் மாலினோவ்ஸ்கி ஆகியோர் தனியாகச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளனர்.

 

http://www.puthinappalakai.net/2015/08/26/news/9202

 

விக்கியர் நல்லாத்தான் விளையாடுகின்றார் .

  • கருத்துக்கள உறவுகள்
தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க அமெரிக்கா தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கத் தயார் : கூட்டமைப்பிடம் உறுதியளித்தார் பிஸ்வால்
news

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும், இலங்கை வருகை தந்த அமெரிக்க உதவி ராஜாங்க செயலாளர் நிஷா பீஷ்வாலுக்கும் இடையிலேயே இன்று சந்திப்பு நடைபெற்றுள்ளது.


இச்சந்திப்பின்போது,  தேர்தலுக்கு பின்னரான அரசியல் நிலைமைகள் தொடர்பில் முக்கியமாக அவதானம் செலுத்தப்பட்டதாகவும் கடந்த தேர்தலின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் முன்வைக்கப்பட்ட விடயங்கள் தொடர்பில் பேசப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக தமிழ்மக்களின் காணி விடுவிப்பு, வடக்கு, கிழக்கு கடற்பரப்பில் தமிழ் மீனவர்கள் சுதந்திரமாக மீன்பிடியில் ஈடுபடுவதற்கான சூழ்நிலைகளை உருவாக்குதல், காணாமல் போனவர்கள் மற்றும் அரசியல் கைதிகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் மிக விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

அத்துடன் ஏற்கனவே அறிவிக்கப்பட்டதன் படி, எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் போர்க்குற்ற அறிக்கை வெளியிடப்படும் என்றும், தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க அமெரிக்கா தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்கும் என்று நிஷா பீஷ்வால் உறுதியளித்துள்ளதாக கூறப்படுகிறது.



இந்த சந்திப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன் மற்றும் வடக்கு முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கொழும்பில் இன்று சுமார் ஒன்றறை மணித்தியாலங்கள் இடம்பெற்ற இந்த சந்திப்பில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையகத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள சர்வதேச விசாரணை அறிக்கை குறித்து பேசப்பட்டதாக எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

இறுதிக்கட்ட போரின்போது இடம்பெற்ற குற்றங்கள் தொடர்பில் உள்ளக விசாரணைகளை வலியுறுத்தும் இலங்கை அரசாங்கத்திற்கு ஆதரவாக ஐ. நா மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் தீர்மானம் ஒன்றை முன்வைக்கவுள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளது.

இலங்கை அரசாங்கம் மற்றும் ஏனைய முக்கிய பங்காளர்களின் ஒத்துழைப்புடனான இந்த தீர்மானம் அடுத்த மாதம் நடைபெறும் மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் சமர்ப்பிக்கப்டவுள்ளதாக மத்திய மற்றும் தெற்காசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்க செயலாளர் நிஷா பிஷ்வால் தெரிவித்துள்ளார்.

இலங்கை மீதான துஷ்பிரயோக குற்றச்சாட்டுகள் தொடர்பில் சர்வதேச சுயாதீன விசாரணைக்கு கடந்த ஆண்டு அழைப்பு விடுக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் ஐ.நா மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பில் மூன்ற தீர்மானங்களை நிறைவேற்றுவதில் அமெரிக்கா முன்னின்று செயற்பட்டிருந்தது.

எனினும் எவ்வாறாயினும் புதிய மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கம் உறுதியளித்த உள்ளக விசாரணைக்கு அமெரிக்கா ஆதரவு வழங்குவதாக நிஷா பிஷ்வால் தற்போது கூறியுள்ளார்.

அமெரிக்க தீர்மானத்தில் எவ்வாறான விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது என்பது தொடர்பில் நிஷா பிஷ்வால் எந்தவொரு கருத்துக்களையும் வெளியிடவில்லை.

எனினும் அடுத்த மாதம் வெளியிட திட்டமிடப்பட்டுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அறிக்கையை பின்பற்றியதாக இந்த தீர்மானம் இருக்குமென நிஷா பிஷ்வால் கூறியுள்ளார்.

- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=641074224526206027#sthash.H3XvCBGl.dpuf

திரும்பவும் தலையில் மிளகாய் அரைக்க அமெரிக்கா தயார் ......அப்ப சர்வதேச விசாரணை என்னவாகும் ?

விக்கியர் நல்லாத்தான் விளையாடுகின்றார் .

யார் இங்கு டபுள் கேம் விளையாடுகின்றார் என்பது எல்லாருக்கும் தெரியும் 

  • கருத்துக்கள உறவுகள்

Nisha-tna

சம்பந்தன்... நடுவிலை நிண்டு, பொக்கற்றுக்குள் கை வைத்துக் கொண்டிருக்கும் படம் நல்ல வடிவாய் இருக்கு.
நாவூறு படப் போகுது, அவரின், அல்லக்கைகள்  ஆரும்... மிளகாய் சுத்திப் போடுங்க.:grin:

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரன், மாவை, சம்பந்தருக்குப் பதிலா கஜே கோஸ்டியை நினைச்சுப் பாத்தன். சிரிப்பு வந்திடிச்சு! :grin:

  • கருத்துக்கள உறவுகள்

கடமைக்கு பேசிட்டு.. மிக்சர் சாப்பிட்டு கிளம்பினது தான். அமெரிக்கா தனது நலனுக்காக எம் துயரை பாவிக்கும் ஒரு நாடு. அதுக்கு தேவைன்னா மனித உரிமையை முதன்மைப்படுத்தும்.. தேவைல்லைன்னா.. அதையே காலில போட்டு மிதிக்கும். இவங்கள நம்பி...?! அமெரிக்காவுக்கு மேற்குலகிற்கு.. அழுத்தம் கொடுக்கவும் ஒரு அணுகுமுறை அவசியம். அதற்கான இராஜதந்திர அறிவோ.. அணுகுமுறையோ கூட்டமைப்பிடம் இல்லை. புலம்பெயர் மக்களையும் பிரிச்சு.. பேசி.. பலவீனப்படுத்திட்டு எனி எண்ணத்தை கொண்டு அழுத்தம் கொடுக்கிறது. அப்பத்தை வாங்கிக் கொடுத்தா..??! tw_blush::rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

சுத்தி சுத்தி சாப்பிட்டு ..... யானை குட்டி மாதிரி வந்திட்டா அக்கா !
உடல் எடையை கணக்கில் வைத்தாவது 
பேச்சு வார்த்தை நாடகங்களை கொஞ்சம் குறைக்கலாம். 

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்காவுக்கு ஆதரவான தீர்மானம் கொண்டு வர அமெரிக்கா தீர்மானித்து விட்டது.அதற்கு கூட்டமைப்பு ஒத்துழைக்க வேண்டும் என்று சொல்லியிருப்பார். சும்சும் கோஸ்டி சொல்லியிருக்கும் தமிழ்மக்களைப் பேய்க் காட்டுவதற்கு சர்வதேச விசாரணையை வலியுறுத்தியதாகச் சொல்லியிருப்பார்கள். சில வேளை விக்கி ஐயா அதை வலியுறுத்தி இருப்பார். சம்பந்தர் பொக்கற்றுக்களை கையை வைச்சுக் கொண்டு பம்மிக் கொண்டு நிற்பதால் அதுக்குள்ளே ஏதேன் வாங்கி வைச்சிருக்கிறராரோ?

 

Edited by புலவர்

  • கருத்துக்கள உறவுகள்

பிளேன் ரீக்குக் கடலை வடை நல்லாயிருக்குமா அல்லது உழுந்து வடை நல்லாயிருக்குமா என்று விளங்கப் படுதியிருப்பினம் போல..!

ஒன்றரை மணி நேரம் மிக நீண்ட நேரம்!

எங்களைத் தான் விடுங்கள்... நாங்கள் புலம் பெயர்ஸ்!

புள்ளடி போட்டவங்களுக்காகவாவது ஒரு அறிக்கை விட்டால் நல்லது!

  • கருத்துக்கள உறவுகள்

பாவம் ஓ!நாய்கள்! ஆடுகள் நனைகின்றன என்று தொடர்ச்சியாக அழுதுகொண்டு இருக்கின்றன. ஆடுகள் நனைந்தால்தானே ஓநாய்களுக்குப் பிழைப்பு!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.