Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

 

சிந்தனை எனை விட்டு என்றோ போனதனால்
கேட்கும் எதுவும் மனதில் பதிய மறுக்கின்றது 
 
பசிதாகம் கூட எடுக்காமல் கிடக்கின்றது
நாவின் சுவை மறந்து நாளாகி விட்டது
பச்சைத் தண்ணீர் மனம் மறுக்க எப்போதும்
பழசெல்லாம் வந்து வந்து போகின்றது 
 
காதில் கலகலப்புக் கதைகேட்டு நாளாகி
கட்டியவன் கூட காலாண்டாய் இல்லாமல்
தொட்டதுக்கும் துணைவேண்டி
துயரோடு தூக்கமிழந்து கிடக்கிறேன்
 
கடைகண்ணி சென்றும் கனகாலம் ஆகி
கண்ணாடி கூடக் கறுப்பாகிப் போச்சு
கண்பார்வை போயும் கனநாளாய் ஆச்சு
 
கோயில் குளமுமில்லை கூடிப்பேச யாருமில்லை
கொண்டை மயிர் முடியக் கூந்தலில்லை
கோதிக் காயவைக்கும் நிலையுமில்லை

பத்துப் பிள்ளை பெற்றும் பசியாற வழியுமில்லை

பட்டினி கிடக்கவும் பாள்மனது கேட்குதில்லை

பக்கத்தில் இருப்போரின் பாசம் இழந்து நான்
பரிதவித்துக்கொண்டே இருக்கின்றேன்

எதிர்பார்த்து ஏங்கி நிற்க யாருமின்றி 

இன்னும் ஏன் தான் இவ்வுலகில் ஆசைகொண்டு
இருப்போரை வருத்தி கூடகன்று போகாமல்
கொடும்கனலில் கூடுகாயக் காத்திருக்கிறேனோ
  • கருத்துக்கள உறவுகள்

முதுமையை இதைவிட யாரும் செழுமையாய் எடுத்தியம்ப முடியாது...!

நன்றி சகோதரி....!

 

 

 

சிந்தனை எனை விட்டு என்றோ போனதனால்
கேட்கும் எதுவும் மனதில் பதிய மறுக்கின்றது 
 
....

அழகான வரிகள்
அர்த்தங்கள் ஆயிரமான
சுமையான கவிதை

தொடருங்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முதுமையை இதைவிட யாரும் செழுமையாய் எடுத்தியம்ப முடியாது...!

நன்றி சகோதரி....!

நன்றி சுவி அண்ணா

 

அழகான வரிகள்
அர்த்தங்கள் ஆயிரமான
சுமையான கவிதை

தொடருங்கள்.

நன்றி ஜீவன் சிவா

 

 

 

நன்றி தமிழினி

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலம்பெயர்ந்த நாடுகளில் வசிக்கும் எமக்கு முதுமை கொடுமையானது.

  • கருத்துக்கள உறவுகள்

கவிதைக்கு நன்றி.... சுமே!

வாசிக்கவே வயித்தைக் கலக்குது..!tw_dizzy:

முதுமை இவ்வளவு மோசமாகவா இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர்ந்த நாடுகளில் வசிக்கும் எமக்கு முதுமை கொடுமையானது.

உண்மைதான். நன்றி குமாரசாமி அண்ணா.

கவிதைக்கு நன்றி.... சுமே!

வாசிக்கவே வயித்தைக் கலக்குது..!tw_dizzy:

முதுமை இவ்வளவு மோசமாகவா இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?

உண்மை வயித்தைக் கலக்கும் தான்.  தாயைத் தன்னுடன் வைத்திருந்து பார்த்து இப்ப அவர் பம்பச்சுடன் வாக்குமாறிய நிலையை எட்டிவிட்டார்.  தனக்கு இப்ப பம்பஸ் மாத்தியே வெறுத்துவிட்டது என்று அந்தப் பெண் சொன்னபோது. எனக்கு அவளைப் பார்க்கப் பாவமாக இருந்தது. ஏனெனில் அத்தனை அன்பாகத் தாயைப் பார்த்தவள்.

  • கருத்துக்கள உறவுகள்

அழகான கவிதை! அழகைப் பாம்பு வடிவத்தில் கண்டதுபோல் ஒரு உணர்வையும் உண்டாக்கிவிட்டது.

இந்தப் பயம்நீங்க நான் அறிந்தவற்றில் இருந்து சில குறிப்புகள்;

 

"எப்போதும் காரியம் ஆற்றிக்கொண்டும், ஏதாவது புதியதைக் கற்றுக்கொண்ட வண்ணமும் இருந்தால் முதுமையை உணரமாட்டீர்கள்".

விசம் உண்டு இறப்பதற்கு சில மணி நேரத்துக்கு முன்பாக இரவில் அவருடைய சிறைக்கூட அடுத்த அறையில் இருந்த ஒருவன்  குழலில் வாசித்துக்கொண்டிருந்தான். அந்த இசையைக் கேட்டுப் பாராட்டிய சாக்ரட்டீசு,  தமக்கும் குழல் வாசிக்கக் கற்றுத்தருமாறு கேட்டார். அடுத்த நாள் இறக்கப்போகும் உங்களுக்கு இந்த இசையைக் கற்று என்ன பயன்!” என்று கேட்டான் அந்த இசைஞன்.  “என் ஆயுள் முடியுமுன்னர் இன்னும் ஒன்றைக் கூடுதலாக அறிந்துகொண்டு சாவதும் ஒரு பேறுதானே!" என்று சாக்ரடீசு பதில் அளித்திருந்தார். 

ஜப்பானியர்களுக்கு மகிழ்ச்சியாக முதுமையடையத் தெரிந்திருக்கிறது, ஜப்பானில் நூறு வயதுக்கு மேற்பட்டவர்கள் இருபத்தையாயிரம் பேர்கள் இருக்கிறார்கள்.

எழுபத்தைந்து வயதிற்கு மேலும் உடலிலும், மனதிலும் சக்தியிருக்கும், சிந்தனையும் செயல்படும். புதிதாக எதையாவதைச் செய்யவேண்டும். அது இதுவரைக்கும் செய்யாததாக இருக்கவேண்டும்.

வாழ்க்கையின் பெரும்பகுதியில் வேலை, குடும்பப்பொறுப்பு என்றவாறு செலவிட்டுப்போய்விட்ட காலத்தையும் சுய அடையாளத்தையும் முதுமையில் பெறமுயலவேண்டும். :) 

  • கருத்துக்கள உறவுகள்

முதுமை என்பது அனைவரும் சந்திக்க தயங்கும் விடயம்தான். ஆனாலும் சந்திக்கும் வரை அதன் கனம் தொிவதில்லை. என்னதான் சுய அடையாளத்தை பெற முயன்றாலும் வாழ்க்கையின் பெரும் பகுதியை குடும்பம் குழந்தைகள் என்று ஓடி ஓடி உழைத்து ஓய்ந்திருக்கும் பொழுதில் அடுத்திருப்பவாின் உதவியின்றி இயங்கமுடியாத நிலை வந்தால் அதன் கனம் மனதை காயப்படுத்தாமல் இருக்காது, எம்மால் இயங்க முடிந்தவரையுமாவது எம் சுயஅடையாளத்தை விட்டுக் கொடுக்காமல் வாழ்வது புத்திசாலித்தனம். கனமான கவிதை. பாராட்டுக்கள்

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 07/11/2015, 08:29:34, Paanch said:

அழகான கவிதை! அழகைப் பாம்பு வடிவத்தில் கண்டதுபோல் ஒரு உணர்வையும் உண்டாக்கிவிட்டது.

 

இந்தப் பயம்நீங்க நான் அறிந்தவற்றில் இருந்து சில குறிப்புகள்;

 

 

"எப்போதும் காரியம் ஆற்றிக்கொண்டும், ஏதாவது புதியதைக் கற்றுக்கொண்ட வண்ணமும் இருந்தால் முதுமையை உணரமாட்டீர்கள்".

 

விசம் உண்டு இறப்பதற்கு சில மணி நேரத்துக்கு முன்பாக இரவில் அவருடைய சிறைக்கூட அடுத்த அறையில் இருந்த ஒருவன்  குழலில் வாசித்துக்கொண்டிருந்தான். அந்த இசையைக் கேட்டுப் பாராட்டிய சாக்ரட்டீசு,  தமக்கும் குழல் வாசிக்கக் கற்றுத்தருமாறு கேட்டார். அடுத்த நாள் இறக்கப்போகும் உங்களுக்கு இந்த இசையைக் கற்று என்ன பயன்!” என்று கேட்டான் அந்த இசைஞன்.  “என் ஆயுள் முடியுமுன்னர் இன்னும் ஒன்றைக் கூடுதலாக அறிந்துகொண்டு சாவதும் ஒரு பேறுதானே!" என்று சாக்ரடீசு பதில் அளித்திருந்தார். 

 

ஜப்பானியர்களுக்கு மகிழ்ச்சியாக முதுமையடையத் தெரிந்திருக்கிறது, ஜப்பானில் நூறு வயதுக்கு மேற்பட்டவர்கள் இருபத்தையாயிரம் பேர்கள் இருக்கிறார்கள்.

எழுபத்தைந்து வயதிற்கு மேலும் உடலிலும், மனதிலும் சக்தியிருக்கும், சிந்தனையும் செயல்படும். புதிதாக எதையாவதைச் செய்யவேண்டும். அது இதுவரைக்கும் செய்யாததாக இருக்கவேண்டும்.

 

 

வாழ்க்கையின் பெரும்பகுதியில் வேலை, குடும்பப்பொறுப்பு என்றவாறு செலவிட்டுப்போய்விட்ட காலத்தையும் சுய அடையாளத்தையும் முதுமையில் பெறமுயலவேண்டும். :) 

 

 

நீங்கள் கூறுவது சரிதான் பாஞ்ச்.என் அம்மாவும் அப்பாவும் 80, 87 வயதுவரை எதோ செய்துகொண்டே வாழ்ந்தார்கள். முதுமை என்பதை அவர்கள் உணர ஆரம்பித்ததும்  இவ்வுலகை விட்டுச் சென்றுவிட்டார்கள். ஆனால் எமக்கு அப்படி வரம் கிடைக்குமா ??

On 07/11/2015, 15:38:08, Kavallur Kanmani said:

முதுமை என்பது அனைவரும் சந்திக்க தயங்கும் விடயம்தான். ஆனாலும் சந்திக்கும் வரை அதன் கனம் தொிவதில்லை. என்னதான் சுய அடையாளத்தை பெற முயன்றாலும் வாழ்க்கையின் பெரும் பகுதியை குடும்பம் குழந்தைகள் என்று ஓடி ஓடி உழைத்து ஓய்ந்திருக்கும் பொழுதில் அடுத்திருப்பவாின் உதவியின்றி இயங்கமுடியாத நிலை வந்தால் அதன் கனம் மனதை காயப்படுத்தாமல் இருக்காது, எம்மால் இயங்க முடிந்தவரையுமாவது எம் சுயஅடையாளத்தை விட்டுக் கொடுக்காமல் வாழ்வது புத்திசாலித்தனம். கனமான கவிதை. பாராட்டுக்கள்

 

 

நம்மைப் போல எல்லாவற்றையும் தாங்கும் சக்தியை எம் பிள்ளைகள் பெற்றிருக்கிறார்களா தெரியவில்லை. எம்மால் சுயமாக இயங்க முடியும் வரை யாரின் உதவியுமின்றி வாழ்ந்துவிட்டு இறந்துவிடவேண்டும். அதன் பின் இருந்து மற்றவர் முகச் சுளிப்புக்கு ஆளாகவே கூடாது அக்கா. ஆனாலும் எல்லாம் நாம் நினைப்பதுபோலா நடந்துவிடுகிறது?

பச்சை தந்த அர்ஜுன், சுவி அண்ணா, கண்மணி அக்கா, தமிழினி, கரு, சசி , புங்கை, தமிழினி, பாஞ்ச ஆகியோருக்கு நன்றி 

  • கருத்துக்கள உறவுகள்
On 06/11/2015, 09:56:12, குமாரசாமி said:

புலம்பெயர்ந்த நாடுகளில் வசிக்கும் எமக்கு முதுமை கொடுமையானது.

செல்வச்சன்னிதி முருகன் ஆலயத்தில் இருக்கும் முதியவ‌ர்களை கண்டபின்பு எனக்கு உங்களது கருத்துடன் உடன்படமுடியவில்லை.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 09/11/2015, 07:37:29, putthan said:

செல்வச்சன்னிதி முருகன் ஆலயத்தில் இருக்கும் முதியவ‌ர்களை கண்டபின்பு எனக்கு உங்களது கருத்துடன் உடன்படமுடியவில்லை.....

அங்கு எப்படி மிக்கவும் வசதியாக அவர்கள் இருக்கின்றனரோ புத்தன்??? விளக்கமாகக் கூறுங்கள் 

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அங்கு எப்படி மிக்கவும் வசதியாக அவர்கள் இருக்கின்றனரோ புத்தன்??? விளக்கமாகக் கூறுங்கள் 

கு.சாமி அண்ணர் எழுதியிருந்தார் புலம்பெயர்ந்த மண்ணில் வாழ்பவ‌ர்களின் முதுமை கொடியது என்று ,ஆனால் தாயகத்தில் வாழ்பவர்களின் முதுமையும் கொடியது என்று சொல்ல வந்தேன்.புலம்பெய‌ர்ந்த மண்ணில் நெர்ஸிங்கோமிலாவது இருக்கலாம்.ஆனால் அங்கு பணவசதிய‌ற்றவர்களுக்கு செல்வசன்னிதி மடமும் கோவிலும்தான் அடைக்கலம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அங்கு மனிதர்களுக்கான மதிப்புக் குறைன்க்கொண்டே வருகிறது என்றும் பணம் தான் பெரும்பாலானவர்களுக்குப் பிரதானம் என்றும் என் நண்பி சொன்னாள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அங்கு மனிதர்களுக்கான மதிப்புக் குறைன்க்கொண்டே வருகிறது என்றும் பணம் தான் பெரும்பாலானவர்களுக்குப் பிரதானம் என்றும் என் நண்பி சொன்னாள்.

இன்றைய காலகட்டத்தில் உலகம் முழுவதும் மனிதாபிமானத்தை விடுத்து பணமே முதற்சிந்தனையாக இருக்கின்றது.
இருப்பினும்...
எமது நாட்டிற்கு இயற்கை தந்த கொடை காலநிலை.
நான்கு சுவருக்குள் அடங்கி இருக்கவேண்டிய அவசியம் அங்கில்லை.

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆனாலும் அங்கும் பலரை வெளிநாட்டில் உள்ள பிள்ளைகள் ஹோமில் கொண்டுபோய் சேர்ப்பதாகக் கேள்வி குமாரசாமி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல படைப்பு, வாழ்த்துகள்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.