Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுமந்திரனின் பதில் என்ன?

Featured Replies

by Jathindra - on November 8, 2015 

M-A-Sumanthiran-Sri-Lankan-e144695618852

தமிழ்த் தேசிய அரசியலில் ஆக்கபூர்வமான விடயங்கள் நடைபெறுகிறதோ இல்லையோ, ஆனால் அவ்வப்போது சர்ச்சைகளுக்கு மட்டும் குறைவில்லை. அண்மைக்காலமாக இப்படியான சர்ச்சைகள் பெரும்பாலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளில் ஒன்றான இலங்கை தமிழரசு கட்சியில், சம்பந்தனுக்கு அடுத்த நிலையில் நோக்கப்படுபவரும், கூட்டமைப்பின் சார்பில் அதன் சர்வதேச விவகாரங்களை கையாளும் அதிகாரம்மிக்கவருமான ஆபிரகாம் மதியாபரணம் சுமந்திரனின் கருத்துக்களை அடியொற்றியே வட்டமிடுகின்றன. இதற்கு என்ன காரணம்? ஏன் அண்மைக்கலாமாக சுமந்திரன் தெரிவிக்கும் கருத்துக்கள் மட்டுமே சர்ச்சைக்குரியவையாக நோக்கப்படுகின்றது அல்லது சர்ச்சைகளை ஏற்படுத்துகின்றது. சுமந்திரன் சொல்ல முற்படுவதை மற்றவர்கள் விளங்கிக் கொள்ளவில்லையா அல்லது சுமந்திரன் எதனை எப்போது சொல்ல வேண்டும் என்னும் அரசியல் தெரியாது பேசுகின்றாரா? அல்லது சுமந்திரனுக்கு தான் வகிக்கும் அரசியல் வகிபங்கு தொடர்பில் தெளிவில்லையா? இந்தக் கட்டுரை எழுதிக் கொண்டிருக்கும் போது சர்ச்சைகளை ஏற்படுத்தும் வகையில் சுமந்திரன் தொடர்பில் பிறிதொரு செய்தியும் வெளியாகியிருக்கிறது. இலங்கை இராணுவத்தை கௌரவிக்கும் வகையில் சுமந்திரன், ஏனைய சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்கள் போன்று பொப்பி மலரை தன்னுடைய ஆடையில் அணிந்தவாறு நாடாளுமன்றத்திற்கு சமூகமளித்ததாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன. இப்படியான செயல்கள் மூலம் உண்மையிலேயே சுமந்திரன் தமிழ் மக்களுக்கு என்ன கூற வருகின்றார்?

சில தினங்களுக்கு முன்னர், வடக்கிலிருந்து முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்ட 25ஆவது ஆண்டின் பூர்த்தியை நினைவு கூர்ந்து இடம்பெற்ற நிகழ்வொன்றில் பேசியபோது, சுமந்திரன் தெரிவித்திருந்த விடயங்கள் தமிழ்த் தேசிய அரசியல் சூழலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கின்றது. சுமந்திரன் அப்படியென்ன கூறியிருக்கின்றார்? சுமந்திரன் கூறுகின்றார் – யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம் மக்களை வெளியேற்றியமையானது ஒரு இனச்சுத்திகரிப்பாகும். இதனை எண்ணி நான் வெட்கித் தலைகுனிகின்றேன். இதற்கு ஒவ்வொரு தமிழரும் பொறுப்பேற்க வேண்டும். இது தொடர்பில் வடக்கு மாகாண சபையில் ஒரு பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும். அப்படியான ஒரு பிரேரணைணை வடக்கு மாகாண சபை நிறைவேற்றாதுவிட்டால், சர்வதேசம் தமிழர்கள் மீதான இனப்படுகொலை விவகாரத்தையும் ஒரு விடயமாக கொள்ளாது என்றும் சுமந்திரன் தெரிவித்திருக்கின்றார். ஏற்கனவே, வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன், இனப்படுகொலை தொடர்பில் வடக்கு மாகாண சபையில் பிரேரணையொன்றை நிறைவேற்றியிருக்கின்ற நிலையில்தான், சுமந்திரன் இவ்வாறானதொரு கருத்தை தெரிவித்திருக்கின்றார். சுமந்திரனின் கருத்துக்கள் தொடர்பான அதிருப்தியை விடவும் சுமந்திரன் ஏன் திடீரென்று இப்படியெல்லாம் கூறுகின்றார். அதுவும், குறிப்பாக தேசிய அரசு போர்க் குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களால் பாதிக்கப்பட்ட மக்களுடனான கலந்துரையாடல்களை செய்வதற்கான வேலைத்திட்டங்களை ஆரம்பித்திருக்கின்ற சூழலில், வடக்கு மாகாண சபையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான பிரேரணை ஒன்றை கொண்டுவர வேண்டுமென்று வாதிடுகின்றார். இதன் மூலம் சுமந்திரன் யாரை திருப்திப்படுத்த விரும்புகிறார்?

சுமந்திரன் கூறும் விடயமொன்று நடைபெறாமலில்லை. அது நடைபெற்றது. 1990இல் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு யாழ்ப்பாணத்தில் வாழ்ந்துவந்த முஸ்லிம் மக்களை 24 மணித்தியால காலக்கெடுவில் வலிந்து வெளியேற்றியிருந்தது. அன்றைய சூழலில் கிழக்கில் தமிழ் – முஸ்லிம் முரண்பாடுகள் தீவிரமடைந்திருந்தன. இதனை சரியாக கையாள இருதரப்பினருமே தவறியிருந்தனர். ஆனால், அரசு இதனை கச்சிதமாகப் பயன்படுத்திக் கொண்டது. அன்றைய சூழலில் கப்டன் முனாஸ் என்பவரின் தலைமையில் ஒரு சிறப்பு இராணுவப்பிரிவு மேற்படி முரண்பாட்டை பெருப்பித்து தமிழ் – முஸ்லிம் மக்களுக்கிடையில் முரண்பாடுகளையும் குரோதங்களையும் ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டிருந்தது. ஆரம்பத்தில் முனாஸ் என்பவர் உண்மையிலேயே ஒரு முஸ்லிம் என்றே பலரும் நம்பியிருந்தனர். ஆனால், சில வருடங்களின் பின்னர், அவர் ஒரு முஸ்லிம் அல்ல, மாறாக அவர் இராணுவ புலனாய்வு பிரிவைச் சேர்ந்த சிங்களவர் என்பது தெரியவந்தது. ஒரு சிங்களவர் ஏன், தனது புலனாய்வு நடவடிக்கைகளை, முஸ்லிம் பெயர் தரித்து மேற்கொண்டார்? இதிலிருந்து எந்தளவிற்கு அரசு தமிழ் – முஸ்லிம் முரண்பாட்டை கையாளுவதில் கரிசனை கொண்டிருந்தது என்பது தெளிவாகும். இந்தக் காலத்தில் முஸ்லிம் ஊர்க்காவல் படையினர், கிழக்கில் தமிழ் மக்களுக்கு எதிராக பல அநியாயங்களை மேற்கொண்டிருந்தனர். இவ்வாறானதொரு சூழலில் வடக்கிலும் அவ்வாறானதொரு நிலைமை வந்துவிடுமோ என்று அஞ்சிய விடுதலைப் புலிகளின் தலைமை முஸ்லிம் மக்களை வெளியேற்றும் முடிவை எடுத்தது. அந்த நேரத்தில் யோகரட்ணம் யோகி இது தொடர்பில் ஒரு அறிக்கையையும் வெளியிட்டிருந்ததாக நினைவு. சிறிலங்கா இராணுவத்துடன் மோதல்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஒரு கெரில்லா அமைப்பு என்னும் வகையில் விடுதலைப் புலிகளிடம் இராணுவப் பார்வை ஒன்றே இருந்தது. இராணுவ வாதம் என்பது எப்போதும் வழிமுறைகளில் கவனம் கொள்வதில்லை, மாறாக முடிவுகளில் மட்டுமே கரிசனை கொள்ளும். அப்படியானதொரு பார்வைதான், அரசியல் விளைவுகளை கருத்தில் கொள்ளாது விடுதலைப் புலிகள் அவ்வாறானதொரு தவறிழைக்கக் காரணமாகியது. விடுதலைப் புலிகள் அமைப்பு எக்காரணத்திற்காக அதனை செய்திருப்பினும் கூட அது ஒரு வரலாற்றுத் தவறு என்பதில் இரு வேறு கருத்திற்கிடமில்லை. ஆனால், இது தொடர்பில் சுமந்திரன் புதிதாக எதையோ கண்டுபிடித்தது போன்று பேசுவதுதான் பலரது விசனத்திற்கு காரணம் போலும்.

வடக்கு முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டமை தொடர்பில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் 1994ஆம் ஆண்டு பி.பி.சிக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றின் போது, முஸ்லிம் மக்களின் வெளியேற்றம் தொடர்பில் வருத்தம் தெரிவித்திருந்தார். யாழ்ப்பாணம் முஸ்லிம்களின் சொந்த நிலம் என்று குறிப்பிட்டிருந்த பிரபாகரன், துரதிஸ்டவசமாக சிக்கலானதொரு சூழ்நிலையின் விளைவாக, முஸ்லிம் மக்கள் அகதிகளாக நேர்ந்தது. இதற்கான நாம் மிகவும் வேதனையுறுகிறோம் என்று குறிப்பிட்டிருந்தார். இதனை சுமந்திரன் அறியவில்லையா? இது போதாதென்று விடுதலைப் புலிகளின் தத்துவ ஆசிரியர் அன்ரன் பாலசிங்கம், 2002இல், நான் முஸ்லிம் மக்களிடம் மன்னிப்பு கோருகின்றேன், நாங்கள் உங்களுடன் பேசி, பிரச்சினைகளை தீர்ப்பதற்கு விருப்பம் கொண்டிருக்கிறோம் என்று குறிப்பிட்டிருந்தார். இதனையும் சுமந்திரன் அறியவில்லையா? வடக்கு முஸ்லிம் மக்கள் தொடர்பில் விடுதலைப் புலிகளால் இழைக்கப்பட்ட தவறிற்கு விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்தும், அவர்களுக்கு வெளியிலும் பல தடவைகள் வருத்தம் தெரிவிக்கப்பட்டிருப்பதுடன், பல தடவைகள் மன்னிப்பும் கோரப்பட்டுவிட்டது. ஆனால், அன்று பலரும் இவ்வாறு வருத்தம் தெரிவித்த வேளையில் சுமந்திரன் என்றொரு பெயர் எங்குமே தெரிந்திருக்கவில்லை. தவறு என்று தெரியும் ஒன்றிற்காக வருத்தம் தெரிவிப்பதற்கும், அதனை கண்டிப்பதற்கும் நாடாளுமன்ற பதவிகள் தேவையில்லை. மனித உரிமைசார்ந்த உணர்வுநிலை ஒன்றே போதும். ஆனால், 2009இற்கு முன்னர் சுமந்திரன் அப்படியான உணர்வுநிலைக்கு ஆளாகாமை தொடர்பில் ஆச்சரியம்தான் ஏற்படுகின்றது. இது தொடர்பில் சுமந்திரனின் பதில் என்ன?

இன்று, வடக்கு மாகாண சபையில் முஸ்லிம் மக்கள் வெளியேற்றம் தொடர்பில் பிரேரணை கொண்டுவர வேண்டுமென்று கூறும் சுமந்திரன், முஸ்லிம் தரப்பினால் தமிழ் மக்கள் தொடர்பில் இழைக்கப்பட்ட தவறுகள் தொடர்பில் எப்போதாவது சிந்தித்ததுண்டா? முஸ்லிம் தலைமைகளும் சரி முஸ்லிம் புத்தஜீவிகளும் சரி அவர்கள் தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு எப்போதுமே பகிரங்க தளத்தில் ஆதரவாக இருந்ததில்லை. சிலர் விதிவிலக்காக இருக்கலாம். இறுதிக்கட்ட யுத்தத்தின் போது நாற்பதாயிரத்திற்கு மேற்பட்ட தமிழ் மக்கள் கொல்லப்பட்ட போது மஹிந்த அரசின் பங்காளிகளாக இருந்த எந்தவொரு முஸ்லிம் தலைமையாவது அது தொடர்பில் ஒரு வார்த்தைதானும் பேசியதுண்டா? இது தொடர்பில் சுமந்திரனின் பதில் என்ன? ஈராக்கிலும், பாலஸ்தீனத்திலும் மக்கள் கொல்லப்படுவதாக அமெரிக்க தூதரகத்திற்கு முன்னால் கோஷமிட்ட முஸ்லிம் தலைமைகளால் அருகிலிருக்கும் வன்னியில் இடம்பெற்ற யுத்தத்தை நிறுத்துங்கள் என்று கோஷமெழுப்ப முடியாதளவிற்கு, அவர்களை தடுத்து நிறுத்திய காரணி எது? இது தொடர்பில் சுமந்திரனின் பதில் என்ன? மஹிந்த ராஜபக்‌ஷ அரசில் சகல சவுகரியங்களையும் அனுபவித்துக் கொண்டிருக்கும் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நியாயமான எந்தவொரு விடயத்திற்கும் முஸ்லிம் தலைமைகள் ஒத்துழைக்கவில்லை, மாறாக மஹிந்தவின் அதிகார விருப்பின் ஒத்தோடிகளாகவே முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து பிரதான முஸ்லிம் கட்சிகளும் இருந்தன. இது தொடர்பில் சுமந்திரனின் கருத்து என்ன?

சுமந்திரன் விபரம் இல்லாமல் பேசக் கூடியவர் என்றால் அதனை எவரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஆனால், அவர் ஏன் இப்படியெல்லாம் பேசுகின்றார் என்பதில்தான் பலருக்கும் குழப்பமாக இருக்கின்றது. இந்த தீவில் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டது 1990இல் மட்டும்தான். ஆனால், தமிழ் மக்கள், தமிழர்கள் என்னும் ஒரேயோரு காரணத்திற்காகவே பல தடவைகள் வெளியேற்றப்பட்டிருக்கின்றனர். அவ்வாறான வெளியேற்றங்களில் ஒன்றுகூடவா இனச்சுத்திகரிப்பு என்னும் வரையறைக்குள் அடங்கவில்லை? இவ்வாறு தமிழ் மக்கள் வெளியேற்றப்பட்ட போதெல்லாம் – தமிழ் மக்கள் அழிவுக்குட்பட்ட பொதெல்லாம் – சிங்கள ஆட்சியாளர்களை தடுத்து நிறுத்தி, தமிழ் மக்களை பாதுகாக்க தவறியதில் ஒவ்வொரு சிங்களவருக்கும் தொடர்பில்லையா? அதற்கு அவர்கள் பொறுப்புச் சொல்ல வேண்டியதில்லையா? இதற்கென நாடாளுமன்றத்தில் ஒரு விசேட விவாதம் தேவையில்லையா? ஒரு சட்ட நிபுனர் என்னும் வகையில் இது தொடர்பில் சுமந்திரனின் பதில் என்ன?

முஸ்லிம்கள் வெளியேற்றம் தொடர்பில் வடக்கு மாகாண சபையில் பிரேரணை நிறைவேற்றினால்தான் சர்வதேசம் தமிழ் மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலை விவகாரத்தை ஒரு விடயமாக எடுத்துக்கொள்ளும் என்பதுதான் சுமந்திரனின் நிபுனத்துவ விளக்கம் என்றால், இது தொடர்பில் ஏதேனும் வெளிநாட்டு உதாரணங்கள் இருக்கின்றனவா அல்லது சர்வதேச சட்டத்தில் ஏதும் விளக்கங்கள் இருக்கின்றனவா? இது தொடர்பில் சுமந்திரனின் பதில் என்ன?

முதலில் இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக இனப்படுகொலை ஒன்று இடம்பெற்றுள்ளது என்னும் வடக்கு முதலமைச்சரின் நிலைப்பாட்டை சுமந்திரன் ஏற்றுக் கொள்கின்றாரா? வடக்கு மக்களின் 58,000 வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றம் சென்றிருக்கும் சுமந்திரனாலேயே வடக்கு மாகாண சபையின் பிரேரணையை ஏற்றுக்கொள்ள முடியாது போனால், அதன் தார்ப்பரியத்தை சர்வதேசம் எங்கனம் விளங்கிக்கொள்ள முயற்சிக்கும்? இதற்கெல்லாம் சுமந்திரனின் பதில் என்ன?

சில விடயங்கள் தொடர்பில் பேசுவது தவறல்ல. ஆனால், அதனை பேசுவதன் மூலம் நாம் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களுக்கு என்ன நன்மை விளையப் போகிறது என்பதுதான் முக்கியம். ஏனெனில், தமிழ் மக்கள் தங்களின் நலன்களை வென்று தருவார்கள் என்னும் நம்பிக்கையில்தான் சுமந்திரன் போன்றவர்களை தெரிவு செய்திருக்கின்றனர். 2009இற்கு முன்னர் சுமந்திரனை அவர் சார்ந்த சட்டத்துறையுடன் தொடர்புடைய சிறிய குழுவினருக்கு மட்டுமே தெரிந்திருந்தது. இன்று சுமந்திரனின் தொடர்பு வட்டம் மிகவும் பெருத்துவிட்டது. இன்று சுமந்திரன் ஒரு செல்வாக்கு மிக்க தமிழ் அரசியல் தலைவர். இந்த தகுதிநிலையில் நின்று சுமந்திரன் பேசும் ஒவ்வொரு விடயங்களும் தமிழ் அரசியலில் அதிர்வுகளை ஏற்படுத்தும். இதனை விளங்கிக் கொண்டுதான் சுமந்திரன் செயற்படுகின்றாரா? அன்றைய தமிழ் – முஸ்லிம் முரண்பாட்டை இலங்கை அரசு கச்சிதமாக கையாண்டு வெற்றியீட்டிய அனுபவத்தை சுமந்திரன் எண்ணிப்பார்க்கவில்லையா?

 

http://maatram.org/?p=3906

மிக மிக தெளிவாக ஆராயப்பட்டிருக்கிறது ...

சுமந்திரன் ... விடை? ... "பிராந்திய வல்லரசு"!

... இவரை தமிழரசுக்கட்சிக்குள் நுளைத்தார்கள்! பல தலைவர்களை ஓரங்கட்டச்செய்து தமிழரசு கட்சி தலைவராக்கும் நிலைக்கு கொண்டு வந்திருக்கிறார்கள்! இன்று இவரை வைத்து ஆட வேண்டிய ஆட்டங்களை எல்லாம் ஆடுகிறது ... அதில் ஒன்றுதான் தமிழ்த்தேசியத்துக்கான தமிழரசு கட்சி/கூட்டமைப்பின் இலக்கை உடைத்து எறிவது!

... இலங்கைத்தீவில் ஆயுதப்போராட்டத்தை சர்வதேசத்துடன் இணைந்து முடிபுக்கு கொண்டு வந்தது இந்தியாதான்! ... இறுதியுத்தத்தில் இந்திய இராணுவம் முதல் நச்சுவாயுக்களின் தாக்குதல் வரை!

.... இன்று இந்திய  நலனுக்காக, இலங்கைத்தீவில் தமிழர்களின் ஜனநாயக குரல்களையும் முடக்க வேண்டிய தேவை! ... இதற்கான ஒரு ஆயுதமே "சுமந்திரன்"!

தற்போது IBC தமிழ் தொலைக்காட்சியில், யாழ் ஊடக மையத்தில், அண்மையில் கடும் நிபந்தனைகளுடன் பிணையில் விடுவிக்கப்பட்ட அரசியல் கைதி ஒருவர் ... தான் மீண்டும் பொய்க்குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு கைது செய்யப்படலாம் என்று தெரிந்தும் ... உண்ணாவிரதமிருக்கும் சக அரசியல் கைதிகளின் உண்மை நிலை தொடர்பாக விளக்கமளித்திருந்தார்! 

அதனை பாருங்கள் சும்/சம் விசிலடித்தான் குஞ்சுகளே! ... உண்மை புரியும்!

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பிலிருந்து தமிழரசுக்  கட்சி ஓரங்கட்டப்பட்டால் ஒழிய
வேறு வழியில்லை.
கூட்டமைப்பில் இருக்கும் மாற்றுக் கட்சிகள் சாம் சும் இற்கு ஆமாம் போடும் வரை சாம் சும் பிரச்சனை தொடரவே வாய்ப்புக்கள் அதிகம்.
தேசியம் என்ற போர்வையில் தமிழரசுக் கட்சி தமிழர்களின் இன உணர்வுகளை விற்றுக்கொண்டே இருக்கும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த கட்டுரையாளரிற்கு பிடித்தவர் வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் பிடிக்காதவர் சுமந்திரன்-இந்த வெளிப்படை உண்மையை கட்டுரையை வாசித்துக்கொண்டுபோகும்போது புரிந்துகொள்ள முடிகிறது. அந்த வகை மனநிலையில் நின்றுகொண்டே சுமந்திரனை தேர்வு செய்த 58ஆயிரத்து சொச்சம் மக்களின் மனநிலையை தான் பிரதிபலிப்பதாக எண்ணிகொண்டு தனது விருப்பை முடிவுரையாக்குகிறார் கட்டுரையாளர். வடமாகாண சபையில் முதலமைச்சர் வெளியிட்ட தீர்மானத்தை அப்படியே சுமந்திரன் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று கட்டுரையாளர் கருதுகிறார். சுமந்திரனின் கருத்தா அல்லது புலம்பெயர் தீவிர தமிழ்தேசிய வதிகளின் கருத்தை பிரதி பலிக்கும் இந்த கட்டுரையாளரின் கருத்தா மக்களின் கருத்து என்பதை அறிய அடுத்த தேர்தல்வரை காத்திருக்கவேண்டும் என்பதுதான் கொஞ்சம் பொறுமையை சோதிக்கும் விடயம்.

  • கருத்துக்கள உறவுகள்
On 11/15/2015, 10:22:10, Thirdeye said:

இந்த கட்டுரையாளரிற்கு பிடித்தவர் வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் பிடிக்காதவர் சுமந்திரன்-இந்த வெளிப்படை உண்மையை கட்டுரையை வாசித்துக்கொண்டுபோகும்போது புரிந்துகொள்ள முடிகிறது. அந்த வகை மனநிலையில் நின்றுகொண்டே சுமந்திரனை தேர்வு செய்த 58ஆயிரத்து சொச்சம் மக்களின் மனநிலையை தான் பிரதிபலிப்பதாக எண்ணிகொண்டு தனது விருப்பை முடிவுரையாக்குகிறார் கட்டுரையாளர். வடமாகாண சபையில் முதலமைச்சர் வெளியிட்ட தீர்மானத்தை அப்படியே சுமந்திரன் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று கட்டுரையாளர் கருதுகிறார். சுமந்திரனின் கருத்தா அல்லது புலம்பெயர் தீவிர தமிழ்தேசிய வதிகளின் கருத்தை பிரதி பலிக்கும் இந்த கட்டுரையாளரின் கருத்தா மக்களின் கருத்து என்பதை அறிய அடுத்த தேர்தல்வரை காத்திருக்கவேண்டும் என்பதுதான் கொஞ்சம் பொறுமையை சோதிக்கும் விடயம்.

ஆனால் அதற்குள் தீர்வு வந்துவிடும் .....மறந்துவிட்டதா 2016 

1 hour ago, அக்னியஷ்த்ரா said:

ஆனால் அதற்குள் தீர்வு வந்துவிடும் .....மறந்துவிட்டதா 2016 

2016? சொன்னவரே அதை மறந்ந்திருப்பார்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, அக்னியஷ்த்ரா said:

ஆனால் அதற்குள் தீர்வு வந்துவிடும் .....மறந்துவிட்டதா 2016 

காசு தாங்கோ இது இறுதி யுத்தம் ஈழம் பிடிச்சுத் தாறம் எண்டு சொல்லி டன் கணக்கா தங்கத்தை மகிந்த சகோதரர்களுக்கு தாரைவார்த்து வடமாகாணத்தின் கிழக்குக் கடற்கரையில் அப்பாவிப் பொதுமக்களைக் காவுகொடுத்ததை விட 2016 பரவாயில்லை. 

On 15 November 2015 at 16:55:43, வாலி said:

காசு தாங்கோ இது இறுதி யுத்தம் ஈழம் பிடிச்சுத் தாறம் எண்டு சொல்லி டன் கணக்கா தங்கத்தை மகிந்த சகோதரர்களுக்கு தாரைவார்த்து வடமாகாணத்தின் கிழக்குக் கடற்கரையில் அப்பாவிப் பொதுமக்களைக் காவுகொடுத்ததை விட 2016 பரவாயில்லை. 

அப்ப உங்க தலைவர் 2016 என்னு சொன்னது தேர்தலில் வெல்ல சொன்ன மொளமாரித்தனம் என்று ஒப்புகிறீங்க. இது என்ன புதிதா ஏற்கனவே உசுப்பேற்றும் பேச் சுக்கள் மூலம் 1950 களில் இருந்து 1977 வரை இளையோரை தூண்டி பதவி எடுத்த  கூட்டத்திற்கு இப்ப நல்ல சந்தோசம். இனியென்ன வித்தியாசமான முறையில் மக்களை ஏமாற்றி பதவியை பிடிச்சுக்கலாம் . இளையோர் கள் போல தங்களையும் காவு கொடுக்கவேண்டிய தேவை அந்ததமிழரசுக்  ****** இல்லை.  

Edited by நியானி
ஒரு சொல் தணிக்கை

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, வாலி said:

காசு தாங்கோ இது இறுதி யுத்தம் ஈழம் பிடிச்சுத் தாறம் எண்டு சொல்லி டன் கணக்கா தங்கத்தை மகிந்த சகோதரர்களுக்கு தாரைவார்த்து வடமாகாணத்தின் கிழக்குக் கடற்கரையில் அப்பாவிப் பொதுமக்களைக் காவுகொடுத்ததை விட 2016 பரவாயில்லை. 

 தேர்த்தலில் வெல்ல புலிகள் தேவை. அரசுடன் பேசும் போது புலிகள் தன்னை கொல்ல வந்தார்கள். இப்படியான முல்லைமாரி தலைவரை தமிழ் மக்கள் ஏற்க வேண்டுமா?

  • கருத்துக்கள உறவுகள்
On 15 November 2015 at 17:06:07, trinco said:

அப்ப உங்க தலைவர் 2016 என்னு சொன்னது தேர்தலில் வெல்ல சொன்ன மொளமாரித்தனம் என்று ஒப்புகிறீங்க. இது என்ன புதிதா ஏற்கனவே உசுப்பேற்றும் பேச் சுக்கள் மூலம் 1950 களில் இருந்து 1977 வரை இளையோரை தூண்டி பதவி எடுத்த  கூட்டத்திற்கு இப்ப நல்ல சந்தோசம். இனியென்ன வித்தியாசமான முறையில் மக்களை ஏமாற்றி பதவியை பிடிச்சுக்கலாம் . இளையோர் கள் போல தங்களையும் காவு கொடுக்கவேண்டிய தேவை அந்ததமிழரசுக்  ******* இல்லை.  

அப்ப1976 இக்கு பிறகு நடந்த போராட்டம் "உசார் மடையர்" களின் என்பதை நீங்களே ஒப்புக்கொள்கிறீர்கள். அத்தோடு தந்தை செல்வா உட்பட இந்த மடையர்கள உசார்படுத்தியிருக்கிறார்கள் என்பதையும் மறைமுகமாக சொல்லுகிறீர்கள். அதுதான் முடிவு சுபமாகிப் போனது!

On 15 November 2015 at 17:34:58, வாலி said:

அப்ப1976 இக்கு பிறகு நடந்த போராட்டம் "உசார் மடையர்" களின் என்பதை நீங்களே ஒப்புக்கொள்கிறீர்கள். அத்தோடு தந்தை செல்வா உட்பட இந்த மடையர்கள உசார்படுத்தியிருக்கிறார்கள் என்பதையும் மறைமுகமாக சொல்லுகிறீர்கள். அதுதான் முடிவு சுபமாகிப் போனது!

உண்மை  வாலி ஒரு இனத்தினை  உசுப்பேற்றி பதவிச்சுகம் கண்டது தமிழரசுக்கட்சி. நீங்கள் கூறியது போல் உசார் மடையர்கள் தங்களை காவு கொடுக்க முன்பு உசுப்பேத்தி பதவிச்சுகம் கண்ட கூட்டம் மீண்டும் ஏமாற்றி மொளமாரித்தனம் புரிகிறது புதிய தந்திரங்களுடன். அதுவே உண்மை. தாங்கள். உசுப்பேற்றியதை மறைக்க இளையோர் மீது பழிபோட்டு மக்களை பிளாக்மெயில் பண்ணுகிறது ****** கூட்டம்.

Edited by நியானி
பண்பற்ற ஒரு சொல் தணிக்கை

கட்டுரையாளர் சுமந்திரனிடம் வைத்த நியாயமான கேள்விகளுக்கு சுமந்திரனால் மட்டுமல்ல சும் வாலுகளால் கூட பதிலளிக்க முடியாது என்பதே உண்மை. 

Edited by trinco

சுமந்திரனை "துரோகி" என்று அழைப்பது சரியோ தெரியவில்லை! ... "கூலி" என்பதே சரியான பதம் என நினைக்கிறேன்! .. கூலிக்கு ... இந்திய வல்லாதிக்கத்தினால் கூலிக்கு அமர்த்தப்பட்டிருக்கிறார்! இல்லையா????

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, வாலி said:

காசு தாங்கோ இது இறுதி யுத்தம் ஈழம் பிடிச்சுத் தாறம் எண்டு சொல்லி டன் கணக்கா தங்கத்தை மகிந்த சகோதரர்களுக்கு தாரைவார்த்து வடமாகாணத்தின் கிழக்குக் கடற்கரையில் அப்பாவிப் பொதுமக்களைக் காவுகொடுத்ததை விட 2016 பரவாயில்லை. 

நெத்தியடி என்பது இதுதானோ?

Edited by nirmalan

13 minutes ago, nirmalan said:

நெத்தியடி என்பது இதுதானோ?

யார், முள்ளிவாய்க்காலில் காவு கொடுக்கச் செய்து போட்டு .. தமிழீழ விடுதலைப் புலிகளின் புதிய தலைவராக பதவியேற்றதை கூறுகிறீர்களா?

“சாவின் விளிம்பில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளின் வேண்டுகோள்”(காணொளி)

cyclist-stuck-tgv.jpg
உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் சக தமிழ்
அரசியல் கைதிகளின் மன அழுத்தங்களை ஒட்டுமொத்த தமிழ் சமூகத்திற்கும் சர்வதேசத்திற்கும் தெளிவுபடுத்த வேண்டிய கடப்பாடு தமக்கு உள்ளதாக அண்மையில் பிணையில் விடுதலை செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் தெரிவித்தனர்.
 
யாழ். ஊடக அமையத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலே இவர்கள் இவ்வாறு தெரிவித்தனர். அத்துடன் அவர்களால் “சாவின் விளிம்பில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளின் வேண்டுகோள்” என்ற தலைப்பில் அறிக்கையொன்றும் வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் பல வருடங்கள் தடுத்து வைக்கப்பட்டு இரு தினங்களுக்கு முன்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் என்ற வகையில் தற்போது சிறையில் சாகும் வரையான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 
 
67 வருட காலமாக இலங்கை அரசியலில் ஆட்சிப் பீடம் ஏறும் அனைத்து சிங்கள பேரினவாத அரசாங்கங்களும் தமிழ் இனத்தை போலி வாக்குறுதிகள் மூலம் ஏமாற்றும் அரசியல் தந்திரங்களை மட்டுமே கையாள்கின்றனர். அரசியல் கைதிகளாகிய நமக்கு எமது விவகாரத்திலேயே தமிழ் தேசியக் கூட்டமைப்புத் தலைமையினை நம்ப வைத்துக் கழுத்தறுத்து இந்த நல்லாட்சி அரசிடம் இன்னும் சுமூகமான உறவினை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு மேற்கொள்வதன் பின்புலம் என்ன? 
 
பேரம் பேசும் சக்தியினை எமக்களியுங்கள் என்று கூறி வாக்குகளைப் பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தென்னிலங்கை அரசிடம் பேசிய பேரங்கள் என்ன? நமது மாண்பு மிகு வடக்கு முதலமைச்சர் அண்மைக்காலத்தில் ஊடகங்கள் மூலம் தெரிவித்திருந்த கருத்து சில தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பணப்பெட்டிகளை ஆட்சியாளர்களிடம் பெற்றிருந்தனர் என்பதை ஊடகங்கள் வாயிலாக வெளியிட்டிருந்தனர். இதுதான் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு அரசுடன் பேசிய பேரமா என தமிழ் மக்கள் அனைவரையும் என்ன வைக்கின்றது. 
 
ஒரு அரசியல் கைதியேனும் உயிரிழக்க நேரிட்டால் அற்கான முழுப் பொறுப்பையும் நிபந்தனையின்றி ஆதரவு வழங்கி இந்த அரசை ஆட்சிப்பீடமேற்றி தொடர்ந்தும் நிபந்தனையற்ற ஆதரவு வழங்கிவரும் தமிழத் தேசியக் கூட்டமைப்பினரே ஏற்க வேண்டும். 
 
இந்த ஊடக சந்திப்பில் எத்தகைய பிரச்சினைகள் ஏற்பட்டாலும் நாம் அதனை முழு அளவில் எதிர்கொள்ளத் தயாராக உள்ளோம். மீண்டும் எம்மீது பொய்யாக குற்றங்கள் சுமத்தப்பட்டு கைது செய்யப்படலாம். எங்கள் பிணை ரத்தாகலாம் மீண்டும் சிறையிலடைக்கப்படலாம். ஆனாலும் சிறையில் சாவோடு போராடும் எமது சக அரசியல் கைதிகள் அனைவரும் விடுதலைக்காக நாம் எதனையும் எதிர்கொள்வோம் என பிணையில் விடுதலை செய்யப்பட்ட அரசியல் கைதிகள் தெரிவித்தனர்.
23 hours ago, nirmalan said:

நெத்தியடி என்பது இதுதானோ?

நிர்மலன் நீங்கள் சொல்வது சரிதான். எனது தாய்த்தமிழீழத்தை பழிப்பவர் தாயானும் தண்டித்தே தீருவேன் என்று 1977 ல் ஒட்டோகிறாவ்ரில் கையெழுத்து போட்டு தந்த அமிர்தலிங்கம் கும்பலின் பதவி சுக திட்டத்தை  உண்மை என்று நம்பி விடுதலையை உண்மையாக நேசித்து இறந்த போராளிகளை  அவமதித்தாவது இப்போது பதவி பெறுவோம் என்ற தமிழரசு கட்சி ****** கூட்டத்தில் நரித்தனத்தை காப்பாற்ற புறப்படவர்களால் இவவாறான நெத்தியடிகளை கொடுக்க முடியும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, nirmalan said:

நெத்தியடி என்பது இதுதானோ?

84க்கு முதல் தமிழரசுக்கட்சி / கூட்டணியளின்ரை நெத்தியடியளை காணக்கிடைக்கேல்லை போலை..

  • கருத்துக்கள உறவுகள்

நான் நினைக்கிறேன் சும் புலம்பெயர் தமிழர்களுக்குப் பதில் சொல்ல எந்தக் கடப்பாடும் அற்றவர்! அரசியல் கைதிகள் விடயத்தில் இப்போது சரியாகச் செயற்படவில்லை என்று குற்றச் சாட்டு வந்திருக்கிறது. இது மட்டுமே தேர்தலில் தெரிவான பிறகு சும் மீது தாயகத் தமிழரிடம் இருந்து வந்திருக்கும் ஒரேயொரு குற்றச் சாட்டு என்பதால் இதைக் கவனிக்க வேண்டும். வெளிநாடுகளில் செய்வது போன்று தாயகத்தில் ஒரு மக்கள் சந்திப்பு (town hall meeting போல) அல்லது பத்திரிகை நிருபர் சந்திப்பு ஏதாவது செய்து இந்தக் குறைபாட்டுக்கு சும் பதிலளிக்க வேண்டும். தாயகத் தமிழரில் பெரும்பான்மையானோர் ஆதரிக்கவில்லையானால் பதவி விலகி விட வேண்டும்! இதை, ஓயாமல் ஒலியெழுப்பி வரும் புலம் பெயர் தகரடப்பாக்களுக்காகச் செய்யக் கூடாது! தாயக தமிழரின் விருப்பப் படி செய்ய வேண்டும்!

  • கருத்துக்கள உறவுகள்

ஜூதர்களும் ஒரு காலத்தில் தகர டப்பாக்களாகத்தான் இருந்தார்கள்.
இப்போது புலம்பெயர்ந்த தமிழர்களும் அந்த நிலையில் இருப்பதையிட்டுப் பெருமை கொள்ளலாம்.
தாயகத்தில் வாழும் மக்களுக்குச் சேவை செய்வதாக இருந்தால்
சுமந்திரனும் அவர் தலைவரும் தேர்தல் காலத்தில் மட்டும் உண்டியலுடன்  அடிக்கடி புலம்பெயர்வது ஏன்:cool:

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

நான் நினைக்கிறேன் சும் புலம்பெயர் தமிழர்களுக்குப் பதில் சொல்ல எந்தக் கடப்பாடும் அற்றவர்! அரசியல் கைதிகள் விடயத்தில் இப்போது சரியாகச் செயற்படவில்லை என்று குற்றச் சாட்டு வந்திருக்கிறது. இது மட்டுமே தேர்தலில் தெரிவான பிறகு சும் மீது தாயகத் தமிழரிடம் இருந்து வந்திருக்கும் ஒரேயொரு குற்றச் சாட்டு என்பதால் இதைக் கவனிக்க வேண்டும். வெளிநாடுகளில் செய்வது போன்று தாயகத்தில் ஒரு மக்கள் சந்திப்பு (town hall meeting போல) அல்லது பத்திரிகை நிருபர் சந்திப்பு ஏதாவது செய்து இந்தக் குறைபாட்டுக்கு சும் பதிலளிக்க வேண்டும். தாயகத் தமிழரில் பெரும்பான்மையானோர் ஆதரிக்கவில்லையானால் பதவி விலகி விட வேண்டும்! இதை, ஓயாமல் ஒலியெழுப்பி வரும் புலம் பெயர் தகரடப்பாக்களுக்காகச் செய்யக் கூடாது! தாயக தமிழரின் விருப்பப் படி செய்ய வேண்டும்!

தகரடப்பாக்களிடம் காசு சேர்க்க அடிக்கடி மேற்குக்கு விஜயம் செய்வது பற்றி தாங்கள் வெட்கத்தில் சொல்ல விருப்பப்படவில்லை போல.

  • கருத்துக்கள உறவுகள்

சிலருக்கு யூதர்களின் வரலாறு சரியாகத் தெரிந்து இருக்க ஞாயம் இல்லை. யூதர்களின் பலமே உருவமே இல்லாத வெற்றி கொடுக்கும் சர்வ வல்லமையுள்ள தேவன் "யெகோவா நிசி" . யூதர்களை தமிழர்களுக்கு ஒப்பிடுவது வேடிக்கை!

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, kalyani said:

தகரடப்பாக்களிடம் காசு சேர்க்க அடிக்கடி மேற்குக்கு விஜயம் செய்வது பற்றி தாங்கள் வெட்கத்தில் சொல்ல விருப்பப்படவில்லை போல.

வாத்தியார், கல்யாணி,

த.தே.கூ புலம் பெயர் தமிழர்கள் எல்லோரிடமும் கையை முறுக்கிக் காசு சேர்க்கவில்லை! அவர்களது ஆதரவாளர்கள், அந்தந்த நாட்டுக் கிளைகளின் உறுப்பினர்கள், விரும்பிக் கொடுத்தார்கள். இதை எப்படி "புலம் பெயர் தகரடப்பாக்களின் காசு" என்று நீங்கள் சொந்தம் கொண்டாட முடியுமென எனக்கு விளங்கவில்லை! நீங்கள் 2008 இற்கு முன்னர் பு.பெ தமிழர்களிடம் ஆதரவாளர்/ஆதரவாளர் அல்லாதோர் என்ற வேறு பாடின்றி ஏதோ ஒரு வகையில் வற்புறுத்தல்/அச்சுறுத்தல் மூலம் காசு சேர்க்கப் பட்டதை மனதில் வைத்துக் கொண்டு எழுதினீர்களோ தெரியாது! அப்படியானால் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டியது: நன்கொடை சேர்க்கும்  தவறான வழி அது! அதனால் தான் பிரான்சில் கடையில் கமெரா வைத்து காசு சேர்த்தவர்கள் பிடித்துக் கொடுக்கப் பட்டார்கள்! (இப்ப பலருக்கு வெக்கமும், சிலருக்கு கோள்வமும் வரும்!:rolleyes:). 

மேலும் வாத்தியார், யூதர்கள் பற்றி உரிய வரலாற்றாசிரியர் ஒருவரின் நூலைத் தேடிப் படித்து விட்டு எப்படி பு.பெ தேசிய தகர டின்களுடன் அவர்களை ஒப்பிட முடியும் என்று திரும்ப யோசியுங்கள்! எங்கள் போலித் தமிழ் ஆய்வாளர்கள் விடும் புருடாக்களை வைத்துக் கொண்டு இப்படி முட்டாள் தனமான பெருமை கொள்ளாதீர்கள்! 

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, Justin said:

 

 

மேலும் வாத்தியார், யூதர்கள் பற்றி உரிய வரலாற்றாசிரியர் ஒருவரின் நூலைத் தேடிப் படித்து விட்டு எப்படி பு.பெ தேசிய தகர டின்களுடன் அவர்களை ஒப்பிட முடியும் என்று திரும்ப யோசியுங்கள்! எங்கள் போலித் தமிழ் ஆய்வாளர்கள் விடும் புருடாக்களை வைத்துக் கொண்டு இப்படி முட்டாள் தனமான பெருமை கொள்ளாதீர்கள்! 

புலம்பெயர்ந்த டப்பாக்களையே விதம் விதமாகப் பிரித்து வைத்திருக்கும் கூட்டமைப்பு

வெள்ளி டப்பாக்களிடம் தான் கையேந்துகின்றார்களோ சரி

யூதர்களைப் பற்றி நான் வாசிக்க முதல் கூட்டமைப்பில் இருக்கும் பித்தளை டப்பாக்களைப் பற்றி முழுமையாக அறியாமல் அவர்களுக்கு வக்காளத்து வாங்குவதைப் பற்றிக் கொஞ்சம் யோசியுங்கள்.

கனக்கப்படித்த அறிவாளிகளுக்கு மற்றவர்கள் எழுதுவதை விளங்கிக் கொள்ள முடியாது. தங்களின்  மன நிலையிலிருந்து  வாசித்தால் இப்படித்தான் விளங்கும்.

இனிவரும் கூத்தமைப்பின் கூத்தங்களில் சும்மை நோக்கி வானவேடிக்கைகள் இருக்குமென, உங்கு கனடா வந்த ஓர் கூத்தமைப்பு பிரமுகர் சொன்னாராம்! ... இனி சும் கம்ன்னு இருக்க மாவையார் கதைக்க இருப்பதாகவும் ....! ... 

... காத்திருந்து பார்ப்போம்!

Edited by no fire zone

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.