Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புலிகள் பற்றி பேசுபவர்களே தீவிரவாதிகள்! யாழில் ஜனாதிபதி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
jaffna-my3.JPG

 

 

தென்னிலங்கையில் ஒரு அறைக்குள் பத்திரிகையாளர்களை அழைத்து வைத்துக் கொண்டு புலிகள் மீண்டும் உருவாகப் போகிறார்கள். தேசிய பாதுகாப்புக்கு குந்தகம் வந்துவிட்டது. என்றெல்லாம் தீவிரவாதிகள் பேசிக் கொண்டிருக்கின்றார்கள். என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருக்கின்றார்.

விடுதலைப் புலிகளை நாங்கள் மீள உருவாக்கப் போகிறோம். தேசிய பாதுகாப்புக்கு குந்தகம் விளைவித்து விட்டோம். என தென்னிலங்கையில் ஒரு அறைக்குள் இருந்து கொண்டு பேசிவரும் தீவிரவாதிகளே வடக்கில் தேசிய பாதுகாப்பினால் இடம்பெயர்ந்து 25 வருடங்கள் அவல வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களை வந்து ஒரு தடவை பாருங்கள்.

நான் அந்த மக்களை சந்தித்தேன் அந்த மக்களுடைய வாழ்க்கை முறையை பார்த்தேன். அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் அவல வாழ்க்கையை பார்த்தேன். அதனை பார்க்காமல் தென்னிலங்கையில் ஒரு அறைக்குள் பத்திரிகையாளர்களை அழைத்து வைத்துக் கொண்டு புலிகள் மீண்டும் உருவாகப் போகிறார்கள். தேசிய பாதுகாப்புக்கு குந்தகம் வந்துவிட்டது.

என்றெல்லாம் தீவிரவாதிகள் பேசிக் கொண்டிருக்கின்றார்கள். என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருக்கின்றார்.

இன்றைய தினம் யாழ்ப்பாணம்- மாநகரசபை மைதானத்தில் நடைபெற்ற தேசிய நத்தார் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்திருக்கின்றார்.

இன்று மாலை 5மணிக்கு நடைபெற்ற மேற்படி நிகழ்வில் ஜனாதிபதி தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

தென்னிலங்கையில் சிலர் ஒரு அறைக்குள் இருந்து கொண்டு தேசிய பாதுகாப்புக்கு குந்தகம் விளைவித்து விட்டார்கள். புலிகளை மீள உருவாக்கப் போகிறார்கள். என பேசிக் கொண்டிருக்கின்றார்கள். இவர்கள் தீவிரவாதிகளே.

இந்த நாட்டில் கடந்த 26 வருடங்கள் யுத்தம் நடைபெற்றது. யுத்தம் 2009ம் ஆண்டு நிறைவடைந்த போதும் யுத்தம் உருவானதற்கான காரணம் இனங்காணப்படவில்லை. அதற்கான காரணத்தை நாங்கள் தேடிக் கொண்டிருக்கின்றோம்.

இந்நிலையில் இன்றைய தினம் நான் வலி,வட க்கு உயர்பாதுகாப்பு வலயத்தினால் இடம்பெயர்ந்த மக்களை சந்தித்தேன். அவர்களுடைய வீடுகளுக்குள் சென்றேன்.

அவர்கள் வாழ்ந்த இடங்களை பார்த்தேன் சமைப்பதை பார்த்தேன், சட்டி, பானைகளை பார்த்தேன். அவர்கள் என்னிடம் கேட்டார்கள் எங்களை எங்கள் சொந்த நிலங்களில் மீள்குடியேற்றுங்கள் என தேசிய பாதுகாப்பு இந்த மக்களுடைய தலைகளில் சுமத்தப்பட்டிருக்கின்றது.

இதனை தென்னிலங்கையில் இருந்து கொண்டிருக்கும் சில தீவிரவாதிகள் நிச்சயமாக பார்க்க வேண்டும். அவர்கள் ஒரு முறை வடக்குக்கு வரவேண்டும்.

அவர்களுக்கு பெற்றோல் செலவு வேண்டுமானால், கப்பல் வேண்டுமானால், விமானம் வேண்டுமானால் நான் கொடுக்கிறேன்.

அதனை கொண்டு இங்கு முகாம்களில் இருந்து கொண்டிருக்கும் மக்களை ஒருதடவை அவர்கள் வந்து பார்க்கவேண்டும்.

இந்த நாட்டில் மீண்டும் ஒரு யுத்தத்திற்கு இடமில்லை.  தேசிய பாதுகாப்பு சீராகவே இருக்கின்றது.

இந்நிலையில் இது இப்படி, அது அப்படி என்பவர்கள் கபடத்தனமாக ஆட்சியை கைப்பற்றுவதற்கு நினைக்கிறார்கள். அது ஒருபோதும் சாத்தியமில்லை.

மக்கள் ஒத்துழைப்பு அல்லது மக்கள் ஆணை வழங்கப்படாமல் கபடத்தனமாக ஆட்சியை கைப்பற்றுவதற்கு இங்கே இடமில்லை. என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். 

jaff-my3-01.JPG

jaff-my3-02.JPG

jaff-my3-03.JPG

jaff-my3-04.JPG

jaff-my3-05.JPG

jaff-my3-06.JPG

jaff-my3-07.JPG

jaff-my3-08.JPG

jaff-my3-09.JPG

jaff-my3-10.JPG

http://www.tamilwin.com/show-RUmtzCRUSWkp1H.html

  • கருத்துக்கள உறவுகள்

எனி எப்ப பொங்கலுக்கா.. அடுத்த விஜயம். இப்படி மக்கள் அவதிப்பட்டால் தானே நாங்கள் எங்களை கருணையாளர்களாக காட்டிக்கொண்டு அரசியல் பண்ணலாம். நீங்கள் தொடருங்கோ.. ஜனாதிபதியாக வாக்குக் கேட்டு வந்த மூட்டமும் இதைத்தான் சொன்னியள்.. இப்ப நத்தாருக்கும் வந்து இதைத்தான் சொல்லுறியள்.. ஆனால்.. கொழும்பு திரும்பியதும் நடவடிக்கை தான் இல்லை. இதுவே சிங்கள ஆட்சியாளர்களின் தமிழ் மக்கள் மீதான கருசணையாகிவிட்டது.. எல்லாம் தமிழன் விதி. :unsure::rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் முதலமைச்சருக்குரிய மரியைதையை சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் கொடுத்திருப்பதாக படங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் பிரதமர் பதவியில் இருப்பவர்......????? :( 

  • கருத்துக்கள உறவுகள்

Maithri%20Sirisena%20Wigneswaran.jpg

Maithri-Wigneswaran.jpg

maithri_jaffna_visit_002.jpg

இதன் போதிருந்த நெருக்கம் இப்ப 2 கதிரை தள்ளி இருக்கினம்....??! கவனிக்கவும்..! tw_blush:

இப்ப எல்லாம் சிங்களவனை விட எமது ஊடகங்கள் தான் மக்களை ஏமாற்றுகின்றன அதிகம். :rolleyes:

maithri-jaffna-visit-260515-seithy%20%28

maithri-jaffna-visit-260515-seithy%20%28

இந்தா வித்தியா படுகொலைக்கு நீதிகிடைக்குது விசேட விசாரணை என்று போனார்... இன்னும் வித்தியாவுக்கும் நீதியில்லை மக்களுக்கும் இல்லை. ஆனால்.. ஊடகங்கள் மட்டும்... ஊதிப்பெருப்பிக்கின்றன.. இவர்களை வாழ வைக்க. :rolleyes:

 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

சிலர் யாழில் ஆயுதம் தாங்கிய ராணுவம் வெளியில் வருவதில்லை என்று படம் பிடித்து அனுப்புகின்றனர்.
மைத்திரி அவர்கள் தீவிரவாதிகள் கொழும்பில் பூட்டிய அறையில் இருக்கின்றனர்  என்று படம் பிடித்து அனுப்புகின்றார்.
யோசித்தால்.........

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

jaff-my3-05.JPG

பட்டுவேட்டி கலாச்சாரம் புல்லரிக்குது.....மனிதன் உடுத்தும் உடைகளும் ஒவ்வொரு தார்ப்பரியங்களை சொல்லிச்செல்லும்.

 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, nedukkalapoovan said:

இந்தா வித்தியா படுகொலைக்கு நீதிகிடைக்குது விசேட விசாரணை என்று போனார்... இன்னும் வித்தியாவுக்கும் நீதியில்லை மக்களுக்கும் இல்லை. ஆனால்.. ஊடகங்கள் மட்டும்... ஊதிப்பெருப்பிக்கின்றன.. இவர்களை வாழ வைக்க. :rolleyes:

உண்மைதான் தமிழ்வின் இன்றைய முகம்  

[ Sunday, 20 December 2015, 16:53:22 ] [photo-s.pngvideo-s.png]
my3_jff_001.jpg
யாழ்ப்பாணத்திற்கு இன்று விஜயம் செய்த ஜனாதிபதி மைத்திரிபால, யாழ் திறப்பனை பிரதேசத்தில் அமைந்துள்ள இடம்பெயர்ந்தோர் முகாமுக்குச் சென்று அங்குள்ள மக்களுடன் கலந்துரையாடியுள்ளார்.

 

ஜால்ராவுக்கு அளவே இல்லையாக்கும் .

 

 

 

 

 

 

 

 

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

 

இவர்கள் செல்லும் வழி தனிவழிபோல் தெரிகிறது, அத்தடன் சிவந்தும் இருக்கிறது. இது உதயத்தால் சிவந்துள்ளதா? மறைவால் சிவக்கிறதா? காலம் பதில் சொல்லும்.tw_heart: tw_rage:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.