Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புத்தாண்டு நிகழ்வுகளில் பாலியல் துஷ்பிரயோகம்; ஜேர்மனில் பெண்கள் ஆர்ப்பாட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புத்தாண்டு நிகழ்வுகளில் பாலியல் துஷ்பிரயோகம்; ஜேர்மனில் பெண்கள் ஆர்ப்பாட்டம்

[ Wednesday,6 January 2016, 04:55:27 ] 
Protest%20against%20gang%20assaults%20on

புதுவருடப் பிறப்பன்று இடம்பெற்றதாகக் கூறப்படுகின்ற பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் தொடர்பில் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி ஜேர்மனில் பெண்கள் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஜேர்மனின் கொலோன் நகரில் இவர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுவருடப் பிறப்பன்று குறித்த நகரில் பெண்கள் சிலர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்பட்டிருப்பதாகவும், சிலரது பொருட்கள் திருடப்பட்டிருப்பதாகவும் முறைப்பாடுகள் குவிந்த வண்ணம் உள்ளன.

இது தொடர்பில் தற்போதுவரை 90 முறைப்பாடுகள் பதிவாகியிருப்பதாக ஜேர்மன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

புத்தாண்டு கொண்டாட்டங்கள் இடம்பெற்ற பகுதிகளில் சனநெரிசலுக்கு மத்தியில் இவ்வாறான ஈனச் செயல்கள் இடம்பெற்றுள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும் இந்த செயற்பாடுகள் தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக கூறியுள்ள அதிகாரிகள், இந்த நிகழ்வுகளில் கலந்துகொண்டிருந்த சவுதி அரேபியா மற்றும் வடஅமெரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களே இவற்றில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

http://ibctamil.com/news/index/16440

 

Edited by கறுப்பி

  • கருத்துக்கள உறவுகள்

ஜேர்மனியில் புதுவருட கொண்டாட்டத்தில் பங்குபற்றி கொலோன் ரயில் நிலையத்தில் இருந்து வெளியே வந்த ஆயிரக்கணக்கான பெண்கள், சிறுமிகள் மீது கூட்டமாக பாலியல் சேட்டைகள் நடத்தியவர்கள் அரபு மற்றும் வட ஆபிரிக்கர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஒரு பெண் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகியும் உள்ளார்.

ஜேர்மனியை அதிர வைத்துள்ள இந்த சம்பவம் குறித்து பொலிசார் மீது கண்டணங்கள் எமுந்துள்ளன. இப்படியான விடயங்கள் ஜேர்மனியில் முன்னர் நடந்ததில்லை என்பதால் தாம் போதுமான பாதுகாப்பை வழங்கி இருக்கவில்லை என பொலிசார் சொல்கிறார்கள். 

இவர்கள் அண்மையில் அகதிகளாக வந்தவர்களா என்பது குறித்த விசாரனைகள் நடைபெறுகின்றன. சில கைதுகளும்  நடந்துள்ளன.

பெண்கள் பாதுகாப்பாகாக வெளியே செல்வது இனி கடினம் என பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் தெரிவித்தார்.

அகதிகளை இருகரம் நீட்டி வரவேற்ற ஜேர்மனி, சிலரின் நடவடிக்கைகளினால் வெறுப்பின் உச்சத்தில் உள்ளது.

 

http://www.bbc.co.uk/news/world-europe-35241818

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் வேறொரு திரியிலும் இவர்களின் அடாவடித்தனங்கள் பற்றி எழுதியிருந்தேன். உண்மையையில் இங்கு வாழும் சகலருமே இவர்களை வெறுக்க ஆரம்பித்துள்ளனர். பெண்பிள்ளைகளை கண்டால் F---  --u  என்பார்கள்.tw_angry:

8 hours ago, கறுப்பி said:

புத்தாண்டு நிகழ்வுகளில் பாலியல் துஷ்பிரயோகம்; ஜேர்மனில் பெண்கள் ஆர்ப்பாட்டம்

[ Wednesday,6 January 2016, 04:55:27 ] 
Protest%20against%20gang%20assaults%20on

புதுவருடப் பிறப்பன்று இடம்பெற்றதாகக் கூறப்படுகின்ற பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் தொடர்பில் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி ஜேர்மனில் பெண்கள் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஜேர்மனின் கொலோன் நகரில் இவர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுவருடப் பிறப்பன்று குறித்த நகரில் பெண்கள் சிலர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்பட்டிருப்பதாகவும், சிலரது பொருட்கள் திருடப்பட்டிருப்பதாகவும் முறைப்பாடுகள் குவிந்த வண்ணம் உள்ளன.

இது தொடர்பில் தற்போதுவரை 90 முறைப்பாடுகள் பதிவாகியிருப்பதாக ஜேர்மன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

புத்தாண்டு கொண்டாட்டங்கள் இடம்பெற்ற பகுதிகளில் சனநெரிசலுக்கு மத்தியில் இவ்வாறான ஈனச் செயல்கள் இடம்பெற்றுள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும் இந்த செயற்பாடுகள் தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக கூறியுள்ள அதிகாரிகள், இந்த நிகழ்வுகளில் கலந்துகொண்டிருந்த சவுதி அரேபியா மற்றும் வடஅமெரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களே இவற்றில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

http://ibctamil.com/news/index/16440

 

 

 

இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் வட ஆபிரிக்கர்கள் என்றே ஜெர்மனி செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

  • கருத்துக்கள உறவுகள்

முன்னர் கிழக்கு மேற்காக ஜேர்மனி பிரிக்கப்பட்டிருந்தப்போ.. எம்மவர்கள் அகதிகளாக கிழக்கிற்குள் அதிகம் போவார்களாம். ஏனெனில்.. ஆட்கடத்தல் ஆக்களுக்கு கிழக்கிற்குள் அகதிகளை தள்ளிவிடுவது இலகு என்று. பின்னர் கிழக்கு ஜேர்மன் அதிகாரிகள்.. இரவோடு இரவாக.. இவர்களை மேற்குக்குள் தள்ளிவிடுவார்களாம். மேற்கு அதிகாரிகள்.. அகதி அந்தஸ்தை கொடுத்து.. கடவுச்சீட்டையும் கொடுத்து.. இதர மேற்கு ஐரோப்பாவுக்குள் தள்ளிவிடுவார்களாம். இதுதான் ஜேர்மனியின் நேசக்கரத்தின் பின்னால் உள்ள சூட்சுமம்.

இப்ப ஒரு மில்லியன் வந்திருக்கென்றால்.. இன்னும் ஒரு 5 வருடத்தில் இதில் 75% பிரிட்டன் உள்ளிட்ட மேற்கு ஐரோப்பாவுக்குள் வந்திடுங்கள். எப்படி ஜேர்மனியில் இருந்து எம்மவர்கள் வந்து குவிகிறார்களோ அப்படி.

ஜேர்மன் அரசுகள் செய்யிற வேலைக்கு பாவம் அப்பாவி ஜேர்மன் மக்கள் பலிக்கடா. :rolleyes:tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் இப்படி நடந்ததா? அல்லது அகதிகள் வரவைக் குறைக்க அல்லது திருப்பி அனுப்ப ஜேர்மனி அரசு செய்த சதியா

  • கருத்துக்கள உறவுகள்

அக்கோய், 

பிபிசி இணைப்பைப் பாக்கேல்லையோ?

:unsure:

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை நாதமுனி....உண்மையாக நடந்தது தானா மன்னிக்கவும்

7 minutes ago, ரதி said:

இல்லை நாதமுனி....உண்மையாக நடந்தது தானா மன்னிக்கவும்

நடந்தது உண்மைதான் ரதி.

இந்த விடயம்   மத்திய உள்துறை அமைச்சர் தலை இட்டு விசாரணை நடத்தும் நிலையில் இருக்கிறது.

12 minutes ago, நவீனன் said:

நடந்தது உண்மைதான் ரதி.

இந்த விடயம்   மத்திய உள்துறை அமைச்சர் தலை இட்டு விசாரணை நடத்தும் நிலையில் இருக்கிறது.

நேற்று இதை பற்றிய விவாதம் ஒன்றும் கேட்டேன் .அகதிகள் வருகையை இந்த நிகழ்வுடன் தொடர்பு படுத்தவேண்டாம் என்பதுதான் பலர் கருத்து .

மேற்குலக நாடுகளில் ஆண் பெண் இளைஞர்கள்  பழகும் விதத்தில் எந்த விகற்பமும் இருக்காது ,சிறு வயதில் இருந்தே அது அவர்கள் அதை பழக்க படுத்தி கொண்டுவிட்டார்கள் .

மூன்றாம் உலக நாடுகளில் இருந்து வருபவர்கள் சந்தர்பம் கிடைத்தால் காணும் என்று நினைப்பார்கள் இந்த சுதந்திரம் கட்டுப்பாடுகள்  இவர்களுக்கு வர நீண்ட காலம் செல்லும் .

நேற்று சத்தியராஜின் "ஒரு நாள் இரவில் " பார்த்துகொண்டு இருக்கும் போது மோட்டார் சயிக்கிளில் மகளை ஏற்றிவரும் போய்பிரண்டை பார்த்து சத்தியராஜ் கோபப்பட இப்பவும் இவர்கள் இப்படியா ? என்று கேட்டான் .

அது என்றும் மாறாது என்று சொன்னேன் . 

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையான அகதியாயின்

யேர்மனியின் மனிதாபிமானத்துக்கு கட்டுப்படுவான்.....

இந்த சம்பவத்தில் தொடர்புபட்டவர்கள் யாரும்

இதுவரை  அண்மைக்காலங்களில் வந்த அகதிகள் என்று நிருபிக்கப்படவில்லை.

கடைசியாக வந்த செய்திகளின்படி 

இவர்கள் சிறிய அளவிலான  கிரிமினல் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.