Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

காலம் சல்லாப காலம்
உலகம் உல்லாச கோலம்
இளமை ரத்தங்கள் ஊரும்
உடலில் ஆனந்தம் ஏறும்
இன்றும் என்றும் இன்பமயம்
தித்திக்க தித்திக்க பேசிக்கொண்டு
திக்குகள் எட்டிலும் ஓடிக்கொண்டு
வரவை மறந்து செலவு செய்து
உயரப்பறந்து கொண்டாடுவோம்

கட்டழகு பெண்ணிருக்கு வட்டமிடும் பாட்டிக்கு
தொட்ட இடம் அத்தனையும்
இன்பமின்றி துன்பமில்லை தராரரீஓம்
எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம்
ராத்திரிகள் வந்து விட்டால்
சாஸ்திரங்கள் ஓடிவிடும்
 
காலை ஜப்பானில் காபி
மாலை நியூயார்க்கில் கேப்ரெட்
இரவில் தாய்லாந்தில் ஜாலி
இதிலே நம்மக்கென வேலி
இங்கும் எங்கும் நம்முலகம்
உலகம் நமது பாக்கெட்லே
வாழ்க்கை பறக்கட்டும் ராக்கெட்லே
இரவு பொழுது நமது பக்கம்
விடிய விடிய கொண்டாடுவோம்.....!

---எங்கேயும் எப்போதும்---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

ஆண் : வாடகைக்கு காதல்
வாங்கி வாழவில்லை யாரும்
என்ன மட்டும் வாழ சொல்லாதே.
உடம்பு குள்ள உசிர விட்டு போக
சொல்லு நீதான் உன்ன விட்டு
போக சொல்லாதே. காணுகின்ற
காட்சி எல்லாம் உந்தன் பூ முகம்
அது எந்தன் ஞாபகம்.

ஆண் : கண்ணுக்குள்ள இப்போ
கடல் கசிவத பாரு ஒன்னுக்குள்ள
ஒன்னா வந்து சேரு. 

ஆண் : காதலுக்கு கண்கள்
இல்லை கால்கள் உண்டு
தானே சொல்லாமலே ஓடி
போனாலே வேடந்தாங்கல்
பறவைக்கெல்லாம் வேறு
வேறு நாடு உன்னுடையே
கூடு நானடி அண்ணாந்து
பாா்க்கின்ற கொக்கு நானடி
அந்த விண்மீன் நீயடி.....!

---ஆகாயம் தீ பிடிச்சா---

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் .......!

பெண் : ஆயிரம் கோடிகள்
செல்வம் அது யாருக்கு
இங்கே வேண்டும் அரை
நொடி என்றால் கூட
இந்த ஆனந்தம் ஒன்றே
போதும் பூவே எங்கள்
தோட்டத்தை பார்க்க
பூத்தாயா வெண்பூவே
எங்கள் தோட்டத்தை
பார்க்க பூத்தாயா

பெண் : சின்ன சின்ன
கைகளிலே வண்ணம்
சிந்தும் ரோஜாப்பூ சிரித்து
பேசி விளையாடும்
நெஞ்சம் எங்கும் மத்தாப்பூ

ஆண் : இன்னும் அந்தி
வானில் பச்சைக்கிளி
கூட்டம் என்ன சொல்லி
பறக்கிறது

பெண் : நம்மை கண்டு
நானி இன்னும் கொஞ்ச
தூரம் தள்ளி தள்ளி போகிறது

ஆண் : எங்களின் கதை
கேட்டு தலையாட்டுது
தாமரைப்பூ

பெண் : மயிலே நாம்
ஆடிய கதையை நீ பேசு

ஆண் : மல்லிகைப்
பூவே மல்லிகைப் பூவே
பார்த்தாயா......!

---மல்லிகைப்பூவே ---

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

பெண்: பட்டு நூலு சேலைக்குள்ள
சிக்கல நீ நொளஞ்ச
மச்சம் மட்டும் மிச்சம் வச்சு
மொத்தமா கவுத்துப்புட்ட

ஆண்: கட்டழகி வத்த வச்ச
கண்டபடி அலைய விட்ட
நெஞ்சுக்குள்ள றெக்க விரிச்ச
உசுர தொறந்துப்புட்ட

பெண்: கரிச்சான் குருவியோன்னு
கனவுல கூவையில
தினுசா உன் மழையில
நான் நனஞ்சேனே

பெண்: வளையல் ஒரசையில சந்திரன
சிணுங்க வச்சேன்
வெட்கப்பட்டு செவ செவக்குற
வெத்தல கண்ணாலே

ஆண்: என்ன அடிச்சு அடி தொவச்சு
நீ அலசி எடுக்குற
முந்தி மடிப்பில் என்ன மடிச்சு
உலையை மூட்டி தாகம் ஏத்துற

ஆண்: யாத்தி யாத்தி
நீ சுத்துற சுத்துல
சொருகி நிக்கிறேன்
யாத்தி யாத்தி
என மயக்கும் சுந்தரியே......!

---யாத்தி யாத்தி---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

உலகத்தின் பூக்களே உயிரிலே பூத்ததே
உன்னருகில் நானிருந்தால்
தினம் உன்னருகில் நானிருந்தால்
 
எந்தன் உயிரே எந்தன் உயிரே
கண்கள் முழுதும் உந்தன் கனவே
என்னை வெல்ல இங்கு யாரும் இல்லை
என்ற எண்ணத்தில் நான் இருந்தேன்

இன்று உன்னைப் பார்த்தவுடன் என்னைத் தோற்றுவிட்டு
வெட்கத்தில் தலை குனிந்தேன்
அன்பே ஓர் நிமிடம் உன்னை மறந்திருக்க
என்னாலே முடியவில்லை

இங்கு எந்தன் நாள் முழுக்க உன்னை நினைத்திருக்க
ஒரு போதும் அலுக்கவில்லை
சின்ன சின்னக் கூத்து நீ செய்யிறத பார்த்து
உள்ளுக்குள்ளே நான் சிரித்தேன்

வண்ண வண்ணப் பாதம் நீ வச்சி வச்சி போகும்
அந்த தரையாய் நான் இருப்பேன்
கவலைகள் மறக்குதே கவிதைகள் பிறக்குதே

உன்னருகே நான் இருந்தால்
தினம் உன்னருகில் நான் இருந்தால்......!

---எந்தன் உயிரே ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

பெண் : நீளும் இரவில்
ஒரு பகலும் நீண்ட
பகலில் சிறு இரவும்
கண்டு கொள்ளும்
கலை அறிந்தோம்
எங்கு என்று அதை
பயின்றோம்

ஆண் : பூமி வானம் காற்று
தீயை நீராய் மாற்று புதிதாய்
கொண்டு வந்து நீட்டு

ஆண் : நீ வானவில்லாக
அவள் வண்ணம் ஏழாக
அந்த வானம் வீடாக
மாறாதோ மாறாதோ
ஓ ஜோடி போட்டுத்தான்
நீங்கள் போனாலே கண்
பட்டுக் காய்ச்சல்தான்
வாராதோ வாராதோ

ஆண் : உயிரே உன்னை
உன்னை எந்தன் வாழ்க்கை
துணையாக ஏற்கின்றேன்
ஏற்கின்றேன் இனிமேல்
புயல் வெயில் மழை
மாலை சோலை இவை
ஒன்றாக கடப்போமே......!

---அன்பில் அவன்---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படித்ததில் பிடித்தது

_‘‘அம்மா! நான், உங்க மருமக, பேத்தி மூணு பேரும் ஷாப்பிங் மால் போறோம். நீங்க வீட்டை பார்த்துப்பீங்கதானே?’’_

*_‘‘சரிப்பா! நான் எங்கே அங்க எல்லாம் வரமுடியும்? வயசாயிடுச்சு இல்ல. கால் வலி வேற படுத்தி எடுக்குது. எனக்கு மாலுக்கு வர்றதுக்குப் பிடிக்காது. நீங்க எல்லாம் போயிட்டு வாங்க!’’_*

*_‘‘ஏன் பிடிக்காது? பாட்டியும் ஷாப்பிங் மாலுக்கு வரணும்’’ என பேத்தி அடம் பிடித்தாள்._*

_‘‘பாட்டியால அங்க எல்லாம் ஏறி இறங்க முடியாதும்மா. எஸ்கலேட்டர்ல ஏறத் தெரியாது அவங்களுக்கு! அது இல்லாம, அவுங்க பார்த்து சந்தோஷப்படுறதுக்கு அங்கே பெரிசா ஒண்ணுமில்ல. அவுங்களுக்கு கோயிலுக்கு போறதுதான் பிடிக்கும்’’ என மருமகள் சொன்னார்._

_பாட்டியும், ‘‘ஆமாம்’’ என்று ஆமோதித்தார்._

_‘‘பாட்டி வரலைன்னா நானும் மாலுக்கு வரலை!’’_

_ பேத்தி அடம்பிடித்தாள். பாட்டி விருப்பமில்லை என்று சொன்னாலும், பேத்தி கட்டாயப்படுத்திக் கொண்டே இருந்தாள். ஒரே பேத்தி தொடர்ந்து அடம் பிடித்ததால், அவள் விருப்பத்துக்கு ஏற்ப பாட்டியும் ஷாப்பிங் மால் வர ஒப்புக் கொண்டார். பேத்தி துள்ளிக் குதித்தாள்._ 

_அப்பா அனைவரையும் புறப்படச் சொன்னார். பேத்தி சீக்கிரம் உடை உடுத்திக் கொண்டு வந்தாள். பாட்டியும் தயாராய் இருந்தார். அப்பாவும் அம்மாவும் புறப்பட ரெடியாகும்போது பேத்தி பாட்டியை அழைத்துக்கொண்டு முன்னறைக்கு வந்தாள். சாக்பீஸால் ஒன்றரை ஜான் அகலத்துக்கு இரண்டு கோடுகள் போட்டாள்._

*_‘‘பாட்டி... இங்க பாருங்க. இது ஒரு விளையாட்டு. இப்ப நீங்க ஒரு கொக்கு. சரியா? இந்த இரண்டு கோடுகளுக்கும் நடுவுல உங்க வலது காலை வைத்து, இடது காலை லேசா மூணு இஞ்ச் தூக்கினா போதும். செய்ங்க!’’_*

*_‘‘இது எதுக்கும்மா?’’_*

*_‘‘இதுதான் கொக்கு விளையாட்டு பாட்டி. நானும் செய்யறேன்’’ என்று செய்து காட்டினாள்._*

*_பாட்டியும் பேத்தி கண்டுபிடித்த கொக்கு விளையாட்டை விளையாடிப் பார்த்தார். பையனும் மருமகளும் வர, ஷாப்பிங் மாலுக்கு ஆட்டோ பிடித்துப் போனார்கள்._* 

_அங்கே நகரும் படிக்கட்டுகள் நகர்ந்து கொண்டிருந்தன. ‘இதில் எப்படி பாட்டி ஏறுவார்’ என்று மகனும் மருமகளும் யோசிக்கும்போது பேத்தி மட்டும் பாட்டியை நகரும் படிக்கட்டு முன்னால் செல்லமாக இழுத்து வந்தாள்._

*_‘‘பாட்டி! இதுல பயப்பட எதுவுமில்லை. இப்ப நீங்க கொக்கு விளையாட்டு விளையாடுங்க’’ என்றாள்._*

*_பாட்டி கைப்பிடியைப் பிடித்துக்கொண்டு, வலது காலை நகரும் படிக்கட்டில் வைத்து இடது காலை மூன்று நான்கு இஞ்ச் மேலே தூக்கினார். மேலே நகர்ந்தார். பின் இடது காலையும் வைத்து இரண்டு காலால் நின்றார். எஸ்கலேட்டரில் அம்மா பூப்போல நகர்வதை மகனும் மருமகளும் பார்த்து வியந்தனர்._*

_பாட்டி உற்சாகமாகிவிட்டார். அடுத்த அடுத்த எஸ்கலேட்டர்களில் மகிழ்ச்சியாகக் குதித்துக் கொண்டே ஏறினார். அதைப் பழகிக்கொள்ளவே பாட்டியும் பேத்தியும் கீழே இறங்கி மறுபடி ஏறினார்கள். சினிமா பார்க்கப் போனார்கள். குளிராக இருந்தது. பேத்தி தன் பையில் வைத்திருந்த சால்வையை பாட்டிக்குக் கொடுத்தாள்._

*_‘‘இதை எப்போ கொண்டு வந்தே?’’ என்று பாட்டி கேட்டதற்கு, ‘‘ஆல் டீடெய்ல்ஸ் ஐ நோ பாட்டி’’ என்றாள் குறும்பாக._* 

_படம் பார்த்த பிறகு உணவகம் சென்றார்கள். ‘‘அம்மா, உங்களுக்கு என்ன ஆர்டர் பண்ணட்டும்?’’ என்றான் மகன்._ 

*_"உடனே பேத்தி மெனு கார்டைப் பிடுங்கி, ‘‘ஏன்? பாட்டிக்கு படிக்கத் தெரியாதா? அவுங்க கிட்ட மெனு கார்டைக் கொடுங்க. பிடிச்சதை அவுங்க ஆர்டர் பண்ணுவாங்க’’ என்றாள்._*

_பாட்டி மெனுவைப் பார்த்து ஆர்டர் செய்தார். பேத்தியும் பாட்டியும் ஆர்வமாக சாப்பிட்டார்கள். பின் மாலில் வீடியோ கேம் விளையாட்டுகளையும் பாட்டியும் பேத்தியும் விளையாடினார்கள்._ 

*_வீட்டுக்குக் கிளம்பும் நேரத்தில் பாட்டி டாய்லெட் சென்றார். அப்போது மகளைப் பார்த்து, ‘‘என் அம்மாவைப் பத்தி என்னைவிட உனக்கு நிறைய தெரிஞ்சிருக்கே செல்லம்’’ என்று சொல்லி அப்பா சிரித்தார்._*

*_‘‘அப்பா! அதோ பாருங்க... குட்டிப் பாப்பாவை அந்த ஆன்ட்டி கூட்டிட்டு வரும்போது எவ்வளவு ஏற்பாடுகள் செய்துட்டு வர்றாங்க. பால் பாட்டில், துடைக்க துண்டு, டயபர்ஸ் இப்படி எவ்ளோ ஏற்பாடுகள். நீங்க குழந்தையா இருந்தப்போ, பாட்டியும் இப்படித்தான் செய்திருப்பாங்க. அது மாதிரி பாட்டியை வெளிய கூட்டிட்டு போகும்போது பாட்டியை கவனிக்க நீங்க அக்கறை எடுங்க. அதை ஏன் செய்றதில்லை?_* 

*_எல்லோருக்கும் ஷாப்பிங் மால் பாக்க ஆசையாதான் இருக்கும். நீங்களாவே ‘வயசானவங்க கோயிலுக்குதான் போவாங்க. ஜாலியா இருக்க மாட்டாங்க’ன்னு நினைச்சிக்காதீங்க. அவுங்க வரலண்ணாலும் மனசுக்குள்ளே ஆசை இருக்கும். நீங்கதான் வற்புறுத்தணும் அப்பா’’ என்றாள்._*

*_தன் மகளிடம் புதிதாகக் கற்றுக்கொண்ட மகிழ்ச்சியில் அப்பா நெகிழ்ந்திருந்தார்._*
👍🍬🍬🍬🍬🍬👍

https://www.facebook.com/Giritharasharma/posts/7382509938429478

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

பெண் : ஹோ…..ஓ….
தொலைதுார வெளிச்சங்கள் நீயே
மலையோர வெளிச்சமும் நீயே

ஆண் : அன்பில் சந்தேகம் கொள்ளாதே
பெண் : கொண்டால் என் ஜீவன் நில்லாதே

ஆண் : இமைப்பொழுது
உன் நெஞ்சில் இருந்து
நான் நீங்காதவனாக வேண்டும்
தருவாயா தருவாயா

ஆண் : என் அன்பே அன்பே
எனை விண்ணைப் பிடிக்கும்
திறனும் ஆற்றலும்
உன்னையே சார்ந்தது
உணர்வாயா உணர்வாயா
என் அன்பே அன்பே

ஆண் : காரிருளில் சூரியன்
நீரலையில் தாமரை
தாகத்தில் வேகும்
பாலை மண்ணில் வான்மழை

பெண் : வாய் அசைத்து
பார்க்கிறேன்
வார்த்தைகளில் உன் மொழி
உன் நாவில் வந்து தீர்த்தமாகும்
தேன் துளி……

ஆண் : கடிகாரம் காட்டுமா
மனம் செல்லும் வேகத்தை
புயலாகி உன்னை நான் அடைவேன்

ஆண் : நீ செல்லும்
வழி எல்லாம் மரம் ஆவேன்
ஒரு சொட்டு வெயில் கூட
விடமாட்டேன்......!

---எங்கே என் இதயம்---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!  

ஆண் : அடை காக்கிற கோழியப் போலவே
இந்த கூட்டைக் காப்பது யாருங்க
அழகான அம்மன போலவே
எங்க அப்பத்தாவப் பாருங்க

ஆண் : பாசமான புலிங்க கூட
பத்துநாள் தூங்கலாம்
பாசமுள்ள இந்த வீட்டில்
படிக்கட்டா மாறலாம்

ஆண் : வீரபாண்டித் தேரப் போல
இந்த வீட்டப் பாரு பாரு
வீரமான வம்சத்தாளு
இவங்களப் போல் யாரு

ஆண் : சித்தப்பாவின் மீசையப் பார்த்தா
சிறுத்த கூட நடுங்கும் நடுங்கும்
சித்தியோட மீன் கொழம்புக்கு
மொத்த குடும்பம் அடங்கும்

ஆண் : கோழி வெரட்ட வைரக்கம்மல்
கழட்டித்தானே எறிவாங்க
திருட்டுப்பயல புடுச்சுக் கட்ட
கழுத்துச் செயின அவுப்பாங்க

ஆயிரம் ஜன்னல் வீடு
இது அன்பு வாழும் கூடு
ஆலமரத்து விழுது
இதன் ஆணி வேரு யாரு......!

---ஆயிரம் ஜன்னல் வீடு---

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

கறுப்பு போல ஒரு பேரழகு பூமியெங்கும் இல்ல
நீ கண்ணனோட புள்ள
அடி ஆத்தா ஆத்தா குங்குமப்மூட்டைய
திண்ணுப்புட்டு உங்கம்மா பெத்தாளா
அடி பார்த்தா பார்த்தா பளப்பளன்னு இருக்குற
வெறும் பால ஊத்தி குளிக்கவச்சாளா
 
அட கருப்புக்கண்ணா வாடா
நான் காத்திருக்கேன் சூடா
ஒரசிப்புட்டு போடா
இனி கருப்பு வெள்ளப்படம்
ஏ செக்கச்செக்கச் செவப்பி
நீ சேலக்கட்டுன குலுஃபி
ஒடம்பு நரம்பு எழுப்பி நீ ஓட்டுற புதுப்படம்

நெறுப்பு குளிச்சா உந்தன் நெறம் வருமே
கருப்பு நெறந்தான் என்னக்கவர்ந்திடுமே
அடி நீ குளிச்சா ஒரு துளி சலமே
கடலில் விழுந்தா கடல் வெளுத்திடுமே
கரு மேகம் மட்டும் தானே பூமியில மழத்தூவும்
அழகு மழத்தூவும்

கருப்பான ராத்திரிய தேடி நெலா வரும் போகும்
தெனமும் வரும் போகும்
அடி ஆத்தா ஆத்தா வெண்ணக்கட்டி தேகத்தால்
என்னையும் கட்டி இழுத்துப்புட்டேடி
அடி ஆத்தா ஆத்தா வெள்ளக்கலறக் காட்டித்தான்
கருப்புப்பையனக் கவுத்துப்புட்டேடி........!

---கருப்பு பேரழகா ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

கொடுக்குற தெய்வம் வலுவில் வந்து..
கூரையை பிரிச்சிக் கொட்டுமடா
கிடைச்சதை நீயும் வாரியிறைச்சா
கிட்டாத சுகமே இல்லையடா
செட்டாகவே செட்டாக எதையும் சேர்த்து வைக்காதே
செய்யடா செய்யடா செய்யடா நீ ஜல்சா
செய்யடா செய்யடா செய்யடா

மீசை நரைச்சுப் போனதினாலே
மீசை நரைச்சுப் போனதினாலே
ஆசை நரைச்சுப் போய்விடுமா
வயசு அதிகம் ஆனதினாலே
மனசும் கிழமாய் மாறிடுமா
காசுயிருந்தா அதை அனுபவித்திடனும்
செய்யடா செய்யடா செய்யடா நீ ஜல்சா
செய்யடா செய்யடா செய்யடா

பைசாவைக் கண்டா நைசாகப் பேச
ஆ.. பைசாவைக் கண்டா நைசாகப் பேச
பலரகப் பெண்கள் வருவாங்க
பக்கத்தில் வந்து ஹுக்காவைத் தந்து
பாடியாடி சுகம் தருவாங்க
பட்டான மேனி பட்டாலே இன்பம்
மெய்யடா மெய்யடா மெய்யடா நீ ஜல்சா
செய்யடா செய்யடா செய்யடா.....!

---உல்லாச உலகம்---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

இராவணன் மேலது நீறு வெண்ணத் தகுவது நீறு

பராவண மாவடு நீறு பாவ மறுப்பது நீறு

தராவண மாவது நீறு தத்துவ மாவது நீறு

அராவணங் குந்திரு மேனி யாலவா யான்றிரு நீறே......!

---மந்திரமாவது நீறு---

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

அலையே சிற்றலையே

கரை வந்து வந்து போகும் அலையே

என்னைத் தொடுவாய்

மெதுவாய்ப் படர்வாய் என்றால்

நுரையாய்க் கரையும் அலையே

தொலைவில் பார்த்தால்

ஆமாம் என்கின்றாய்

அருகில் வந்தால் இல்லை என்றாய்

நகில நகில நகிலா ஓ ஓ ஓ விலகிடாதே நகிலா ஓ ஓ 

பழகும்பொழுது குமரியாகி

என்னை வெல்வாய் பெண்ணே

படுக்கை அறையில் குழந்தையாகி

என்னைக் கொல்வாய் கண்ணே

காதல் சடுகுடுகுடு கண்ணே தொடு தொடு .......!

---காதல் சடுகுடு---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

கள்ளூற பார்க்கும் பார்வை உள்ளூர பாயுமே
துள்ளாமல் துள்ளும் உள்ளம் சல்லாபமே
வில்லோடு அம்பு ரெண்டு கொல்லாமல் கொல்லுதே
பெண்பாவை கண்கள் என்று பொய் சொல்லுதே
முந்தாணை மூடும் ராணி செல்வாக்கிலே
என் காதல் கண்கள் போகும் பல்லாக்கிலே
தேனோடை ஓரமே நீராடும் நேரமே
புல்லாங்குழல் தள்ளாடுமே பொன்மேனி கேளாய் ராணி.....!

---ராஜராஜ சோழன் நான்---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

ஆண் : முத்தம் என்னும் கம்பளியை
ஏந்தி வந்தே
உன் இதழும் என் இதழும்
போர்த்தி விடும்
உள்ளுணர்வில் பேர் அமைதி
கனிந்து வரும்
நம் உடலில் பூதம் ஐந்தும்
கனிந்து விடும்

பெண் : தீராமல் தூறுதே
ஆண் : காமத்தின் மேகங்கள்
ஆண் : மழைக்காடு பூக்குமே
நம்மோடு இனி இனி…

குழு : புலரா காதலே
புணரும் காதலே
அலராய் காதலே
அலறும் காதலே

பெண் : புலராத காலைதனிலே
நிலவோடு பேசும் மழையில்.....!
 

---புலராத காலைதனிலே---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

ஆண் : நான் வருவேன் வருவேன் உயிரே
போகாதே போகாதே
வான் முடியா பயணம் போவோம்
ஏங்காதே ஏங்காதே

ஆண் : இந்த கணமே கணமே கணமே
இன்னும் தொடாராதா
புது சுகமே சுகமே சுகமே
மனம் கேட்கிறதே

ஆண் : என் ரணமே ரணமே ரணமே
கொன்று குவிக்காதே
எனை தினமே தினமே தினமே
என் தேவதை…..தேவதை தேவதை தேவதை
தேவதை தேவதை தேவதை தேவதை

ஆண் : வா வா தூர நிலா
தூரம் அதை பார்த்திருப்போம்
வா வா காலமில்லா
காதல் அதில் வாழ்ந்திருப்போம்

ஆண் : வா வா கை விரலை
கை பிடிக்குள் மூடி வைப்போம்
வா வானம் வரை
நாம் நடப்பபோ……ஓம்ம்ம…..!

---நான் வருவேன்---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!


சித்திரை மாத நிலவினிலே
தென்றல் வீசும் இரவினிலே
உத்தமி ஒருத்தி விழித்திருந்தாள்
அவள் உறவுக்கு ஒருவன் காத்திருந்தான்

பாலும் பழமும் இருந்ததங்கே
படுக்கையும் விரிப்பும் கிடந்ததங்கே
பசியும் களைப்பும் இருக்கவில்லை
பாவையும் அவனும் உறங்கவில்லை

கதைகள் சொன்னான் கேட்டிருந்தாள்
கனிரசம் தந்தான் திரும்பிக் கொண்டாள்
மலரே மணியே என்றெல்லாம்
வார்த்தைகள் சொன்னான் சிரித்துக் கொண்டாள்

பேசினான் அவளோ பேசவில்லை
பார்த்தான் அவளோ பார்க்கவில்லை
ஆசையாய் எழுந்து கைப்பிடித்தான்
அப்புறம் நடந்தது நினைவிலில்லை......!

---சித்திரைமாத நிலவினிலே---

Link to comment
Share on other sites

1. காலையில் எழுந்ததும் போன் முகத்தில் முழிக்காமல் இருப்பது

2. டீ குடித்துவிட்டு தான் பல்லு விலக்க போவேன் என்ற கொள்கையை கடைபிடிக்காமல் இருப்பது

3. சாப்பிடும் உணவில் ருசிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காமல் ஆரோக்கியத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது.

4. நாம் லேட்டாக கிளம்பி விட்டு, கிளம்பும்போது லேட் ஆகிருச்சேனு வீட்டில் இருக்கும் மனைவி மீதும் அம்மாவின் மீதும் கோபப்படாமல் இருப்பது

5. தொலைக்காட்சி பார்ப்பதில் வீட்டில் உள்ள அனைவருக்கும் சம உரிமை அளிப்பது

6. நாளை பார்த்துக் கொள்ளலாம் என்று ஒரு வேலையை தள்ளிப்போடாமல் இருப்பது

7. தினமும் நமக்காகவும் நம்மளை சுற்றி இருப்பவர்களுக்காகவும் சாமி கும்பிடுவது

8. விலை மதிக்க முடியாத நம்முடைய பற்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து தினமும் இரவு தூங்கும் முன் பல் துலக்குவது

9. சாலையில் கண்ட இடத்தில் எச்சில் துப்பாமலும் குப்பை போடாமலும் இருப்பது

10. அனைவரிடமும் மரியாதையாகவும் அன்பாகவும் பேசிப் பழகுவது

11. தினமும் நமக்காக கஷ்டப்பட்டு சமையல் செய்யும் அம்மாவையும் மனைவியையும் மனம் திறந்து பாராட்டுவது.பாராட்டவில்லை என்றாலும் குறை கூறாமலாவது இருப்பது.

12. ஒருவர் நமக்கு செய்த உதவியை எந்த காலத்திலும் மறக்காமல் நன்றியுடன் இருப்பது.

இவை அனைத்தும் எனக்கு தெரிந்த சில ஆரோக்கியமான பழக்க வழக்கங்கள். பிடித்ததை கடைபிடியுங்கள் பிடிக்காததை விட்டுவிடுங்கள்.

ஆரோக்கியமான வாழ்விற்கு வாழ்த்துக்கள்.

பொறுமையுடன் படித்ததற்கு நன்றி… நன்றி… நன்றி…

  • Like 2
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

பெண் : வெட்டி வெட்டி
வேல பாக்கும் கண்ணா
இந்த குட்டி குட்டி கண்ணா
பாரேன் மீசை தாடி காட்டை
ஆளும் மன்னா நீ என் ஆசை
நாடி தொட்டு பாரேன்

பெண் : ஊட்டியோட
பியூட்டி நான் தானடா
என்ன பாக்கும் போது
வெக்கமாச்சோ வாய்
அசைச்ச போதும் நான்
பாத்துப்பேன் இனி நான்
உன்னோட டப்மாஷோ

பெண் : என்னோடு சேர
வாரியா இல்ல நீ வேற
மாறியா உன் மேல
சந்தேகம் வந்தாச்சுடா......!

---சூபி டூபி டூபா---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

சித்திரத் தோகை செவ்விதழ்க் கோவை சேதி சொல்லாதோ -
இந்தப்பத்தரை மாற்றுப் பாவை மேனி பங்கயமாகாதோ
இந்த அழகு வெள்ளமே என்றும் உங்கள் சொந்தமே -
புதுப்பண்பாடும் தமிழமுதம் கலந்து கொஞ்சவே

கனியக் கனிய மழலை பேசும் கண்மணி -
உயர்காதல் பொங்கும் கீதம் பாடும் பொன்மணி
கனிந்த மழலை தந்தவர் யார் சொல்லவா -
எந்தன்காதல் பொங்கும் கீதம் நீங்கள் அல்லவா.....!

---கனிய கனிய மழலை பேசும்---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

நீராட்டும் நேரத்தில் என் அன்னையாகின்றாய்

வாலாட்டும் நேரத்தில் என் பிள்ளையாகின்றாய்

நானாக தொட்டாலோ முள்ளாகிப் போகின்றாய்

நீயாக தொட்டாலோ பூவாக ஆகின்றாய்

என் கண்ணீர் என் தண்ணீர் எல்லாமே நீயன்பே

என் இன்பம் என் துன்பம் எல்லாமே நீயன்பே

என் வாழ்வும் என் சாவும் உன் கண்ணில் அசைவிலே

நகில நகில நகிலா ஓ ஓ ஓ விலகிடாதே நகிலா ஓ ஓ (2)

பழகும்பொழுது குமரியாகி

என்னை வெல்வாய் பெண்ணே

படுக்கை அறையில் குழந்தையாகி

என்னைக் கொல்வாய் கண்ணே

காதல் சடுகுடுகுடு கண்ணே தொடு தொடு........!

---காதல் சடுகுடு---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

ஆண் : மனிதரில் நாய்கள் உண்டு
மனதினில் நரிகள் உண்டு
பார்வையில் புலிகள் உண்டு
பழக்கத்தில் பாம்பும் உண்டு
ஆண் : நாயும் நரியும் புலியும் பாம்பும்
வாழும் பூமியிலே
மானம் பண்பு ஞானம் கொண்ட
மனிதனை காணவில்லை

ஆண் : சிரிப்பினில் மனிதன் இல்லை
அழுகையில் மனிதன் இல்லை
உள்ளத்தில் மனிதனில்லை
உறக்கத்தில் மனிதனுண்டு
ஆண் : வாழும் மிருகம் தூங்கும் தெய்வம்
நடுவே மனிதனடா
எங்கோ ஒருவன் இருந்தால் அவனை
உலகம் வணங்குதடா......!

---யாரடா மனிதன் இங்கே---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

ஆண் : {பாய் விரித்தது பருவம்

பெண் : பள்ளி கொண்டது இளமை

ஆண் : குரல் கொடுத்தது சேவல்

பெண் : விழித்துக் கொண்டன கண்கள்} (2)

ஆண் : நிலவுமகள் நடை பயில்வதென்ன
எந்தன் நெஞ்சணையில் வந்து துயில்வதென்ன

ஆண் : நிலவுமகள் நடை பயில்வதென்ன
எந்தன் நெஞ்சணையில் வந்து துயில்வதென்ன

பெண் : இடையணைத்து என்னைப் பிடிப்பதென்ன
ஒரு இடைவேளை இன்றி நடிப்பதென்ன
ஆண் : வளைக்கரம் இருந்தால்
துணைக்கரம் வேண்டும்

பெண் : துணைக்கரம் இருந்தால்
தொடச் சொல்லத் தோன்றும்.....!

 

---பாய் விரித்தது பருவம்---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

ஆண் : பொண்ணு பாத்தா மண்ணை பாக்கும்
சங்கத்தோட லீடர்ரு நான்
உன்ன பாத்த பின்னே அத
ரிசைன் பண்ணேனே

பெண் : காதல் என்னும் ட்விட்டர்ல
ஆள் இல்லாம காத்திருந்தேன்
உன்ன பாலோவ் பண்ணதால
டிரெண்டிங் ஆனேனே

ஆண் : சிங்கிள் இப்போ சிக்ஸர் ஆனேனே…..ஏ…

ஆண் : வெண்ணிலவில் லேண்டு வாங்கி
மச்சிவீடு கட்டிக்கிட்டு
இன்டர்நெட் இல்லாமலே வாழலாம்

பெண் : பத்து புள்ள பெத்துகிட்டு
தமிழ் மட்டும் சொல்லி தந்து
தெனம் தெனம் கதை சொல்ல கேக்கலாமா

ஆண் : ஜில்லு ஜில்லு ஜிகர்தண்டா
கிட்ட வாடி
உன்ன அப்படியே சாப்புடுவேன்
கெத்தாதாண்டி

பெண் : கேடி இல்ல கில்லாடிதான்
தெரியும் மாமா
நீ கேட்காமலே தந்திடுவேன்
என்ன ஆமா

ஆண் : பட்டுன்னுதான் தொட்டதுமே
காலி ஆனேன்
பெண் : நீ கொஞ்சுனதும் நெஞ்சுக்குள்ளே
ஜாலி ஆனேன்

ஆண் : காந்தக் கண்ணழகி
லுக்கு விட்டு கிக்கு ஏத்தும்

பெண் : முத்து பல் அழகா
முத்தம் ஒன்னு தாடா......!

---காந்தக் கண்ணழகி---

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ராமநாதன் அருணாசலம் காலத்தில் இருந்தே பிழைகள் விடப்பட்டன என்பது எல்லோருக்கும் தெரிந்ததே.  இவை எல்லோருக்கும் தெரிந்தவைதான். 
    • 1976 ஆம் ஆண்டு நடந்த வட்டுக்கோட்டைத் தீர்மானத்தில்த்தான் தமிழர்கள் தனி ஈழமே தீர்வென்று முதன்முதலில் கூறினார்கள். அதனை படிக்கும் ஒருவருக்கு தனிநாட்டிற்கான நிலைப்பாட்டிற்கு தமிழர்கள் ஏன் வந்தார்கள் என்பதற்கான காரணங்களை அவர்கள் தெளிவாக கூறியிருக்கிறார்கள். அவர்களின் பிரதேசத்தில் நடக்கும் அரச ஆதரவிலான நில ஆக்கிரமிப்பு, கல்வியில் ஏற்றத்தாழ்வு, மொழிப்பிரச்சினை போன்ற விடயங்கள் இன்றும் அவர்களுக்கு இருக்கிறது.   இன்று அவர்களின் பிரச்சினைகளை தேசியப் பிரச்சினை என்று மறைத்துவிட்டு, தற்போது அந்தத் தேசியப் பிரச்சினை குறித்தும் நாம் பேசுவதில்லை. 
    • முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்  ஏன் தமிழ் மக்களால் இன்றுவரை அதே உணர்வுடன் அனுஸ்ட்டிக்கப்படுகிறது என்று பார்த்தோமானால், அவர்களுக்கு அரசியலில் சுதந்திரமாகச் செயற்படுவதிலிருக்கும் பிரச்சினைகள், கல்விகற்பதில் இருக்கும் பிரச்சினைகள், தமது நிலத்தினை காத்துக்கொள்வதில் இருக்கும் பிரச்சினைகள், மதத்தினைப் பின்பற்றுவதில் இருக்கும் பிரச்சினைகள், தமது பொருளாதார நலன்களைக் காத்துக்கொள்வதில் இருக்கும் பிரச்சினைகள் என்பவற்றை விலக்கிவிட்டுப் பார்த்தாலும், இன்று அவர்களின் நிலத்திலிருக்கும் பிரச்சினைகளின் சேர்க்கையுமே அவர்களின் உணர்வுகளை இன்றுவரை உயிர்ப்புடன் வைத்திருக்கின்றன என்பதை நாம் உணர்கிறோம். முள்ளிவாய்க்கால நினைவுகூர்தல் என்பது அச்சமூகத்தின் ஒட்டுமொத்த உணர்வுகளின் வெளிப்பாடு.
    • சம்பூரில் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சிய பெண்களை வீதியில் இழுத்துச் சென்ற பொலீஸ் அதிகாரி செய்தது முழுவதுமான இனவாதத்தால் பீடிக்கப்பட்டிருப்பவர் ஒருவரது செயல். அவர் முன்வைத்த அறிக்கையில்க் கூட புலிகளை நினைவுகூர்கிறார்கள் என்றே எழுதுகிறார். திருகோணமலையில்,  சில தமிழர்களை நாம் கண்டு பேசினேன். "ஏன் நீங்கள் பொதுவெளியில்ச் செய்யவில்லையா?" என்று கேட்டபோது, "இல்லை, பொதுவெளியில்ச் செய்ய எத்தனித்த பலமுறையும் எம்மை சித்திரவதைச் செய்து, தடைசெய்தார்கள். ஆகவேதான் வீடுகளில் செய்கிறோம்" என்று கூறினார்கள். அவர்களது ஊர்களில் இருக்கும் கோயில்களில்க் கூட புலநாய்வுத்துறையினர் வந்துநிற்கிறார்கள். முள்ளிவாய்க்கால் வாரத்தில் கோயிலில் எதுநடந்தாலும் ஏன் செய்கிறீர்கள் என்று கேள்வி கேட்கிறார்கள்.  வடக்கில் பணிசெய்யும் பல சிங்களவர்கள் ஒரு பொதுவிடயத்தைக் கூறுகிறார்கள். அதுதான், தாம் தங்கியிருக்கும் வீடுகளில் ஏதோவொரு பணிக்காக வரும் தாய்மார்கள் தமது தலைகளையும், முக‌ங்களையும் ஆசையாக வருடி, எனக்கும் உங்களைப்போன்றே மகனோ அல்லது மகளோ இருந்தார்கள் என்று கூறிக் கண்கலங்குகிறார்கள். இது வடக்கில் மட்டுமல்ல, இலங்கையின் எந்தப் பாத்திற்குச் சென்றாலும் தாய்மார் காட்டுகின்ற உணமையான உணர்வு, இதனை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.  வடக்கிலும் கிழக்கிலும் தமிழர்களின் பிரதேசங்களில் விகாரைகளை அமைப்பதற்காக ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை நாம் அடாத்தாக பிடித்துக்கொள்கிறோம். இதுகுறித்து நாம் பேசுவதில்லை. ஆனால், அவசியமாக இதுகுறித்து நாம் ஆராய வேண்டும், பேச வேண்டும். அவர்களின் பிரதேசத்தில் எங்காவது மேடான பகுதியிருந்தால் உடனேயே அங்கு விகாரையொன்றை நாம் கட்டிவிடுகிறோம் என்று தமிழர்கள் கூறுவதில் நியாயமிருக்கிறது. எனது வீட்டின் பின்காணியிலும் மேடான பகுதியொன்று இருக்கிறது. ஆனால், நான் ஒரு சிங்களவன் என்பதால் அதனை யாரும் அடாத்தாக ஆக்கிரமித்து விகாரை கட்டப்போவதில்லை என்பது எனக்குத் தெரியும். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.