Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தெற்கில் தமிழிலும், வடக்கில் சிங்கள மொழியில் தேசிய கீதம்

Featured Replies

தெற்கில் தமிழிலும், வடக்கில் சிங்கள மொழியில் தேசிய கீதம்
 
தெற்கில் தமிழிலும், வடக்கில் சிங்கள மொழியில் தேசிய கீதம்
சுதந்திர தினத்தின் போது தெற்கில் தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்கப்பட்ட போதிலும், புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகள் சிங்கள மொழியில் தேசிய கீதம் இசைத்து சுதந்திரதினத்தில் கலந்து கொண்ட சம்பவம் கிளிநொச்சியில் நேற்று இடம்பெற்றுள்ளது.
 
சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சியில் நேற்று வியாழக்கிழமை சுதந்திரதினக் கொண்டாட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்வு யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களுக்கான கட்டளைத்தளபதி கர்னல் ரத்னப்பிரிய பந்து தலைமையில் நடைபெற்றது.
 
இதில் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் பங்கேற்று, சிங்கள மொழியில் தேசிய கீதத்தை இசைத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து திணைக்களத்தின் அருகிள்ள விவசாய நிலத்தில் நிலத்தில் அறுவடையும் மேற்கொள்ளப்பட்டது.
 

 

  • கருத்துக்கள உறவுகள்

தெற்கில் தமிழில் தேசீய கீதம் இசைக்கப்படும் போது சிங்களவன் குத்தி முறிவது தவறெனக் கருதும் நாங்கள் வடக்கில் சிங்களத்தில் தேசீய கீதம் இசைக்கப்படும் போது குத்தி முறிந்தால்.. எங்களுக்கும் அந்தப் பிக்குக்களுக்கும் என்ன வித்தியாசம் இருக்க முடியும்?

நல்லெண்ண சமிக்கைகள் இரு பக்கமுமிருந்து வந்தாலன்றி.. இணைந்து வாழ்வது என்பது சாத்தியமில்லாதது என்றே கருதுகின்றேன்!

சிங்களம் வேண்டுமென்றே திணிக்கின்றது என்று வெளிப்படையாகத் தெரிந்தாலும்,,, அந்த முன்னாள் போராளிகளால் என்ன செய்திருக்க முடியும்?

இப்போது தெற்கில் குத்தி முறியும் சிங்கள இனவாதிகளின் வாயை இந்தச் சம்பவம் கொஞ்சமாவது அடைத்து விடுமெனில் எனக்கு மகிழ்ச்சியே!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புங்கையூரன் said:

தெற்கில் தமிழில் தேசீய கீதம் இசைக்கப்படும் போது சிங்களவன் குத்தி முறிவது தவறெனக் கருதும் நாங்கள் வடக்கில் சிங்களத்தில் தேசீய கீதம் இசைக்கப்படும் போது குத்தி முறிந்தால்.. எங்களுக்கும் அந்தப் பிக்குக்களுக்கும் என்ன வித்தியாசம் இருக்க முடியும்?

நல்லெண்ண சமிக்கைகள் இரு பக்கமுமிருந்து வந்தாலன்றி.. இணைந்து வாழ்வது என்பது சாத்தியமில்லாதது என்றே கருதுகின்றேன்!

சிங்களம் வேண்டுமென்றே திணிக்கின்றது என்று வெளிப்படையாகத் தெரிந்தாலும்,,, அந்த முன்னாள் போராளிகளால் என்ன செய்திருக்க முடியும்?

இப்போது தெற்கில் குத்தி முறியும் சிங்கள இனவாதிகளின் வாயை இந்தச் சம்பவம் கொஞ்சமாவது அடைத்து விடுமெனில் எனக்கு மகிழ்ச்சியே!

புங்கையர்,

பயப்படாதீங்க,

இது தூவானம்... இனத்துவேசம் எனும் பெருமழை தூவானம் காட்டித்தான் அடங்கும்.

மகிந்தருக்கு சாதனை என்று சொல்ல, பயங்கரவாத ஒழிப்பு மட்டுமே உண்டு. வேறு எல்லாம் கொலைகள் , வெள்ளை வான், நாட்டினைக் குடும்பமாக கொள்ளை அடித்தமை தான் சாதனை.

அவரும், அவர் சராந்த கூத்தாடிகளுக்கும் உள்ள ஒரே வழி, இனவாதமும், தேசாமிமான நடிப்பும் தான்.

ஆனால், இம்முறை சர்வதேசமே இதற்கு செக் வைப்பது போல படுகின்றது.

எமிலை மீண்டும் நாட்டுக்கு கொண்டு வர, வெளி நாட்டு அரசும், அதன் புலனாய்வு அமைப்பும் ஈடுபாடு கொண்டன என அறிவிக்கப் பட்டு உள்ளது.

ஆக, புலிகளுடன், டீலைப் போட்டு, பதவியைப் பிடித்து, புலிகளை ஒழித்ததாக காட்டி, பதவியில் தொடர முனைந்து, நாட்டில், கொள்ளை, களவு, கொலை செய்தது தான் அவர்கள் சாதனை என்று முடியப் போகிறது அவரது அரசியல் வாழ்வு.

இதனை உணர்ந்து தான், இவரை அழைத்த சீனா, மெதுவாக காய் வெட்டி, மைதிரியுடன் இணைந்து வேலை செய்யப் போவதாக அறிவித்து உள்ளது.

இது புனர்வாழ்வும் இல்லை நல்லெண்ணமும் இல்லை நாங்கள் சொல்வதை நீங்கள் கேட்கவேண்டும் என்ற மமதை .

இந்த நிலையை உருவாக்கியவர்களுக்கு மிகவும் நன்றி .

  • கருத்துக்கள உறவுகள்

தெற்கில் தமிழிலும், வடக்கில் சிங்கள மொழியில் தேசிய கீதம்

 

அதாவது

ஒரு நாடு

இரு தேசங்கள்.....

உண்மையில் இதன் மகிமையை சிங்களம் உணர்ந்தால்...???

இலங்கையில் அமைதியும் நிம்மதியும்  வளர்ச்சியும் தானாக வரும்...

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, arjun said:

இது புனர்வாழ்வும் இல்லை நல்லெண்ணமும் இல்லை நாங்கள் சொல்வதை நீங்கள் கேட்கவேண்டும் என்ற மமதை .

இந்த நிலையை உருவாக்கியவர்களுக்கு மிகவும் நன்றி .

போராட்டம் தொடங்கமுதல் தமிழர்கள் எல்லோரும் தாம் நினைத்ததையெல்லாம் செய்யக்கூடியதாக இருந்ததாம். நாங்கள் நம்பீட்டம். 

இதயம் சுக்குநூறாக நொரிங்கிவிட்டது

மீண்டுவருவதற்கு பலநாட்களெடுக்கும்

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, arjun said:

இது புனர்வாழ்வும் இல்லை நல்லெண்ணமும் இல்லை நாங்கள் சொல்வதை நீங்கள் கேட்கவேண்டும் என்ற மமதை .

இந்த நிலையை உருவாக்கியவர்களுக்கு மிகவும் நன்றி .

ஓ அப்ப இலங்கையில் பாலும் தேனும் ஓடுவதாகவும் .....இராணுவம் ஆயுதத்துடன் திரிவதில்லை என்றும் கொடுத்த சான்றிதழ் .......(இப்போதைய ஆயுதம் AK 47 இல்லை புணர்வாழ்வு.....போய் வந்தவர்களிடம் கேட்டு பாருங்கள்)
நாங்கள் தலை கீழாய் நின்று தண்ணி குடிச்சாலும் சரி தண்ணி அடிச்சாலும் சரி ......நாய் வாலை நிமிர்த்த முடியாது..... சிங்களவன் சிங்களவன் தான்  

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 5.2.2016 at 3:03 PM, arjun said:

இது புனர்வாழ்வும் இல்லை நல்லெண்ணமும் இல்லை நாங்கள் சொல்வதை நீங்கள் கேட்கவேண்டும் என்ற மமதை .

இந்த நிலையை உருவாக்கியவர்களுக்கு மிகவும் நன்றி .

இன்னும் எவ்வளவு காலத்துக்குத்தான் நீங்களும் உங்களை சார்ந்தவர்களும் மற்றவர்கள் மீது பழியை போட்டு வாழ்க்கையை ஏப்பமிடுகின்றீர்கள் என்று பார்க்கலாம்.:)

18 minutes ago, குமாரசாமி said:

இன்னும் எவ்வளவு காலத்துக்குத்தான் நீங்களும் உங்களை சார்ந்தவர்களும் மற்றவர்கள் மீது பழியை போட்டு வாழ்க்கையை ஏப்பமிடுகின்றீர்கள் என்று பார்க்கலாம்.:)

மற்றவர்கள் மீது அல்ல ,

பிழை விட்டவர்கள் மீது தான் பழி சுமத்துகின்றோம் .

போராட வந்த பெடியங்களை முகாம்களில் வைத்து சித்திரவதை செய்து அடித்து கொன்றது பிழை அதைவிட வேறு பல கொலைகளும் -புளொட் 

தாசஸ் ,சகாக்களை  போட்டது பிழை -டெலோ 

இந்தியன் ஆமியுடன் சேர்ந்து தமிழ் மக்கள் மீது செய்த மாபெரும் வெறியாட்டம் -ஈ பி 

சகோதர இயக்க கொலையில் தொடங்கி கொலைகள் மட்டுமே போராட்டம் என்று நம்பி கடைசியில் பிள்ளை பிடி பொதுமக்கள் கொலை என்று எமது விடுதலை போரட்டத்தை பயங்கரவாதம் ஆக்கியது.ராஜீவ்காந்தி கொலை இறுதியில் சரணடைதல் என்று தமிழனை சிங்களவனுக்கு அடிமை ஆக்கியது  -புலிகள் .

சிங்களவன் எமது ஆயுத போராட்டத்தை வெல்லவில்லை நாங்கள் தோற்றதுதான் உண்மை .

மற்ற இயக்கங்கள் செய்த பிழைகள் நாம் அதிலிருந்து மீண்டு வர ஒரு சந்தர்ப்பம் இருந்தது,

புலிகள் விட்ட பிழை தமிழர்களை சிங்களவருக்கும் சர்வதேசத்திற்கும் அடிமை சாசனம் எழுதிவைத்து போய்விட்டது .

தமிழர் இந்த நிலையில் இருக்கும் வரை புலிகளில் பிழை போட்டுக்கொண்டுதான் இருக்கவேண்டும் 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 minutes ago, arjun said:

மற்ற இயக்கங்கள் செய்த பிழைகள் நாம் அதிலிருந்து மீண்டு வர ஒரு சந்தர்ப்பம் இருந்தது,

உதாரணத்திற்கு......????

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

உதாரணத்திற்கு......????

இயக்கங்களின் இது போன்ற நூற்றுக்கணக்கான இளைஞர்களின் இழப்புக்கு பழி வாங்கியே தீருவேன்.

அதேநேரம் புலிகளுடன் சேர்த்து

ஒன்றரை லட்சம் அப்பாவி மக்களைப்போட்ட

சிறீலங்காவினதும் சர்வதேசத்தினதும் முடிவு மிகச்சரியானது

அதை ஆதரித்தேன்

ஆதரிப்பேன்

இதை வன்னியில் மக்கள் முன்னும் சொல்வேன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.