Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழரின் கதாநாயகன் பிரபாகரனே!

Featured Replies

தமிழரின் கதாநாயகன் பிரபாகரனே!
 
 
தமிழரின் கதாநாயகன் பிரபாகரனே!
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனே வடக்கிலுள்ள தமிழ் மக்களின் கதாநாயகனாக இருந்தார் என்று முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
 
ராஜபக்ச ஆட்சியை வெளிப்படையாக கண்டிக்கும் வகையிலேயே. மக்கள் உங்களைத் தோற்கடித்தனர் என்று நினைக்கிறீர்களா என்று கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
 
வடக்கு மாகாணத்தில் தேர்தல் முடிவுகளை ஆய்வு செய்தால், மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக மக்கள் வாக்களித்தனர். இது ஒன்றும் ஆச்சரியமில்லை.
 
விடுதலைப் புலிகள்  தோற்கடிக்கப்பட்டமை இதில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியது. அங்குள்ள மக்கள் பிரபாகரனால் மூளைச்சலவை செய்யப்பட்டவர்கள். அங்குள்ள மக்களின் கதாநாயகனாகவே பிரபாகரன் இருந்தார்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
  • கருத்துக்கள உறவுகள்

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராசபக்ச தெரிவித்துள்ளது முற்றிலும் உண்மைதான். அடிமைகளுக்கும் அடிமைகளாக வாழப்பழகியுள்ள தமிழ்மக்களின் மூளையைச் சலவைசெய்து தூய்மையாக்கி, உங்கள் மண்ணில் வாழ்வதற்கு நீங்களும் உரிமைகொண்டவர்கள் என்று உணரவைத்தவர் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனே! :)    

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, Paanch said:

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராசபக்ச தெரிவித்துள்ளது முற்றிலும் உண்மைதான். அடிமைகளுக்கும் அடிமைகளாக வாழப்பழகியுள்ள தமிழ்மக்களின் மூளையைச் சலவைசெய்து தூய்மையாக்கி, உங்கள் மண்ணில் வாழ்வதற்கு நீங்களும் உரிமைகொண்டவர்கள் என்று உணரவைத்தவர் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனே! :)    

சிங்களவனுக்குத்தெரியும்...

சாதி

மதம்

பிரதேசம்

ஆண் பெண்

பண கல்வி ஏற்றத்தாழ்வு என பிரிந்து கிடக்கின்றான்

இலகுவாக அழித்துவிடலாம் என

தனியே மோதி மோதி தோற்றவன்

பிரபாகரனின் வலிமையும் ஆளுமையுமறிவான்.

 

படிப்பறிவு ,பகுத்தறிவு அற்ற மக்களை மூளை சலவை செய்வது மிக சுலபம் .

தமிழ் நாட்டை பாருங்கள் கருணாநிதி ,எம்ஜியார் ,ஜெயலலிதா தான் முதலமைச்சர்கள் .வெட்ககேடு .

ஒரு நேர்மையான முற்போக்கானவர்கள் ,உண்மையானவர்கள் இவர்கள் மத்தியில் எடுபடமாட்டார்கள் 

நன்றாக நடிக்க தெரிந்தால் அவரை தலைவர் ஆக்கிவிடுவார்கள் 

  • கருத்துக்கள உறவுகள்

போர்க்களத்தில் நிற்பதையும்

சினிமாக்காரர்களையும் ஒரே தராசில் வைப்பவர்களை 

எந்த படித்தறிவில் சேர்ப்பது...???

கருணாநிதி ,எம்ஜியார் ,ஜெயலலிதா தான் முதலமைச்சர்கள்

எத்தனை பாட்டு ,எத்தனை நடிப்பு ,எப்பேர்பட்ட புகைப்படங்கள் 

பார்க்க சிரிப்புத்தான் வாறது ஆனால் பலருக்கு புல்லரிப்பது அவருக்கு தெரியும் .

  • கருத்துக்கள உறவுகள்

அது இப்போ கூட்டமைப்பு தமிழரது பிரதிநிதிகள் என்பது போன்றது...

 

அவர் தன்னை கதாநாயகன் ஆக்க நினைத்தது  அவர் விருப்பம்  ஆனால் மற்றவர்களை வில்லன்கள் ஆக நினைத்தது பெரும் தப்பு பாவம் அப்பாவி அமிர்தலிங்கத்தையும் அவர் விடவில்லை .

  • கருத்துக்கள உறவுகள்

எனக்குத்தெரிவது 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாவீரர்கள்

உங்களுக்குத்தெரிவதெல்லாம் ஒரு அமிர்தலிங்கம்

சில வில்லன்கள்..

பார்வை தான் பழுதே தவிர நிஐமல்ல...

உங்களுக்கு அப்படி தெரிவது ஒன்றும் வியப்பில்லை 

  • கருத்துக்கள உறவுகள்

கோத்தா.. உங்களை பதவி அற்ற வெற்றுக் கோசமாக மாற்றியதும் பிரபாகரனை நேசித்த மக்களும்.. வெற்றி விழா கொண்டாடிய சிங்கள மக்களும்... தான்.! tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Paanch said:

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராசபக்ச தெரிவித்துள்ளது முற்றிலும் உண்மைதான். அடிமைகளுக்கும் அடிமைகளாக வாழப்பழகியுள்ள தமிழ்மக்களின் மூளையைச் சலவைசெய்து தூய்மையாக்கி, உங்கள் மண்ணில் வாழ்வதற்கு நீங்களும் உரிமைகொண்டவர்கள் என்று உணரவைத்தவர் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனே! :)    

அப்ப தமிழர் விடுதலைக்கூட்டணிதான் இளைஞர்களைக் கொம்புசீவி (மூளைச்சலவை செய்து) போராட தூண்டிவிட்டது என்றது பொய்யாக்கும்.  தலைவர் அவர்கள் மூளைச் சலவை செய்தது அடுத்தவன் குடும்பங்களுக்கு தன்னுடைய சொந்தக் குடும்பத்துக்கு அல்ல. 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, arjun said:

கருணாநிதி ,எம்ஜியார் ,ஜெயலலிதா தான் முதலமைச்சர்கள்

எத்தனை பாட்டு ,எத்தனை நடிப்பு ,எப்பேர்பட்ட புகைப்படங்கள் 

பார்க்க சிரிப்புத்தான் வாறது ஆனால் பலருக்கு புல்லரிப்பது அவருக்கு தெரியும் .

எதிர்காலத்தில் சீமான் போன்றவர்கள் தான் தமிழ்நாட்டை நல்லாட்சி செய்வார்கள். tw_thumbsup:

எல்லாத்தையும் விட உலகத்திலையே பெரீய மூளைச்சலவை எங்கடை தமிழ்த்தலைவர்கள் செய்யுறதுதான்......60 வருசத்துக்கும் மேலை ஒரே சொல்லை வைச்சு மூளைச்சலவை செய்யுறதெண்டால் சும்மா லேசுப்பட்ட வேலையே?tw_skull:

  • கருத்துக்கள உறவுகள்

 

1 hour ago, வாலி said:

அப்ப தமிழர் விடுதலைக்கூட்டணிதான் இளைஞர்களைக் கொம்புசீவி (மூளைச்சலவை செய்து) போராட தூண்டிவிட்டது என்றது பொய்யாக்கும்.  தலைவர் அவர்கள் மூளைச் சலவை செய்தது அடுத்தவன் குடும்பங்களுக்கு தன்னுடைய சொந்தக் குடும்பத்துக்கு அல்ல. 

 

தமிழர் விடுதலைக்கூட்டணிதான் இளைஞர்களைக் கொம்புசீவி (மூளைச்சலவை செய்து) போராட தூண்டிவிட்டது என்ற உங்கள் வாதம் உண்மைதான். அதுவும் தந்தை செல்வா அவர்களின்பின்பு வந்தவர்களே தங்கள் வளர்ச்சிக்காக இளைஞர்களை உருவேற்றினார்கள். அச்சமயம் இன்றைய தமிழர் தலைவனான பிரபாகரன் அவர்களும் இளைஞர்தான். பல போராட்ட அமைப்புகளை இளைஞர்கள் உருவாக்கினார்கள். அவற்றுள் கொம்பின் கூர்மையுடன் கூட்டணியின் மூளைச்சலவைக்கு உட்படாது செயற்பட்ட சில அமைப்புகளில் தலைவர் பிரபாகரனின் அமைப்பும் ஒன்று. 

3 hours ago, arjun said:

அவர் தன்னை கதாநாயகன் ஆக்க நினைத்தது  அவர் விருப்பம்  ஆனால் மற்றவர்களை வில்லன்கள் ஆக நினைத்தது பெரும் தப்பு பாவம் அப்பாவி அமிர்தலிங்கத்தையும் அவர் விடவில்லை .

அப்பாவி அமிர்தலிங்கமா........! அடப்பாவி அமிர்தலிங்கம். தமிழரசுக் கட்சிக்குத் தலைவராக வரவேண்டிய இராசதுரை அவர்களைத் தலைவராக வரவிடாமல் வீழ்த்துவதற்கு மிகக் கேவலமான வழிமுறைகளை அமிர்தலிங்கம் கையாண்டதால் கல்குடா, மட்டக்களப்பு தொகுதிகளில் இரண்டு பாராளுமன்ற அங்கத்தவர்களைப் பெற்றுவந்த தமிழரசுக் கட்சி ஒன்றை இழந்தது. :shocked:

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு மக்களின் கதாநாயகனாக பிரபாகரன் இருந்தமையினாலேயே எமக்குத் தோல்வி!

13 பெப்ரவரி 2016
வடக்கு மக்களின் கதாநாயகனாக பிரபாகரன் இருந்தமையினாலேயே எமக்குத் தோல்வி!

 வடக்கு மக்களின் கதாநாயகனாக பிரபாகரன் இருந்தமையினாலேயே தேர்தல்களின்போது வடக்கு மக்கள் மகிந்த ராஜபக்சவை புறக்கணித்துள்ளனர் என்று முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய தெரிவித்துள்ளார். 
 
கொழும்பு ஊடம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன் போது மகிந்த ராஜபக்ச ஆட்சியை கண்டிக்கும் வகையிலா மக்கள் உங்களை தோற்கடித்தனர் என அந்த ஊடகவியலாளர் கேள்வி எழுப்பினர். 
 
இதற்குப் பதில் அளித்த கோத்தபாய வடக்கு மக்கள் பிரபாகரனால் மூளைச்சலவை செய்யப்பட்டவர்கள் என்றும் வடக்கு மக்கள் தேர்தல்களில் மகிந்தவை எதிர்த்து வாக்களித்தமை ஆச்சரியபடும் விடயமல்ல என்றும் கூறினார். 
 
அத்துடன் விடுதலைப் புலிகளை தோற்கடித்தமையே இதற்கான தாக்கம் என்று கூறிய அவர்  வடக்கு மக்கள் பிரபாகரனால் மூளைச்சலவை செய்யப்பட்டாதல் அவர்கள் பிரபாகரனை கதாநாயகனாக பார்க்கின்றனர் என்றும் கூறினார்.
http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/128928/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.