Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரபாகரன் உயிரோடு உள்ளார் மீண்டும் ஈழப்போர் தொடங்கும்: பழ.நெடுமாறன் பரபரப்பு பேட்டி!

Featured Replies

பிரபாகரன் உயிரோடு உள்ளார் மீண்டும் ஈழப்போர் தொடங்கும்: பழ.நெடுமாறன் பரபரப்பு பேட்டி!

 

கோவை: விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்றும் மீண்டும் ஈழப்போர் தொடங்கும் என்றும் தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.

அத்திக்கடவு- அவினாசி திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி தொடர் போராட்டம் நடத்திவரும் போராட்டக்காரர்களை சந்திக்க கோவை வந்திருந்த பழ.நெடுமாறன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது அவர் கூறுகையில்,


டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவத் தலைவர் கன்ஹையா குமார் தேச விரோத சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை பாட்டியாலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது பாஜகவினர்  விசாரணை அதிகாரி, நீதிபதி, வக்கீல்கள் முன்பு அவரை தாக்கினர். உச்சநீதி மன்றம் மாணவர் கன்ஹையா குமாருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கூறிய நிலையில் அவரை தாக்கி இருப்பது பா.ஜனதாவின் பாசிச முகத்தை அம்பலப்படுத்தியுள்ளது.

pazha1.jpg



தமிழக அரசு ஊழியர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். தமிழக அரசு அவர்களின் பிரதிநிதிகளை அழைத்துப்  பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை முடிவுக்குக்  கொண்டு வரவேண்டும்.

அத்திக்கடவு–அவினாசி திட்ட பிரசினையில் பவானி ஆற்றில் உற்பத்தியாகும் நீர் 30 டி.எம்.சி. வீணாகக்  கடலில் கலக்கிறது. இதனால் கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள ஏரி, குளம், குட்டைகள் வறண்டு போய் விட்டன. நிலத்தடி நீரும் 1000 அடி வரை வறண்டு விட்டது. அவினாசி–அத்திக்கடவு திட்டதை நிறைவேற்றினால் 50 அடி அழத்தில் நீர் கிடைக்கும். 500 கிலோ வாட் மின்சாரமும் நமக்குக்  கிடைக்கும். காமராஜர் ஆட்சிகாலத்தில் ரூ.120 கோடியில் இந்தத்  திட்டம் தயாரிக்கப்பட்டது. அதன் பின்னர் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. ஆட்சிகள் மாறிமாறி ஆட்சி செய்தபோது இத்திட்டத்தைக்  கைவிட்டது. தற்போது இத்திட்டத்தை நிறைவேற்ற பல ஆயிரம் கோடி தேவைப்படும் என்று கூறுகிறார்கள். அவினாசி–அத்திக்கடவு திட்டத்தை எந்த அரசு வந்தாலும் குறிப்பிட்ட காலக்கெடுவில் நிறைவேற்ற வாக்குறுதி அளிக்க வேண்டும்.

கடந்த முறை இலங்கை தமிழர்களுக்கு இழைத்த துரோகத்தால் தி.மு.க.–காங்கிரஸ் கூட்டணி படுதோல்வி அடைந்தது. அதே நிலைமையைத் தான் இப்போதும் இந்த கட்சிகள் சந்திக்கும்.

பேட்டியொன்றில், வெளிநாடு வாழ் இலங்கை தமிழ் எழுத்தாளர் கூறும்போது இலங்கை அரசு பிரபாகரன் இறந்து விட்டதாகக்  கூறியுள்ளது. ஆனால் இந்திய அரசு பிரபாகரன் இறந்து விட்டதாக இன்றும் அறிவிக்கவில்லை. இறந்து விட்டார் என்றால் இந்திய சிறையில் உள்ள 7 பேரை விடுதலை செய்யவேண்டும். அதற்காக இந்திய அரசு அதனை மறைத்து வருகிறது என்று கூறியுள்ளார்.

பிரபாகரன் இறந்து விட்டதாக அறிவித்த அறிவிப்பு பொய்யாகும். பிரபாகரன் உயிருடன் உள்ளார். மீண்டும் ஈழப்போர் தொடங்கும்." என்று தெரிவித்துள்ளார்.

http://www.vikatan.com/news/tamilnadu/59390-prabhakaran-alive-again-start-eelam-war-nedumaran.art

  • கருத்துக்கள உறவுகள்

அடி ராக்கம்மா கையத் தட்டு!

ஜாங்கு ஜக்கு ஜகங்கு ஜக்கு ஜாங்!tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா சொல்வது நியாயமே. பிரபாகரன் என்பது ஒரு தனி மனிதன் அல்ல. சிங்களப் பெளத்த பேரினவாதத்தின் மனித குலத்திற்கு எதிரான பயங்கரவாதமும்.. அடக்குமுறையும்... தமிழ் மக்களுக்கு எதிராக அது முன்னெடுக்கும் இன அழிப்பும்.. நாடு பிடிப்பும் ஆகும். அந்த இலக்கில் இருந்து சிங்களவன் தன்னை பின்வாங்கிக் கொள்ளாது.. தன் சொந்த நாட்டுக்கு திரும்பிச் செல்லாத நிலை இருக்கும் வரை பிரபாகரனும் வாழ்வார்.. ஈழப்போராட்டமும் நடக்கும். அதன் பரிமானங்கள் வேறுபட்டிருக்கும்.. காலத் தேவைகளைப் பொறுத்து. இதனை உலகும் நன்கறியும். tw_blush:tw_warning:

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா நெடுமாறன் வீட்டில் ஓய்வெடுப்பது நல்லது. 2009 இல் கொடுத்த தவறான அறிவுரையால் ஏற்பட்ட அழிவுகளுக்கு பொறுப்பை ஏற்காதவர்களால் இப்படித்தான் சொல்லமுடியும்.

  • கருத்துக்கள உறவுகள்

நீங்க என்ன சொல்லவாறீங்க தலைவர் இவர்களின் அறிவுரைக்கு அமைய முடிவெடுத்துச் செயற்பட்டார் என்றா...??! ஆதாரம்..??!

தலைவர் தமிழகம் மற்றும் உலகெங்கும் தமிழ் மக்களின் ஈழ விடுதலைப் போராட்டம் சார்ந்து நேசக்கருத்துள்ளவர்களை நேசமாகப் பார்த்தாரே அன்றி.. இவர்களின் அறிவுரைக்கு அமைய கள முடிவுகளை எடுத்தார் என்பது மிகப் பெரிய கேள்விக்குரிய ஒன்று.

மேலும் நெடுமாறன் ஐயா இப்படிக் கூறிவிடுவதால்.. அவருக்கு என்ன இலாபம்..??! :rolleyes:tw_angry: கருணாநிதி மாதிரி முதலமைச்சர் பதவிக்கு ஆசைப்படுகிறவரா...??! :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு மனிதன், தான் நம்பி ஆசைப்படுவதற்கும், யதார்த்தத்திற்கும் இடையே எப்போதுமே வேறுபாடு இருந்துகொண்டுதான் இருக்கும். நெடுக்கர் சொன்னதுபோல, பிரபாகரன் போன்ற ஒருவர் இனி வேண்டுமா இல்லையா என்பது சிங்கள அரசு நடந்துகொள்ளும் முறையில் இருக்கிறது.

மற்றும்படி, நெடுமாறனோ, வைக்கோவோ அடிக்கடி கூறுவதுபோல பிரபாகரன் எனும் தனிமனிதர் இனிமேல் வருவார், சண்டை பிடிப்பார் என்பதெல்லாம் கனவுலக சஞ்சாரம்தான் என்பது அவர்களுக்கே இப்போது நன்றாக தெரிந்திருந்தும், யாருக்ககவோ, எதற்காகவோதான் இப்படியெல்லாம் அடிக்கடிப் பேசிவருகிறார்கள் என்பது மட்டும் தெளிவு.

சிலருக்குப் பிரபாகரன் மீண்டும் வருவார் என்பது தமது இருப்பைத் தக்கவைக்கப் பயன்படுகிறது. ஆகவே அவர்கள் சிலரை தமது தேவைக்காகப் பயன்படுத்துகிறார்கள். பயன்படுத்தப்படும் சிலரும் இப்படிப் பேசிப்பேசியே தம்மீதுள்ள தொடர்ச்சியகாக் குறைந்துவரும் நம்பகத்தன்மையை இன்னும் குறைக்கப் பகீரதப் பிரயத்தனம் செய்கிறார்கள்.

சரி, ஒரு கதைக்குப் பிரபாகரன் உயிரோடுதான் இருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம், அவர் எங்கிருந்து, யாரை வைத்து சண்டை பிடிப்பது ? நெடுமாறனினதும், வைக்கோவினதும் பேரப் பிள்ளைகளை வைத்தா ?

  • கருத்துக்கள உறவுகள்
On 20/02/2016 at 6:17 PM, ragunathan said:

 

, அவர் எங்கிருந்து, யாரை வைத்து சண்டை பிடிப்பது ? நெடுமாறனினதும், வைக்கோவினதும் பேரப் பிள்ளைகளை வைத்தா ?

இந்திரன் படம் பார்த்தனீங்கள் தானே .......இந்திரன் ரஜனியை வைத்துதான்...:rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போர் எண்டவுடனை உங்கை சிலபேருக்கு கத்தி கோடாலி துவக்கு தோட்டா அணுகுண்டு எண்டு பெரிய நினைப்பெல்லாம் வருதுபோலை கிடக்கு.:cool:

On 2/19/2016 at 1:42 PM, நவீனன் said:

பிரபாகரன் உயிரோடு உள்ளார் மீண்டும் ஈழப்போர் தொடங்கும்: பழ.நெடுமாறன் பரபரப்பு பேட்டி!

 

கோவை: விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்றும் மீண்டும் ஈழப்போர் தொடங்கும் என்றும் தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.

அத்திக்கடவு- அவினாசி திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி தொடர் போராட்டம் நடத்திவரும் போராட்டக்காரர்களை சந்திக்க கோவை வந்திருந்த பழ.நெடுமாறன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது அவர் கூறுகையில்,


டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவத் தலைவர் கன்ஹையா குமார் தேச விரோத சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை பாட்டியாலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது பாஜகவினர்  விசாரணை அதிகாரி, நீதிபதி, வக்கீல்கள் முன்பு அவரை தாக்கினர். உச்சநீதி மன்றம் மாணவர் கன்ஹையா குமாருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கூறிய நிலையில் அவரை தாக்கி இருப்பது பா.ஜனதாவின் பாசிச முகத்தை அம்பலப்படுத்தியுள்ளது.

pazha1.jpg



தமிழக அரசு ஊழியர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். தமிழக அரசு அவர்களின் பிரதிநிதிகளை அழைத்துப்  பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை முடிவுக்குக்  கொண்டு வரவேண்டும்.

அத்திக்கடவு–அவினாசி திட்ட பிரசினையில் பவானி ஆற்றில் உற்பத்தியாகும் நீர் 30 டி.எம்.சி. வீணாகக்  கடலில் கலக்கிறது. இதனால் கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள ஏரி, குளம், குட்டைகள் வறண்டு போய் விட்டன. நிலத்தடி நீரும் 1000 அடி வரை வறண்டு விட்டது. அவினாசி–அத்திக்கடவு திட்டதை நிறைவேற்றினால் 50 அடி அழத்தில் நீர் கிடைக்கும். 500 கிலோ வாட் மின்சாரமும் நமக்குக்  கிடைக்கும். காமராஜர் ஆட்சிகாலத்தில் ரூ.120 கோடியில் இந்தத்  திட்டம் தயாரிக்கப்பட்டது. அதன் பின்னர் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. ஆட்சிகள் மாறிமாறி ஆட்சி செய்தபோது இத்திட்டத்தைக்  கைவிட்டது. தற்போது இத்திட்டத்தை நிறைவேற்ற பல ஆயிரம் கோடி தேவைப்படும் என்று கூறுகிறார்கள். அவினாசி–அத்திக்கடவு திட்டத்தை எந்த அரசு வந்தாலும் குறிப்பிட்ட காலக்கெடுவில் நிறைவேற்ற வாக்குறுதி அளிக்க வேண்டும்.

கடந்த முறை இலங்கை தமிழர்களுக்கு இழைத்த துரோகத்தால் தி.மு.க.–காங்கிரஸ் கூட்டணி படுதோல்வி அடைந்தது. அதே நிலைமையைத் தான் இப்போதும் இந்த கட்சிகள் சந்திக்கும்.

பேட்டியொன்றில், வெளிநாடு வாழ் இலங்கை தமிழ் எழுத்தாளர் கூறும்போது இலங்கை அரசு பிரபாகரன் இறந்து விட்டதாகக்  கூறியுள்ளது. ஆனால் இந்திய அரசு பிரபாகரன் இறந்து விட்டதாக இன்றும் அறிவிக்கவில்லை. இறந்து விட்டார் என்றால் இந்திய சிறையில் உள்ள 7 பேரை விடுதலை செய்யவேண்டும். அதற்காக இந்திய அரசு அதனை மறைத்து வருகிறது என்று கூறியுள்ளார்.

பிரபாகரன் இறந்து விட்டதாக அறிவித்த அறிவிப்பு பொய்யாகும். பிரபாகரன் உயிருடன் உள்ளார். மீண்டும் ஈழப்போர் தொடங்கும்." என்று தெரிவித்துள்ளார்.

http://www.vikatan.com/news/tamilnadu/59390-prabhakaran-alive-again-start-eelam-war-nedumaran.art

ஓமோம் அப்ப தானே உங்களுக்கு ........

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின்  வரலாற்றில் தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும்  இடையில் பல போர்கள் நடந்துள்ளன.
உறுதியான இறுதியான தீர்வு கிடைக்கும் வரை போர்கள் தொடர்ந்து நடந்து கொண்டேயிருக்கும்.
மீண்டும் ஒரு  வேலுப்பிள்ளை பிரபாகரன் வரவேண்டிய நிலையை உருவாக்குவது சிங்கள அரசின் கைகளிலேயே உள்ளது.
தமிழ் நாட்டு  அரசியல்வாதிகளின் இருப்பிற்கும் இப்போது தேசியத் தலைவரின் இருப்பு

தேவைப்படுமளவிற்கு தேசியத் தலைவரின் அர்ப்பணிப்பு மேலோங்கி நிற்கின்றது
நாளை உலக அரசியலின் தேவைக்காகவும் தேசியத்தலைவரின் இருப்பு அவசியமாகலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.