Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வெள்ளைக்கொடி விவகாரத்தை விசாரித்தால் பொன்சேகாவே முதலில் சிக்குவார்! - என்கிறார் ரம்புக்வெல

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
வெள்ளைக்கொடி விவகாரம் குறித்து உண்மையான விசாரணைகளை முன்னெடுத்தால் முதல் குற்றவாளியாக சரத் பொன்சேகாவே சிக்குவார் என்று பாராளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

வெள்ளைக்கொடி விவகாரம் குறித்து உண்மையான விசாரணைகளை முன்னெடுத்தால் முதல் குற்றவாளியாக சரத் பொன்சேகாவே சிக்குவார் என்று பாராளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

   

சரத் பொன்சேகா ஒரு நல்ல அரசியல்வாதியோ அல்லது நல்ல இராணுவத் தளபதியோ அல்ல. அவர் எந்த நிலையிலும் விலைபோகக்கூடிய நபர். அவர் பலமான நபராகவோ மக்களின் ஆதரவை பெற்றிருந்த நபராகவோ இருந்திருந்தால் கடந்த 2010ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்றிருக்க வேண்டும். ஆனால் அந்த தேர்தலில் அவர் மக்களால் நிராகரிக்கப்பட்டு மஹிந்த ராஜபக்ச வெற்றி பெற்றார்.

யுத்தம் நடைபெற்ற காலகட்டத்தில் அவர் இராணுவத் தளபதியாக இருந்துள்ளார். ஆனால் யுத்தத்தை முன்னெடுத்து சென்றுள்ளார் என்று கூறுவதை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாது. அவர் மாத்திரம் தலைமை தாங்கி யுத்தத்தை முடிக்கவில்லை. எமது அரசாங்கம் வழிநடத்தியது. பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ச வழிநடத்தினார். மாறாக சரத் பொன்சேகாவை என்ற தனி நபர் மாத்திரம் யுத்தத்தில் நாயகனாகப் பார்க்கின்றமையை ஒருபோதும் ஏற்றுகொள்ள முடியாது.

சரத் பொன்சேகா பாராளுமன்றத்தில் தெரிவித்திருக்கும் கருத்துக்கள் அனைத்தும் பொய்யானவையாகும். அதேபோல் பாராளுமன்றத்தில் அவரின் உரையை அவதானிக்கும் போதும் அதில் முழுமையாக மஹிந்த ராஜபக்ச மீதும் அவரது குடும்ப உறுப்பினர்கள் மீதும் வைராக்கியத்துடனும் பழிவாங்கும் நோக்கத்துடனும் மாத்திரமே உள்ளார் என்பது தெளிவாகத் தெரிகின்றது. விடுதலைப் புலிகள் இயக்கத்தை பலப்படுத்தும் வகையில் ராஜபக்ச குடும்பம் பணம் கொடுத்ததாகவும் பசில் ராஜபக்ச புலிகளை பலப்படுத்தி செயற்பட்டார் என்று கூறுவதும் முழுமையான பொய்யாகும். இதை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

பசில் ராஜபக்சவோ அல்லது கோத்தபாய ராஜபக்சவோ புலிகளுடன் நெருக்கத்தை பேணியிருந்தால் அப்போதே அவர் இதை வெளிப்படுத்தியிருக்க வேண்டும். நாட்டின் மீதும் இராணுவத்தின் மீதும் பற்று கொண்ட நபர் ஏன் அப்போது இந்த உண்மைகளை மறைக்க வேண்டும். அப்படியாயின் அவரும் புலிகளுக்கு உடந்தையாக செயற்பட்டிருக்க வேண்டும்.

மேலும் வெள்ளைக்கொடி விவகாரத்தில் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என்று கூறுகின்றார். இந்த விவகாரத்தில் உண்மையான விசாரணைகளை முன்னெடுத்தால் இந்த குற்றசாட்டில் முதல் குற்றவாளியாக சரத் பொன்சேகாவே சிக்குவார். அவரின் தலைமையில் இடம்பெற்ற மிகப்பெரிய குற்றம் இதுவென்பதை என்பதை மறந்துவிட்டோ அல்லது இந்த விவகாரத்தில் அவர்மீது இருக்கும் குற்றங்களை மறைத்துவிட்டோ வேறு ஒரு வகையில் செயற்பட பார்க்கின்றனர்.

மஹிந்த, கோத்தபாய ராஜபக்ச ஆகியோரை பழிவாங்கும் எண்ணத்தில் அவர்களை போர்க்குற்றவாளிகள் என்று சர்வதேச ரீதியில் தண்டிக்கும் முயற்சியில் அப்பாவி இராணுவத்தையும் சேர்த்து தண்டிக்கவே முயற்சிக்கின்றனர். மிகவும் மோசமான பயங்கரவாதிகளுடன் போரிடும் போதும் பல லட்சம் தமிழ் மக்களை வடக்கில் இருந்து காப்பாற்றும் மனிதாபிமான போராட்டத்தின் போதும் ஒரு சில தவறுகள் நடைபெறும். அதை தவிர்க்க முடியாது. இந்த கருத்தை பல்வேறு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

டெஸ்மன் டி சில்வா தனது அறிக்கையிலும் இந்த காரணத்தை சுட்டிக்காட்டியுள்ளார். ஆனால் இவ்வாறான சிறுசிறு காரணிகளை அடிப்படையாக வைத்துக்கொண்டு மனித உரிமை மீறல்கள் நடந்தேறியது என கூறுவதை நாம் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை.இப்போது அவர் கூறும் காரணங்கள் அனைத்தினதும் பின்னணியிலும் ஐக்கிய தேசியக் கட்சியின் அழுத்தமும், ரணில் விக்கிரமசிங்கவின் தூண்டுதலும் உள்ளன. ஐக்கிய தேசியக் கட்சி, சரவதேச தரப்பு மற்றும் புலம்பெயர் புலிகளின் கட்டளைக்கு அடிபணிந்து இன்று மஹிந்த தரப்பையும் இராணுவத்தையும் காட்டிக்கொடுக்கும் செயலை செய்து வருகின்றார். ஐக்கிய தேசியக் கட்சி மேற்கொள்ளும் மிகப்பெரிய சூழ்ச்சித் திட்டம் இப்போது அரங்கேறி வருகின்றது.

மேலும் யுத்தம் முடிவுக்கு வந்த பின்னரும் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் இருந்தார் என சரத் பொன்சேகா தெரிவித்தமையும் பொய்யான கருத்தாகும். பிரபாகரன் கொல்லப்பட்டது உறுதியான பின்னரும் கொல்லப்பட்டது அவர் தான் என பல தடவைகள் உறுதிப்படுத்திய பின்னருமே நாம் யுத்த வெற்றியை அறிவித்தோம். ஆனால் பிரபாகரன் கொல்லப்பட்ட சந்தர்ப்பத்தில் சரத் பொன்சேகா அங்கு இருக்கவில்லை. ஜனாதிபதி பாராளுமன்றத்தில் யுத்த வெற்றியை தெரிவித்த பின்னரே சரத் பொன்சேகா அறிந்துகொண்டார். இவ்வாறு பல உண்மைகளை அறியாது பொய்யான காரணிகளை பாராளுமன்றத்தில் தெரிவிப்பதனால் அனைத்தும் அங்கீகரிக்கப்பட்டு விடாது.

இப்போது உள்ள நிலையில் ரணிலின் அடிமையாகவே இவர்கள் அனைவரும் செயற்படுகின்றனர். மஹிந்த ராஜபக்சவையும் அவரது குடும்ப உறுப்பினர்களையும் பழிவாங்கும் ஒரே நோக்கத்தில் சரத் பொன்சேகா செயற்படுகின்றார். அடிமட்ட நிலைக்கு அவர் இறங்கியுள்ளார் என்றார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=153250&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

வந்திட்டார்ர துரை. இவர் ஏன் இவ்வளவு குதி குதிக்கிறார்.. இவருக்கும் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை.. மனித குலத்துக்கு எதிரான செயலில் பங்கிருக்குப் போல. :rolleyes:tw_angry:

இப்ப சிங்களவன்.. தானே தனக்குள் அடிபட்டு உண்மைகளைக் கக்கும் காலம் போல. tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

எங்கப்பன் குதிருகிள இல்லை எண்ட மாதிரி கதை போய் முடியப் போகுதோ?

  • கருத்துக்கள உறவுகள்

இனப்படுகொலையே நடைபெறவில்லை என்றவர்கள் பொன்சேகா தான் மாட்டுப்படுவார் என்றால் இனப்படுகொலை நடந்துள்ளது என்பதை றம்புக்கல ஒத்துக்கொள்கிறார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, nedukkalapoovan said:

வந்திட்டார்ர துரை. இவர் ஏன் இவ்வளவு குதி குதிக்கிறார்.. இவருக்கும் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை.. மனித குலத்துக்கு எதிரான செயலில் பங்கிருக்குப் போல. :rolleyes:tw_angry:

இப்ப சிங்களவன்.. தானே தனக்குள் அடிபட்டு உண்மைகளைக் கக்கும் காலம் போலtw_blush:

சிங்களவன் பெருங்குடல் சிறுகுடல் வெளியிலை வாற அளவுக்கு உண்மைகளை கக்கினாலும்............ 
நாங்கள் சிங்களவனுக்குத்தான் முண்டு குடுப்பம்.:cool:
இப்படிக்கு..
மாற்றுக்கருத்து மாணிக்க சங்கம்.tw_lol:

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, குமாரசாமி said:

சிங்களவன் பெருங்குடல் சிறுகுடல் வெளியிலை வாற அளவுக்கு உண்மைகளை கக்கினாலும்............ 
நாங்கள் சிங்களவனுக்குத்தான் முண்டு குடுப்பம்.:cool:
இப்படிக்கு..
மாற்றுக்கருத்து மாணிக்க சங்கம்.tw_lol:

அண்ண,

பல்லு நற நற எண்டு இருக்கோ?

மாகமாச ஆக்கள் ஒருத்தரும் இந்த திரில எழுதேல்ல. கற்பனையில் கதை எழுதி, அட்டை கத்தியை சுத்துறியள்?

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, goshan_che said:

அண்ண,

பல்லு நற நற எண்டு இருக்கோ?

மாகமாச ஆக்கள் ஒருத்தரும் இந்த திரில எழுதேல்ல. கற்பனையில் கதை எழுதி, அட்டை கத்தியை சுத்துறியள்?

தொப்பியை சும்மா தூக்கிப்போட்டாலே அதைப்பிடிச்சு தன்ர தலையில போடுறதுக்கு அண்ணையை அடிச்சுக்க ஆளே இல்லைப்போல

21 hours ago, குமாரசாமி said:

சிங்களவன் பெருங்குடல் சிறுகுடல் வெளியிலை வாற அளவுக்கு உண்மைகளை கக்கினாலும்............ 
நாங்கள் சிங்களவனுக்குத்தான் முண்டு குடுப்பம்.:cool:
இப்படிக்கு..
மாற்றுக்கருத்து மாணிக்க சங்கம்.tw_lol:

மாணிக்கங்கள் முண்டு குடுக்கிறார்களோ இல்லையோ..தேசிக்காய்கள் நிச்சயம் குட்டையை குழப்பி எதுவும் நடக்கவிடாமல் செய்துவிடுவார்கள்..நீங்கள் கவலைப்படாதீங்கோ அண்ணை..வழக்கம் போல விசிலடிப்பதற்கு காலம் வரும். tw_blush:

ரம்புக்வெல நம்ம முன்னால் வந்து பற தெமுல, தெமுலு வள்ளோ எண்டு எப்படித் திட்டினாலும் எமக்கு கோபமொ, ரோசமோ வரமாட்டுதுங்க. ஏன்னா அவர் நம்ம எஜமான் பரம்பரை. ஆனால் நம்ம குமாரசாமி கூட்டத்தில கூட்டமாக  நிண்டு சாடையாக முணுமுணுப்பு காட்டினாலும் எமக்கு கோபம்  பொத்துக் கொண்டு வருமுங்க. எங்கிருந்தாலும் ஓடி வந்து எஜமான. திட்டிய கோபத்தையும் அவர் மேலை காட்டுவமுங்க.  இந்த விடயத்தில் நாங்க உண்மைத் தமிழருங்க. இந்த குணத்தால தான் எங்க மாவட்டத்தில் பெரும்பான்மையாக இருந்த நாம் இப்ப சிறுபான்மையா இருக்கிறோமுங்க. 

Edited by trinco

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, தெனாலி said:

மாணிக்கங்கள் முண்டு குடுக்கிறார்களோ இல்லையோ..தேசிக்காய்கள் நிச்சயம் குட்டையை குழப்பி எதுவும் நடக்கவிடாமல் செய்துவிடுவார்கள்..நீங்கள் கவலைப்படாதீங்கோ அண்ணை..வழக்கம் போல விசிலடிப்பதற்கு காலம் வரும். tw_blush:

வந்திட்டார் அடுத்தவர் தொப்பியை போட்டுக்கொண்டு. சிலருக்கு எப்படிச்சொன்னாலும் சுரணையில்லை. என்ன செய்யிறது எல்லாம் எஜமான் விசுவாசம். இல்லாட்டி வயித்துப்பிழைப்புக்கு என்ன செய்யிறது.
பாவம் பிழைச்சுப்போகட்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.